Thursday 4 July, 2013

சாதனையும்-சமூதாய வேதனையும்!

                         

சாதனையும்-சமூதாய வேதனையும்!

சமீபத்தில் வெளியான(2013) பள்ளி இறுதிப் படிப்பிலும், பத்தாவது படிப்பிலும் சமூதாய மாணவ மாணவிய கண்மணிகள் பலர் மாநில அளவில் சிறப்பான முறையில் தேர்வு கண்டு அனைவரும் மகிழ்ந்திருப்போம். ஆனால் மத்திய சிறையில் இருந்த படியே பள்ளி இறுதிப் படிப்பு எழுதிய சிறைக் கைதிகளில் சமூதாய இளைஞர்கள் மூன்று பேர்கள்  மாநில அளவில் ரேங்கு எடுத்துத் தேறி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது  ரத்தக் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடிய வில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் 1998 ஆம் ஆண்டு  கோவை நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப் படுத்திக் கைது செய்யப் பட்டு சிறையில் வாடுபவர்கள். அவர்களை நம்பி இருக்கும் குடும்பங்கள் வறுமையில் வாழுவதினை எண்ணி மனம் வெம்பாமல் எந்த மனிதாபமுள்ள சமுதாயதினவரும் இருக்க முடியாது.
அதேபோன்று தான் 1.7.2013 அன்று பதினேழு வயதில் கோவை குண்டு வெடிப்பில் கைது செய்யப் பட்ட ஒரு மைனர் இன்று 34 வயதானாலும் சிறையில் இருந்து விடுதலை செய்ய வில்லை என அறிந்த சென்னை உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. அவர் 15 
வருட பொன்னான வாழ்வினை யாரும் திரும்பப் பெறமுடியுமா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் இரண்டு ரஷ்யா நாட்டின் செச்சன்யா மாநிலத்தில் இருந்து குடிபெயர்ந்த இரண்டு இளைஞர்கள் சம்பந்தப் பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கிடைப்பதே குதிரைக் கொம்பு. ஆனால் அந்த இருபரில் இறந்த டாமர்லின் பல்கலைக் கழக குத்துச் சண்டையில் வெற்றி பெற்று குடியுரிமையும், இரண்டாயிரம் அமெரிக்க டாலரும் பரிசாகப் பெற்றுள்ளார்  அப்படி திறமை வாய்ந்த இரு இளைஞர்களும் தவறான வழி நடத்தளாலும், சிந்தனையாலும் ஒருவர் கொல்லப் பட்டுள்ளார். மற்றொருவர் வெஞ்சிறையில் வாடுகின்றார்.
நான் மேற்காட்டிய இரண்டு சம்பவங்களும். கல்வி, கேள்வி, விளையாட்டில் திறமை வாய்ந்த இளைஞர்கள்  தவறான தலைவர்களின் தவறான வழிக் காட்டுதலால் சொல்லவென்னா துன்பங்கள் அடைந்து வருகின்றனர். ஆனால் அவர்களை தூண்டி விடும் தலைவர்கள் சுகமான வாழ்வான குளிர் சாதன படுக்கை அறை, வாகனம், தனக்கும், தனது வாருசுகளுக்கும் தேவையான சொத்துக்களைத் தரும் வியாபார தளங்கள் போன்ற வற்றினைக் கொண்டு இன்பம்  சுவைத்துக் கொண்டு உள்ளனர்.
நான் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும்போது என்.சி.சி. மாணவப் பிரிவின் சார்ஜென்ட்டாக பணியாற்றினேன். தேசிய மாணவர்ப் பிரிவின் பயிற்சி கட்டளைகள் எல்லாமே ஹிந்தி மொழியில் தான் இருக்கும். அதனை உபயோகித்து  மற்ற கேடட்டுகளிடம் பயிற்சி வாங்கி இருக்கிறேன். அதன் பின்பு 1965 ஆம் ஆண்டு புகுமுக வகுப்பு  கல்லூரியில் படிக்கும்போது ஹிந்தி எதிர்ப்புப் போர் கொழுந்து விட்டு எரிந்தது. அதில் என்னையும் இணைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தாது  இறுதி ஆண்டு பரிட்சையில் தோல்வி அடைந்தேன். ஆனால் அந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தினைத் தூண்டி விட்ட தலைவர்களின் குழந்தைகள் ஹிந்திப் படிப்பினை எடுத்து தேர்ச்சிப் பெற்று தலைநகர் டெல்லியிலும் முக்கிய பதவி சுகம் அடைந்தனர் என்று அனைவருக்கும் தெரியும்.
அதேபோன்று தான் இன்றும் சமூதாய இளம் பிஞ்சு உள்ளங்களில் தவறான கருத்துக்களை விதைத்து அவர்கள் உழைப்பில் சுகம் காண்கின்றனர். இஸ்லாம் ஒரு அமைதி காக்கும் மார்க்கம் . அடுத்த வீட்டார் வேற்று மதத்தவரானாலும் மதித்து நடக்க வேண்டும் என்று அல் குரான் 49:11 இல் கூறியுள்ளது 
'மூமின்களே பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் . ஏனெனில், நிச்சயமாக எண்ணங்களில், நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்ககூடும் என்கிறது அல் குரான் (49:12)'
ஆடம்பர திருமண விருந்து வேண்டாம் என்று கூறிக்கொண்டு தங்கள் குழந்தைகள் திருமண விருந்து மட்டும் மிகப் பிரமாண்டமான திடலில் வைக்கின்றனர் தலைவர்கள். அதனை பார்க்கும்போது ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லை என்று தனது மனைவியிடம் சொல்வது போன்று இருக்கிறதல்லவா?
ஆகவே இளம் சிறார்கள், பள்ளி மாணவ மாணவியர், இளைஞர்கள் கல்வி கேள்விகளில் முன்னேற அனைத்து உதவிகளும் நாம் செய்வதோடு, அவர்கள் முன்னேற தடைக் கல்லாக இருக்கக் கூடாது. சமூதாயத்தினவருக்கு தனி ஒதிக்கீடு வேண்டும் எனக் கோருகிறோம்  பாராட்டக் கூடிய ஒன்றே. ஆனால் கொடுத்த 3.5 சதவீத ஒதுக்கீடிலும் சமூதாயத்தினவர் பயன்பெற நாம் ஆக்கமும் ஊக்கமும் செய்ய வில்லையே அது என் என்று கேட்காமல் இருக்க முடியவில்லை. கல்வியில் முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களை முன்னேறச் செய்தால் தான் சமூதாயம் முன்னேறும். வெறும் அரசியல் வார்த்தை ஜாலங்களால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. மற்ற அரசியல் கட்சிகள் சமூதாயத்தினவரை தேர்தல் நேர பகடைக் காய்களாக பயன் படுத்த் அனுமதிக் கூடாது. அதேபோன்று தேர்தல் வாக்குறிதிகள் காற்றில்  பறக்க விடும் காகிதத் துண்டாக மாறக்கூடாது. சென்ற தேர்தல் (2011) நேரத்தில் கொடுத்த வாக்குறிதிகள் ஆளும் கட்சியால் நிறைவேற்ற வில்லை என்று தற்போது குற்றம் சொல்லும் சமூதாய இயக்கங்கள், அந்த வாக்குறிதிகளை எழுத்து மூலமாக ஏன் வாங்கவில்லை என்று உங்களுக்கு தோன்றுவது போல எனக்கும் தோன்றத் தான் செய்கிறது.
எனவே இனியும் சமூதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இளைஞர்களை வழிக் கெடுக்காது நல்வழி நடத்தினால் பல்வேறு சாதனைகளை படைக்கும் வல்லவர்களாக உருவாகுவார்கள் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஆசையே!