Monday 22 December, 2014

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே மடிந்த இளந்தளிரே!

மலர்ந்தும் மலராத பாதி மலரிலே  மடிந்த இளந்தளிரே!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
17.12.2014 அன்று எனக்கு இளங்கோ என்ற நடைப் பயிற்சியில் அறிமுகமான நபர் மூலம் 'தீபக் டிஜி' என்பவர் அனுப்பிய செய்தி 'வாட்ஸ் அப்' என்ற தகவல் பரிமாற்றம் மூலம் கிடைக்கப் பெற்றேன். அந்த செய்தி, 'இன்று பாகிஸ்தான் இராணுவப் பள்ளி மீது நடந்த தாக்குதலைக் கொண்டாடுங்கள், ஏனெறால் உலகின் ஜனத்தொகையில் 200 முஸ்லிம்கள் குறைந்தார்கள். இதுபோன்ற தாக்குதல் தொடரவேண்டும்'.
உடனே நான் இளங்கோவிற்கு, 'இதுபோன்ற சமூதாய நல்லிணக்கத்திற்கு உலை வைக்கும் செய்திகளை அனுப்ப வேண்டாம்' என்று தகவல் அனுப்பினேன். அவரும் அதனை ஏற்றுக் கொண்டு, 'பள்ளிக் குழந்தைகளைக் கொன்ற தீவிர வாதிகளை விட கொடியவன் இவன்' என்று தீபக்கினை சாடினார்.

அண்டை நாடான பாக்கிஸ்தானில் ஸ்வாட் மற்றும் கைபர் பள்ளத்தாக்கில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா யுசுப்சி, தாலிபான் தீவிரவாதிகளால் 9.10.2012ல் சுடப் பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின்பு நோபல் பரிசும், உலக ஐ.நா. சபையில் பேசும் முதல் சிறுமி என்ற புகழுக்கு சென்ற செய்தி அடங்குமுன்னரே 16.12.2014 அன்று பெஷாவர் நகரில் ராணுவப் பள்ளியில் புகுந்து பச்சிளம் தளிர்களான 132 மாணவர்களையும் 9 ஆசிரியர்களையும் தீவிர வாதம் காவு கொண்டிருக்கின்றது என்ற கொடுமை வாய்விட்டு அழும் நிலைக்கு மனித இனத்தினை தள்ளி இருக்கின்றது என்றால் மறுக்க முடியாது. அத்தனை பிள்ளைகளும் ராணுவத்தில் பணியாற்றும், மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் குழந்தைகள். அந்த படுபாதக செயலுக்கு தீவிர வாதிகள் சொல்லும் காரணம் , 'ராணுவம் தீவிரவாத நிலைகள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி' என்று கூறி இருக்கின்றார்கள். அந்தக்  கூற்றின் மூலம் அவர்களின் செயலினை நியாயப் படுத்தலாம், ஆனால் இஸ்லாமிய மார்க்கத்தில் அது போன்ற  எதிர் நடவடிக்கையினுக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா என்றால் இல்லை என்றே கூறலாம்.
`இஸ்லாமியர் போர்களில் தர்மம் காத்து, போர்நெறி தவறாது நடந்து கொண்டனர் என்பதினை பெருமானார் முகமது(ஸல்) அவர்களும், அவர்கள் காலத்தில் போர் தளபதிகளாக இருந்தவர்களும், நபி பெருமானார் அவர்களுக்குப் பின்பு வந்த  கலிபாக்களும், அலி(ரழி), வாலித்(ரழி) அவர்களும், அதன் பின்பு சிலுவை யுத்தத்தில் இஸ்லாமிய படைகளை முன் நின்று நடத்திய தளபதி சலாவுதீன் அயுப் போன்றோரும் கண்ணியம் தவறாது போர்களை நடத்தினர் என்ற வரலாறு உள்ளது. பெருமானார் வேற்று நாடுகளுக்கு படையினை அனுப்பும்போது அதன் தளபதிகளுக்கு 'போரின்போது பயிர்களை, உணவு தரும் கனி மரங்களை அழிக்கக் கூடாது, நீர்நிலைகளையோ, குடியிருக்கும் வீடுகளையோ சேதப் படுத்தக் கூடாது, முதியோர், பெண்கள், குழந்தைகள், புறமுதுகிட்டு ஓடுவோர்  ஆகியோரையும், வளர்ப்புப் பிராணிகளையும் கொல்லக்கூடாது' என்று கடுமையான கட்டளைகளை' விடுத்தார்கள்.  ஆனால் ஏக வல்ல நாயன் அல்லாஹ் அளித்தத் திருக்கொடையான உயிரினை அநியாயமாக பழிக்குப் பழி வாங்குகின்றோம் என்று துப்பாக்கி, கை எறிகுண்டு, மனித எறிகுண்டு கொண்டு அழிக்க யாருக்கும் அனுமதி வழங்க வில்லை என்பது தான் உண்மை.
உலகிலேயே இது போன்ற குழந்தைகள், இளைஞர்கள் கொடூர கொலை சம்பவம் நடக்கவில்லையா என்று உங்களுக்குக் கேட்கத் தோணலாம். அவற்றில் சில வற்றை உங்கள் பார்வைக்கு வைக்கலாம் என எண்ணுகிறேன்:
1) இப்போதெல்லாம் பிள்ளைகள் வீடியோ கேம்ஸ் முன்னாள் மணிக் கணிக்கில் அமர்ந்து அவர்கள் விருப்பப் படி பெற்றோர் எவ்வளவோ தடுத்தும் காட்சிகளைக் காண்கின்றனர். அதேபோன்று கனடா நாட்டில் 1989 ஆம் ஆண்டு மாட்ரிட் பல்கழை கழகத்தில் பயிலும் மாணவன்  போருக்கான வீடியோ கேம்ஸ் படங்களைப் பார்த்து அதுபோன்று தானும் துப்பாக்கி ஏந்தி எதாவது ஒரு இலக்கினை பதம் பார்க்க வேண்டும் என்று துப்பாக்கியோடு தன்னோடு படிக்கும் 14 மாணவிகளையே சுட்டுக் கொன்றான்.
2) 1996 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து தன்பிலாக் நகரில் உள்ள ஆரம்பப் பள்ளியில் நுழைந்த ஒருவன் 16 பள்ளி சிறார்களையும், அதன் ஆசிரியரையும் சுட்டுக் கொன்றான்.
3) 1999 ஆம் ஆண்டு அமெரிக்கா கொலராடோ பள்ளியில் நுழைந்து துப்பாக்கியால் 13 மாணவர்களை சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
4) 2009 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் 17 வயது இளைஞன் துப்பாக்கியுடன் ஒரு பள்ளியில் நுழைந்து 9 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களை பலி கொண்டான்.
5) 2011 ஜூலை மாதம் நார்வே நாட்டில்  இளைஞர் முகாமில் காவல்த் துறை சீருடையுடன் நுழைந்த ஒருவன் துப்பாக்கியால் 80 இளைஞர்கள், மாணவர்கள் என்று கண்மூடித் தனமாக சுட்டுப் பொசுக்கினான்.
6) 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா நியூட்டன் நகரில் உள்ள ஹுக் ஆரம்பப் பள்ளியில் நுழைந்து 20 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.
7) 2014இல் மெக்சிகோ நாட்டில் போதைப் பொருள் கும்பல் ஆதிக்கப் போட்டியில்  கல்லூரி மாணவர் 43 கடத்தப் பட்டு, கொடூரமாக கொலை செய்து புதைக்கப் பாட்டும் மாண்டார்கள்.
இதுபோன்ற துப்பாக்கித் துறைத்தனத்திற்கு முக்கிய காரணமே மேலை நாடுகளில் காணுகின்ற துப்பாக்கிக் கலாச்சாரமும், ஆதிக்க உணர்வுகளும் தான் தூண்டுதல் என்றால் மிகையாகாது.
போர்களில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்:
1) 'கன்வேன்சனல்' என்ற முறைப்படி அறிவித்து போர்
2)  'நான் கன்வென்சனல்' என்ற அறிவிக்காத போர் முறையாகும்.
உதாரணத்திற்கு கிராமங்களில் இரண்டு ஊர்களுக்கிடையே தகராறு இருக்கின்றது என்றால் அந்தக் கிராமத்தினர் கத்தி, கம்பு, கல் கொண்டு தாக்கிக் கொள்வார்கள் என்பதினை நீங்கள் அறிவீர்கள் .அது அறிவிக்கப் பட்ட போராகும்.
அதனை விட்டுவிட்டு ஒரு கிராமத்தினர் வேண்டாத அடுத்தக் கிராமத்து மக்களுக்கு இடைஞ்சல் செய்ய வேண்டும் என்று குளங்கல், குடி தண்ணீர் தொட்டிகளில் விஷம் கலப்பது, மற்றும் வயலுக்கு செல்லும் கால்வாய், வரப்புகளை அழிப்பது போன்றவை தான் நான் 'கன்வென்சனல்' போர்முறையாகும்.
அதுபோன்ற ‘நான் கன்வென்சனல்’ போர் முறைகளை இரண்டாம் உலகப் போரில் மேலை நாடுகளின் கூட்டுப் படை  ஜப்பான் முக்கிய நகர்களான ஹிரோஷிமா, நாகசாகி ஆகியவற்றில் உயிர்கொல்லி ஆயதமான அணுகுண்டினை வீசி வயது வித்தியாசமில்லாது லக்சக் கணக்கில் அழித்தனர். அதன் தாக்கம் இன்னும் மறைய வில்லை என்பதினை ஆப்கானிஸ்தானில் தீவிர வாதிகளை ஒழிக்கின்றோம் என்று ஆளில்லா விமானம் மூலம்
பள்ளத்தாக்கில் பழங்குடியினர் ஒரு திருமண நிகழ்ச்சியில் இரவு நேரத்தில் குழந்தைகள், முதியவர் ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியினைக் காட்ட ஆடிப் பாடிக் கொண்டிருக்கும் போது குண்டு வீசப் பட்டு 62 பேர்கள் மாண்டனர். அதற்கு கூட்டுப் படைத் தளபதியும் வருத்தம் தெரிவித்தார் என்பது கண் கெட்டதும் சூரிய நமஸ்காரம் போன்ற செயலாகாதா?
2) துப்பாக்கி கலாச்சாரத்தின் தாக்கம் தப்பித்தக் குழந்தைகளுக்கு எவ்வாறு இருக்கின்றது என்பதினை சமீபத்தில் பெஷாவார் ராணுவ பள்ளி துப்பாக்கி சூட்டில் காயத்துடன்  தப்பித்த ஒரு மாணவன் கூறும்போது குண்டு அடிபட்டு வகுப்பறையின் கீழே விழுந்தபோது தீவிர வாதிகள் நடந்து வந்த கருப்பு நிற ஷூ சத்தம் இன்னும் தன்னை பயமுறுத்துவதாக கூறியிருக்கின்றான் என்றால் எவ்வளவு தூரத்திற்கு பிஞ்சு மனது வன்முறையால் பாதிக்கும் என்று நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். அவர்கள் அந்தப் பயத் தாக்கத்தினை விட்டு அகல நீண்ட நாட்களாகுமல்லவா?
3) மேலை நாடுகளில் தனி நபர் துப்பாக்கி வைத்துக் கொள்வது அவனது உரிமை. ஆனால் ஆசிய நாடுகளில் துப்பாக்கி உரிமம் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
4) ஆசிய, அராபிய, ஆப்ரிக்கா   நாடுகளின் தீவிர வாத கும்பலுக்கு நவீன ஆயுதம் எங்கிருந்து கிடைக்கின்றது என்றால் மேலைநாடுகளில் ஆயுதங்கள் தயாரிப்பதிற்கென்றே பல தனியார் கம்பனிகள் உள்ளன. அவைகள் அந்த அரசின் ஆதரவு மூலம் அவர்களுக்கு விநியோகம் செய்கின்றனர் என்பது தான் உண்மை நிலை. பிள்ளையினை கிள்ளிவிட்டு அந்தக் குழந்தை அழுவதினை வேடிக்கைப் பார்க்கும் நிலைக்குத் தான் மேலை நாடுகள் உள்ளன.
5) இளைஞர்களை மயக்கி மூளைச் சலவை செய்யும் தீவிர வாதக் கும்பல் மன நோய்களாலும், உலச்ச்சல்களாலும் நிம்மதி இல்லாமல் இருக்கின்றார்கள் என்பதினைத் தான் பெஷாவர் பள்ளி துப்பாக்கி சூடு போன்ற சம்பவங்கள் அறிவுறுத்துகின்றன என்றால் மிகையாகாது.
சிறுமி மலாலா துப்பாக்கிச் சூடு, பெஷாவர் பள்ளி துப்பாக்கிச் சூடு போன்றவை முஸ்லிம்கள் கல்விக்கு எதிரானவர்கள் போன்ற ஒரு தோற்றத்தினை உலக மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது என்பது யாரும் மறைக்க முடியாது.
இவ்வளவிற்கும் அந்தக் காலத்தில் அராபியாவிலிருந்து சீனம் வெகு தூரத்திலிருந்தாலும் கல்வி கற்க அங்கே சென்று கல்வி கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னது இஸ்லாமிய மார்க்கம்.
உலகிலேயே மிக சிறந்த நூலகம் அமைத்து உயர் கல்வியினைக் கொடுத்தது அலெக்சாண்ட்ரியா பல்கலைக் கழகம் இஸ்லாமியரினைச் சார்ந்தது. அப்படி இருக்கும் பொது எப்படி இஸ்லாமியர் கல்விக்கு எதிரானவர் என்பதினை ஏற்றுக் கொள்ள முடியும்?
உயிர் என்பது இறைவன் கொடுக்கும் அற்புத வரம். அதனை மனிதன் எடுப்பதிற்கு எந்த உரிமையும் இல்லை என்பது இஸ்லாம் போதிக்கும் நல்லுறையாகும். அதனை நிரூபிப்பது போன்று தற்கொலையினை இஸ்லாம் ஆதரிக்க வில்லை என்பது தான் உண்மை. அப்படி இருக்கும் போது இளந்தலிர்களான பள்ளி மாணவர்களைக் கொன்ற  தற்கொலைப் படை போன்ற  படுபாதகர்கள் எப்படி முஸ்லிம்களாக ஏற்கப் படுவார்கள்.
அந்த இளம் மொட்டுக்கள் மலர்ந்து உலகெங்கும் மனம் பரப்ப முடியாமல் செய்தது மாபாதகமாக செயலாகாதா?
இந்தத் தருணத்தில் ஒரு உண்மைச் சம்பவத்தினைச் சொல்லலாம் என நினைக்கின்றேன்.
கஸ்தூரி ராஜா என்ற ஒரு சினிமா டைரக்டர் மற்றும் தயாரிப்பாளர் உங்களுக்குத் தெரிந்திருக்கும். மிகவும் ஆவலோடு சில படங்கள் எடுத்து அவைகள் வெற்றி அடையவில்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் சிரமம் படுவதினை விட சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்து மனைவி, இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் ஆகியோருடன் அங்கே சென்றாராம். அங்கே சென்றும் சரியான வேலைக் கிடைக்காததால் ஒட்டு மொத்தக் குடும்பமே வறுமையில் வாடியதாம். ஒருநாள் தன் மனைவியிடம் சாப்பாட்டுக்கே சிரமப் படுவதினை விட தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து விஷ  மருந்து வாங்கி வந்து விட்டாராம். அதனை இரவு மனைவியிடம் கொடுத்து கிடைத்த கொஞ்சம் சோற்றிலும் விசத்தினை கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டு நாமும் சாப்பிடலாம் என்றாராம். அப்போது பெற்றக் குழந்தைகளை சாகடிக்க மனசில்லாத பாசமுள்ள அவருடைய மனைவி, 'ஏங்க, நமக்கு இறைவன் இரண்டு ஆண்  குழந்தைகளைக் கொடுத்துள்ளான். அவர்கள் நிச்சயமாக பெரியவர்களாகி, நம்மையும் காப்பாற்றி மகளுக்கும் திருமணம் செய்து வைப்பார்கள் என்று உறுதியாக நம்பி நாம் மறுபடியும் சென்னை சென்று பிழைப்போம்' என்று உறுதியான நம்பிக்கையினை அந்த மகராசி கணவனுக்குக் கொடுத்தாராம். அந்த அம்மணி சொன்ன வாக்கினை நம்பி சென்னை வந்து மறுபடியும் சினிமா  உலகில் பிழைப்பினைத் தொடங்கினாராம். அவருடைய மகன்களான சினிமா டைரக்டர் மற்றும் நடிகர் செல்வராகவன்,  தனுஸ் தலையெடுத்து இன்று அவர்கள் வாழ்க்கை ஓஹோ என்று இருக்கின்றதாம். இதனை ஒரு பேட்டியில் கஸ்தூரி ராஜாவே சொல்லியுள்ளார்.

இது எதனைக் காட்டுகின்றது என்றால் பிள்ளைகள் மொட்டுக்கள் போன்றவர்கள் அவர்கள் வளர்ந்து, மலர்ந்து பெரியவர்களாகி, தங்கள் குடும்பத்திற்கும், நாட்டிற்கும்,உலகிற்கும் நல்ல பல சாதனைகளை செய்ய மணக்கும் முன்னே பறித்து விடலாமா. ஆகவே தான் சில பூங்காக்களில் பூத்துக் குழுங்கும் மலர்களை பறிக்காதீர்கள் என்று விளம்பரப் பலகை வைத்துள்ளார்கள் . அதேபோன்று குழந்தைகளையும் இனியும் அழிக்காமல் வாழ விடுங்கள் என்று உரக்க கோசம் எழுப்பலாமா?

Monday 8 December, 2014

எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்!'

'எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்!'
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, (பிஎச்டி,ஐ.பீ.எஸ் )
தனி நபர் சொத்து உரிமைகளில் பல்வேறு மதத்தினவர் சட்டப் படி உரிமை கொண்டாட வழிமுறைகள், பழக்க வழக்கங்கள் உண்டு. ஆனால் பொது நிறுவனத்திலோ அல்லது ஜனநாயக அரசிலமைப்பிலோ அதுபோன்ற வாரிசு உரிமைகள் இல்லை.   முற்காலத்தில் அரசர்களில்லை. அரசர்களில்லததால் போர்களில்லை. ஆனால் நாடுகளை ஆட்சி செய்ய அரசர்கள் வந்ததும் மன்னர்களின் மண்ணாசை ஆர்வத்தால் போர்கள் நடந்தன. ஐரோப்பிய நாடுகளில் மற்ற நாட்டு  மக்களில்லா மகிழ்ச்சி போலந்து நாட்டு மக்களுக்கு இருந்ததாம். காரணம் அங்கே மன்னர் ஆட்சி இல்லையாம். உலக ஆட்சி முறைகளுக்கு முன்னோடியான கிரேக்க நாட்டில் கடிவாளமில்லாத அதிகாரத்தினை சில ஆட்சியாளர்கள் கொண்டிருந்ததால் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன என்று வரலாறு கூறுகின்றது.
 இரண்டாம் உலகப் போரில்  மன்னர் ஆட்சியின் மகுடங்கள் சரிந்து மக்கள் ஆட்சி பல்வேறு நாடுகளில் மலர்ந்தது. மக்களால், மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுத்தப் பிரதிநிதிகள் மூலம் ஆட்சி செய்வது தான் ஜனநாயகம்.  மக்கள் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு தலைவர்கள் அகிலத்தில் உண்டு. அவர்கள் யாரும் தங்கள் குழந்தைகளை, உறவினர்களை வாரிசாக நியமனம் செய்ததில்லை. வாரிசுகள் அரசில் தலையீட்டால் பல்வேறு தலைவர்கள் பதவி இழக்கும் சம்பவங்களும் உண்டு. தலைமைப் பதவியினை ஏற்ற வாரிசுகள் சர்வாதிகாரிகளாக மாறி  சிம்மாசனங்களை இழந்தவர்களும் உண்டு.
அவ்வாறு பதவி இழந்ததிற்கு முக்கிய காரணங்களாக அமைந்தது:
1)    வாரிசுகள் மைனர்களாகவும், முன் அனுபவமில்லாது குழப்பமான அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
2)     வாரிசில்லாத ஆட்சியாளர்கள் திறமைசாலிகளாகவும், மாட்சிமை அமைந்தவர்களாகவும் இருந்ததால் மக்கள் மற்றவர்களை தேர்ந்தடுத்தது.

வாரிசுகள் என்பது புகழுக்காகவோ, பதவி சுகத்திற்காகவோ , தங்களுக்குள்ளே இருக்கும் குரோதத்தினை பதவியால் பழி தீர்த்துக் கொள்வதிற்காகவோ அல்ல. மக்களை உண்மையான நேரான வழியில் நடத்திச் செல்லவே பயன் படும் என்றால் மிகையாகாது.
இறை வழி வந்த யூத, கிருத்துவத்திலோ அல்லது இஸ்லாமிய மார்க்கத்திலோ வாரிசு உரிமை இல்லை. எம்பெருமானார்(ஸல்) அவர்கள் கூட தன் கடைசி வாழ்நாளில்  என் வாரிசு இவர் தான் என்று சுட்டிக் காட்டவில்லை. அனைத்து மக்களையும் அனைத்துச் செல்லும் திறமை அவர்களிடம் எல்லாம் வல்ல அல்லாஹ்  வழங்கி இருந்ததால் பெருமானார் அவர்கள் யாரையும் வாரிசு என்று சுட்டிக் காட்ட வில்லை. ஆனால் இன்று பல்வேறு இஸ்லாமியர் ஆளும் அராபிய, வளைகுடா  மற்றும் ஆப்ரிக்க    நாடுகளில் அனுபவமில்லா வாரிசுகளை நியமித்ததால் உள்நாட்டுக்குள்ளே குழப்பம், வெளிநாட்டு மிரட்டல்,    அந்நிய நாடுகளின் ஆதிக்கம் ஆகியவைகளுக்கு வழிவிட நேருகிறது.
செல்வமிருந்தும் சொந்தக் காலில் நிற்க முடியாமல் உதவிற்கு மேற்கத்திய நாடுகளை நாட வேண்டியிருப்பது கேவலமில்லையா? மக்கள் பணி மறந்து மயக்கத்தில் இருப்பதினால் இந்த பரிதாப நிலை இஸ்லாமிய நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பதினை துபாய் போன்ற நாடுகளுக்கு சென்றவர்களுக்குத் தெரிந்திருக்கும் எப்படியெல்லாம் அவர்கள் மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் மூழ்கியுள்ளார்கள் என்று.
அமெரிக்க நாட்டில் கறுப்பின மக்களை தட்டி எழுப்பி, அவர்களுடைய உரிமைக்காக தன்னுயிர் கொடுத்த மார்டின் லூதர் கிங், சொந்த நாட்டில் வெள்ளை இன மக்களால் பல இன்னல்கள் பட்ட கறுப்பின மக்களுக்காக குரல் கொடுத்த தென் ஆப்ரிகா சிங்கம் நெல்சன் மண்டேலா, காலனி ஆதிக்கத்திலிருந்து அன்னியப் படைகளை விரட்டிய துருக்கி நாட்டினைச் சார்ந்த முஸ்தபா  கமால் அட்டா  துர்க், எகிப்தினைச் சார்ந்த கமால் அப்துல் நாசர், இந்தியா, பாக்கிஸ்தானைச் சார்ந்த மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா போன்றோர் தங்கள் வாரிசுகளாக யாரையும் சுட்டிக் காட்டவில்லை என்பது சரித்திரம் சொல்லும் உண்மை. ஆனால் அதன் பின்னால் வந்த ஆட்சியாளர்கள் தங்கள் வாரிசுகளை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அடையாளம் காட்டியதால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதன என்பது நாம் அறிவோம்.
இந்திய அரசியலில் மற்றவர்களுக்கு முடிசூட்டும் தலைவராக இருந்த காமராஜர்,தாழ்த்தப் பட்ட மக்கள் தலைவர் டாக்டர் அம்பேத்கார், சிறுபான்மை மக்களுக்கு  அரணாக இருந்த கண்ணியமிகு காயிதே மில்லத், பகுத்தறிவு பகலவன் பேரறிஞர் அண்ணா போன்றோர் தங்களுடைய வாரிசு இன்னார்தான் என்று சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அந்தப் பெரியார்களின் பெயரில் கட்சி நடத்தும் சிலர் தாங்கள் தான் வாரிசு என்று தம்பட்டம் அடிக்கின்றார்கள். ஆனால் அந்தப் பெரியார்களின் கொள்கைகளை காற்றில் பறக்கச் செய்யும் பரிதாபம் நீங்கள் காணலாம். எங்கெல்லாம் அரசியல் வாரிசாக தன் குடும்பத்தினைச் சார்ந்தவர்களை அடையாளம் காட்டுகிறார்களோ அங்கெல்லாம் அரசியல் தோல்விகளை அன்றாட அரசியல் வானில் காணலாம். உதாரணத்திற்கு ஹரியாணா மாநிலத்தில்முன்னாள் துணை பிரதமர்  தேவிலால் வாரிசு ஓம் பிரகாஸ் சௌட்டாலா, பீகார் முன்னால் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் முன்னால் முதல்வர் மனைவி ராபரி தேவி  , முன்னால் துணை பிரதமர்  சரண் சிங் மகன் அஜீத் சிங், கர்நாடகா முன்னாள் பிரதமர் தேவி கௌடா மகன் குமாரசாமி போன்றவைகர்களை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய கட்சியின் செல்வாக்குகளும் கழுதை தேய்ந்து கட்டெறும்பான  கதையானது அனைவருக்கும் தெரியும்.
பிள்ளைகள் கேட்டு அடம் பிடிக்கின்றார்களே என்று தந்தைமார்கள் தின்பதிற்காக பஞ்சு மிட்டாய், பாப்கார்ன்,விளையாட பலூன், பார்பி பொம்மை அல்லது ஐ.பேட்  போன்றவை தந்தைமார்கள் வாங்கிக் கொடுக்கலாம். அதற்காக பிள்ளைகள் கேட்கின்றதே என்று படுக்க இலவம் பஞ்சு மெத்தை, ஏ.சி. மெசின் பெட் ரூம், கொப்பளிக்க பன்னீர், குளிக்க கழுதைப் பால், குடிக்க ஒட்டகப்பால், பயணம் செய்ய ஆடி.கார் போன்றவை சாதாரணக் குடிமகன் வாங்கிக் கொடுக்க முடியுமா? முடியாதல்லவா ? ஆகவே தந்தையார் உயர் பதவியில் இருந்தால் அவர் மகன் தந்தைபோன்று உழைத்து முன்னுக்கு வர ஆசைப் படவேண்டுமே தவிர தந்தையின் சிம்மாசனமே ஆசைப்பட்டதும் வேண்டும் என்று கூறுவது பேராசையில்லையா?
அதேபோன்று ஒரு இமாம் திருக்குரானை, ஹதிஸ்களை அதிகமாக தெரிந்தவர், சிறப்பாக பாயான் செய்பவர் தான். ஆனால் அதனைப் பயன் படுத்தி பத்வா கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தவரோ, அல்லது தேர்தல் நேரத்தில் முஸ்லிம்கள் ஆதரவு உங்களுக்குத்தான் என்று கண்ணை மூடிக் கொண்டு முஸ்லிம்களை அடகு வைக்கும் அளவிற்கு அவர் உயர்ந்தவரா என்று சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்கு மேலாக பள்ளிவாசல்களில் தொழ வைக்க இரண்டு இமாம்கள்  என்ற வசதியினைப் பயன்படுத்திக் கொண்டு  தனது ஓய்வு நேரங்களில் மூட நம்பிக்கைக்கு புகழிடமான பேய், பிசாசு, காற்று, கருப்பு ஒழிக்கின்றேன் என்று கிளம்பி வசூல் வேட்டையில் ஈடுபடலாமா?
அதுபோன்ற சிர்க்கான காரியங்களை விட்டுவிட்டு இன்று படித்த, விஞ்ஞான அறிவு பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் எழும்  சந்தேகங்களை தீர்க்கும்படியான கதீசுகளை, திருகுரானில் புதைந்து கிடக்கும் இன்னும் அறியமுடியா தகவல்களை பயான்களில் சொன்னால்  முஸ்லிம் இளைஞர்கள் 19 குழுபோன்ற நஜ்ஜாஜ் என்று சொல்கிற குழுக்கள் பக்கம் செல்வதினை தடுக்க உதவுமல்லவா?  6.12.2014 ந் தேதி கர்நாடக மந்திரி சதிஸ் ஜார்கிஹோலி என்பவர் தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களிடையே நிலவும் காற்று, கருப்பு, பேய், பிசாசு என்ற மூட நம்பிக்கையினை ஒழிக்க காலையிலிருந்து மறுநாள் காலைவரை தனிமையில் பெலகாவில் உள்ள சதாசிவ நகர் சுடுகாட்டில் தங்கி, உணவருந்தி, படுத்து தூங்கி எழுந்தாராம். அவரை எந்தப் பேயும், பிசாசும் அண்டவில்லை. இதுபோன்ற முற்போக்கான நடவடிக்கையில் இறங்கி முஸ்லிம்கள் சிலரின் மூட நம்பிக்கை ஒழிக்கப் பாடுபடுவதினை விட்டுவிட்டு, சிர்க்கான காரியங்களான பேய்,பிசாசு விரட்டுகிறேன் என்று பண அறுவடை செய்வது தகுமா?  இன்று படித்த, விஞ்ஞான அறிவு பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள் மனதில் எழும்  சந்தேகங்களை தீர்க்கும்படியான கதீசுகளை, திருகுரானில் புதைந்து கிடக்கும் இன்னும் அறியமுடியா அற்புதங்களை, கணினி உபயோகித்து, பத்திரிக்கை ஆதாரத்துடன்  பயான்களில் சொன்னால்  முஸ்லிம் இளைஞர்கள் 19 குழுபோன்ற நஜ்ஜாஜ் என்று சொல்கிற குழுக்கள் பக்கம் செல்வதினை தடுக்க உதவுமல்லவா?  அதனை விட்டு விட்டு  தொழவதிற்கு நியமிக்கப் பட்ட இமாம் பள்ளிவாசலுக்கு நானே எஜமான், எனக்குப் பின்பு என் சிறுவயது மகனே வாரிசு என்று 'உழுதவனுக்கே நிலம் சொந்தம்' என்ற அடிப்படையில் சொந்தம் கொண்டாடுவது எந்தவிதத்தில் நியாயம்?
அரசியல் போன்றே மதத்தலைவர்களும் தங்கள் வாரிசுகளை நியமனம் செய்வதால் மக்கள் மனதில் பெரும் அதிருப்தியும், அதிர்ச்சியும் ஏற்பட்டிருப்பதினை இரண்டு உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன்.
1) முகலாய பாரம்பரிய சின்னமாக தலைநகர் டெல்லியில் உள்ளது ஜும்மா மஸ்ஜித் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். நானும் முதல் முறையாக 1979 ஆம் ஆண்டு பார்த்துப் பரவசப் பட்டிருக்கின்றேன். அங்குள்ள இமாம் புஹாரி தனது 19  வயது மகனை தனது வாரிசாக நியமித்துள்ளார். அது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானதல்லவா? அந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்றம் வரை சென்றது மக்களின் புருவத்தினை உயர்த்த வைத்தது.
2) பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரில் ஆசிரமம் அமைத்து ஆட்சிமை நடத்திய திவ்ய ஜோதி சுவாமி அவர்கள் சென்ற நவம்பரில் மரணம் அடைந்து விட்டார். அந்த ஆசிரமத்தினைச் சார்ந்த பலகோடி மதிப்புள்ள சொத்தினை சொந்தம் கொண்டாட அவருடைய மகன்களிடையே வாரிசு போட்டி ஏற்பட்டதால் இறந்த சாமியின் உடலினை ‘ப்ரீசர் பெட்டியில்’ வைத்து பாதுகாத்து வருகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சாமியார் மீண்டும் உயுர் பெற்று மக்களுக்கு பூஜைகள் நடத்த யார் வாரிசு என்று அடையாம் காட்டுவாராம்.. இந்த வழக்கும் பஞ்சாப் உயர் நீதிமன்ற வரை சென்று உயர் நீதிமன்றமும் சென்ற நவம்பர் மாதத்திற்குள் அவருடைய உடலை அப்புறப் படுத்தி தகனம் செய்யவும் என்று ஆணைப் பிரபித்தும் இன்னும் அந்த பிரேதம் பாதுகாக்கப் பட்டு வருவதாக பத்திரிக்கை செய்திகள் படம் பிடித்துக் காட்டுகின்றன என்பது என்னே வேடிக்கையான செயல்.
தமிழக முஸ்லிம் கட்சிகளில் சிலர் கண்ணியமிகு காயிதே மில்லத், அதற்குப் பின்பு வந்த சிராஜுல் மில்லத் ஆகியோருடைய உண்மையான வாரிசு நாங்கள் தான் என்று பெயரளவில் லெட்டெர் பேடு வைத்து அரசியல் நடத்தி தேர்தல் நேரத்தில் பத்தோடு பதினொன்றாக இருப்பது எந்த விதத்திலும் இதுவரை பலனளிக்கவில்லை என்பது தான் உண்மை. அந்தத் தலைவர்களின் குடும்பச் சொத்துக்கு அவர்கள் வாரிசாக இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்த சமூதாயத்திற்கும் யாரும் உரிமை கொண்டாட முடியுமா?
அதேபோன்று தான் இமாம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் பணியாளர் ஆவார்கள். அவர்கள் பணிபுரியும் பள்ளிக்கே எஜமானவர்களாக ஒருபோதும் ஆக முடியுமா?
ஆகவே தனிப் பட்ட குடும்ப மற்றும் சொத்து பங்கீடு செய்வதில் வாரிசுகள் செல்லுபடியாகுமே தவிர அரசியல் வானிலோ, மத சம்பிராய சடங்குகளிலோ அதுபோன்ற செயல் போணியாகாது என்றால் சரிதானே!