Thursday 28 December, 2023

பேய் மழையில் மறைந்த ஜாதி, மத துவேசம்!

 


(டாக்டர் .பீ. முகமது அலி, பீ.எஸ்()

தென் தமிழகமென்றாலே ஜாதி, சமய சண்டை என்ற செய்திகள் 1995ம் ஆண்டிலிருந்து 1998 வரை நாம் பார்த்திருக்கின்றோம். நான் பணியிலிருந்தபோது ஜாதி சண்டைகளை கட்டுப் படுத்த காவல்  தலைமையிடத்திலிருந்து பணிக்கப் பட்டேன். 1995ம் ஆண்டு தூத்துக்குடி நகரத்தில் மீனவர்களுக்கும், நாடார் சமூக மக்களுக்கும் இடையிலும், 1996ம் ஆண்டு ராஜபாளையம் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தேவர்-தலித் இடையே நடந்த சண்டைகளையும், 1998யில் கோவில்பட்டி, திருநெல்வேலி  சுற்றியுள்ள ஊர்களில் நாடார்-தலித் மக்களுக்கும், 1998ம் ஆண்டு ராமநாதபுர பகுதிகளில் தேவர்-தலித் இன மக்களுக்கும் நடந்த சண்டைகளை கண்டுள்ளேன். இதுபோன்ற சண்டைகளில் பாதிக்கப் பட்டவர் பணக்காரர்களல்ல மாறாக நடுத்தர மற்றும் ஏழை விவசாய மக்களும் தானே! வீடுகள், குடிசைகள் நாசமாக்கப் பட்டு, வைக்கோல் போர்கள், கோழிப் பண்ணைகள், ஏற்றுமதிக்கான வைக்கப் பட்ட நாட்டு மருந்து செடிகளும் தீக்கிரையாக்கப் பட்டன. பசுமையான வயல்களும், தென்னை மரங்களும் நாசமாக்கப் பட்டன. இதுபோன்ற நாச வேளையில் தூண்டி விட்டவர்கள் சாதி சங்கங்களின் தலைவர்கள் தான். ஆனால் பாதிக்கப் பட்டோர் ஒன்றும் அறியா  மக்கள்.

          தமிழகத்தில் வர்தா புயல் 2016ம் ஆண்டும், கஜா புயல் 10.11.2018 லும் வந்த போது அப்போதைய அரசு நத்தை போல எவ்வாறு செயல் பட்டது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள், வேட்டியில் நீர்ப்படாமல் நடந்த முக்கிய நபர்களையும் தொலைக்காட்சிகள் படம் பிடித்தும், கடலூருக்குக் கூட பார்வையிட ஹெலிகாப்டர் உபயோகப்படுத்தியதையும் உங்களுக்குத் தெரியும், அதற்கு நேர் மாறாக தற்போதைய அரசும், அலுவலர்களும் எவ்வாறு முனைந்து நிவாரணப் பணிகள் செய்தது என்றும் உங்களுக்குத் தெரியும். சென்ற 17ந்தேதி, 18ந்தேதிகளில் மழையினால் எவ்வாறு தென் மாவட்டங்கள் பாதித்தது, அதனால் எப்படி அங்குள்ள மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள் என்றும் தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் கான்க்ரீட் வீடுகள், கார்கள், ட்ரக்குகள் ஆகையவற்றினைக்கூட விடவில்லை, வெள்ளத்தில் அடித்துச் சென்றன. 148 குளங்கள் உடைந்தன. தூத்துக்குடி வாழ் வாதாரத்திற்கு முக்கியமான உப்பளம் கூட கடலோடு கரைந்தது. திருச்செந்தூர் முருகன் கோவிலும் கடலும் ஒன்றாகியது. 1923ம் ஆண்டிற்குப் பின்பு நூறு வருடங்களைத் தாண்டி தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினது. நான் ஸ்ரீவைகுண்டம் டிஸ்பி ஆக 1983ம் ஆண்டிலும், தூத்துக்குடி எஸ்பியாக 1990ம் ஆண்டும் பணியாற்றியுள்ளேன். ஸ்ரீவைகுண்டம், கருங்குளம், ஏரல் , குரும்பூர் ஆத்தூர் போன்ற பகுதிகளில் பச்சை மெத்தை விரித்தது போன்ற நெல் வயல்களும், கரும்பு, தென்னையும் பரந்து காட்சியளிக்கும். அப்படிபட்ட ஊர்களில் மக்கள் தனிமைப்படுத்தப் பட்டு எங்கும் செல்ல முடியாமலும், ஸ்ரீவைகுண்டத்தில் கூட ரயில் மூன்று நாட்கள் தனிமைப் படுத்தப் பட்டும், பயணிகள் உணவில்லாமல் தவித்ததினையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

            நாங்கள் இதுபோன்ற மழை வரும் என்று கூறி மாநில அரசு தனது கடமையினை சரிவர செய்யாததினால் வந்த பேராபத்து என்று ஒரு மத்திய அமைச்சர் பழியினை போடுகிறார். அதே நேரத்தில் தென் மண்டல வானிலை நிலையத்தின் இயக்குனர் எங்களால் 28 செ.மீ. மழையினை வரை தான் கணிக்க முடியும் ஆனால் தற்போது பொய்த்த  மழை சராசரி 58 செ மீ. மழை பொழிந்துள்ளது. அதிக பட்சமாக 95 செ.மீ. காயல் பட்டணத்தில் பெய்துள்ளது எதிர் பார்க்கமுடியாதது என்றும் சொல்கிறார். அதனையே தான் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வும் வானிலையினை துல்லிதமாக கணிக்க முடியாது, மற்றும் வானிலை நிலையத்தில் ஆய்வாளர்கள் குறைவு என்றும் சொல்வது எப்படி முன்பு சொன்ன மத்திய அமைச்சர் blame game ஆடுகிறார் என்று அறிவீர்கள். அது மட்டுமல்ல அதே மத்தியமைச்சர், மாநில அரசு ரூபாய் 5000/ கோடி நிவாரணம் கேட்டதிற்கு, நாங்கள் ஏப்ரல் மாதத்திலேயே ரூபாய் 400/கோடி வடிகால் தூரெடுக்க மாநில அரசுக்குக் கொடுத்து விட்டோம் என்றும் சொல்கிறார். சமீபத்திய வெள்ளம் டிசம்பர் 17, 18 ந்தேதிகளில் வந்தது. அந்த பாதிப்பிற்கு நிவாரணம் கொடுப்பதிற்குப் பதிலாக இதுபோன்ற பாதிப்பு நேரங்களில் அரசியல் விளையாடலாமா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் கேட்கலாம் இதுபோன்ற வெள்ளம் இந்த 21ம் நூற்றாண்டில் நடக்கவில்லையா என்று. ஏனெனில்லை 2004ம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தில் 3074 மக்களும், சீனாவில் 2010ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 3184 பேர்களும், 2011ம் ஆண்டு பிலிப்பைன் நாட்டில் 2828 பேர்களும், 2013ம் ஆண்டு கூட வட இந்தியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 6063பேர்களும் மாண்டிருக்கிறார்கள்.

            இந்த பேய் மழையில் நாம் கண்டது என்ன வென்றால் பள்ளிவாசல்கள் கட்டிய இடங்கள் எங்கள் மதத்திற்குடையது என்று வாதிட்டவர்கள் வெட்கப் படுமளவிற்கு பூந்தமல்லி பெரியபள்ளிவாசல், அது மட்டுமல்ல அதே மத்தியமைச்சர், மாநில அரசு ரூபாய் 5000/ கோடி நிவாரணம் கேட்டதிற்கு, நாங்கள் ஏப்ரல் மாதத்திலேயே ரூபாய் 400/கோடி வடிகால் தூரெடுக்க மாநில அரசுக்குக் கொடுத்து விட்டோம் என்றும் சொல்கிறார். சமீபத்திய வெள்ளம் டிசம்பர் 17, 18 ந்தேதிகளில் வந்தது. அந்த பாதிப்பிற்கு நிவாரணம் கொடுப்பதிற்குப் பதிலாக இதுபோன்ற பாதிப்பு நேரங்களில் அரசியல் விளையாடலாமா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். அது மட்டுமல்ல அதே மத்தியமைச்சர், மாநில அரசு ரூபாய் 5000/ கோடி நிவாரணம் கேட்டதிற்கு, நாங்கள் ஏப்ரல் மாதத்திலேயே ரூபாய் 400/கோடி வடிகால் தூரெடுக்க மாநில அரசுக்குக் கொடுத்து விட்டோம் என்றும் சொல்கிறார். இதையெல்லாம் எதிர்பார்க்காத மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ரூபாய் 6000/ கொடுத்தது பாராட்டாமல் இருக்க முடியாதலல்லவா  சமீபத்திய வெள்ளம் டிசம்பர் 17, 18 ந்தேதிகளில் வந்தது. அந்த பாதிப்பிற்கு நிவாரணம் கொடுப்பதிற்குப் பதிலாக இதுபோன்ற பாதிப்பு நேரங்களில் அரசியல் விளையாடலாமா என்று மக்கள் கேட்கத்தான் செய்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் பாட்டப்பட்டது, மேலப்பாளையம் போன்ற 50 பள்ளிவாசல்களில் பாதிக்கப் பட்ட மக்கள் எந்த ஜாதிகள் என்று பாராது, அவர்களை தங்கவைத்து, படுக்க பாய்களும், குளிரில் இதமாக இருக்க பார்வைகளும், குழந்தைகளுக்கு பாலும், மற்றவர்களுக்கு மூன்று வேலை வயிறார சுவைமிகு உணவுகளும் அளித்து ஆறுதல் தந்தது அனைவராலும் பாராட்டப் பட்டது. ஆனால் பள்ளிவாசல்களில் அதிகாலை பாஜ்ர் தொழுகை பங்கு சொல்வது எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கின்றது என்று வழக்கு தொடர்ந்தவர்களும், பல்வேறு சங்கங்கள் வெளியூர்களில் வைத்தும், கல்யாண மஹால், பெரிய, பெரிய வியாபார ஸ்தலங்கள் நகரங்களில் வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகளும், பொழுதுபோக்கு பூங்காக்கள் வைத்து காசுகள் சம்பாதிக்கும் முதலாளிகளும் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவி செய்ததினை காணமுடியவில்லை, ஏன் என் படங்கள் முதல் வார வசூல் நூற்று கணக்கான கோடிகள் என்று கூறி மார் தட்டி அடுத்த படத்திற்கு பூஜை போடும் பட அதிபர்களும், முன்னெனி நடிகர்களும் எந்த உதவியும் செய்ததாக செய்திகள் வர வில்லை. ஒரு வேலை அவர்கள் சம்பாதித்த பணத்தினை வியாபாரத்தில் ஈடுபடுத்தி முனைப்பு காட்டுகிறார்களோ என்று தெரியவில்லையா உங்களுக்கு!

            மத்திய பேரிடர் பாதுகாப்புக் குழுவினரும், மீனவர்களும், மற்ற மக்களும் படகுகளில், ஹெலிகாப்டர் மூலமும், தலை சுமையாகவும், வண்டிகளில் உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றை பாதிக்கப் பட்ட மக்களுக்கு வாரி வழங்கினர். தங்களுக்கு ஒரு வாய் உணவும், தாகத்திற்கு தண்ணீரும் கிடைக்காதா என்று ஏங்கியவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம் போல இருந்தது என்று மக்கள் சொன்னது தொலைக் காட்சி நிறுவனங்கள் படங்கள் காட்டியது. கர்ப்பிணி பெண்கள் படகுகளில், ஹெலிகாப்டர் மூலமும் காப்பாற்றும் போது சுக பிரசவம் ஆனது என்ற செய்திகளும் வராமலில்லை. அவ்வாறு உதவி செய்தவர்கள் எந்த மதத்தினை சார்ந்தவர்கள், எந்த ஜாதிகள் என்றும் பார்க்கவில்லை. ஆனால் அமைதியான நேரங்களில் ஏன் அதுபோன்ற வேற்றுமைகள் வருகின்றது என்றால் ஜாதி, சமய சங்கங்களும் அதன் தலைவர்களும் தானே என்றால் மறுக்க முடியுமா? முதலில் இந்த ஜாதி, சமய சங்கங்களை தடைகள் செய்தாலே போதும் தென் மாவட்டங்களில் சண்டை, சச்சரவுகளை தடுக்கலாம். அதேபோன்று தான் வட தமிழகத்திலும் கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில்  இந்த ஜாதி சங்கங்களால் தான் கலவரங்கள் வந்தன என்பதினை நான் 1985ம் ஆண்டு ஒருங்கிணைந்த கடலூர் மாவட்டத்தில் ADSP இருந்த போதும், அதன் பின்னர் கடலூர் மாவட்டம் இரண்டாக பிரிந்தபோது 2000ம் ஆண்டு விழுப்புரம் DIG இருந்தபோதும் சாமான்ய மக்கள் பாதிக்கப் பட்டனர் என்று பார்த்திருக்கின்றேன். தீண்டாமை தலை விரித்தாடியபோது கிராமங்களில் வாழும் பட்டியலினத்தவர் மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதிகளில் நடக்கக் கூடாது, அவர்கள் பொது மாயணத்தினை பயன் படுத்தக் கூடாது, பட்டியலினத்தவர் சமைத்த உணவை இலவச உணவகங்களில் உண்ணக் கூடாது, அவர்கள் குழந்தைகள் பள்ளிகளில் தனியாக உட்கார வேண்டும், அந்த குழந்தைகள் தான் பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும், பட்டியலின பஞ்சாயத்து தலைவர், தலைவிகள் சுதந்திர தின கொடிகள் ஏற்றக்கூடாது, பஞ்சாயத் கூட்டங்களில் அவர்கள் மற்ற உறுப்பினர்கள் பெஞ்சில் உட்காரும் போது அவர்கள் தரையில் தான் உட்கார வேண்டும், பட்டியலின மக்கள் கோவில்களின் கருவறைக்குச் செல்லக் கூடாது, அதுயேன் கோவில் தேர்களின் கயிறுகளைக் கூட பிடித்து இழுக்கக் கூடாது என்றும் சொல்லும் சாதி சங்கங்களின் மகத்தான தலைவர்களை பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஏன் உதவவில்லை என்று மக்கள் கேட்கத்தான் செய்கின்றனர்.அதுபோன்ற சங்கங்களை தடை செய்வது காலத்தின் கட்டாயமே! தற்போது அந்த ஜாதி, சமய சங்கங்கள் அரசியல் காட்சிகளாக மாற்றம் செய்து தங்கள் ஜாதி மக்களை தூண்டிவிடும் காரியங்களில் ஈடுபடுகின்றன. தேர்தல் கமிசன்களும் அவைகளை தடை செய்ய என்ன செய்யலாம் என்ற காரியங்களில் ஈடுபட வேண்டுமல்லவா? சமீபத்தில் காஸ்மீர் மாநிலத்தில் அதுபோன்ற காட்சிகளை தடை செய்யும் போது ஏன் தமிழகத்திலும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது. அப்போது தான் தமிழகத்தில் அமைதி நிலை நாட்ட முடியும்.