Tuesday 27 August, 2013

Historical and scientific facts


சக்கரை நோய் தீர்க்கும் அருமருந்து நோன்பு!
உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களை அழகாக்கி, சிறந்த ஆகார வசதிகளை அளித்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் என்று அல்குரான் சொல்லுகிறது (40:84)
அதே அல்லாஹ் வருடத்தில் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப் பிடியுங்கள் என்று கட்டளை இட்டுள்ளான். ஆகவே தான் கடந்த ரமலான் மாதம் கோடிகனக்கானோர் பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து நோன்பினைக் கடைப்பிடித்தனர். எம்பெருமானார் ஸல்லல்லாஹு (அலை) அவர்களும் பலப் போரினிலும் பட்டினிக் கிடந்து, சகாபிகளுடன் நோன்பிருந்தார்கள் என்ற வரலாறு கூறுகின்றது.
ஆனால் இன்று சிலர் நோன்பு காலங்களில் வெளிப்படையாக வயிறு முட்ட உண்டும், மது அருந்தியும் இஸ்லாம் மார்க்கத்தில் பெயரளவு முஸ்லிம்களாக உலவி வருகின்றனர்.
இன்னும் சிலர் தாங்கள் இனிப்பு நீர் நோயாளிகள் என்றும், இன்சுலின் மாத்திரை ஊசிகள் வருடம் முழுவதும் போடுவதாக நொண்டிச்சாக்கினை கூறுவார்கள்.
ஆனால் அப்படி சொல்லுவர்களுக்கு பட்டினி கிடந்தால் நீரழிவு குணமாகும் என்று ஆராச்சியில் தெளிவாக கூறப் பட்டுள்ளது:
இங்கிலாந்தினைச் சார்ந்த 59 வயதினைச் சார்ந்த ரிச்சர்ட் மிகவும் வாட்ட சாட்டமான ஆசாமி. தினமும் உடல் பயிற்ச்சியினை தவறாக மேற்கொள்ளுபவர். ஒருநாள் அவருக்கு  'டைப் 2' வகை நீரழிவு நோய் இருப்பதாக டாக்டர் சொன்னதும் ஒரேயடியாக அதிர்ந்து விட்டார். அதற்கு மருந்து உண்டா என்று தேடியதில்அதிர்ஷ்ட வசமாக அவருக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருந்தது. அதாவது,' நியுகேசில்' பல்கலைக் கழக பேராசிரியர் ராய் டெய்லர் என்பவர் ஒரு மனிதன் தனது உணவு வகையில் குறைந்த அளவு கலோரிகளை உட்கொண்டால், நீரழிவு நோயினை குணப் படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் கண்டு பிடித்திருந்தார்.
அதன்படி, ஒரு மனிதனுக்கு அன்றாடம் 2500 கலோரிகள் தேவை.
ஆனால் ஒரு மனிதர் அன்றாடம் 800 கலோரிகள் எடுத்துக் கொண்டால் உடம்பில் சேர்ந்துள்ள கொழுப்பு எரிக்கப்பட்டு, உடலை சுற்றியுள்ள கொழுப்பு எரிக்கப் பட்டு, கல்லீரலும், கணையமும் இயல்பான அளவிற்கு இன்சுலினை சுரப்பதால் ரத்தத்தில் சர்க்கரை நார்மல் அளவிற்கு வந்து விடுகின்றது.

அதனை அறிந்த ரிச்சர்ட் தனது உணவு கட்டுபாட்டிற்காக 11 நாட்கள் அரைகுறை உணவு அருந்தி, பட்டிணி கிடந்து சக்கரை நோயினை விட்டோழித்திருக்கிறார் என்று உண்மை வரலாறு சொல்கிறது. இதனைத் தான் ரசூலல்லாவும் 1400 ஆண்டு களுக்கு முன்னாள் விளக்கிச் சொல்லி இன்று கோடிக் கணக்கான முஸ்லிம் மக்களும் நோன்பினைக் கடைப் பிடிக்கின்றனர். ஆனால் இன்றும் கூட சில பெயரளவு முஸ்லிம்கள் இனிப்பு நீர் நோய் என்று நோன்பினைப் கடைப் பிடிக்காமல் இருந்தால் மேற்கண்ட உண்மை நிகழ்வினை எடுத்துச் சொல்லி வருகின்ற  வருடமாவது நோன்பினை நோற்க வலியிருத்துவோமாக!