Monday 30 May, 2022

மத துவேசம் உச்ச கட்டமா வன்முறை ?

 


( டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

 

சமீப காலங்களில் மத துவேசத்தால் வன்முறைகள் ஏற்படுகின்றன. மதம் என்ற வார்த்தைக்கு எந்த ஒரு அறிவுபூர்வமான விளக்கமும் இல்லை. அது மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டிய வார்த்தையாகும். மதம் ஒரு நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது வேத புத்தகங்களை கொண்டதாகவோ, அல்லது வழிபாட்டு தளங்களைத் உள்ளடக்கியதாகவோ அமைந்துள்ளது. வன்முறை என்பது வேற்று சமூகத்தினர் உடலுக்கும் பொருளுக்கும் உலை வைப்பதாகும். எந்த ஒரு மதமும் வன்முறையினை அடுத்த மதத்தினரிடம் காட்டும்படி சொல்வதில்லை. ஆனால் உலகளவில் மத துவேஷ வன்முறைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. மத வன்முறை மத கோட்பாடுகளின் படியும்,  மதங்களை பின் பற்றும் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகுமென்றால் மிகையில்லை.

            மதமென்ற சொல் பழைய கிருத்துவ ஏற்பாடுகளிலோ(old testament),திருகுரானிலோ, யூத ஹீப்ரு மொழியிலோ சொல்லப் படவில்லை. எப்போது புதிய ஏற்பாடு(Protestant) என்ற வழிபாடு நடந்ததோ மற்றும் எப்போது பிரிட்டிஷ் கும்பனி ஆட்சியின் காலனி ஆதிக்கம் அமல் ஆக்கப் பட்டதோ அதிலிருந்து மதங்கள் என்ற சொல் வேரூன்ற ஆரம்பித்தது. 19ம் நூற்றாண்டில் தான் புத்த மதம், ஹிந்து மதம், டாவோஸியம், கண்பூனிசம் என்ற சொற்கள் வெளி வந்தன.  மதங்களால் ஏற்படும் வன்முறைகள் உடலுக்கு பங்கமும், பொருளுக்கு சேதமும் மாட்டு விளைவிப்பதில்லை, மாறாக தனிப்பட்ட மனிதரின் உரிமைகளை சொல்லாலும், செயலாலும் தாக்கப் படுவதாக சமூக ஆராய்ச்சியாளர்கள்  ரால்ப் டென்னேர் (Raliph Tanner) மற்றும் டெரன்ஸ் பிரேதேய்ம்( Terence Fretheim ) சொல்கிறார்கள்.

            Religious persecution: மதத்தின் பெயரால் திட்டமிட்டு தனிப்பட்டவரையோ, அல்லது ஒரு பகுதியினரையோ, தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்குவது, அல்லது ஒரு சமூக அமைப்போ அல்லது அரசு தனது சட்டங்கள் மூலம் அல்லது அதிகார மமதைகள் மூலம் கொடுமைப் படுத்துவது மத துன்புறுத்துதல் ஆகும். உண்மையிலே உலகில் பல நாடுகளில் இது போன்ற மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்த்தப் படுகின்றன என்று அமெரிக்க சமூக கல்வியாளர் ஸ்மித் கூறுகின்றார். அவர் கூற்றினை உண்மைக்குவது போல கருப்பு இன அமெரிக்கர்களை திட்டுவது, அடிப்பது, கொடுமைக்கு ஆளாக்குவது, அல்லது அதிகார போதையில் கொலை பாதக செயல்களில் ஈடுபடுவது  போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது என்பதினை தொலைக்காட்சி மூலம் காணலாம்.

            முந்தைய வரலாற்றில் எகிப்து, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகள் உள்ளன. அவையெல்லாம் அப்போதைய சட்டப் படி செல்லும் என்று ஆசிரியர் கிள்ளியன் கிளார்க்( Gillian clark) சொல்கிறார். அதேபோன்றே பாரசீக பேரரசு சைரஸ், டாரிஸ் காலங்களிலும் செயல் படுத்தப் பட்டன. பியூ(PEW) என்ற ஆராய்ச்சி மையம் சார்பாக 2017ல் நடத்தப் பட்ட ஆய்வில் முஸ்லிம்கள் துன்பத்திற்கு ஆளாகுவது உலகில் 125 நாடுகளிலும், 105 உலக அரசுகளாலும், 140 நாடுகளில் அரசு சார்ந்த சமூக அமைப்புகளாலும் உள்ளதாக கூறப் படுகிறது.

            Religious cleaning: ஒரு சமூதாயத்தினவரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து வன்முறையால் இடம் பெயரச் செய்வது பொருளாதார மற்றும் அரசியல் காரணதிற்காக இடம் பெயரச்செய்வது ஆகும். உதாரணத்திற்கு கனடா நாட்டில் கமலோப் என்ற பகுதியின்  வாழும் அந்த நாட்டின் பழமைநாட்டு  மக்களையும் அவர்கள் குழந்தைகளையும் மலையடிவாரத்திற்கு கொண்டு சென்று ஆக்கிரமிப்பு பிரிட்டிஷ் படையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் 19ம் நூற்றாண்டில் நடந்திருக்கின்றது. அதேபோன்று ருவாண்டா நாட்டில் டுட்சி இனத்தினவரை கொலை செய்து விரட்டி படித்த சம்பவம் 21ம் நூற்றாண்டில் நடந்துள்ளது. அமெரிக்காவின் ராணுவத்தால் 29 டிசம்பர் மாதம் 1890ம் நூற்றாண்டில் டக்கோட்டா பகுதியில் வாழும் மக்களை விரட்டியடித்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு 'battle of wounded knee' என்று அழைப்பார்கள். ஒட்டோமான் பேரரசு, பழைய யுகோஸ்லோவியா செர்பியா அரசுகளால் அர்மேனிய முஸ்லிம்களை இடம் பெயரச்செய்தது, அமெரிக்க 2001 செப்டம்பர் மாதம் 11ந்தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்பு Islamophobia என்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு, அல்லது இஸ்லாத்தினை ஒழித்துக் கட்டுவது என்று கங்கணம் கட்டி ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா கூட்டுப் படை எடுத்த வன்முறை செயல்,  சீன ஜின்ஜியாங் மாநிலத்தில் உஜ்ஜார் இன முஸ்லிம்கள் மேல் காட்டிய அடக்குமுறை, பர்மியா அரசு ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய வன்முறைகள், 2002 ம் ஆண்டு குஜராத்தில் நடத்திய வன்முறை, 2013ல் உத்தர பிரதேசத்தில் முஸாபிர் நகரில் நடத்திய மத சார்ந்த வன்முறைகள், புது டெல்லியில் 2020 ல் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடத்தப் பட்ட வன்முறைகள் அந்த religious cleansing மதத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தினரை அவர்கள் பகுதியிலிருந்து விரட்டி அடிப்பது ஆகும்.

            வழிபாட்டு தளங்கள் இடிக்கப் படுதல்: ஐ.நா சபை அறிக்கையின் படி ஒரு மதத்தின் வழிபாட்டுத் தளங்களை இடிப்பது ஒரு முறையில் வன்முறையாகவும், மனித உரிமையினை மீறியதாகவும் கூறுகின்றது. உதாரணத்திற்கு லிபியாவில் 2011 அக்டொபர் மாதத்திலிருந்து 2012 ஆகஸ்ட் மாதம் வரை சூபி மத வழிபாடு தளங்கள், சூபிமத இமாம் ‘சிடி அப்துல் ஸலாம் அழ அஸ்னார்’ மற்றும் ‘அஃசாபி’ பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டத்தினை கூறுகின்றது.அதற்கான காரணத்தினை நியுஜிலாந்து அக்லாண்ட் சமூகவியலாளர் அட்கின்சன் கூறும்போது, 'கல்வி அறிவு அதிமாகுதல், சமூகத்தில் ஏற்றத் தாழ்வு, சமூதாயத்தில் புறக்கணிக்கப் படுதல்' போன்றவைதான் என்று கூறுகின்றார்.

            அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் 20சதவீத அமெரிக்கர்கள் எந்தவொரு மாதாகோவிலிலும் உறுப்பினர்களாக இல்லையாம். ஆனால் 68 சதவீதம் பேர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், 37 சதவீதம் மத நம்பிக்கை கொண்டவர்களாகவும், மற்றும் உலகினை வழிநடத்தும் ஓர் உந்துப் பொருள் உண்டு என்று நம்புகின்றனர்.

            நமது நாட்டில் 1992 ல் அயோத்யா பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்பு 2020ல் டெல்லியில் நடந்த குடியுரிமை போராட்டத்தின்போது இடிக்கப்பட்ட பள்ளி, தர்காக்கள் 500 என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் மங்களூரில் 27.9.2021 உச்சமன்ற உத்தரவின்படி அரசு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்ட கோவில்கள் 640 என்றும் அது இதுவரை இடிக்கப் படவில்லையாம். 2014ம் ஆண்டுகளுக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸ். விழிப்புப் படை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம் தெளிவாகின்றது. உதாரணத்திற்கு டெல்லி கூர்கோன் வெளி மைதானத்தில் வெள்ளி அன்று ஜும்மா தொழுகையினை அங்குள்ள தொழிலார்கள் தொழுவதிற்கும், கர்நாடகா ஈத்கா மைதானத்தில் வெள்ளி ஜும்மா தொழுகை நடத்துவதற்கும், பள்ளிகளில் தொழுகைக்கான அழைப்பினை அந்தப் பகுதி முஸ்லிம்களை ஒளி பெருக்கியில் மூலம் அழைப்பதிற்கும், பெண்கள் தங்கள் அங்கங்கள் வெளி ஆடவரின் கழுகுப் பார்வையிலிருந்து மறைப்பதிற்காக அணியப் படும்  புர்கா, ஹிஜாப் கூடாது என்றும், ஹஜ் பெருநாள் முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்கும் கூட அந்த வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை அணுகி தடை உத்தரவு வாங்கி விடுகின்றனர். அப்படி தடை உத்தரவுகள் கொடுப்பது மனித உரிமைகளை மீராதா என்று நீதி மன்றங்கள் தான் யோசிக்க வேண்டும். நமது நாட்டில் 1992 ல் அயோத்யா பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்பு 2020ல் டெல்லியில் நடந்த குடியுரிமை போராட்டத்தின்போது இடிக்கப்பட்ட பள்ளி, தர்காக்கள் 500 என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் மங்களூரில் 27.9.2021 உச்சமன்ற உத்தரவின்படி அரசு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்ட கோவில்கள் 640 என்றும் அது இதுவரை இடிக்கப் படவில்லையாம். 2014ம் ஆண்டுகளுக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸ். விழிப்புப் படை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம் தெளிவாகின்றது. உதாரணத்திற்கு டெல்லி கூர்கோன் வெளி மைதானத்தில் வெள்ளி அன்று ஜும்மா தொழுகையினை அங்குள்ள தொழிலார்கள் தொழுவதிற்கும், கர்நாடகா ஈத்கா மைதானத்தில் வெள்ளி ஜும்மா தொழுகை நடத்துவதற்கும், பள்ளிகளில் தொழுகைக்கான அழைப்பினை அந்தப் பகுதி முஸ்லிம்களை ஒளி பெருக்கியில் மூலம் அழைப்பதிற்கும், பெண்கள் தங்கள் அங்கங்கள் வெளி ஆடவரின் கழுகுப் பார்வையிலிருந்து மறைப்பதிற்காக அணியப் படும்  புர்கா, ஹிஜாப் கூடாது என்றும், ஹஜ் பெருநாள் முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்கும் கூட அந்த வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை அணுகி தடை உத்தரவு வாங்கி விடுகின்றனர். அப்படி தடை உத்தரவுகள் கொடுப்பது மனித உரிமைகளை மீராதா என்று நீதி மன்றங்கள் தான் யோசிக்க வேண்டும்.

            அயோத்யா பாபர் மஸ்ஜித் உச்சமன்ற தீர்ப்பினை சாதகமாக பயன்படுத்தி உ.பி. கியான்வாபி, மதுரா பள்ளி, குதுப் மினார் போன்றவற்றை இடிப்பதற்கு முன்னோட்டமாக நீதிமன்றங்களில் வலது சாரி அமைப்புகள் வழக்குகள் தொடங்கியுள்ளன  என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் சொல்லும் கூற்று மிகவும் வேடிக்கையானது. உ.பி. கியான்வாபி மஸ்ஜிதில் லிங்கம் இருக்கின்றதாம். அவர்கள் சொல்லுவது இதனை  தெரியுமா தோழர்களே? பள்ளிவாசல்களில் உள்ள அகல்களின் நடுவே இருக்கும் பவுண்டைன் என்ற நீரூற்று ஆகும். ஒரு பணக்கார வீட்டின் முன்பு அது போன்ற ஒரு நீரூற்று அழகுக்காக இருக்கும். அதுபோன்றதுதான். கியான்வாபி லிங்கம் என்று கூறுவதும்.  காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் நோய் என்று சொல்லும் பழமொழிபோலதானே இந்த வாதமும் இருக்கின்றது. சில மஸ்ஜிதில் தூண்களில் சிலை வடிவு இருக்கலாம். அதற்குக் காரணம் அப்போதைய மெஜாரிட்டி சிற்பிகள் ஹிந்துக்கள் தான். அவர்கள் வடிவமைத்த கற்தூண்கள் தான் பள்ளிவாசல்களில் இருக்கும் அதற்காக அது கோவிலாகுமா? 800 வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தாலும், 80 சதவீத இந்துக்கள் உள்ள நாட்டில் அதுபோன்று கோவில்களை இடித்து பள்ளிவாசல்கள் கட்டமுடியுமா என்று அறிவு சான்றோர் கேள்வி எழுப்பாமல் இல்லை. இருந்தாலும் மத துவேசத்தாலும், அரசியல் மற்றும் பொருளாதார பொறாமையாலும் இது போன்ற செயல்களில் வலது சாரி அமைப்பினர் 2014ம் ஆண்டுக்குப் பின்பு ஈடுபட்டுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாகின்றது.

            அவர்களின் கூற்றை பொய்யாக்குவதுபோல பத்ம பூஷன் விருது பெற்ற வரலாற்று பேராசிரியர் கூறும்போது, 'அக்காலங்களில் கட்டப் பட்ட கோவில்கள் மற்றும் மசூதிகள் புத்த விக்ரகங்கள் சிற்பங்களும், கற்களும் கிடைக்கின்றன. இதற்காகவா பள்ளிவாசல்கள் இடிக்கப் படவேண்டும். மதுரா கிருஷ்ணன் கோவில் பக்கத்தில் உள்ள ஷாயி ஈத்கா மஸ்ஜித் முகலாயர் காலத்தில் கட்டப் பட்டதுதான். ஆனால் கோவிலை இடித்து முஸ்லிம்கள் கட்டினார்கள் என்றால் எப்படி அந்த கிருஷணன் கோவில் மட்டும் இடிக்கப் படாமல் தப்பியது என்று ஏன் வலது சாரி அமைப்புகள் சிந்திக்கவில்லை என்று கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லைதானே. வலது சாரி அமைப்புகளின் வாதகங்களுக்கு வலிமை சேர்ப்பது போல பாபர் மஸ்ஜித் 1992ல் இடிப்பு வழக்கு வாதங்களைப் பற்றி உச்ச நீதி மன்றம் ஆராயாமல் இரவு முழுவதும் சிந்தித்து மத அடிப்படையில் அயோத்தியில் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தது தான் முன்னோடியாகும்.

அப்படியென்றால் ராஜஸ்தானில் மஹாராஜா ராணா பிரதாப் சிங் சித்தேரி கோட்டையில் கட்டிய பழங்கால மினார் உள்ளது. அதன் கீழ் பகுதியில் தேவதைகளும், மேல் பகுதியில் 'அல்லா, அல்லா' என்று அராபிய எழுத்துப் பொறிக்கப் பட்டுள்ளது. அதற்காக அந்த மினாரை முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடமுடியுமா?

            கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'உண்மையில் தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது'. வலது சாரி அமைப்பினரின் அறிவு ஜீவிகளுக்கு இவையெல்லாம் தெரியும். இருந்தாலும் நாட்டில் அமைதியின்மையினை வன்முறை மூலம் நிலைநாட்டி, ஹிந்துக்களை ஒன்று திரட்டி மைனாரிட்டிகளை பல வழிகளில் பயமுறுத்தி தங்களுடைய அரசியல் நோக்கங்கள் நிறைவேற்ற வேண்டுமென்பதே அவர்களுடைய தலையாய செயலாகும். ஆகவே மைனாரிட்டி சமூதாயத்தினவரும் தங்கள் உரிமைகளை ஜனநாயக நாட்டில் நிலைநிறுத்திக்கொள்வதே சாலச் சிறந்தது என்றால் மிகையாகுமா? இனி வரும் காலங்களிலாவது பள்ளிகள் கட்டும்போது அதுபோன்ற பிற மத சின்னங்கள் இல்லா கட்டிட பொருட்களை பயன் படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் எந்த வில்லங்கம் இல்லாத இடமாக ஆராய்ந்து பள்ளிகளை கட்டுவது சாலச்சிறந்ததாகுமல்லவா? நீதிமன்றங்களில் தொடுக்கப் படும் வழக்குகளுக்கு வல்லமைவாய்ந்த வழக்கறிஞர்களை சமூதாயம் உருவாக்கி அவை ஒரு குழுவாக இயங்க வேண்டுமல்லவா?