Monday 23 November, 2020

 

 மிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம்!

(டாக்டர் .பீ.முகமது அலி,.பீ.எஸ் ( )

உலகின் நம்பர் ஒன் நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா ஜனாதிபதியின் மணி மகுடம் நவம்பர் 3ம் தேதி நடந்த தேர்தலில் உருண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.அதற்கு முக்கிய காரணம் கொரானா என்ற கொடிய நோயினை அவர் கட்டுப் படுத்த தவறியதால் 1,45,000 அமெரிக்கர்களை உலகப் போரில் இழந்ததினை விட இழந்து விட்டோம் என்ற கோபத்தில் தான் என்றால் மிகையாகாது. அந்த நோய் உலக அளவில் 13, 46,576 மற்றும் இந்தியாவில் 1,30,993 உயிர்களையும் பலி வாங்கி விட்டது என்பது நமக்கும் வருத்தம் தானே! நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் குளிர் காலம் என்பதால் மக்கள் மிகவும் கவனமாக தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென்று உலக சுகாதார இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. கிருமிகள் உயிரற்றத்தாக கருத முடியாது ஆனால் பரவக்கூடியது. கிருமிகள் தனது உயிரினை கிரியா ஊக்கியாக மாற்ற முடியாது. அவைகள் தன்னால் உயிர் வாழ முடியாது. வைரஸின் உயிரணுக்கள் மற்ற உயிரணுக்கள் மீது பற்றி பரவுகின்றது. அது மனிதர்கள் மீது படரும்போது சுகவீனத்தினை உண்டாக்கின்றது. உலகளவில் 3,20,200 பாலூட்டிகளை தாக்கின்றது(mammal ) அதனில் 219 கிருமிகள் மனிதர்களை தொற்றுகின்றது என்று அமெரிக்காவின் மருத்துவ நூலகம் கூறுகின்றது.

1)      ஒவ்வொரு மழைக் காலத்திலும் மழைத்துளிகள் விழும்போது நாம் சிறுவர்களாக வாயினைத் திறந்து சுவைத்திருப்போம். ஆனால் அவைகள் கிருமிகளையும், நுண்ணுயிர்களும் தாங்கி வருகின்றன என்று தெரிவதில்லை. அவைகள் அதிஷ்டவசமாக நோய் கிருமிகளை பரப்பக்கூடியதல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மழைத்தண்ணீரை பானைகளில் சேகரித்து உபயோகிப்பதினை கண்டிருப்போம். ஆனால் அந்தத் தண்ணீரை கொதிக்க வைக்காமல் உபயோகிக்கக் கூடாதாம்.

2)      நோய் கிருமிகளை வெரும் கண்ணால் பார்க்க முடியாது. அவைகளை டெலெஸ்கோப்பின்னால் மட்டுமே காண முடியும். நோய் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை வெவ்வேறாக பிரித்துப் பார்க்க முடியாது. பாக்ட்ரியா என்ற நுண்ணுயிர் தனி உறுப்பானது. அவை மற்ற உயிர்களை பரப்பக் கூடியது. குளிர் பிரதேசத்தில் ஒருவருக்கு நோய் கிருமிகள் பற்றினால் அவை நான்கு பேர்களுக்கு பரப்பிவிடும். ஆனால் வெயில் பிரதேசத்தில் தொற்று நோய் ஒருவரோடு  நின்று விடும்.

3)      ஆஸ்துமா மற்றும் டீ.பி. என்ற காச னாய் நிபுணர் ‘காதலின் தாஸ்’ கூறும்போது ஒருவருக்கு நோய் தொற்றி பின்பு குணமானால் அவருடைய உடலில் அவைகளை மறுபடியும் எதிர்க்கும் சக்தி மற்ற உயிரணுக்களுக்கு வந்து விடுகிறது என்கிறார். அவை பரவுவது அவரவர் உடல் வாகினை பொறுத்தது என்றும் கூறுகின்றார்.

4)      ஒருவரை கொரானா தாக்கிவிட்டது என்பது வெளியே தெரியாது; அவை பாலின நோய் போன்றவையாகும். அவை ஒரு சிலரை அறியாமல் தாக்குவதில்லை, மாறாக நூற்றுக் கணக்கானவர்களை தாக்கக் கூடியவை என்று அமெரிக்காவின்  (CDC) சென்டர் பார் டிஸீஸ் கண்ட்ரோல் கூறுகிறது. அந்த அமைப்பு நோய் பரப்பும் கிருமிகளை கண்டு பிடித்து அழிக்கும் தொழில் நுட்பத்திற்கான அமைப்பாகும். அதன் தலைவர் டாக்டர் பாசி என்பவர் இருக்கின்றார். அவருக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் தான் ஏழாம் பொருத்தமாக இருக்கின்றது என்று நீங்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கண்டிருப்பீர்கள்.

5)      'நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின்' வெளியிட்ட ஆராய்ச்சிப்படி, 'Influenza' என்ற சளி காச்சல் வந்து விட்டால் நெஞ்சிலும், மூக்கிலும் எரிச்சலை உண்டாக்கும், பின்பு உடல் வீக்கமும் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். அதனை உடனே சரி செய்யாவிட்டால் ரத்த ஓட்ட நாளங்களில் அடைப்பினை ஏற்படுத்தி இதயத்தினை பாதிக்கும் என்று கூறுகிறது.

6)      வாஷிங்டனில் உள்ள 'Sola Med Solution'  தலைமை நிர்வாகி 'சரளயன் மார்க்', 'சாதாரண குளிரில் நடந்தால் நோய் பரவாது, ஆனால் தொடர்ந்து குளிரில் இருந்தால் சளி சவ்வு காய்ந்து அதன் மூலம் கிருமிகள் நுழையும்' என்று எச்சரிக்கின்றார். ஆகவே ஏசி வெயில் காலத்தில் நல்லது, இதமானது தான்  ஆனால் குளிர் காலத்தில் அதனை உபயோகிப்பதால் கிருமியின் தொற்றால் அவதிப் பட வேண்டுமாம்.

7)      சிறியவர் முதல் பெரியவர் வரை ஏதோ சிந்தனையில் அல்லது படிக்கும்போதோ, அல்லது எழுதும்போதோ நகத்தினை கடிப்பதினை பார்த்திருப்போம். அந்த நகம் தான் கிருமிகளை தங்கிச் செல்லும் கப்பலாக பயன் படுகிறது என்று பலருக்குத் தெரியாது. குழந்தைகள் பல மூக்கினுள் கைவிட்டு பின்பு வாயில் வைத்து சுவைப்பதினையும், ஏன் பெரியவர் சிலர் வேலையில்லா நேரத்தில் புத்தகங்கள் படிப்பதினை விட்டு,விட்டு மூக்கினுள் உள்ள முடிகளை பிடுங்கும் பழக்கத்தினையும் கொண்டுள்ளனர். ஆனால் அந்த மயிர்கள் தான் வெளியில் உள்ள தூசி மூக்குக்குள் செல்லாமல் தடுக்கின்றது என்று அவர்களுக்குப் புரியாது. அப்படி செய்பவர்களை நோய் கிருமிகள் எளிதாக பற்றிக் கொள்கின்றன.

8)      2019 ம் ஆண்டு வெளியிடப் பட்ட 'the journal of  exprimental medicine' அறிக்கையில் உடலுக்கு ஓய்வு கொடுத்து அதிக நேரம் தூங்கினால் T-Cell என்ற நோய் எதிர்ப்பு சக்தியினை கொடுக்குமாம். நீங்கள் நோயுள்ள சிலர் வெகு நேரம் தூக்கம் வராமல் அவதிப் படுபவர் குணமாக்குவது நெடுநாள் ஆகுமென்பதையும், அதிக நேரம் தூங்குபவர் சீக்கிரமே குணமாய்வதினையும் காணலாம்.

9)      நான் மதுரையில் 1982 ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியாற்றிய போது எனது 10 மாத மகனுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று எனது மனைவி கீழ வெளி வீதியில் உள்ள டாக்டர் திருஞானம் என்பரிடம் காட்ட எடுத்துச் சென்றார். அந்த டாக்டர் மருந்து கொடுத்து விட்டு குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள் என்று கூறினாராம். அதற்கு என் மனைவி ஏன் டாக்டர் குழந்தை காய்ச்சல் என்றால் நீங்கள் குளிர் நீரில் குளிக்க வையுங்கள் என்று கூறுகின்றீர்களே என்று கேட்டதிற்கு நான் டாக்டரா நீங்கள் டாக்டரா என்று சொல்லி அனுப்பி விட்டாராரம். இதனையே தான் பாட்டிமார்களும் தங்கள் பேரக் குழந்தைகளுக்குச் செயகின்றார்கள். குழந்தைகள் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி நிபுணர் Whitley-William  கூறும்போது, 'குழந்தைக்கு ஜுரம் வந்தால் குளிரான நீரில் குளிக்க வைக்கக் கூடாது. மாறாக மிதமான நீரில் தான் குளிக்க வைக்க வேண்டும் என்று சொல்கின்றார்.

10)  நீங்கள் நோயுற்றிருந்தால் புகை பிடிக்கவோ அல்லது புகைப்பவர் அருகிலோ இருப்பதனை தவிர்க்கவும். ஏனென்றால் புகைப்பவர் நுரையீரலை சீக்கிரமே கிருமிகள் தாக்குகின்றனவாம்.

11)  வைட்டமின் 'D' என்ற ஊட்டச்சத்து மனிதனுக்கு மிக முக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கின்றது. அவை பால், முட்டை, மீன்களில் உள்ளது. சூரிய ஒளியிலியிலும் உள்ளதாக அறிவோம். அதனையே 'Nutrient' என்ற பத்திரிக்கையில் கூறப் பட்ட குறிப்பில் சொல்லப் பட்டுள்ளது. அதுவும் அதிகாலை சூரியன் உதயமாகும் நேரம் மற்றும் மாலை அந்தி மயங்கும் நேரம் ஓசோன் என்ற ஊட்டச் சத்து அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

12)  சில நாடுகளில், மற்றும் சில மாநிலங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அப்படி அணிவதால் நோய் பரவுவதை அறவே தடுக்க முடியாது. மாறாக அந்த நோய் வேகமாக பரவுவதை தடுக்கமுடியும் என்று CDC Dr. Horovitz கூறுகின்றார்.

13)  உங்கள் கால்களில் பெருவிரல்களில் வீக்கம் வந்தாலும், விரல்களில் குளிர்ந்த நீர்பட்டால் அரிப்பு எடுக்கின்றது என்றால் அது கொரானாவிற்கான அறிகுறி என்று Dr.Mathew G Heinz, MD,, Tuscon Medical Centre, Arizona மாநிலத்தில் பணியாற்றுபவர் கூறுகின்றார்.

14)  கொரானா வந்தால் சுவையினை இழக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று Dr Heniz கூறுகின்றார். அதுவும் இளைஞர்களுக்கு அதிகமாக தென்படும். ஹரியானா மொஹாலியில் உள்ள நேஷனல் விவசாய மற்றும் உணவு மருத்துவதிற்கான முதுகலை பட்டப் படிப்பு மையம் கூறுகையில் தைல(peppermint) அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றினை நுகரும் சக்தியினை இழக்கும் தன்மை கொண்டதாக அமையும்.

15)  ‘Annals of Nurology’ என்ற விஞ்ஞான புத்தகத்தில் கொரானாவால் பாதிக்கப் பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் வரும் நோயாளிகளின் மூலைகளின் நரம்பு மண்டலத்தினை பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, தலை சுற்றல், மயக்கம், வலிப்புத்தன்மை மற்றும் சிலருக்கு இதய நோய் போன்றவற்றால் பாதிக்கப் படவும் வாய்ப்புள்ளதாக கூறப் பட்டுள்ளது.

16)  முதுமையில் வருகின்ற 'alzheimer' மறதி மூலம் வடிக்கும் வானி என்ற உமிழ் நீரால் அல்லது பெண்கள் பிறப்புறுப்பின் வெளிப்பக்கம் ஏற்படும் கட்டிகள் உடைந்து 'HSV-!' என்ற ஹெர்பெஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் வெளியேறுவதால் மிகவும் ஆபத்தானதும், சீக்கிரம் பரவக்கூடியதாகும் என்று தைவான் நாட்டு ஆராய்ச்சிக் குறிப்பு கூறுகின்றது. அதனை கண்டு பிடித்து சரியான மருந்து எடுத்துக்கொண்டால் 90 சதவீதம் குணமாக் கிவிடலாம் என்றும் கூறுகின்றது.

17)  கொரானா வைரஸ் பிளாஸ்டிக், உலோக பொருட்களில் 2-3 நாட்களுக்கும், பேப்பர்-அட்டைகளிலும் 24 நேரத்திக்கு இருக்கும், என்று 'New England Journal of Medicine' என்ற பத்திரிக்கைக் குறிப்பு கூறுகின்றது., வைரஸ்  தொலைபேசி, கைப்பிடி, ரிமோட், கம்ப்யூட்டர் கி போர்டு, குழாய்கள், கதவு, மின் இயக்கி கைப்பிடிகள், பொது இடங்களில் உள்ள பெட் சீட், போர்வை, தலையணை, ATM, பெட்ரோல்பம்ப் ஹாண்டில், ஜிம்மில் உள்ள சாதனங்கள், பாத்திரங்கள் போன்றவற்றில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து இருக்கும். ஆகவே தான் sanitizer வைத்து சுத்தம் செய்யவும், பாத்திரங்களை சூடு தண்ணீரில் கழுகவும் அறிவுரை சொல்லப் படுகிறது.

18)  செலியாக்(Celiac) என்ற ஒவ்வாமை நோய் வயிற்றுப் போக்கு, வயிற்று பொருமல் போன்றவை போன்றவை நோய்களினை எதிர்க்கும் திறனை எதிர்கொண்டுள்ளது  என்று எடுத்துக் கொள்ளலாம் என 'Celiac Virus Foundation' செய்தி குறிப்பு சொல்கிறது. தசை பிடிப்பு மற்றும் முதுகு வலி போன்றவையும் அதனுடைய அறிகுறியாகுமாம்.

19)  EVD எபோலா Zika வைரஸ் நோய்கள் ஆப்பிரிக்க நாடுகளான கினியா, காங்கோ போன்ற நாடுகளில் முதலில் கொசு கடியினால் மிருகங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி பின்பு மனிதர்களிடம் பரவி அதனால் 50 சதவீதம் பேர் இறந்துள்ளதாக செய்தி குறிப்பு கூறுகிறது. ஆ ண்கள் உடல் உறவு கொள்ளும்போது வெளியாகும் விந்துக்களால் பெண்களுக்கும் பரவுதாம். அதன் பிறகு பெண்களால் தொற்று ஏற்படுகின்றது என்றும் சொல்லப் பட்டுள்ளது. அதன் அறிகுறிகள் காய்ச்சல், களைப்பு, தலைவலி, தொண்டை வறண்டு போதல், வயிற்று போக்கு போன்றவையாகும். மேற்பாதித்த 28,616எபோலா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பாதித்த 28,616பேரில் 11,310 இறந்து விட்டனர் என்று கூறப் படுகின்றது.

20)  Rabbies என்ற சொறி நாயால் கடிபட்டவர் அல்லது அதன் நாவில் வடியும் நீரின் தொடர்பு கொண்டவர் உடனே ஊசி போட்டுக் கொள்ளவேண்டும். நான்கு மாதத்திற்குள் போட்டுக் கொள்ளாவிட்டால் அவருக்கு காய்ச்சல், தலைவலி, தூக்கமின்மை, மயக்கத்தினால் அவதிப் படுவர்.

21)  Meningitis என்ற மூளை காய்ச்சல் நோய் எப்படி அறிந்து கொள்வதென்றால், பாதிக்கப் பட்ட நபர் தனது தாடையினை நெஞ்சை நோக்கி கீழே கொண்டு வந்தால் முடியாது. அத்துடன் தூக்கமின்ம, குளிர் காய்ச்சல் வந்தது போல நடுக்கம், இதய துடிப்பு அதிகமாகுதல், முதுகு பிடிப்பு போன்றவை ஏற்படும். உடனே டாக்டரை அணுக வேண்டும். பெரும்பாலும், பால் கொடுக்கும் பெண்கள், சிறுவர் இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் இருந்தால் அதன் ஈர்ப்பால் முதுகு தண்டின் நீரில் கிருமி தொடர்பு ஏற்பட்டு மூளை காய்ச்சல் வருமாம். உடனே டாக்டரை அணுக வேண்டும்.

22)  தோலின் மேல் பகுதியில் ஏற்படும் பாலுண்ணிகள் இதுவரை தேரைகள் மூலம் ஏற்படுகிறது என்று எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால் popiloma virus என்ற புற்று நோயால் ஏற்படுகிறதாம். அவைகள் பெண்களின் கருப்பை வாய் புற்று நோய், யோனி புற்று நோய், ஆண் மற்றும் பெண் குறிகளின் மேல் பகுதியில் ஏற்படும் புற்று நோயாகுமாம். அவை 30-40 சதவீதம் பாலுறவு மூலமே உண்டாகிறது என்றும் கூறப் படுகிறது.

23)  நோய்கள் வந்தால் உடனே ஆண்டிபயோடிக்ட்ஸ் ஊசி போட்டுக் கொள்ளாதீர்கள். அவை உடலில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து விடும். Bactria என்ற நுண்ணுயிர் தான் virus என்ற கிருமிகளை அளிக்கக்கூடியது என்று 'Royal Society of Medicine' ஆய்வு குறிப்பு கூறுகிறது. நோய்கள் வந்து விட்டால் ஒவ்வொரு காரியமும் முடிந்த பின்பு சோப்பு தண்ணீரில் 20 நொடிகள் நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு சுத்தமான துணியால் துடைத்து விட வேண்டுமாம். அப்போது தான் பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும் என்றும் சொல்கிறது.

Flu, Corona தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது அவசியம், ஆனால் அது எப்போது வரும் என்று கூற முடியாது. Remdesivir  மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஊசி அதனை அனைவரும் போட்டுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா அதிபர் சொன்னார். ஆனால் பரிசோதனையில் அது பக்க விளைவு ஏற்படுத்தி விட்டதால் அதன் உற்பத்தி நிறுத்தப் பட்டது. தற்போது Pfizer, Covin-tech, Covaxin, Bharath-tech, ரசியா sputnik, Astra நெட், ஜான்சன் அன்ட் ஜான்சன், Bio N tech போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊசிகளை இன்னும் WHO என்ற உலக சுகாதார நிறுவனத்தில் கொடுத்து சோதனை செய்யப் பட்டு விநியோக அனுமதியினைப் பெறவில்லை. ஏனென்றால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்பட்டால் அந்த நிறுவனங்களே பொறுப்பானதால் நூறு சதவீத வெற்றி என்று எதனையும் கூறமுடியாது. நிறுவனங்கள் தாங்கள் ஊசி கண்டு பிடித்து விட்டதாகவும் அதனை உலக சுகாதார மையம் அங்கீகரிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளோம் என்றும் கூறுகின்றன. ஆனால் நோய்க்கான மருந்து அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் தான் உபயோகத்தில் வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றார். ஏனென்றால் அந்த மையம் உயிர்களை பலி கொடுப்பதினை விட பாதுகாப்பதுதான் தங்கள் தலையாய கடமை என்றும் கூறுகின்றது. Corona pandemic முதல், இரண்டு என்று தற்போது மூன்றாம் நிலைக்கு வந்துள்ளது என்றும் கூறப்பது. அதில் உண்மை இருப்பதுபோல அமெரிக்காவில் தினமும் 2 லட்சமும் டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வருவதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகோள் விடப் பட்டுள்ளது.

24)  கூடியமான வரை கூட்டம் நெருக்கமான இடங்களை தவிர்க்கவும், முக கவசம் அணியவும், சமூக இடைவெளியில் இருக்கவும், பரந்த வெளிப் பரப்பில், பூங்காவில் நடப்பதும், மூச்சிப் பயிற்சி செய்யவும், கைகளை சுத்தமாக கழுவுவதும் அவசியம் என்னும் கூறப் படுகிறது. பால் போடாத கிரீன் டீ, காய்கறி சூப்பு மற்றும் ஆட்டு கால் மற்றும் எழும்பு சூப்பு போட்டு குடிக்கவும் சொல்லப் படுகிறது. நாம் winter என்ற குளிர் காலத்தில் இருப்பதினால் சளி நோய் வராமல் காத்துக் கொண்டால் நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றிக் கொள்ளலாமா?

Sunday 1 November, 2020

அறிவு சார் அற்புத தகவல்கள் சில!

 

            

           (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ )

நாம் சில மிருகங்கள், பறவைகள், சம்பவங்கள், பொருட்கள் பற்றி தவறான எண்ணங்களுடன் உள்ளோம். ஆனால் உண்மைகள் என்னென்ன என்று இந்த கட்டுரைகள் மூலம் காணலாம். பரபரப்பான அரசியல் சூழலில் சற்று அறிவு சார்ந்த தகவல்களை உங்களுக்குத்கொடுக்கலாம் என எண்ணுகின்றேன்.

1)    பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலியா, சீனா, மெக்ஸிகோ, ஆப்ரிக்கா, அர்ஜென்டைனா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த டைனாசர் படிமங்கள், முட்டைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியும். அவைகள் காலப் போக்கில் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டன. அந்த மிருகம் பறவையினம் என்றும் அவைகள் இறக்கை கொண்டுள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. அவைகளை வைத்து பறக்கும் ‘ரோபோ பாம்ப்’ என்றும் படம் எடுத்துள்ளனர். அவைகள் சில அவதாரங்களை வாகனமாகவும் பயன் பட்டதாகவும் இலக்கிய கதைகளில் கூறப்படுகிறது உங்களுக்கு ஆச்சரியமாக தெரியவில்லையா!

2)    டால்பின் என்ற மீன் தெற்காசியா, மற்றும் அமேசான்  நீர் நிலைகளில் வாழ்ந்து வருவதனை நீங்கள் அறியலாம். அவைகள் அடிக்கடி தண்ணீருக்கு மேலே துள்ளி பார்வையாளர்களை கவரும். அவைகள் ஏன் அடிக்கடி நீருக்கு மேலே வருகின்றது என்றால் அவைகள் பத்து நிமிடங்களுக்கு மேல் தண்ணீருக்குள் மூழ்கியிருக்க முடியாது. ஆனால் கரடியினத்தினைச் சார்ந்த ‘ஸ்லோத்’ என்ற மிருகம் நீருக்கு அடியில் சுவாசிக்காமல் 40 நிமிடங்கள் வரை தம் பிடிக்க முடியுமாம்.

3)    தீக்கோழி தென் ஆப்பிரிக்கா, இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாழுகின்றன. அவை 9 அடி வரை வளரும். அவை எதிரி மிருகங்கள் கண்டால் தலையினை மண்ணுக்குள் புதைத்து விடுவதினைப் பார்த்திருக்கின்றோம். அவற்றினைப் பற்றி ஒரு பழமொழி கூட இருக்கின்றது. 'தீக்கோழி தலையினை மண்ணுக்குள் புதைப்பதால் உலகமே இருண்டு விடுவதில்லையென்று'. ஆனால் உண்மையில் தலை முழுவதும் மண்ணுக்குள் புதைத்தால் அது மூச்சுத் திணறி இறந்து விடும். ஆகவே அவை மூச்சு விடும் அளவிற்குத் தான் தன் தலையினை மண்ணுக்குள் புதைக்குமாம்.

4)    அமெரிக்காவில் அனைத்து மகளிருக்கும் ஓட்டுரிமை 1920 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் மக்கள் பிரநிதிச்சட்டம் 1918 படி 21 வயதான ஆண்களுக்கும், 30 வயதான பெண்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது.1928 சட்டப்படி தான் அனைத்து 21 வயதானவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது. ஆனால் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு 1918ம் ஆண்டு சொத்துரிமை உள்ள பெண்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்கியது. 1950ம் ஆண்டு அரசியல் சட்டத்தில் தான் 21 வயதான ஆண், பெண் இரு பாலாருக்கும் ஓட்டுரிமை கொடுக்கப் பட்டது.

5)    இது வரை நிலவில் தண்ணீர் இல்லையென்று பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனால் அக்டோபர் மாதம், 2020 அமெரிக்கா நாசா விண்வெளி  விஞ்ஞானிகள் நிலவில் தண்ணீர் துளிகளை கண்டறிந்தனர். அதன் படி மனிதர் வாழலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டதாம்.

6)    விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் கூடத்திலிருந்து வெளியே வந்தால் காற்றில் பறப்பது போல பூமி ஈர்ப்பு சக்தியில்லாமல் மிதப்பது போல தோன்றுவார்கள். தற்போது அந்த விஞ்ஞானிகள் யாரும் அழுதால் கூட நீர் அவர்களின் தாடையில் ஒரு உருண்டையாக நிர்ப்பதினைக் காணலாம். ஏனென்றால் அதற்கு ஈர்ப்பு சக்தியில்லாததால் கீழே விழவில்லை!

7)    உலக கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கால்களை அலங்கரிக்கும் ‘அடிடாஸ் மற்றும் பூமா’ என்ற காலணிகளுக்குச் சொந்தக் காரர்கள் ‘ஆடி மற்றும் ரூடி டேஸ்லர்’ இருவரும் அமெரிக்க சகோதரர்கள். அவர்கள் முதன் முதலில் 1929ல் இணைந்து கம்பனியின ஆரம்பித்தனர். அது எப்போது பிரபலமானது என்றால் 1936ம் ஆண்டு ஜெர்மனி தலைநகரம் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர்கள் கொடுத்த காலணிகளைக் கொண்டு ஒடித்தான் அமெரிக்கா தடைகளை வீரர் ‘ஜெஸ்ஸி ஓவென்’ 4 தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்ததால் அவைகள் மிகவும் பிரபலியமானது. அதன் பின்பு அவர்களுக்குள் கருத்து மோதல்கள் வந்து ஆடி என்பவர் ‘அடிடாஸ்’ காலணிகளையும், ரூடி ‘பூமா’ என்ற காலணிகளையும் தயாரிக்க ஆரம்பித்தனர்.

8)    உலகிலேயே ஈராக்-ஈரான் நாடுகளுக் கிடையே நடந்த 8 வருடப் போர் கேள்விப் பட்டிருக்கின்றோம், ஆனால் உலகிலேயே 38 நிமிடங்களுக்குள் நடந்த போரினை கேள்விப்பட்டிருக்கின்றோமா?

இந்திய கடற்பகுதி மத்திய ஆப்ரிக்க நாடான ஜான்சிபார் என்ற குட்டித் தீவின் சுல்தான் இறந்து விட்டார். அவருக்குப் பின்பு 1896ல் அரியணையில் ஏறிய சுல்தான் பிரிட்டிஷ் அரசினை எதிர்த்தும், தன்னிச்சையாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அதனை எதிர்பார்க்காத பிரிட்டிஷ் அரசு தனது போர் கப்பலை அனுப்பி குண்டு மழை அந்த தீவின் மீது வீசி அந்த தீவினை 38 நிமிடங்களில் கைப்பற்றியது தான் மிக குறுகிய கால போராக கருதப் படுகிறது.

9)    நியூஜிலாந்து நாட்டினை ஏன் ‘கிவிஸ்’(Kiwis}  என்று அழைக்கின்றோம் தெரியுமா? கிவிஸ் என்றால் தமிழில் கூஸ்பெரி பழம் என்கின்றோம்.  அந்த செடிகள் சீனர்களால் வளர்க்கப் பட்டு வந்தது. அதனை நியூஜிலாந்துக்கு அன்பளிப்பாக சீனர்கள் வழங்கினர். அந்தப் பழம் நியூ ஜிலாந்து  நாட்டினர் விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். ஆகவே அந்த செடிகள் பெரும் அளவிற்கு வளர்க்கப்பட்டது. பின்பு அந்தப் பழங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தனர். அங்குள்ள மக்கள் அதனை பெருமளவிற்கு விரும்பினர். ஆகவே தான் அந்த நாட்டு மக்களை கிவிஸ் என்று அழைக்கின்றனர்.

10)  ஒரு இடத்தில் தீ ஏற்பட்டால் நாம் வெறும் தண்ணீரை ஊற்றினால் தீ அணைய நீண்ட நேரமாகும். ஆனால் தீயணைப்புப் படையினர் தண்ணீரை குழாய் மூலம் தண்ணீரை பீச்சியடித்தால் அணைந்து விடுகிறதே ஏன் தெரியுமா? அதன் காரணம் என்னெவென்றால் அந்த தண்ணீருடன் ‘பொட்டாசியம் பை கார்போனேட்’ என்ற வேதியப் பொருளை கலந்து தண்ணீர் அடிப்பதால் தீ சீக்கிரமே அணைந்து விடுகிறது.

11)  நீங்கள் பெரிய பாம்பு சிறிய பாம்பினை விழுங்குவதினைப் பார்த்திருப்பீர்கள். தவளைகள் பெரிய கண்களைக் கொண்டுள்ளன. அவைகள் இறையினை விழுங்கும்போது கண்களை மூடிக் கொள்ளும். அது ஏன் தெரியுமா?  தவளை இறையினைப் பிடித்ததும், அதன் கண்கள், அதன் விழிக் குழிக்குள் தள்ளும். பின்பு அந்த விழிகளை மேல் நோக்கித் தள்ளி வாயில் உள்ள உணவினை வயிற்றுக்குள் தள்ளிவிட்ட பின்பு தான் கண்ணைத் திறக்கும்.

12)  ஒட்டகச் சிவிங்கி ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, ஜாம்பியா நாடுகளில் அதிகமாக காணப் படும். அவைகள் ஏன் தனது நாக்கினை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு வருகின்றன, ஏன் என்று தெரியுமா. முதலில் அந்த நாக்கின் நீளம் 8 அங்குலம் கொண்டது என்று காணலாம். அதன் பின்பு நாக்கு நீல நிறத்தில் இருக்கும். அந்த நாக்கு பாலைவனம், முள் காடுகளில் உள்ள வெயிலின் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது.

13)  சிகரெட் பற்றவைக்கும் தீப்பட்டி கண்டு பிடிக்கும் முன்பு 'ளைட்டரை' கண்டு பிடித்து விட்டார்கள். 1823 ம் ஆண்டு ஜெர்மன் வேதியல் நிபுணர் ‘டோபனீர்’ என்பவர் தொழிற்சாலைக்கு தேவையான லைட்டரை கண்டு பிடித்தார்.  3 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற் புரட்சிக் காரணமாக ஆங்கிலேய வேதிய நிபுணர் தொழிற்சாலைக்கு தேவைப் படும் லைட்டரினை கண்டு பிடித்து, அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பரவி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வழி வகுத்தது.

14)  ஒருவர் மகிழ்ச்சியான குடும்ப நிகழ்ச்சிகளான பிறந்த நாள், திருமண நாள், கல்யாண நாள் போன்ற வெற்றிக்கு பின்பு இறப்பதினை கேள்விப் பட்டிருக்கின்றோம். அப்படி ஏன் நடக்கின்றது என்றால் ஒருவர் மகிழ்ச்சியான தனது வயதிற்கேற்ற உணவினை சாப்பிடாதலால் மாரடைப்பால் மரணம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே வயதிற்கு மாறாக சாப்பிடுவதும், புணர்வதும் உடல் சுகவீனங்களுக்கு வழி வகுக்கும். ஏன் இட்லியினை போட்டிபோட்டு சாப்பிட்டு தொண்டையில் அடைத்து உயிர் போவதினை பத்திரிக்கை மூலமாக அறிந்திருப்பீர்கள். ஆகவே எதற்கும் ஒரு அளவு உள்ளது என்று விழாக்களில் மூக்குப் பிடிக்க உண்ண  வேண்டாம்.

15)  நீங்கள் வாய்க்குள் ஹம்மிங் என்ற ரீங்காரம் செய்யும் ஒலி எதன் மூலம் வருகின்றது தெரியுமா? அவ்வாறு ஹம்மிங் செய்யும்போது காற்று மூக்கு வழியே வெளியேறும். நீங்கள் பரிசோதனைக்காக மூக்கினைப் பிடித்துக் கொண்டு ஹம்மிங் செய்யுங்கள் பார்க்கலாம். ஒலி வராது. ஆகவே அரை மூக்குள்ளவர்களை மூக்குறையா என்று அழைக்கின்றோம். அவர்களுக்கு ஒலி வருவது குதிரைக்கொம்பேயாகும்.

16)  நமது உடலில் ஓடும் ரத்தம் சிகப்பாக இருந்தாலும், வெளியே இருந்து பார்க்கும்போது அது நீல நிறமாக காட்சியளிக்கும். அது ஏன் தெரியுமா? நமது ஒளி உடலில் உள்ள திசுக்களினை ஊடுருவி நரம்புகளில் ஓடும் ரத்தத்தினை பார்ப்பதால் ரத்தம் நீல நிறமாக காட்சியளிக்கின்றதாம்.

17)  நாம் சாப்பிடும் மிளகாய் ஏன் காரமாக இருக்கின்றது என்று தெரியுமா?  மிளகாயின் தோலில் காரத் தன்மையில்லை, மாறாக மிளகாய் உள்ளே இருக்கும் நரம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளில் தான் காரம் அதிகமாக இருக்கும். நீங்கள் மிளகாயினை வெயிலில் காயவைத்து, அதனை அணில் போன்ற விலங்குகள் அல்லது புறா, காக்கை போன்ற பறவைகள் கொத்திவிட்டு வெறும் தோலினை மட்டும் அரைத்தால் காரம் இல்லாதிருப்பதினைக் காணலாம்.

18)  உலகிலேயே பெரும் பாலைவனம் என்று ஆப்பிரிக்கா நாட்டின் சகாரா பாலைவனத்தினை சொல்வோம். ஆனால் அமெரிக்கா பூலோக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகா தான் பிக பிரமாண்டமான பாலைவனமாக கூறுகின்றனர். அவை பெரும்பாலும் பனிக்கட்டியால் மூடப் பட்டிருக்கும். சகாரா பாலைவனம் 85,46,960 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. ஆனால் அண்டார்டிகா 1,42,44,934 கிலோ மீட்டர் பரப்பளவாகும்.

19)  கி.பி. 60 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரோம சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் ஏன் அவ்வாறு அழைக்கப் பட்டார் தெரியுமா? அவர் பிரசவத்தின் போது அவருடைய தாயாருக்கு 'சிசேரின்' என்ற அறுவை சிகிச்சை செய்து பிறந்ததால் அவருக்கு அந்த பெயர் வந்ததாம். லத்தீன் மொழியில் 'Caedae' என்பதற்கு 'cut' என்று அர்த்தமாம்.

20)  'Lady Bird' என்ற சிகப்பு நிறவண்டு வயதினை எவ்வாறு விலங்கியல் நிபுணர்கள் நிர்ணக்கின்றனர் தெரியுமா? அந்த ஓட்டின் மேல் உள்ள கரும் புள்ளிகளை எண்ணி அதன் வயதினை நிர்ணயிக்கின்றனராம்.

21)  மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுத்திறனை தட்பவெப்ப சூழலுக்குஏற்ப எப்படி கணிக்கப் படுகிறது தெரியுமா. அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் 543 மாணவிகளை ஒரு கட்டிட அறைகளிலும் , அதே அளவிலுள்ள கட்டிட அறைகளில்  அதே அளவு மாணவர்களையும் வைத்து 33.8 டிகிரி சீதோஷ்ண அளவில் மாணவிகளின் அறைகளில் ஒவ்வொன்றாக சீதோஷ்ணத்தினை அதிகப் படுத்தும்போது வினாக்களுக்கு சரியான பதில்களை சொன்னார்களாம். அதே நேரத்தில் மாணவர்கள் அறைகளில் ஒவ்வொரு டிகிரியாக குறைக்கும்போது சரியான பதில்களைச் சொன்னார்களாம். இதிலிருந்து பெண்கள் வெட்பத்தினை விரும்புவர்களாகவும், ஆண்கள் குளிரினை விரும்புகின்றவர்களாகவும் இருப்பது தெரிகின்றதல்லவா?

நீண்ட கட்டுரைகள் தந்த எனக்கு வாசகர்களுக்கு ஒரு மாற்றாக அறிவு சார்ந்த செய்திகளை தர வேண்டும் என்று நினைத்து உங்களுக்கு மேற்படி தகவல்களை தந்துள்ளேன். அவைகள் பல உங்களுக்குத் தெரிந்திருக்கும், இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதிற்காக இதனை எழுதியுள்ளேன்.

உங்களுடைய விருப்பு, வெறுப்பினை என்னுடன் தொடர்பு கொள்ள கீழ்கண்ட மெயில் விலாசத்தினை தேடவும்:

mdaliips@yahoo.com