Sunday 1 November, 2020

அறிவு சார் அற்புத தகவல்கள் சில!

 

            

           (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ )

நாம் சில மிருகங்கள், பறவைகள், சம்பவங்கள், பொருட்கள் பற்றி தவறான எண்ணங்களுடன் உள்ளோம். ஆனால் உண்மைகள் என்னென்ன என்று இந்த கட்டுரைகள் மூலம் காணலாம். பரபரப்பான அரசியல் சூழலில் சற்று அறிவு சார்ந்த தகவல்களை உங்களுக்குத்கொடுக்கலாம் என எண்ணுகின்றேன்.

1)    பல லட்ச ஆண்டுகளுக்கு முன்பு மங்கோலியா, சீனா, மெக்ஸிகோ, ஆப்ரிக்கா, அர்ஜென்டைனா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்த டைனாசர் படிமங்கள், முட்டைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியும். அவைகள் காலப் போக்கில் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டன. அந்த மிருகம் பறவையினம் என்றும் அவைகள் இறக்கை கொண்டுள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. அவைகளை வைத்து பறக்கும் ‘ரோபோ பாம்ப்’ என்றும் படம் எடுத்துள்ளனர். அவைகள் சில அவதாரங்களை வாகனமாகவும் பயன் பட்டதாகவும் இலக்கிய கதைகளில் கூறப்படுகிறது உங்களுக்கு ஆச்சரியமாக தெரியவில்லையா!

2)    டால்பின் என்ற மீன் தெற்காசியா, மற்றும் அமேசான்  நீர் நிலைகளில் வாழ்ந்து வருவதனை நீங்கள் அறியலாம். அவைகள் அடிக்கடி தண்ணீருக்கு மேலே துள்ளி பார்வையாளர்களை கவரும். அவைகள் ஏன் அடிக்கடி நீருக்கு மேலே வருகின்றது என்றால் அவைகள் பத்து நிமிடங்களுக்கு மேல் தண்ணீருக்குள் மூழ்கியிருக்க முடியாது. ஆனால் கரடியினத்தினைச் சார்ந்த ‘ஸ்லோத்’ என்ற மிருகம் நீருக்கு அடியில் சுவாசிக்காமல் 40 நிமிடங்கள் வரை தம் பிடிக்க முடியுமாம்.

3)    தீக்கோழி தென் ஆப்பிரிக்கா, இந்தியாவில் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் வாழுகின்றன. அவை 9 அடி வரை வளரும். அவை எதிரி மிருகங்கள் கண்டால் தலையினை மண்ணுக்குள் புதைத்து விடுவதினைப் பார்த்திருக்கின்றோம். அவற்றினைப் பற்றி ஒரு பழமொழி கூட இருக்கின்றது. 'தீக்கோழி தலையினை மண்ணுக்குள் புதைப்பதால் உலகமே இருண்டு விடுவதில்லையென்று'. ஆனால் உண்மையில் தலை முழுவதும் மண்ணுக்குள் புதைத்தால் அது மூச்சுத் திணறி இறந்து விடும். ஆகவே அவை மூச்சு விடும் அளவிற்குத் தான் தன் தலையினை மண்ணுக்குள் புதைக்குமாம்.

4)    அமெரிக்காவில் அனைத்து மகளிருக்கும் ஓட்டுரிமை 1920 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இங்கிலாந்தில் மக்கள் பிரநிதிச்சட்டம் 1918 படி 21 வயதான ஆண்களுக்கும், 30 வயதான பெண்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது.1928 சட்டப்படி தான் அனைத்து 21 வயதானவர்களுக்கும் ஓட்டுரிமை வழங்கப் பட்டது. ஆனால் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு 1918ம் ஆண்டு சொத்துரிமை உள்ள பெண்களுக்கு மட்டும் ஓட்டுரிமை வழங்கியது. 1950ம் ஆண்டு அரசியல் சட்டத்தில் தான் 21 வயதான ஆண், பெண் இரு பாலாருக்கும் ஓட்டுரிமை கொடுக்கப் பட்டது.

5)    இது வரை நிலவில் தண்ணீர் இல்லையென்று பல விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சொல்லியுள்ளார்கள். ஆனால் அக்டோபர் மாதம், 2020 அமெரிக்கா நாசா விண்வெளி  விஞ்ஞானிகள் நிலவில் தண்ணீர் துளிகளை கண்டறிந்தனர். அதன் படி மனிதர் வாழலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டதாம்.

6)    விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் கூடத்திலிருந்து வெளியே வந்தால் காற்றில் பறப்பது போல பூமி ஈர்ப்பு சக்தியில்லாமல் மிதப்பது போல தோன்றுவார்கள். தற்போது அந்த விஞ்ஞானிகள் யாரும் அழுதால் கூட நீர் அவர்களின் தாடையில் ஒரு உருண்டையாக நிர்ப்பதினைக் காணலாம். ஏனென்றால் அதற்கு ஈர்ப்பு சக்தியில்லாததால் கீழே விழவில்லை!

7)    உலக கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கால்களை அலங்கரிக்கும் ‘அடிடாஸ் மற்றும் பூமா’ என்ற காலணிகளுக்குச் சொந்தக் காரர்கள் ‘ஆடி மற்றும் ரூடி டேஸ்லர்’ இருவரும் அமெரிக்க சகோதரர்கள். அவர்கள் முதன் முதலில் 1929ல் இணைந்து கம்பனியின ஆரம்பித்தனர். அது எப்போது பிரபலமானது என்றால் 1936ம் ஆண்டு ஜெர்மனி தலைநகரம் பெர்லினில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர்கள் கொடுத்த காலணிகளைக் கொண்டு ஒடித்தான் அமெரிக்கா தடைகளை வீரர் ‘ஜெஸ்ஸி ஓவென்’ 4 தங்கப் பதக்கங்களை பெற்றுத் தந்ததால் அவைகள் மிகவும் பிரபலியமானது. அதன் பின்பு அவர்களுக்குள் கருத்து மோதல்கள் வந்து ஆடி என்பவர் ‘அடிடாஸ்’ காலணிகளையும், ரூடி ‘பூமா’ என்ற காலணிகளையும் தயாரிக்க ஆரம்பித்தனர்.

8)    உலகிலேயே ஈராக்-ஈரான் நாடுகளுக் கிடையே நடந்த 8 வருடப் போர் கேள்விப் பட்டிருக்கின்றோம், ஆனால் உலகிலேயே 38 நிமிடங்களுக்குள் நடந்த போரினை கேள்விப்பட்டிருக்கின்றோமா?

இந்திய கடற்பகுதி மத்திய ஆப்ரிக்க நாடான ஜான்சிபார் என்ற குட்டித் தீவின் சுல்தான் இறந்து விட்டார். அவருக்குப் பின்பு 1896ல் அரியணையில் ஏறிய சுல்தான் பிரிட்டிஷ் அரசினை எதிர்த்தும், தன்னிச்சையாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். அதனை எதிர்பார்க்காத பிரிட்டிஷ் அரசு தனது போர் கப்பலை அனுப்பி குண்டு மழை அந்த தீவின் மீது வீசி அந்த தீவினை 38 நிமிடங்களில் கைப்பற்றியது தான் மிக குறுகிய கால போராக கருதப் படுகிறது.

9)    நியூஜிலாந்து நாட்டினை ஏன் ‘கிவிஸ்’(Kiwis}  என்று அழைக்கின்றோம் தெரியுமா? கிவிஸ் என்றால் தமிழில் கூஸ்பெரி பழம் என்கின்றோம்.  அந்த செடிகள் சீனர்களால் வளர்க்கப் பட்டு வந்தது. அதனை நியூஜிலாந்துக்கு அன்பளிப்பாக சீனர்கள் வழங்கினர். அந்தப் பழம் நியூ ஜிலாந்து  நாட்டினர் விரும்பி சாப்பிட ஆரம்பித்தனர். ஆகவே அந்த செடிகள் பெரும் அளவிற்கு வளர்க்கப்பட்டது. பின்பு அந்தப் பழங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தனர். அங்குள்ள மக்கள் அதனை பெருமளவிற்கு விரும்பினர். ஆகவே தான் அந்த நாட்டு மக்களை கிவிஸ் என்று அழைக்கின்றனர்.

10)  ஒரு இடத்தில் தீ ஏற்பட்டால் நாம் வெறும் தண்ணீரை ஊற்றினால் தீ அணைய நீண்ட நேரமாகும். ஆனால் தீயணைப்புப் படையினர் தண்ணீரை குழாய் மூலம் தண்ணீரை பீச்சியடித்தால் அணைந்து விடுகிறதே ஏன் தெரியுமா? அதன் காரணம் என்னெவென்றால் அந்த தண்ணீருடன் ‘பொட்டாசியம் பை கார்போனேட்’ என்ற வேதியப் பொருளை கலந்து தண்ணீர் அடிப்பதால் தீ சீக்கிரமே அணைந்து விடுகிறது.

11)  நீங்கள் பெரிய பாம்பு சிறிய பாம்பினை விழுங்குவதினைப் பார்த்திருப்பீர்கள். தவளைகள் பெரிய கண்களைக் கொண்டுள்ளன. அவைகள் இறையினை விழுங்கும்போது கண்களை மூடிக் கொள்ளும். அது ஏன் தெரியுமா?  தவளை இறையினைப் பிடித்ததும், அதன் கண்கள், அதன் விழிக் குழிக்குள் தள்ளும். பின்பு அந்த விழிகளை மேல் நோக்கித் தள்ளி வாயில் உள்ள உணவினை வயிற்றுக்குள் தள்ளிவிட்ட பின்பு தான் கண்ணைத் திறக்கும்.

12)  ஒட்டகச் சிவிங்கி ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, ஜாம்பியா நாடுகளில் அதிகமாக காணப் படும். அவைகள் ஏன் தனது நாக்கினை வெளியே தொங்கப் போட்டுக் கொண்டு வருகின்றன, ஏன் என்று தெரியுமா. முதலில் அந்த நாக்கின் நீளம் 8 அங்குலம் கொண்டது என்று காணலாம். அதன் பின்பு நாக்கு நீல நிறத்தில் இருக்கும். அந்த நாக்கு பாலைவனம், முள் காடுகளில் உள்ள வெயிலின் கதிர் வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது.

13)  சிகரெட் பற்றவைக்கும் தீப்பட்டி கண்டு பிடிக்கும் முன்பு 'ளைட்டரை' கண்டு பிடித்து விட்டார்கள். 1823 ம் ஆண்டு ஜெர்மன் வேதியல் நிபுணர் ‘டோபனீர்’ என்பவர் தொழிற்சாலைக்கு தேவையான லைட்டரை கண்டு பிடித்தார்.  3 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற் புரட்சிக் காரணமாக ஆங்கிலேய வேதிய நிபுணர் தொழிற்சாலைக்கு தேவைப் படும் லைட்டரினை கண்டு பிடித்து, அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் பரவி தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வழி வகுத்தது.

14)  ஒருவர் மகிழ்ச்சியான குடும்ப நிகழ்ச்சிகளான பிறந்த நாள், திருமண நாள், கல்யாண நாள் போன்ற வெற்றிக்கு பின்பு இறப்பதினை கேள்விப் பட்டிருக்கின்றோம். அப்படி ஏன் நடக்கின்றது என்றால் ஒருவர் மகிழ்ச்சியான தனது வயதிற்கேற்ற உணவினை சாப்பிடாதலால் மாரடைப்பால் மரணம் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே வயதிற்கு மாறாக சாப்பிடுவதும், புணர்வதும் உடல் சுகவீனங்களுக்கு வழி வகுக்கும். ஏன் இட்லியினை போட்டிபோட்டு சாப்பிட்டு தொண்டையில் அடைத்து உயிர் போவதினை பத்திரிக்கை மூலமாக அறிந்திருப்பீர்கள். ஆகவே எதற்கும் ஒரு அளவு உள்ளது என்று விழாக்களில் மூக்குப் பிடிக்க உண்ண  வேண்டாம்.

15)  நீங்கள் வாய்க்குள் ஹம்மிங் என்ற ரீங்காரம் செய்யும் ஒலி எதன் மூலம் வருகின்றது தெரியுமா? அவ்வாறு ஹம்மிங் செய்யும்போது காற்று மூக்கு வழியே வெளியேறும். நீங்கள் பரிசோதனைக்காக மூக்கினைப் பிடித்துக் கொண்டு ஹம்மிங் செய்யுங்கள் பார்க்கலாம். ஒலி வராது. ஆகவே அரை மூக்குள்ளவர்களை மூக்குறையா என்று அழைக்கின்றோம். அவர்களுக்கு ஒலி வருவது குதிரைக்கொம்பேயாகும்.

16)  நமது உடலில் ஓடும் ரத்தம் சிகப்பாக இருந்தாலும், வெளியே இருந்து பார்க்கும்போது அது நீல நிறமாக காட்சியளிக்கும். அது ஏன் தெரியுமா? நமது ஒளி உடலில் உள்ள திசுக்களினை ஊடுருவி நரம்புகளில் ஓடும் ரத்தத்தினை பார்ப்பதால் ரத்தம் நீல நிறமாக காட்சியளிக்கின்றதாம்.

17)  நாம் சாப்பிடும் மிளகாய் ஏன் காரமாக இருக்கின்றது என்று தெரியுமா?  மிளகாயின் தோலில் காரத் தன்மையில்லை, மாறாக மிளகாய் உள்ளே இருக்கும் நரம்பில் ஒட்டிக் கொண்டிருக்கும் விதைகளில் தான் காரம் அதிகமாக இருக்கும். நீங்கள் மிளகாயினை வெயிலில் காயவைத்து, அதனை அணில் போன்ற விலங்குகள் அல்லது புறா, காக்கை போன்ற பறவைகள் கொத்திவிட்டு வெறும் தோலினை மட்டும் அரைத்தால் காரம் இல்லாதிருப்பதினைக் காணலாம்.

18)  உலகிலேயே பெரும் பாலைவனம் என்று ஆப்பிரிக்கா நாட்டின் சகாரா பாலைவனத்தினை சொல்வோம். ஆனால் அமெரிக்கா பூலோக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் அண்டார்டிகா தான் பிக பிரமாண்டமான பாலைவனமாக கூறுகின்றனர். அவை பெரும்பாலும் பனிக்கட்டியால் மூடப் பட்டிருக்கும். சகாரா பாலைவனம் 85,46,960 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு. ஆனால் அண்டார்டிகா 1,42,44,934 கிலோ மீட்டர் பரப்பளவாகும்.

19)  கி.பி. 60 ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ரோம சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் ஏன் அவ்வாறு அழைக்கப் பட்டார் தெரியுமா? அவர் பிரசவத்தின் போது அவருடைய தாயாருக்கு 'சிசேரின்' என்ற அறுவை சிகிச்சை செய்து பிறந்ததால் அவருக்கு அந்த பெயர் வந்ததாம். லத்தீன் மொழியில் 'Caedae' என்பதற்கு 'cut' என்று அர்த்தமாம்.

20)  'Lady Bird' என்ற சிகப்பு நிறவண்டு வயதினை எவ்வாறு விலங்கியல் நிபுணர்கள் நிர்ணக்கின்றனர் தெரியுமா? அந்த ஓட்டின் மேல் உள்ள கரும் புள்ளிகளை எண்ணி அதன் வயதினை நிர்ணயிக்கின்றனராம்.

21)  மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் அறிவுத்திறனை தட்பவெப்ப சூழலுக்குஏற்ப எப்படி கணிக்கப் படுகிறது தெரியுமா. அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் 543 மாணவிகளை ஒரு கட்டிட அறைகளிலும் , அதே அளவிலுள்ள கட்டிட அறைகளில்  அதே அளவு மாணவர்களையும் வைத்து 33.8 டிகிரி சீதோஷ்ண அளவில் மாணவிகளின் அறைகளில் ஒவ்வொன்றாக சீதோஷ்ணத்தினை அதிகப் படுத்தும்போது வினாக்களுக்கு சரியான பதில்களை சொன்னார்களாம். அதே நேரத்தில் மாணவர்கள் அறைகளில் ஒவ்வொரு டிகிரியாக குறைக்கும்போது சரியான பதில்களைச் சொன்னார்களாம். இதிலிருந்து பெண்கள் வெட்பத்தினை விரும்புவர்களாகவும், ஆண்கள் குளிரினை விரும்புகின்றவர்களாகவும் இருப்பது தெரிகின்றதல்லவா?

நீண்ட கட்டுரைகள் தந்த எனக்கு வாசகர்களுக்கு ஒரு மாற்றாக அறிவு சார்ந்த செய்திகளை தர வேண்டும் என்று நினைத்து உங்களுக்கு மேற்படி தகவல்களை தந்துள்ளேன். அவைகள் பல உங்களுக்குத் தெரிந்திருக்கும், இருந்தாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதிற்காக இதனை எழுதியுள்ளேன்.

உங்களுடைய விருப்பு, வெறுப்பினை என்னுடன் தொடர்பு கொள்ள கீழ்கண்ட மெயில் விலாசத்தினை தேடவும்:

mdaliips@yahoo.com

No comments:

Post a Comment