Tuesday 17 December, 2013

உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக?

உலகம் பிறந்தது எனக்காக, உண்மை மறந்தது எதற்காக?
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்.(ஓ)
உலக வேடங்களில் எல்லாம் வல்ல அல்லாஹ்வால்  உத்தம நபி(ஸல்) அவர்கள் மூலம் வழங்கப் பட்ட அல்குரான்  வரலாற்று பெட்டகமாகவும், காலத்தினால் இன்று வரை ஒரு எழுத்துகூட மாசு படாமலும், கருத்துசிதையாமலும் இருக்கின்றது என்பதினை உலகில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. 
உலகம் அழிந்து மனிதர்கள் ஒருநாள் எழுப்பப் படும்போது அவன் முன்பு செய்த செயல்களுக்கு பதில் கூற வேண்டும் என்று கூறுகிறது அல்குரான். அதற்கு உதாரணமாக சாதாரன விதையிலிருந்து செடி முளைத்து பின்பு மண்ணோடு மண்ணாக மடியும் என்பதினையும், அதன் பின்பு புதிதாக செடி உருவாகுவதையும், குளங்கள் வற்றி அதன் பின்பு மழைகாலத்தில் களி மண்ணுக்கிடையே கிடந்த மீன் முட்டைகள் உருவெடுத்து துள்ளி ஓடும் மீன்களாக உலா வருவதினையும்  உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
உலகம் அழிந்து நீதி கூறும் நாள் வரும்போது சாதாரணமான நிலா நடுக்கமாகவோ, அல்லது 1945 ஆண்டு ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மாதிரியோ இருக்காதாம். மலைகள் வானத்தில் தூக்கி எறியப் பட்டு தவிடு பொடியாக இருக்கும் நாளாக இருக்கும் என்று அல்குரான்(78:40;69:14) விரிவாக கூறுகின்றன.

அதன் கூற்றை நிருபிக்கும் விதமாக 300 மில்லியன் டாலர் பணத்தில், பல ஆண்டு காலம் நடந்த ஆராய்ச்சியின் பயனாக 'பிக் பாங்க் 'என்ற நிகழ்ச்சி 2012 ஆம் ஆண்டு நடத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து தென் டென்மார்க் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகம் அழியும்போது வானமும்,பூமியும் எப்படி இருக்கும் என்று கண்டு பிடித்துள்ளார்கள்.
உலகம் அழியும்போது பூமியில் உள்ள ஒரு தானியத்திலிருந்து மலைகள் வரை அதன் எடை பன்மடங்காக ஆகுமாம். வானத்திலுள்ள கிரகங்களும், நட்ச்சத்திரங்களும் அதன் எடையினை விட பன் மடங்கு அதிகரிக்குமாம். அவ்வாறு பெரிதாகிய கோலங்கள் ஒன்றோட ஒன்றுடன் மோதி தீப் பிழம்பாகி ஒரு சிறிய பந்தாக மாறுமாம்.
அது எவ்வாறு மாறும் என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு ஆராய்ச்சியாளர்கள், 'தண்ணீர் சூடு செய்யும்போது எப்படி ஆவியாகுகிறதோ, அல்லது காந்த சக்கித்தியுள்ள மக்னடிசம் சம்மட்டியால் அடிக்கும்போது அதன் ஈர்ப்பு சக்த்தியினை இழந்து விடுவதினை உதாரணமாக காட்டுகிறார்கள். இதன் விபரம் டென்மார்க் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள்  வெளியிடும், 'ஹை எனெர்ஜி பிசிக்ஸ்' என்ற பத்திரிக்கையில் எழுதி உள்ளனர்.

மேற்கொண்ட இன்றைய ஆராய்ச்சியாளர்கள் பல கோடி பணத்தினை செலவழித்து என்று கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் உலக மக்களை தட்டி எழுப்புவதிற்க்காக
உண்மை நபி(ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே இறைவன் வழங்கியுள்ளான். உலகம் ஒருநாள் அழியும், அப்போது நீங்கள் எழுப்பப் பட்டு நீங்கள் செய்த நன்மை, தீமைகள் உங்கள் கையில் புத்தகமாக வழங்கப் பட்டுக் கூலி கொடுக்கப் படும் என்றும் அறிவிக்கின்றான் அல்குரானிலே!
அதனை அறியாத மானிடர்களுடன், மூமிங்களும் கீழ்க் கண்டவாறு உழல்கின்றனர்:
1) கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தினை மது, மாது, சூது போன்ற களியாட்டங்களில் செலவிட்yuடும்,
2) இறைவன் அருளிய செல்வத்தினை ஈகை வழியில் செலவு செய்யாமலும்
3) பெற்று வளர்த்த பெற்றோரை பேணிக்காக்காது நட்டாற்றில் விட்டும்
4) சகோதர, சகோதர சொத்துக்களை பளீகரம் செய்தும் 
5) மலம் கழிக்கும் கக்கூஸ்கள் கூட தங்கம் முலாம் பூசிய கக்கூசுகலாக ஆக்கி ஆடம்பரமாக வாழ்ந்தும் 
6) அமானித, பைத்துல்மால் பணத்தினை பளீகரம் செய்தும்
7) இறை வழி, நபி(ஸல்) வழிப் படி நடக்காது பல இயக்கங்களாக மூநின்களைப் பிரித்து தன் வழி தனி வழி தனி வழி என்று கூறியும், எழுதியும்
8) அப்பாவி முஸ்லிம்களை சொற்ப அரசியல் லாபத்திற்காக பகடைக் காயாக்கியும்
9) தடை செய்யப் பட்ட வட்டி, சீதனம் வாங்கியும்
10) அதிகாரம் கிடைத்துவிட்டால் பூமி அதிரும்படி நடந்தும் நடக்கும் மாந்தர்கள் தான் 
உலகம் பிறந்தது எனக்காக, என்று உண்மை தெரியாதவர்களாக இருக்கின்றார்கள்.
டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் கூறும் கூற்றினையாவது நம்பி உலகில் வாழும் நாட்களில் மனம் திருந்தி வாழ வேண்டும். டென்மார்க் ஆராய்ச்சியாளர்கள் இன்னொன்றையும் கூறுகின்றார்கள் உலகம் அழியும் நிகழ்வு எப்போது வேண்டுமானாலும் நடக்குமாம். ஆகவே உங்கள் நன்மை, தீமை வரலாற்று புத்தகம் உங்கள் கைக்கு மகசர் நாளில் வழங்கும்போது பதில் சொல்ல தயாராகுங்கள்!    





Wednesday 11 December, 2013

பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம்,2011

பந்தாடப்படும் மத வன்முறைத் தடுப்புச் சட்டம்,2011
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய திரு நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் (1950) பெரும்வாரியான மக்கள் சிறுபான்மையினர்தலித், பழங்குடி மக்களைக் கண்ணின் இனிமைபோல பாதுகாக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைந்த குழு பல்வேறு சட்டங்கள் மூலம் வழிவகை செய்தது.
அதனை ஜவர்கர்லால் நேரு பிரதமராக இருந்தது வரை பாதுகாக்கப் பட்டு வந்தது. . ஆனால் அதற்குப் பின் வந்த அரசுகளால் சிறுபான்மையினருக்கும், தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கும் பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டது. அவற்றில் 1984 ஆம் ஆண்டு புது டெல்லியில் சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப் பட்ட சம்பவம், முஸ்லிம்கள் 1989 ஆம் ஆண்டு மூலைக்கு மூலை கொல்லப் பட்ட பகல்பூர் கொடுமை, 1992 ஆம் ஆண்டில் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்பு மும்பை மற்ற நகரங்களில் நடந்த கொலைகள், குஜராத்தில்  கோத்ரா ரயில் விபத்து 2002இல் நடந்த சம்பவத்திற்குப் பின்பு முஸ்லிம் மனித வேட்டை, பழங்குடி மக்களுக்காக நோய் தீர்க்க குடும்பத்துடன் பணியாற்ற வந்த பாதிரியார் டாக்டர், ஸ்டைன்ஸ் தன்  மகனுடன் ஓடிசாவில் எரிக்கப்பட்ட சம்பவம், இன்றுவரை தலித் இன மக்கள் தென்னாப்ரிக்க நிறைவேறி கொள்கைபோல காலில் செருப்பு அணியக்கூடாது, அவர்களைத் தனிமைப் படுத்தும் சுவர்கள், கலப்புத் திருமணம் செய்யத் தடை என்ற போர்வையில் தர்மபுரி நாயக்கன்க் கோட்டைக் காலனித் தாக்கப் பட்டு ஒரு ஊரையே துவசம் பண்ணும் சம்பவங்கள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்களால் இந்தியாவின் இறையாண்மைக்கு உலக அளவில் மதிப்புக் கெடுகிறது என்று மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு அவைகள் திரும்பவும் நடக்காமல் இருக்க ஒரு வரைவுச் சட்டத்தினை கொண்டு வந்துள்ளனர் பாராளுமன்றத்தில்.
இந்த வரைவுச் சட்டத்தினை தயாரிக்க 9 பேர் கொண்ட உறுப்பினர்களும், 4 ஆலோசர்களும் நியமிக்கப் பட்டனர். . அதன் முக்கிய உறுபினர்களாக சர்ச்சைக்குட்பட்ட அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட எதிர்ப்புத் தெரிவிக்கும் ஹர்ச்மதரும்அணு ஆகா என்ற சமூக ஆர்வாளரும், குஜராத்தில் நடந்த இன படுகொலைகளையும், அதற்குப் பின்பு நடந்த மனம் பதை, பதைக்க நடந்த படு கொலைகளையும் சந்திக்கு இழுத்த டீஸ்ட செடேல்வாத் மற்றும் பர நக்வி போன்றோர் இருந்தனர்.
2011 ஆம் ஆண்டி தயாரிக்கப் பட்ட சட்டத்தின் முக்கிய அம்சங்கள் கீழ் வருமாறு:
1) தேசிய, மற்றும் மாநில மக்கள் குறை தீர்க்கும் குழுக்கள் அமைக்கப் படும். அதில் 5 பேர் மைனாரிட்டி சமூகத்தினவர் ஆவர்.
2) அந்த குழுக்களிடம் வழங்கப் படும் புகாரின் வாக்கு மூலங்கள் எந்த நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொல்லப் படும்.
3) இராணுவத்திற்கோ, காவல்த் துறைக்கோ அல்லது எந்தத் துறையானாலும் நேரடியாக அமல் செய்கின்ற உத்திரவினை அந்தக் குழுக்கள் பிறப்பிக்கலாம்.
4) வன்முறையினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நேரடியாக இந்தக் குழுக்கள் நிவாரணம் வழங்கலாம்.
இந்தச் சட்டத்தினை அமல் நடத்தக் கூடாது என்று பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களும், மற்ற சில மாநிலங்களும் குவ்வோ, முறையோ என்று எதிர்க்கின்றன.
அவர்கள் சொல்லும் நொண்டிச் சாக்குப் பின் வருமாறு:
1) கோத்ரா சம்பவத்திற்குப் பின்பு நடந்த மனித  வேட்டையினை கண்ணை மூடிக் கொண்டு கண்டும் காணாதுபோல இருங்கள் என்று எந்த அரசும் அதிகாரிகளுக்கு உத்திரவிட முடியாது. ஏனென்றால் அதிகாரிகள் தேசிய மற்றும் மாநில குழுக்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும். அதற்கும் மீறி எந்த அதிகாரியாவது நடந்தால் அவர் ஆயுள் தண்டனை பெரும் அளவிற்கு தள்ளப் படுவார்.
2) இந்த வரைவுச் சட்டம் மகாராஸ்ட்ராவில் நடக்கும் மகாராஸ்டிரா மகாராஷ்டிரா மக்களுக்கே என்ற மொழி வெறி கோசங்களை எழுப்ப சிவா சேனா அமைப்புகள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்கும்.
3) மத்திய அரசு 2014 ஆம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மைனாரிட்டி, தலித், பழங்குடியினர் ஓட்டினைப் பெரும் கண்ணோட்டத்தில் கொண்டு வரப் பட்டுள்ளது.
4) சட்டம் ஒழுங்கு அமல் படுத்துவது மாநில அரசின் கடமை. அதில் மத்திய அரசு தலையிடக்கூடாது.

ஆனால் நடுநிலையாளர்கள் ஆட்சியாளர்களும், மத வெறியர்களும் மத உணர்வுகளைத் தூண்டி விட்டு மனித வேட்டை ஆடக்கூடாது மற்றும் நாட்டின் இறையாண்மை, ஜனநாயகம் காப்பற்றப் பட வேண்டும் என்று கூறி இந்த வரைவுச சட்டம் நாட்டிற்கு நல்லது என்கின்றனர். அதற்கு காரணங்கள் கீழ் வருமாறு:
1) 1984 ஆம் ஆண்டு டெல்லியில் சீக்கியர்கள் கொல்லப் பட்டபோது அரசு எந்திரம் இயக்கக் கூடிய கிரியா ஊக்கி என்ற கட்டளைகள் இட யாரும் முன் வரவில்லை.
2) 1992 ஆம் ஆண்டு பாபரி மஸ்ஜித் இடிக்கப் பட்டபோது மத்திய அரசின் கட்டுப் பாட்டில் இருந்த ராணுவம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் அதனை இயக்க மௌனம் காத்த பிரதமரைக் கொண்ட மத்திய அரசினை நாம் பெற்றதால் புராதான சின்னம் இடிக்கப் பட்டது.
3) 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் விபத்திற்குப் பின்பு நடந்த நரபலி அறிந்து கண்ணீர் விடத்தான் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயனால் முடிந்ததாக அவரே பேட்டியில் சொல்லி இருந்தார்.
4) அதற்குப் பின்னரும் இந்தியாவில் பாரத ரத்னா பதக்கம்  வென்ற விஞ்ஞானி ஜனாதிபதி அப்துல் கலாம் இருந்தபோது குஜராத்தில் இனக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட முஸ்லிம்கள் தங்கி உள்ள அகதி முகாம்களை பார்வையிட வேண்டும் என்றும் அப்போதைய பாரதிய ஜனதா மத்திய அரசிடம் கேட்டதாகவும்  அதற்கு அனுமதி 
மறுக்கப் பட்டு விட்டதாகவும் தன் பதவி போன பின்பு எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
5) முஸ்லிம்கள் ஓட்டினை பெரும்வாரியாக பெற்று ஆட்சி அமைத்த உத்திரப் பிரதேச மாநிலத்தில் முசாபர் நகரில் கிட்டத்தட்ட 50 முஸ்லிம்கள் கொல்லப் பட்டு ஹுசைனா பாக்கில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளார்கள் 
அப்படி சம்பவங்கள் தொடர் கடையாக வருவதிற்குக் காரணம் குற்றவாளிகள் நீதி மன்றத்தின் பால் நிறுத்தும் போது நீதி தேவதையின் கண்கள் நிரந்தரமாக கட்டப் பட்டு 
குற்ற வாளிகள் வெளி வருவதுதான் என்று மைனாரிட்டி மக்களும், தலித்தும், பழங்குடியினரும் நம்புகின்றனர்.



Wednesday 2 October, 2013

வாய்க்கு எட்டியது கைக்கு எட்டவில்லையே ஏன்?



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )
இந்திய திருநாட்டில் மைனாரிட்டி சமூகம் என்றால் முதலில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம்களும், இரண்டாவது இடத்தில் 12.71 விழுக்காடு கொண்ட  கிருத்துவர்களும், மூன்றாவது இடத்தில் 10.13 விழுக்காடு கொண்ட சீக்கியவர்களும் உள்ளனர்.
நீதி அரசர்கள் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் உயர் சாதியினராக இருந்தாலும் நெறி தவறாது முஸ்லிம்கள் வாழ்க்கைத் தரத்தின் கடைகோடியில் இருப்பதாக தங்களது உண்மை கண்டறியும் அறிக்கையில் வெளியிட்டனர்.
அந்த அறிக்கையினை கையிலெடுத்து சமூதாய இயக்கங்கள் இட ஒதுக்கீடுகளுக்குப் போராடின. பாராட்டக் கூடிய செயல் என்பதால் மெச்சலாம், போற்றலாம். ஆனால் அந்த இயக்கங்கள் அரசு மைனோரிட்டி மக்கள் சுய வேலை திட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தினை தங்களுடைய மக்களுக்குப் போய் சேர்ந்து அவர்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றி வைத்தார்களா என்றால் மிகவும் குறைவே என்ற புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. அவற்றினை கீழே காணலாம்:
மைனாரிட்டி சமூகத்தினவர் சுய வேலை கடன் திட்டத்தில் பயன் பெற ரூ 1,83,072.45 கோடிகள் ஒதுக்கப் பட்டன. இந்திய நாட்டில் 72 விழுக்காடு கொண்ட முஸ்லிம் மைனாரிட்டி மக்கள் பெற்ற கடன் வெறும் ரூ.87,603 கோடிகள் தான். அவை வெறும் 50 விழுக்காடு தான்.
ஆனால் 12.71 விழுக்காடு கொண்ட கிருத்துவ மக்கள் அடைந்த பலன் 23.35 விழுக்கடுகளும், சீக்கிய மக்கள் 10.13 விழுக்காடு இருந்தாலும் ரூ. 47.577 கோடிகள் பெற்று இரண்டாவது இடத்தில் பலன் அடைந்துள்ளார்கள்.
ஆனால் முஸ்லிம்கள் 72 விழுக்காடு ஜனத்தொகை மைனாரிட்டியாக இருந்தாலும் மிகக் குறைவாகவே 50 விழுக்காடு கடன் உதவிப் பெற்றுள்ளனர். இதிலிருந்து அரசு பணம் மக்களுடையது. அதனைப் பெற்று நமது வாழ்க்கைத் தரத்தினை முன்னேற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வு வரவில்லையே அது யாருடைய குறை?
பல்வேறு அரசியல், சமூகப் போராட்டங்களுக்காக மைனாரிட்டி மக்களைத் திரட்டிப் போராடும் சமூதாய இயக்கங்கள், தேர்தல் நேரத்தில் ஓரிரு இடத்திற்காக தன்மானத்தினை விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் ஏன் ஏழை மக்களைப் பற்றி சிந்திப்பதில்லை?
வாரந்தோறும் பள்ளி வாசல் முன்பும், வணிகத் தளங்களின் முன்பும், செல்வந்தர்கள் வீடு முன்பும் கையேந்தி யாசகம் செய்யும் ஏழை முஸ்லிம் மக்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்ற, சுயமாக சம்பாதிக்க, சொந்தக் காலில் நிற்க  ஏன் முஸ்லிம் சமூதாய இயக்கங்கள் முன் வரவில்லை?
மைனாரிட்டி சமூகத்தினருக்காக ஒதிக்கிய லக்ஷம் கோடி ரூபாயில் ஏன் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பெற்று வழங்க வில்லை?  என்று சுய சிந்தனை செய்ய வேண்டாமா?
தங்கள் இயக்கங்கள் வளரக் கொடிப் பிடிக்க முஸ்லிம் மக்களை எதிர் பார்க்கும் இயக்கங்கள் ஏன் அந்த புண் பட்ட கைகளுக்கு மருந்து போட, குழந்தைகள் படிப்பினிக்கு கல்விக் கடன் பெற, குடியிருக்க வீடு லோன் கிடைக்க, விவசாயம், தொழில் தொடங்க கடன் பெற, திருமண, முதியோர், ஊனமுற்றோர், விதவையினர் வாழ்க்கையில் ஒளியேற்ற ஏன் இயக்கங்கள் அதன் தொண்டர்கள் செயல் படக்கூடாது என்று சுய சோதனை செய்ய வேண்டும் என்று உங்களுக்குக் கேட்கத் தோணவில்லையா என் சமூதாய உள்ளங்களே!

மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும்!



2003 ஆம் ஆண்டு ஈராக்கினை அமெரிக்காவின் ஆதரவு படைகள் பிடித்து அதன் ஜனாதிபதியான சதாம் ஹுசைனை கைது செய்யும்போது என்ன சொல்லப் பட்டது என்று உங்களுக்கு பலருக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் மனிதன் எதனையும் விரைவில் மறக்கக் கூடியவனானதால் ஞாபகப் படுத்துவது நல்லது என நினைக்கின்றேன். சதாம் ஹுசைன் தனது சொந்த ஊரான டிக்ஹிரிடில் உள்ள பண்ணை வீட்டில் மறைந்து இருந்ததாகவும், அமெரிக்காவின் கூட்டுப் படைக்குப் பயந்து ஒரு பதுங்கு குழியில் எலிபோல ஒளிந்து இருந்ததாகவும், அவரை வெளியே இழுத்து, பரட்டைத் தலையுடன் காட்சி தந்த அவர் வாயினைத் துறந்து பல்லினை சோதனை போடுவது போலவும், அதன் பின்பு அவரை சதாம் ஹுசைன் தான் என உறுதி செய்து கழுவில் ஏற்றி நாடகம் அரங்கேற்றியது யாவரும் அறிந்ததே!
அதே போன்று தான், லிபியா நாட்டின் மாவீரன் கடாபியினை ஒரு கழிவு நீர்க் குழாயில் ஒளிந்திருப்பதுபோலவும், அவரைப் பிடித்து அவர் நாட்டவரே கொண்டது போலவும் கபட நாடகம் ஆடப் பட்டது.
ஒசாமா பின் லேடன் வேட்டையிலும் பாக்கிஸ்தானிலுள்ள அபேட்டபாட்டில் அதிரடி நடவடிக்கை எடுத்து சுட்டுக் கொல்லப் பட்டு கடலில் அடக்கம் செய்யப் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது.
உடனே நமது மேதாவி சென்னை அண்ணாசாலை இமாம் ஒருவர் ஜனாசாவே இல்லாமல் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு மாறுபட்டு தொழுகை நடத்தினார். அதில் அனுதாபத்துடன் பலர் கலந்து கொண்டதாகவும் கூறப் பட்டது.
பல மக்களுக்கு புதிராத, மற்றும் புரியாத கேள்வியினை என்னிடம் சிலர் கேட்டனர்.
அவைகள்:
1) ஒரு குற்றவாளி என்றால் ஏன் சதாம் ஹுசைன்போல விசாரணை நடத்தி பாகிஸ்தானில் தண்டனை தரவில்லை?
2) மிகக் கொடியவர் என்றால் புரட்சிப் படையால் கடாபி போல கொல்லப் பட்டிருக்க வேண்டும், அது நடக்க வில்லையே ?
3) சர்வதேச குற்றம் புரிந்து இருந்தால், சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் நீதி மன்றத்தில் லைபீரியா ஜனாதிபதி மார்க் டைலர் போலோவோ, செர்பியாவின் கொடுங்கோலன் மில்சொவிக் போலோவோ, ருவாண்டா நாட்டில் இனப் படுகொலை நடத்தி தண்டனை பெற்ற தலைவர் போலோவோ சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி ஏன் தண்டனை வழங்க வில்லை?
அதற்கு விடையாக உயர்ந்த புளிட்ஸ் பரிசு வென்ற பத்திரிக்கையாளர் செமோர் ஹேர்ஸ் என்பவர் எழுதியிருக்கும் தேசிய பாதுகாப்பு என்ற புத்தகத்தில், 'பாகிஸ்த்தானின் அபேட்டபாட்டில் அமெரிக்காப் படையினரால் கொல்லப் பட்டதாக கூறுவது வெறும் கப்சா என்று கூறுகிறார். அந்தத் தகவலை நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது. ஒரு வேலை அதுவே உண்மையாக இருந்தால் ஜனாசா இல்லாமலிலேயே  ஜனாஸா தொழுகை நடத்தியவர்கள் தான் பிற்காலாத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் யாருடைய தூண்டிதல் மேல் அவ்வாறு செய்தார்கள் என்று எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு அந்த இமாமை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்தார்கள் என்றும் கூறப் பட்டது.
ஆகவே தான் நான் தலைப்பில் சொன்ன, இந்த நவீன உலகத்தில் மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும் சகஜம் என்றால் சரியா?
 

Sunday 15 September, 2013

என்னுடைய பெயர் கிங் கான்!

என்னுடைய பெயர் கிங் கான்!
(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)
பாலிவூட் நடிகர் சாருக் கான் சமீபத்தில் நடித்த 'என் பெயர் கான்' என்ற படம் வசூலில் சக்கைப் போடு போட்டதாக ஊடகங்கள் வெளியிட்டன. அந்தப் பணம் அதனை தயாரித்த, விநியோகித்த அத்தனை மனிதர்களுக்கும் கிடைத்து அவர்கள் செல்வத்தில் அதிக செல்வம் சேர்ந்திருக்கும்.
ஆனால் தன்னலமற்ற கணினி கல்வியினை உலக மாணவர்களுக்கு, குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கியது மூலம் 2012 ஆம் ஆண்டு உலக பிரபலங்கள் நூறு பேர்களில் ஒருவராகத் திகழும் ஒரு முஸ்லிம் இளைஞர் சல்மான் கான் தான் நான் குறிப்பிடும் கான்.
அமெரிக்காவில் உள்ள நியூ ஆர்லீன்ஸ் நகரில் பங்களா தேசிய தகப்பனாருக்கும் இந்திய தாயாருக்கும் மகனாகப் பிறந்தவர் சல்மான் கான். மத்திய வர்க்கக் குடும்பத்தில் பிறந்த கான் கணிதத்திலும், கணினியிலும் மிகவும் சுட்டி .மாசாசுசெட்டஸ் தொழில் நுட்பக் கல்லூரியில் கணினி மற்றும் மின்சார சம்பந்தமான படிப்பில் பட்டம் பெற்று, ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ மேல் படிப்பினை முடித்தார். அதன் பின்பு போஸ்டன் நகரில் வேலை வாய்ப்பினைப் பெற்றார்.
கணினி உலகான சிலிகான் நகரில் கை நிறைய சம்பளம் . ஆனால் மனதில் உலக பாலகர்களுக்கு மன நிறைவான பேசும் படத்தில் பாடம் எடுத்துக் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டும் என்ற சின்ன சின்ன ஆசை.
அதற்கு அச்சாரமாக அமைந்தது.  2004 ஆம் ஆண்டு நியூ ஆர்லின்ஸ் நகரில் குடியிருக்கும் தனது சித்தி மகள் நாடியாவிற்கு தான் வசிக்கும் பாஸ்டன் நகரிலிருந்து கணிதம் மற்றும் சயின்ஸ் பாடங்கள் எடுத்தது.
நாடியாவின் அபார கல்வி முன்னேற்றத்தினைத் தொடர்ந்து  அவளுடை சகோதரர்களான அர்மானும், அலியும்   கல்வி கற்க கானின் உதவினை நாடினார்கள். 2006 ஆம் ஆண்டில் ஒரு பூனை பியானோவில் இசை வாசிப்பது போன்ற யு டூபில் வெளியிட்டார்.
விளையாட்டாக ஆரம்பித்த கணினி கல்விப் பாடம் யாஹூ, ஆராகுள், சிஸ்கோ , எச்.பி, கூகிள் போன்ற தொழில் நுட்பக் கம்பனிக் கிடையில் கான் முழு நேர உலக இலவச கணினிக் கல்வியினை ஆரம்பித்துள்ளார்.
நான் 55 ஆண்டுகளுக்கு முன்பு   பள்ளி மாணவனாக இருந்தபோது கணித டூசனுக்கு மாதம் ரூ 10/ கொடுத்த ஞாபகம். அதோடு   ரெமிங்டன் மெசினில் டைபிங் பழக ரூ 10/ கொடுத்துள்ளேன்.   அப்போது அந்தப் பணமே பெரிய விசயமாக இருந்தது. கணினி பழகியது எனது 57 வது வயதில் தான். ஆனால் இப்போது பாடங்களை 3 வயது குழந்தைகள் கூட கணினியில் கற்க முடிகிறது, ஐபெட் , ஐபாக் போன்ற ஸ்தானங்கள் உதவி செய்கின்றன.
ஆஸ்திரேலியாவின் நரம்பியல் நிபுணர் சூடி வில்ஸ் என்பவர், 'குழந்தைகள் தங்களது மதிய சாப்பட்டினைக் கூட மறந்து ஏன் வீடியோ பார்க்கின்றது என்றால் தங்களது வீட்டுப் பாடத்தினை மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள்என்று கூறுகின்றார். வீடியோ கேம்ஸ் தங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்வதாகவும் கூறுகின்றார். குழந்தைகள் தங்கள் பழைய கல்வி கற்கும் முறையிலிருந்து புதிய முறை படம் பார்த்து கல்வி கற்கும் முறையினை ஆர்வத்துடன் பயில்கிறார்கள் என்று கூறுகிறார்.r நான் உயர் நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோது வகுப்பில் ஆசிரியர் சயின்ஸ் பாடத்தினை வெள்ளை பலகையில் எழுதி போதிப்பதினை விட, ப்ரொஜெக்டர் வைத்து படம் காட்டி விளக்கும்போது மிகவும் ரசித்து புரிந்து கொண்டேன். அதே போல் தான்  இன்று கான் தனது கல்வி முறையினை உலகத்தில் பரப்புகிறார்.
கான் தனது திட்டகளை, 'டெட்' என்ற சிறப்புரையில் விளக்கும்போது, வீடியோ மூலம் கல்விக்கு புத்துனர்வூட்டுவது.  அவற்றின் சிறப்பு அம்சம் கீழ் வருமாறு:
1) பள்ளியில் விடுபட்ட பாடங்கள் கற்பது
2) சிறந்த ஆசிரியர்கள் கொண்டு கணினியில் பாடம் கற்பிப்பது.
3) இலவச கல்விச் சேவை பாலகர்களுக்கு அளிப்பது.
சல்மான் கானின் அறிவுச் சோலையில்( khanacademy.org). 4000 கல்வி சம்பந்தமான வீடியோக்கள் உள்ளன. அதனை இது வரை 250 மில்லியன் மக்கள் பார்த்திருக்கிறார்கள்.
2) coursera.org ஆன் லைன் பட்டங்கள் சிறந்த ஆசியர், பேராசிரியர் மூலம் வழங்கப் படுகிறது.
3) TED Talks, ted.com மூலம் தலை சிறந்த அறிவு ஜீவிகள் கொடுத்த உரைகளை 1400 வீடியோ மூலம் தரப்படுகிறது.
4) ocwconsortium.org மூலம் சிறந்த பல்கலைகழகங்களின் சிறப்புரைகளை தரப்படுகிறது.
5) apple.com/education/tunes.u என்ற பாடத்தின் மூலம்
iPod, iPhone or iPad ஆகியவற்றின் உபயோகங்களை அறியலாம்.
6) en.wikiuniversity.org மூலம் விக்கி மீடியா ஸ்தாபனத்தின் திறந்த நிலை கல்வி பாடங்களை தெரிந்து கொள்ளலாம்.
7) textbookrevolution.org மூலம் உலக புத்தகங்களை இலவசமாக கணினியில் தெரிந்து கொள்ளலாம்.

சிலரிடம் இது போன்ற கணினி படிப்புகளால் ஆசிரியர்களின் துணை அறவே மறுக்கப் படும் என்று பயம் உள்ளது. ஆனால் கணினி கல்வியினை ஆசிரியர்கள் மூலம் மேற்ப் பார்வையிட்டால் இன்னும் சிறப்பாக குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்கிறார் கான்.
மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கான் கல்வி நிறுவனத்திற்கு வருகை தந்து அவரைப் மனமாரப் பாராட்டியதோடு அவரின் ரசிகரும் ஆகி விட்டதாக 2011 இல் கூறியுள்ளார் என்று நினைக்கும் போது நாமும் அவருடன் சேர்ந்து பாராட்டுவதோடு நில்லாமல் உங்களால் முடிந்த அளவிற்கு கல்வி சேவையினை உங்கள் குடும்பத்திற்கு, சமூதாயத்திற்கு, நீங்கள் பணிபுரியும் நாட்டு மக்களுக்கு, உங்கள் ஊர் ஜமாத்து மக்களுக்கு வழங்க உறுதி எடுத்துக் கொள்வோமாக!