Wednesday 2 October, 2013

மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும்!



2003 ஆம் ஆண்டு ஈராக்கினை அமெரிக்காவின் ஆதரவு படைகள் பிடித்து அதன் ஜனாதிபதியான சதாம் ஹுசைனை கைது செய்யும்போது என்ன சொல்லப் பட்டது என்று உங்களுக்கு பலருக்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் மனிதன் எதனையும் விரைவில் மறக்கக் கூடியவனானதால் ஞாபகப் படுத்துவது நல்லது என நினைக்கின்றேன். சதாம் ஹுசைன் தனது சொந்த ஊரான டிக்ஹிரிடில் உள்ள பண்ணை வீட்டில் மறைந்து இருந்ததாகவும், அமெரிக்காவின் கூட்டுப் படைக்குப் பயந்து ஒரு பதுங்கு குழியில் எலிபோல ஒளிந்து இருந்ததாகவும், அவரை வெளியே இழுத்து, பரட்டைத் தலையுடன் காட்சி தந்த அவர் வாயினைத் துறந்து பல்லினை சோதனை போடுவது போலவும், அதன் பின்பு அவரை சதாம் ஹுசைன் தான் என உறுதி செய்து கழுவில் ஏற்றி நாடகம் அரங்கேற்றியது யாவரும் அறிந்ததே!
அதே போன்று தான், லிபியா நாட்டின் மாவீரன் கடாபியினை ஒரு கழிவு நீர்க் குழாயில் ஒளிந்திருப்பதுபோலவும், அவரைப் பிடித்து அவர் நாட்டவரே கொண்டது போலவும் கபட நாடகம் ஆடப் பட்டது.
ஒசாமா பின் லேடன் வேட்டையிலும் பாக்கிஸ்தானிலுள்ள அபேட்டபாட்டில் அதிரடி நடவடிக்கை எடுத்து சுட்டுக் கொல்லப் பட்டு கடலில் அடக்கம் செய்யப் செய்யப் பட்டதாகவும் கூறப்பட்டது.
உடனே நமது மேதாவி சென்னை அண்ணாசாலை இமாம் ஒருவர் ஜனாசாவே இல்லாமல் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு மாறுபட்டு தொழுகை நடத்தினார். அதில் அனுதாபத்துடன் பலர் கலந்து கொண்டதாகவும் கூறப் பட்டது.
பல மக்களுக்கு புதிராத, மற்றும் புரியாத கேள்வியினை என்னிடம் சிலர் கேட்டனர்.
அவைகள்:
1) ஒரு குற்றவாளி என்றால் ஏன் சதாம் ஹுசைன்போல விசாரணை நடத்தி பாகிஸ்தானில் தண்டனை தரவில்லை?
2) மிகக் கொடியவர் என்றால் புரட்சிப் படையால் கடாபி போல கொல்லப் பட்டிருக்க வேண்டும், அது நடக்க வில்லையே ?
3) சர்வதேச குற்றம் புரிந்து இருந்தால், சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் நீதி மன்றத்தில் லைபீரியா ஜனாதிபதி மார்க் டைலர் போலோவோ, செர்பியாவின் கொடுங்கோலன் மில்சொவிக் போலோவோ, ருவாண்டா நாட்டில் இனப் படுகொலை நடத்தி தண்டனை பெற்ற தலைவர் போலோவோ சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தி ஏன் தண்டனை வழங்க வில்லை?
அதற்கு விடையாக உயர்ந்த புளிட்ஸ் பரிசு வென்ற பத்திரிக்கையாளர் செமோர் ஹேர்ஸ் என்பவர் எழுதியிருக்கும் தேசிய பாதுகாப்பு என்ற புத்தகத்தில், 'பாகிஸ்த்தானின் அபேட்டபாட்டில் அமெரிக்காப் படையினரால் கொல்லப் பட்டதாக கூறுவது வெறும் கப்சா என்று கூறுகிறார். அந்தத் தகவலை நியூ யார்க் டைம்ஸ் என்ற பத்திரிக்கையும் வெளியிட்டுள்ளது. ஒரு வேலை அதுவே உண்மையாக இருந்தால் ஜனாசா இல்லாமலிலேயே  ஜனாஸா தொழுகை நடத்தியவர்கள் தான் பிற்காலாத்தில் பதில் சொல்லியாக வேண்டும். அவர்கள் யாருடைய தூண்டிதல் மேல் அவ்வாறு செய்தார்கள் என்று எல்லாம் வல்ல இறைவனுக்கே வெளிச்சம். ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு அந்த இமாமை வெளிநாட்டு தூதர்கள் சந்தித்தார்கள் என்றும் கூறப் பட்டது.
ஆகவே தான் நான் தலைப்பில் சொன்ன, இந்த நவீன உலகத்தில் மூடு மந்திரங்களும், மாயாஜாலங்களும் சகஜம் என்றால் சரியா?
 

No comments:

Post a Comment