Monday, 12 August 2019

பாரத மதாக்கி ஜே'


                       
              (டாக்டர் ஏ.பீ. முகமது அலி),

2019 ம் மக்களவை தேர்தலுக்குப் பின்பு மைனாரிட்டி முஸ்லிம்  மக்கள் சிலரை ஹிந்துத்துவ அமைப்புனர்,' பாரத மாதா கி ஜே' என்று கோசம் போடச் சொல்லி துன்புறுத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளதை அனைவரும் அறிவர்.  அவ்வாறான செய்கைகள் மூலம் மைனாரிட்டி சமூகத்தினரிடையே ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதினை யாரும் மறுக்க முடியாது. மத்தியில் ஆளுகின்ற தலைமை அவ்வாறான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டுகோள் இட்டாலும் அதற்கான செயல் திட்டம் குறைவே என்று சம்பவங்கள் அடங்கிய செய்திகள் வந்து கொண்டுள்ளனவே.
            இந்திய நாடு பல்வேறு ஜாதி, மதம், நிறம், இனம், மொழி ஆகியவற்றை கடந்து வேற்றுமையில் ஒற்றுமையை கண்ட பண்பான நாடு என்பதினை பண்டைய கால வரலாற்றுச் சுவடிகள் பறை சாற்றும். அதனைப் போன்று தான் சீன நாட்டு வரலாறும் உள்ளது. தேர்தல் வரும் போகும், ஆனால் வருங்கால இந்தியா எப்படி இருக்க வேண்டுமென்றால் மதச்சார்பு அற்ற, சமதர்ம சமுதாயம் என்ற மிகவும் பலமான அடித்தள மிக்க ஜனநாயக  அரசினை  எழுப்பினால் மட்டுமே முடியும் என்பதினை யாரும் மறந்து விடக்கூடாது.
            பல தரப்பு மக்கள் வாழும் பெரிய நகரங்களில் பல்வேறு வேற்றுமை இருந்தாலும் மனக் கசப்பினை காண முடியாது. அங்குள்ள சிலரிடம் கலந்துரையாடியபோது'ஹிந்துஸ்தான்', 'பாரத்' போன்ற வாசகங்கள் மாயாஜால காலங்களில் உள்ள சமஸ்கிருத வார்த்தைகளில் வந்தது என்பது புலனாகிறது.
            ஆனால் சுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்தியாவின் வடக்கேயுள்ள ஹைபர் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கேயுள்ள கன்னியாகுமாரி வரையிலும் உள்ள விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கின்ற வறுமை,கடன் தொல்லை,கந்துவட்டிக் கொடுமை, கடுமையான வீட்டு வாடகை, வரித்தொல்லை, தண்ணீர் பஞ்சம், குழந்தைகள் படிப்புச் செலவு,விவசாய நிலங்களில் அகல ரோடு, மீத்தேன்,கெயில் குழாய்கள் பதிப்பு  போன்ற கஷ்டங்கள் கதை கதையாக சொல்வது பரிதாபமும் பரிதாபமே!
            இந்திய நாட்டின் சுதந்திரம் படித்த இளைஞர்களால் மட்டுமே அடைந்து விடவில்லை. மாறாக இடுப்பில் கோவணம் தலையில் முண்டாசு கட்டிய கடைநிலை விவசாயிகள் மூலமும் தான் கிடைத்தது என்பதினை யாரும் மறந்து விடக்கூடாது. இவ்வளவிற்கு ஏன் காந்திஜியே தமிழ்நாட்டின் கோவணம் கட்டிய விவசாயினைப் பார்த்துத் தானே தனது உடையினை அவர்கள் போன்று மாற்றினார். இன்று முன்னேறிய நாடுகளாக அமெரிக்கா, ருசியா, சீனா, ஜப்பான்  பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து விருப்பத்திற்கு காரணம் மக்கள் தங்களுக்கிடையே நிலவும் வேற்றுமைகளை மறந்து நாட்டின் ஒற்றுமைக்கும், உழைப்பிற்கும் மதிப்பினைக் கொடுத்ததினால் இன்று பரிமாண வளர்ச்சியடைந்துள்ளது.
            சுதந்திர இந்தியாவின் முதல் பிராதன மந்திரி பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய, 'டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலில் பாரத மாதா என்றால் யார் என்பதினை மிகவும் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு  விளக்கி எழுதியுள்ளார். அதில், 'நான் சிலக் கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது என்னை வரவேற்கும் உற்சாகத்தில், 'பாரத மாதகி ஜே' என்று கோசம் எழுப்புவதினை பார்த்தேன். அப்படி கோசம் எழுப்புவர்களைப் பார்த்து, பாரத மாதாகி ஜே என்றால் என்ன என்று அவர்களை கேட்டேன். என்னுடைய கேள்வியினை எதிர் பார்க்காத அவர்கள் திகைப்பு அடைந்தார்கள். நான் அவர்களைப் பார்த்து அன்னைக்கு வெற்றியா என்று கேட்டேன். அதற்கு பதில் சொல்வதிற்குப் பதிலாக ஒருவர் முகத்தினை ஒருவர் பார்த்தார்கள். அதன் பிறகு ஒரு கட்டத்தில் ஜாட் இன வாலிபர் எழுந்து 'டர்டி' என்ற நல்ல இந்தியா என்கிறார்.
நான் அவரை விடவில்லை. மாறாக அவரிடம் நீங்கள் உங்கள் ஊரைச் சொன்னீர்களா அல்லது மாவட்டத்தினை சொன்னீர்களா அல்லது அனைத்து இந்தியாவினையும் சொன்னீர்களா இப்படியாக  வினா எழுப்பி பதில்களும் பெற்றேன். இறுதியாக அவர்களிடம் நான், இந்தியா என்பது . மலைகளையோ, காடுகள், ஆறுகள், பாலைவனங்கள், பரந்த வயல் வெளிகள் அடங்கிய ஒரு குறுகிய வட்டத்தில் அடங்கிய பொருள் கொண்டதில்லை.மாறாக இந்தியா என்பது அதில் வாழும் பலகோடி மக்களையும் சார்ந்ததாகும், அவர்கள் வெற்றி புன்னகையோடு இருந்தால் தான் நாடும் போற்றக்கூடிய ஒன்றாக திகழும்.என்று அவர்களுடைய  மூலையில் பசுமரத்தில் அடிக்கப் பட்ட ஆணிபோல பதிய வைத்தேன் என்று எழுதியுள்ளது இந்தக் காலத்தில் குறுகிய வட்டத்தில் குதிரை சவாரி செய்யும் குறுகிய எண்ணம் கொண்ட துவேஷ மானவர்களுக்கு முகத்தில் அறைந்தால் போல கூறும் சம்மட்டி அடியாகும்.
            உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் ரஞ்சன் கோகாய் அவர்கள் அஸ்ஸாம் தலைநகர் கௌகாத்தியில் 4 .8 .2019  ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, 'மக்களை அச்சுறுத்தும் விதமாக சில தனிநபர், குழுமம் செயல்பாடுகள் கவலையளிக்கின்றது. அப்படிப் பட்டவர்கள் நாட்டின் பண்பாது, பாரம்பரியம் ஆகியவற்றிக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 'லாயல்டி' அர்ப்பணிப்பு பற்றி கூறும்போது, 'நமது அர்ப்பணிப்பு மதத்தின் பெயரால் வருவதில்லை, மாறாக இந்தியாவில் வாழும் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணம் உள்ளத்தில் மேலோங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
லத்தீன் அமெரிக்கா உலகப் புகழ் பெற்ற ஆயுத போராளி சேகுவாரா போன்று இந்தியா சுதந்திரத்திற்காக இந்தியா தேசிய படையினை நிறுவிய வங்க சிங்கம் நேதாஜி அவர்கள், 'புது இந்தியா மதத்தின் பெயரால் உருவாக்க முடியாது. மாறாக அந்த குறுகிய வட்டத்தினை உடைத்தெறிந்து நாமெல்லாம் இந்தியர் என்ற எண்ணம் மேலோங்கி புது இந்தியா இளமைப் பருவம் முதலே உருவாக வேண்டும்' என்று அறைகூவல் விடுத்தார்.
ஆகவே ‘பாரத மாதகி ஜே’ என்று சொல்ல சிறுபான்மை மக்களை துன்புறுத்தும் சிலர் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்று ஹஜ் பெருநாள் இன்று கேட்டுக்கொண்டால் சரிதானே!

Thursday, 7 March 2019

எடுப்பார் கைப்பிள்ளையாக மாறியதேன் இஸ்லாமிய இயக்கம்?



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,பிஎச்.டி.ஐ.பீ.எஸ்(ஓ )
இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு இந்திய முஸ்லிம் லீக் வட இந்தியாவில் மறையத் தொடங்கியது. அதன் பின்பு கண்ணிய மிகு காயிதே மில்லத் தலைமையில் தென்னிந்தியாவில் வேரூன்றத் தொடங்கியது. காயிதே மில்லத் அவர்கள் தமிழ் நாட்டினைச் சார்ந்தவரானாலும் கேரளா மாநிலத்தின் முஸ்லிம்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினராக பணியாற்றினார். அவருடைய ஆளுமை இன்று தமிழகத்தில் உள்ள அமைப்பிற்கு எவரும் உயர்ந்ததில்லை.
            தமிழ் நாட்டில் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட பெரியார், குலக்கல்வி புகழ் ராஜாஜி, கர்ம வீரர் காமராஜர் போன்றோர்களிடையே மதிப்பும் மரியாதையும் கொண்டவராக காயிதே மில்லத் அவரகள் திகழ்ந்தார்கள்.1967 தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி கூட்டணியில் சேர்ந்ததினால் காயிதே மில்லத் மீது பேரறிஞர் அண்ணா மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தது மட்டுமல்லாமல், முதல்வர் பதவி ஏற்குமுன்பு காயிதே மில்லத் குரோம்பேட்டை வீட்டிற்கே சென்று மரியாதை செலுத்தி விட்டு பின்பு பதவி ஏற்றார் என்பது வரலாறு.
            காயிதே மில்லத் மறைவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீகு கட்சியில் ஒரு மாற்றத்தினை கண்டது. 1972 தி.மு.க வில் பிளவு ஏற்பட்டபோது லீகு கட்சியிலும் பிளவு ஏற்பட்டது. அப்துல் சமது தலைமையில் தி.மு.க.ஆதரவு நிலையம், அப்துல் லத்தீப் தலைமையில் அ.இ.அ.தி.மு.க ஆதரவு நிலையம் எடுக்க ஆரம்பித்தது. முஸ்லீம் லீகு கட்சி பெரும்பாலும் வியாபாரி பெருமக்கள், கடல் கரை ஒர செல்வந்தர்கள் ஆதரவு நிலையே இருந்தது. சாமானியர்கள் இரண்டாம் தர உறுப்பினர்களாகவே இருந்தார்கள். 1977 நடந்த சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் மக்கள் அமோக ஆதரவுடன் எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சி அமைத்தார்கள்.
            இந்த நேரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் பொருளீட்டுவதிற்காக 1970 -1980 ஆண்டுகளில் வளைகுடா மற்றும், சௌதி அரேபியா நாடுகளுக்குச் சென்றார்கள். அப்படி சென்றவர்கள் தூய ‘வகாபிசம்’ என்ற மார்க்க கட்டுப் பாடுகளை கற்று வந்ததினால், இங்குள்ள தர்கா வழிபாடு, வலிமார்கள் துதிபாடு, மற்றும் திருமண சடங்குகளில் உள்ள வரதட்சிணை, சீர், சீராட்டு  போன்றவற்றினை கண்டு மனம் வெறுத்து தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு வழி தேடினர்.
            இந்திய யூனியன் முஸ்லிம் லீகு கட்சியின் பலவீனமும், வளைகுடா நாடுகளின் தாக்கமும் இளைஞர்களிடையே புதிய வழிகளைத் தேட ஆரம்பித்தனர்.இந்த நேரத்தில் தான் ஹிந்து அமைப்பின் ராம் ஜென்ம பூமி அமைப்போம் என்ற கோஷமும், ஷாபானு வழக்கில் விவாகரத்து பெண்ணின் ஜீவனாம்சம் சம்பநதமான தீர்ப்பும் வெகுவாகவே பாதிக்க வைத்தது முஸ்லிம் இளைஞர்களை. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிரிவினை ஒவ்வொரு ஜாமத்திலும் பிரதிபலித்தது. முஸ்லிம் இளைஞர்கள் எழுச்சி தவ்ஹித் என்ற ஓரிறைக் கொள்கையில் உறுதியாக நிலைத்து ஹனபி, ஷாபி, மாலிகி, ஹன்பலி பிரிவுகளுக்கு அப்பாற்பட்டு ஒரே மார்க்கம் தவுஹீத் என்று பறை சாட்டப்பட்டது. அல் உமா என்ற இயக்கம் கோவையில் வேரூன்றத் தொடங்கியது.
            டிசம்பர் 6 , 1992 அயோத்தியுள்ள பாபரி மஸ்ஜித் இடிப்பு, அதன் பிறகு ஏற்பட்ட குண்டு வெடிப்பு, வன்முறை போன்ற சம்பவங்கள் 1995 ல்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்ற அமைப்பினை ஏற்படுத்தியது. அதன் முக்கிய தலைவர்களாக மௌலவி பி.ஜெ., பேரா. ஜவஹருல்லாஹ், எஸ்.எம்.பக்கர் போன்றோர் அதன் தலைவர்களாக இருந்தனர். 1997  நவம்பரில் கோவை டிராபிக் த.கா செல்வராஜ் கொலை செய்யப் பட்டதால் முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ இயக்கங்கள் அதனை ஹிந்துக்களுக்கு எதிரான தாக்குதல் என நினைத்து வன்முறையில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டது. சிலர் காவலர் துணையுடன் நடத்தப பட்டது என்ற குற்றச் சாட்டுகள் எழுந்ததின் பயனாக கோபம் அடைந்த சிலர் 14 .2 .1998 பல குண்டுவெடிப்புகளை வழி வகுத்தனர். அதன் தாக்கம் இன்னும் தமிழ் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது இன்னமும்.
            அது வரை முஸ்லிம் ஆதரவு எடுத்துவந்த தி.மு.கவும் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்கள் 'தீவிரவாதிகள்' என்ற புனைப் பெயர் இட்டனர். தி.மு.க வும் 1999 ம் இதுவரை பி.ஜெ.பியினை மதவாத இயக்கம் என்று அழைத்து வந்த நிலையினை மாற்றி மத்தியில் அமைந்த பி.ஜெ.பி அரசில் அங்கம் வகிக்க ஆரம்பித்தது. அதனையே அ. இ.அ .தி.மு.கவும் வழி மொழிந்தது.
            ஒன்றிணைந்த த.மு.மு.க விழும் ஈகோ பிரச்சனையால் பி.ஜெ. பிரிந்து  டி.ஏன்.டி.ஜெ. என்ற தூய தவுஹீத் இயக்கம் ஆரம்பித்தார். ஆனால் த.மு.மு.க. வஹாபி கொள்கையுடன், சமுதாய சேவையான இட ஒதுக்கீடு கொள்கையினை பின்பற்றி செயலாற்ற தொடங்கியது. த.மு.மு.க விலும் பிளவு ஏற்பட்டு ஐ.என்.டி.ஜெ. பாக்கர் தலைமையில் உருவானது. த.மு.மு.க. அரசியலில் எந்த அணிக்கு போகின்றதோ அதன் எதிர் அணிக்கு ஆதரவு கொடுக்கும் நிலையினையும் நிலையினை  இரு தவுஹித் அமைப்புகளும் எடுத்தது. அதனால் தமிழ்நாட்டில் அரியணையில் இருக்கும் கட்சிகள் முஸ்லிம் அமைப்புகளுக்கு ஓரிரு சட்டமன்ற இடங்களை கொடுத்து விட்டு முஸ்லிம்கள் ஆதரவினை எதிர் பார்த்தனர்.
            சௌதி அராபியாவை ரியாத் நகரில் இலங்கை வீட்டு வேலை செய்யும் ரிஸ்வான என்ற முஸ்லிம் பெண் தன்னுடைய எஜமானி மேல் இருக்கும் கோபத்தால்  2007 ம் ஆண்டு இரண்டு வயது குழந்தையினை கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை நிறைவேற்றியபோது உலகமே எதிர்த்தது. இங்குள்ள முஸ்லிம் அமைப்புகளும் அதனை எதிர்த்தது. அனால் தவுஹீத் அமைப்பு மட்டும் அது சரிதான் என்ற வேறுபட்ட நிலை எடுத்தது. 2012  ம் ஆண்டு ரஸூலுல்லாஹ்வினைப் பற்றி ஒரு படத்தினை அமெரிக்கா நிறுவனம் வெளியிட்டபோது மற்ற இஸ்லாமிய இயக்கங்கள் அமெரிக்கா கான்சுலேட் அருகில் போராட்டம் நடத்தியபோது தவ்ஹித் இயக்கம் அதில் கலந்து கொள்ளவில்லை. 2013 ம் ஆண்டு நடிகர் கமலஹாசன் விஸ்வரூபம் படம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதினை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தபோது தவ்ஹித் அமைப்பு அமைதியாக இருந்தது.
            முஸ்லிம் அமைப்புகள் ஒரு காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்ற கொள்கைகளை வைத்து முஸ்லிம் அமைப்பினை 2016 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சி பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு தமீம் அன்சாரி தலைமையில் மனித நேய ஜனநாயக கட்சி என்று அமைத்து இரண்டு தொகுதிகளை ஒதுக்கி அதில் தமீம் அன்சாரி வெற்றிபெற செய்தனர். தவ்ஹித் அமைப்பிலும் பெண்கள் சம்பந்தமான அதுதடுத்து புகார்கள் வந்து அதன் தலைவர்களான பி.ஜெ. அல்டாபி, செயது இப்ராஹிம் ஆகியோர் நீக்கம் செய்யப் பட்டு வலுவிழந்த இயக்கமானது தவ்ஹித்.
            இது போன்ற இஸ்லாமிய பிரிவுகளாலும், சில தப்லிக் அமைப்புகளாலும் முஸ்லிம் இளைஞர்கள் படிப்பதினை விட்டுவிட்டு ஊர் ஊராக சுற்றுவதும், சிறு சிறு வேலைகளை நாடி வெளி நாட்டுக்குச் சென்று சம்பதியதியத்தில் ஈடுபடுவதுதான் பல இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்பதும் திட்டமிட்ட இஸ்லாமிய சகோதரர்களை பிரிக்கும் செயலாகவே கருதப் படுகிறது
எஸ்.டி.பி.ஐ. கேரளாவுனைச் சார்ந்த இயக்கமாக இருப்பதினால் தமிழ் நாட்டில் அரசியல் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை.
2019 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் அரசியல் கட்சிகள் முஸ்லிம் இயக்கங்களில் ஆழம் பார்க்கும் விதமாக கூட்டணி அமைத்திருப்பினை காணலாம். இந்திய யூனியன் முஸ்லிம் லீகுக்கிற்கு தி.மு.காவில் ஒரு இடம் கொடுத்து விட்டு இது வரை ஆதரவு தெரிவித்து வந்த எம்.எம்.கவிற்கு ஒரு இடமும் ஒதுக்கவில்லை. மனித நேய ஜனநாயக கட்சிக்கும் தி.மு.க.ஆதரவு நிலை எடுத்தாலும் அதவும் ஒதுக்கப் பட்டது. எஸ்.டி.பி.ஐ. மட்டும் தினகரன் கட்சியில் கூட்டு சேர்ந்துள்ளது. அதன் அரசியல் துவக்கம் இனிமேல் தான் தெரியும்.
 தி.மு.காவில் உறுபடியில்லா பாரிவேந்தருக்கு  ஒரு இடமும், மேற்கு மண்டலத்தில் மட்டும் மூன்று பிரிவுகளாக உள்ள கொங்குநாடு கட்சிக்கு ஒரு இடமும், ஐ.யு.எம்.எல்லுக்கு அவர்களுக்கு இணையாக ஒரு இடமும் ஒதுக்கியுள்ளது. வட மாநிலங்களில் மட்டும் குறிப்பிட்ட மாவட்டங்களில் கணிசமான ஓட்டுக்களை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கும் பொது தமிழ்நாட்டில் பரவலாக இருக்கும் ஏழு சதவீத முஸ்லிம்களுக்கு ஒரே ஒரு இடம் தான் என்று பார்க்கும் போது பரிதாபமாக இல்லையா சகோதரர்களே.
            இதற்கு காரணம் தமிழ் நாடு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் ஒற்றுமையாக அரசியலில் வேறுபாடுகளை களைந்து ஒரே அணியில் சேர்ந்து இட ஒதுக்கீடு கேட்கமாட்டார்கள் என்று நினைத்துத் தான் ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா என்ற கூற்றுக்கு இணங்க தொகுதி கொடுத்துள்ளார்கள். முஸ்லிம் இயக்கங்கள் வரும் காலங்களில் வேற்றுமைகளை மறந்து அரசியல் களம் அமைத்து சட்டமன்ற, பஞ்சாயத் தேர்தல்களில் ஓர் அணியினை ஏற்படுத்தினால் ஒழிய இஸ்லாமிய இயக்கங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறும் பரிதாப நிலைதான் ஏற்படும். இஸ்லாமிய இயக்கங்களை இணைக்கும் காயிதே மில்லத் போன்ற தலைவர்கள் இன்று தமிழ் நாட்டில் இல்லாததே இந்த பரிதாபநிலை!
             
           
           

Sunday, 3 February 2019

உம்மத்தின் மகிழ்ச்சியும், திருஷ்டியும்!



(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ )
2019 ம் ஆண்டு ஜனவரி 26 ந் தேதியிலிருந்து 28 ந் தேதி வரை தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுத வேண்டிய நிகழ்வு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள இனாம் குளத்தூரில் நடந்துள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
பொட்டல் காடுகளாகவும், முட்கள் நிறைந்த தரிசு நிலங்களாகவும் உள்ள இடங்களில் வெள்ளையுடையும், தலையில் தொப்பியும், தாடியும் வைத்த முஸ்லிம் மக்கள் உழவர் நஞ்சை நிலத்தை பண்படுத்த செய்யும் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.   அந்த நிலங்கள் யாருடையது என்று நீங்கள் கேட்கலாம். அவைகள் அங்குள்ள அனைத்து சமுதாய மக்களுக்கும் சொந்தமாம். அவைகளை விலை பேசி வாங்கவோ அல்லது வாடகைக்கு, அல்லது குத்தகைக்கு எடுக்கவோ இல்லையாம். அந்த ஊரில் உள்ள மக்களை அணுகி முஸ்லிம்கள் மார்க்க சம்பந்த சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டும் என்று கேட்டதும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று இரவலாக கொடுக்கப் பட்டதாம். அதுதான் தமிழர் பண்பாடு மற்றும் கலாட்சாரம். அது வட இந்திய கலாட்சாரத்தினை விட்டு வேறுபட்டது என்பதினை காட்டியதாம்.
            நான்கு மாதத்திற்கு முன்பு எந்த முன் அறிவுப்புமில்லாமல் எறும்புபோல சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த 'பாய் ' மார்களைக் கண்ட மணப்பாறை நுண்ணறிவுப் பிரிவு ஏடு அங்கு என்னதான் நடக்கின்றது என்று பார்த்தபோது நிலங்களை பண்படுத்தியும், முட்புதர்களை களையெடுத்தும், நீர்நிலைகளை ஆழப் படுத்தியும், செயற்கை தண்ணீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்தும், பிரமாண்டமான பந்தல் எழுப்பியும், தற்காலிக கழிப்பறைகள் அமைத்தும், உணவிற்காக சிறு சிறு கூடாரங்கள் எழுப்பியும், வானங்கள் நிறுத்துவதிற்காக வசதி வாய்ப்புகள், சாலைகள் அமைத்தும், பூமியினை சமப் படுத்தியதோடு மணலும் பரப்பப் பட்டதாம். அங்கு வேலைகள் செய்து கொண்டிருந்தவர்களை அணுகி அங்கே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது அல்லாஹ்வின் கட்டளைகளை விளக்கப் போகிறோமென்றும், மக்கள் தீய செயல்களிருந்து விடுபட்டு, நலமுடன் வாழ துவா செய்யப் போகின்றோம் என்றும் கூறியதை தன்னுடைய ஆய்வாளரிடம் தெரிவித்தாராம்.
            1997 ம் ஆண்டு மே மாதம் 28 ,29 ந் தேதிகளில் வேலூர் மாவட்டம் மேல்விசாரம் மாநாட்டிற்கு பின்பு   நடக்கும் முஸ்லிம்கள் மாநாடு இதுதான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல தென்னாட்டின் பல பகுதிகளிருந்து வந்த இஸ்லாமிய பெருமக்கள் கூடியதினை அங்கு கண்டார்கள். இந்த மாநாட்டிற்கு வீடுதோறும், நோட்டீஸ் கொடுக்கவில்லை, வீதிதோறும் ஒலி பெருக்கி வைத்து காது கிழிய கத்தவில்லை, தெரு முனைகளில் விளம்பர பேனர்களில்லை, டிராபிக் ராமசாமி போன்ற அனுமதியில்லா பேனர்கள் எடுங்கள் என்று போராட்டம் நடத்த வேலையில்லை, வீட்டுச்சுவர்களிலோ அல்லது அரசு அலுவலக கட்டிடங்களின் சுவர்களிலோ விளம்பரங்கள் இல்லை. மாறாக ஒவ்வொரு மகல்லாவிலும் ஜும்மா தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு மட்டும் செய்யப் பட்டது. ஆனால் அங்கு கூடியதோ மனிதக் கடல் போன்று இருந்ததாம். முஸ்லிம்கள் சாரை, சாரையாக ஒன்று கூட ஆரம்பித்தார்களாம். அங்கே ரயிலில் வருபவர்கள் இறங்குவதிற்காக ரயில்வே அமைச்சகமும் ஒவ்வொரு ரயிலும் நின்று செல்ல வசதி செய்யப் பட்டதாம், வாகனங்களில் வருபவர்கள் நெடுஞ்சாலை  டோல் கேட்டுகளில் கட்டணம் செலுத்தாமல் விரைவாக செல்ல வழிகைகள் மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் மூலம் செய்யப் பட்டதாம், மாநில அரசும் தேவையான தண்ணீர் வசதிகள், மருத்துவ வசதிகள் செய்து கொடுத்ததாம். சமுதாய அமைப்புகளான தா.மு.க. எஸ்.டி.பி.ஐ., எம்.ஜே.கே போன்ற அமைப்புகளும் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உதவிகள் செய்தார்களாம்.  அங்கு கூடிய அனைவரும்  எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அமர்ந்து, 'லாயிலாஹ இல்லல்லாஹ்  ஹாஸ்பி ரப்பி ஸல்லல்லாஹ், மாபி கல்பி ஹைருல்லாஹ், நூரு முகமது ஸல்லல்லாஹ்' என்ற கோசம் வானைப் பிளந்ததாம்.
            இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலமைக் காவலர் ஒருவர் இரவு பணி முடித்து மணப்பாறை திரும்பும்போது திண்டுக்கல் செல்லும் முஸ்லிம்கள் காரில் பயணம் செய்யும்போது தன்னுடைய அனுபவம் குறித்து கீழ்கண்டவாறு கூறிக்கொண்டு வந்தாராம். 'நான் எத்தனையோ முக்கிய பிரமுகர்கள், பொதுக் கூட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளேன், அங்கெல்லாம் ஒலிபெருக்கிகள் மூலம் காதுகள் செவிடாகும், கழிப்பிட வசதி இருக்காது, உணவுக்கு அலைய வேண்டும், கூட்டத்தினருடையே தள்ளுமுள்ளு, நெரிசல்  ஏற்படும், ஒருங்கிணைப்பாளர்களிடையே சண்டை சச்சரவுகள் வரும் ஆனால் உங்கள் பாய் மார்கள் நடத்திய மாநாடு அவைகள் எதுவுமே இல்லை. அது மட்டுமல்லாமல் எங்களுக்கு ஒரு வேலையும் அங்குள்ள தொண்டர்கள் கொடுக்கவில்லை. என்னைப் போன்று பணியில் ஈடுபட்ட மற்ற காவலர்களுக்கும் வயிறார உணவு, தாகம் தீர்க்க தண்ணீர், களைப்பாற தேநீர் கொடுத்து விழுந்து விழுந்து உபசரித்தார்கள். அதனைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டேன் என்று வாயார புகழாரம். அதுவும் முக நூலில் வந்தது.
            எந்த ஒரு நல்ல விழாவிற்கும் திருஷ்டி போன்று ஒரு பாதகமான செயல் நடக்குமாம். அதேபோன்று இஸ்திமா நடக்கும் நாட்களில், வட தமிழக முஸ்லிம்கள் செல்லும் வழியான உளுந்தூர்பேட்டையில் ஒரு முஸ்லிம் அமைப்பினர் அதே நாளன்று குரான் மாநாடு என்று ஒன்று நடத்தியதாம். அதற்காக ஊர்கள் தோறும் வீதிவீதியாக வண்டிகளில் ஒலி பெருக்கி வைத்து அறிவிப்பு செய்தும், சுவர்களில் விளம்பரம் செய்தும், பேனர்கள் கட்டியும் பெரிய விளம்பரம் செய்து, பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு என்றும் அறிவிப்பு செய்யப் பட்டதும் அனைவருக்கும் தெரியும்  அப்படி கூடிய பெண்களை படமெடுத்து முகநூல், வாட்ஸாப்ப் போன்ற இணைய தளங்களில் செய்தி அனுப்பியதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே அந்த அந்த அமைப்பின் தலைவர் இருவர் மீது பாலியல் சம்பந்தமான புகார்கள் வந்தும், அது சம்பந்தமாக பஞ்சாயத்து நடந்தும் பிறகு நீக்கப் பட்ட பின்னரும், பெண்களை வரவழைத்து இரவு நேரங்களில் கூட்டம் நடத்தியது சரியான செயல் தானா என்று சிந்திக்க வேண்டாமா?  முஸ்லிம் பெண்கள் என்றால் ஹிஜாப் அணிந்து பிற ஆண்கள் கூட நேசமாக உறவாட மாட்டார்கள் என்றும், வீட்டில் கூட பெண்கள் மறைப்புடன் வாழ்வார்கள் என்றும், 2001 முதல் 2016 வரை ஆய்வு நடத்திய அமெரிக்கா உளவுப் படையான எப். பி.ஐ. அமெரிக்க 30 லட்சம் முஸ்லிம்கள் பற்றி அறிக்கை கொடுத்துள்ளதாக தகவல் தருகின்றது. அதுவும் எங்கே தாராள கொள்கை கொண்ட அமெரிக்காவில். ஆனால் பெண்டு பிள்ளைகளை ஊரியில் பாதுகாப்பாக இருங்கள் என்று வெளி நாட்டுக்கோ அல்லது வெளி ஊர்களுக்கோ நம்பிக்கையுடன் செல்லும் பெண்களை கால் கிளப்பி அந்நியர் வெளி ஊர்களுக்கு இரவில் வரவழைக்கலாமா அதுபோன்ற செயல்கள் தவறான வழக்கு வித்திடாதா? அதோடு முஸ்லிம்கள் ஒரு கட்டுக்கோப்பான ராணுவம் போன்றவர்கள் என்று மாற்று மதத்தினர் நினைத்திருக்கும் இதுபோன்ற போட்டி மாநாடு தேவைதானா?  மதக் கலவரம் ஏற்பட்டு அந்த பெண்கள் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு ஏற்பது?
            உத்திர பிரதேசத்தில் 45 நாட்கள் அலஹாபாத் நகரில் கும்ப மேளா நடப்பது அனைவரும் தொலைக்காட்சியிலும், பத்திரிக்கை வாயிலாகவும் படித்திருப்பீர்கள். அங்கு 25 லட்சம் மக்கள் திரண்டு கங்கையில் புனித நீராடுவதாக தெரிகின்றோம். அப்படி நடக்கும்போது அவர்களுக்கு போட்டியாக இந்து மதத்தினர் அங்கேயே அல்லது வேறு இடத்திலோ அந்த மாநிலத்தில் எந்த கூட்டத்தினையும் சேர்கின்றார்களா அல்லது அரசுதான் நடத்த விடுமா? ஊர் துண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி. முஸ்லிம்கள் அமைப்பின் சிதைப்பினை எதிர்நோக்கும் அமைப்புகளுக்கு இதுபோன்ற போட்டி மாநாடு சக்கரைப் பொங்கல் போன்று ஆகாதா?
            உலக முஸ்லிம்கள் பிரிந்து வாழ்வதினால் படும் இன்னல்களை நாள் தோறும் செய்திகளாக வந்த வண்ணம் உள்ளதல்லவா? இந்த சூழ் நிலையில் மறைந்த கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்கள் 5 .5 .1970 நடந்த அலிகார் கூட்டத்தில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாது முஸ்லிம்கள் மத்தியில் பேசும்போது, 'நாம் சிறுபான்மையினர், நாம் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது  கட்டாயம். பெரும்பான்மை சமூகத்தினர் எந்த கட்சியிலானாலும் பிரிந்திருக்கலாம், ஆனால் சிறுபான்மையினர் பிரிந்து வாழவே கூடாது. அவர்கள் சேர்ந்து வாழ்வது திருக்குரானில் கட்டளையாகும்'. காயிதே மில்லத் அவர்கள் சொல்லி சென்ற வார்த்தைகளை உளுந்தூர்பேட்டையில் மாநாடு நடத்திய அமைப்பினரும், தப்லீக் இரு பிரிவு குழுவினரும் மற்ற முஸ்லிம் அமைப்பினரும் உணர்ந்து செயல் பட்டால் தமிழக முஸ்லிம்கள் வளம் பெரும் அல்லது அவர்களுடைய எதிர்காலம் கானல் நீராகும்தானே!
           
           


Sunday, 13 January 2019

பொங்கல் வாழ்த்துப்பா!



ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)
ஆனை கட்டி போரடித்த- தரணியிலே
அந்த யானையே ஊருக்குள் நுழைந்து
போரடிக்க நெற்பயிரெங்கே என்று
கேட்கும் காலமானதே இன்று
தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே-தங்கம்
 சுவைக்கு கரும்பு, பசிக்கு சக்கரைப் பொங்கல்,
உடுக்க  பட்டாடை சகிதம் ஆனந்தக் கூத்தாடி
உழவனின் தோழன் எருதுக்கு ஒரு விழா
மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஜல்லிக் கட்டு
அகிலமெங்கும் தமிழ் புகழ் பரப்பும் தை திருநாள்.

குடிசையில் வாழ்ந்த கூன் விழுந்த பாட்டி
கொஞ்சம், கொஞ்சமாய் சேர்த்து
அஞ்சரைப் பட்டியில் வைத்த
ஆயிரம் ரூபாயும் செல்லாமல் போச்சே!

யார் கண் அல்லது ஊரார் கண் பட்டதா
உனக்குத்தான் தெரியும் ஏகனே,
மண்ணில் தாமிர கலவை கேன்சர்
கொடிய நோய் தாக்கம் தடுக்க
வெகுண்டது தூத்துக்குடி நகரம்
வீர போரில் சூழல் குண்டு பாய்ந்தது
வீர மறவன் மட்டுமல்ல வீரத்தாயும் தானே!

நடப்பதிற்கே செருப்பில்லை, எட்டு வழி சாலை ஏனோ
பொன்னைக் காப்பது போல மண்ணைக் காத்த
சேலம் மக்கள் வெகுண்டனர் குரல் எழுப்பி
நீதி அரசர்கள் வநதார்கள் கருணை காட்ட
மரம் நடும் திட்டம் ஒரு பக்கம்
அந்த மலையையே குடையும்
நியூட்ரான், எலெக்ட்ரான், மெதேன் 
என்று இனிப்பான கசப்பு 
மருந்து பசப்பு வார்த்தை 
பயிர் விளையும்விளை நிலமும் 
பாழாக்க  எங்கே சொல்வது என் வேதனையை 
வயலிலும் வாழ்வில்லை, ஒதுங்கும்
 மலையிலும் வழியில்லை !

மண்ணையும், மரங்களையும் புரட்டிப் போட்ட
கஜா காட்டேரிப் புயல் மற்றொரு பக்கம்-பலன்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற
தமிழ் மண்ணில்-துணிப் பையுடன்
ரேஷன் கடைகளில் மானியம் வாங்க
காத்திருக்கும் தரணி புகழ் சமுதாயமே!

வருடம் தோறும் நண்பர்களுக்கு பொங்கல்
 நல் வாழ்த்துப் பாடும் நான்-இன்று
வாங்கி விட்டாயா அரசு மானியம் என்று
கேட்கும் பரிதாப நிலையா வருவது
அடுத்த வருடமட்டுமல்ல இனி
இந்த நிலை என்றுமே வரக்கூடாது
என்று இறைவனை வேண்டுகிறேன்!





Sunday, 16 December 2018

மரணமும்-கடமையும்!



நோயாளிகளை அவர்கள் இருக்கும் இடம் சென்று பகைமையினை மறந்து நலம் விசாரிப்பதும், இறந்தவர்களுக்கு சிறந்தமுறையில் அடக்கம் செய்வதற்கும் இஸ்லாத்தில் பல ஹதீதுகள் இருக்கின்றன. அவர்களுக்கு இறைவன் பாவங்களை மன்னிக்கும் பரிசுகளை வழங்குகிறான் என்றும் கூறியிருப்பதினை நீங்கள் அறிவீர்கள். ஆனால் சிலர் அதற்கு மாறுபட்டு இருப்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என இருக்கின்றேன்.
            மூன்று சம்பவங்களை எடுத்துக் கூறி சிலர் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதினை விளக்கலாம் என எண்ணுகிறேன்.
1 ) சென்னை புதுத்தெருவில் வாழ்ந்த திண்டுக்கலைச் சார்ந்த நடைப் பயிற்சி  நண்பர் ஹசன்  இறந்து விட்டார் என்று நானும் எனது நண்பர் கீழக்கரை அமீரும் அங்கு சென்று மவுத்து சம்பந்தமாக அவருடைய மகனிடம் விசாரித்து விட்டு வெளியே ஜனாஸா எடுப்பதற்கு அமர்ந்திருந்தோம். அந்த இடத்திற்கு நான்கு கட்டிடத்திற்கு அப்பால் இருக்கும் இன்னொரு நடைப் பயிற்சி நண்பர் நூருல்  அமீன் அவர்களிடம் ஹசன் மவுத்து சம்பந்தமாக சொல்லி நாங்கள் அங்கே இருக்கின்றோம் என்றும் சொன்னோம். ஆனால் அவர் ஜனாஸா எடுத்து செம்புதாஸ் பள்ளியில் ஜனாஸா தொழுகின்றவரை வரவில்லை. மறுநாள் நடைப் பயிற்சிக்கு வந்தவரை ஏன் வரவில்லை என்று கேட்டோம், அதற்கு அவர், 'எனக்கு மவுத்தானவர் உடலைப் பார்த்தால் பயம்' என்றது எங்களை ஆச்சரிய பட வைத்தது.
2 ) நடைப்பயிற்சியில் ஈடுபடும் மற்றொரு நண்பர் கஸ்தூரியா என்பவரிடம் ஒரு நபர் வந்து 'நான் இன்னொரு நடைப் பயிற்சி நண்பர் தினகரன் தாயார் இறந்ததிற்கு சென்று விட்டு வருகிறேன்' என்று அப்பாவித் தனமாக சொல்லி விட்டு  கஸ்தூரியாவிடம் கைகொடுத்தார். அவர் உடனே கையினை எடுத்து விட்டு வீட்டிற்கு சென்றதும் மனைவியிடம் ஒரு வாலி தண்ணீர் வாங்கி நடைப் பயிற்சி உடையுடன் தலையில் ஊற்றிவிட்டு வீட்டுக்குள் சென்றதாக அவர் சொன்னது இன்னொரு ஆச்சரியமாக இருந்தது.
3 ) மூன்று வருடத்திற்கு முன்பு ஒரு அதிரையினைச் சார்ந்த நடைப் பயிற்சி பெரியவர் மவுத்தாகி விட்டார் என்று பார்ப்பதிற்காக நாங்கள் அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள பள்ளிக்கு சென்றோம். அவருடைய ஜனாஸா வைக்கப் பட்டு இருந்தது. அதனை சுற்றி பிரமுகர்கள் நின்றார்கள். நாங்கள் அடக்கம் எங்கே என்று வினவியதிற்கு அதிரையில் என்று சொன்னார்கள். நாங்கள் அரை மணி நேரம் நின்றோம். ஆனால் குழுப்பாட்டுவதிற்கான எந்த முயற்சியும் இல்லை. வினவியதிற்கு குழுப்பாட்டுவதிற்கு ஒருவரை வரவழைத்துள்ளோம்  அவர் இன்னும் வரவில்லை என்றது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
            இஸ்லாத்தில், 'ஒருவர் ஜனாஸாவினை குளிப்பாட்டி இறந்தவருடைய துர் வாடையை சுத்தம் செய்தால் அவருடைய பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப் படும்' என்ற ஹதீதுகள் உள்ளன.
 அது மட்டுமல்லாமல் எப்படி, யார் குளிப்பாட்ட வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
1 ) ஆண் மையத்திற்கு ஆண்களும், பெண் மையத்திற்கு பெண்களும் குளிப்பாட்டி சுத்தம் செய்ய வேண்டும்.
2 ) ஆனால் கணவனுக்கோ, மனைவிக்கோ அல்லது குழந்தைக்கோ யாரும் செய்யலாம், "இபின் மஸ்ஜித்'.
3 )  அபூபக்ர்(ரழி) அவர்கள் மவுத்தின் போது அவருடைய மனைவி அஸ்மாவும், அவருடைய மகன் அப்துர் ரஹ்மானும் குளிப்பாட்டியதாக வரலாறு.
4 ) குளிப்பாடுவர் முதலில் தொழுகையினை கடைப் பிடிப்பவராக இருக்க வேண்டும்
5 ) ஜனாஸா குளிப்பாட்டிய பிறகு கை, கால் சுத்தம் செய்து கொள்ளலாம். ஆனால் குளிக்க வேண்டிய அவசியமில்லை.
6 ) ஜனாஸாவினை முதுகு பக்கம் பலகையில் இருக்கும் படியும், முகம் கிபிலா நோக்கியும் இருக்குமாறு கிடைத்த வேண்டும்.
7 ) ஒரு துணியை தொப்புலிருந்து முன்னங்கால் வரை போர்த்த வேண்டும்.
8 ) ஜனாஸா உடுத்தியிருந்த ஆடையினை களைய வேண்டும்.
9 ) ஒரு குவளையில் தண்ணீரை எடுத்து தலையிலிருந்து கால் வரை மூன்று முறை ஊற்ற வேண்டும்.
10 ) வயிற்றில் கையினை வைத்து கழிவு வெளியேறும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
11 ) ஆண் உறுப்பிலிருந்தும், ஆசன வாயிலிருந்தும் வெளியேறும் கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
12 ) முடியின் முடிகிச்சுகளை அவிழ்த்து சுத்தம் செய்ய வேண்டும்.
13 ) உடலை மூன்று முறை சோப்புப் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
14 ) கடைசியில் பல மண பொருள்கள் கொண்ட தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
15) உடலில் ஒரு துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
            16 ) அதன் பின்பு ஓலைப் பாயில் ஜனாஸாவினை எடுத்து அத்தர் கற்பூர பொடி தூவிய   கபன்  துணிமேல் வைத்து ஜனாஸாவினை மூடி கால், தலையினை துணிக் கயிறால் கட்டி சந்தூக்கில் வைத்து துவா ஓதி பள்ளிவாசலில் தொழுகை வைப்பதிற்காக தூக்கிச் செல்வார்கள்.

ஜனாஸா குழுப்பாட்டினை, கபன் இடுதல் போன்றவற்றினை    முன்பெல்லாம் அசரத் அவர்கள் செய்வார்கள்.ஆனால் அதனையே ௧௪.௧௨.2018 அன்று எனது மைத்துனர் முகமது ரபி அவர்களின் ஜனாஸாவிற்கு  இளையான்குடியில் மதினா ஸ்டார் கபடி குழுவினைச் சார்ந்த இளைஞர்கள் ஐந்து பேர்கள் சின்னத்தம்பி அம்பலம் பேரன் சித்திக் தலைமையில் ஒரு போர் படை போல நின்று குழுப்பாட்டி, கபனிட்டு, ஜனாஸா தொழுகைக்கு மேலப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக எடுத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், ஐ.என்.பி. அடக்க ஸ்தலத்திற்கு தோழில் தூக்கிச் சென்று நல்லடக்கமும் செய்ததோடு தாவாவும் செய்தது நான் மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களிடமிருந்து வேறு பட்டு இருந்தது என்று பார்க்கும் போது அவர்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பல்வேறு இயக்கங்களின் சார்பாக ஜனாஸா எப்படி குளிப்பாட்டி, கபனிடுவது என்று  வகுப்புகள் எடுக்கப் படுகின்றன. அதனையே ஒவ்வொரு மதரஸாவிலும் வகுப்பு எடுத்தால் ஜனாஸாவிற்கு வேண்டிய கடமை செய்வதற்கு பிற்காலத்தில் பயப்பட மாட்டார்களல்லவா?
சென்னையில் இளையான்குடியினைச் சார்ந்தவர்கள் பல பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை நடத்தி மையத்து அடக்கம் செய்கிறார்கள். ஆனால் இளையான்குடியில் ஐ.என்.பிக்கு வேறு பள்ளிவாசல் இருந்தாலும் ஒற்றுமையாக மேலப்பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகை வைத்துவிட்டு அடக்கம் செய்வதற்கு மட்டும் ஐ.என்.பி. பள்ளிவாசல், மேலப்பள்ளி அடக்கஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லுவது ஒற்றுமை என்ற கையினை பற்றிக் கொள்ளுங்கள் என்ற நபி வழி செயலாக இருக்குமல்லவா!

Tuesday, 20 November 2018

தேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,பிஎச், டி.ஐ.பீ.எஸ்(ஓ )

அல் குரான் அத்தியாயம் 16 அந் நஹ்லில் அல்லாஹ் மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்ததினையும், அவனை படைத்து அனாதையாக விடாது அவனுக்கு உணவு, உடையினை அவனே படைத்ததினையும், அவனுக்கு வாகன வசதிக்கு உபயோகப் படும் படி, குதிரை, கோவேறு கழுதைகளையும் படைத்தது பற்றியும்,  மனிதன் இறை தேடுவதற்கு சூரிய பகலையும், ஓய்வெடுப்பதிற்கு  இரவான சந்திரனையும் படைத்து, அதனை தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து , கடலிலிருந்து உணவுப் பொருட்களையும், வித, விதமான முத்துப் போன்ற ஆபரணங்களையும் படைத்து, மலைகளை பூமி சமநிலையில் இருக்கும்படி ஊண்டியுள்ளதினையும் தெள்ளத் தெளிவாக கூறுகிறது என்பதினை சான்றோர் அறிவர். அத்துடன் தேனின் மகிமையையும் எடுத்தும் சொல்லியுள்ளது.
ஆனால் தேனீயின் மருத்துவக் குணத்தினை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். நாம் சென்னை அபிராமி மால் போன்ற மால்களுக்கு செல்லும் போது  சிலர் தண்ணீர் தொட்டியில் மீன்கள் விளையாட காலை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதினை காணலாம். கிராமங்களில் குளங்களில் குளிக்கும்போது மீன்கள் நமது கால்களை வருண்டும். அப்போது நாம் காலை எடுத்து விடுவோம். ஆனால் அதே மீன் தொட்டிகளில் மணிக்கணக்கில் காலை வைத்துக் கொண்டு மாலில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு 'பிஷ்' தெராபி என்பார்கள். அந்த மீன்கள் தாய்லாந்திலிருந்து தருவிக்கப் பட்ட மீன்களாகும்.  அவ்வாறு செய்வது மூலம் கால்களில் சுரணை வருவதிற்கு  என்று சொல்வார்கள், 
வயதாகிவிட்டால் மூட்டு வலிகள், கால், கைகளில் சுரணை என்ற உணர்ச்சி மங்கி விடும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், அல்லது அமர்ந்திருப்பவர்களுக்கும் கால் மரத்துப் போகும். அதனை 'ருமாட்டிசம்' என்று அழைப்பார்கள். அது போன்ற ருமாட்டிசத்தினை குணமாக்க டாக்டர்களை அணுக வேண்டியிருக்கும். ஆனால் அதனையே ஒரு எகிப்திய நாட்டு சாதாரண மனிதர் தேனீ மூலம் குணமாக்கியுள்ளார் என்று அறியும்  போது ஆச்சரியமாக இல்லையா. விஷ பாம்புகளின் விஷம் உயிர் கொல்லி நோய்களை குணமாக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சுத்திகரிக்கப் பட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வர பட்டுள்ளது. ஆனால் தேனீயை மனித உடலில் கடிக்க விடப் பட்டு வாத நோயினை அந்த மனிதர் குணமாக்கியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே!
வசனம் 68 -69 ல்,  அல்லாஹ், தேனீக்கு வஹி மூலம், 'மலைகளிலும், மரங்களிலும் நீ கூடு கட்டிக்கொள், பல தரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள், சீரான வழியில் சென்று கொண்டிரு' என்று கூறியும், மக்களுக்கு அறிவுறுத்தும்படி தேனின் வயிற்றிலிருந்து ஒரு வித திரவம்  வெளிப் படுகிறது(தேன்) தேனீ மூலம் மக்களுக்கு நிவாரணம் உண்டு என்று கூறுகின்றான்.
அந்த இறை வசனத்தினை எகிப்தில் வாழும் உமர் அப்துல் ஹாசன் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியில்  அப்படி என்ன மருத்துவ குணம் தேனீயால் உள்ளது என்று செயலில்  இறங்கினார். அதன் பயனாக ஒரு தேனீ வளர்க்கும் பண்ணையினை ஆரம்பித்தார். தேனீக்களினை தினசரி பராமரித்தார். அப்படி பராமரிக்கும் அவர் கையில் தேனீ கடிப்பதினையும் அதனால் அவர் கையில் உள்ள இயற்கை வலி நீங்குவதையும் கண்டார். உடனே அவருடைய ஆராய்ச்சியினை கை, கால் மரமரத்துப் போனவர்களுக்கு தேனீக்களை கடிக்கவிட்டுப் பார்த்தார். என்னே ஆச்சரியம் கை, கால்களில் உணர்வு வந்தது. அதன் பின்னர் அவரை நோக்கி ருமாட்டிசம் நோயாளிகள் தேனீக்கள் போன்று அவரிடம் குவிய ஆரம்பித்து விட்டனர். அவர் இலவசமாகவும் சிகிச்சை அளிக்கின்றாராம். அந்த படம் இணைத்துள்ளேன்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அகிலத்தினை படைத்து, ஆறறிவு கொண்ட மனிதனையும் படைத்து அவன் ஆராய்ச்சி செய்வதற்காக அல் குரானையும் படைத்திருப்பதால் குரானை அர்த்தம் தெறிந்து ஓதினால் அகிலமும் வெல்லலாமல்லவா?


Tuesday, 13 November 2018

முதலாம் உலக யுத்தத்தின் தாக்கமும்-அதனால் ஏற்பட்ட ஆக்கப் பூர்வ பலனும்!


முதலாம் உலக யுத்தத்தின் தாக்கமும்- பலனும்!
( டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச். டி, ஐ.பீ. எஸ்(ஓ)

11.11.2018 ஞாயிறு அன்று பாரிஸ் நகரில் உலக தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலாம் உலகப் போர் முடிவுற்றதினை நினைவுபடுத்தும் விதமாக விழா எடுத்தது அனைவருக்கும் தெரியும். உலக முதலாம் யுத்தம் 1914 முதல் 1918 வரை நடந்தது. அந்த யுத்தத்தில் ஒண்றரைக் கோடி மக்கள்- வீரர்கள் உட்பட பலரும் கொல்லப் பட்டார்கள், மற்றும் இரண்டு கோடியே முப்பது லட்சம் பேர்கள் படுங்காயம் அடைந்தார்கள். அந்த யுத்தம் 11.11 .1918 ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் வட பாரிஸ் நகரில்  பெர்டினாண்ட் ரயிலில் கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. பிரான்ஸ் கமாண்டர் பெர்டினாண்ட் ஜெர்மன் நாடு மறுபடியும் போர் தொடங்காதவாறு மிகக் கடுமையான கட்டுப் பாடு கொண்ட ஒப்பந்தம் கையெழுத்திடச் செய்தார். ஆனால் போர் நின்றதா என்றால் இல்லை. காலச்சக்கரம் சுழலும் போது அதே பிரான்ஸ் நாட்டினைப் பழிவாங்க ஜெர்மன் அதிபர் ஹிட்லர் 1940 ம் ஆண்டு அதே பெர்டினாண்ட் ரயிலில் போர் நிறுத்த ஒப்பந்தம் பிரான்ஸை செய்ய வைத்த வரலாறும்  உண்டு. இது ஒரு பக்கம் இருந்தாலும் முதலாம் உலகப் போரின் மூலம் பல முக்கியமான சமுதாய நன்மைகளும் உலகிற்கு  கிடைத்திருக்கின்றது. அவை எவை என்று நாம் காண்போம்:
1 ) உலகில் பகல் நேர வேலையினைக் குறைத்து எரிபொருளினை மிச்சமிடும் செயல் முறையினை முதல் முதலில் ஆஸ்ட்ரோ-ஹங்கேரியன், பிறகு ஜெர்மன் மற்றும் கூட்டுப் படை நாடுகள்  கடைப் பிடித்தது. 
2 )  பத்தொன்பதாம் நூற்றாண்டில் டைம் பீஸ்கள் நேரத்தினை அறிவதற்காக உபயோகப் பட்டாலும், முதல் உலகப் போரின் போதுதான் வீரர்கள் கைகளில் அணிந்து நேரம் பார்க்கும் விதமாக ரிஸ்ட் வாட்ச்கள் வந்தன. போர் முடிந்ததும் அவைகள் மெரி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பரிசுப் பொருளாகவும் அளிக்கப் பட்டது.

3 ) ரத்த வங்கி பற்றி 1600 ஆண்டே அறிந்திருந்தாலும் , அதன் செயல் பாடு முதல் உலகப் போரின் பயனாக உலகிற்கு தெரிந்தது. அப்போது மனிதனுக்கு மனிதன் ஒரே நேரத்தில் இரத்தம் மாற்றும் முறை அறிமுகப் படுத்தும் பழக்கம் ஏற்பட்டது. முதலாம் உலகப் போரில் காயம் படும் வீரர்களுக்கு இரத்தம் அளிப்பதற்காக அமெரிக்கா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி நிபுணர் ‘கேப்டன் ஆஸ்வேல்டு ராபர்ட்சன்’   1917 ம் ஆண்டு இரத்த சேமிப்பு வங்கியினை நிறுவி இன்று உலகம் முழுவதும்  பிரபலமாகியுள்ளது.
4 ) முதலாம் உலகப் போர் ஹாலிவுட் அமெரிக்காவில் அமைந்து யுத்த வீர தீர செயல்களை தத்துருவமாக படம் பிடித்துக் காட்டும் அளவிற்கு பிரபலமானது. ஆஸ்க்கார் முதல் விருதினை 'விங்ஸ்' என்ற யுத்த திரைப் படம் வென்றது ஒரு கதை.
5 ) ஒவ்வொரு நாட்டின் வெட்ப தட்ப சூழ்நிலைக் கேட்ப மேலுடைகள் ‘சார்ள்ஸ் மெஷின்டோஸ்’ என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். அதன் மூலம் கைத்துப்பாக்கி, வரைபடம், தேவையான பொருள்கள் கொண்டு செல்லும் விதமாகவும் அவைகள் அமைந்தன.
6 ) அமரிக்க ராணுவ வீரர்களின் சட்டைகளில்  பாக்கெட் இல்லாததினால் பணம், பொருள்கள் சட்டைகளில் எடுத்துச் செல்லும் அளவிற்கு முதல், முதலாக ஜிப்புகள் கொண்ட சட்டைப் பைகள் தைக்கப் பட்டன.அதன் மூலம் ஜிப்புகள் உபயோகம் உலகம் முழுவதும் பரவியது.
7 ) உலகப் போரில் பெண்கள் உதவி செய்தது மூலம் பெண்களுக்கான ஓட்டுரிமையினை அடைய மேற்கு அமெரிக்கா முழுவதும் 1917 ம் ஆண்டு அமல் படுத்தப் பட்டது. பிற்காலத்தில் அமெரிக்கா ஜனாதிபதி உட்ரா வில்சன் காலத்தில் 1920 ம் ஆண்டு அமெரிக்கா அரசியல் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி அமெரிக்கா முழுவதும் பெண்களுக்கான ஓட்டுரிமை அமல் படுத்தப் பட்டது.
8 ) யுத்தத்தில் காயம் பட்டவர்களுக்கு மருத்துவ உதவி அளித்த மகளிர் நர்ஸுகள் மாதவிடாய் காலத்தில் ‘கிம்பெர்லி கிளார்க்’ கம்பனி தயாரித்த மரத்தூள்களினால் செய்யப் பட்ட சானிட்டரி நாப்கின்களை  உபயோகித்தனர். அதுவே பிற்காலத்தில் பஞ்சுனால் தயாரிக்கப் பட்ட சானிட்டரி நாப்கின்கள் உருவாக வழிவகுத்தது. கிராமங்களில் இன்னும் பெண்கள் கிழிந்த துணிகளை நாப்கின்களாக பயன் படுத்துவதை இங்கு காணலாம்.
9 ) போரில் குண்டுக்காயங்கள் பட்டு சிதைந்த உடலில் அவைகள் தெரியாத படி  தையல் போடும் பிளாஸ்டிக் தையல் முறையினை முதன் முதலில் ஆங்கிலேய ராணுவ சர்ஜன் ஹெரால்டு கில்லிஸ் கண்டு பிடித்து 11000 வீரர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கின்னஸ் சாதனை புரிந்தார். அதுவே பிற்காலத்தில் முன்னோடியாக அமைந்தது.
11 ) ஜெர்மன் ராணுவத்தினர் மாமிச உணவு கெடாமல் இருப்பதிற்காக ‘மாயோர் ஆடினார்’ என்பவர் சோயா பவுடரை தடவிய மாமிச துண்டுகள் சிறிதாக(சாசேஜ்) வெட்டி பதப்படுத்தி பிற்காலத்தில் போர்க்களத்தில் சூடு பண்ணி சாப்பிடும் முறையினை கண்டு பிடித்து அதற்கு காப்புரிமையும் பெற்றார்.
12 ) உலக நாடுகள் சுற்றுலாவினை ஊக்குவிக்க கூட்டு  நாடுகள் சபையின் வழிகோட்டிற்கு   இணங்க 1920 முதல் ஒரே விதமான பாஸ்போர்ட் என்ற கடவு சீட்டு அந்தந்த நாட்டின் பெயருடன் வழங்க வழி வகுத்தது.

உலக யுத்தங்கள் பல அழிவுகளை ஏற்படுத்தினாலும், பற்பல நன்மைகளைகளுக்கும் முன்னோடியாக அமைந்திருந்தது என்றால் ஏற்புடையது தானே!