Saturday, 29 March 2025

இந்திய முஸ்லிம்கள் தாழ்ந்த நிலையா!

 


(டாக்டர் .பீ.முகமது அலி, .பி.எஸ்()

இந்திய முஸ்லிம்கள் மற்ற பிற்பட்ட, மற்றும் பட்டியலின சமூகத்தினரைவிட பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வாகனங்க வசதிகளில் மிகவும் பின் தங்கியுள்ளனர் அவர்கள் பரிதாபமான நிலை பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வழி வகை செய்ய பாராளுமன்ற  வேண்டும் என்று இந்திய திரு நாடு 1947ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின்பு பாராளுமன்ற உறுப்பினர் செய்யதுல் ஹக் அவர்கள் எழுப்பிய கவன ஈர்ப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து ஒய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையில் அமைக்கப் பட்டது. அந்த குழு ஆய்வு செய்து சமர்ப்பித்த அறிக்கையில் முஸ்லிம்கள் சமூகத்தில் பொருளாதாரம், கல்வியில் பின் தங்கியுள்ளார்கள் என்பது உண்மை தான் என்றும், அவர்கள் முன்னேற முக்கியமான சில பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு செய்துள்ளது. அவைகளில்: 1) 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு இலவச கல்வி வழங்குவது, 2) முஸ்லிம்கள் கூட்டமாக வாழும் இடங்களில் அரசு பள்ளிகளை உண்டாக்குவது, 3) மாணவர்கள் கல்வி பயில ஸ்காலர்ஷிப்புகள் வழங்குவது, அரபி கல்வி கற்கும் மதரஸாக்களை நவீனப் படுத்தி இஸ்லாமிய கல்வியையோடு உலக கல்வியும் போதிப்பது, 4) மைக்ரோ பைனான்ஸ் என்ற சிறு பொருள் உதவி மையங்களை நிறுவி சுய தொழில்களை ஊக்குவிப்பது  5) மாணவர், மாணவியர் தங்கி கல்வி பயில விடுதிகளை அமைப்பது  6) தொழில் கல்வி கற்க .டி , பாலிடெக்னீக் உருவாக்குவது, 6) அவைகள் சீராக செயல் படுகின்றனவா என்று ஆய்வு செய்ய equal opportunity கமிஷன் அமைப்பது, 7) வக்ப் சொத்துக்கள் ஒழுங்காக உபயோகப் படுத்தப் படுகிறதா என்று ஆய்வு செய்யவும்,8) பிரதமர் 2006ம் ஆண்டு புதிய 15 அம்ச திட்டம் செயல் படுத்தவும் பரிந்துரை செய்யப் பட்டது. ஆனால் அவைகளெல்லாம் இன்று வரை கிணற்றில் போட்ட கல்லாகத்தானே இருக்கின்றது என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் 19.3.2025 அன்று மஹாராஷ்டிரா மாநிலம் ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்திருக்கும் நாக்பூரில் கூற்றில் உண்மையாகவே உள்ளது.

            மத்திய அமைச்சர் முஸ்லிம்கள் இந்திய மற்ற மக்களை விட கல்வியில் பின் தங்கி உள்ளனர். முஸ்லிம் சமுதாயத்தில் சில உயர் கல்வி பயின்றவர்கள் மட்டும் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தேநீர் கடை, பாண்-பராக் கடை, பழைய இரும்பு வியாபாரம், வாகனங்கள் ஓட்டுவது, எடு படி வேலை பார்க்கிறார்கள் என்பது பரிதாபமாக இருக்கிறது. மேலும் கூறும்போது சமுதாயத்தில் உயர் கல்வி கற்று .பீ.எஸ்., ..எஸ், என்ஜினீயர், டாக்டர், விஞ்ஞானிகள் ஆகிய பதவிகள் பெற்றால் சமுதாயம் முன்னேறும். முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் நூறு தடவை இறை வணக்கம் செலுத்தலாம், ஆனால் கல்வி கற்கவில்லையென்றால் முன்னேற முடியுமா? அவர் உதாரணத்திற்கு முன்னாள் ஜனாதிபதி .பி.ஜே.அப்துல் கலாமை சுட்டிக் காட்டுகிறார். அப்துல் கலாம் இந்தியாவின் தெற்கே ராமேஸ்வரத்தில் ஒரு பள்ளியிவாசலில் இமாம் மகனாக பிறந்து சுய முயற்சியால் உயர் கல்வி ஸ்சோலர்ஷிப்புடன் பயின்று விஞானியாகி, அதன் பின்பு 120 கோடி இந்திய மக்களின் முதல் குடிமகனாக ஜனாதிபதி பதவியினை அடைந்தார், என்றும் கூறியுள்ளார், அவர் கூற்று உண்மை தானே என்பது அனைவருக்கும் தெரியும், அது மட்டுமல்ல பட்டியலின மக்கள் கிராமங்களில் தனிமைப் படுத்தப் பட்டும், கோவில்களில் வழிபட சம உரிமை இல்லையென்றும், வெயிலில் கால் சுடுகிறதே என்றும், முற்கள், கல்கள் குத்துதே என்றும் கால்களில் செருப்பு அணியக் கூடாது என்றும், உயர் ஜாதி மக்கள் வசிக்கும் பகுதியில் கால் மிதி வண்டியில் செல்லக் கூடாது என்றும், மேலில் துண்டுகள் போடக் கூடாது என்றும், அவர்கள் ஆடு, மாடு மேய்த்து விட்டு மாலையில் உயர் ஜாதியினர் தெரு வழியாக வரக்கூடாது என்றும், சிற்றுண்டி கடைகளில் தேனிர் அருந்த தனி குவளையும், பஞ்சாயத் தலைவர் ஆனாலும் தேசியக் கொடி ஏற்றக் கூடாது என்றும் கூறும் உயர் ஜாதியினர் அந்த பட்டியலின மக்கள் படித்து ..எஸ், .பி.எஸ் என்ற பதவிகளை அடைந்தால் அவர்களை நடு வீடு வரை அழைத்து விருந்து கொடுத்து, சம்பந்தமும் செய்து கொள்ளும் நிலையினைக் கண்கூடாக சமுதாயத்தில் காணும் போது முஸ்லிம் மக்கள் மட்டும் உயர் கல்வி பயிலாது பின் தங்கி இருக்கலாமா என்ற ஆதங்கத்தினை சற்று அழுத்தமாக சொல்லியுள்ளார். அதன் முஸ்லிம் சமுதாய மக்கள் முன் வீசப் பட்ட சவாலாக நீங்கள் கருதவில்லையா சகோதரர்களே!

            ஆனால் நிதின் கட்காரி கட்சியி ஆட்சி பீடத்தில் இருக்கும் மத்திய, மாநில அரசுகள் ஹோலி பண்டிகை விழாவின் போது நோன்பு நேரத்தில் மசூதிகளை திரையிட்டு மூடவேண்டும் என்றும், தராவி தொழுகையினை நிறுத்தி விட  வேண்டும் என்றும், முகலாய காலத்து சக்ரவர்த்தி அவுரங்ஷீப் சமாதியினை மகாராஷ்டிராவிலிருந்து அகற்ற வேண்டும் என்றும், பல மாநிலங்களில் மசூதிகள் கோவில் இருந்த இடங்கள் ஆகவே அவைகளை இடிக்க வேண்டுமென்றும், முஸ்லிம் மன்னர்கள் பெயரில் உள்ள தெருக்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என்றும் ஏன் தான் துடிக்கின்றனர் என்று தெரியவில்லை தானே உங்களுக்கு! இஸ்லாமிய மன்னர்கள் இந்த நாட்டின் செல்வங்களை இந்தியாவினை ஆண்ட பிரிட்டிஷ், பிரான்ஸ், டச், போர்ச்சுகள் நாட்டவர் போன்று இங்கிலாந்து மன்னர் கிரீடத்தில் ஆக்கிரப்பு செய்துள்ள கோஹினூர் வைரம் போன்று கொள்ளையடித்து சென்று விட்டார்களே  என்று ஏன் அவர்கள் ஆராய்ந்து பார்க்க மாட்டேன் என்பது தெரியவில்லையே. இவ்வளவுக்கும் ஐரங்க சீப் தனது கடைசி காலத்தில் தனது மகன்களுக்கு எழுதிய கடிதத்தில்:

நீங்கள் நீதி வழுவாமல் ஆட்சி செய்யுங்கள், மக்கள் நலத்தினை பிரதானமாக கொள்ளுங்கள், சமூக ஒற்றுமை வேறுபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள், என்னுடைய கல்லறை தாஜ் மஹால் போல பிரமாண்டமாக இருக்கக் கூடாது, மாறாக மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று கூறியதால் தரைக்கு சமமாக அமைந்து உள்ளது. காமாலைக் கண்ணனெனுக்கு கண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவோமோ அதேபோன்று தான் அவர்கள் முஸ்லிம்கள் ஆகவே அவர்களும் இந்திய நாட்டிற்காக தோளோடு தோல் கொடுத்து போராடியவர்கள், தங்களது சொத்துக்களை வாரி வழங்கியவர்கள், தூக்குமேடையையும், அந்தமானுக்கு நாடு கடத்தியதையும் தாங்கிக் கொண்டவர்கள் என்றும் கூட அவர்கள் சிறிதும் யோசிக்க வில்லையே அது ஏன்! முஹமது அலி ஜின்னா அவர்கள் ஒரு சிறந்த பாரிஸ்டர், அவர் பிரிட்டிஷ் ரஷ்யத்தின் பிரிவி சபையில் வாதாடி சுதந்திர போராட்ட தலைவர் பால் கங்காதர திலக் போன்ற விடுதலை இயக்க தலைவர்களை தேச துரோக வழக்கிலிருந்து விடுதலை வாங்கி கொடுத்தது காமாலைக் கண்ணன் போன்றவர்களுக்கு தெரியவில்லையே அது ஏன்?

            வடலூர் வள்ளலார் ராமலிங்கம் ஆசிரமம் அமைக்க கீரனுர் அப்துல் வஹாப் என்றும், இந்திய நேஷனல் ஆர்மி(INA} தளபதி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் கல்கத்தா வீட்டு சிறையிலிருந்து தப்பித்து பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்ததற்கு முஸ்லிம்கள் தானே என்று அவர்கள் ஏன் சிந்திக்கவில்லை. அவர்களுக்கு எல்லாம் தெரியும், தூங்கிறவனை எழுப்பலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது உங்களுக்கு தெரியாமலில்லையல்லவா?

            முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்கள் ஒரு புறம் இருக்க நமது முல்லாக்கள் நிலை வேறு விதமாக சுதந்திரத்திற்கு முன்பு இருந்தது. இந்தியாவில் உயர் ஜாதியினர் ஆங்கில கல்வி கற்றதினால் பல உயர் பதவிகள் பெற்றனர் என்று கருதிய சர் செய்யது அஹமது கான் 1875ம் ஆண்டு முகமதின் ஆங்கிலோ ஓரியண்டல் காலேஜ் என்று ஒன்றை அலகாபாத்தில் ஆரம்பித்தார். அதற்கு எதிராக சில முல்லாக்கள் பத்வா கொடுத்தது மட்டுமல்லாமல் முஸ்லிம்களை அதில் சேர வேண்டாம் என்று அரை கூவல் இட்டது ஒரு புறம். இதனை எல்லாம் மீறி அது இன்று அலிகார் முஸ்லிம் யூனிவர்சிட்டி என்று 1921ம் ஆண்டு ஒரு சட்டத்தில் நிலையிருத்தியது. அதனையும் முஸ்லிம் என்ற பெயரினை நீக்க வேண்டும் என்று சில அமைப்புகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று தோல்வியும் அடைந்துள்ளது.

            அமெரிக்கா வாஷிங்டனில் தன்னிறைவு பெற்ற (பியூ) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி இந்திய முஸ்லிம் யூனிவெர்சிட்டிஸ் பட்டியலின் படி:

1)  அலிகார் முஸ்லிம் யூனிவர்சிட்டி

2) அல்லாஹ் யூனிவர்சிட்டி கல்கத்தா

3) ஜாமியா ஹம்தத் யூனிவர்சிட்டி நியூ டெல்லி

4) சென்னை பி.எஸ்..யூனிவர்சிட்டி

5) டெல்லி ஜாமியா மிலியா யூனிவர்சிட்டி

6) தெலுங்கானா ஒஸ்மானியா யூனிவர்சிடடி

7) ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிக் யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னோலஜி

8) காஜா பண்டனவாய் யூனிவர்சிட்டி ஆப் குல்பர்கா, கர்நாடகா

என்றும் மாடர்ன் கல்வி நிலையங்கள் என்று பிகாரில்  9, ஜார்கண்ட் 5, ஹரியானா 1, கேரளா 13, மஹாராஷ்டிரா 6, தமிழ்நாடு 8, தெலுங்கானா 5, .பி.11 ஆகும். மேற்படி கல்வி நிலையங்களைத் தவிர முஸ்லிம் மாணவர்கள் உயர் கல்வி கற் காமலே இருக்கின்ற்னர். இதனில் கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை 9.5 சதவீதமாகவே உள்ளது.

            உலகிலேயே அதிக கல்வி கற்பவர்கள் யூதர்கள் 61 சதவீதமும், அடுத்தபடியாக கிருத்துவர்கள் உள்ளனர். அமெரிக்காவில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்பதில் கிருத்துவர்களை விட அதிகமாம். இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றால் மட்டுமே முன்னேற முடியும் என்று தெரிகிறதல்லவா? முஸ்லிம் கல்வி நிலையங்களில் உயர் கல்வி கற்ற மாணவர்கள் வேலை பெற  கல்வி நிலையங்களிலேயேபிளேஸ்மென்ட்’ அலுவலர், உயர் பதவிகளுக்கான கோச்சிங் செண்டர் சைதாப்பேட்டை சைதை துரைசாமி கோச்சிங் மையம் போலவும், புது டெல்லி ஜாமியா மிலியா, ஹாம்டர்ட் பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு தங்கும் இடமும், இலவச உணவும்  தன் வந்தார்கள் கொடுத்தால் முஸ்லிம் மாணவர்கள் உயர் பதவிகள் பெறலாம் அல்லவா? நான் ஒரு முஸ்லிம் கல்வி நிறுவனத்தில் செயற்குழு உறுப்பினராக 2011-2014 அந்த நிறுவனத்தில் ..எஸ்.கோச்சிங் செண்டர் நடத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து 2013ம் நிறைவேறியும் சில உறுப்பினர்களின் ஈகோவால் செயல் படுத்த முடியவில்லை என்பதினை அப்போதைய சேர்மன் என்னிடமும், அடுத்த உறுப்பினர் அதிரை அஹமத் அண்ட் கோ நிர்வாகத்தின் தாஜூடீனிடம் ஒப்புக் கொண்டார் என்றால் அவமானதாக உங்களுக்குத் தெரியவில்லையா, அவர்கள் எல்லாம் தங்கள் முன்னோரின் செல்வகொழிப்பில் வாழ்கிறவர்கள், சாதாரண பிற்பட்ட, ஆர்வமுள்ள முஸ்லிம்கள் முன்னேறக் கூடாது என்று நினைக்கும் போது நமது சமுதாயம் ஏன் இன்னமும் முன்னேறமுடியவில்லை என்று உங்களுக்கு தெரியவில்லையா, இந்த செயல் சர் அஹமத் கான் அலிகாரில் ஒரிஎண்டல் ஆங்கிலோ கல்வி ஆரம்பிக்கும்போது முல்லாக்கள் பத்வா கொடுத்தது போலல்லவா?

            கடந்த 4 வருடங்களில் முஸ்லிம்கள் யு.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் புள்ளி விபரங்கள் பார்த்தால் தெரியும்:

2018 ம் ஆண்டு நடந்த தேர்வில் 990பேர்கள் வெற்றி பெற்றனர்,   ஆண்டு தேர்வானவர்கள் 990 அதில் முஸ்லிம்கள் 2828ம் , 2019ம் ஆண்டு தேர்வாளர்கள் 823பேர்கள், அதில் முஸ்லிம்கள் 42, 2020ம் ஆண்டு தேர்வானவர் 761, அதில் முஸ்லிம்கள் 31, 2021ம் ஆண்டு தேர்வானவர் 685, அதில் முஸ்லிம் 27பேர்கள் தானாம்.  தற்போதைய முஸ்லிம் ஜனத்தொகை 20 சதவீதமாகும், அதனை ஒப்பிட்டு பார்க்கும்போது எந்தளவிற்கு முஸ்லிம்கள் குறைவு என்று உங்களுக்கு தெரியவில்லையா? ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கவலை தெரிந்திருப்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். முஸ்லிம் அமைப்புகள் வேற்றுமை மறந்து, பல்வேறு காட்சிகளில் கொடி பிடிப்பதினை விட்டுவிட்டு, இஃப்த்தார் நோன்புக்கஞ்சி திருவிழாக்கள் நடத்துவதினை விட்டு விட்டு  ஆக்கப் பூர்வமான நடவடிக்கையில்  ஈடுபட வேண்டும் என்று இப்போதாவது சிந்திப்போமா சகோதரர்களே!