(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,(ஐ.பீ.எஸ்(ஓ)
இந்தியாவின் வடக்கே உள்ள காஷ்மீர் இயற்கையழகு மிகுந்த இடமாகும். பள்ளத்தாக்குகளும், அதனிடையே ஓடும் சிறு, சிறு ஆறுகளும், மேகம் சூழ்ந்த பனி மலைகளும், வானுயர வளர்ந்த ஊசி இலைக் காடுகளும், மனதிற்கும், மருத்துவத்திற்கும் பயன் தரும், குங்கும பூக்களும், துலிப்
பூக்களும், நாவிற்கு நீர் வடிய சுவை தரக்கூடிய ஆப்பிள் பழங்களும், இன்னும் பல வகை பழவகைகளும் மனதினைக் கொள்ளை கொள்ளும். ஏரிகளில் படகுகளில் சவாரி செல்லும் போது துள்ளிக் குதிக்கும் சிறு, சிறு மீன்களும், நதியின் கரைகளில் உள்ள படகு வீடுகளும் ரசிக்கத்தக்கதாகும். கைகளால் நெய்யப் பட்ட கம்பளி ஆடைகள், துண்டுகள், பரிசுப் பொருளாக கொடுக்கக் கூடிய விதவிதமான கைவினைப் பொருட்களுக்கும் பெயர் போன இடமாகும். மக்கா, மதினா புனித இடங்களில் போர்த்தக்கூடிய விரிப்புகளும் இங்கே நேர்த்தியாக நெய்யப் பட்டதுதான். நாம் காஷ்மீர் சொல்லாவிட்டாலும், தமிழ் சினிமா 'இதய வீணையில்' போன்ற படங்களில் வருகின்ற 'காஸ்மீர் நல்ல அழகு காஷ்மீர்'என்ற பாடலுக்கு அங்குள்ள இயற்கை அழகினை ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என்ற வசதியுள்ளவர்களுக்குத் தோன்றும்.
இந்திய துணைக் கண்டம் ஆங்கிலேய அரசிடமிருந்து 15.8.1047ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அதற்கு முந்திய நாள்14.8.1947 நடு இரவில் இந்திய அரசியல் வாதிகள் சதுரங்க விளையாட்டால் பாகிஸ்தான்
தனி நாடாக கொடி ஏற்றியது. ஆனால் மன்னராட்சியில் இருந்த 2,22,870 கிலோ
மீட்டர் பரப்பளவு உள்ள ஜம்மு, காஸ்மீர் மட்டும் மன்னராட்சியில் இருந்தது. இது ஐரோப்பிய நாடுகளான டென்மார்க்,நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க் ஆகியவற்றினை விட பெரிய நிலப் பரப்பாகும். அதன் கிழக்குப் பகுதியில் திபெத்தும், வடக்கே சீனாவின் தர்கிஸ்தான் அல்லது சின்சினாங், மேற்கே ஆப்கானிஸ்தான், தெற்குப் பகுதியில் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசமும், பஞ்சாப் மாநிலங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. அப்போதைய மகாராஜா ஹரி சிங் அவர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு 12.8.1947ல் தந்திகளில், தனக்கு எந்த நாட்டுடன் இணைவது சம்பந்தமாக அவகாசம் கொடுக்க வேண்டுமென்றார். அதனைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஆனால் இந்தியாவுடன் 26,10.1947 வரை எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.
இதற்கிடையில் பாகிஸ்தான் பிரிந்த நாளுக்கு பின்பிலிருந்து ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலத்தில் மதக் கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்ததால் இருபுறமும் மக்கள் சாரை , சாரையாக இடம் பெயர்ந்தனர். அதில் பெரும்பாலோர் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் குடியேறினர். அங்கே வந்த பிறகும் கலவரம் ஓயவில்லை. அப்போது 29.8.1047ந்தேதி ராஜா யாகூப் கான் அனுப்பிய டெலிகிராமில் பஞ்சாப் மாநில முஸ்லிம்கள் தாக்கப் படுவதினை நிற்பாட்டவிட்டால் காஷ்மீரில் படையுடன் நுழைய வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து காஷ்மீர் ராஜா படைத்தளபதி மேஜர் ஜெனெரல் ஸ்காட்டுடன் ஆலோசனை
செய்தார். அப்போது ஸ்காட் பாகிஸ்தானின் 400 படை வீரர்கள் ஜீலம் நதி வழியாக காத்துவா பகுதியில் நுழைந்து விட்டதான தகவலைச் சொன்னார். அந்த எச்சரிக்கையினைத் தொடர்ந்து
24.10.1947ம் தேதி மஹாராஜா ஹரி சிங் இந்தியாவிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பியிருந்தார். அதனைத் தொடர்ந்து அப்போதைய காஷ்மீர் மக்களின் செல்வாக்கு மக்களின் தலைவராக இருந்த சேக் அப்துல்லாவிடம் ஆலோசனை செய்யப் பட்டது. அதனைத் தொடர்ந்து ஜம்முவில் இந்திய பாதுகாப்பு செயலர் வி.பி.மேனன் மற்றும் 'மஹாராஜா ஹரி சிங்' ஆகியோரிடையே செய்துகொண்ட உடன் படிக்கைப் படி 25.10.1947 அன்று இந்தியாவுடன் இனைந்து கொள்ள ஒத்துக்கொள்ளப் பட்டது. அப்போதிலிருந்தது ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானது.
மேற்குறிப்பிட்ட ஒப்பந்தம் தான் இந்தியா--பாகிஸ்தான் இடையே தீராத பகையானது என்றால் ஆச்சரியமில்லை. இதனை ஏற்றுக் கொள்ளாத பாகிஸ்தான் 27.10.1947ந்தேதி பாராமுல்லா பகுதியினை நோக்கி படையெடுத்தது. அதற்கு இந்திய டோக்ரா படைகள் பதிலடி கொடுத்தன. அதில் இந்திய தளபதி லெப்பிடினென்ட் ராய்
முதல் பலியானார். அவருக்கு முதன் முதல் 'மஹாவீர் சக்ரா' விருது வழங்கப் பட்டது. அதனைத்
தொடர்ந்து பாடகம், ஜான்சர், நான்சாரா, டித்தாவால், பஞ்ச, சாம்ப பகுதியில் தொடர்ந்தது.
இந்தியா-பாகிஸ்தான் தகராறு கண்டது. அதன் பிரதிபலிப்பாக இந்தியா ஜம்மு, லடாக், சியாச்சின்
பனிப்பிரதேசம், காஷ்மீர் உள்பட 75 சதவீத மக்கள் கொண்ட பகுதிகள் இந்தியா வசமானது.
30 சதவீத நிலப் பரப்பு கொண்ட ஆஜாத் காஷ்மீர் ஆனது. அது கில்கிறிஸ்ட் பாலிஸ்தான் பாகிஸ்தான்
ஆக்கிரமித்தது.
ஐ.நா.சபை
இதற்கு மேல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடக்காமல் தடுப்பதிற்காக பேச்சு
வார்த்தை நடத்தி 1962ம் ஆண்டு எல்லைக்கோட்டினை (Line of Control) என்ற லக்ஷன் ரேகையினை
வரைவரையறுத்தது. இந்த சந்தடியில் சீனா 'லடாக்' தங்களுக்குத்தான் சொந்தம் என்று போர்
தொடுத்தது. அதனைத் தொடர்ந்து 1965ம் ஆண்டு பாகிஸ்தானும் போர் தொடுத்தது. அதன் தொடர்ச்சியாக
பங்களாதேஸ் முக்திபக்னி என்ற விடுதலைப் படை கிளர்ச்சி செய்ய 1971ம் ஆண்டு இந்தியா உதவியுடன்
தனி நாடானது. பாகிஸ்தானுக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆங்காங்கே சிறு சிறு சில்மிஷம்
நடந்தது. அதனை முடிவிற்குக் கொண்டு வர அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் புட்டோவும், இந்தியாவின்
இரும்பு பெண்மணி என்று அழைக்கப் பட்ட இந்திரா காந்தியும் 2.6.1972 ந்தேதியில் ரஸ்யாவின்
நல்லெண்ண குழு முன் 'சிம்லா' உடன்படிக்கை செய்து கொண்டது. இதனையடுத்து இந்திய படைகளால்
பங்களாதேஷில் பிடிக்கப் பட்ட 93,000/வீரர்கள் விடுதலை செய்யப் பட்டனர். இதன் படி இரண்டு
நாடுகளும் எல்லைதாண்டி தாக்குதல் ஈடுபடக்கூடாது என்ற முடிவு எடுக்கப் பட்டது.
பெரும்பாலான
காஷ்மீர் மக்கள் தங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்றும், ஐ.நா.சபையில் ஒத்துக் கொள்ளப்
பட்ட எந்த அரசுடன் சேருவது என்ற முடிவிற்கு
ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றும் விரும்புகின்றனர். ஆனால் காஷ்மீர் பகுதி 2019 ஆண்டு
அக்டோபர் 31ந்தேதி சீரமைக்கப் சட்டம் படி, லடாக் லே பகுதி, மற்றும் கார்கில் பகுதிகள் தனி யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீர்
மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப் பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு
சட்டம் 370ம் நீக்கப் பட்டது.
சட்டம்
370 நீக்கப் பட்டது மூலம் காஷ்மீரில் வெளி ஆட்கள் நிலம் வாங்கக் கூடாது என்ற நிலை மாறி
வெளி ஆட்கள் யாரும் நிலம் வாங்கலாம் என்று அறிவிக்கப் பட்டது.
2) பெரிய தொழிற்சாலைகள் அமைக்க வசதி செய்து, இளைஞர்களுக்கு
வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியது. அங்குள்ள அழகு பூக்கள் மற்றும் உணவு ஏற்றுமதி செய்யும்
தொழிற்சாலை தொடங்க வழிவகுத்து தந்தது.
3) இளைஞர்கள் கைத்தொழில் தொடங்கி ஏற்றுமதி செய்யும் ஏற்பாடு
செய்யப் பட்டது. நான் சிம்லாவிற்கு 1998ம் ஆண்டு செல்லும்போது அங்கே காஸ்மீர் இளைஞர்கள்,,ரயில்
நிலையத்தில் போர்ட்டர்களாகவும், மார்க்கட்டில் மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் காணப்
பட்டார்கள் அதற்கு பதிலாக தங்கள் மாநிலத்திலேயே வர இருக்கும் தொழிற்சாலைகளில் வேளையில்
சேரவும் புனர் வாழ்வு ஏற்படுத்தியது.
4) உலக சுற்றுலா பயணிகளைக் கவரவும், சினிமா எடுக்கவும்
வழி வகுத்தது.
5) காஸ்மீரில் எந்த பல்கலைக்கழகமும் இல்லாத நிலையில் எந்த
பெரிய மருத்தவ வசதியும் இல்லை என்ற நிலை இனி மாறும்.
6) காஸ்மீரில்
எந்த தனியார் பல்கலைக் கழகங்களும் இல்லை என்ற நிலை மாறி, இளைஞர்கள் உள்ளூரிலேயே உயர்
கல்வி கட்க முடியும்.
6) வசதியுள்ளவர்கள் பரூக் அப்துல்லா போன்று மட்டும் வெளிநாடுகளில் கல்வி கற்று வெளி நாட்டுப் பொன்னான
மோலி என்ற பெண்மணியை திருமணம் செய்து வாழ முடியும் என்ற நிலை மாறி இளைஞர்கள் உள்ளூரிலேயே
உயர் கல்வி கற்க முடியும்.
7) காஸ்மீர் பெண்கள் வெளியில் திருமணம் செய்தால் அவர்களுக்கு
சொத்துரிமை இல்லை என்ற குறை நீக்கப் படும்.
8) குடும்ப பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பட்சத்தில்
இந்திய தண்டனை சட்டம் படி நடவடிக்கை எடுக்கலாம்.
9) 14வயதுக்குட்பட்ட சிறார்கள் கட்டாய கல்வி இல்லை என்ற
நிலை மாறி, அவர்கள் கல்வி கட்க உதவியது. அவர்களை வேளையில் அமர்த்துவது இந்திய சட்டத்தின்
படி தண்டனையாக அறிவிக்கப் பட்டது.
10) குழந்தை திருமண சட்டம், குழந்தைகள் நியாய(Child
marriage Act, juvenile justice Act)படி நடவடிக்கை எடுக்கலாம்.
11) சமூக பிற்படுத்தப் பட்ட பட்டியலினமக்கள் மக்கள் 12
சதவீதம் இருந்தாலும் அவர்களுக்கு என்ற பாராளுமன்ற, சட்டமன்ற தனி ஒதுக்கீடு இல்லை என்ற
நிலை மாறும்.
12) பத்து ஆண்டுகளில் 22.4.2025ம் ஆண்டுகளில் பகல்காம்
போன்ற தாக்குதல் நடந்தாலும், அங்குள்ள வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும் டூரிஸ்ட்
வருகையினை விரும்புகின்றனர். அமைதியே விரும்புகின்றனர். சில தவறான பாதைகளால் தடம், பிரண்டவர் செய்த தாக்குதலால் அப்பிராணி சுற்றுலா
பயணிகளும், அவர்களுக்கு போனி என்ற குதிரை சவாரி ஏற்றிய முஸ்லிம் இளைஞரும் சேர்த்து
28 பேர்கள் கொல்லப் பட்டது கண்டிக்கத்தக்கும் நடவடிக்கை என்பதினை மறுக்க முடியாது. இஸ்லாத்தில் நிரபராதிகள் கொல்லப் பட அனுமதிக்க
வில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தும் இதுபோன்ற பாதக செயலை யாரும் மறுக்க
முடியாது.
அதனைத்
தொடர்ந்து இரு நாடுகளும் தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானுக்கு ஜீலம் நதி முடக்கப் பட்டது.
எங்கே அணு ஆய்த யுத்தம் வந்து விடுமோ என்று கவலையில் இருக்கும்போது, நல்ல வேலையாக சிலர்
மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தப் பட்டது. அதனையும் சிலர் குறை கூறி காரணம் கண்டு
பிடிப்பது, சிறு பிள்ளைத் தனமானது. ஏனென்றால் இரண்டு நாடுகளுமே வளரும் நாடுகளே, வல்லரசு
நாடுகளல்ல.
இந்தியாவின் உள் நாட்டு உற்பத்தி(GDP) 6.5.சதவீதமாகும், பாகிஸ்தான் GDP 2.38ஆசதவீதமாகும், இந்திய வறுமைக்கோட்டிற்கு
கீழ் வாழும் மக்கள் 28 சதவீதமாகும், பாகிஸ்தானில் 74 சதவீதமாகும், இந்தியாவில் படிப்பறிவு
இல்லாதவர்கள் 25 சதவீதமாகும், பாகிஸ்தானில் 62 சதவீதமாகும். ஆகவே இந்த நிலையில் இரு
நாடுகளுக்கும் போரில் ஈடுபடுவது நாட்டின் வளர்ச்சியை
தடுக்கும். ஆகவே நல்ல உள்ளம் உள்ளவர்கள் இனிமேலும் ஒரு போர் வரக்கூடாது, ஏனென்றால்
'this is the peace time".
இந்திய
துணைக் கண்டத்தின் கலாச்சாரத்தின் படி அடுத்தவர் பசியோடு இருக்கக் கூடாது. தவித்த நாவிற்கு
தண்ணீர்.கொடுக்க வேண்டும் என்பதாகும்.. இந்த கொள்கையினை அறிந்து வாழ்ந்தால் இரண்டு
நாடுகளுக்குமே நல்லதாகும் என்போமா!