Sunday 12 May, 2013

'தாயின் காலடியில் சுவர்க்கம் உள்ளது'. தாயார் தின நினைவுக் கட்டுரை!





13.5.2013 அன்று தாய்மார் நாள் அனுசரிக்கப் படுகிறது. ஏனன்றால் கணவனின் அல்லது தன்னைக் கவர்ந்தவனின் நினைவாக பிள்ளையினைத் தன் வயிற்றில் தாங்கி, தான் உண்ணும் உணவுகளை அதற்கு தொப்புழ்க் கொடி மூலம் பகிர்ந்துக் கொடுத்து,வயிற்றில் வளரும் பிள்ளை செய்யும் சேட்டைகளை இன்ப சேட்டையாக தாங்கிக் கொண்டு, பிள்ளை பெறும்போது தான் சில வேளையில் இறக்க நேரிடும் என்ற பயம் இருந்தாலும் பிள்ளையினைப் பெற்றெடுத்து, பெற்றெடுத்த பிள்ளையினை தன உதிரத்தில் பாலூட்டி,தாலாட்டி, சீராட்டி  வளர்க்கும் மகிமையினைக் கொண்ட தாயினை கௌரவிக்க தாய்மார்கள் நாள் உலகெங்கும் கொண்டாடப் படுகிறது. ஒரு தாய் எப்போது முதல் தடவையாக சிரிக்கிறாள் என்றால் தனது பிரசவத்தின் போது குழந்தை அழும் சத்தத்தினைக் கேட்டு மகிழ்ச்சியில் சிரிப்பாளாம். 'ஆகவே தான் தாயில் சிறந்த கோவிலுமில்லை' என்ற தமிழ் பழமொழியும் உள்ளது.
1912 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்தில் அண்ணா ஜார்வின் என்ற பெண் தன தாய் நினைவாக 1908ஆம் ஆண்டு ஒரு விழா எடுத்தாள். 1912 ஆம் ஆண்டு ஜனாதிபதி உட்ரோ வில்சன் தாய்மார்களின் நினைவு நாளினை ஒரு விடுமுறை நாளாக அறிவித்தார். அதன் பின்பு உலகில் பல்வேறு இடங்களில் தன் தாய்மார்களுக்கும், பாட்டிமார்களுக்கும் விழா எடுத்தும், பரிசுப் பொருள் வழங்கியும் பெருமைப் படுத்தப் படுகிறார்கள். நமது நாட்டில் சரஸ்வதி பூஜை நேரத்தில் மாதா பூஜையும் நடத்துகிறோம்.
'தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கின்றது என்று சொல்கிறது திருக்குர்ஆன்'. ஆனால் எத்தனையோ மனிதர்கள் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தாயினையே தனக்கு ஒரு மனைவிக் கிடைத்ததும் எட்டி உதைக்கும் அகங்கார நிலையினை இன்றைய நவீன உலகத்திலேயே கண்கூடாகக் காணலாம்.
அதுபோன்ற ஒரு சம்பவம் எகிப்து நாட்டிலே நடந்துள்ளது. அதாவது ஒரு விதவைத் தாய் தன் மகனை நன்றாகப் படிக்க வைத்து, டாக்டராக ஆக்கி அழகு பார்த்தாள். அவனுக்கு அழகான ஒரு துணைவியையும் தேடி திருமணம் செய்து வைத்தாள். அதன் பின்பு அவன் தன் தாயினை அவன் உதாசீனப் படுத்த ஆரம்பித்தான். அதனைக் கேள்விப் பட்ட முஸ்தபா அமீன் என்ற பத்திரிக்கையாளர், 1943 ஆம் ஆண்டு 'சிரிக்கும் அமெரிக்கா' என்ற(அமெரிக்காவினைக் காப்பி அடிக்கும் கலாசாரம்) ஒரு நூலினை எழுதினார். அதன் எழுச்சியின் பயனாக 1956ஆம் ஆண்டு ஜனாதிபதி கமால் அப்துல் நாசர் 'தாயார் தினத்தினை' கொண்டாடும் நாளாக அறிவித்தார். பெற்ற தாயினை, 'கோபத்தில் கூட, "சீ" என்று சொல்லகூடாது என்று இஸ்லாம் சொல்கிறது.
பெற்ற தாய், தந்தையினை சொத்துக்களை நயவஞ்சகமாக அபகரித்து விட்டு, அவர்களை நடுத்தெருவில் அபலைகளாகவும், முதியோர் இல்லத்திலும் தள்ளி விடும் அநாகரிக காலத்தில் தாயார்மார்களுக்கு கௌரவப் படுத்தும் விதமாக தாயார் தினம் கொண்டாடப் படுகிறது பாராட்டக் கூடிய ஒன்றேயாகும்.
ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் வாழும் கென்னெத் ஹைடன் என்ற பெண்மணி, கைவிடப் பட்ட தாய்மார்கள், தனியாக வாழும் பெண்மணிகளுக்கு உதவ சிறார்களைத் திரட்டி நிதி வசூல் செய்து அவர்களைக் காப்பாற்ற ஒரு நிறுவனத்தினை நிறுவினார். இலை உதிர் காலத்தில் அங்கே பூக்கும் 'கிரிச்தோமம்' என்ற பூக்களினை தங்கள் சட்டையில் குத்தி தாய்மார்களுக்கு அஞ்சலி செய்வார்கள்.

பிரான்ஸ் நாட்டில் 1986 முதல் 1904ஆம் ஆண்டு வரை குழந்தைப் பிறப்பது குறைவாக இருந்ததால் பெண்கள் அதிகக் குழந்தைகள் பெறவேண்டும் என்று தலா ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்த பத்துத் தாய்மார்களுக்கு 1906ஆம் ஆண்டு, 'அதிக குழந்தை பெற்ற தாய்மார்கள்' என்ற பட்டம் சூட்டி கௌரவப் படுத்தப் பட்டார்களாம்.

அமெரிக்காவில் கிளீவ்லாந்து மாநிலத்தில் மூன்று பள்ளிச் சிறார்களை 2002 முதல் 2004 ஆம் ஆண்டுகளில் கடத்தி, கட்டி வைத்து, சித்திரவதை செய்து சிதைத்த காமக் கொடியவனிடமிருந்து 8.5.2013 அன்று மீட்கப் பட்ட நாளினை அந்தக் குழந்தைகளின் தாயார்கள் தங்கள் நாட்களாக கொண்டாடுகிறார்களாம். அதேபோன்று நமது நாட்டில் பாலியல் கொடுமையில் சிதைந்தது பெரும்பாலும் சிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது. அவர்களின் தாய்மார்கள் வேதனையிலிருந்து விடுபட இந்த தாய்மார்களின் நாளினை அவர்களுக்கு அர்ப்பணிப்பது  சாலச் சிறந்ததாகும். 
இந்த ஆண்டு இந்திய பெண்களுக்கு முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். என்னவென்றால், பெண்களுக்கு சொத்துரிமை சட்டமாக்கப் பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இப்போதெல்லாம் தனியாக இருக்கும் பெண்களைக் குறிவைத்து கொடியவர்கள் தாக்கி ஒன்று கொலை செய்வது அல்லது அவர்களைத் தாக்கி ஆபரணங்களை அபகரிப்பது போன்ற சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. ஆகவே தனியாக இருக்கும் பெண்கள் பகுதியில் வாழும் ஆண், பெண், இளைஞர்கள் அத்தனை பேர்களும் அவர்களைக் காக்கும் கேடையமாக வாழ்ந்தால் நாடு செழிப்போடு இருக்கும் என்றால் மிகையாகாது  

ஒரு குழந்தை நல்லவனாகவோ அல்லது நல்லவளாகவோ வாழ்ந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் தாயைப் போல சேலை என்று சொல்வார்கள். அந்தப் பெருமை தாயினைச் சேரும்  அதே பெருமையினை இந்த நாளில் நமது தாய்மார்களுக்குச் சேர்ப்போமாக.


No comments:

Post a Comment