Wednesday, 20 September, 2023

சனாதன தர்மமும்-நிழல் யுத்தமும்!

சனாதன தர்மமும்-நிழல் யுத்தமும்!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

சனாதன தர்மம் பற்றி பல்வேறு கருத்து பரிமாற்றங்களும், கடுமையான வார்த்தைகளும் சமீப காலங்களில் எண்ணையில் போட்ட சோளப் பொறி போல பொரிந்து கொண்டுள்ளது. இது எப்படி இருக்கின்றது என்றால் நான்கு பேர்கள் சேர்ந்து பொழுது போகாமல் வெட்டி பேச்சு பேசுவது போன்றுள்ளது  சிலர் ஒன்றும் கிடைக்காத நேரத்தில் அவலை மெல்லுவது போல இருக்கின்றது.

சனாதன தர்மம் பற்றி வரலாற்று ஆய்வாளர்களும், ஆன்மீக சான்றோரும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். சனாதன தர்மம் என்பது சமஸ்க்ரித சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான தத்துவ ஞானம்,  நிலையான நம்பிக்கை, அசைக்க முடியா நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என்ற பொருளாகும். சனாதன தர்மமத்தினை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சனாதன தர்மம், மற்றொன்று வர்ணாஸ்வர தர்மம். இவற்றில் சனாதன தர்மம் என்பது பொதுவான ஆன்மீக கடமையாகும். வர்ணாஸ்ரம தர்மம் என்பது காலம், ஒருவரின் வாழ்க்கை சூழல் ஆகியவற்றை குறிக்கும். எல்லா உயிரினத்திற்கும் அன்பும், பாசமும், பரிவும், செலுத்தி பராமரிக்கப்படுவது போன்ற நிலையான செயல் முறையாகும்  அதில் காலப் போக்கில் தடம் மாறிப் போனதால் சச்சரவிற்கு வழி வகுத்துள்ளது.

            சனாதனம் என்பது மகாபாரதத்திலும், திருக்குறளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆன்மீக வாதிகள் சொல்லும்போது சனாதன தர்மம் என்பது  பழமையான பண்பாடு, பெற்றோர்களை, பெரியோர்களை எப்படி மதித்து நடத்த வேண்டும் என்ற வழிமுறையாகும். ஆனால் பிற்காலத்தில் சாதி, மத, இன என்ற வார்த்தைகளால் செயல்படுத்த முயலும் பொது முரண்பாடு  ஏற்படுகின்றது. இது சாமன்ய தர்மம், வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம், ஸ்திரி தர்மம்,  வியாஸ்தி தர்மம், ராஷ்ட்ரிய தர்மம் போன்ற பத்து வகையாகும். இவையெல்லாம் தனிமனிதன் முதல் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டிகளாகும்.

            மேலும் சனாதன தர்மம் என்பது ஆன்மா மற்றும் மறுபிறவி ஆகியவற்றை நம்பும் நித்ய மதங்களாகும். இவை ஹிந்து மதத்தினை அனுசரித்து வருகிறது என்றாலும் ஜெயின், பவுத்த மதத்தினராலும் பயன் படுத்தப் படும் வார்தைகளாகும். 19ம் நூற்றாண்டில் தான் சனாதன தர்மம் மற்ற மதங்களிருந்து வேறுபட்டு ஹிந்து மதத்தினை குறிக்கும் வார்த்தையாக சொல்லப் படுகிறது. இந்த மண்ணுலகில் கண்டு பிடிக்க வேண்டிய அதிசயங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு நாம் வேற்றுலக கிரக வாசிகள் இருப்பதாக எண்ணுகிறோம். ஆனால் பார்க்கவில்லை. சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் நடந்த ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் இரு உருவங்களின் படிவங்கள் காட்சிக்காக வைக்கப் பட்டன. அவை வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கியதிற்கு ஆதாரமாக காட்டப் பட்டது. இது போன்ற இன்னும் கண்டுபிடிக்க முடியாத அதிசயங்கள் இருக்கும் போதும் சந்திரனின் தெற்குப் பகுதியான இருண்ட பகுதியை வெற்றிகொண்ட சந்திராயன் என்ற விண்கலமும், சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பப் பட்ட விண்வெளி ஓடம் வெற்றிகரமான அனுப்பப் பட்ட நிலையில்  ஏன் ஒரே மனித இனத்திற்குள் அத்தனை  வேறுபாடுகள் என்று காணும்போது சனாதன தர்மம் பற்றிய கூச்சலே மேலோங்கியுள்ளது என்றால் ஆச்சரியமில்லையல்லவா. மனிதன் எல்லாம் பூமியில் உள்ள மண்ணிலிருந்து முளைத்த பொருட்களை தான் உணவாக உண்ணுகிறோம், ஆகவே அவனுக்குள்ளே ஏன் வேறுபாடுகள். மனிதன் என்ன தான் முயன்றாலும் ஒரு மரமாகவோ, நாயாகவோ, பூனையாகவோ, யானையாகவோ அல்லது புலியாகவோ மாறமுடியுமா? ஆகவே அவற்றையெல்லாம் நிர்வாகிக்கும் ஒரு விதி முறையுள்ளது. ஜனநாயக இந்தியாவில் அரசியல் சட்ட வடிவமைப்பு ஒரு தர்மமாகும். சட்டங்களின் படியே சட்டசபை, பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை செயல் படுகிறது. அவை ஒன்றுக்கொன்று எல்லை மீறாது பணியாற்றுவதே தர்மமாகும்.

            இப்போது இந்தியாவில் எவ்வாறு ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்பட்டது என்று பார்க்கலாம். இந்தியாவில் சிந்து நதிக்கரை ஓரம் வளமான பகுதிநோக்கி பலவிதமான நாடோடி ஆரியர்கள்  தங்கள் கால் கடைகளுக்கு தீவனமும், தங்கள் உயிர் வாழ செழுமையான பகுதியான இங்கே குடி புகுந்தனர். அவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவை நோக்கியே குறிவைத்தனர். அங்கு வாழ்ந்த மக்களை தெற்கு நோக்கி விரட்டினர். இதனை பழமை இந்திய வரலாற்று(Ancient Indian History) ஆசிரியர்கள் 'சிந்து வெளி நாகரீகம்' என்ற  தலைப்பில் எடுத்துக் கூறுகின்றனர்.பல்வேறு நாடோடி இனத்தவரை இணைக்கும் தர்மம் என்ற கோட்பாடு அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் வந்த பின்பு தான் ஜாதி, மத இன வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். அவர்களின் கோட்பாடுப்படி வர்ணம் என்ற வேறுபாடு பிரம்மாவின் உடலிலிருந்து தோன்றியதாக கூறப் படுகிறது. பிராமணர்கள் பிரம்மாவின் தொப்புலிருந்தும், சத்ரியன் கைகளிருந்தும், வைஷ்ணவர் தொடையிலிருந்தும், ஷத்ரியர்கள் கால்களிருந்தும் படைக்கப் பட்டதாக நம்பிக்கையுள்ளது. அதனையே தான் மநுஸ்மிருதி என்ற இந்து மத கோட்பாடு கூறுகிறது.(manu codu 1:31)

 

 

            சூத்திரர்கள் பிராமணர்களுக்கு அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு கூலி எதுவுமில்லையாம்.ஏனென்றால் அவர்கள் பிராமணர்களுக்கு வேலை செய்வதிற்காகவே பிறந்திருக்கிறார்கள் என்று மனு v iii -50,56,59 கூறுகிறது.சூத்திர பெண்களை ஒரு காட்சிப் பொருளாகவே கருதினார்கள்.

            பெரியார் இந்திய தேசிய காங்கிரசில் 1919ல் சேர்ந்து சுதந்திரப் போராட்ட வீரரானார். ஆனால் 1925ம் ஆண்டு அதனை விட்டு விலகினார். ஏன் தெரியுமா? காங்கிரசில் பிராமண ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று. இருந்தாலும் ராஜாஜி போன்றவர்களுடன் நட்புடன் கடைசி வரை இருந்தார். அவர் இறந்தபோது கூட சுடுகாடு வரை சென்றவர் பெரியார். அதன் பின்பு சுய மரியாதை இயக்கத்தினை ஆரம்பித்தார். அதன் முக்கிய நோக்கமே சமூகத்தில் உள்ள பிராமணர் ஆதிக்கத்தினை எதிர்த்து, பெண்களுக்கு சமூகத்தில் சம அடித்தளமாக்கவே சுய மரியாதை இயக்கமாகும்  தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது. பிராமணர்கள் சம்ஸ்கிருத மொழியை தூக்கிப் பிடித்தபோது, பெரியார் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்காக குரல் கொடுத்தார். அதன் பின்னணிதான் பிற்காலத்தில் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது.

            தமிழக இந்து மகாசபை ஊடகங்களின் விவாதங்களில் பங்கேற்கும் ராம சுப்பிரமணியம் சமீபத்தில் அவர் பிராம்மணக் குடும்பத்தில் தனது தாயார், அக்காள் கணவர்களை இழந்த போது எப்படி சமூகத்தால் ஒதுக்கப் பட்டு மூலையில் அமர்த்தப் பட்டார்கள் என்பதனினை வேதனையுடன் தொலைக் காட்சியில் கூறியது அனைவரும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வெள்ளை சேலைத்தவிர எதுவும் அணியக்கூடாது, கலர் கண்ணாடி வளையல் அணியக்கூடாது போன்றவைகளும் அடங்கும். அனைத்துப் பெண்களும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடாது என்றும், பெண்களுக்கு சமையல் தவிர வேறெதுவும் தெரியக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. குழந்தை திருமணம் ஆதரிக்கப் பட்டது. மகாத்மா காந்தி 13 வயது கஸ்தூரிபாவினையும், ராஜாஜி ஆர்மேலு என்ற மங்கம்மாவை 10 வயதிலும் திருமணம் செய்தார்கள் என்பது அந்தக் காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக இருந்ததினை காட்டவில்லையா? கணவர் இறந்து விட்டால் மறுமணம் கூடாது என்றும் மறுக்கப் பட்டது. இப்படி குழந்தை திருமணம் செய்த தேசிய தலைவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

            நாமெல்லாம் ஆங்கிலேயர்களை ஆதிக்கக்காரர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம் உண்மைதான். ஆனால் இந்திய புரையோடிய சமூக வேறுபாடுகளை தூக்கியெறிந்தனர் என்று தினமணி பத்திரிக்கையில் 2007ம் ஆண்டு வந்த கட்டுரையில் கோடிட்டு காட்டப் பட்டுள்ளது. ஆங்கிலேயர் 1773ம் ஆண்டு சனாதன சட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தனர்.. சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ளலாம் என்பதினை மாற்றி 1795ம் ஆண்டு அனைவரும் சொத்து வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தினர். பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் கொல்லும் பாதக செயலை 1804ம் ஆண்டு கொண்டு வந்தனர். கொத்தடிமையினை அறவே ஒழித்துக் கட்டும் சட்டம் 1813ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிராமணப் பெண்ணைக் கெடுத்த சூத்திரன் கொல்லப் பட வேண்டும் என்ற மனுசாஸ்த்ர சட்டம் vii 374, 375 நீக்கப் பட்டது. ஒரு பிராமணன் சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம், அதன் விளைவாக குழந்தை பிறந்தால் அது பிணமாகவே கருத வேண்டும் என்ற பிராமண மனுஷர சட்டம்(ix 178) நீக்கப்பட்டது. பிராமணன் ஒரு குற்றம் செய்தால் அது குற்றமாக கருதக் கூடாது, அதற்கு எந்த தண்டனையுமில்லை என்ற கோட்பாட்டினை 1817ம் சட்டம் மூலம் நீக்கப் பட்டது.

            சூத்திர பெண் திருமணம் செய்த அன்றே பிராமணருக்கு பணிவிடை செய்ய 7 நாட்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற கொடுமையினை 1819ம் ஆண்டு பிரிட்ஷார் முடிவிற்கு கொண்டு வந்தனர். பிராமணர் மட்டுமே கல்வி கற்க தகுதியானவர் என்பதினை பிரிட்டிஷ் லார்ட் மெக்காலே 1835ம் ஆண்டு கொண்டு வந்த சட்டம் மூலம் சூத்திரனும் கல்வி கற்க முடிந்தது.

            அவர்கள் கொண்டு வந்த சமூக சீர்திருத்த சட்டங்களால் ராம்ஜி என்ற அம்பேத்கர் போன்ற சூத்ரன் பிற்காலத்தில் கல்வி கற்று மேலை நாட்டிற்கு சென்று சட்டம் பயின்று இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கும் சபையின் தலைவரானார் என்பதினை யாரும் மறைக்க முடியாது. பிசி, எம்பிசி,  எஸ்சி என்றவர்கள் படித்து பட்டம் பெற்று பிராமணரர்களுக்கு இணையான பதவிகளில் உள்ளனர் என்பதினை அனைவரும் அறிவோம். ஆனால் சமீபத்தில் சிலர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் இந்திய சமூகத்தினை ஜாதிகள் மூலம் பிரித்தனர் என்று பிதற்றுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதைதானே. மனுஷர சட்டத்தின் படி பெண்களின் மார்பக மறைக்கக் கூடாது என்கின்ற கொடுமை, ஆண்களின் மீசை வரி, மேலில் துண்டு போட்டால் அதற்கும் வரி, தெய்வத்திற்கு நரபலி, பனை வரி, உடன் கட்டை ஏறுதல் போன்ற சட்டங்களை பிரிடீஷார் நீக்கினர். சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு மேலே சொல்லப் பட்ட சமூக கொடுமைகளைக் கண்டு வெதும்பி 'mad ashylam' ஜாதீய புகலிடம் என்று கண்டித்தார்..

            கேரளா கம்யூனிஸ்ட் அரசினை சார்ந்த அறநிலைய அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஒரு தலித். அவருக்கே நடந்த ஜாதீய பகிஷ்கரிப்பினை வெளிச்சம் போட்டு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு தடவை கண்ணனூரில் உள்ள ஒரு கோவில் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது முதல் நிகழ்ச்சிக்காக பெரிய குத்துவிளக்கு வைக்கப் பட்டிருந்தது. தலைமை பூசாரி சிறிய விளக்கில் தீபத்தினை கொண்டு வந்து பெரிய விளக்கில் ஏற்றுவதிற்குப் பதிலாக அமைச்சருக்கு கையில் சிறிய விளக்கினை  அவர் தலித்தினைச் சார்ந்தவர் என்பதால் தரையில் வைத்தாராம், அதனை மந்திரி எடுத்துக் கொள்ளலாம் என்று. இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் உள்ளதா?

            பிராமணர் தான் தலித்துகளை தீண்டத்தகாதவர் என்று எண்ணுகிறீர்களா என்றால் இல்லை அவர்கள் போன்று பிசி, எம்பிசி பிரிவினைச் சார்ந்தவர்களும் பல கொடுமைகள் செய்கிறார்கள் என்பதினை கீழ்கண்ட நடப்புகள் மூலம் தெரியலாம்:

1) 76வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவரை கொடியேற்ற தடுப்பதும்,

2) கிராமசபை கூட்டத்தில் தலித் தலைவரை நாற்காலியில் உட்காரக் கூடாது தரையில் தான் உட்கார வேண்டும், மற்ற உதவி தலைவர், உறுப்பினர்கள் உயர் ஜாதியினர் என்பதால் அவர்கள் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப் பட்டனர்.

3) பள்ளி கழிவறையில் சுத்தம் செய்ய தலித் மாணவர்களை கட்டளை விட்டதும் இங்கே தானே!

4) பள்ளியில் தலித் சமையல் உதவியாளர் சமைத்த உணவினை சாப்பிடக்கூடாது என்று பெற்றோர் கட்டளையிட்டதும்

5) கோவில் அன்னதானத்திற்கு கையேந்திய குறவர் பெண்ணை விரட்டி அடித்ததும்,

6)  தலித் சின்னசிறிய பிஞ்சு சிறுவன் தின்பதிற்கு இனிப்பு கடலை மிட்டாய் கேட்டதும் கிராம கடைக்காரர் உங்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடாது என்று ஊர் கட்டுப்பாடு என்று சொன்னதும்,

7) மதுரை உத்தமபுரத்தில் தலித்துகள் தங்கள் பகுதியில் வரக்கூடாது என்று பெரிய சுவர் எழுப்பியதும் போன்ற சம்பவங்கள் பிராமணர்களால் செய்யவில்லை மாறாக பிராமணர் அல்லாத பிற ஜாதி இந்துக்களே செய்தது எவ்வாறு காலங்காலமாக தீண்டாமை கடைப் பிடித்து வரப்படுகிறது என்பதினை காட்டவில்லையா?

            சனாதன தர்மம் என்பது ஒரு மதத்தவர் கோட்பாடு. அதனையே உயர் பதவியில் உள்ளவர் உயர்த்தி பிடிப்பதும், சிலர் ஒழிக்க வேண்டும் என்பது சாலச்சிறந்தது அல்ல. மாறாக பிராமணர் அல்லாதவர் தீண்டாமையினை தடுக்கப் பாடுபடவேண்டும். முத்தமிழ் அறிஞர்கள் யாரும் அவ்வாறு கூறவில்லை. ஆனால அதனையே சனாதன தர்ம வெறி அல்லது தீண்டாமையினை ஒழிக்கலாம் என்று கூட கூறுவது பொருத்தமாகும். இஸ்லாம் கூட உன் மதம் உனக்கு என் மார்க்கம் எனக்கு என்று தான் அடுத்த மத நெறிகளை சீண்டாதீர் என்று சொல்லியுள்ளது. பிரிட்டிஷாரால் ஒழிக்கப் பட்ட சட்டங்களை மறுபடி உயிர் கொடுத்து தீண்டாமையினை கடைப்பிடிப்பதும் இனிமேலும் எடுபடாது. ஜனநாயக நாட்டில் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் தான் என்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டுமல்லவா?

           

           

           

 

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

சனாதன தர்மம் பற்றி பல்வேறு கருத்து பரிமாற்றங்களும், கடுமையான வார்த்தைகளும் சமீப காலங்களில் எண்ணையில் போட்ட சோளப் பொறி போல பொரிந்து கொண்டுள்ளது. இது எப்படி இருக்கின்றது என்றால் நான்கு பேர்கள் சேர்ந்து பொழுது போகாமல் வெட்டி பேச்சு பேசுவது போன்றுள்ளது  சிலர் ஒன்றும் கிடைக்காத நேரத்தில் அவலை மெல்லுவது போல இருக்கின்றது.

சனாதன தர்மம் பற்றி வரலாற்று ஆய்வாளர்களும், ஆன்மீக சான்றோரும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். சனாதன தர்மம் என்பது சமஸ்க்ரித சொல்லாகும். இந்த சொல்லிற்கு நிலையான தத்துவ ஞானம்,  நிலையான நம்பிக்கை, அசைக்க முடியா நித்திய சட்டம், மரியாதைக்குரிய ஒழுங்கு முறை என்ற பொருளாகும். சனாதன தர்மமத்தினை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சனாதன தர்மம், மற்றொன்று வர்ணாஸ்வர தர்மம். இவற்றில் சனாதன தர்மம் என்பது பொதுவான ஆன்மீக கடமையாகும். வர்ணாஸ்ரம தர்மம் என்பது காலம், ஒருவரின் வாழ்க்கை சூழல் ஆகியவற்றை குறிக்கும். எல்லா உயிரினத்திற்கும் அன்பும், பாசமும், பரிவும், செலுத்தி பராமரிக்கப்படுவது போன்ற நிலையான செயல் முறையாகும்  அதில் காலப் போக்கில் தடம் மாறிப் போனதால் சச்சரவிற்கு வழி வகுத்துள்ளது.

            சனாதனம் என்பது மகாபாரதத்திலும், திருக்குறளிலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆன்மீக வாதிகள் சொல்லும்போது சனாதன தர்மம் என்பது  பழமையான பண்பாடு, பெற்றோர்களை, பெரியோர்களை எப்படி மதித்து நடத்த வேண்டும் என்ற வழிமுறையாகும். ஆனால் பிற்காலத்தில் சாதி, மத, இன என்ற வார்த்தைகளால் செயல்படுத்த முயலும் பொது முரண்பாடு  ஏற்படுகின்றது. இது சாமன்ய தர்மம், வர்ண தர்மம், ஆஸ்ரம தர்மம், ஸ்திரி தர்மம்,  வியாஸ்தி தர்மம், ராஷ்ட்ரிய தர்மம் போன்ற பத்து வகையாகும். இவையெல்லாம் தனிமனிதன் முதல் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற வழிகாட்டிகளாகும்.

            மேலும் சனாதன தர்மம் என்பது ஆன்மா மற்றும் மறுபிறவி ஆகியவற்றை நம்பும் நித்ய மதங்களாகும். இவை ஹிந்து மதத்தினை அனுசரித்து வருகிறது என்றாலும் ஜெயின், பவுத்த மதத்தினராலும் பயன் படுத்தப் படும் வார்தைகளாகும். 19ம் நூற்றாண்டில் தான் சனாதன தர்மம் மற்ற மதங்களிருந்து வேறுபட்டு ஹிந்து மதத்தினை குறிக்கும் வார்த்தையாக சொல்லப் படுகிறது. இந்த மண்ணுலகில் கண்டு பிடிக்க வேண்டிய அதிசயங்கள் பல உள்ளன. உதாரணத்திற்கு நாம் வேற்றுலக கிரக வாசிகள் இருப்பதாக எண்ணுகிறோம். ஆனால் பார்க்கவில்லை. சமீபத்தில் மெக்சிகோ நாட்டில் நடந்த ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டில் இரு உருவங்களின் படிவங்கள் காட்சிக்காக வைக்கப் பட்டன. அவை வேற்று கிரக வாசிகள் பூமியில் இறங்கியதிற்கு ஆதாரமாக காட்டப் பட்டது. இது போன்ற இன்னும் கண்டுபிடிக்க முடியாத அதிசயங்கள் இருக்கும் போதும் சந்திரனின் தெற்குப் பகுதியான இருண்ட பகுதியை வெற்றிகொண்ட சந்திராயன் என்ற விண்கலமும், சூரியனை ஆராய்ச்சி செய்ய அனுப்பப் பட்ட விண்வெளி ஓடம் வெற்றிகரமான அனுப்பப் பட்ட நிலையில்  ஏன் ஒரே மனித இனத்திற்குள் அத்தனை  வேறுபாடுகள் என்று காணும்போது சனாதன தர்மம் பற்றிய கூச்சலே மேலோங்கியுள்ளது என்றால் ஆச்சரியமில்லையல்லவா. மனிதன் எல்லாம் பூமியில் உள்ள மண்ணிலிருந்து முளைத்த பொருட்களை தான் உணவாக உண்ணுகிறோம், ஆகவே அவனுக்குள்ளே ஏன் வேறுபாடுகள். மனிதன் என்ன தான் முயன்றாலும் ஒரு மரமாகவோ, நாயாகவோ, பூனையாகவோ, யானையாகவோ அல்லது புலியாகவோ மாறமுடியுமா? ஆகவே அவற்றையெல்லாம் நிர்வாகிக்கும் ஒரு விதி முறையுள்ளது. ஜனநாயக இந்தியாவில் அரசியல் சட்ட வடிவமைப்பு ஒரு தர்மமாகும். சட்டங்களின் படியே சட்டசபை, பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை செயல் படுகிறது. அவை ஒன்றுக்கொன்று எல்லை மீறாது பணியாற்றுவதே தர்மமாகும்.

            இப்போது இந்தியாவில் எவ்வாறு ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்பட்டது என்று பார்க்கலாம். இந்தியாவில் சிந்து நதிக்கரை ஓரம் வளமான பகுதிநோக்கி பலவிதமான நாடோடி ஆரியர்கள்  தங்கள் கால் கடைகளுக்கு தீவனமும், தங்கள் உயிர் வாழ செழுமையான பகுதியான இங்கே குடி புகுந்தனர். அவர்கள் பெரும்பாலும் வட இந்தியாவை நோக்கியே குறிவைத்தனர். அங்கு வாழ்ந்த மக்களை தெற்கு நோக்கி விரட்டினர். இதனை பழமை இந்திய வரலாற்று(Ancient Indian History) ஆசிரியர்கள் 'சிந்து வெளி நாகரீகம்' என்ற  தலைப்பில் எடுத்துக் கூறுகின்றனர்.பல்வேறு நாடோடி இனத்தவரை இணைக்கும் தர்மம் என்ற கோட்பாடு அவர்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அவர்கள் வந்த பின்பு தான் ஜாதி, மத இன வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர். அவர்களின் கோட்பாடுப்படி வர்ணம் என்ற வேறுபாடு பிரம்மாவின் உடலிலிருந்து தோன்றியதாக கூறப் படுகிறது. பிராமணர்கள் பிரம்மாவின் தொப்புலிருந்தும், சத்ரியன் கைகளிருந்தும், வைஷ்ணவர் தொடையிலிருந்தும், ஷத்ரியர்கள் கால்களிருந்தும் படைக்கப் பட்டதாக நம்பிக்கையுள்ளது. அதனையே தான் மநுஸ்மிருதி என்ற இந்து மத கோட்பாடு கூறுகிறது.(manu codu 1:31)

 

 

            சூத்திரர்கள் பிராமணர்களுக்கு அடிமைகளாகவும், வேலைக்காரர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்களுக்கு கூலி எதுவுமில்லையாம்.ஏனென்றால் அவர்கள் பிராமணர்களுக்கு வேலை செய்வதிற்காகவே பிறந்திருக்கிறார்கள் என்று மனு v iii -50,56,59 கூறுகிறது.சூத்திர பெண்களை ஒரு காட்சிப் பொருளாகவே கருதினார்கள்.

            பெரியார் இந்திய தேசிய காங்கிரசில் 1919ல் சேர்ந்து சுதந்திரப் போராட்ட வீரரானார். ஆனால் 1925ம் ஆண்டு அதனை விட்டு விலகினார். ஏன் தெரியுமா? காங்கிரசில் பிராமண ஆதிக்கம் அதிகமாக உள்ளது என்று. இருந்தாலும் ராஜாஜி போன்றவர்களுடன் நட்புடன் கடைசி வரை இருந்தார். அவர் இறந்தபோது கூட சுடுகாடு வரை சென்றவர் பெரியார். அதன் பின்பு சுய மரியாதை இயக்கத்தினை ஆரம்பித்தார். அதன் முக்கிய நோக்கமே சமூகத்தில் உள்ள பிராமணர் ஆதிக்கத்தினை எதிர்த்து, பெண்களுக்கு சமூகத்தில் சம அடித்தளமாக்கவே சுய மரியாதை இயக்கமாகும்  தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத மசோதா தாக்கல் செய்யப் பட்டுள்ளது. பிராமணர்கள் சம்ஸ்கிருத மொழியை தூக்கிப் பிடித்தபோது, பெரியார் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்காக குரல் கொடுத்தார். அதன் பின்னணிதான் பிற்காலத்தில் தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிரான குரல் ஓங்கி ஒலித்தது.

            தமிழக இந்து மகாசபை ஊடகங்களின் விவாதங்களில் பங்கேற்கும் ராம சுப்பிரமணியம் சமீபத்தில் அவர் பிராம்மணக் குடும்பத்தில் தனது தாயார், அக்காள் கணவர்களை இழந்த போது எப்படி சமூகத்தால் ஒதுக்கப் பட்டு மூலையில் அமர்த்தப் பட்டார்கள் என்பதனினை வேதனையுடன் தொலைக் காட்சியில் கூறியது அனைவரும் பார்த்திருப்பீர்கள். அவர்கள் வெள்ளை சேலைத்தவிர எதுவும் அணியக்கூடாது, கலர் கண்ணாடி வளையல் அணியக்கூடாது போன்றவைகளும் அடங்கும். அனைத்துப் பெண்களும் வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடாது என்றும், பெண்களுக்கு சமையல் தவிர வேறெதுவும் தெரியக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப் பட்டது. குழந்தை திருமணம் ஆதரிக்கப் பட்டது. மகாத்மா காந்தி 13 வயது கஸ்தூரிபாவினையும், ராஜாஜி ஆர்மேலு என்ற மங்கம்மாவை 10 வயதிலும் திருமணம் செய்தார்கள் என்பது அந்தக் காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக இருந்ததினை காட்டவில்லையா? கணவர் இறந்து விட்டால் மறுமணம் கூடாது என்றும் மறுக்கப் பட்டது. இப்படி குழந்தை திருமணம் செய்த தேசிய தலைவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

            நாமெல்லாம் ஆங்கிலேயர்களை ஆதிக்கக்காரர்கள் என்று குற்றம் சாட்டுகிறோம் உண்மைதான். ஆனால் இந்திய புரையோடிய சமூக வேறுபாடுகளை தூக்கியெறிந்தனர் என்று தினமணி பத்திரிக்கையில் 2007ம் ஆண்டு வந்த கட்டுரையில் கோடிட்டு காட்டப் பட்டுள்ளது. ஆங்கிலேயர் 1773ம் ஆண்டு சனாதன சட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டு வந்தனர்.. சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ளலாம் என்பதினை மாற்றி 1795ம் ஆண்டு அனைவரும் சொத்து வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தினர். பெண் குழந்தைகள் பிறந்துவிட்டால் கொல்லும் பாதக செயலை 1804ம் ஆண்டு கொண்டு வந்தனர். கொத்தடிமையினை அறவே ஒழித்துக் கட்டும் சட்டம் 1813ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பிராமணப் பெண்ணைக் கெடுத்த சூத்திரன் கொல்லப் பட வேண்டும் என்ற மனுசாஸ்த்ர சட்டம் vii 374, 375 நீக்கப் பட்டது. ஒரு பிராமணன் சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம், அதன் விளைவாக குழந்தை பிறந்தால் அது பிணமாகவே கருத வேண்டும் என்ற பிராமண மனுஷர சட்டம்(ix 178) நீக்கப்பட்டது. பிராமணன் ஒரு குற்றம் செய்தால் அது குற்றமாக கருதக் கூடாது, அதற்கு எந்த தண்டனையுமில்லை என்ற கோட்பாட்டினை 1817ம் சட்டம் மூலம் நீக்கப் பட்டது.

            சூத்திர பெண் திருமணம் செய்த அன்றே பிராமணருக்கு பணிவிடை செய்ய 7 நாட்கள் கோவிலில் இருக்க வேண்டும் என்ற கொடுமையினை 1819ம் ஆண்டு பிரிட்ஷார் முடிவிற்கு கொண்டு வந்தனர். பிராமணர் மட்டுமே கல்வி கற்க தகுதியானவர் என்பதினை பிரிட்டிஷ் லார்ட் மெக்காலே 1835ம் ஆண்டு கொண்டு வந்த சட்டம் மூலம் சூத்திரனும் கல்வி கற்க முடிந்தது.

            அவர்கள் கொண்டு வந்த சமூக சீர்திருத்த சட்டங்களால் ராம்ஜி என்ற அம்பேத்கர் போன்ற சூத்ரன் பிற்காலத்தில் கல்வி கற்று மேலை நாட்டிற்கு சென்று சட்டம் பயின்று இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தினை உருவாக்கும் சபையின் தலைவரானார் என்பதினை யாரும் மறைக்க முடியாது. பிசி, எம்பிசி,  எஸ்சி என்றவர்கள் படித்து பட்டம் பெற்று பிராமணரர்களுக்கு இணையான பதவிகளில் உள்ளனர் என்பதினை அனைவரும் அறிவோம். ஆனால் சமீபத்தில் சிலர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் இந்திய சமூகத்தினை ஜாதிகள் மூலம் பிரித்தனர் என்று பிதற்றுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கதைதானே. மனுஷர சட்டத்தின் படி பெண்களின் மார்பக மறைக்கக் கூடாது என்கின்ற கொடுமை, ஆண்களின் மீசை வரி, மேலில் துண்டு போட்டால் அதற்கும் வரி, தெய்வத்திற்கு நரபலி, பனை வரி, உடன் கட்டை ஏறுதல் போன்ற சட்டங்களை பிரிடீஷார் நீக்கினர். சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு மேலே சொல்லப் பட்ட சமூக கொடுமைகளைக் கண்டு வெதும்பி 'mad ashylam' ஜாதீய புகலிடம் என்று கண்டித்தார்..

            கேரளா கம்யூனிஸ்ட் அரசினை சார்ந்த அறநிலைய அமைச்சர் ராதாகிருஷ்ணன் ஒரு தலித். அவருக்கே நடந்த ஜாதீய பகிஷ்கரிப்பினை வெளிச்சம் போட்டு பேட்டியில் கூறியுள்ளார். ஒரு தடவை கண்ணனூரில் உள்ள ஒரு கோவில் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது முதல் நிகழ்ச்சிக்காக பெரிய குத்துவிளக்கு வைக்கப் பட்டிருந்தது. தலைமை பூசாரி சிறிய விளக்கில் தீபத்தினை கொண்டு வந்து பெரிய விளக்கில் ஏற்றுவதிற்குப் பதிலாக அமைச்சருக்கு கையில் சிறிய விளக்கினை  அவர் தலித்தினைச் சார்ந்தவர் என்பதால் தரையில் வைத்தாராம், அதனை மந்திரி எடுத்துக் கொள்ளலாம் என்று. இந்த கொடுமை வேறு எந்த நாட்டிலும் உள்ளதா?

            பிராமணர் தான் தலித்துகளை தீண்டத்தகாதவர் என்று எண்ணுகிறீர்களா என்றால் இல்லை அவர்கள் போன்று பிசி, எம்பிசி பிரிவினைச் சார்ந்தவர்களும் பல கொடுமைகள் செய்கிறார்கள் என்பதினை கீழ்கண்ட நடப்புகள் மூலம் தெரியலாம்:

1) 76வது சுதந்திர தின கொடியேற்றும் நிகழ்ச்சியில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவரை கொடியேற்ற தடுப்பதும்,

2) கிராமசபை கூட்டத்தில் தலித் தலைவரை நாற்காலியில் உட்காரக் கூடாது தரையில் தான் உட்கார வேண்டும், மற்ற உதவி தலைவர், உறுப்பினர்கள் உயர் ஜாதியினர் என்பதால் அவர்கள் நாற்காலியில் உட்கார அனுமதிக்கப் பட்டனர்.

3) பள்ளி கழிவறையில் சுத்தம் செய்ய தலித் மாணவர்களை கட்டளை விட்டதும் இங்கே தானே!

4) பள்ளியில் தலித் சமையல் உதவியாளர் சமைத்த உணவினை சாப்பிடக்கூடாது என்று பெற்றோர் கட்டளையிட்டதும்

5) கோவில் அன்னதானத்திற்கு கையேந்திய குறவர் பெண்ணை விரட்டி அடித்ததும்,

6)  தலித் சின்னசிறிய பிஞ்சு சிறுவன் தின்பதிற்கு இனிப்பு கடலை மிட்டாய் கேட்டதும் கிராம கடைக்காரர் உங்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடாது என்று ஊர் கட்டுப்பாடு என்று சொன்னதும்,

7) மதுரை உத்தமபுரத்தில் தலித்துகள் தங்கள் பகுதியில் வரக்கூடாது என்று பெரிய சுவர் எழுப்பியதும் போன்ற சம்பவங்கள் பிராமணர்களால் செய்யவில்லை மாறாக பிராமணர் அல்லாத பிற ஜாதி இந்துக்களே செய்தது எவ்வாறு காலங்காலமாக தீண்டாமை கடைப் பிடித்து வரப்படுகிறது என்பதினை காட்டவில்லையா?

            சனாதன தர்மம் என்பது ஒரு மதத்தவர் கோட்பாடு. அதனையே உயர் பதவியில் உள்ளவர் உயர்த்தி பிடிப்பதும், சிலர் ஒழிக்க வேண்டும் என்பது சாலச்சிறந்தது அல்ல. மாறாக பிராமணர் அல்லாதவர் தீண்டாமையினை தடுக்கப் பாடுபடவேண்டும். முத்தமிழ் அறிஞர்கள் யாரும் அவ்வாறு கூறவில்லை. ஆனால அதனையே சனாதன தர்ம வெறி அல்லது தீண்டாமையினை ஒழிக்கலாம் என்று கூட கூறுவது பொருத்தமாகும். இஸ்லாம் கூட உன் மதம் உனக்கு என் மார்க்கம் எனக்கு என்று தான் அடுத்த மத நெறிகளை சீண்டாதீர் என்று சொல்லியுள்ளது. பிரிட்டிஷாரால் ஒழிக்கப் பட்ட சட்டங்களை மறுபடி உயிர் கொடுத்து தீண்டாமையினை கடைப்பிடிப்பதும் இனிமேலும் எடுபடாது. ஜனநாயக நாட்டில் அனைவரும் இந்நாட்டு மன்னர்கள் தான் என்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டுமல்லவா?

           

           

           

 

Sunday, 27 August, 2023

முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஆள திறமையில்லாதவர்களா?

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

கடந்த பத்து ஆண்டுகளில் ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் 35 உள்நாட்டு கலவரம் தாக்கத்தால் 60 லட்சம் மக்கள் கொல்லப் பட்டும், ஒரு கோடியே 12 லட்சம் மக்கள் வீடு இழந்தும், குழந்தை செல்வங்கள் குடிக்க பால் கூட இல்லாமல் பசியும் பட்டினியாக, நோய்களுக்கு மருந்துகள் கூட  அல்லல் படும் நிலையினை ஊடகங்களும், தொலைக் காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு படம் பிடித்துக் காட்டும் போது கல் நெஞ்சும் கறையாதவர் யாரும் இலார். பெரும்பாலான கலவரம் நடக்கும் நாடுகள் இஸ்லாமிய நாடுகள் என்ற போது அதைவிட பாதிக்காதவர் யாரும் இல்லை எனலாம். இஸ்லாமிய நாடுகளில் கலீபா உமர்(ரழி) அவர்கள் காலத்தில் இஸ்லாமிய ஆட்சி பரந்து விரிந்து இருந்தது. அதிலும் ஆபிரிக்க நாடுகளில் வேகமாக பரவியது. அதற்கு மூல காரணம் ஆப்பிரிக்காவினை அடிமைப் படுத்திய ஐரோப்பியர் கறுப்பின மக்களுக்கு சம உரிமை வழங்காமல் அடிமையாக நடத்தினர். ஆனால் இஸ்லாமிய மார்க்கம் போதித்த சகோதர பாசம் அவர்களை வேகமாக ஈர்த்தது. கலீபா உமர் அவர்கள் மஸ்ஜித் நவபியில் மதினாவில் கொல்லப்பட்டு இறப்பதற்கு முன், ஜனநாயக முறைப்படி அடுத்த கலீபாவினை தேர்ந்தெடுக்க ஆறுபோர்கள் கொண்ட ஒரு குழுவினை நியமித்து மடிந்தார்கள். அந்த ஆறு பேரும் ஒரு மித்த கருத்துப் படி அறிவுசால் அறிஞர் உதுமான்(ரழி) அவர்களை அடுத்த கலீபாவாக நியமனம் செய்தார்கள். ஆனால் அதனை ஏற்காத சிலர் அவரையும் கொலை செய்தார்கள். அதன் பின்பு கலீபா அலி(ரழி) அவர்களும் அதன் பின்பு அவர் மகன்கள் ஹசன் மற்றும் ஹுஸைனும் கொல்லப் பட்டார்கள் என்ற வரலாறு இன்றும் தொடர்கிறதோ என்று எண்ணதோண்றவில்லையா உங்களுக்கு? இப்படியாக எங்கே இஸ்லாமிய மார்க்கம் போதித்த ஒற்றுமை, ஒருமைப்பாடு போன்றவற்றை காற்றில் பறக்கவிட்டு அராபிய கண்டத்திலேயே வழிகாட்டியாக இருந்ததால் இஸ்லாமியர் ஆட்சி செய்யும் ஆபிரிக்க நாடுகளிலும் இன்றும் தொடர்கின்றது என்று உலக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

            இப்போது ஆப்பிரிக்க நாடுகளை எந்த எந்த ஐரோப்பிய நாடுகள் ஆட்சி செய்தன என்று பார்க்கலாம். பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி முக்கிய நாடுகள் ஆக்கிரமிப்பாளர்கள் . ஆப்பிரிக்காவில் கிடைக்கும் அபரிமிதமான மூலப் பொருள்களான எண்ணெய், தந்தம், ரப்பார், பாம் ஆயில், மரம், பஞ்சு, பிசின், தங்கம் மற்றும் தாதுப் பொருட்கள் அங்குள்ளதால் அவற்றையையெல்லாம் கொள்ளையடிக்க ஐரோப்பிய நாடுகள் படையெடுத்து பங்கு போட்டன. ஆக்கிரமிப்பினை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்:

1) குடியேறிகள் ஆக்கிரமிப்பு: விவசாய நிலங்களை அங்குள்ள ஆபிரிக்கர்களை வேலைக்காரர்களாக்கி அடிமையாக வைத்தனர்.

2) தாதுபொருள்கள் சுரண்டும் ஆக்கிரமிப்பு: ஆப்பிரிக்காவில் உள்ள மூலப் பொருட்களை அபகரித்து தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்புவது; அங்குள்ள கறுப்பின மக்களை தங்கள் நாடுகளுக்கு கொண்டு சென்று பாலம், ரோடு, அணைகள் கட்ட தொழிலார்களாக்கியது.

3) ஒருங்கிணைந்த ஆக்கிரமிப்பு: அந்தந்த நாடுகளில் உள்ள மக்களை இரண்டாம் தர மக்களாக்கி நிறவெறிக்கு ஆளாக்குவது, உதாரணமாக தென் அமெரிக்கா, ஜிம்பாவே.

பிரான்ஸ் நாடு ஆக்கிரமித்த நாடுகள் மொரிட்டானிய, செனிகல், மாலி, கினியா, Cote d Livoise, புர்கினா, பெனின், இப்போது ராணுவம் ஜனாதிபதியினை கைதியாக வைத்துள்ள நைஜர் ஆகியவைகளாகும்.

            மாரிட்டனியா: 10 லட்சம் மக்கள் ஜனத்தொகை கொண்ட நாடு, சுன்னத் ஜமாமுஸ்லிம் த்தினை சேர்ந்தவர்கள்.

செனிகல்: கால் பந்தாட்டத்தில் உலகளவில் பிரசித்து பெற்றவர்கள். 1கோடியே 60 லட்சம் மக்கள் தொகை கொண்டவர்கள். அதில் 97 சதவீதம் முஸ்லிம்கள்.

மாலி: மேற்கு ஆப்பிரிக்க நாடு. 2 கோடி மக்கள் தொகை கொண்டது. முஸ்லிம்கள் 95 சதவீதம்.

கினியா: மேற்கு ஆப்பிரிக்க நாடு. ஒரு கோடி, 30 லட்சம் மக்கள் தொகை கொண்டது. அதில் 89 சதவீதம் முஸ்லிம்கள்.

கோட் டி வோக்கர்: சிறிய வால் போன்ற பகுதியினைக் கொண்டது. 32 லட்சம் மக்கள் தொகை அவர்கள் சுன்னத் ஜமாத் முஸ்லிம்கள் ஆகும்.

நைஜர்: தற்போது ராணுவ புரட்சி உள்ள நாடு. மேற்கு ஆப்பிரிக்காவில் பெரிய நாடு. சஹாரா பாலைவனத்தில் 80 சதவீதம் கொண்டது. 2.50 கோடி மக்கள் கொண்ட முஸ்லிம் நாடு.

மேற்கூறிய நாடுகளை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் விடுதலை கொடுத்தாலும், பிரான்ஸ் நாடு தன்னுடைய ஆதிக்கத்தினை செலுத்த சில படைப் பிரிவுகளை ஆங்காங்கே வைத்தும், அணு ஆயுத தளங்களை நிறுவியுள்ளது.

ஸ்பெயின் ஆக்கிரமித்த நாடுகளில் முக்கிய நாடு மொரோக்கோ ஆகும்.அராபிய மொழியாகவும். 3.60 கோடி மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் நாடாகும். அந்த நாடு விடுதலையடைந்தாலும் இன்றும் கடற்கரை பகுதிகளில் ஸ்பெயின் மக்கள் வாழ்கின்றனர்.

இத்தாலி  எத்தியோப்பியா, சோமாலியா , லிபியா, எரித்திரியா போன்ற நாடுகளாகும். எத்தியோப்பியாவும், ஏரிதாரியாவும் பக்கத்து பக்கத்துக்கு நாடுகளானாலும், எத்தியோப்பியாவில் கிருத்துவர்கள் அதிகமுள்ளனர், ஆனால் எரிடாரியாவில் கிருத்துவர்களும், இஸ்லாமியர்களும் சம நிலையில் உள்ளனர். அவர்கள் எப்போதும் எலியும் பூனையுமாக இருந்து கொண்டு யுத்தங்கள் நடத்தி வருகின்றன என்பதினை ஊடகங்கள் வாயிலாக அறியலாம்.

லிபியா: 96 சதவீத முஸ்லிம்கள் கொண்ட எண்ணெய் வளமிக்க நாடாகும். இத்தாலியும், பிரான்சும் ஆக்கிரமித்தன. இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் மன்னர் இத்ரீஸ் ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் ராணுவ புரட்சி ஏற்பட்டு கர்னல் கடாபி 1969ல் ஆட்சி பீடம் ஏறினார். பழங்குடி மக்களை ஒருங்கிணைத்து ஆட்சி செய்தார். எங்கே அவர் ஐரோப்பிய ஆட்சியாளர்களுக்கு இணையாக வந்து விடுவாரோ என்று பயந்த பிரான்ஸ் நாடு சதி செய்து அங்குள்ள மக்களைத் தூண்டி விட்டு புரட்சி செய்து அதற்கு ராணுவ உதவியும் செய்து 2011 ம் ஆண்டு அவர் ஆட்சியை கவிழ்த்து கொல்லப் பட்டார். அப்போதும் கூட அவரை கொல்ல  வந்த அந்த நாட்டு கிளர்ச்சியாளர்களைப் பார்த்து, 'my dear sons do not kill me' என்று அரேபிய மொழியில் சொன்னதாக ஊடகங்கள் வெளியிட்டன. இவ்வளவிற்கும் பிரான்ஸ் நாட்டு அதிபராக இருந்த சர்கோஸ்ய் 2007ம் ஆண்டைய பிரான்ஸ் நாட்டின் தேர்தலுக்காக பெரிய தொகையினை லிபியா அதிபர் கடாபி கொடுத்ததாக தற்போது குற்றம் சாட்டப் பட்டுள்ளது நம்பிக்கை மோசம் செய்த செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?அதன் பின்பு எந்த அரசும் அங்கே நிலையான அரசினை கொடுக்கவில்லை, மாறாக அந்நியர் கைப்பாவையாகவே உள்ளன.

            சூடான்: ஆப்பிரிக்காவில் பெரிய நாடு. அங்குள்ள கிருத்துவர்களை கிளர்ச்சிக்கு மேலை நாடுகள் தூண்டி விட்டு 2011ம் ஆண்டு தனி நாடாக தெற்கு சூடான் உருவானது. வட சூடானில் முஸ்லிம்கள் தனி மெஜாரிட்டியாக உள்ளனர். அங்கே ஆங்கிலமும், அரேபிய மொழியும் பேசப் படுகிறது. 1956ம் ஆண்டு வரை பிரிட்டிஷ், எகிப்து ஆக்கிரமிப்பில் இருந்த நாடு. சூடானில் தான் அதிக தங்கம் உற்பத்தியாகவும் உள்ளது. ஆனால் அங்கே உள் நாட்டு புரட்சிப் படைகள் மூலம் மக்களை வேட்டையாக்கி காடுகளில் தஞ்சம் புகும் நிலையுள்ளது. தார்பூர் புரட்சியில் அதிக மக்க இறந்தனர். கசாய் தங்கச் சுரங்கம் முக்கியமானவை.

            தென் ஆப்பிரிக்கா: ஆறு கோடி மக்கள் தொகை கொண்ட ஆப்பிரிக்க நாடானது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கூறப் படுகிறது. இதனை போர்ச்சுகல், டச், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு செய்து வெள்ளை நிறவெறி ஆட்சிக்கு நெறிக்கப் பட்டு 1961ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு ஆட்சியினை விலக்கிக் கொண்டது. இருந்தாலும் வெள்ளையர் கறுப்பின மக்களை அடிமைகளைப் போல நிறவெறி ஆதிக்கத்தினை செலுத்தினர். அதனை எதிர்த்து குரல் எழுப்பிய நெல்சன் மண்டேலா போன்றவர் தனிமை சிறையில் அடைக்கப் பட்டனர். அவர்களை விடுதலை செய்யவும் மெஜாரிட்டி கறுப்பின மக்களுக்கு ஆட்சியினை கொடுக்கவும் சர்வதேச அளவில் குரல் எழுப்பி 1990ம் ஆண்டு வெள்ளை நிற ஆராட்சி செவி சாய்த்து நெல்சன் மண்டேலாவினை விடுதலை செய்தனர். அதன் பின்பு மக்கள் அவரை 1994 ஜனாதிபதியாக்கினர் .அவர் தனக்கு கொடுக்கப் பட்ட 5 வருட ஆட்சி போதும் என்று 1999ல் சொல்லி தானாக பதவி விலகினார்.

            ஆனால் ஐரோப்பிய நாடுகளால் ஆக்கிரமிப்பு  செய்யப் பட்டு விடுதலை பெற்ற முஸ்லிம் நாடுகளில் மட்டும் ஒரு தடவை ஆட்சி பீடத்தில் வந்தவர்கள் தங்களது நாற்காலிகளில் பசைகளை ஒட்டியதுபோல ஒட்டிக் கொண்டு சர்வாதிகார ஆட்சியினை மேற்கொண்டும், நாடுகளில் உள்ள வளங்களை தனது சொத்து என எண்ணுவதும், தனக்கு எதிராக குரல் கொடுக்கிறவர்களை கொன்றும், அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்தும் இருந்ததால் 2012ம் ஆண்டு உலக அளவில் புரட்சி ஏற்பட்டது. அதில் பெரும்பாலும் முஸ்லிம் நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சூடான், சோமாலியா, சிரியா, ஏமன் போன்றவையாகும். முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் ஐரோப்பிய நாடுகள் தங்களது மூக்கை நுழைத்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலையினை செய்து கொண்டுதான் உள்ளன. கலவரம் நடக்கும் நாடுகளில் தங்கள் நாட்டில் தயாராகும் ஆயுதங்களை விற்று பணம் செய்தும், அந்த நாடுகளுக்கு உதவுவது போல தங்களது நாட்டு படைகளை அனுப்புகின்றனர். அதற்கான செலவுகளை அந்தந்த நாடுகளே ஏற்க வேண்டும் என்ற ஒப்பந்தமும் செய்கிறனறன. அதன் பின்பு தாங்கள் சொல்லும் தலைவர்கள் தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற கட்டளையும் இடுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா சிரியா கலவரத்தில் சிரியா ஜனாதிபதி விலக வேண்டும் என்று கட்டளையிட்டார் என்று செய்தியாக வந்தது. முஸ்லிம் நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு குழப்பத்தில் உலகின் பெரிய நாடுகளான அமெரிக்காவும், ரஷியாவும் தலையிட்டு தங்களுக்கு என தனி ராஜ்யமே செய்கின்றனர்.

            முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட 35 உள் நாட்டு கலவரங்களின் விளைவுதான், 60 லட்சம் மக்கள் கொல்லப் பட்டும், 1.2 கோடி மக்கள் வீடு, வாசல் இழந்தும், அகதிகளாகவும், நரிக்கொறவர்கள் போல நாடோடிகளாக திரிகின்றனர் என்றால் ஆச்சரியமில்லையா உங்களுக்கு. அதற்கு காரணம் ஆரம்ப கால முஸ்லிம் கலீபாக்களின் எளிமையான, நேர்மையான ஜனநாயக ஆட்சியினை கடைப் பிடிக்க மறந்து சுக போகத்தில் வாழும் நடைமுறையினை கையாண்டதால் தான். தனக்குப் பின்பு தனது வாரிசுக்கு பதவி வர வேண்டும் என்ற வறட்டு வாதம். நாட்டின் செல்வமெல்லாம் தனது சொத்து என்ற நினைப்பு.எவ்வாறு ரஸூலாஹ் அவர்கள் பைத்துல் மாலில் மிஞ்சிய காய்ந்த பேரித்தம் பழத்தினைக் கூட தர்மம் செய்ய கட்டளையிட்டதினை மறந்து விட்டனர். முஸ்லிம் நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் யார் பெரியவர் என்ற இறுமார்ப்பு ஆட்சியாளர்களை பிடித்ததால் பாதிக்கப் பட்டவர் அந்தந்த நாட்டு மக்கள் தான்.

            .

            முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட 35 உள் நாட்டு கலவரங்களின் விளைவுதான், 60 லட்சம் மக்கள் கொல்லப் பட்டும், 1.2 கோடி மக்கள் வீடு, வாசல் இழந்தும், அகதிகளாகவும், நரிக்கொறவர்கள் போல நாடோடிகளாக திரிகின்றனர் என்றால் ஆச்சரியமில்லையா உங்களுக்கு. அதற்கு காரணம் ஆரம்ப கால முஸ்லிம் கலீபாக்களின் எளிமையான, நேர்மையான ஜனநாயக ஆட்சியினை கடைப் பிடிக்க மறந்து சுக போகத்தில் வாழும் நடைமுறையினை கையாண்டதால் தான். தனக்குப் பின்பு தனது வாரிசுக்கு பதவி வர வேண்டும் என்ற வறட்டு வாதம். நாட்டின் செல்வமெல்லாம் தனது சொத்து என்ற நினைப்பு.எவ்வாறு ரஸூலாஹ் அவர்கள் பைத்துல் மாலில் மிஞ்சிய காய்ந்த பேரித்தம் பழத்தினைக் கூட தர்மம் செய்ய கட்டளையிட்டதினை மறந்து விட்டனர். முஸ்லிம் நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் யார் பெரியவர் என்ற இறுமார்ப்பு ஆட்சியாளர்களை பிடித்ததால் பாதிக்கப் பட்டவர் அந்தந்த நாட்டு மக்கள் தான்.

அதேபோன்று தான் ஒவ்வொரு முகலாக்களிலும் பல்வேறு பிரிவுகளாக இருந்து ஊர் குழப்பம் செய்கின்றனர். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாண்டிக்கு கொண்டாட்டம் என்றது போல மற்ற மதத்தினர் அங்கு ஆதிக்கம் செலுத்த முயலுகின்றனர். ஆகவே கஷ்டப் பட்டு குருவி கூடு கட்டுவது போல வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் தாங்கள் சேமித்த பொன்னையும் பொருளையும் சின்ன சின்ன பிணக்குகளால் பிரிவினை கொள்ளாமல் வீட்டுக் கொடுக்கும் பெரும் தன்மையினை கடைப்பிடித்தும் 'ஒற்றுமை என்ற பாசக் கயிறினை கெட்டியாக பற்றிக் கொள்ளுங்கள்' என்ற ரசூலுல்லாஹ் கூற்றினை கடைபிடிப்போமா?

போன்: 9444042213

மெயில்: mdaliips@yahoo.com

 

Friday, 7 July, 2023

அற்ப உயிரினங்களுக்கும் உறைவிடம் அளித்த இறைவன்!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ)

 நம்மை சுற்றி வலம் வரும் சிறு பிராணிகள் பல உள்ளன. அதனை வெறும் கையிலோ அல்லது காலிலே கூட நசுக்கி அழித்து விடலாம். ஆனால் அவைகளையெல்லாம் படைத்து நம்மை சுற்றி, சுற்றி வர ஏக இறைவன் அவைகளுக்கு எப்படி வாழ்வளித்து  அதற்கு உறைவிடமும் கொடுத்துள்ளான் என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா? ஆனால் உங்களால் ஒரு ஈயைக் கூட படைக்க முடியுமா என்று கேள்வியினை எழுப்பியுள்ளான் இறைவன்.

திருகுரான் (12.106) வசனத்தில் ஏக இறைவன் நம்மை சுற்றி வலம் வரும் பிராணிகள் இடையே வாழ்ந்து கொண்டுள்ளோம். அதன் அற்புதங்கள் உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்வியினை எழுப்பினான். அதன் உணவினை எடுப்பதற்கும் அதன் பின்பு ஓய்வெடுக்க அதன் உடல் அமைப்புகளை தெரிந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். அவைகளை பின்னே காணலாமா!

சிலந்தி, தேனீ, எறும்பு போன்ற சிறு பிராணிகள் தான், ஆனால் அவைகள் எந்த பொறியியல் கல்லூரிகளில் படித்து தங்களது கூடுகளை காட்டுகின்றது என்று யோசித்தீர்களா!  சிலந்திகள் கட்டிடங்கள், மரம், செடி போன்றவற்றில் கூடு கட்டி ஊஞ்சல் ஆடுகிறன்றது என்று தான் நாம் நினைக்கின்றோம். ஆனால் அவைகள் எப்படி தன்னுடைய இறையினை மாட்டவைத்து பாதுகாத்து உணவாக்கின்றது என்று அறிந்தீர்கள் என்றால்  ஆச்சரியப் படும் வகையில் அமைந்திருக்கும். சிலந்தி உடலில் சுரக்கும் ஒரு சிறு நூல் போன்ற திரவதினை கொண்டு முதலில் மரத்திலோ, செடியிலோ, அல்லது கட்டிடத்திலோ இணைக்கின்றது. தொடர்ந்து அடிபகுதியினை நோக்கி ஊர்ந்து இழுத்து சென்று கட்டுகிறது. பின்பு ஒவ்வொரு முனையாக இழுத்து கட்டுகிறது. இப்படி கட்டப் பட்ட வலைகளில் தனது திரவத்தினை வைத்து மீன் வலைபோன்று கட்டுகிறது  அதன் வலை 2 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ளது என்பார்கள் ஆராய்ச்சியாளர்கள். வலையினை மிக நெருக்கத்தில் கட்டுவதால் அவைகள் வலுவாக இருக்கும், காற்றடித்தாலும் ஊஞ்சல் போன்று ஆடும் திறன்கள் கொண்டது. இந்த வலைக்குள் வந்து சிக்கும் சிறு பூச்சிகளை நகர விடாமல் சிறைபிடித்து சுருட்டி சிறுக, சிறுக இறுக்கி உணவாக படிப்படியாக உட்கொள்கின்றன.

தேனை நக்கி சுவைக்காதவர் சுகர் நோயாளி கூட இருக்க முடியாது. அந்த சுவை மிகு தேனை எப்படி தேனீக்கள் உருவாக்கின்றன, அது பாதுகாக்கும் கூடுகள் எப்படி கட்டுகின்றது  என்பதினை பார்க்கலாம். வானுயர கட்டிடங்கள் வையகத்தில் பார்த்திருக்கின்றோம், அவையெல்லாம் கட்டிட கலைஞர்களின் அற்புதமான படைப்புகள் என்று பார்த்து மூக்கில் விரல் வைக்கின்றோம். ஆனால் தேனீக்கள் கட்டும் கட்டிடங்கள் அறு கோண வடிவில் உள்ளன அதுபோன்ற கட்டிடங்கள் பார்த்து இருக்கிறீர்களா? அவைகள் உண்மையிலேயே தேர்ந்தெடுத்த கணித வல்லுநர்கள் என்பதினை  எப்படி கட்டுகின்றன அறிந்தால் ஆச்சரியப் படுவீர்கள். உங்களுக்குத் தெரியுமா தேனீக்கள் வயிற்றின் அடிப்பகுதியில் ஒரு வித பிசின் போன்று தேனை சுரக்கும் சுரப்பிகள் உள்ளன. அவை மெழுகு போன்று இருக்கும். 2.5 கிலோகிராம் மெழுகு உற்பத்தி செய்ய கிட்டத்தட்ட 4 கிலோ கிராம் தேன் பயன் பெரும். கூடுகள் கட்ட குறைந்தளவு தேனைக் கொண்டு எப்படி கூடு கட்டுவது என்று யோசித்த தேனீக்கள் (honey comb conjecture) ஹனி கோம்பு கன்ஜெக்சர் என்ற என்ற அறு கோண வடிவில் தனது கூட்டினை உருவாக்கியுள்ளது. வட்ட வடிவிலோ, சதுர வடிவிலோ, முக்கோண அமைப்பிளோ கூடு கட்டினால் அதிக படியான மெழுகினை செலவழிக்க வேண்டும் என்று ;பல்லாண்டாக அதனைப் பற்றி ஆராய்ச்சியில் இறங்கிய தாமஸ் ஹெல்ஸ்(Thomas Halx) 1999ம் ஆண்டு நிரூபித்துள்ளார். தன் உடலிருந்து சுரக்கும் ஒரு வித திரவத்தினால் சுவர்களின் அடர்த்தி 0,1மில்லி மீட்டருக்கும் குறைவாக 120 டிகிரி வடிவத்தில் எந்த அளவிற்கு தேவையோ அந்த அளவிற்கு அறுகோண அமைப்பில் அமைத்துள்ளது என்றால் தேனீக்களுக்கு பொறியல் பாடம் எடுத்தது யார் என்ற கேள்வி எழுப்பினால் அது ஏக இறைவன் என்றால் நாத்தீகரும் ஒத்துக் கொள்ளத்தானே செய்ய முடியும். இவ்வளவிற்கும் தேனீக்களின் மூளை அளவு வெறும் கன மில்லி மீட்டருக்கு குறைவானதாகும், 1933 வருடம் இயற்பியல்(Physics) துறையில் நோபல் பரிசினை வென்ற பால் டுராக்(Paul Durac) இறைவன் மிக உயர்தர கணிதவியலாளர் மேற்கூறிய கணிதத்தினை கற்று தந்துள்ளார் என்றுகூறியுள்ளார். இதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே பாலைவனத்தில் பிறந்து, வளர்ந்த நபி பெருமானும் உறுதி படுத்துகிறார்கள்.

நமது இரவு தூக்கத்தினை கெடுப்பது மட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள ரத்தத்தினையும் உறிஞ்சிவிட்டு மலேரியா, சிக்கன்னுயா போன்ற நோய்களையும் பரப்பும் கண்ணுக்கு குறைந்த அளவே தெரியும் கொசுவினை ஒழிக்க விதவிதமான வழிமுறைகளை கடைப் பிடிக்கிறோம். அந்த கொசு உங்கள் கைகளுக்கு மட்டும் அகப்பட்டால் அடித்து கொள்ளாமல் விடுவதில்லை. உங்கள் பகைமையாளர்களைக் கூட உன்னை கொசு அடிக்கிறமாதிரி அடிக்காமல் விட மாட்டேன் என்று சவால் விடுகிறீர்கள். அது சரி அந்த கொசுவின் உடல் அமைப்பினை பார்த்திருப்பீர்களா. யானை உணவினை எடுக்க எப்படி தும்பிக்கையினை உபயோகப் படுத்துகிறதோ அதேபோன்று தனது இறையினை எடுக்க கொசுவின் தும்பிக்கையில் ஆறு ஊசிகள் இருக்கின்றது என்று உங்களுக்குத் தெரியுமா. அவை ஒவ்வொன்றும் தனித்தனி வேலையினை செய்கின்றது. அதில் ஒரு ஊசி உடலில் உள்ள ரத்தத்தினை உறிஞ்சுகிறது.  கொசுவின் தலயில் 100 கண்கள் உள்ளன. வாயில் 48 பற்கள் உள்ளன. உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள் ஒவ்வொரு பக்கமும் 3 இறக்கைகள் இருக்கின்றது. பச்சோந்தி இடத்திற்கேட்ப தனது நிறத்தினை மாற்றுகிறது என்று கேள்விப் பட்டுள்ளோம். அதுபோல கொசுவும் தன் நிறத்தினை மாற்றுமாம். எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தெர்மோமீட்டர் பொறுத்தப் பட்ட நுண்ணிய கருவி அதனுள் உருவாக்கப் பட்டுள்ளது. அதன் வேளையே மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தினை உறிஞ்சும்போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு மனிதனுடைய நிறத்திற்கேட்ப தனது நிறத்தினை மாற்றிக் கொள்வது. தான் எடுக்கப் போகும் ரத்திற்கான முதலாளி 60கி.மீ தொலைவிலிருந்தாலும் நுகர்வால் அறிந்து கொள்வது. கொசுவின் முதுவின் மேற்பரப்பில் கண்களால் பார்க்க முடியாத அளவிற்கு  பிளாஸ்மோடியம் (Plasmodium) என்ற ஒட்டுண்ணி உள்ளதாம்.அதன் மூலம் தான் மனிதர்களுக்கு நோயை பரப்புகிறதாம். கொசு மனித ரத்தத்தினை குடித்த பின்பு அதன் உடல் எடை இரண்டு மடங்கு கூடி விடுமாம். திருகுரானில் (2:26) வசனத்தில் கொசுவினைப் பற்றி கூறுகிறான். ‘அல்லாஹ் கொசுவையோ அதற்கு மீதுள்ளதையோ உவமையாக காட்டுவதிற்கு வெக்கப் படுவதில்லை(2:26 அல் குரான்)

பறவைகள் தங்கள் வீடுகளை மரக்கிளைகளிலோ, கட்டிடங்களிலோ, மலைகளின் இடுக்குகளிலோ எப்படி அமைத்துக் கொள்கிறது என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். முதலில் காய்ந்து விழுந்த சிறு குச்சிகள் அல்லது கீழே கிடைக்கும் சிறு கட்டுக்கம்பிகள் எடுத்து தளம் அமைகிறது. அதன் பின்பு மற்ற குச்சிகள், சிறு கம்பிகளை எடுத்து தனது அலகாளும், கால்களாகும் பிடித்துக் கொண்டு கூடு அமைகின்றது. பறவைகள் ஏன் தனது கூடுகளை அமைத்துக் கொள்கிறது என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? பறவைகள் முட்டை இட்டு, அடை காத்து குஞ்சு பொறிக்கவும், அந்த முட்டைகளை தின்ன முயற்சிக்கும் பாம்புகள், நரிகள், அணில்கள், நாய்களிடமிருந்து பாதுகாத்து அடைகாக்க அதுபோன்ற கூடுகளை கட்டுகின்றன. ஒரு நாடு விட்டு ஒரு நாட்டிற்கு பறந்து செல்லும்(migratory) பறவைகள் வசந்த காலத்தில் வடக்கு நோக்கி பயணமாகி அந்தந்த நாடுகளில் விளையும் கதிர்களை உணவாக எடுத்துக் கொண்டு முட்டையிட்டு குஞ்சும் பொறித்து அந்த குஞ்சுகள் பெரிதான பின்பு கோடை காலங்களில் தெற்கு நோக்கி பயணம் மேற்கொள்ளுமாம். தமிழ்நாட்டுக்கு அப்படிதான் சிறவி, வடுவதாரா போன்ற பறவைகள் அறுவடை காலங்களிலும், நீர் நிலை நிரம்பி இருக்கும் பகுதிகளிலும் பார்ப்பது ஆஸ்திரேலியாவைச் சார்ந்ததாம். பறவைகள் பற்றி திருகுரானின் 79 வசனம் ‘அன்னாகி’யில் விவரமாக சொல்லப் பட்டுள்ளது.

எந்த இனிப்பு பண்டங்களையும், அல்லது சிதறும் உணவு பண்டங்களையும் கண்டால் ஈக்களுக்கு கொண்டாட்டம் தான். ஈக்களின் படைப்புகளைப் பற்றி குரான் (22:73) வசனத்தில் தெளிவாக கூறுகிறது. இறை மறுப்பாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் கூட ஒரு ஈயைக் கூட உருவாக்க முடியாது என்று சொல்கிறது.என்று சொல்கிறது. ஒரு தடவை அதன் வாயிலிருந்து எடுத்த உணவினை நீங்கள் திரும்ப எடுக்கவும் முடியாது அதனை சாப்பிடவும் முடியுமா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. ஈக்களின் வகைகள் 30,000 இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஈக்கள் மணிக்கு 5 கி.மீ பறக்கக் கூடியது. அதன் கண்களில் 4000 கூட்டு லென்ஸ்கள் உள்ளன.ஈக்களுக்கு பற்கள் கிடையாது. நேரடியாக முழுங்கி விடும் தன்மை கொண்டது. அது சரி அவை எப்படி ஜீரணிக்கின்றது என்று கேட்டால், தான் உண்ணும் பொருள் மீது அமர்ந்து ஒரு வித திரவத்தை உமிழ்ந்து அதனை கரைத்து நேரடியாக வயிற்றுக்குள் அனுப்புகிறது என்று 500 ஆண்டுகளுக்கு முன்பு மைகிரேஸ்க்கோப்பு மூலம் அறியப் பட்டுள்ளது.

நமது அருகில் ஊர்ந்து செல்லும், அல்லது மரம், செடி போன்றவற்றில் தவழும் எறும்புகள் படைப்பிணத்தினையும், அதன் புற்றுகளையும் நீங்கள் வெளியே பார்த்திருப்பீர்கள். சிலர் அதன் புற்றுக்குள் கடவுள் நம்பிக்கையுடன் பாலையும் ஊற்றுவர். அதனைப் பற்றி வாதின் நமல் 27:18-19 கூறும் போது அதனை எறும்பின் பள்ளத்தாக்கு என்று கூறுகிறான். அந்த புற்று நகரத்தில் நேர்த்தியான சாலைகள், உணவு கிடங்குகள், உறைவிடம், முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இடங்கள், நர்சரி, குப்பை போடும் இடம், அரசி அறை போன்று தனித்தனியே ஒரு கோட்டை போன்று உள்ளன என்று அறிவியலாளர் வீடியோ படத்துடன் பெர்ட் ஹால்டப்ளர்

( Bert Holldobler) மற்றும் அகழ் ஆராய்ச்சியாளர் லூயிஸ் போர்ஜ் கூறியுள்ளது. இறைவனின் இறக்க நெஞ்சம் சிறு பிறவிகளுக்கும் இருப்பதனை எடுத்து காட்டுகின்றதலல்லவா? ஆகவே நம்மை படைத்த ஏக இறைவனுக்கு என்றென்றும் நன்றி உணர்வுடன் இருப்பது நமது தலையாய கடமையாகும்.

 

 

           

Sunday, 2 July, 2023

வாழ்வோமா வாருங்கள் நாம் வளமாக நலமாக!

 


 (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

சுகம் என்பது பல கோடி சொத்துக்கள் இருந்தால் மட்டும் வருவதில்லை. அபரிமிதமான பணம் இருந்தால் அதனை எப்படி கட்டிக் காப்பது என்ற எண்ணத்திலே நிம்மதியினை சிலர் தொலைத்து விடுவர். புகழ் இருந்தால் வீண் பழி, பொறாமையும் சிலரை ஆட்டிப் படைக்க ஆரம்பிக்கும். எப்படி இறப்பும், பிறப்பும், இரணமும் யாரும் நிர்ணயிக்கமுடியாதோ அதேபோன்று தான் சந்தோஷம் எப்படி வரும் என்று சொல்லமுடியாது. அதனை பிறராலும் நிரந்தரமாக கொடுக்க முடியாது. வாழ்க்கையில் சிறந்ததினை தேர்ந்தெடுப்பது சந்தோசத்தினைத் தரும். அவனவன் எண்ணத்திலும், நடத்தையிலும் தான் நல்ல சுகத்தினை அடைய முடியும். சந்தோசத்தினை தேர்ந்தெடுப்பவர் தன்னுடைய குறிக்கோளை அடைந்து விடுவர். உறுதியான கொள்கை நம்பிக்கையூட்டி வெற்றியினைத் தேடித் தரும்.

இஸ்லாம் வாழ்வின்  உள்ளுணர்வில் சொத்து, குழந்தைகள், நன்றிக் கடனோடு இருப்பது சுகம் தரும் என்று கூறுகிறது. புற வாழ்க்கையில் சொத்து, நோயற்ற . வாழ்வு, நல்ல நண்பர்கள், நல்ல வாழ்க்கை துணை அவசியம் என்று கூறுகிறது. ஒரு மனிதனைப் பார்த்து சிரிப்பதும் ஒரு நற்செயல்(பரக்கத்) எனறு கூறுகிறது. உடல் நலத்துடன் வாழ்வது, அளவோடு உணவோ, தண்ணீரோ எடுத்துக் கொள்வது, உடல் சுத்தம், தியானம், சட்டத்திற்குட்பட்ட பொழுதுபோக்கு, இயற்கையினை ரசிப்பது, உதாரணத்திற்கு, மரம், செடி, பூ, மலை, கடல், ஆறு, நீர் வீழ்ச்சி, பறவைகள் ஓசை போன்றவை  மனிதனை உட்சாகப் படுத்தும். மற்றவர்கள் வெறுப்பது பொய் சொல்வது, புறம் பேசுவது, கூடா நட்பு கொள்வது, கெட்ட எண்ணங்கள், பார்வையினை, மனதினை சஞ்சலத்திற்குட்பட வைப்பது ஆகும்..

மன உளைச்சல் வருவதற்கு முக்கிய காரணங்கள்:

1) கொள்கையில்லா மானக்கேடான செயல்.

2) செய்த தவறை திருந்தாமல் திரும்பத்திரும்ப செய்வது.

3) தேவையில்லா பேச்சு, வீணான, அர்த்தமற்ற வாக்குவாதம்,

4) தீய நண்பர்கள் சகவாசம்.

5) சொன்னதினை காப்பாற்ற முடியாதது, வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது.

6) அதிர்ஷ்டம் கதவினை தட்டும்போது பயன் படுத்திக் கொள்ள தவறியது.

6) பொருள் தான் ஒரே சுகம் என்று அதனையே எண்ணி வாழாதிருப்பது.

ஒருவர் புற்றுநோய் போன்றவற்றால் அவதிப் படுகிறார். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் குறிப்பிட்ட காலத்திற்குள் இறைவனடி சேர்ந்து விடுவார் என்று கணித்து அதனை நோயாளியும் அறிந்து விட்டார் என்றால் அவருடைய மரணம் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே வந்து விடும் என்று இங்கிலாந்து நாட்டின் எடின்பரோ மருத்துவமனை தலைமை மருத்துவர் (Scott murray) ஸ்காட் முரே கூறுகிறார்.

வாழும்போது நன்றியுடன் வாழுங்கள்: இஸ்லாத்தில் நம்மை உலகில் மனிதனாக படைத்து பல்வேறு சொத்து சுகங்களையெல்லாம் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்த தொழுகையினை கடைப் பிடித்து வாருங்கள் என்று அறிவுறுத்துகிறது. அதனையே ‘டச்’ நாட்டின் ஆய்வு ஒன்று, 'இளம்வயதைத் தாண்டி, நடு மற்றும் முதுமையினை தாண்டும் போது உடல் சம்பந்தமான பல தொல்லைகளும், பல அன்பிற்கினியவர்களை இழந்து தனிமையில் இருப்பவர்கள் அவர்கள் தங்கள் வாழ்நாளில் நன்றியுடன் அன்பு செலுத்தியிருந்தால் தங்களை தனி மரமாக நினைக்க மாட்டார்கள். அமெரிக்கா ஹார்வார்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியில் அன்பான மனைவி அல்லது கணவன் கிடைத்து விட்டால் பல்லாண்டு வாழலாமாம், நெதர்லாந்து ஹார்லேன்(Netharland Hearlen open university) திறந்த வெளி பல்கலைக் கழக பேராசிரியர் ஜெனிபர் கூறும்போது ஒருவர் நன்றியுடன் இருக்க வேண்டுமென்றால் நட்பு வட்டாரத்தினை அதிகப் படுத்தி, சமூக வலைக்குட்பட்டவராக இருக்க வேண்டுமென்கிறார். பிரிட்டிஷ் ஆய்வு ஒன்றில் 2021ம் ஆண்டு கொரானா காலத்தில் உற்றார், உறவினர், உடன் பிறந்தோரை காண இயலாதவர்கள் ஆன்லைன் பேச்சு தொடர்பினை ஏற்படுத்தி உறவினை மேம்படுத்திக் கொண்டார்கள் என்று கூறுகிறது.

 

உங்கள் உடலுக்குத் தேவைப் படுகின்ற மருத்துவ குறிப்பு:

2009ம் ஆண்டு ஜெர்மனிய அரசு ஒரு சட்டம் கொண்டுவந்தது.அதனில் குடிமக்கள் வருங்காலங்களில் உங்களுக்கு தேவைப் படுகின்ற மருத்துவ வசதி, ஒவ்வாமை, மருத்துவர்  பற்றிய குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டும் என்று அறிவுத்தப் பட்டுள்ளது. ஜெர்மனிய பெர்லின் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் ஜான் கிராவ் 2019ம் ஆண்டில் கூறும்போது உங்களுக்கு இருக்கும் நேரம், அதற்கு தேவைப் படுகின்ற மருத்துவர், போன்றவற்றினை, சொத்து பாகப் பிரிவினை, பவர் ஆப் அட்டர்னி போன்றவற்றை குறிப்பு எழுதி வையுங்கள் ஏனென்றால் 'தூங்குகின்றபோது எழுப்புகின்ற மூச்சு டக் என்று போனாலும் போச்சு' என்ற பழமொழிக்கிணங்க திடீரென்று ஏற்படுகின்ற அசவ்கரியங்களால் உங்கள் உற்றார், உறவினர் ஆகியோர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்துகிறார்.

மறப்பது, மன்னிப்பதின் பலன்:

பெல்ஜியம் நாட்டின் (Kulevan) குளேவின் பல்கலைக் கழக பேராசிரியை Jenny Dezutter ஜே டுசெட்டெர் உற்றார், உறவினர், உடன் பிறந்தோர் செய்த சில தவறுகளை மன்னிக்காவிட்டால் காலம் முழுவதும் அழுக்கு மூட்டைகளை முதுகில் பாரமாக சுமந்தவர் ஆவீர். அதனால் காலம் முழுவதும் அவதிப் படுவீர். ஆகவே மற்றவர்கள் செய்த தவறை உடனேயே மன்னித்து விடுங்கள், அதற்காக சரியான நேரத்தினை எதிர்பார்க்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார்.

மருத்துவம் பாதி, தைரியம் மீதி:

பல ஆண்டுகளாக அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக் கழக மருத்துவமனையில் நோய் தடுப்பு சிகிச்சையளிக்கும் மருத்துவர்(Byock) பயோக் பல நோயாளிகளின் சிகிச்சைகளை கண்காணித்து வருகின்றார். அவர் ஒரு உதாரணத்தினை சுட்டிக் காட்டுகிறார். 'ஒருவர் கார் விபத்தில் சிக்கி இறந்து விடும் நிலையில் இருந்தால், அவர் ஒரு வேலை சுய உணர்வு இருந்தால் என்ன சொல்ல வேண்டும். தனது மனைவி, பெற்றோர், குழந்தைகள், ஆகியோரிடம் ‘முதலில் என்னை மன்னித்து விடுங்கள், தான் தவறிழைத்திருந்தால் என்னை சபிக்காமல் மறந்து விடுங்கள்,  நானும் உங்களை மன்னித்து விடுகிறேன், உங்களை உண்மையிலேயே நேசிக்கியின்றேன், அன்பு செலுத்துகிறேன்' என்று சொல்லுங்கள். அது போன்ற கார் விபத்து உங்களுக்கு நடக்க வேண்டும் அப்போது தான் அதுபோன்ற வார்த்தைகளை சொல்ல வேண்டும் என்று காலம் தாழ்த்தாதீர்கள். நலமுடன் இருக்கும்போதே நல்ல நாலு வார்த்தைகளை கூறுங்கள் என்று சொல்கிறார் டாக்டர் பாயோக். மேலும் அது போன்ற நல்ல வார்த்தைகளை சொல்லும்போது உங்கள் மன இருக்கத்தினை லேசாக்கி, அன்பின் பாச பிடிப்பினை இறுக்கி நோயிலிருந்து நலம் பெற உதவுமாம்.

சந்தோசமாக இருப்பவர்கள் எதிர்மறை நடவடிக்கையில் இறங்க மாட்டார்கள். சந்தோசமாக இருப்பவர்கள் நேரத்தோடு வேலைக்கு வருவதுடன், சாக்குபோக்கு சொல்லி வேலைக்கு வராமல் இருக்க மாட்டார்கள். அப்படிப் பட்டவர்களால் உற்பத்தி அதிகரிக்கும்.

சந்தோசமான வாழ்வில் பல நன்மைகள் அடையலாம்

1) நல்ல துணைவியர் கிடைத்துவிட்டால் பல காலம் வாழலாம்.

2) நெஞ்சம் படபடப்பு, தலைவலி, போன்றவை குறையும்.

3) இருதய நோய் வருவது தடுக்கப் படும்.

4) நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கும்

5) தானும் சந்தோஷமாகி மற்றவர்களுக்கும் மகிழ்வினைத் தரும்.

6) உடல் சக்தியினை அதிகப்படுத்தும்

7) மாத சம்பளம் பெறுபவர்களை விட மணியினைக் கணக்கிட்டு சம்பளம் பெறுபவர்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.

8) ஒருவர் ஏற்படுத்தும் நட்பு, அவர் அணியும் வெள்ளை மற்றும் சுத்தமான உடையிலும் கூட சந்தோசத்தியனைக் காணலாம்.

9) குடும்பத்தினை வீட்டுக்குள்ளேயே அடைத்து வைப்பதினை விட இடைவெளி விட்டு வெளியே அழைத்து செல்வது சந்தோசத்தினைக் கொடுக்குமாம். அதுவும் நீர், நிலை அருகில் அழைத்துச் சென்றால் சந்தோசமாக இருக்குமாம். ஆகவே தான் கோடை வாசஸ்தலம், குற்றாலம் போன்ற நீர் வீழ்ச்சிகளுக்கு நமது பெரியவர்கள் குடும்பத்தினை அழைத்துச் செல்வார்கள். குடும்ப உறுப்பினர்கள் சந்தோசமாக இருந்தால் ஒருவருடைய சந்தோஷமும் பெருகுமாம்.

மகிழ்வுடன் வாழ்வதற்கு முக்கிய நடைமுறைகள்:

1) தீய செயல்கள் விட்டொழித்தால்.

2) சிரித்த முகத்துடன் காட்சியளித்தல், அதற்காக பொய்யான சிரிக்கக் கூடாது. பெண்கள் சிரித்தாலோ அல்லது அந்நிய ஆண்கள் பெண்களை நோக்கி சிரித்தாலோ தவறாக கருத்திக்கொள்வர். அதனை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது.

3) இடைவிடா உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி உங்களது உடல் அழகு படுத்துவது மட்டுமல்லாமல், உங்களிடம் இருக்கும் படபடப்பு, உயர் ரத்த அழுத்தம், கோபம் போன்றவை நீங்கி, முகத்தினையும் அழகுப் படுத்தும்.

4) நேரத்தோடு குறைந்த அளவு 7 மணி நேரம் இரவு தூக்கம் இதய நோயை நீக்குகிறது, உடல் சோர்வு, சக்கரை நோயை தடுக்கிறது.

5) உடலுக்கு, வயதிற்கேற்ற உணவினை சாப்பிடுவது

6) நன்றியுடன் பயணிப்பது, மற்றவர்கள் நற்செயல்களை பாராட்ட மறக்காதது.

7) உங்கள் தவறுகளை ஒத்துக் கொள்வது

8) புத்தகங்கள், பத்திரிக்கைகள்  படிப்பது, உலக செய்திகளை அறிந்து கொள்வது

9) பெற்றவர்கள் சொத்து, சுகம், செல்வதுடன் ஒப்பிட்டு பார்க்காதது

10) ஒழுகீனமில்லாத வாழ்க்கை

11) உங்கள் வருங்கால ஒரு வார திட்டத்தினை குறிப்பெடுப்பது  

12) உங்கள் கையில் பல மணி நேரம் போன் இல்லை என்று நினைத்து உங்கள் மனதினை ஓர் நிலைப் படுத்தி மூளைக்கும் அமைதிகொடுத்து, சிந்தனைகளை அலைய விடாது இருப்பது உதவும், அதே போன்று தான் இரவு நேரங்களில் தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு காணொளிகளை காணாமல் தவிர்ப்பது

13) சிறிது நேரம் உங்களை மனிதனாக படைத்த இறைவனை நினைத்து அமைதியாக வணங்குவது.

14) நல்ல சமூக அமைப்பினில் தொடர்புடன் இருப்பது

15) படுக்கும் அறை மகிழ்ச்சியை தரும் விதம் சுத்தமாக, காற்றோட்டத்துடன் அமைத்துக் கொள்வது. படுக்கை அறையில் பழைய பகைமை, குறை, சண்டை, சச்சரவினை தவிர்த்து சந்தோசத்துடன், நிம்மதியாக  தூங்குவதிற்குத் தான் என்று உறுதி கொள்ள வேண்டும்.

வாழும்போது நலமாக, சந்தோசமாக, அன்புடன், பரிவுடன்,பாசத்துடன், பகை மறந்து, குடும்ப, சமூக வாழ உறவுடன் வாழவேண்டும் ,இல்லையென்றால் அந்த வாழ்வு நரகமாகவே அமையும்.

 

 

Thursday, 13 April, 2023

நாகாக்க-காவாக்கால் சோகப்பார் சொல்லிழுக்குப்பட்டு!

 

              (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இஸ்லாமிய மார்க்கத்தில் எல்லா சமுதாயத்திற்கும், எல்லா காலத்திலும் பொருந்தும் விதமாக, 'ஒருவர் மனித உறுப்புகளில் பாதுகாப்பது இரு உறுப்புகள் அவசியம், அவை ஒன்று நாக்கு, மற்றொன்று மர்ம உறுப்பு' ஆகியவையாகும் என்று அறிவுரை கூறியுள்ளது. அந்த இரண்டு உறுப்புகளையும் பாதுகாக்கத் தவறினால் தனக்கும், தனது குடும்பத்திற்கும், தன்னைச் சார்ந்த சமுதாயத்திற்கும், ஏன் நாட்டினுக்கும் கூட இழுக்காக முடியும் என்பதினை அறிந்தே சொல்லி உள்ளது எப்படி சாலச்சிறந்தது இந்தக் காலத்திற்கும் பொருந்தும் என்பதினை விளக்கவே இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

            உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அமெரிக்க கோல்ப் மைதானத்தில் பந்துகளை எடுத்துப் போடும் சேவகராக இருந்த ஒருவரின் மகனாக பிறந்து பிற்காலத்தில் உலக கோல்ப் விளையாட்டில் பல்வேறு பந்தயங்களில் வாகை சூடிய ‘டைகர் வூட்ஸ்’ பிற்காலத்தில் ஒரு போட்டிக்காக ஆஸ்திரேலியா சென்றபோது அங்கே ஒரு பெண்ணிடம் தொடர்பு கொண்டார் என்பதினை அறிந்த  அமெரிக்க மனைவி அவர் அமெரிக்கா திரும்பியதும் அவருடன் சண்டை போட்டதால் அந்த வெறுப்பில் மது அருந்தி தன் சுய நிலை இழந்து ஒரு விபத்தினை ஏற்படுத்தி வழக்கினையும் சந்தித்து விவாகரத்தில் உழன்றார். அதே நிலை தான் கல்லூரி படிப்பில் பாதியில் நிறுத்தி, பின்பு தனது கல்லூரி தோழனுடன் 'மைக்ரோ சாப்ட்ஸ்' என்ற கணினி மையம் ஆரம்பித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் ஐந்திற்கும் இடம் பிடித்தவர் 'பில் கேட்ஸ்'. ஆனால் அவர் தன்னுடைய தொழில் பங்குதாரின் மனைவியுடன் தொடர்பில் இருந்தார் என்ற தகவல் அறிந்து தொழில் தோழனின் நட்பையும் இழந்தார். மனைவியுடையான குடும்ப வாழ்க்கையும் மணமுறிவில் முடிந்தது. இதுபோன்ற நபர்களிடம் யார் தான் வாழ முடியும் மட்டுமல்ல, சம்பாதித்த புகழ் அனைத்தையும், உலக நன் மதிப்பையும் இழந்தது தான் மிச்சம்.

            தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் ராணுவ வீரர் விடுமுறையில் வந்திருந்தார். அப்போது அந்த கிராமத்தில் இரு குழுவினர் தகராறில் காயமடைந்த ராணுவ வீரர் இறந்து விட்டார். அந்த குற்றவாளிகளில் ஒருவர் ஆளும் கட்சியைச் சார்ந்தவர். ஆகவே ப.ஜ.க கட்சியியைச் சார்ந்தவர்கள் 22.2.2023 அன்று ஒரு கண்டனக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி, 'பாண்டியன்' எங்களுக்கு துப்பாக்கியால் சுடவும் தெரியும், குண்டு வைக்கவும் தெரியும்' என்று வீர வசனம் பேசியது சர்ச்சைக்கு ஆளாகி வழக்கு பதிவும் செய்யப் பட்டது. உடனே அவர் ஜாமீனுக்காக உயர் மன்றத்தில் மனு செய்தபோது உயர் நீதிமன்றம் அவருக்கு கண்டனம் செய்து அவர் கூறியதிற்கு மன்னிப்பும் கோரச் செய்தது. அதேபோன்று சமீபத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் 13.2.2023 அன்று பட்டியலின ‘அருந்ததியர்’ மக்களை கேவலமாக பேசியதால் அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆளாகி, அந்த கட்சி வாங்க வேண்டிய வோட்டுகளும் குறைந்தன என்பது நீங்கள் அறிந்தீர்கள். ஆகவே தான் நம் முன்னோர்கள் ஒருவர் பேசும்போது என்ன பேசுகிறோம் என்பதினை உணர்ந்து பேச வேண்டும், ஏனென்றால் ஒருவர் நாக்கிலிருந்து புறப்படும் வார்த்தை வில்லிலிருந்து புறப்படும் அம்பைப் போன்றது, அந்த வார்த்தைகளை திரும்பப் பெறமுடியாது என்றும், நாவினை காத்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னார்கள். பெண்கள் கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் சத்தம் போட்டு பேசிக்கொண்டு இருந்தால் வயதான பெண்கள் 'ஏம்மா வாயை மூடுங்கள் ஸலாமத்து' பெறுவீர்கள் என்று சொல்லி அடக்குவார்கள்

            அமெரிக்க 2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பிற்கும், ஜோ பிடனுக்கும் நேரடி போட்டி அதில் ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோற்றாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு தனது சொந்த நாட்டு பாராளுமன்றத்தினையே தாக்கச் செய்து, பெண் விவகாரத்திலும் கைது செய்யப் பட்ட முதல் முன்னாள் ஜனாதிபதி என்பது அவர் வாயாலும், பெண் ஆசையாலும் அவமானப் பட்டார். அதேபோன்று தென் அமெரிக்க நாடான பிரேசிலில் 2022 ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ‘போல்சாரா சில்வா’  தோற்றாலும் தற்போதைய  ஜனாதிபதி ‘லூலூ’ அவர்களை அங்கீகரிக்க மறுத்து தனது ஆதரவாளர்களை பாராளுமன்றத்தினை தாக்கும் படி உத்தரவிட்டார். அதன் விளைவு தேர்தல் முடிவுகளை ஒப்புக் கொண்டு தன் சொந்த நாட்டினைவிட்டே ஓடினார் என்பதும் ஒரு வரலாறு. ஆகவே வார்த்தை, நடத்தையில் கண்ணியம், நாணயம்  வேண்டும் என்பதே மேற்கூறிய இரண்டு சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

            இந்திய தேசிய காங்கிரசில் தலைவர் பதவி வகித்த ராகுல் சமீபத்தில்  தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை இழந்து நீதிமன்ற கதவுகளை தட்டிக்கொண்டுள்ளார் என்பதிற்கு காரணம் என்னவென்றால் அவர் 2019ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் சொல்லிய ஒரு வார்த்தைக்காக குஜராத்தில் ஒரு நீதிமன்றத்தால் இந்திய தண்டனைச் சட்டம் 153(பி)(சி), 506(1) போன்றவைகளில் சமூக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் விதத்தில் பேசினார் என்ற மான நஷ்டஈடு வழக்கில் இரண்டு வருடம் தண்டனை கொடுக்கப் பட்டு அதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தால் மக்கள் சபை உறுப்பினர் பதவியையும் இழந்துள்ளார். அந்த வார்த்தை என்னவென்றால் ‘மோடிகள்’ எல்லோரும் திருடர்கள் அவர்கள் திருடிவிட்டு நாட்டினை விட்டு ஓடிவிடுவார்கள் என்று. ஆனால் மோடி என்பது ஒரு குஜராத்தி ஜாதியினைக் குறிக்கும் என்பதால் அதனால் பாதிக்கப் பட்ட ஒருவர் தொடரப் பட்ட வழக்கில் தான் தண்டனை பெற்றுள்ளார். அவர் குறிப்பிட்டதாக சொல்லப் படும் ‘மோடி’ என்பது சூதாட்டத்தில் தொடர்புடைய 'லலித் மோடி' லண்டனுக்கு ஓடிப் போனதும், பாங்கில் கடன் வாங்கி கட்டமுடியாமல் லண்டனுக்கு ஓடிய ‘நிராவ் மோடி’யினை குறித்தாலும், இந்திய நாட்டு பிரதமரையும் அவர் சார்ந்த மோடி வகுப்பினரையும் குறிவைத்து சொல்லப் பட்ட வார்த்தை என்று வழக்குத் தொடரப் பட்டு தண்டனையும் வழங்கப் பட்டது.

            பாரத நாட்டினில் சுதந்திரத்திற்காகவும், நாட்டிற்காகவும் அதிக தியாகம் செய்தவர்கள் நேரு குடும்பம் என்பதினை யாரும் மறுக்க முடியாது. இரும்பு மனுசி என்று போற்றப் பட்ட ‘இந்திரா காந்தி’ நாட்டின் ஒருமைப்பாட்டினை காக்க 1984ல் உயிர் தியாகம்  செய்தார். நாட்டில் வேகமான இளம் தலைமுனரின் எடுத்துக் காட்டாக வருவார் என்று எதிர்பார்த்த ‘சஞ்சய் காந்தி’ போதிய அனுபவம் இல்லாமல் விமானம் ஓட்டியதால் 1980 ல் இறந்தார். இலங்கை தமிழர்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று கருதி தீவிர நடவடிக்கை எடுத்த ராஜிவ் காந்தி அந்த இலங்கை தமிழர்களாலே 1991ல்  கொல்லப் பட்டார். அதன் பின்பு இளம் ரத்தம் ராகுல் முன்னேறிவருவார் என்று உ.பி. அமேதி மக்கள் சஞ்சய், ராஜிவ், சோனியாவிற்குப் பின்பு ராகுலை 2004லிலிருந்து 2019 வரை மக்களவை உறுப்பினராக தேர்தெடுத்தார்கள். ஆனால் அவர் தனது தொகுதியில் அதிக கவனம் செலுத்தாது, தேர்தல் நேரத்தில் ஹிந்து மக்களை கவருவதிக்காக மடாதிபதிகள், கோவில்கள் போன்ற வழிபாடு தளங்களில் சென்று கவனம் செலுத்தினார். அடிக்கடி இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டார். ஆகவே அந்த மக்கள் தன்னை மறுபடியும் தேர்தெடுக்க மாட்டார்கள் என்று கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதி நேரு குடும்பம் மீது பாசமிக்க முஸ்லிம்கள் என்று அங்கே நின்று வாகை சூடினார். ஆனாலும் அவரால் அந்த வயநாடு மக்கள் பலன் அடையவில்லை என்று பரவலாக பேசப் படுகிறது. அவர் அடுத்தது தமிழ்நாடு கன்னியாகுமரி, அல்லது சிவகங்கை  மாவட்டத்தினை குறி வைப்பதாகவே சொல்லப் படுகிறது. இவை எல்லாம் அரசியல். ஆனால் இங்கே வலியுறுத்துவது என்னவென்றால் காங்கிரஸ் உதவி தலைவர், பின்பு தலைவர் என்று பதவி வகித்தாலும் அதற்கு முதிர்ந்த செயல்கள் இல்லையே என்று சில சம்பவங்களைக் கொண்டு விளக்கலாம் என்று கருதுகிறேன்.

            மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1),(2),(3) ஆகியவற்றின் படி மன நலம் பாதிக்கப் பட்டவர், கடன் பிரச்சனையால் திவாலானவர், தேசியக் கொடியினை அவமதித்தவர், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள், தீவிரவாத செயல்களில் தொடர்பு, பாலியல் போன்ற பெண்களுக்கான குற்றங்கள், தேர்தலில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், ஊழல், முறைகேடு போன்ற குற்றங்களுக்காக தண்டனை பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற, மேலவை உறுப்பினர் போன்ற பதவிகளில் நீடிக்க முடியாது என்பது தான் அந்த சட்டம். அவர்கள் 8 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதையும் கூறியுள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 உட்பிரிவு 4ல் அப்படிப் பட்டவர்கள் உடனேயே பதவி இழக்காமல் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து தண்டனையினை நிறுத்தி மேல் நீதிமன்றங்கள் உத்தரவிட்டால் அவர்கள் பதவி தொடரலாம். இந்த சட்டப் பிரிவு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கே விரோதமானது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘லில்லி தாமஸ்’, ‘சுக்லா’ ஆகியோர் மனு செய்திருந்தனர். அவர்கள் சொல்லுவதினை ஏற்று சட்டம் 8 உட்பிரிவு 4 செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

            அந்த நேரத்தில் பிஹார் பிற்பட்டோர் சமுதாயத்தினைச்சார்ந்த லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் எம்.பி மசூத், சமாஜ்வாடி எம்.பி. ஆசம் கான், டி எம்.கே மந்திரி ராஜா, எம்.பி. கனிமொழி ஆகியோர் தங்கள் வழக்குகளில் தண்டனை எதிர் நோக்கி இருந்தனர். அவர்கள் கட்சிகள் மத்தியில் மன்மோகன் அரசினை ஆதரித்து இருந்தனர். அந்த சமயத்தில் ராகுல் துணை தலைவராக இருந்தார். மத்தியில் மந்திரி சபை தீர்மானித்து 2013ம் வருடத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தனர். அதில் தண்டனை பெற்றாலும் ஒருவர் முழு மேல்முறையீடு முடியும் வரை பதவி இழக்க வேண்டியதில்லை என்பதாகும். அதன் பின்னர் மன்மோகன் சிங் ஐ.நா சபையில் பேசுவதிற்காக அமெரிக்கா சென்றிருந்தார். ராகுல் வெளிநாடு சென்று திரும்பியிருந்தார். காங்கிரஸ் சார்பாக சட்ட திருத்த மசோதாவை பற்றி விளக்க ஒரு நிருபர் காங்கிரஸ் பிரதிநிதிகளிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நிருபர் கூட்டத்திற்கு வந்த ராகுல் என்ன மசோதா என்று கேட்டுவிட்டு, அதனை பார்வையிட்டபின்பு 'நான்சென்ஸ்' அது குப்பையில் போடவேண்டுமென்று கிழித்து போட்டுவிட்டார். அது அனைத்து தொலைக்காட்சியிலும் காட்டப் பட்டது. அதனை அமெரிக்காவில் முகாமிட்டிருக்கும் மன்மோகன் சிங்கிடம் அவர் காரியதரிசி சொன்னதும், சில நிமிடம் மெளனமாக இருந்த மன்மோகன் சிங் 'காரியதரிசியிடம்' 'do you think I must resign' அதாவது 'நான் ராஜினாமா செய்ய வேண்டுமா' என்று கேட்டுள்ளார். அதற்கு காரியதரிசி அனைத்தையும் டெல்லி சென்று சோனியாவினை கலந்த பின்பு முடிவு எடுங்கள் என்று கூறியதாக அவர் காரியதரிசி Sanjaya Baru ஓய்விற்கு பின்பு எழுதிய சுய சரிதையில் கூறியுள்ளார். அதன் பிறகு டெல்லி திரும்பியதும் சோனியா காந்தியை சந்தித்து விவாதத்திற்குப் பின்பு அந்த திருத்த மசோதா திரும்பப் பெறப்பட்டதால் லாலு பிரசாத் யாதவ், மசூது, ராஜா, கனிமொழி, ஆசாம் கான் ஆகியோர் சிறைவாசம் சென்றனர். காங்கிரஸ் யு.பி.ஏ. கூட்டணி அரசும் பதவி இழந்து 2014ல் பி.ஜே.பி அரசு பதவி ஏற்று இன்று வரை பதவியில் இருப்பதால் மதத்துவேசம், மத கலவரம், சிறுப்பான்மையோர் பாதிப்பு, பசுவின் பெயரால் கொல்லப் படுதல், சமூதாய ஒற்றுமைக்கு வேட்டு வைத்தல் போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுள்ளன என்பதினை யாரும் மறுக்கமுடியாது. இதேபோன்று தான் 2019ல் ராகுல் பிரதமந்திரியை ரபேல் விமானம் வாங்கிய விககாரத்தில், 'பிரதமரை குறிக்கும் விதமாக 'சவுக்கிடா சோர்' அதாவது காவலாளி திருடன் என்று குறிப்பிட்டு பேசியதால் உச்ச நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடரப்பட்டு, 'நிபந்தனையற்ற மன்னிப்பும்' பெற்றார்.

            ‘ராஜா வீட்டு கன்றுக் குட்டி’ என்ற நினைப்பில் மனம்போன போக்கில் காரியங்களை நடத்துவதால்  மிகவும் விசுவாசிகளான குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோனி, ஜோதிர்மயி சிந்தியா, ஜெட்டின் பிர்சாடா அசாம் ஹேமந்த் சர்மா, அசோக் சவான், கர்நாடக கிருஷ்ணா,அம்ரிந்தர் சிங்   போன்றவர்கள் கட்சியில் இருந்து ஒன்று விலகினர்  அல்லது தாமரை இலை தண்ணீராக இருந்து வருகின்றனர். தவளையும் தன் வாயால் கெடும் என்பதால் ராகுல் தன் வாயால் கெட்டுவிட்டு கன்னியாகுமரியிலிருந்து காஸ்மிர் வரை மராத்தான் நடை போட்டால் தனக்கு 2024 தேர்தலில் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றார். மராத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளவர்கள் அனைவரும் மாரத்தான் போட்டியினை நடத்துனருக்கு எல்லா நேரத்திலும் ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கக் கூடாது. ராகுல் பதவிநீக்கம் தன் வினை தன்னைச் சுடும் என்பதிற்கு எடுத்துக் காட்டு என்று  இப்போதாவது உணர்ந்தால் சரிதானே!

           

           

           

தாழ்த்தப் பட்ட மக்களின் எழுச்சி நாயகர் அம்பேத்கர்!.


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

நாளை சித்திரை முதல் நாள், தமிழ் மக்கள் கொண்டாடும் சித்திரை திருவிழாவிற்கு ஆரம்பம் நாள். அத்தோடு அனைவராலும் அண்ணல் என்று புகழைப் பட்ட அம்பேத்கர் பிறந்த நாளாகும். அவருக்கு மாலை போடுபவர்களுக்கு அவர் ஏன் ‘அண்ணல்’ என்று அழைக்கப் படுகிறார் என்று கேட்டால் இந்திய அரசியல் சட்டத்திற்கு தலைமையேற்றவர் என்று மட்டும் கூறுவார்கள். ஆனால் அவர் இந்திய ஜாதியக் கொடுமையினை காலில் போட்டு மிதித்துவிட்டு பீனிக்ஸ் பறவையாக உயர்ந்தவர் என்று பலருக்கும் தெரியாது.

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா,உயர் தாழ்வு உயர்வு சொல்வது பாவம்’ என்றார் சுப்ரமணிய பாரதி. அந்த ஜாதிய கொடுமைகளை வேரறுக்க சட்டத்தின் மூலம் அடித்தளம் அமைத்தவர் அண்ணல் அம்பேத்கர். 14.04.1891 அன்று பிறந்தவர். அவருடைய தந்தை ராம்ஜி காரெகோன் ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றினார். அவர் ‘மகர்’ என்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய, தீண்டத்தகாத இனத்தில் பிரிவில் பிறந்தவர். ராம்ஜிக்கு இரண்டு மகன்கள். அதில் இளையவர் அம்பேத்கர் ஆகும். 1901 ம் ஆண்டு அவர்களுக்கு ராம்ஜி ஒரு கடிதம் எழுதியிருந்தார். தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு கோடை விடுமுறை கழிக்க வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அதனை அறிந்த அம்பேத்கரும், அவருடைய சிறு வயது அண்ணனும் ‘சட்டாரா’ ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறி ‘மசூர்’ வந்திறங்கினர். அவர்களின் தந்தை வேலை காரணமாக ரயில் நிலையம் வரவில்லை. அங்கிருந்து தந்தை வேலை பார்க்கும் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியில் தான் செல்ல வேண்டும். ஆகவே சிறுவர் இருவரும் ஒரு மாட்டு வண்டியை  வாடகைக்கு அமர்த்த முயன்றனர். ஒரு மாட்டு வண்டி உரிமையாளர் அந்த சிறுவர்கள் கீழ் ஜாதி என்று தெரிந்து அவர் வர மறுத்து விட்டார். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு இருக்கும்போது, ஒரு நல்ல மனம் கொண்ட ரயில் நிலைய மேலாளர் வேறொரு மாட்டு வண்டி ஓட்டுனரிடம் அந்த சிறுவர்கள் பரிதாப நிலையினை எடுத்து கூறி அவர்களை தந்தை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்துச்செல்லுமாறு வேண்டினார். சிறிது தயக்கத்திற்குப் பின்பு அந்த மாட்டு வண்டிக்காரர், 'என் வண்டியில் அவர்கள் வரலாம், ஆனால் அவர்கள் தான் ஓட்ட வேண்டும், நான் அவர்கள் பக்கத்தில் உட்கார மாட்டேன், வாடகையும் அதிகம் வேண்டுமென்றார்’. அதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். வண்டி புறப்பட்டடது. வண்டி உரிமையாளர் அவர்கள் தீண்டத்தகாதவர் ஆனதால் அவர்கள் பக்கத்தில் உட்காராது வண்டிக்குப் பின்னால் நடந்து வந்தார்.

போகும் வழியில் அந்த சிறுவர்களுக்கு பசி எடுத்தது, ஆகையால் அவர்கள் கொண்டு வந்த உணவை தின்றார்கள். தாகம் தீர்க்க வழி நெடுக தண்ணீர் கேட்டார்கள் ஆனால் யாரும் கொடுக்க வில்லை. அதே போன்று அம்பேத்கர் படித்த பள்ளியில் அவரை மற்ற பிள்ளைகளுடன் அமர அனுமதிக்க வில்லை. அவருக்கு உட்கார ஒரு சாக்குப் பை கொடுத்தார்கள். அதேபோன்று பள்ளி தண்ணீர் தொட்டியில் அவரை தாகம் தீர்க்க விட வில்லை. மாறாக பள்ளி காவலாளி  உயரத்தில் நின்று கொண்டு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்து அம்பேத்கரை கையில் ஏந்தி தண்ணீர் குடிக்க வைத்தாராம். ஏதாவது ஒரு நாள் காவலாளி அலுவளுக்கு வரவில்லையென்றால் அம்பேத்கர் தாகத்தினை அடக்கிக் கொள்ள வேண்டுமாம். மற்ற மாணவர்களுக்கு ‘சமஸ்க்ரிதம்’ போதனை செய்தால் அவருக்கு மறுக்கப் பட்டதாம். மேற்கொண்ட சமுதாய கொடுமைகள் கண்டு மனம் வெதும்பி நாமும் மற்றவர்களுக்கு மேல் சமுதாயத்தில் உயர வேண்டும் என்று உறுதிமொழி எடுத்து படிக்க தொடங்கினாராம். வகுப்பில் முதல் மாணவராகி, இங்கிலாந்தில் மேல் படிப்பிற்கு இலவச சலுகை பெற்று உயர்ந்த பொருளாதார பட்டம் பெற்றார், அத்துடன் கொலம்பியா பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி டாக்டர் பட்டமும் பெற்றார். பின்பு லண்டனில் பாரிஸ்டர் சட்டம் பட்டமும் பெற்றார். எந்த சமுதாயம் அவரை ஒதுக்கியதோ அதே சமுதாயத்தில் உள்ள புரையோடிய ஜாதிய முறையினை ஒழித்து பின் தங்கிய, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு சலுகைகள் செய்ய வேண்டும் என்ற வைராக்கியம் கொண்டார். இந்தியா சுதந்திரமடைந்த பின்பு 1950 அரசியலமைப்பு சபையின் தலைவராகி முதன் முதல் சட்ட மற்றும் நீதி அமைச்சரானார். ஆகவேதான் இன்றும் சென்னை உயர் நீதி மன்ற வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் ஆளுயர சிலை உள்ளது. அதனால் தான் அவர் பிறந்த நாளை சிறப்பாக இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது.

Sunday, 19 March, 2023

கண்ணைத் திறந்து விட்டதா-நீதிதேவதை!

 

                      

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய அரசியலமைப்பு சபை முதன் முதலில் 9.12.1946 அன்று கூடியது. மறுபடியும் 14.8.1947 அன்று ஆங்கிலேய அரசிடமிருந்து விலகி முழு அதிகாரம் பெற்ற சபையாக மாறியது. ஆங்கிலேய அரசின் இந்திய வைஸ்ராயாக இருந்த லார்ட் மவுண்ட்பேட்டன் பிரபு திட்டத்தின் படி பாகிஸ்தான் என்ற தனி நாடாக 3.6.1947 அன்று தீர்மானிக்கப் பட்டது. இந்திய அரசிலமைப்பு சபை பி.ஆர். அம்பேத்கார் தலைமையில் முன்ஷி, முகமது சாதத்துல்லாஹ், அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார். கெய்ட்டான், பீட்டர் உறுப்பினர்களாக கொண்ட ஒரு குழுவினை 29.8.1947 அன்று இந்திய மக்கள் ஜாதி, மத, இன , மொழி உணர்வின்றி வேற்றுமையில் ஒற்றுமையாக, உரிமை பெற்று வாழ ஒரு அரசிலமைப்பை ஏற்படுத்தித்தர பணித்தது. 29.11.1949 இந்திய அரசிலமைப்பினை அனறைய அரசிலமைப்பு சபை ஏற்றுக் கொண்டு சட்டம் இயற்றப் பட்டது. அதன் படி 26.11.1950 அன்று அரசிலமைப்பு அமலுக்கு வந்தது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

நீதிமன்றம், பார்லிமெண்ட், நிர்வாகம் தனித்தனி அமைப்பாக இருந்தாலும், அரசிலமைப்பு சட்டம் 13ன் படி நீதிமன்றம் சட்டசபையால் இயற்றப்பட்ட சட்டங்கள் மக்கள் உரிமையினை பறிக்கக் கூடியதாக இருந்தால் அவற்றை சட்டப்படி செல்லாது என்று உரிமை வழங்கப் பட்டுள்ளது. அனைவரும் நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு பெண் கறுப்புத் துணியினை கண்ணில் கட்டி கண்ணை மறைத்தும், இடது கையில் சமமாக இருக்கக்கூடிய தராசும், வலது கையில் ஒரு நீண்ட வாளும் இருப்பதனை. அந்த சிலை கிரேக்க நீதி தேவதை, 'தேமிஸ்' என்பதினை பிரதிபலிப்பாகும், அதாவது நீதி மன்றங்கள் தீர்ப்புகள் வழங்கும்போது அரசியல், பொருளாதாரம், சமூக ஏற்றத் தாழ்வு அந்தஸ்து பார்க்காது, சட்டப்படி மக்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டுமென்ற அறிகுறியாகும்.

சமீப வருடங்களில் நீதிமன்ற தீர்ப்புகள் ஒரு பெரும்பான்மை மக்களின் பால் ஈர்க்கப் பட்டு, நீதி தேவன்களும் தங்கள் ஓய்விற்குப் பின்னால், கூலிங் பீரியட் என்ற சில ஓய்வு தினங்களுக்குப் பதிலாக கவர்னர் அல்லது ராஜ்ய சபா உறுப்பினர் பதவிகளை பெற்ற சம்பவங்கள் சாதாரண மக்களுக்கு சந்தேகமெழுப்புவது இயற்கைதானே!

உதாரணத்திற்கு, சொல்ல வேண்டுமென்றால் அரசியலமைப்பின் படி ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மார்க்கம், மத சம்பந்தமான வழிபாடுகளை நடத்திட அனுமதி அளிக்கப் படுகிறது. அதற்கு மாறாக அயோத்தியில் பாபரி என்ற பெயருள்ள பள்ளியில் இருக்குமிடத்தில் தான் புராணத்தில் கூறிய படி ராமர் பிறந்தார் என்று சொந்தம் கொண்டாடி,  'கர் சேவக்' என்ற இயக்கத்தினை ஆரம்பித்து 6.12.1992 அன்று சதி செய்து இடித்து விட்டார்கள் என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் 30 பேர்கள் மீது வழக்கினை சி.பி யை தொடர்ந்தது, இடித்ததினை அறிந்த உலகமே அதிர்ந்தது. அவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்று லக்னோ நீதிமன்றம் விடுதலை செய்தது அதைவிட பெரிய அதிர்ச்சியுடன் கலந்த தீர்ப்பாக ஆனது. அதன் மீது மேல் முறையீட்டில் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப் பட்டது. எல்லோரும் அரசிலமைப்பின் படி நேர்மையான தீர்ப்பு வரும் என்று நம்பிக்கையுடன் இருந்தபோது அந்த எண்ணத்தில் மண் விழுந்ததுபோல, அந்த இடம் ராமர் கோவில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தும், முஸ்லிம்கள் தொழுகை நடத்த 20 கிலோமீட்டர் தொலைவில் ஒரு இடம் சமீபத்தில் தான் ஒதுக்கப் பட்டுள்ளது என்று அறியும்போது நடுநிலையாளர்களை  கொதிக்க விட்டது. அத்தோடு நில்லாமல் ஒரு நீதிபதிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியும், இன்னொருவருக்கு கவர்னர் பதிவையும் அளித்து கவுரவப் படுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை என்று நடு நிலையார் சொல்லியது பத்திரிக்கையில் வந்துள்ளது. அந்த தீர்ப்பு எப்படி இருந்தது என்றால் 'கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த செயலாகவே தானே கருத முடியும். இந்தியாவில் வெவ்வேறு சமூகத்தினர் பக்கத்தப் பக்கத்து வீடுகளில் குடியிருக்கும்  இந்த நவீன உலகில் இரு சமூகத்தினரை இரும்புத் திரை போட்டு மறைத்த 'உத்தமபுர நடுச்சுவர்' செயலாகவேதானே கருத  முடிகிறது. இந்த சமயத்தில் சமூக ஒற்றுமை பற்றி காஞ்சி பெரியவர் 'சந்திரசேகர ஸ்வாமிகள்' காலத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம் குறித்து உங்களுக்கு சொல்லலாம் என நினைக்கின்றேன்  சங்கர மடத்திற்கு பக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலை 4.15 மணிக்கு தொழுகைக்காக அழைக்கப் படும் பாங்கு ஒலியினை கேட்டுத் தான் ஸ்வாமிகள் எழுந்து அருகில் உள்ள குளத்தில் குளிர்ந்த நீரில் நீராடுவாராம். ஒரு நாள் அந்த பாங்கு ஒலி கேட்காததால் அவர் தூங்கி விட்டாராம். அப்போது மடத்து ஊழியர்களை அழைத்து ஏன் அந்த பள்ளிவாசலில் அதிகாலை பாங்கு சொல்லவில்லை என்று கேட்டாராம். அதற்கு ஊழியர்கள், 'சுவாமிகளே, உங்கள் தூக்கம் கெடுகிறது என்று நாங்கள் தான் புகார் செய்ததால் அவர்கள் குறைத்து வைத்து விட்டார்கள் என்றார்களாம். அதனை கேட்ட சுவாமிகள் 'அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு பணிக்கு செல்லாதவர்கள் சோம்பேறியாவார்கள்' என்று சொல்லி பள்ளிவாசல் குழுவினரை மடத்திற்கு அழைத்து தன்னுடைய வருத்தத்தினை தெரிவித்து எப்போதும் போல அதிகாலை பாங்கினை சொல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாராம். ஆகவே மதசார்பற்ற நமது நாட்டில் மத வேறுபாடுடன் கூறிய அயோத்யா  தீர்ப்பு நடுநிலை மாறியது தானே!

1)    இந்திய சமூகம் பாரம்பரிய நாகரீகமிக்க கலாச்சாரத்திற்கு புகழ் பெற்றது.  ஒருவனுக்கு ஒருத்தி என்றும், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற ஏக பத்தினி விரத கொள்கை கடைபிடித்து ஓரின சேர்க்கையினை இந்திய கிரிமினல் சட்டம் பிரிவு 377 படி குற்றமாக்கப் பட்டது. அதற்கு தண்டனையாக அதிக பச்சமாக 10 வருட கடுங்காவல் தண்டனையும் பரிந்துரைக்கப் பட்டது. அது மேலை நாடுகளை விட நமது நாடு பண்பாட்டில் வேறுபட்டது என்ற ஒரு எடுத்துக் காட்டாகும். ஆனால் அதற்கு மாறாக 6.9.2018 அன்று நீதிமன்றம் இ.பி.கோ. 377 குற்றமில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் மூலம் நமது பாரம்பரிய கலாச்சாரம், பண்பாடு கெடுகிறது என்பது ஒருபக்கம், சிறார்கள் பாலின குற்றங்கள் அதிகரிக்க வழிவகை செய்யாதா?

2)    அடுத்த வினோதமான தீர்ப்பு எந்த ஆணும் எந்த பெண்ணும், அல்லது இரு வெவ்வேறு பெண்கள் சேர்ந்து வாழ வகை செய்யும் தீர்ப்பேயாகும். குஷ்பு மற்றும் கன்னியம்மாள் வழக்கில் உச்ச நீதிமன்றம் 'இரண்டு வயது வந்தோர் பாலின வேறுபாடு இல்லாமல் சேர்ந்து வாழலாம் என்று அனுமதி அளித்தது. அவ்வாறு செய்தால் சமூகத்தில் விவாகரத்து வழக்குகள் கூடாதா? கொடூர குற்றங்கள் நடக்க வழிவகை செய்யாதா?

தன் பாலின திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்ற பொது நல மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கு மத்திய அரசு, 'இந்திய சமூகம், பாரம்பரியம் அதுபோன்ற திருமணங்களை அங்கீகரிக்க வில்லை' என்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதே பதில் தான் இருபாலினர் ஒரே இடத்தில் உறவு மீறி தங்கலாமா என்ற கேள்வி வந்தபோது தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ததினால் நீதி மன்றமும் அனுமதியளித்தது என்று எடுத்துக் கொள்ளலாமா?

3)    உதாரணத்திற்கு டெல்லியில் ‘ஆர்பிட் பூனேவாலா’ என்ற வாலிபர் தன்னுடன் நெடுநாளைய தோழியும், தங்கியிருந்தவருமான வால்க்கர் என்ற பெண்ணை கூறு போட்ட சம்பவங்கள் தொடர் கதையாகிய வழி செய்யாதா? இன்னொரு சமீபகால சம்பவம் கூர்கிராமில் நடந்துள்ளது. கணினி பொறியாளர் ஒருவர் ம.பி. பிரதேச குவாலியர் பெண்ணை மணமுடித்து வாழ்ந்து வந்தார். அவர் மனைவி கர்பிணியானதும் பிரசவத்திற்காக ஊருக்கு அனுப்பி விட்டார். ஆனால் அதன் பின்னர் தன்னுடன் கணினி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணுடன் வாழ்ந்து வந்தார். மனைவியினை மறந்து விட்டார். மனைவி திடீரென்று கூர்கிராம் வீட்டிற்கு வந்தது பேரதிர்ச்சியாக இருந்து காவல் நிலையம், கோர்ட்டு  வரை சென்றிருக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு என்ன தெரியுமா, 'கூர்கிராம் பெண் கணவருடன் மூன்று நாட்களும், குவாலியர் பெண் கணவருடன் மூன்று நாட்களும் பகிர்ந்து கொண்டு விடுபட்ட நாள் அவர் விருப்பப் பட இருவரில் ஒருவடன் வாழலாமாம். அப்போது  இ.பி.கோ 497 என்ற ‘அடல்ட்ரி’ சட்டம் காற்றில் பறக்க விடலாமா? என்ற கேள்வி உங்களுக்கு எழாமலில்லை தானே!

4)    ஆனால் புது உச்ச நீதிமன்ற தலைமை ஏற்ற பிறகு நீதி, நேர்மையாக வழங்கப் படும் என்ற நம்பிக்கை இந்திய மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது என்று கீழே கொடுக்கப் பட்ட தீர்ப்புகளில் ஏற்பட்டிருக்கிறது என்று பரவலாக பேசப் படுகிறது:

1) பி.ஜே.பி தலைவர் மற்றும் வழக்கறிஞர் அஸ்வினிக் குமார் உச்ச நீதிமன்றத்தில் 5.12.2022 அன்று தாக்கல் செய்த மனுவில், 'மத மாற்ற சட்டம் அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டிருந்தார்'. ஏனென்றால் மத்தியில் அதன் அரசு ஆட்சியில் இருக்கும் என்ற தைரியமா என்னவோ! அதற்கு உச்ச நீதிமன்றம் நாட்டின் பண்பாடு, பாரம்பரியம், அரசியல் சட்டப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று தள்ளுபடி செய்துள்ளது.

2) அதே வழக்கறிஞர் 18.12.2019ல் தாக்கல் செய்த மனுவில் எங்கெல்லாம் முஸ்லிம்கள், கிருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அந்த மாநிலங்களில் ஹிந்துக்கள் மைனாரிட்டி என்ற நிலை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு 'இதுபோன்ற கோரிக்கையினை 'National Commission of Minorities Act 1992 அன்றே பரிசீலனை செய்து 23.10.1993 அன்று அறிக்கை வெளியிட்டது. ஆகவே தேவையுள்ளது என்று தள்ளுபடி செய்துள்ளது.

3) 10.12.2018 அன்று மேகாலயா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் 'இந்தியா பிரிந்து பாகிஸ்தான் தனி நாடாக இல்லாமல், முஸ்லிம் நாடாக மாற்றி அறிவிக்கப் பட்டதோ அதேபோன்று இந்தியாவினையும் ஹிந்து நாடாக அறிவித்திருக்க வேண்டும்' என்ற தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் பரிசீலனை செய்து, 'மேகலைய உயர் நீதிமன்ற தீர்ப்பு அரசிலமைப்பு சட்டத்திற்கும், அதன் நோக்கத்திற்கும் நேர் மாறானது என்று நெத்தியடி தீர்ப்பு வழங்கியது' பாராட்டாமல் இருக்க முடிவதில்லையா?

4) அதேபோன்று தான் உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் சச்சின் குப்தா ஒரு பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியர் மாட்டுக் கறி தின்பதினை தடை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார். அதற்கு உச்ச நீதிமன்றம் 'இந்திய மக்களில் பெரும்பான்மையோர் மாட்டுக் கறி தான் சாப்பிடுகின்றனர், குறிப்பாக பெரும்பான்மையான ஏழை, எளிய மக்கள் அதைத்தான் உணவாகவும் கொள்கின்றனர், வேலைவாய்ப்பும் அவர்களுக்கு மாட்டுக் கறி வியாபாரம் மூலமே உள்ளதால், அவ்வாறு செய்தால் இந்திய பொருளாதாரம் பாதிக்கும் என்றும், மக்களுக்கு எந்த உணவினை சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்க உரிமையுண்டு' என்றும் பரபரப்பான தீர்ப்பும் வழங்கியுள்ளது. இதுபோன்ற தீர்ப்பு மாட்டுக் கறி வியாபத்திற்காக மட்டுமல்லாமல், மாட்டுக் கறி சமையலுக்காக சேகரித்து வைத்துள்ளார்கள் என்றும், மாடுகளை அறுவைக்காக கொண்டு செல்கிறார்கள் என்று மாட்டு வியாபாரிகளை கொல்லக் கூடிய 'cow vigilant' என்ற பாசிச குழுவின் வாலை ஓட்ட அறுத்த செயலாகத் தானே கருத வேண்டியுள்ளது.

5) இன்னொருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'இந்தியாவினை ஆட்சி செய்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் உட்பட மற்ற வெளிநாட்டு ஆட்சியாளர்களை ‘கொள்ளைக்காரர்கள்’ என்று அறிவிக்க வேண்டும்' என்று கேட்டிருந்தார். அந்த மனு விசாரணைக்காக நீதியரசர்கள் ஜோசெப் மற்றும் நகரத்தானா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு, நீதிமன்றமும் மத சார்பற்றது, எங்கள் இருவரில் ஒருவர் கிருத்துவர், ஒருவர் ஹிந்து, அப்படி ஒற்றுமையான சமூகத்தினை  உருக்குலைய வைத்து வருங்கால சந்ததியினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம், அது போன்ற செயல்களால் முன்னேயரால் எழுதப் பட்ட உண்மை சரித்திரத்தினை மாற்றி எழுத வேண்டுமா என்று தள்ளுபடி செய்துள்ளனர்.

6) அதேபோன்று 15.06.1949 அரசியமைப்பு சபை தேர்தல் கமிஷனின் தலைமை கமிஷனர், மற்றும் உறுப்பினர் பற்றி சட்டப் பிரிவு 289, 324ல் விரிவாக கூறியுள்ளது. ஆனால் சமீப காலங்களில் மத்திய அரசு ஓய்வு பெறப்போகும் அரசு அதிகாரிகளை  அல்லது ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் அவர்கள் ஓய்வு காலம் 'cooling period' முடியுமுன்பே தேர்தல் கமிஷனர்களை நியமனம் செய்து அவர்களுக்கு வேண்டிய நேரத்தில் தேர்தல் அறிவிப்பது போன்ற நடவடிக்கைகள் பல குற்றச் சாட்டுகளுக்கு வழி வகுத்து விட்டது. ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜோசெப் தலைமையில் கூடி தேர்தல் கமிஷன் தனி (Independent commission) உரிமை உள்ளதாக இருக்க வேண்டும், அதனை தேர்வு செய்ய பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதி மன்ற தலைமை நீதியரசர் குழு உறுப்பினர்களை தெரிந்தெடுக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

8) சமீபத்திய மகாராஷ்ட்ரா கவர்னர் மகாராஷ்டிரா மந்திரிசபை குழப்பத்தில் தலையிட்டு நம்பிக்கை ஒட்டு நடத்த வேண்டும் என்று உத்தரவு அரசு கவிழ்ப்பில் துணை போவதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இந்திய மக்கள் மனதில் இன்னும் நீதி மறுக்க வில்லை என்றும், இனியும் நீதி தேவதை கண்ணை மூடிக் கொண்டு இருக்கப் போவதில்லை என்றும் ஒரு தடாலடி நடவடிக்கை என்றால் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை தானே. அதற்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மற்ற நீதியரசர்கள் வசை பாடுகள் வந்தாலும் அதனை கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு நடு நிலை இந்தியனின் கடமை என்றால் அது சரிதானே! சமூபத்திய ஒரு கருத்தரங்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், மத்திய சட்ட அமைச்சரும் புது டெல்லியில் கலந்து கொண்டார்கள். அதில் சட்ட அமைச்சர் நீதிபதிகள் தேர்வு குழு(Collegium) தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது, தகுதியான நீதிபதிகள் தேர்வு செய்ய அரசு தான் சரியான அமைப்பு என்றும் சொல்லியுள்ளார். அவர் நோக்கமே அரசுக்கு வேண்டியவர்ளகளை உச்ச, உயர் நீதிமன்றங்களுக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது போல பேசியுள்ளார். அதற்கு பதிலடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களோ 'நீதிபதிகள் தேர்வுக் குழு(Collegium) நேர்மையாகத் தேர்ந்தெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்கிறது என்று சட்ட அமைச்சர் கூறியதிற்கு பதிலடியாக  பதிலடியாக கூறியது உண்மையிலே நடுநிலையானவர்களும், ஊடகங்களும் பாராட்டுகின்றன. ஆனால் மாண்புமிகு சந்திரசூட் போல எவ்வளவு தலைமை நீதிபதிகள் இனிமேலும் வருவார்கள் என்ற கேள்வி எழாமலில்லை தானே!,