Thursday, 30 July 2026

கோர தாண்டவ யுத்தங்களும், மதங்களின் கட்டுப்பாடும்!

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

உள் நாட்டு கலவரங்களிலோ, போர்களிலோ அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள், வயதானோர் கொல்லப்   படுவதோ அன்றாட காட்சிகளாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் முற்றுகை போராட்டங்களில், உணவு, மருந்துப் பொருட்கள், எண்ணெய் வளங்கள் கிடைக்காமலும், பலர் காலரா, அம்மை போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டும், பட்டினிச்சாவுகளும், சத்தான உணவு கிடைக்காமலும், நல்ல குடி நீர் கிடைக்காமலும், அவதிப்படுவதினை பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலமாகவும் பார்த்துக் கொண்டு உள்ளோம். இஸ்ராயில் தாக்குதலால் 60,000 குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனராம். சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ராணுவ மந்திரிபீட் ஹாஹத்’ அங்குள்ள தேவாலயங்களில் உரை நிகழ்த்தும் போது கிறித்துவர்கள் பாலந்தீனத்தில் இழந்த புனித தலமான ஜெருசலத்தினை நாம் எப்படி சிலுவை யுத்தங்கள் போல போர் தொடுத்து திரும்பப் பெற வேண்டும் என்று கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கன் மந்திரி சபையில் அந்த ராணுவ மந்திரி மட்டும் தான் ஈரானுடன் போர் தொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அறிவுரை சொன்னதாக அவரே கூறியுள்ளார். அதன்  விலைவு உலக அளவில் எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை, சில்லறை பொருட்கள் விலை அதிகரித்து அப்பாவி மக்கள் சிரமப் படுவதினை காணலாம். சில சமயங்களில் அத்து மீறல்களையும் அறியலாம். அதுபோன்று யுத்த காலங்களில் பல்வேறு மதங்கள் என்னென்ன கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று கூறவேயும், அத்துடன் சிலுவை யுத்தங்களும் எப்படி நடந்தன என்று கூறவே இந்த கட்டுரை எழுதுகிறேன்.

               சிலுவை யுத்தங்கள் என்ன என்று காணலாம்:

மேற்கத்திய கிருத்துவர்களுக்கும், பாலஸ்தீன முஸ்லிம் மக்களுக்கும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளுக்கும் 1095 முதல், 1291 வரை எட்டு சிலுவை யுத்தங்கள் புனித தளமான ஜெருசலத்தினை யார் பிடித்து வெற்றி கொண்டாதுவது என்பதில் நடந்ததாகும். 1095ம் ஆண்டு முதலாம் சிலுவை யுத்தம் ரோம் கிருத்துவ போப் இரண்டாம் ‘ அர்பன்’ தலைமையில் நடந்தது. அதில் அவருக்கு ஓரளவு வெற்றியினை தந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் சிலுவை யுத்தம் 1148ல் தோல்வியில் முடிந்தது. அதன் விளைவு இஸ்லாமிய நாடுகளான எகிப்து, சிரியாவினை மன்னர்சலாவுதீன் அய்யூபி’ இணைத்தார். மூன்றாம் யுத்தத்தில் சலாவுதீனுக்கு சில தோல்விகளை தந்தாலும் ஜெருசலத்தினை கிருத்துவ படைகளால் கைப்பற்ற முடியவில்லை. நான்காம் போரில்பைஜான்டின்’ சாம்ராஜ்யத்திற்கு தோல்வியினைத் தந்து லத்தின் சாம்ராஜ்யம் நிலை நிறுத்தப் பட்டது. ஐந்தாம் சிலுவை யுத்தம் 1219-1222 வரை  எகிப்தினை பிடிப்பதிலேயே கவனம் செலுத்தியதால் தோல்வியினை தந்தது. ஆறாவது புனித யுத்தம் 1229ம் ஆண்டு இரண்டாம்பெடெரிக்’ மன்னரால் பேச்சுவார்த்தை மூலம் ஜெருசலம் பெறப் பட்டது. ஏழாவது சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினர். பிரான்ஸ் நாட்டின் மன்னர் ஒன்பதாம்லூயிஸ்’ படை எடுத்து 1248, 1270 ஆண்டுகளில் யுத்தங்கள் தோல்வியினைத் தந்தது. இஸ்லாமியஅடிமையாக இருந்து மன்னர்களாகிய  மம்லுக்குகள்; எகிப்து மற்றும் சிரியாவினை கைப்பற்றி 1260ம் ஆண்டில் இணைத்தனர்.  

               1095 ஆண்டு முதல் 1291 ஆண்டு வரை 15 லட்சம் பேர்கள் கொல்லப் பட்டதாக கூறப் படுகிறது. எப்போதெல்லாம் கிறித்துவர்கள் ஜெருசலத்தினை பிடித்தார்களோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் கொல்லப் பட்டு ஜெருசலம் நகரில் ரத்த ஆறு ஓடியதாம், ஆனால் முஸ்லிம் மன்னர்கள் சலாவுதீன் அய்யூபி, மம்லுக்குகள் பிடிக்கும் போது கிறித்துவர்கள் நீதத்துடன் நடத்தப் பட்டார்களாம். இந்த யுத்தங்களில் யார் வெற்றி பெற்றார்கள் என்று கேட்டீர்களேனென்றால் முஸ்லிம்கள் ஜெருசலத்தினை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர், கிருத்துவர்கள் ஸ்பெயின் நாட்டினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். 1291 ம் ஆண்டு இஸ்ராயில் தலைநகரம் அசர் முஸ்லிம் மம்லுக்குகள் கைப்பற்றி ஐரோப்பியா கட்டுப்பாட்டினை தளர்த்தினர். எப்படி முஸ்லிம்கள் சிலுவை யுத்தங்களில் கொல்லப் பட்டு ரத்த ஆறு ஓடியதோ அதேபோன்று தான் அமெரிக்க ராணுவ மந்திரி பீட் ஹெகத் இரான் போரை தொடங்க யோசனை சொன்னாரோ என்று தோன்றவில்லையா உங்களுக்கு. அதனால் தான் ஈரான் மீது போர் தொடுத்து அந்த நாட்டின் மதத் தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொல்லப் பட்டுள்ளனர்.  இஸ்ராயில் ராணுவ மந்திரிஇஸ்ராயில் காட்ஸ் சமீபத்தில் பேசும்போது அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கு இஸ்ராயில் ராணுவத்தளத்தினை பயன் படுத்தியதாக கூறியுள்ளதிலிருந்தது எதைக் காட்டுகின்றது என்றால் தமிழ் பழமொழி, 'பிள்ளையை’ கிள்ளிவிட்டு தொட்டிலையும்' ஆட்டும் செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?

               இது வரை இரண்டு உலக யுத்தங்கள் நடந்துள்ளது. அதில் ஏதாவது ஆக்கப் பூர்வமான செயல் இருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். முதலாம் உலகப் போரில் இறந்த அப்பாவி மக்கள் 22 லட்சமாம், அதில் பெண்கள், குழந்தைகள் மட்டும் 13 லட்சங்களாம். இந்த பட்டியலில் முற்றுகைகளாம் பசி,பட்டினி, காலரா,பிளேக், நோய்களால் இறந்தோர் பலராம். இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்தவர்கள் 50 லட்சம் பேர்களாம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் 1945ம் ஆண்டு கூடி ஐக்கிய நாடுகள் சபை அமையப்பட்டு எந்த தகராறும் பேச்சு வார்த்தைகள் மூலமே தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்துடன் அறிவிக்கப் பட்டது. ஆனால் அந்த சபையின் இஸ்ராயில் உறுப்பினரே இல்லை என்ற தைரியத்தில் காசா மீது போர் தொடுத்து சுமார் ஒரு லட்சம் பேர்கள் கொல்லப் பட்டனர், அதனைத் தொடர்ந்து பாலஸ்தீனம், லெபனான் மீதும் போர்கள் போர்கள் தொடுத்து பல்லாயிரக்கான மக்களை கொண்டும், வறுமைக்கு உச்சத்திற்கே தள்ளப் பட்டுள்ளனர் என்பதினை யாரும் மறுப்பதில்லை, அது மட்டுமா அவர்களுக்கு உதவ நடு நிலை நாடுகள் முயன்றபோதும் தடுக்கப்பட்டனர், செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் தாக்கப் பட்டது இஸ்ராயில் உலகிலே தனிக்காட்டு ராஜாவாக திகழ வேண்டும் என்பதே ஒரே நோக்கமா என்று தெரியவில்லையே

யூதர்கள்(Halaka) ஹலகாவில் கூறப் படுவது என்னவென்றால் ஒரு போர் தொடுப்பதற்கு முன்பு அமைதிக்கான பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும், அதனையே தான் கிருத்துவ மதமும் கூறுகிறது. புனித ஆலயம் ஆர்ச் பிஷப் ஆஸ்க்கார் ரோம் புத்தகத்தில் போர்களில் கடைப் பிடிக்கக் கூடிய ஒழுக்க முறைகள் விரிவாக கூறப் படுகிறது.அதனை கீழே காணலாம்:

இஸ்லாமிய கலீபா காலங்களில் படை தளபதிகளுக்கு என்னென்னெ உத்திரவு தெரியுமா? கலீபா அபூபக்கர் தனது படை வீரர்களுக்கு, 'போரின் போது வயதானோர், குழந்தை, பெண்கள், மற்றும் போர்களில் கலந்து கொள்ளாதவர்களைக் கொல்லக்கூடாது, காயப் படுத்தவும் கூடாது. திருக்குரானில், 'அல் முத்தபாவில்'  போரில் பேரித்தம் பழ மரங்கள் பழ மரங்களை மற்றும் வேறு பழ மரங்களை  வெட்டவோ, எரிக்கவோ கூடாது, விவசாய நிலங்களை அழிக்கக்கூடாது, நீர் நிலைகளில் நஞ்சை கலக்கவும்,அசுத்தப் படுத்தப்படவும் கூடாது, நகரங்கள், கட்டிடங்கள் நாசப் படுத்தக்கூடாது என்ற போதனைகள் உள்ளன. இஸ்லாமிய யுத்த கோட்பாடுகளை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் .நா. சபையால் அமைக்கப் பட்ட Geneva convention generalia சரத்தாக 1949 அமையப் பட்டுள்ளது.

               ஹிந்து மத, 'தர்ம யுத்' என்ற காவியத்தில், ‘மனுஸ்மிருதி மற்றும் மகாபாரதத்தில், சண்டை செய்யாத மக்களை தாக்கக் கூடாது. அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானோர், தூங்குபவர்கள், நிராயுத பாணிகள், சரணடைந்தோர் ஆகியோரை தாக்கக் கூடாது. நீர் நிலைகளை அழிக்கக் கூடாது, அசுத்தப் படுத்தக்  கூடாது, விவசாய நிலங்கள் ஆகியவற்றை அழிக்கக் கூடாது. போரில் கலந்து கொள்ளாத மிருகங்களை கொல்லவோ, ஊனப் படுத்தவோ கூடாது, பிணங்களை சின்னா பின்னமாக்கக் கூடாது என்பது போன்ற போதனைகள் உள்ளன.

               அமெரிக்காவின் ஈராக், ஈரான் போரகள், இஸ்ராயிலின் காசா,லெபனான், சிரியா போர்களும் மேற்கூறிய போர் கொள்கைளை கடைப் பிடித்ததா, என்றால் இல்லை என்பதினை சில உதாரணங்கள் மூலம் விளக்கலாம் என நினைக்கின்றேன்.

26.2.2026 அன்று ஈரானின் மினாப் பிரைமரி பள்ளியில் தாக்குதல் நடத்தி பள்ளி குழந்தைகளை கொன்றது அமெரிக்கா , 22.3.2025ல் இஸ்ராயில் தாக்குதலில் 2017ம் ஆண்டில் காசா நகரில் துருக்கி நாட்டின் 32 லட்சம் மில்லியன் செலவில் 3000 புற்று நோய் மருத்துவ மனை முற்றிலுமாக அழிக்கப் பட்டுள்ளது. ஆகவே எங்கே கிருத்துவ மற்றும் யூத கோட்பாடுகளை பறக்க விடப்பட்டுள்ளதோ என்று எண்ண உங்களுக்கு தோன்றவில்லையா?

               ஜப்பானை அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தில் அணு குண்டு வீசி நிலை குழையச் செய்தது. அணு கொண்டுவிட மிகவும் சக்தி வாய்ந்த நியூக்ளியர் ஆயுதம் தற்போது பல நாடுகளில் உள்ளன. அந்த நாடுகளில் உள்ளதால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுகிறார்கள். உதாரணத்திற்கு வட கொரியா நியுகிலீர் ஆயுதத்தினைக் கண்டு தென் கொரியா பயப் படுகிறது. அமெரிக்கா எப்படியாவது ஈரான் நியுகிலீர் ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று முயற்சி செய்கிறது. ஆனால் அமெரிக்கா சௌதி அராபியாவுடன் நியுகிலீர் ஆயுதம் தயாரிக்க உதவி செய்வதாக கூறுகிறேது. ஆகவே அமெரிக்கா காலனி காலத்து பிரித்தாளும் கொள்கையினை அராபியாவையும்-ஈரானையும் ஆட்டி படைக்கிறது. ஒரு தடவை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சுலபிகர் புட்டோ நிகிலீர் ஆய்த தேவையினை தயாரிக்க பற்றி கூறும் பொது, 'மக்கள் புல்லையும்,பூண்டையும் சாப்பிடலாம் அல்லது பட்டிணி கிடக்கலாம் ஆனால் நியுகிலீர் ஆயுதம் தயாரிக்க தேவைப் படும் செலவினை சரி கட்ட வேண்டும் என்று கூறினார். ஆனால் அவர் மகள் பெனாசிர் பூட்டோ துபையில்  குடியிருந்தார் என்று பத்திரிக்கைகள் கூறின.

பல கோடி மதிப்புள்ள வில்லா 24எமிரேட்ஸ் இல்லத்தில் தங்கி இருந்தாராம். இது எதனைக் காட்டுகிறது என்றால் ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லை பெண்ணே என்பது போல இல்லையா?

 

               பல திருமண வைபவங்களில் மக்கள் வீணாக செலவு செய்தும், ணவுப் பொருட்களை வீணாக்கியும் ஆடம்பர நடவடிக்கைகளை நாம் காணலாம். அப்போது இஸ்லாமிய நாடுகளில் மக்கள் பசியும், பட்டிணியாகவும், குடிக்க தண்ணீர் இல்லாமலும், உடுத்த ஆடை இல்லாமலும் அவதிப் படுகிறதை காணும்போது உலக மக்கள் ரத்த கண்ணீர் வடிக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் அந்த அவலங்களுக்கு தீர்வு காண ஐநா சபையோ அல்லது எந்த அமைப்போ அல்லது உலக நாடுகளோ வர வில்லை என்பது உங்களுக்கு இருக்க வில்லையா?

              

                             

                             

Sunday, 28 June 2026

குலை நடுங்கும் பாலகர் வன் முறைகள்?

 


(டாக்டர் .பீ. முகமது அலி, .பி.எஸ்.()

என்னுடன் சென்னை மண்ணடியில் இரும்பு வியாபாரம் செய்யும் நடை பயிலும் நண்பர் ராபியுதீன் அவர்கள் 19.06.2026ல் சந்தித்தபோது, 'அண்ணே, சிறுமிகள் பாலியல் தொந்தரவு செய்திகள் அதிகமாகிக் கொண்டே வருகிறதே அதனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்’ என்றார். அதனைத் தொடர்ந்து இந்த விழிப்புணர்வு கட்டுரையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

1)       18.06.2026ம் தேதி சென்னை புழல் பகுதியில் வசிக்கும் 50 வயது காளி என்ற முதியவர் பெற்றோர் வேலைக்குச் சென்றபோது வீட்டில் தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தையை சாக்லேட் வாங்கித் தருகிறேன் என்று கூட்டிச் சென்று  ஒதுக்குப் புறத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதினை செய்தித் தாள்கள் படம் பிடித்துக் காட்டின.

2)       15.06.2026 அன்று திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி பகுதியில் 19 வயது வெளி மாநில தொழிலாளி அந்தப் பகுதியில் உள்ள 3 வயது சிறுமியினை ஐந்து ரூபாய் பிஸ்கட் வாங்கித் தருகிறேன் என்று பாலியல் தொந்தரவு செய்து அந்தப் பகுதி மக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்ததும் பத்திரிகையில் வந்துள்ளது.

3)       21.05.2026ல் கோவை சூலூர் பகுதியில் 10வயது சிறுமியை 35 வயது கார்த்தி என்பவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரிகிறது.

4)       25.05.2026 அன்று சென்னை வட பழனி காவல் நிலைய தலைமைக் காவலர் காவல் நிலையத்திற்கு வந்த 16 வயது சிறுவனின் வாயில் மதுவினை கட்டாயமாக ஊற்றி ஓரின சேர்க்கையினை வற்புறுத்தி ஈடுபடுத்தியது தெரிய வந்து அந்த தலைமை காவலரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

5)       உ.பி கோரக்பூர் நகரில் 21.06,2026 அன்று இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டு இருந்த 9வயது சிறுமியினை 12வயது சிறுவன் தூக்கிச் சென்று கற்பழித்ததாக செய்தி வந்துள்ளது. அந்த சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது 'தான் இரவில் மது அருந்தி விட்டு தனது செல் போனில் ஆபாச படம் பார்த்திருந்ததாகவும், உணர்ச்சி மேலிட்டு அடுத்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியினை தூக்கிச் சென்று பாலியல் குற்றம் செய்து அதனை செல்போனில் படம் எடுத்ததாகவும் கூறினான். அவருடைய செல்ல போனை போலீசார் பரிசோதித்தபோது 50க்கு மேலிட்ட பாலான ஆபாச படங்கள் பதவியிறக்கம் செய்யப பட்டு இருந்தது தெரிகிறது.

6)       23.06.2026 அன்று இரவு டெல்லி குறுகிராம் பகுதியில் நடைபாதையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்தி ஆளில்லா பகுதியில் விட்டு விட்டார். அந்த குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.

7)       கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் உள்ள பள்ளியில் கணித ட்யூசன் ஆசிரியர் 25.06.2026 அன்று பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் பதியப்பட்டுள்ளது.

8)       9.06.2026 அன்று முதல் மூன்று முறை சென்னை புகழ் பெற்ற கண்ணகி நகர் பெண்கள் கபடி பயிற்சியாளர் ராஜு பாலியல் குற்றங்கள் செய்ததாகவும், மற்றும் கபடி அணியில் சேர வேண்டுமென்றால் தனது இச்சைக்கு இணங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக 17 வயது சிறுமி புகார் மீது 26.06.2926 அன்று வழக்கு பதியப்பட்டுள்ளது.

நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் சந்திக்கு வந்ததினை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். வழக்கு பதியாமல் எத்தனையே சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கலாம்.

 

அமெரிக்காவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ரத்த உறவில்லாதவர் தொடக் கூட உரிமையில்லை. பெற்றோர் பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவு பற்றி புகார் கொடுக்க வேண்டும்,  அது மட்டுமல்ல ஆசிரியர்கள், குழந்தைகள் காப்பக உரிமையாளர் ஆகியோரும் கொடுக்க  வேண்டியது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.

பெரும்பாலான சம்பவங்கள் குழந்தைகளை, சமூக வலை தளங்கள் மூலம் கவரப் பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தியது உலக அளவில் அதிகம். ஆகவே ஐக்கிய அரபு குடியரசுகள், ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, போன்றவை 15 வயதிற்குட்பட்டோர் சமூக வலை தளங்களில் ஈடுபடுவது தடுக்கப் பட்டுள்ளது. ஆனால் செல் போன் அதிகமாக பயன் படுத்தும் இந்தியாவில் இன்னும் அந்த கட்டுப்பாடு வரவில்லை வந்தால் தடுக்கலாம் தானே!

குழந்தைகள் பாலியல் துன்புறுத்துதல் சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பு சில வழி முறைகள் வகுத்துள்ளது, அதனை பின்பற்றி தமிழ்நாடு அரசு கீழ்கண்ட ஆணை வெளியிட்டுள்ளது;

1) குழந்தைகள் அவசர தொலைபேசி அழைப்பு 1098

2) அவசர உதவி 112

3) தேசிய சைபர் குற்றம் எண் 1930 போன்றவையாகும்/

உலக சுகாதார அமைப்பு குழந்தைகள் எவ்வளவு, எப்படி பாலியல் தொந்தரவிற்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்று பட்டியலிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்:

 

1) உலகில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஆறு பேர் பாலியல் தொந்தரவுக்கு ஈடுபடுத்தப் படுகின்றனர். அது கிட்டத்தட்ட 4கோடி.

2) 5 பெண்களில் ஒருவரும், 7 ஆண்களில் ஒருவரும் குழந்தைகளாக இருக்கும்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். மும்பையிலிருந்து இங்கு குடியேறிய ஒரு நடிகை கூட ஒரு பேட்டியில் தான் 10 வயதாக இருக்கும் போது அறியாத வயதில் தனது தந்தையே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக வெளிப்படையாக கூறினார். மாமா மார்கள் அல்லது சொந்தத்தில் உள்ள இளைஞர்களும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது இலை மறை காயாக இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு பாலியல் தொந்தரவு செய்யப் பட்ட சிறுவர், சிறுமிகள் பிற்காலத்தில் வளர்ந்த பின்பு அவர்களும் பாலியல் குற்றங்கள் செய்வதாக கூறப் படுகிறது.

2) அதுபோன்ற குற்றங்கள் நடவாதமாறு பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் நல்ல தொடல், கெட்ட தொடல்கள் என்றால் என்ன என்று விளக்கி சொல்ல வேண்டும்.

22.06.2026 அன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான போதை ஒழிப்பு மாரத்தான் ஓட்டம் மேலூரில் நடந்தது. அதனில் கலந்து கொண்ட உயர் கல்வி அமைச்சர் ஒரு பள்ளி சிறுமியின் காலை வலி நீங்க நீவி விட்டது கேள்விக்குறியானது. அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் அந்த சிறுமி ஓடி களைத்து காலை நீட்டி உட்கார்ந்து இருந்ததால் ஒரு தகப்பன் இடத்தில இருந்து அதனை செய்தேன் என்று விளக்கம் அளித்துள்ளதினை இங்கு சுட்டிக் காட்டி ஆகவே குழந்தைகளுக்கு எதுகுட் டச்’, எதுபேட் டச்’ என்று விளக்கம் செய்ய வேண்டும், அதற்கு பெற்றோர் மட்டும் போதாது, ஆசிரியர்கள், சமூக நல துறையினரையும் சாரும்.

 

யுத்த காலங்களில் சிறுமிகள், பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகின்றனர் என்பதற்கு உதாரணமாக .நா சபையின் ஒரு அங்கமான அமைப்பு  அளித்த அறிக்கையில் இஸ்ராயீல் ராணுவம் காசா பகுதியில் யுத்தத்தில் பெண்கள், சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக அதிர்ச்சி தரும் செய்தியினைபிரமிளா பதன்’ தாக்கல் செய்தது இஸ்ராயீல் அரசுக்கு சங்கடமாகி அந்த அறிக்கை சமர்ப்பித்த பிரமிளா அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று .நா வினை கேட்டுக் கொண்டுள்ளது. அதனையே தான் ஆப்பிரிக்கா உகாண்டா, காங்கோ,நைகிர் போன்ற நாடுகளிலும் நடக்கின்றதாம்.

 

எந்த பத்திரிகையும் குழந்தை பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதினை வெளியிட்டால் உடனே நாம் அவர்களை தூக்கில் போட வேண்டும், காய் அடிக்க வேண்டும், நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும் என்றும் குரல் எழுப்புகிறோம். ஆகவே ஒவ்வொரு நாட்டிலும் என்னன தண்டனை சட்டம் உள்ளது என்று காணலாம்.

1) இந்தியாவில் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க சட்டம் உள்ளது.

2) அதே போன்று தான் ‘zainab alert’ என்ற சட்டம் பாகிஸ்தான், பங்களா தேசம் நாட்டில் மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

3) ஆப்கானிஷ்தானில் கசையடி, மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

4) ஐரோப்பிய நாடுகளில் ஆயுள் தண்டனை விதிக்கப் படுகிறது.

5) ஆஸ்திராலியாவில் 'commonwealth criminal code for child exploitation' சட்டப்படி அது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஆயுள் தண்டனை வழங்கியும், குற்றவாளிகள் எந்த குழந்தை பராமரிப்பு வேளைகளில் ஈடுபடுத்தவும் கூடாது என்று அறிவுறுத்தப் படுகிறது.

 

உலக அளவில் எந்த நாடுகளில் குழந்தைகள் நலனுடம் இருக்கிறார்கள் என்பதினை உங்களுக்கு இந்த சமயத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

1) ஐஸ் நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்பான சிறப்பான சட்டம் உள்ளதாம். அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் பின்லாந்து நாடுகளிலும் இருக்கின்றன என்று குளோபல் சிட்டிசன் சொலுஷன் என்ற அமைப்பு சொல்கிறது..

2) ஜியார்ஜியா, அர்மேனியா, குயூபா  மற்றும் சிங்கப்பூரில் பெண் குழந்தைகள் குற்றங்கள் 14 சதவீதத்திற்கு குறைவாக இருக்கின்றனவாம்.

3) நெதர்லாந்து ஐரோப்பிய நாடுகளிடையே குழந்தைகள் வளர்ப்பதில் சிறப்பாக இருக்கின்றதாம்.

4) குழந்தைகளுடன் குடியேறுவதற்கு சிறந்த நகரமாக அமெரிக்கா கலிபோர்னியா இர்வின் நகரம் சொல்லப் படுகிறது.

5) யுனிசெப் என்ற ஐநா சவர்வதேச குழந்தைகள் அவசர நிதி அறிக்கையின் படி’ டச்’ நாடு குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனவாம்.

உலக அளவில் எந்த நாடுகளில் குழந்தைகள் நலனுடம் இருக்கிறார்கள் என்பதினை உங்களுக்கு இந்த சமயத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பெண் குழந்தைகளில் கண்களை காக்கும் இமைபோலவும், கண் கொத்தி பாம்பாகவும் இருந்து பாதுகாப்பது பெற்றோர்கள், உடன் பிறப்புகள் மற்றும் பராமரிப்போரின் கடமையல்லவா? குற்ற செயல் நடந்த பின்பு பகுத்தாய்வு செய்வதினை விட குற்றம் நடப்பதற்கு இடம் கொடுக்கக் கூடாது அல்லவா?

வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து, குடும்பங்களை விட்டுப் பிரிந்த ஆண்கள் அதிகமாக குற்ற செயலில் ஈடுபடுவதாக கூறப் படுகிறது, ஆகவே வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களை காவல் ரோந்துகளில் கண்காணிப்பது அவசியமே!

குற்றவாளிகள் பாலியல் குற்றங்கள் செய்து விட்டு சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் அல்லது பிறழ் சாட்சிகளால் தப்பி விடக்கூடாது, அதற்கு நீதி மன்றமும் ஒத்துழைத்து இரு கை ஓசையாக இருந்து குற்றவாளிகள் தண்டித்தால் குற்றங்கள் குறைய வழி வகுக்குமல்லவா?