Friday 21 June, 2024

Sacrifice, what way?

தியாக பெருநாள் தியாக அடையாளம் ஏன்?

(டாக்டர் பீமுகமது அலி.பீஎஸ்()


தியாகம் என்பது எந்த உயிரினங்களையும் கொல்லும் செயலினை கொண்டாடும் திருவிழா அல்ல,,மாறாகநரபலி கொடுப்பதிலிருந்து விலகி அநியாயமாக யாரையும் கொலை செய்வதுகடுஞ்சொல் பயன்படுத்துவதுபோன்ற  கொடுஞ்செயலில் ஈடுபட மாட்டேன் என்ற சபதம் ஏற்பது ஆகும்.


ஒவ்வொருவரும் குடும்பத்தில்சமூகத்தில்நாட்டில் ஏதோ ஒரு விதத்தில் தியாகம் செய்கின்றனர்பெற்ற தாய்  தனது கணவனுக்கு சேவை செய்தும்பெற்ற குழந்தைக்கு தனது உதிரத்தை பாலாக்கியும்தனக்கு சாப்பாடுஇல்லாவிட்டாலும்தனது குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டுமீதியதில் கணவனுக்கும் பகிர்ந்துகொடுத்தும்குழந்தைகளை பள்ளி  விட்டு  விட்டுதானும் வேலைக்கு செல்லும் தியாகத்தினை பார்க்கிறோம்தந்தை தனது வேலை பளுவினை வெளியில் சொல்லாது மாடாய் உழைத்து குடும்பத்தினை காப்பாற்ற நாலுகாசு சம்பாதித்து குடும்பத்தலைவனாக இருப்பதும் ஒரு தியாகம் தான்பெற்றோர் தங்களது குழந்தைகளுக்காகஊன்உறக்கம்உறவுபொழுது போக்குமற்றவர் கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு அர்ப்பணிக்கும்ஜன்மங்களாக இருப்பதும் ஒரு தியாகமே!


சமதாய ஆர்வலர்கள் தங்களை சுற்றுயுள்ள சமுதாய இயற்கை வாழ்விற்காக மரங்கள்செடிகள் பராமரித்துவளர்ப்பதுசுகாதார வாழ்விற்காக இலவச மருத்துவ முகம் நடத்துவதுகல்விக்கண் திறக்க கல்விநிலையங்கள் அமைப்பதுஅனாதைகள் பராமரிக்க இல்லங்கள் அமைப்பது போன்ற செயல்களும் தியாகம்தான்.


கோடீஸ்வரர்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடம் பிடிப்பதினை பெரிதாக கருதாதுதான்சம்பாதித்ததில் பங்கினை உலக வெப்ப மயமாகுவதிலிருந்து தடுப்பதற்கும்உலகில் பசிபட்டினி,பிணிகுடிப்பதிற்கூட தண்ணீர் இல்லா நிலை போக்கிவீடில்லா மக்களுக்கு வீடுகள் கட்டித்தருவதும் ஒரு வகையானதியாகம் தான்.


அரசியல் வாதிகள் தான் வகிக்கும் பதவிகள் தான் பகட்டோடு  வாழ்ந்துதனக்கும் தனது தற்போதையகுடும்பத்திற்கு மட்டுமல்லாமல் , தன் வருங்கால சந்ததிக்கும் சொத்து சேர்ப்பதிற்குத் தான் என்று நினைக்காதுதனது நாட்டு மக்களுக்காக உழைப்பதும் ஒரு விதமான தியாகம் தானே.

இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டிற்கு பஞ்சாப் மாநில காலிஸ்தான் தீவிரவாதிகளால் பிரிவினைவந்துவிடக்கூடாது மற்றும் சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவில் தீவிரவாதிகளின் கோட்டையாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் நடவடிக்கை எடுத்ததின் மூலம் சீக்கிய தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையானஇந்திரா அம்மையார் இறந்ததும் ஒரு தியாகம் தான்.

அதேபோன்று இலங்கை தமிழர்கள் சுய கௌரவத்தோடு  தன்னாட்சி பெற வேண்டும் என்று எண்ணத்தால்பிரதமராக இருந்த போது உழைத்த ராஜீவ் காந்தி உயிருடன் இருக்கக்கூடாது என்று அதே இலங்கைதீவிரவாதிகளால் 

மனித வெடிகுண்டுக்கு பலியானதும் ஒரு தியாகம் தானே!


பல மதங்களில் பல்வேறு விதமான தியாக பழக்க வழக்கங்கள் இருந்து வந்துள்ளனஹிந்து மதத்தில் கணவன்இறந்ததும் மயான தீயில் மனைவியும் மடியும் உடன் கட்டை ஏறும் தியாகமும் இருந்ததுமன்னர்கள் இறந்துவிட்டால் அவர்களின் மனைவிகள் மட்டுமல்லாமல்அந்தப்புர பெண்களும் உயிர் விடும் தியாகமும் இருந்ததுஜப்பானிய மன்னர் இறந்து விட்டால் அவரது பாதுகாப்புப் படையினர் தங்களது வயிற்றினை நீண்ட வால்களால்தங்களது வயிற்றினை கிழித்துக் கொண்டு மடியும் ஹராகிரி தியாகமும் உண்டு


அமெரிக்க்காவில் மீடோஸ் மழைப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் செப்டம்பர் 7-11, 1857 நாட்களில்மோட்சம் செல்லலாம் என்று 120 பேர்கள் மாண்டதாகவும் சொல்லப் படுகிறது. Sacrifycing என்ற தியாகம்கிரேக்கமெக்சிகோஇந்திய நாடுகளிலிருந்து வந்த பழக்கங்கள் என்று சொல்லப் படுகிறது மெக்சிகோநாட்டில் aziee celtic என்ற கோட்பாட்டில் சூரியனை வலிமைப் படுத்தி வணங்க வேண்டும் என்று வருடத்திற்கு20,000 பேர்கள் பலி கொடுக்கப் பட்டதாக கூறப் படுகின்றதுமாயா என்ற இனத்தவர் பெண்களை கிணற்றில்மூழ்கடிக்கும் (immersion)' என்ற கோட்பாடும் இருந்ததுசமீபத்தில் ஒரு பெண்ணுக்கு தோஷம் பிடித்தஉள்ளது என்று குடும்பத்தினர் முன்னிலையில் கங்கையில் மூழ்கடித்த காட்சியினையும் தொலைக்காட்சி படம்போட்டு காட்டினபெரு நாட்டில் பாதினேழாவது நூற்றாண்டு வரை அரசர் இறந்து விட்டால் பெண்களைகழுத்து நெரித்துக் கொல்லும் பழக்கமும் இருந்ததுஅதே போன்று தான் சீன நாட்டிலும் 17வது நூற்றாண்டுவரை அரசர் இறந்தால் அவருடன் இருந்தவர்களையும் மடியச் செய்யும் முறை இருந்ததாகவும் மேற்படிபழக்கங்கள் எல்லாம் மாறி பழங்கள்தானியங்கள்,பூக்கள்சில நேரங்களில் மதுக்களும் வழங்கும் வழக்கம்ஏற்பட்டதுஆனால் நேபாலில் மாதேவி திருவிழாவிழாவில் 2019 வருடம் எருமை,,ஆடு,,பன்றி என2,50,000'பிராணிகள் பலியிடப் பட்டதாக கூறப் படுகிறது.


முஸ்லிம்கள் இப்ராஹிம் அலைஹி வஸ்ஸலாம் வாழ்க்கையில் நடந்த தியாக சம்பவத்தினை ஏன் அதிகமாகநேசித்து ஹஜ் பெருநாள் கொண்டாடி ஆடுமாடுஒட்டகம் பலியிடுகிறார்கள் என்றும்ஏன் முகமது நபிசல்லலில்லாஹு அவர்கள் நடந்த வாழ்க்கையில் உள்ள சம்பவத்தினை முக்கியமாக கருதவில்லை என்றுகேள்வி சிலர் எழுப்புகின்றனர்மக்களை பலியிடும் காலத்தில் இப்ராஹிம் அலைஹிவஸல்லம் அவர்களின்ஓரிறை பக்தியை சோதிப்பத்திற்காக ஆசையாக பெற்ற இஸ்மாயில் அலைஹிவஸ்ஸலாம் என்ற ஆசைமகனையும் அறுத்துப் பலியிட முயன்றும்அதனை அறிந்த  பாலகனான இஸ்மாயில் அவர்களும் ஒத்துக்கொண்டும் இறைவன் அவர்கள் இறை பக்தியினை அறிந்து எனக்கு சதையோரத்தமோ வேண்டாம் மாறாகஉங்களை சோதிப்பதிற்காகவே கட்டளை இட்டேன் என்று கொழுத்த ஆட்டையும் அனுப்பி அதனை அறுத்துயார்யாருக்கு மூன்று பங்காக வைத்து கொடுக்க வேண்டும் என்றும் சொல்லியதால் இன்று லட்சக் கணக்கானபிராணிகள் வெட்டப்பட்டு உற்றார்உறவினர்உலக ஏழை எளியவர்களுக்கும் உணவாக பயன் பெறுவதால்முஸ்லிம்கள் கடைப் பிடித்து வருகிறார்கள்.


திரு குரானில் 25 நபி மார்கள் பற்றி சொல்லப்பட்டாலும் மனித இனம் தேன்றி அவர்களை நல் வழிப் படுத்த  1,24,000 நபி மார்கள் தோன்றியதாக சொல்லப் படுகிறதுஅவர்களின் அத்தனை குணங்களும் இறுதி நபிமுகமது ஸல்லல்லாஹு அவர்களிடம் காண முடிந்ததால் ரசூலுல்லாஹ் ஒரு நிகழ்வினை மட்டும் கொண்டாடமுடியவில்லையூதர்கள் நபி மோசஸ் குணங்களும்கிருத்துவர்கள் இயேசு பெருமானின் குணங்களும்ஜைனர்மஹாவீர் அவர்களின் குணங்களும்புத்த மத  கௌதம புத்தர் குணங்களும் ஒருங்கே அமைய பெற்றவர்களாகரசூலுல்லாஹ் திகழ்ந்தார்கள்கள்அந்தந்த மதங்களின் நபி மார்கள் போதித்த நல்லுபதேசங்களை மக்கள் மீறிநடந்தும்மறந்தும் இருந்ததால் அதனை நினைவுப் படுத்தும் அடையாளமாகவே ரசூலுல்லாஹ் இருந்துவந்தார்கள்அவர்களின் ஓரிறை கொள்கையினை கைவிட மக்கா வாசிகள் உகது மலை அளவிற்கு தங்கம்தருகிறோம்பிடித்த அழகிய மங்கையினை மனம் முடிக்கின்றோம் என்று ஆசை வார்த்தை சொன்னாலும் தனதுகொள்கையினை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.


ஆகவே தியாக திருநாளில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒவ்வொருவரும் சில காலகட்டங்களில் தியாகம் செய்வதினால் மட்டுமே வெற்றி வாகை சூட முடியும்உதாரணத்திற்குகணவனும்,மனைவியும் ஒருவருக்கொருவர் வீட்டுக் கொடுத்துக்கும் மன நிலை இருந்தால் மட்டுமே நல்லகுடும்பம் பல்கலைகழகமாகும்இளைஞர்கள் மதுபோதைமங்கைசூது போன்றவற்றில் மூழ்காமல் தியாகம்செய்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்மாணவர்கள் வீணான பொழுது போக்கில் ஈடுபடாதுவிளையாட்டில் கவனம் செலுத்தாதுகல்வியில் கவனம் கொண்டால் நிச்சயமாக பரிட்சையில் வெற்றிஅடையலாம்வியாபாரிகள் நேர்மையாகவும்நாணயமாகவும் தொழில் புரிந்தால் வியாபாரத்தில் வெற்றிஅடையலாம்அதனை விட்டுவிட்டு குறுக்கு வழியில் சம்பாதித்து முன்னேறலாம் என்றால் எப்படி நீர் குமிழி சிலநேரத்தில் மேலே எழும்பி மறைந்து விடுமோ அதுபோன்று மறைய நேரிடும்ஊழியர்கள் நேர்மையாகஇல்லையென்றால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும்எப்படி மெழுகு வர்த்தி தான் எரிந்து வெளிச்சம்தருகிறதோ அதேபோன்று தான் சில தியாகங்கள் செய்து வெற்றி அடைய முடியும்ரசூலுல்லாஹ் ஒருவராகஇருந்து பல ஆசைக்கு செவி சாய்க்காததால் இன்று 170 கோடி முஸ்லிம்கள் உலகம் முழுவதும் உள்ளதுதியாகத்திற்கு சிறந்த முன் மாதிரியாகும் என்றால் மறுக்க முடியுமா?



Saturday 25 May, 2024

நான் நண்பேன்டா, உற்ற நண்பேனா?

 

(டாக்டர் .பீ. முகமது அலி, .பீ.எஸ்()

நமது குழந்தை பருவத்தில் தாய் நமக்கு உயிர் கொடுத்த நண்பன், பள்ளி பருவத்தில் பள்ளித் தோழன் நண்பன், கல்லூரி காலங்களில் கல்லூரிக்காளைகள் நண்பர்கள், திருமணம் ஆனதும் மனைவியும் நண்பி, அலுவல் காலங்களில் அலுவலர்கள் நண்பர்கள், பயண காலங்களில் பயண நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் உற்ற நண்பர்களா என்பதினை எண்ணிப் பார்க்க வேண்டும்.

            கிருத்துவ 384 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞர் அரிஸ்டாடில் நண்பனுக்கு உதாரணமாக, 'இரண்டு உடல்களில் இருக்கும் ஓருயிர்' என்று கூறியுள்ளார். அது தான் உற்ற நண்பனுக்கு பொருளாகும்.

இத்தாலியன் அறிஞர் மைக்கேல் கார்லோன், 'நண்பன் அருகில் இருப்பான், ஆனால் கூடவே இருந்து கொலை அறுக்கும் நண்பனும் உள்ளனர். ஆங்கிலத்தில் 'friend' என்பது நண்பன் என்றும், Frenemies' கூடவே இருந்து கொலை அறுப்பவனை சொல்வார்கள்.

திருக்குறளில் நட்பு பற்றி கூறும்போது, 'உடுக்கை இழந்தவன் கைபோல அங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு' என்று கூறுவார்கள். அதற்கு என்ன பொருள் என்றால், ஒருவன் ஆற்றில் குளித்துக் கொண்டு இருக்கும்போது அவனுடைய வேஷ்டி அல்லது கைலி அல்லது துண்டு ஓடுகிற ஆற்றின் வேகத்தில் அடித்துக் கொண்டு போய் விட்டால் எவ்வாறு தனது அந்தரங்க உறுப்புகளை கைகளைக் கொண்டு மறைத்துக் கொள்வானோ அதேபோன்று உற்ற நண்பன் ஒருவனுக்கு துன்பம் வந்தால் ஓடி ஒளியாது ஓடோடி வந்து தோள் கொடுத்து உதவுவான் என்பதாகும். நல்ல நண்பன் ஒரு குடும்பத்திற்கு சமமானவன். ஒருவனுடைய உண்மையான பண்புகளை வெளிக்கொணருவதும் அவனேயாகும்

நாம் குழந்தை பருவத்தில், பள்ளி பருவத்தில், கல்லூரி காலங்களில், அலுவல் இடங்களில் பலரினிடம் பழகியிருப்போம், ஆனால் மனதில் நிலைத்து இருப்பவர்கள் சிலரே! தினந்தோறும் பத்திரிக்கைகளில் செய்திகளை படித்திருப்போம், ஆனால் மனதில் நமக்கு பிடித்த செய்தியினை மட்டும் நிலை நிறுத்துவதில்லையா? அதேபோன்று தான் நட்பும்

கூடா நட்பு பற்றிய குரல் கூறும்போது

,'சீரிடம் காணின் எறிதற்கு பட்டாடை

நேரா நிறைந்தவர் நட்பு' என்பதாகும்.

மனத்தால் நம்மை விரும்பாமல், தமக்கான வாய்ப்பை எதிர்நோக்கி நம்முடன் பயணிப்பவனின் நட்பானது, பொருளை தாங்குவது போல தோன்றினாலும், பொருளை வெட்டி எறிவதற்கு துணை செய்யும் பட்டடை போன்றதாகும்.

நல்ல நண்பன் விலை மதிக்க முடியாதவன், நம்முடைய ரகசியம் அறிவான் ஆனால் குழிதோண்டி புதைக்க மாட்டான், நம்முடைய கனவினை அறிவான், எந்த எதிர்பார்ப்புமில்லாமல் நம்மை விரும்புவான், நம்மைப் பற்றி பொறாமை கொள்ளாதவன், இன்ப துன்பங்களில் பங்கேற்பான்.

டென்னிஸ் விளையாட்டில்  ஸ்விஸ் நாட்டினைச் சார்ந்த ரோஜர் பெடெரரும், ஸ்பெயின் ரபேல் நாடாரும் விளையாடும் போது மைதானத்தில் எதிரிபோல விளையாடுவார்கள் ஆனால் விளையாடி முடிந்ததும் நண்பர்களாக பழகுவார்கள்.

உயிர் தோழன் என்பதற்கு தமிழ் இலக்கியத்தில் ஒரு கதையுண்டு. சோழ மன்னன் கோப்பெருந்தசோழனும், பாண்டிய சாம்ராஜ்யத்தில் புலவராக இருந்த பிசிராந்தையாரும் நண்பர்கள். ஆனால் அவர்கள் அடிக்கடி சந்திப்பதில்லை. ஒரு சமயத்தில் கோப்பெருஞ்சோழனின் மகன்களுக்குள். தந்தை இறந்த பின்பு யார் முடி சூட்டுவது என்று சண்டை வந்து விட்டது. அதனை தீர்க்கமுடியாமல் மன்னன் வடக்கிருந்தான். அதாவது சாகும்வரை உண்ணா நோன்பு இருந்தான். மன்னன் தனது நண்பர் பிசிராந்தையாருக்கு இது பற்றி கடிதம் எழுதி மகன்களுக்குள். நடக்கும் சண்டைக்கு தீர்வு காண விரைய வேண்டுமென்று கடிதம் எழுதினார். அதனை பெற்றவுடன் பதறிக் கொண்டு பிசிராந்தையார் சோழ மண்டலுக்கு விரைந்தார். ஆனால் அதற்கு முன்பே மன்னர் இறந்து விட்டார். அது மட்டுமல்லாமல் பிசிராந்தையார் வந்தால் அவர் அங்கேயே தங்கி இறந்து விட்டால் அவருக்கும் தனது குழிக்கு அருகில்  ஒரு குழி செய்தார் என்பதும் நட்பிற்கு  ஒரு இலக்கிய வரலாறு உண்டு.

கூடவே இருந்து குழி பறிக்கும் நண்பன், ஆங்கிலத்தில் 'Frenemies' உதாரணத்திற்கு முகலாய   சக்ரவர்த்தி சிராஜுத்  தவுலா  காலத்தில் நடந்ததினை உதாரணமாக கூறலாம். வங்கத்தில் பிரிட்டிஷ் கம்பனி கவர்னராக ராபர்ட் கிளைவ் இருந்தார்.  அவர் முகலாய மன்னருக்கு கடிதம் எழுதி தனக்கு கப்பம் கட்டச் சொன்னார். ஆனால் முகலாய மன்னர் மறுத்துவிட்டார். மிர் ஜாபிர் என்ற போர் தளபதி முகலாய படையில் இருந்தார். அவர் சிறு சிப்பாயாக இருந்து பல சாகசங்களை செய்ததால் மன்னர் அவருக்கு படைத்தளபதி வரை அந்தஸ்து கொடுத்தார். அவருக்கு ஒரு உள்ளூர ஒரு ஆசை இருந்தது. அது என்னவென்றால் ஆங்கிலேய படையுடன் தான் கைகோர்த்தால் வருங்காலத்தில் முகலாய சாம்ராஜ்யத்தினை கைப்பற்றலாம் என்று. அதனை செயல் படுத்துவதில் மும்முரமாக செயல் பட்டார். முகலாய மன்னர் பிரிட்டிஷ் படையுடன் சண்டையிட சிராஜுட் தவுலாவை அனுப்பினார். ஆனால் பிரிட்டிஷ் படையுடன் சண்டையிடாது அவர்களுடன் தன் படையையும் சேர்த்தார். ஆகவே தான் பிரிட்டிஷ் முகலாய சாம்ராஜ்யத்தினை பிடிக்க முடிந்தது. அதற்காகத்தான் மிர்ஜாபார் துரோகத்திற்கு எடுத்துக்காட்டாக சரித்திரத்தில் உதாரணத்திற்கு கூறுவர்.

நல்ல நட்பிற்கு சில உதாரணங்களை சொல்லலாம் என நினைக்கின்றேன்.

1) இந்திய சுதந்திர போராட்டத்தில் ஹிந்துத்வ கொள்கையினை தீவிர பக்தர் 'பால் கங்காதர திலக்' இருந்தார். முகமது அலி ஜின்னா, இந்திய முஸ்லிம் லீக்கு கட்சியில் தலைவர் மட்டுமல்லாமல்  சிறந்த வழக்கறிஞரும் ஆகும்.. ஆனால் இந்திய சுதந்திரத்திற்காக பல வழக்குகளில் இங்கிலாந்து வரை சென்று வாதிட்டவர். திலக்கும், ஜின்னாவும் உற்ற நண்பர்களாக இருந்தனர். சுதந்திரமும் பெற முடிந்தது.

2) இந்திய இளம் வயது கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் தனது அறிவு கட்டுரைகளை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர் ஹெரால்டு சார்டி அவர்களுக்கு அனுப்பினார். ராமானுஜத்தினை நேரில் ஹெரால்டு பார்க்காவிட்டாலும் அவருடன் நட்புக் கொண்டார்.

3) இங்கிலாந்து ராணி விட்ட்டோரியா உருது மொழிப் பெயர்ப்பாளர் அப்துல் கரீமின் தீவிர ரசிகை. அத்துடன் அவரிடம் சமையல் குறிப்புகளையும் கற்றுக் கொண்டாராம்.

4) முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், எழுத்தாளர் புபுல் ஜெயகரும் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். உற்ற நண்பர்கள். இந்திரா காந்தி பற்றி வரலாறு எழுத ஆரம்பித்தார். ஆனால் அவர் உயிரோடு இருக்கும்போது அதனை வெளியிட முடியவில்லை. இந்திரா அம்மையார் இறந்ததும் அது வெளி வந்தது.

இஸ்லாத்தின் வழிமுறைப் படி ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால் பெண்களை ஒரு காமப் பொருளாக நோக்கக் கூடாது. வரம்பு மீறக்கூடாது. இஸ்லாமிய சமூக வரலாற்றில் பிறருடன் நட்புடன் இருக்க வலியுறுத்துகிறது. அண்டை வீட்டார் பசியினை போக்க வலியுறுத்துகிறது. ரஸூலல்லா இறை அருள் இறங்கிய பின்பு நடுங்கிய உடம்புடன் வந்தவர்களை அரவணைத்து முதலில் கொள்கையினை ஏற்றுக் கொண்டது கதிஜா பிராட்டியார் என்பது வரலாறு. மக்கா வாசிகள் ஓரிறை கொள்கையினை ஏற்றுக் கொள்ளாது மட்டுமல்லாமல் ரஸூலல்லாவினை கொல்லவும் முடிவு செய்தார்கள். அதனை அறிந்த ரசூலுல்லாஹ் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மதினா புறப்பட்டார்கள். அவர்களுடன் தோழர் அபூபக்கரும் வருகிறேன் என்று குடும்பத்தினை விட்டு புறப்பட்டது இஸ்லாத்தில் நட்பிற்கு ஓர் இலக்கணம் ஆகும்.

இஸ்லாத்தில் நிலையான நட்பிற்கு வரம்பிரை சொல்லியுள்ளார்கள்:

1) நண்பர் சொல்வதை மறுத்து சொல்லக் கூடாது. நண்பரை பகைத்துக் கொள்ளக்கூடாது.

2) நண்பனை கேலி, கிண்டல் செய்யக் கூடாது.

3) நண்பனை வெறுத்து பார்க்கக்கூடாது.

4) நண்பனுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும்

 

இந்து சமயத்தில் முஸ்லிம்களுக்கும் மரியாதை கொடுக்கும் உதாரணத்திற்கு கேரள மாநிலம் சபரிமலை வழிபடும் பக்தர்கள் சபரிமலை அடியில் இருக்கும்வாவர்’ பகவானை வணங்கி செல்கினறனர். அதற்கு ஒரு வரலாறு உண்டாம். அய்யப்பன் என்ற மணிகண்டன் தியான அடிப்படையில் வாவர் பகவானுடன் நட்புடன் இருந்தாராம். அய்யப்பன் மலைமேலில் குடிகொண்டும், வாவர் அடிவாரத்தில் தங்கியதால் பக்தர்கள் இருவரையும் வணங்குவதாக சொல்லப் படுகிறது.

 

ஆனால் இன்று நமது நாட்டில் தேர்தல் நேரத்தில் ஹிந்து-முஸ்லிம்களின் வேற்றுமைக்கு தூபம் போடும் பிரச்சாரங்கள் தலை விரித்து ஆடுகிறது என்பதினை பத்திரிக்கை, காணொளி மூலம் அறிகிறோம். அரசியலில் நண்பர்கள் என்று கூறும்போது, 'அரசியலில் நிரந்தர நண்பர்களுமில்லை, நிரந்தர பகைவர்களுமில்லை' என்று கூறுவார்கள். அதற்கு உதாரணமாக மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தஅதிகாரி’ கட்சி தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பி.ஜெ.பி, யில் உள்ளார். ஆனால் அவர் தனது முன்னாள் தலைவரை தரம் தாழ்ந்து விமரிசத்தது பத்திரிக்கையில் வந்துள்ளது. பிகாரில் இரண்டு முறை லாலு பிரசாத் கட்சி அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட நிதிஸ் குமாரை அரியணையில் லாலு பிரசாத் யாதவ் அமர்த்தினார். என்னானது இன்று நிதிஸ் குமார் பி.ஜெ.பி யுடன் கூட்டு சேர்ந்து மந்திரி சபை அமைத்துள்ளார்.

காஸ்மீரில் யாருக்கும் அறுதி பெருமான்மை கிடைக்காத பட்சத்தில் மகமூதா பி.டி பி கட்சி அதிக எண்ணிக்கை இல்லாவிட்டாலும் ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு தர காங்கிரஸ் தயார் என்று கூறியது. ஆனால் பி.ஜே.பி யுடன் மகமூதா கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தார். இன்று என்னானது ஆட்சி பதவியிழந்து மகமூதா வீட்டு காவலில் வைக்க வேண்டிய நிலை வந்தது. ஆகவே தான் அரசியலில் இதெல்லாம் சகசமய்யா என்று சிரிப்பு நடிகர் கவுண்ட மணி கதை கந்தலாகி  கூத்தும் நடைபெறுகிறது.

உலக அளவில் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர்(1939-1945) இரு அணிகளாக இருந்தன நாடுகள். அமெரிக்கா, இங்கிலாந்து, ரசியா ஒரு அணியிலும், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றுமொரு அணியிலும் இருந்தது. ஆனால் இன்று அமெரிக்காவும், ரசியாவும் எதிரும் புதிருமாக இருக்கின்றதினை அறியலாம். எதிரிக்கு எதிரி நண்பன் என்று சொல்லும் அளவிற்கு அமெரிக்காவும், ஜப்பானும் உள்ளன.

நாட்டு மக்கள் மத, இன, ஜாதி வேறுபாடுகளை களைந்து போராடியதால் தான் சுதந்திரம் பெற்றோம், ஆனால் இன்று அந்த வேறுபாடுகளுக்கு தூபம் போட்டால் எப்படி நாம் வளர்ந்த நாடாக முடியும், எதிரியினை எப்படி சந்திக்க முடியும் என்று யோசிக்க வேண்டாமா?.

நீதி கதை ஒன்றினை உங்களுக்கு இந்த இடத்தில் ஞாபகப்படுத்தலாம் என எண்ணுகிறேன். ஒரு காட்டில் நான்கு காளை மாடுகள் ஒற்றுமையுடன் காட்டில் மேய்ந்தன. அந்த காட்டில் வாழும் புலி அந்த கொழுத்த காளைகளை தனக்கு இரையாக்க தகுந்த சமயம் பார்த்ததாம். காளைகளை பிரிக்க புலி ஒரு காளை மாட்டிடம் மற்ற மாடுகள் அதிகம் விளைந்த புல்லை அவசரமாக, அவசரமாக உனக்கு இல்லாமல் சாப்பிட்டு விடுகின்றன என்று தூண்டி விட்டதாம். இப்படியே மற்ற மாடுகளையும் ஏதாவது ஒரு காரணம் காட்டி பிரித்து விட்டதாம். கெட்ட வார்த்தைகளை கேட்ட மாடுகள் பிரிந்து தனித்தனியே புல்லை மேய ஆரம்பித்தனவாம். புலியும் இது தான் சமயம் என்று ஒவ்வொரு மாடாக தனக்கு இரையாக்கியதாம். பழமொழி ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்லுவது காளைகள்-புலி கதையில் உண்மையாகி விட்டது அல்லவா? ஆகவே குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில் மனித ஒற்றுமை-நட்பு வளர்ப்பது ஒவ்வொருவருடைய கடமையாகும். 1960ம் வெளிவந்த தமிழ் படத்தில் 'ஒற்றுமையால் வாழ்வதாலே உண்டு நன்மையே' என்று மறுபடியும் 64 ஆண்டுகளுக்கு பின்புறமும் சொல்லும் அளவிற்கு நமது நாட்டு நடப்பு இருக்கின்றது வெட்கமாகத் தானே இருக்கின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

. நாம் குழந்தை பருவத்தில், பள்ளி பருவத்தில், கல்லூரி காலங்களில், அலுவல் இடங்களில் பலரினிடம் பழகியிருப்போம், ஆனால் மனதில் நிலைத்து இருப்பவர்கள் சிலரே! தினந்தோறும் பத்திரிக்கைகளில் செய்திகளை படித்திருப்போம், ஆனால் மனதில் நமக்கு பிடித்த செய்தியினை மட்டும் நிலை நிறுத்துவதில்லையா? அதேபோன்று தான் நட்பும்.