Sunday, 28 June 2026

குலை நடுங்கும் பாலகர் வன் முறைகள்?

 


(டாக்டர் .பீ. முகமது அலி, .பி.எஸ்.()

என்னுடன் சென்னை மண்ணடியில் இரும்பு வியாபாரம் செய்யும் நடை பயிலும் நண்பர் ராபியுதீன் அவர்கள் 19.06.2026ல் சந்தித்தபோது, 'அண்ணே, சிறுமிகள் பாலியல் தொந்தரவு செய்திகள் அதிகமாகிக் கொண்டே வருகிறதே அதனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்’ என்றார். அதனைத் தொடர்ந்து இந்த விழிப்புணர்வு கட்டுரையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

1)       18.06.2026ம் தேதி சென்னை புழல் பகுதியில் வசிக்கும் 50 வயது காளி என்ற முதியவர் பெற்றோர் வேலைக்குச் சென்றபோது வீட்டில் தனியாக இருந்த 4 வயது பெண் குழந்தையை சாக்லேட் வாங்கித் தருகிறேன் என்று கூட்டிச் சென்று  ஒதுக்குப் புறத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதினை செய்தித் தாள்கள் படம் பிடித்துக் காட்டின.

2)       15.06.2026 அன்று திருவள்ளூர் மாவட்டம் கும்முடிபூண்டி பகுதியில் 19 வயது வெளி மாநில தொழிலாளி அந்தப் பகுதியில் உள்ள 3 வயது சிறுமியினை ஐந்து ரூபாய் பிஸ்கட் வாங்கித் தருகிறேன் என்று பாலியல் தொந்தரவு செய்து அந்தப் பகுதி மக்கள் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்ததும் பத்திரிகையில் வந்துள்ளது.

3)       21.05.2026ல் கோவை சூலூர் பகுதியில் 10வயது சிறுமியை 35 வயது கார்த்தி என்பவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது தெரிகிறது.

4)       25.05.2026 அன்று சென்னை வட பழனி காவல் நிலைய தலைமைக் காவலர் காவல் நிலையத்திற்கு வந்த 16 வயது சிறுவனின் வாயில் மதுவினை கட்டாயமாக ஊற்றி ஓரின சேர்க்கையினை வற்புறுத்தி ஈடுபடுத்தியது தெரிய வந்து அந்த தலைமை காவலரும் கைது செய்யப் பட்டுள்ளார்.

5)       உ.பி கோரக்பூர் நகரில் 21.06,2026 அன்று இரவு தனது தாயுடன் தூங்கிக் கொண்டு இருந்த 9வயது சிறுமியினை 12வயது சிறுவன் தூக்கிச் சென்று கற்பழித்ததாக செய்தி வந்துள்ளது. அந்த சிறுவனிடம் போலீசார் விசாரித்தபோது 'தான் இரவில் மது அருந்தி விட்டு தனது செல் போனில் ஆபாச படம் பார்த்திருந்ததாகவும், உணர்ச்சி மேலிட்டு அடுத்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியினை தூக்கிச் சென்று பாலியல் குற்றம் செய்து அதனை செல்போனில் படம் எடுத்ததாகவும் கூறினான். அவருடைய செல்ல போனை போலீசார் பரிசோதித்தபோது 50க்கு மேலிட்ட பாலான ஆபாச படங்கள் பதவியிறக்கம் செய்யப பட்டு இருந்தது தெரிகிறது.

6)       23.06.2026 அன்று இரவு டெல்லி குறுகிராம் பகுதியில் நடைபாதையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை முதியவர் ஒருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்தி ஆளில்லா பகுதியில் விட்டு விட்டார். அந்த குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.

7)       கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் உள்ள பள்ளியில் கணித ட்யூசன் ஆசிரியர் 25.06.2026 அன்று பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் பதியப்பட்டுள்ளது.

8)       9.06.2026 அன்று முதல் மூன்று முறை சென்னை புகழ் பெற்ற கண்ணகி நகர் பெண்கள் கபடி பயிற்சியாளர் ராஜு பாலியல் குற்றங்கள் செய்ததாகவும், மற்றும் கபடி அணியில் சேர வேண்டுமென்றால் தனது இச்சைக்கு இணங்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததாக 17 வயது சிறுமி புகார் மீது 26.06.2926 அன்று வழக்கு பதியப்பட்டுள்ளது.

நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் சந்திக்கு வந்ததினை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். வழக்கு பதியாமல் எத்தனையே சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல் இருக்கலாம்.

 

அமெரிக்காவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ரத்த உறவில்லாதவர் தொடக் கூட உரிமையில்லை. பெற்றோர் பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவு பற்றி புகார் கொடுக்க வேண்டும்,  அது மட்டுமல்ல ஆசிரியர்கள், குழந்தைகள் காப்பக உரிமையாளர் ஆகியோரும் கொடுக்க  வேண்டியது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.

பெரும்பாலான சம்பவங்கள் குழந்தைகளை, சமூக வலை தளங்கள் மூலம் கவரப் பட்ட பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தியது உலக அளவில் அதிகம். ஆகவே ஐக்கிய அரபு குடியரசுகள், ஆஸ்திரேலியா, பிரிட்டன், கனடா, போன்றவை 15 வயதிற்குட்பட்டோர் சமூக வலை தளங்களில் ஈடுபடுவது தடுக்கப் பட்டுள்ளது. ஆனால் செல் போன் அதிகமாக பயன் படுத்தும் இந்தியாவில் இன்னும் அந்த கட்டுப்பாடு வரவில்லை வந்தால் தடுக்கலாம் தானே!

குழந்தைகள் பாலியல் துன்புறுத்துதல் சம்பந்தமாக உலக சுகாதார அமைப்பு சில வழி முறைகள் வகுத்துள்ளது, அதனை பின்பற்றி தமிழ்நாடு அரசு கீழ்கண்ட ஆணை வெளியிட்டுள்ளது;

1) குழந்தைகள் அவசர தொலைபேசி அழைப்பு 1098

2) அவசர உதவி 112

3) தேசிய சைபர் குற்றம் எண் 1930 போன்றவையாகும்/

உலக சுகாதார அமைப்பு குழந்தைகள் எவ்வளவு, எப்படி பாலியல் தொந்தரவிற்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்று பட்டியலிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்:

 

1) உலகில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் ஆறு பேர் பாலியல் தொந்தரவுக்கு ஈடுபடுத்தப் படுகின்றனர். அது கிட்டத்தட்ட 4கோடி.

2) 5 பெண்களில் ஒருவரும், 7 ஆண்களில் ஒருவரும் குழந்தைகளாக இருக்கும்போது பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். மும்பையிலிருந்து இங்கு குடியேறிய ஒரு நடிகை கூட ஒரு பேட்டியில் தான் 10 வயதாக இருக்கும் போது அறியாத வயதில் தனது தந்தையே தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக வெளிப்படையாக கூறினார். மாமா மார்கள் அல்லது சொந்தத்தில் உள்ள இளைஞர்களும் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது இலை மறை காயாக இருக்கத்தான் செய்கிறது. அவ்வாறு பாலியல் தொந்தரவு செய்யப் பட்ட சிறுவர், சிறுமிகள் பிற்காலத்தில் வளர்ந்த பின்பு அவர்களும் பாலியல் குற்றங்கள் செய்வதாக கூறப் படுகிறது.

2) அதுபோன்ற குற்றங்கள் நடவாதமாறு பெற்றோர் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் நல்ல தொடல், கெட்ட தொடல்கள் என்றால் என்ன என்று விளக்கி சொல்ல வேண்டும்.

22.06.2026 அன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான போதை ஒழிப்பு மாரத்தான் ஓட்டம் மேலூரில் நடந்தது. அதனில் கலந்து கொண்ட உயர் கல்வி அமைச்சர் ஒரு பள்ளி சிறுமியின் காலை வலி நீங்க நீவி விட்டது கேள்விக்குறியானது. அதற்கு விளக்கம் அளித்த அமைச்சர் அந்த சிறுமி ஓடி களைத்து காலை நீட்டி உட்கார்ந்து இருந்ததால் ஒரு தகப்பன் இடத்தில இருந்து அதனை செய்தேன் என்று விளக்கம் அளித்துள்ளதினை இங்கு சுட்டிக் காட்டி ஆகவே குழந்தைகளுக்கு எதுகுட் டச்’, எதுபேட் டச்’ என்று விளக்கம் செய்ய வேண்டும், அதற்கு பெற்றோர் மட்டும் போதாது, ஆசிரியர்கள், சமூக நல துறையினரையும் சாரும்.

 

யுத்த காலங்களில் சிறுமிகள், பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகின்றனர் என்பதற்கு உதாரணமாக .நா சபையின் ஒரு அங்கமான அமைப்பு  அளித்த அறிக்கையில் இஸ்ராயீல் ராணுவம் காசா பகுதியில் யுத்தத்தில் பெண்கள், சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக அதிர்ச்சி தரும் செய்தியினைபிரமிளா பதன்’ தாக்கல் செய்தது இஸ்ராயீல் அரசுக்கு சங்கடமாகி அந்த அறிக்கை சமர்ப்பித்த பிரமிளா அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று .நா வினை கேட்டுக் கொண்டுள்ளது. அதனையே தான் ஆப்பிரிக்கா உகாண்டா, காங்கோ,நைகிர் போன்ற நாடுகளிலும் நடக்கின்றதாம்.

 

எந்த பத்திரிகையும் குழந்தை பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதினை வெளியிட்டால் உடனே நாம் அவர்களை தூக்கில் போட வேண்டும், காய் அடிக்க வேண்டும், நடு ரோட்டில் வைத்து சுட வேண்டும் என்றும் குரல் எழுப்புகிறோம். ஆகவே ஒவ்வொரு நாட்டிலும் என்னன தண்டனை சட்டம் உள்ளது என்று காணலாம்.

1) இந்தியாவில் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வழங்க சட்டம் உள்ளது.

2) அதே போன்று தான் ‘zainab alert’ என்ற சட்டம் பாகிஸ்தான், பங்களா தேசம் நாட்டில் மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

3) ஆப்கானிஷ்தானில் கசையடி, மரண தண்டனை விதிக்கப் படுகிறது.

4) ஐரோப்பிய நாடுகளில் ஆயுள் தண்டனை விதிக்கப் படுகிறது.

5) ஆஸ்திராலியாவில் 'commonwealth criminal code for child exploitation' சட்டப்படி அது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஆயுள் தண்டனை வழங்கியும், குற்றவாளிகள் எந்த குழந்தை பராமரிப்பு வேளைகளில் ஈடுபடுத்தவும் கூடாது என்று அறிவுறுத்தப் படுகிறது.

 

உலக அளவில் எந்த நாடுகளில் குழந்தைகள் நலனுடம் இருக்கிறார்கள் என்பதினை உங்களுக்கு இந்த சமயத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

1) ஐஸ் நாட்டில் பெண் குழந்தைகள் பாதுகாப்பான சிறப்பான சட்டம் உள்ளதாம். அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தும் பின்லாந்து நாடுகளிலும் இருக்கின்றன என்று குளோபல் சிட்டிசன் சொலுஷன் என்ற அமைப்பு சொல்கிறது..

2) ஜியார்ஜியா, அர்மேனியா, குயூபா  மற்றும் சிங்கப்பூரில் பெண் குழந்தைகள் குற்றங்கள் 14 சதவீதத்திற்கு குறைவாக இருக்கின்றனவாம்.

3) நெதர்லாந்து ஐரோப்பிய நாடுகளிடையே குழந்தைகள் வளர்ப்பதில் சிறப்பாக இருக்கின்றதாம்.

4) குழந்தைகளுடன் குடியேறுவதற்கு சிறந்த நகரமாக அமெரிக்கா கலிபோர்னியா இர்வின் நகரம் சொல்லப் படுகிறது.

5) யுனிசெப் என்ற ஐநா சவர்வதேச குழந்தைகள் அவசர நிதி அறிக்கையின் படி’ டச்’ நாடு குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனவாம்.

உலக அளவில் எந்த நாடுகளில் குழந்தைகள் நலனுடம் இருக்கிறார்கள் என்பதினை உங்களுக்கு இந்த சமயத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பெண் குழந்தைகளில் கண்களை காக்கும் இமைபோலவும், கண் கொத்தி பாம்பாகவும் இருந்து பாதுகாப்பது பெற்றோர்கள், உடன் பிறப்புகள் மற்றும் பராமரிப்போரின் கடமையல்லவா? குற்ற செயல் நடந்த பின்பு பகுத்தாய்வு செய்வதினை விட குற்றம் நடப்பதற்கு இடம் கொடுக்கக் கூடாது அல்லவா?

வெளி மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மிகவும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து, குடும்பங்களை விட்டுப் பிரிந்த ஆண்கள் அதிகமாக குற்ற செயலில் ஈடுபடுவதாக கூறப் படுகிறது, ஆகவே வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் இடங்களை காவல் ரோந்துகளில் கண்காணிப்பது அவசியமே!

குற்றவாளிகள் பாலியல் குற்றங்கள் செய்து விட்டு சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் அல்லது பிறழ் சாட்சிகளால் தப்பி விடக்கூடாது, அதற்கு நீதி மன்றமும் ஒத்துழைத்து இரு கை ஓசையாக இருந்து குற்றவாளிகள் தண்டித்தால் குற்றங்கள் குறைய வழி வகுக்குமல்லவா?