(டாக்டர் ஏ.பீ.
முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)
உள்
நாட்டு கலவரங்களிலோ, போர்களிலோ அப்பாவி மக்கள், பெண்கள், குழந்தைகள், வயதானோர் கொல்லப் படுவதோ
அன்றாட காட்சிகளாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் முற்றுகை
போராட்டங்களில், உணவு, மருந்துப் பொருட்கள், எண்ணெய் வளங்கள் கிடைக்காமலும், பலர் காலரா, அம்மை
போன்ற நோய்களால் பாதிக்கப் பட்டும், பட்டினிச்சாவுகளும், சத்தான உணவு கிடைக்காமலும், நல்ல
குடி நீர் கிடைக்காமலும், அவதிப்படுவதினை
பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் மூலமாகவும் பார்த்துக் கொண்டு உள்ளோம். இஸ்ராயில் தாக்குதலால் 60,000 குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனராம். சில மாதங்களுக்கு முன்பு
அமெரிக்காவின் ராணுவ மந்திரி ‘பீட் ஹாஹத்’ அங்குள்ள
தேவாலயங்களில் உரை நிகழ்த்தும் போது
கிறித்துவர்கள் பாலந்தீனத்தில் இழந்த புனித தலமான ஜெருசலத்தினை நாம் எப்படி சிலுவை
யுத்தங்கள் போல போர் தொடுத்து
திரும்பப் பெற வேண்டும் என்று
கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கன் மந்திரி சபையில் அந்த ராணுவ மந்திரி
மட்டும் தான் ஈரானுடன் போர்
தொடுக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு அறிவுரை சொன்னதாக அவரே கூறியுள்ளார். அதன் விலைவு
உலக அளவில் எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்கள் விலை, சில்லறை பொருட்கள் விலை அதிகரித்து அப்பாவி
மக்கள் சிரமப் படுவதினை காணலாம். சில சமயங்களில் அத்து
மீறல்களையும் அறியலாம். அதுபோன்று யுத்த காலங்களில் பல்வேறு மதங்கள் என்னென்ன கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று கூறவேயும், அத்துடன் சிலுவை யுத்தங்களும் எப்படி நடந்தன என்று கூறவே இந்த கட்டுரை எழுதுகிறேன்.
சிலுவை யுத்தங்கள் என்ன என்று காணலாம்:
மேற்கத்திய
கிருத்துவர்களுக்கும், பாலஸ்தீன முஸ்லிம் மக்களுக்கும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளுக்கும் 1095 முதல், 1291 வரை எட்டு சிலுவை
யுத்தங்கள் புனித தளமான ஜெருசலத்தினை யார் பிடித்து வெற்றி
கொண்டாதுவது என்பதில் நடந்ததாகும். 1095ம் ஆண்டு முதலாம்
சிலுவை யுத்தம் ரோம் கிருத்துவ போப்
இரண்டாம் ‘ அர்பன்’ தலைமையில் நடந்தது. அதில் அவருக்கு ஓரளவு வெற்றியினை தந்தது. அதனை தொடர்ந்து இரண்டாம்
சிலுவை யுத்தம் 1148ல் தோல்வியில் முடிந்தது.
அதன் விளைவு இஸ்லாமிய நாடுகளான எகிப்து, சிரியாவினை மன்னர் ‘சலாவுதீன் அய்யூபி’ இணைத்தார். மூன்றாம் யுத்தத்தில் சலாவுதீனுக்கு சில தோல்விகளை தந்தாலும்
ஜெருசலத்தினை கிருத்துவ படைகளால் கைப்பற்ற முடியவில்லை. நான்காம் போரில் ‘பைஜான்டின்’ சாம்ராஜ்யத்திற்கு தோல்வியினைத் தந்து லத்தின் சாம்ராஜ்யம் நிலை நிறுத்தப் பட்டது.
ஐந்தாம் சிலுவை யுத்தம் 1219-1222 வரை எகிப்தினை
பிடிப்பதிலேயே கவனம் செலுத்தியதால் தோல்வியினை தந்தது. ஆறாவது புனித யுத்தம் 1229ம் ஆண்டு இரண்டாம்
‘பெடெரிக்’ மன்னரால் பேச்சுவார்த்தை மூலம் ஜெருசலம் பெறப் பட்டது. ஏழாவது சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்கள் ஜெருசலத்தினை கைப்பற்றினர். பிரான்ஸ் நாட்டின் மன்னர் ஒன்பதாம் ‘லூயிஸ்’ படை எடுத்து 1248, 1270 ஆண்டுகளில் யுத்தங்கள்
தோல்வியினைத் தந்தது. இஸ்லாமியஅடிமையாக இருந்து மன்னர்களாகிய
‘மம்லுக்குகள்;
எகிப்து மற்றும் சிரியாவினை கைப்பற்றி 1260ம் ஆண்டில் இணைத்தனர்.
1095 ஆண்டு முதல் 1291 ஆண்டு வரை 15 லட்சம் பேர்கள் கொல்லப் பட்டதாக கூறப் படுகிறது. எப்போதெல்லாம் கிறித்துவர்கள் ஜெருசலத்தினை பிடித்தார்களோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் கொல்லப் பட்டு ஜெருசலம் நகரில் ரத்த ஆறு ஓடியதாம்,
ஆனால் முஸ்லிம் மன்னர்கள் சலாவுதீன் அய்யூபி, மம்லுக்குகள் பிடிக்கும் போது கிறித்துவர்கள் நீதத்துடன்
நடத்தப் பட்டார்களாம். இந்த யுத்தங்களில் யார்
வெற்றி பெற்றார்கள் என்று கேட்டீர்களேனென்றால் முஸ்லிம்கள் ஜெருசலத்தினை தங்கள் வசம் வைத்துக்கொண்டனர், கிருத்துவர்கள் ஸ்பெயின்
நாட்டினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். 1291 ம் ஆண்டு இஸ்ராயில்
தலைநகரம் அசர் முஸ்லிம் மம்லுக்குகள்
கைப்பற்றி ஐரோப்பியா கட்டுப்பாட்டினை தளர்த்தினர். எப்படி முஸ்லிம்கள் சிலுவை யுத்தங்களில் கொல்லப் பட்டு ரத்த ஆறு ஓடியதோ
அதேபோன்று தான் அமெரிக்க ராணுவ
மந்திரி பீட் ஹெகத் இரான்
போரை தொடங்க யோசனை சொன்னாரோ என்று தோன்றவில்லையா உங்களுக்கு. அதனால் தான் ஈரான் மீது
போர் தொடுத்து அந்த நாட்டின் மதத்
தலைவர் மற்றும் அவர் குடும்பத்தினர் கொல்லப்
பட்டுள்ளனர். இஸ்ராயில்
ராணுவ மந்திரி ‘இஸ்ராயில் காட்ஸ் சமீபத்தில் பேசும்போது அமெரிக்கா ஈரானை தாக்குவதற்கு இஸ்ராயில் ராணுவத்தளத்தினை பயன் படுத்தியதாக கூறியுள்ளதிலிருந்தது
எதைக் காட்டுகின்றது என்றால் தமிழ் பழமொழி, 'பிள்ளையை’ கிள்ளிவிட்டு தொட்டிலையும்' ஆட்டும் செயலாக உங்களுக்கு தெரியவில்லையா?
இது வரை இரண்டு
உலக யுத்தங்கள் நடந்துள்ளது. அதில் ஏதாவது ஆக்கப் பூர்வமான செயல் இருக்கின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். முதலாம் உலகப் போரில் இறந்த அப்பாவி மக்கள் 22 லட்சமாம், அதில் பெண்கள், குழந்தைகள் மட்டும் 13 லட்சங்களாம். இந்த பட்டியலில் முற்றுகைகளாம்
பசி,பட்டினி, காலரா,பிளேக், நோய்களால் இறந்தோர் பலராம். இரண்டாம் உலக யுத்தத்தில் இறந்தவர்கள்
50 லட்சம் பேர்களாம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலக நாடுகள் 1945ம்
ஆண்டு கூடி ஐக்கிய நாடுகள்
சபை அமையப்பட்டு எந்த தகராறும் பேச்சு
வார்த்தைகள் மூலமே தீர்வு காண வேண்டும் என்ற
நோக்கத்துடன் அறிவிக்கப் பட்டது. ஆனால் அந்த சபையின் இஸ்ராயில்
உறுப்பினரே இல்லை என்ற தைரியத்தில் காசா
மீது போர் தொடுத்து சுமார்
ஒரு லட்சம் பேர்கள் கொல்லப் பட்டனர், அதனைத் தொடர்ந்து பாலஸ்தீனம், லெபனான் மீதும் போர்கள் போர்கள் தொடுத்து பல்லாயிரக்கான மக்களை கொண்டும், வறுமைக்கு உச்சத்திற்கே தள்ளப் பட்டுள்ளனர் என்பதினை யாரும் மறுப்பதில்லை, அது மட்டுமா அவர்களுக்கு
உதவ நடு நிலை நாடுகள்
முயன்றபோதும் தடுக்கப்பட்டனர், செய்தி சேகரிக்க சென்ற நிருபர்கள் தாக்கப் பட்டது இஸ்ராயில் உலகிலே தனிக்காட்டு ராஜாவாக திகழ வேண்டும் என்பதே
ஒரே நோக்கமா என்று தெரியவில்லையே
யூதர்கள்(Halaka)
ஹலகாவில் கூறப் படுவது என்னவென்றால் ஒரு போர் தொடுப்பதற்கு முன்பு அமைதிக்கான பேச்சு
வார்த்தைக்கு அழைக்க வேண்டும், அதனையே தான் கிருத்துவ மதமும் கூறுகிறது. புனித ஆலயம்
ஆர்ச் பிஷப் ஆஸ்க்கார் ரோம் புத்தகத்தில் போர்களில் கடைப் பிடிக்கக் கூடிய ஒழுக்க முறைகள்
விரிவாக கூறப் படுகிறது.அதனை கீழே
காணலாம்:
இஸ்லாமிய
கலீபா காலங்களில் படை தளபதிகளுக்கு என்னென்னெ
உத்திரவு தெரியுமா? கலீபா அபூபக்கர் தனது படை வீரர்களுக்கு,
'போரின் போது வயதானோர், குழந்தை,
பெண்கள், மற்றும் போர்களில் கலந்து கொள்ளாதவர்களைக் கொல்லக்கூடாது, காயப் படுத்தவும் கூடாது. திருக்குரானில், 'அல் முத்தபாவில்'
போரில் பேரித்தம் பழ மரங்கள் பழ
மரங்களை மற்றும் வேறு பழ மரங்களை வெட்டவோ,
எரிக்கவோ கூடாது, விவசாய நிலங்களை அழிக்கக்கூடாது, நீர் நிலைகளில் நஞ்சை
கலக்கவும்,அசுத்தப் படுத்தப்படவும் கூடாது, நகரங்கள், கட்டிடங்கள் நாசப் படுத்தக்கூடாது என்ற போதனைகள் உள்ளன.
இஸ்லாமிய யுத்த கோட்பாடுகளை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஐ.நா. சபையால்
அமைக்கப் பட்ட Geneva convention
generalia சரத்தாக 1949
அமையப் பட்டுள்ளது.
ஹிந்து மத, 'தர்ம யுத்'
என்ற காவியத்தில், ‘மனுஸ்மிருதி மற்றும் மகாபாரதத்தில், சண்டை செய்யாத மக்களை தாக்கக் கூடாது. அதிலும் பெண்கள், குழந்தைகள், வயதானோர், தூங்குபவர்கள், நிராயுத பாணிகள், சரணடைந்தோர் ஆகியோரை தாக்கக் கூடாது. நீர் நிலைகளை அழிக்கக்
கூடாது, அசுத்தப் படுத்தக் கூடாது,
விவசாய நிலங்கள் ஆகியவற்றை அழிக்கக் கூடாது. போரில் கலந்து கொள்ளாத மிருகங்களை கொல்லவோ, ஊனப் படுத்தவோ கூடாது,
பிணங்களை சின்னா பின்னமாக்கக் கூடாது என்பது போன்ற போதனைகள் உள்ளன.
அமெரிக்காவின் ஈராக், ஈரான் போரகள், இஸ்ராயிலின் காசா,லெபனான், சிரியா
போர்களும் மேற்கூறிய போர் கொள்கைளை கடைப்
பிடித்ததா, என்றால் இல்லை என்பதினை சில உதாரணங்கள் மூலம்
விளக்கலாம் என நினைக்கின்றேன்.
26.2.2026 அன்று
ஈரானின் மினாப் பிரைமரி பள்ளியில் தாக்குதல் நடத்தி பள்ளி குழந்தைகளை கொன்றது அமெரிக்கா , 22.3.2025ல் இஸ்ராயில் தாக்குதலில்
2017ம் ஆண்டில் காசா நகரில் துருக்கி
நாட்டின் 32 லட்சம் மில்லியன் செலவில் 3000 புற்று நோய் மருத்துவ மனை
முற்றிலுமாக அழிக்கப் பட்டுள்ளது. ஆகவே எங்கே கிருத்துவ
மற்றும் யூத கோட்பாடுகளை பறக்க
விடப்பட்டுள்ளதோ என்று எண்ண உங்களுக்கு தோன்றவில்லையா?
ஜப்பானை அமெரிக்கா இரண்டாம் உலக யுத்தத்தில் அணு
குண்டு வீசி நிலை குழையச்
செய்தது. அணு கொண்டுவிட மிகவும்
சக்தி வாய்ந்த நியூக்ளியர் ஆயுதம் தற்போது பல நாடுகளில் உள்ளன.
அந்த நாடுகளில் உள்ளதால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பயப்படுகிறார்கள். உதாரணத்திற்கு வட கொரியா நியுகிலீர்
ஆயுதத்தினைக் கண்டு தென் கொரியா பயப்
படுகிறது. அமெரிக்கா எப்படியாவது ஈரான் நியுகிலீர் ஆயுதம் தயாரிக்கக் கூடாது என்று முயற்சி செய்கிறது. ஆனால் அமெரிக்கா சௌதி அராபியாவுடன் நியுகிலீர்
ஆயுதம் தயாரிக்க உதவி செய்வதாக கூறுகிறேது.
ஆகவே அமெரிக்கா காலனி காலத்து பிரித்தாளும் கொள்கையினை அராபியாவையும்-ஈரானையும் ஆட்டி படைக்கிறது. ஒரு தடவை பாகிஸ்தான்
முன்னாள் பிரதமர் சுலபிகர் புட்டோ நிகிலீர் ஆய்த தேவையினை தயாரிக்க
பற்றி கூறும் பொது, 'மக்கள் புல்லையும்,பூண்டையும் சாப்பிடலாம் அல்லது பட்டிணி கிடக்கலாம் ஆனால் நியுகிலீர் ஆயுதம் தயாரிக்க தேவைப் படும் செலவினை சரி கட்ட வேண்டும்
என்று கூறினார். ஆனால் அவர் மகள் பெனாசிர்
பூட்டோ துபையில் குடியிருந்தார்
என்று பத்திரிக்கைகள் கூறின.
பல கோடி மதிப்புள்ள வில்லா
24எமிரேட்ஸ் இல்லத்தில் தங்கி இருந்தாராம். இது எதனைக் காட்டுகிறது
என்றால் ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லை
பெண்ணே என்பது போல இல்லையா?
பல திருமண வைபவங்களில்
மக்கள் வீணாக செலவு செய்தும், உ ணவுப் பொருட்களை
வீணாக்கியும் ஆடம்பர நடவடிக்கைகளை நாம் காணலாம். அப்போது
இஸ்லாமிய நாடுகளில் மக்கள் பசியும், பட்டிணியாகவும், குடிக்க தண்ணீர் இல்லாமலும், உடுத்த ஆடை இல்லாமலும் அவதிப்
படுகிறதை காணும்போது உலக மக்கள் ரத்த
கண்ணீர் வடிக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் அந்த அவலங்களுக்கு தீர்வு
காண ஐநா சபையோ அல்லது
எந்த அமைப்போ அல்லது உலக நாடுகளோ வர
வில்லை என்பது உங்களுக்கு இருக்க வில்லையா?