Wednesday, 17 June 2026

ஹஜ்ஜில் முஸ்லிம் சகோதர, சமத்துவம் வியப்பு!

 


(டாக்டர் .பீ.முகமது அலி, .பீ.எஸ்()

அமெரிக்காவில் கறுப்பின ஆப்பிரிக்கர்கள் அதிகம் உள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் சம உரிமைகளுடன் வாழ்ந்தார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர்கள் வாழ்க்கை மற்ற அமெரிக்கர்களோடு ஒப்பிட்டும், ஆனால் இஸ்லாமியர்கள் மனிதர்களில் எந்த வேற்றுமை இல்லாமல் புனித ஹஜ் ஹஜ்ஜினை நிறைவேற்றுவார்கள் என்று அமரிக்காவின் சிவில் உரிமை பாதுகாப்புத் தலைவர் டாக்டர் மால்கம் எக்ஸ் படம் பிடித்து தனது அமெரிக்க மனைவிக்கு ஆகஸ்ட் 15, 1964ல் கடிதம் எழுதியுள்ளார். ஏன் அவர் சௌதி அராபியா ஜெத்தாவிலிருந்து எழுதியுள்ளார் என்பதும், அமெரிக்க ஆப்பிரிக்கர்கள் எப்படி அங்கே குடியேறினார்கள் என்றும் உங்களுக்கு விளக்க இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.

               அமெரிக்க கண்டத்தினை கண்டு பிடித்தது பற்றி பல்வேறு செய்திகள் இருந்தாலும் 1492ம் ஆண்டு இத்தாலியினைச் சார்ந்த கொலம்பஸ் ஸ்பெயின் இளவரசர் பெர்டினாட் உதவியுடன் கண்டு பிடித்ததே ஆதாரமாக உள்ளது. ஐரோப்பிய வல்லரசுகள் தங்களது பொருளாதாரத்தினை மேம்படுத்த பல்வேறு நாடுகளில் பயணம் செய்து கண்டு பிடித்தது தான் ஆபிரிக்க கண்டமாகும். ஸ்பெயின் வர்த்தகர்களால் பிடிக்கப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகளை ஆங்கிலேய தனியார் கப்பல் ஊழியர்களால் கடத்தப் பட்டு ஆங்கிலேய அமெரிக்க குடியேற்ற வாசிகள் வசதிக்கு அமரிக்க ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஓல்ட் பிண்ட கம்போர்ட் துறைமுகத்தில் 25, ஆகஸ்ட், 1619ல் இறக்கப் பட்டும், அதன் பின்னர் ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து வர்தகர்களால் பிடிக்கப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள் அமெரிக்காவில் உள்ள காலணிகளை விற்கப் பட்டனர்.

          அப்படி விற்கப் பட்ட அடிமைகளை அமெரிக்க காலணிகள் புகையிலை, கோதுமை, நெல், கரும்பு, இலவம் பஞ்சு, கொக்கோ விளையும் நிலங்களில் தங்களது விவசாயத்தினை பெருக்க உபயோகித்தனர். அது மட்டுமல்லாமல் பாலங்கள், சாலைகள், அணைகள் கட்டுவதற்கும் பயன் படுத்தினர். நான் அமெரிக்கா 2010ம் ஆண்டு சென்ற போது லாஸ் வேகா அருகில் உள்ள கொலோராடோ நதி அணைக்கட்டு, அந்த நதி மீது 890 அடி உயரத்திற்கு கட்டப் பட்ட பாலத்தினைக் கண்டேன். அந்த பாலத்தினை கட்ட ஈடுபட்ட பல ஆபிரிக்க தொழிலாளர்கள் இறந்ததாக கூறப் படுகிறது. அது மட்டுமல்லாமல் அவர்களை ஆடு மாடுகளை மேய்ப்பதிற்கும், பெண்களை பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதற்கும் பயன் படுத்தினர். சாதாரண மனிதனுக்குத் தேவையான சாதாரண தேவைகள் கூட அவர்களுக்கு மறுக்கப் பட்டதால் எலிஜா முகமது என்ற கறுப்பின தலைவர் 'நேசன் ஆப் இஸ்லாம்' என்ற இயக்கத்தினை ஆரம்பித்து பல ஆபிரிக்கர்களை இஸ்லாமிய சிந்தனைக்கு மாற்றினார்.  அப்படி மாற்றப் பட்டவர் தான் மால்கம் எக்ஸ் ஆகும். அவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு வருமுன் சிறு வயதில் போதைப்பொருள், சூதாட்டம், வழிப்பறி, மாமா வேளைகளில் ஈடுபட்டு முரட்டுத் தலைவராக வலம் வந்தார். அப்படிப் பட்ட நபரை இஸ்லாமிய இயக்கத்திற்கு 1948ம் ஆண்டு இழுத்த பெருமை எலிஜா முகமது அவர்களைச் சாரும். அதன் பின்பு தீவிர இஸ்லாமிய பற்றுள்ள பணிவான மார்க்க வாதியாக மாறியதால் தான் , மால்கம் எக்ஸ் மக்காவிற்கு ஹஜ்ஜுக்காக செல்லும்போது அங்குள்ள வேற்றுமையில் ஒற்றுமை கண்டு ஆச்சரியப் பட்டு தனது இல்லத்தரசிக்கு ஜெத்தாவிலிருந்து கடிதம் 1964ல் எழுதியுள்ளார். எலிஜா முகம்மதுவின் 'Nation of Islaam' போதித்த மூன்று தாரகை மந்திரங்கள் என்னவென்றால்:

1) கறுப்பின மக்கள் தான் ஆதி மக்கள்

2) வெறுக்கப் பட வேண்டிய மக்கள் வெள்ளை நிறத்தவர்

3) வெள்ளை நிற மக்கள் ஒழிவது காலத்தின் கட்டாயம்.

 எலிஜா முகமது அவர்களுக்குப் பின்பு தீவிர இஸ்லாமிய பக்தரான மால்கம் எக்ஸ் அவர்களை 1965ம் ஆண்டு கொலை செய்தார்கள். காலங்கள் மாறினாலும் இன வெறி மறையாத வெள்ளை இனத்தவர் அமெரிக்காவில் நுழைய ஜுனே , 2025முதல் ஆப்பிரிக்க நாடான சாட், காங்கோ குடியரசு, கினியா, எரிற்றியா, சோமாலியா, சூடான் போன்றவற்வர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது ஆச்சரியமும், அநியாயமுமல்லவா? 2026இந்த ஆண்டில் அமெரிக்காவில் நடைபெறும் உலக கால் பந்தாட்ட விளையாட்டுகளில் அகில உலக விளையாட்டு சங்கத்தால் அங்கீகரிக்கப் பட்ட கால் பந்தாட்ட நடுவர் உமர் அதான் சோமாலிய நாட்டவராக இருந்ததால் அவரை உடனே திருப்பி அவருடைய நாட்டிற்கே அனுப்பியது மிகவும் அப்பட்டமான நிறைவேறி அல்லவா?

இந்த 2026 ஆம் ஆண்டு சோமாலிய குடியரசின் ஜனாதிபதி ஹசன் முகமது ஷைக் அவர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொண்ட போது முக்கிய பிரமுகர்கள் போர்வையில் இல்லாது, எந்த வித முன்னறிவிப்பு இல்லாமல் சாதாரண ஹாஜிகளோடு கலந்து கொண்டு முஸ்தலிபா மைதானத்தில் மேலே போர்த்தியிருந்த இக்ராம் துண்டினை தரையில் விரித்து படுத்திருந்தது படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட நாட்டின் மக்களையும் அமெரிக்காவில் தீவிரவாதிகள் போல வருவதினையும் தடை செய்யப் பட்டுள்ளது எப்படிப்பட்ட நிறவெறி என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கின்றேன்.  இஸ்லாமிய மார்க்கம் சாந்தியும், சமாதானமும் கடைப் பிடிக்கும் நாடு என்றும், அவர்கள் வன்முறையாளர்களில்லை என்று அவர்களுக்கு எங்கே புரிய போகிறது. வன் முறை, போர்கள் இஸ்லாமியர் மீது ஏவப் பட்டால் அதனை கைகட்டி பார்த்துக் கொண்டா இருக்க வேண்டும்?

               இந்தியாவில் முன்பு மனுசமிரித்தி படி மக்கள் ஜாதிகள் அடிப்படையில் நடந்து வந்தது. ஒரு காலத்தில் திருவாங்கூர் சமஸ்தானம் சாணார், நாடார் பெண்மணிகள் மேல் சட்டை அணிவதினையும், மார்புக்கென்ற வரியும் விதித்தார்கள். அதன் பின்பு நாடார் மற்றும் சாணார்கள் கிருத்துவ மதத்திற்கு மாறியதால் அதனை விலக்கப் பட்டது. தாழ்த்தப் பட்ட மக்கள் மற்ற சமுதாயத்திலிருந்து தனிமைப் படுத்தப் பட்டனர். அவர்கள் சொத்துரிமை இல்லை, மேல் ஜாதியினர் நிலங்களில் வேலைபார்த்து அவர்கள் கொடுக்கும் பழைய சாதத்தினை சாப்பிட வேண்டும். காலில் செருப்பு அணியக்கூடாது, மேலில் துண்டு போடக்கூடாது, மேல் ஜாதியினர் தெருக்களில் கீழ் ஜாதியினர் வரக்கூடாது, பொது மயானத்தில் கீழ் ஜாதியினர் இறந்தால் அடக்கம் செய்ய தனி சுடுகாடு, பழங்குடியினர் மனித மலங்கள் எடுக்கப் பயன் படுத்த வேண்டும், கீழ் ஜாதியினர் மேல் ஜாதி குருமார்களை சுமக்க வேண்டும், அவர்களுக்கென்ற தனி காலணிகளும், வட சென்னை ஸ்டாண்லி ,மருத்துவ மனை எதிரில் உள்ள ஆடு தொட்டி போல இருந்ததினை அதி திராவிட மற்றும் பட்டியலின மக்கள் படித்து உயர் வேளையில் அமர்ந்ததால் அவைகளெல்லாம் தலை கீழாக மாறி எல்லா சமுதாயமும் வேற்றுமையின்றி சகோதரர்களாக, வாழ இந்திய தலைவர்கள் படாத பாடுபட்டனர் என்பது மறுக்கப் படாது. இருந்தாலும் இன்றும் அதுபோன்ற பட்டியலின மக்கள் வன் கொடுமைகளுக்கும் ஆளாவது அங்கொன்றும், இங்கொன்றும் நடக்கின்றது வேதனையாக இல்லையா?

அமெரிக்காவில் 1964ம் ஆண்டு சிவில் உரிமை சட்டம் இயற்றப் பட்டு நிறத்தால், இனத்தால், பாலினத்தால் நாட்டின் பெயரால் உள்ள வேறுபாடுகள் ஒழித்துக் கட்டப் பட்டன. அதேபோன்று ஆங்கிலேயர் இந்திய நாட்டினை விட்டு வெளியேறிய பின்பு டாக்டர் அம்பேத்கார் தலைமையில் அமைக்கப் பட்ட அரசியலமைப்பு சபை 1948ம் ஆண்டு பட்டியலின மக்கள் வாழ்க்கையில் சம உரிமை பெற இட ஒதுக்கீடுகள் வழங்கப் பட்டத்தினை மறுக்க முடியாது.

 

 

ஒருவன் எப்போது இஸ்லாத்தினை ஏற்றானோ அப்போதே அவன் சகோதரனாகி சம அந்தஸ்து பெறுகிறான். அதற்கு உதாரமாக ஹஸ்ரத் பிலால் என்ற கறுப்பினத்திவரை தாயிப் நகரில் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு சொல்ல ரசூலுல்லாஹ் அழைத்தார்கள், அந்த இடத்தினை நான் 2017ம் ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றபோது காண முடிந்தது.  நான் அமெரிக்க தலை நகர் வாஷிங்க்டன் 2008ம் ஆண்டு சென்றபோது ஜும்மா தொழுகைக்கு அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்றிருந்தேன். அங்கே குத்பா பிரசங்கம் செய்தது ஒரு கறுப்பின முஸ்லிம் தான்.நாம் உலகில் இஸ்லாமிய பிரிவுகளான சுன்னி, ஷியா, ஷாபி, பல்வேறு அமைப்புகளாக பிரிந்துள்ளதால், இஸ்லாமிய நாடுகளான இரான், பாலஸ்தீனம், லெபனான், சிரியா நாடுகளை மேற்கத்திய நாடுகள் கில்லிக்கீரையாக வேட்டையாடுகின்றனர். இஸ்லாமிய மார்க்கம் வன்முறையினை ஒரு போதும் ஆதரித்ததில்லை, ஆனால் வலிய வந்த வன் முறைகளை தடுக்கவில்லையென்றால் கோழைகள் என்று தானே அழைக்கப் படும்.

தமிழ் நாட்டில் இஸ்லாமியர் போர்வையில் பல அமைப்புகள் உள்ளன. அவைகள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து செயல் படுவதால் வலிமை இழந்து கேலிக்கூத்தாக சமுதாயத்தினை ஆக்குகின்றனர். சிலர் லெட்டர் பேடு கட்சிகள் நடத்துகின்றனர். ஆனால் தேர்தல் நேரங்களில் நாலு காசு சம்பாதிக்கும் நோக்குடன் செயல் படுகிறார்கள் என்று சொல்லப் படுவது உண்மையா அல்லது பொய்யா என்ற கேள்விக்கான பதிலை உங்களுக்கே விட்டு விடுகிறேன்.

 

Saturday, 16 May 2026

கோபம் குலம் அழிக்குமா?


(டாக்டர் .பீ.முகமது அலி,(.பி.எஸ்()

 

நான் 12.5.2026 இரவு எட்டு மணிக்கு ஒரு வேலையாக சென்னை பிராட் வே வழியாக ஆட்டோவில் ல் வரும்போது ஒரு ஆண் தனது புர்கா போட்ட இளம் வயது மனைவியை ரோட்டு ஓரத்தில் பொது மக்கள் பார்க்கும் விதமாக தலைமுடியினை பிடித்து அடித்தும், அதனை இரண்டு சிறு குழந்தைகள் தடுத்தும், அப்போது அருகில் இருந்தவரிடமிருந்து அந்த பெண்ணை காப்பாற்றி அனுப்பி வைப்பதும் கண்டு மனம் வெதும்பினேன். அந்த பெண்ணும் தவறு செய்தாலும் அதனை பலர் கண்பட அடிப்பதா, அதுபோன்று இஸ்லாத்தில் சொல்லப் பட்டுள்ளதாலதா இல்லையே! மனைவி தவறு செய்தால் கண்டிக்கவும், அதனை மீறி நடந்தால் அறைக்குள் காயம் படாது சிறிதாக அடித்து திருத்தவும் தான் கதீசுகள் சொல்லியுள்ளது. மனைவி அந்த பிள்ளைகளை பெற்று காப்பாற்ற எவ்வளவு சிரமப் பட்டிருப்பாள், அவனுக்கு சுகம் தர எவ்வளவு உடல் ரீதியாக சிரமப் பட்டிருப்பாள், அதனையெல்லாம் மறந்து விட்டு வன் முறையில் ஈடுபடுவது எவ்வளவு ஹராமான செயல் என்று நினைத்து பார்க்க வேண்டாமா?

               குழந்தைகளை படிக்கவில்லை என்று அடிக்கும் பெற்றோர்களைப் பார்க்கலாம். நானும் எனது மகனை 35 ஆண்டுகளுக்கு முன்பு, அவன் எட்டாவது படிக்கும் போது  மாலையில் டியூஷன் ஆசிரியர் காத்திருந்தும் படிக்காமல் சக தோழர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதினை அறிந்து தலையில் கொட்டி அழைத்து வந்துள்ளேன். வீட்டிற்கு வந்த மகன் தனது தாயாரிடம் குறை சொன்னது என்னவென்றால், 'தன் நண்பர்கள் முன்னாள் அடித்தது அவமானதாக இருந்தது என்று சொல்லியுள்ளான். அப்போது நான் சிந்தித்ததில் எந்த கோபமும்,எரிச்சலும் பொது இடங்களில் வெளிப்படுத்துதல் கூடாது என்பது.உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள் 'அவ்வாறு அடிப்பதினால் அவர்கள் மூளை மங்கி விடுமாம். அவர்கள் எரிச்சலும், உங்கள் மீது கோபமும் உள்ளவர்களாக மாறி விடுவார்களாம்.

               கோபம் என்பது என்னவென்றால் ஒருவருடைய எரிச்சலும், வெறுப்பும், வேற்று மனப் பான்மையும் வெளிப்படையாக காட்டுவது ஆகும். கோபத்தினால் ரத்த நாளங்கள் விரிவடைந்து முகமும், விழிகளும் சிகப்பு நிறமாக மாறும். 2) கோபத்தினால் இரண்டு புருவங்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டி முகத்தில் சுருக்கமும் ஏற்படும். 3) கோபம் வரும்போது, வாய்க்கு வந்ததினை கட்டுப்படுத்த முடியாமல் வெளிக்காட்டியும், வன் முறை செயலிலும் இறங்க செய்யும். 4) கோபத்தினால் பின் விளைவு என்ன என்று தெரியாமல் போய் விடும்.

               கோபம் ஒரு மனிதருடைய உரிமை பறிபோகும் போது அதனைப் பெற காட்டுவதாகும். ஆனால் சில்லறை விஷயங்களுக்காக கோபப் படுவது தடுக்கப் பட வேண்டும். கோபமானது ஒருவருடைய குடும்பம், சமூகம் ஆகியவற்றில் தீய மனிதர்கள் இருந்தால், அவர்களின் நியாயமற்ற செயல்களால். இயற்கையாகவே கோபம் வரும். ஒருவர் மற்றொருவரைப் பற்றி கீழ்த்தரமாக கேலி செய்தாலும் கோபம் உண்டாகும்.

               17.ஜூன் 2021 வருடங்களுக்கு முன்பு தமிழ் தொலைக்காட்சி சேவையில் 'யாகவா முனிவர் என்பவருக்கும், சென்னை கடற்கரை சாலை ஆசிரமம் அமைத்திருந்த 'சிவசங்கர் பாபா' என்பவருக்கும் ஆன்மிகம் தொடர்பான விவாதம் நடந்தபோது யாகவா முனிவர், ஆத்திரத்தில் சிவா சங்கர் பாபாவை அடிக்கப் பாய்ந்து தொடரே நிறுத்தப் பட்டது நீங்கள் பார்த்திருப்பீர்கள். அது ஒருவரைப் பார்த்து அடுத்தவர் கேலியும், கிண்டலும் செய்ததால் வந்த வினைதானே!

               ஒருவர் அகங்காரமாக இருந்தால் அதனை சுட்டிக் காட்டும்போது கோபப் படுவதும். ஒருவருடைய தவறான நடத்தை, செயல், குறை சுட்டிக் காட்டப் பட்டால் அவர் கோபத்திற்கு ஆளாகிறார். 1989ம் ஆண்டு மார்ச் 25 ம் தேதி தமிழக சட்டசபையில் ஆளும் கட்சி தலைவர் நிதிநிலை அறிக்கை படிக்கும் முன்பு, எதிர் கட்சி தலைவர் 'கிரிமினல்' படிக்கக் கூடாது என்று கூறியதால் வன்முறை வெடித்ததினை தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின.

               ஒருவருடைய பழைய பகைமையினையோ, நடத்தினையோ. அல்லது மதத்தினையோ சுட்டிக் காட்டினால் கோபம் உண்டாகுமல்லவா? ஒருவர் தேர்தலில் உள்ள பகையினையோ அல்லது தங்களது காரியங்கள் வெற்றியில் அமைந்து விடவில்லையா என்று பாராளுமன்றங்களில் அடிதடிகள் நடப்பதினை உலக அளவில் தொலைக் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

               19.12.2024 அன்று இந்திய பாராளுமன்ற வளாகத்தில் பிஜேபி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாரங்கி, ராஜ்புட் ஆகியோருக்கும், காங்கிரஸ் எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டதாக மாறி, மாறி குற்றச்சாட்டு எழுந்ததல்லவா? அது போன்ற ஆரோக்கியமற்ற செயல் ஜனநாயகத்தில் தேவையில்லையல்லவா?

              

2007 ம் ஆண்டு தைவான் பாராளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர் கட்சி உறுப்பினர்களுக்கு தகராறு ஏற்பட்டு சிலர் சபாநாயகர் மேஜைமீது நின்று குதித்ததினை தொலைக் காட்சிகள் படம் பிடித்து காட்டின.

துருக்கி பாராளுமன்றத்தில் 11.2,2026 அன்று நீதி பரிபாலன அமைச்சர் நியமனம் சம்பந்தமாக ஆளும் கட்சிக்கும் எதிர் கட்சி உறுப்பினர்களுக்கும் கைகலப்பாக மாறியது தொலைக் காட்சிகள் படம் பிடித்துக் காட்டின. நாட்டினை ஆளுபவர்கள் நீதி பரிபாலன முறைப்படி, வரம்பு மீறாது,  வெறுப்புக் காட்ட வேண்டுமல்லவா? 14.05.2026 அன்று ராஜீய பயணமாக சீன சென்ற அமெரிக்க அதிபர் சொல்கிறார், ஈரான் நாடு தனது உடன்படிக்கையினை உடனே ஒத்துக்க கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லையென்றால் ஈரானை 5நிமிடங்களில் அழித்து விடுவேன் என்று எச்சரிக்கை விடுவது. இதனையே தான் சீன நாட்டிடம் சொன்னார். ஆனால் அதன் அதிபர்சி’ எங்களை பயமுறுத்தி பணிய வைக்க முடியாது, மாறாக பேச்சு வார்த்தைகள் மூலம் தான் தீர்வு காண வேண்டும் என்று கறாராக சொன்னதால் சமீபத்தில் சீனா சென்றுள்ளார்.               இதுபோன்ற கோபமான செயல்களால் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் கரண் பாஸ், ஜோ லோபிக்ரான், சாரா ஜேக்கப், ஜேமி பாஸ்கின் ஆகியோர் அமெரிக்க அதிபரின் மன நிலையினை மனோ தாத்துவ நிபுணர்கள் பரிசோதனை செய்ய உத்திராவிட வேண்டுமென்றனர். அந்த கேவலமான மன நிலைக்கு ஒரு அதிபர் கோபத்தினை வெளிப்படையாக காட்டலாமா? அது கேலி கூத்தாக உலகமே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது.

ஒருவர் ஒரு தவறு செய்தால் அதற்காக கோபப் படாமல் 'மறப்போம், மன்னிப்போம்' என்ற கொள்கையினை கடைப் பிடித்தல் அவரும் அமைதியாக இருப்பார் நீங்களும் அமைதியாக இருப்பீர்கள். ஒரு தடவை முகமது நபி{ஷல்)அவர்கள் மக்கா நகரில் தனது தோழர்களுடன் வரும்போது ஒருவர் வந்து நபிகளின் தாடியினை பிடித்து இழுத்து தனக்கு சேர வேண்டிய கடனை தந்து விட்டு செல்லுங்கள் என்று கோபமாக கூறினாராம். அதனை கண்டு ஆத்திரமடைந்த தோழர்களை அமைதியாக இருக்கச் சொல்லி அவருடைய கடனை அடைக்கச் சொன்னார்களாம். ஒருவர் வம்புக்கு இழுத்தால் அவரை மன்னிப்பது தான் வீரமாகுமாம். அடிக்கு அடி என்ற செயல் நன்மை பயக்கும், மாறாக திருப்பி தாக்கினால் அதன் பலனை அனுபவிக்க வேண்டும். அதற்கு உதாரணமாக தமிழ் பழமொழி, 'நாயை அடிப்பானேன் --சுமப்பானேன்' உங்களுக்கு தெரியாததல்லவா?

 

 

கோபமான நேரத்தில் ஒருவர் தனது மற்றும் தனது குடும்பத்தினை எண்ணி பார்க்க வேண்டும்.

வழிபாட்டு தளங்களில் அமைதியையும், சாந்தத்தினையும் தேடி செல்கிறார்கள். ஆனால் 7.09.2010 அன்று நோன்பு நேரத்தில் தஞ்சாவூர் திருவிடாஞ்சேரி கிராமத்தில் உள்ள பள்ளிவாசலில் லோக்கல் ஜமாத்திற்கும், தவ்ஹித் ஜமாத் பிரிவினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவர் கொல்லப் பட்டது தான் மார்க்கம் சொன்ன சாந்தியும், சமாதானமா?

27.7.2023 அன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை டயோசிஸ் சர்ச் நிர்வாகம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அங்குள்ள பாதிரியாரும் தாக்கப் பட்டது மட்டுமல்லாமல் மேஜை, பென்ச் போன்றவையும் அடித்து நொறுக்கப் பட்டத்தினை நீங்களும் பார்த்திருப்பீர்கள் தொலைக் காட்சிகளில்.

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலை, வடகலை பிரபந்தம் பாடுவது சம்பந்தமாக 200 ஆண்டுகள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து, அதன் முடிவில் தென்கலை பிரிவினர் பாட வேண்டும் என தீர்ப்பு வந்தும் ஒவ்வொரு வருடமும் இரண்டு பிரிவினரும் முட்டி மோதுவதும் நீங்கள் தொலைக் காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். அது போன்ற சம்பவங்களும்,கோவில் தேரோட்டங்களில் வடம் பிடித்து இழுக்க யாருக்கு முதல் உரிமை உள்ளது என்ற தகராறிலும், கோவில்களில் யாருக்கு முதல் மரியாதை என்ற  தகராறுகளிலும் வன் முறைகள் வெடிப்பதினை பார்த்திருப்பீர்கள்.

அதுபோன்ற தகராறுகளில் ஈடுபடுவார்கள் எண்ணமும், உடலும் பாதிக்கப் பட்டு வழக்கு, வக்கீல் செலவு, நீதிமன்ற வாசல்களில் அலைவதினை நீங்கள் கண்டிருக்கலாம். இது போன்ற செயல்கள் ஒரு சமூதாய வளர்ச்சியை காட்டுகிறதா அல்லது படு பள்ளத்தில் ஆதிவாசிகள் நடவடிக்கைகளுக்கு தள்ளப் படுகிறதா என்று சிறிது சிந்தனை செய்தால், அவைகளை தடுக்கலாமல்லவா?