Sunday 23 October, 2022

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!

 

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

சமீபத்தில் வெளியான கல்கி ஆசிரியர்  வெளியிட்ட சரித்திர நாவலில் வரையைப் பட்ட வரலாற்று கதையினை தழுவி வெளிவந்த திரைப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் சித்தரிக்கப் பட்ட குந்தவி இளவரசி இஸ்லாத்திற்கு தழுவிய செய்தி திருச்சி  ஸ்ரீ ரங்கநாதஸ்வாமி கோவில் பகுதியில் சுற்றி வருகின்றதினை வலது சாரி அமைப்புகளிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக நீங்களெல்லாம் செய்தித்தாள்களில் படித்து அறிந்திருப்பீர்கள். வலாற்று செய்தி என்னவென்றால் கி.பி.1000ம் நூற்றாண்டில் சோழ மண்டலத்தினை ஆண்ட ஆதித்ய கரிகாலன் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அதற்கு மூல காரணம் அவருடைய அரச சபை ஆலோசகராக இருந்த ரவிதாசன் என்ற பிராமணர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு  கொன்று விட்டதாக கருதிய மன்னரின் சகோதரி குந்தவி மற்றும் அவருடைய சகோதரர் ராஜேந்தரன் கொலையாளிகளுக்கு கழுவில் ஏற்றி கொல்வதற்குப் பதிலாக அவர்களுடைய சொத்துக்களை பறிமுதல் செய்ததாக கூறுகின்றது. ஏனென்றால் அவர்கள் பிரமானரர்களாக இருப்பதால் சாஸ்திரப் மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாக நம்பப் படுகிறது. தனது மதத்தில் உள்ள சனாதன கொள்கையில் மனித வேறுபாடுகளை வெறுத்து திருச்சி-மதுரை தரநல்லூர் பகுதியில் வாழும் துருக்கியிலிருந்து பயணம் வந்து இஸ்லாமிய நல் போதனைகளை போதிக்கும் நத்தர்ஷா(969-1039) அவர்களை சந்தித்து இஸ்லாமிய மார்க்க கொள்கைகள் தனக்கு ஒத்துப் போனதால் இஸ்லாத்திற்கு கலிமா சொல்லி மாறியதாகவும் வரலாறு சொல்கிறது.  குந்தவி தேவி இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியதாகவும் கூறப் படுகிறதுதான் பெரிய சர்ச்சையாக உள்ளது. குந்தவி தேவி என்பவர் ஒருவர் இருந்தாரா என்ற கேள்விக்கு விடை சொல்லும் விதமாக மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியத்தில் உள்ள குந்தவி சிலை உள்ளதாகவும் அந்த சிலையின் கம்பீரமான படம் இணைய தலத்தில் உள்ளது.

            நாடுகளில் மனித கொலைகள், கொடுமைகள் பற்றி விசாரிக்க சர்வதேச கிரிமினல் கோர்ட் 1998ல் ரோமில் அமைக்கப் பட்டு தற்போது நெதர்லாந்து நாட்டில் ஹெகுவில் இயங்கி வருகிறது. அதன் படி யூகோஸ்லாவியா நாட்டின் ஜனாதிபதி மிலாவிக் போஸ்னியா நாட்டின் முஸ்லிம்களை வேட்டையாடினர் என்றும், லைபீரியா நாட்டின் ஜனாதிபதி டெய்லர், மற்றும் ருவாண்டா பிரதமரையும் கோர்ட் முன் நிறுத்தி தண்டித்தது. ஆனால் அதே கோர்ட் 2003ம் ஆண்டு மனித ஆட்கொல்லி ஆயுதம் வாய்ப்பிருப்பதாக இராக் ஜனாதிபதி சதாம் ஹுஸைனை சிறைபிடித்து அவருடைய எதிரிகளின் கையில் கொடுத்து அநியாயமாக மரண தண்டனையும் வாங்கி கொடுத்த அமெரிக்கா ஜார்ஜ் புஸ்ஸையோ அல்லது இங்கிலாந்து டோனி பிளேயரையோ இதுவரையும் எதுவும் செய்யவில்லை. ஏனென்றால் அமெரிக்காவில் ஐ.சி.சி. சட்டம் செல்லாது. அதுபோன்று தான் ரசியாவிலும் ஏனென்றால் அவர்கள் எல்லாம் சனாதன கொள்கைப்படி விளக்கு அளிக்கப் பட்டவர்களாம். ஆனால் இஸ்லாத்தில் அதுபோன்ற விளக்கெல்லாம் இல்லையல்லவா?

            நம் நாட்டில் இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வு கி.பி. 1000ம் சோழ அரசர் காலத்தில் தான் வந்ததா என்றால் இல்லை என்றே அடித்து ஆதாரத்துடன் சொல்லலாம். ரசூலுல்லாஹ் மதினாவில் வசித்த போது வியாபாரத்திற்காக வந்த  இஸ்லாமிய வியாபாரிகள் மற்றும் சஹாபிகள் கேரளா திருசூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதிக்கு வந்து தங்கியிருந்தபோது அப்போதைய மன்னர் சேரமான் பெருமான் இஸ்லாமிய ஓரிறை கொள்கையினை பற்றி அறிந்து அவர்கள் தொழுவதிற்காக ஒரு இடத்தினை ஒதுக்கி தந்தும், ரஸூலல்லாவினை காண சௌதி அராபியாவிற்கு சென்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

            அது சரி இஸ்லாத்தில் அப்படி என்ன வேற்று மதத்தினவரை ஈர்க்கும் கொள்கை உள்ளது என்பதினை உத்தரப்பிரதேசத்தினைச் சார்ந்த சித்தார்த் பிற்காலத்தில் 2021ம் ஆண்டு இஸ்லாத்திற்கு ஏன் சாதலி என்ற முஸ்லிமாக மாறினேன் என்று விவரித்துள்ளார். சிறு வயதிலிருந்தே முஸ்லிம்கள் மீது ஒரு வெறுப்புணர்வு இருந்தது. பின்பு அவர் 19 வயதாகும்போது கோவில்களில் அனுசரிக்கும் பல்வேறு சடங்குகளை கண்டு அதிர்ச்சியடைந்து  தங்களுடைய கிராமத்து பெரியவர்களிடம் விளக்கம் கேட்டபோது அவர்கள் நமது முன்னோர்கள் கடைப் பிடித்து வந்ததால் தாங்களும் வழிபாட்டு வருவதாக சொல்லியுள்ளார்களாம். அது அவருடைய  அறிவிற்கு பொருத்தமான பதிலாக தெரியவில்லை. ஆகவே இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்ள அல் குரானை விளக்கத்துடன் படிக்க முற்பட்டாராம்.  இஸ்லாமியர் தொழும் இடங்களில் பார்த்தபோது தொழுபவர் பக்கீரோ அல்லது சீமானோ இருவரும் தோழோடு தோழாக சமமாக சகோதர பாசத்துடன் நின்று தொழுவதினை பார்த்து ஆச்சரியப்பட்டாராம். சித்தார்தரும் நின்று தொழ ஆரம்பித்தாராம். அவரை யாரும் வேற்றுமையுடன் பார்க்கவில்லையாம். அதன் பின்பு கலிமா சொல்லி இஸ்லாத்தினை தழுவி விட்டாராம். உங்களுக்கெல்லாம் தெரியும் உத்தர பிரதேசத்தில் எந்த விதமான துவேசம் உள்ளது தற்போது என்று. அவருக்கு பெற்றோரும், உற்றாரும் தாங்கொன்னா கொடுமைகள் கொடுத்தார்களாம். ஆனால் தான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் விலகவில்லை என்று கூறும் போது உங்களுக்கு உடலெல்லாம் புல்லரிக்கவில்லையா?

            நம் நாட்டின் வரலாற்றில்  சாதாரணமான ஆட்கள் மட்டுமல்ல. மாறாக அரசர்களும் இஸ்லாத்தினை தழுவியிருக்கின்றார்கள் என்ற தகவல்களை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன்:

1)    ‘பேரார்’ சந்ததிகளின் பேரரசர் பாத்துல்லாஹ் இம்மதுல் மாலிக் ஆரம்பத்தில் விஜயநகர அரசரின் அடிமையாக ‘கவாரிஸ்’ என்ற இந்துவிடம் ஒப்படைக்கப் பட்டார். அதன் பின்பு இஸ்லாத்தின் பண்புகளில் அடிமையே இல்லை என அறிந்து இஸ்லாத்தில் சேர்ந்து பேரார் தேசத்தின் ஒரு பரம்பரையே ஏற்படுத்தினார் என்றும் அவர் 1490ம் ஆண்டிலிருந்து 1504 வரை ஆட்சி நடத்தினாராம்.

2)    வங்காளத்தினைச் சார்ந்த ராஜா கணேஷா வம்சத்தில் யாதவ குடும்பத்தில் பிறந்த 15ம் நூற்றாண்டில் பிறந்த ராஜா கணேஷ் பிற்காலத்தில் இஸ்லாத்தினைத் தழுவி ஜலாலுதின் முகமது ஸா என்று அழைக்கப் பட்டார். தனது தந்தையும் வங்கத்தின் அரசருமான கணேசா இறந்த பின்பு அரியணையில் ஏறி கி.பி.1418-1433 வரை 16 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பிற்காலத்தில் இஸ்லாமிய மார்க்கத்தினைத் தழுவினார். இவர் ஆட்சியில் வங்கம் வளம் செழித்த நாடாக இருந்தது. தைமூர் வம்சம், எகிப்தினை ஆண்ட மம்லுக், சீனாவினைச் சார்ந்த மிங் வம்சங்களுடன் நல்லுறவினை வளர்த்தார். தான் முஸ்லிமாக மாறியதோடு மட்டுமல்லாமல் மற்ற ஹிந்துக்களுக்கு இஸ்லாத்தின் சிறப்புகளை சொல்லி அவர்களையும் இஸலாத்திற்கு மாற்றினார்.

3)    18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வங்காளத்தில் சூரிய நாராயணராவ் மிஸ்ராவாக இருந்தவர் இஸ்லாத்தினைத் தழுவி 1717-1727 வரை வங்கத்தின் நவாபாக முர்ஷித் குழி கான் என்ற பெயருடன் ஆட்சி செய்தார்.

4)    டெல்லி நிசாமுதீன் தர்காவிற்கு அருகில் இருக்கும் மாலிக் மகபூல் என்பவர் தர்காவினை பார்த்திருப்பீர்கள். அவர் ஆந்திர தேசம் வாரங்களினைச் சார்ந்தவர். இவர் 13ம் நூற்றாண்டில் வலிமைமிக்க போர் வீரர். அவர் ஒரு ஹிந்து. அவருடைய உண்மைப் பெயர் யாந்தர் ஆகும்  இவர் சிறந்த நிர்வாக திறமை கொண்டவராவார்.

அவர் இஸ்லாத்திற்கு மாறி மாலிக் மகபூல் என்ற பெயரினை மாற்றி சிறந்த பக்திமானும் நிர்வாகியாகவும் இருந்தார்.

5)    மாலிக் காபூர் ஒரு அடிமையாக டெல்லி அரசர் அலாதின் கில்ஜி காலத்தில் குஜராத்தில் படையெடுப்பின் போது 1299ம் ஆண்டு பிடிக்கப் பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டார். பின்பு அவர் முஸ்லிம் மார்க்கத்திரத்தினைத் தழுவி தாஜுதீன் தௌலா என்று அழைக்கப் பட்டார். அவர் போர் திறமைகளை பாராட்டி அவரை படைத்தளபதியாக்கி மங்கோலிய படையெடுப்பினை எதிர் கொள்ளவும், யாதவ பரம்பரை, காக்கடியாஸ், கொய்சாலாஸ் மற்றும் பாண்டியர்களை போரில் சந்திக்கவும் அவரை மன்னர் அனுப்பி வைத்தார். அதன் பின்பு அவர் முன்னாள் அடிமைகளால் 1316ல் கொல்லப் பட்டார்  என்பதும் வரலாறு.

6)    பாதவுல்லாஹ் கர்நாடகா பிடார் பகுதியினைச்சார்ந்த கனரீஸ் பிரமணராவார். இவரை பாமணி படைகள் அடிமையாக பிடிக்கப் பட்டார். அதன் பின்பு அவர் முஸ்லிம் மார்க்கத்திற்கு மாறினார். சிறந்த போர் தளபதியாகவும் பயிற்சி பெற்றார். பாமணி சுல்தான் 1490ல் இறந்த பின்பு இவர் பாமணி சுல்தானாக பதவியேற்றார்.

7)    இரண்டாம் உலகப்போரினை கூட்டுப்படைகளை ஒருங்கிணைக்கும் ஜாம்பவானாக இருந்த இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இஸ்லாமிய மார்க்க கருத்துக்களின் ஆழத்தினை அடிக்கடி படித்துவிட்டு அவருடைய குடும்பத்தினரிடம் தான் இஸ்லாமிய மார்க்கத்தில் இணையப் போவதாவதாக சொல்வதுண்டு அவர்கள் கூறியுள்ளார்கள் என்ற வரலாறு.

8)    அமெரிக்காவில் கறுப்பினராக 1958ல் பிறந்து அமெரிக்கா மட்டுமல்லாது உலக பாப் இசை ரசிகர்களை தன்னுடைய நடனத்துடன் கூடிய இசையின் மூலம் கவர்ந்த பாடகர். மைக்கேல் ஜாக்சின் அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு இழைக்கப் படும் வேறுபாடுகளை கண்டு ஒரு கட்டத்தில் வெள்ளையர்கள் நீங்கள் தோல்களில் தான் வேற்றுமை பார்க்கின்றீர்கள் என்று வெறுப்புடன் தானும் வெள்ளையனாக மாற பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சகோதர பாசம் கொண்ட இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவி வெள்ளை தொப்பி தலையில் அணிந்து உள்ள படங்களையும் நீங்கள்ட பார்த்திருப்பீர்கள். அவர் 2009ம் ஆண்டு இறைவன் அடி சேர்ந்தார்.

9)    உங்களுக்கெல்லாம் தெரியும் உலக குத்துச் சண்டை போட்டியில் சாம்பியன் 2003ம் ஆண்டு பட்டம் வென்ற மைக் டைசன் பிற்காலத்தில் ஒரு கற்பழிப்புக் குற்றத்திற்காக பட்டத்தினையும் இழந்து, ஜெயிலுக்கும் சென்றார் என்று. ஆனால் ஜெயிலில் கிடைத்த இஸ்லாமிய நல்வழி போதனையால் கற்பழிப்பது மாபெரும்   குற்றம் என்று உணர்ந்து இஸ்லாத்திற்கு மாறினார். ஆனால் 2017ம் ஜூன் மாதம் 4ந்தேதி உ.பி மாநிலத்தில் உன்னாவ் என்ற கிராமத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலிய குற்றத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் குலதீப் சிங் தண்டனை பெற்றாலும் சிறிதும் குற்றத்திற்காக வருந்தாது  சிரித்த முகத்துடன் பெரிய கூட்டமே வரவேற்பு கொடுத்தது. அதேபோன்று தான் 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தில் கற்பினியாக இருந்த பில்கிஸ் பானு கற்பழிக்கப் பட்டும் மற்றும் 16 பேர்கள் கொலை செய்யப் பட்டும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கொடுத்த அரசு விடுதலை செய்த பின்னர் அவர்களை மாலைபோட்டு வரவேற்ற வழக்கு உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளது.

10)  உங்களுக்கெல்லாம் தெரியும் இந்திய அரசியல் புதுடெல்லி வட்டாரத்தில் அரசியல் சாணக்கியராக வலம் வரும் பி.ஜெ.பி தலைவர் சுப்ரமணியசுவாமி. இவருடைய மகள் சுபாஷினி ஒரு சிறந்த பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் CNN-IBN தொலைக்காட்சியில் பல ஆண்டு பணியாற்றியவர். சுபாஷினி 16.ஜூன் மாதம் 2015ல் நதீம் ஹைதர் என்ற முஸ்லிமை திருமணம் செய்து லண்டனில் பி.பி.சி தொலைக் காட்சியில் பணியாற்றுகிறார்.

 

நான் ஏன் இவ்வளவு விளக்கங்களையும் உங்களுக்குச் சொல்கிறேனென்றால் இஸ்லாம் யாரையும் வலுக்கட்டாயமாக மார்க்கத்திற்கு இழுக்கத் தேவையில்லை. பாமரர், அடிமை, அரசர், பத்திரிக்கையாளர், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின்  நல்லொழுக்கங்களால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்திருக்கின்றார்களாலே தவிர யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தினை பின்பற்றிய பிறகுகூட அவர்களால் தன்னிச்சையாக தங்களுடைய பழைய மதத்திற்கு சென்று விடலாம். ஆனால் அவர்கள் ஏன் செல்லவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் கொள்கை அடிப்படையில் சேர்ந்துள்ளார்கள். அதேபோன்று தான் குந்தவி தேவியும் சனாதானத்தில் ஜாதிகள் பெயரால் மதுரை உத்தமபுரம், தர்மபுரி போச்சம்பள்ளி ஜாதி தடுப்பு சுவர்போல  பெரிய தடுப்பு சுவர் எழுப்பி அவர்கள் எல்லாம் சட்டத்திற்கு அப்பால் கட்டுப் படாதவர்கள் என்ற குறை தன்னுடைய உடன் பிறந்த அண்ணன்  ஆதித்ய கரிகாலன் கொலைக்குக் கூட மரண தண்டனையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஆதங்கத்தில்  திருச்சி நத்தர்சா அவர்கள் போதனையால் இஸ்லாமிய மார்க்கத்தினை தழுவியுள்ளார். அந்த வரலாற்று உண்மை வலதுசாரி அமைப்பிற்கு தெரிந்தும் கூட மத துவேஷம் அவர்கள் கண்ணை மறைத்து கூக்குரல் எழுப்புகின்றனர்.