Friday 20 October, 2023

பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டலாமா?

 


(டாக்டர் .பீ.முகமது அலி, பிஎச்.டி.)

பாலஸ்தீனம் யூதர்கள், கிருத்துவர்கள், முஸ்லிம்களுக்கு புனித பூமியாகும். அவர்களின் நபிமார்கள் மூஸா, இயேசு, இப்ராஹிம் ஆகியோர் அங்கு வசித்ததாக புனித புத்தகங்களில் கூறப் பட்டுள்ளது. 20ம் நூற்றாண்டிலிருந்து மத்திய கடற்பகுதியான காஸாவும், மேற்கு கடற்கரை பகுதியான காஸாவும் போராடும் தளமாக உள்ளது. பாலஸ்தீனம் என்ற வார்த்தை 'பிலிஸியா' என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப் பட்டதாகும். அதுவே கிரேக்க எழுத்தாளர்களால் பிலிஸ்தீன் என்று அழைக்கப் பட்டு அந்த பகுதி 'சிரியா பாலஸ்தீனா' என்றும் தூதர் ஈஸா பிறந்த இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு அழைக்கப் பட்டது. முதல் உலகப் போரில் ஓட்டமன் சாம்ராஜ்யம் தோற்கடிக்கப் பட்டு. பிரிட்டிஷ் ஆளுமைக்கு வந்தது. ஆற்றின் ஓரத்தில் அமைந்திருந்தாலும் அதில் வற்றாத ஜீவ நதி எதுவுமில்லை. மலைப் பகுதியும், சுண்ணாம்பு பாறையும் கொண்டதாகவும் அமைந்துள்ளதாகும். இந்தப் பகுதியினை முக்கிய தரைவழி பாதை எகிப்திலிருந்து சிரியா வரைக்கும், மேற்கு கடற்கரை பகுதியிலிருந்து ஜோர்டான் நதிக்கு அப்பால் செல்வதாலும் இங்குள்ள இஸ்ராயில-பாலஸ்தீன மக்கள் முக்கிய இடமாக கருதப் படுகிறது. இந்தியாவிலிருந்து தரைமார்கமாக உம்ரா சென்று, அல்-அக்ஸா பள்ளிக்கு சொல்லுபவர்கள் இதனைக் காணலாம்.

          மணற்பகுதியானாலும் ஜெருசலம் நகரம் பண் மடங்கு விஸ்தீரம் செய்யப் பட்டது. 21ம் நூற்றாண்டில் ஜோர்டான் நாட்டிற்கு மேற்குப் பகுதியில் பாலஸ்தீனர் அரைப்பகுதியிலும், மற்ற பகுதியில் முஸ்லிம்கள், கிருத்துவர்கள், டிரஸ் இன மக்கள் குடியிருந்தனர். இரண்டாம் உலகப் போருக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசு பாரசீக வளைகுடா பகுதியில் ஆக்கிரமிப்பும், பிரான்ஸ் அரசு சிரியா, லெபனான் பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்தன. இரண்டாம் உலக போருக்கு முன்னாள் சிரியாவும், லெபனானும் சுதந்திர வேட்கையால் போராட்டங்கள் நடத்தின. அதன் பின்னர் பிரிட்டிஷ், பிரான்ஸ், ரஸ்யா தங்கள் ஆக்கிரப்பு பகுதிகளிருந்து விலகின. இரண்டாம் உலக போருக்கு பின்னர் 1947ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இஸ்ராயில் யூத மக்கள்  ஜெர்மன் அதிபர் அடால்ப் ஹிட்லரால் வேட்டையாடப் பட்டார் என்ற இறக்கத்தில் இஸ்ராயில் என்ற நாட்டையும், பாலஸ்தீன நாட்டையும் இரண்டாக்கியது. அதிலிருந்து அங்கு அமைதியின்மைக்கு வித்திட்டது. அராபிய பழமொழி ஒன்றுள்ளது, 'இரு கூடாரத்தில் ஒட்டகத்திற்கு தனது தலையினை வைக்க அனுமதியளித்தால் அதன் உரிமையாளரை விரட்டிவிட்டு ஒட்டகம் உள்ளே நுழைந்து விடுமாம். அதேபோல தான்' பாலஸ்தீனத்தின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்ததாம் இஸ்ராயீல்.

          பலஸ்தீனத்தினை .நா முழு அந்தஸ்தில்லாத வெறும் பார்வையாள உறுப்பினரான 29 நவம்பர் 2012ல் அங்கீகரித்தது. ஆனால் .நா. சபை இஸ்ரெயிலை 11 மே 1949 அன்று முழு நேர உறுப்பினராக்கியது..நா. சபையின் 165 உறுப்பினர் நாடுகளும் அதாவது 85 விழுக்காடு நாடுகள் அங்கீகரித்தது. ஆனால் முஸ்லிம் நாடுகளான அல்ஜிரியா, பக்ரைன், ஈராக், குவைத் 1988ல் தான் அங்கீகரித்தது.31.7.2009ல் 138 நாடுகள் அங்கீகரித்தன. அதில் பி.5 என்ற சீனா, பிரான்ஸ், ரஸ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா நிரந்தர உறுப்பினர் ஒன்று கூட அங்கீகரிக்கவில்லை.

          பாலஸ்தீனத்திற்கு சுயாட்சி உரிமை கொடுக்கப் பட்டு Al-Fatah என்கிற அமைப்பு யாசர் அரபாத் தலைமையில் ஆட்சி 1989ல் அமைக்கப் பட்டது. ஆனால் அதனை எந்த அதிகாரமில்லாமல், தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்களை தீண்டாதவர்கள் எப்படி நடத்தப் பட்டனரோ அதேபோலவே பல் பிடுங்கப் பட்ட பாம்பாகவே இஸ்ரயேல் கருதியது. 15.9.2003 அன்று பாலஸ்தீனம் சுற்றி வளைக்கப் பட்டு மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாசப் பொருள்கள் கூடக் கிடைக்காதவாறு செய்தனர். ஜனாதிபதி அரபாத் கூட மண்ணெண்ணெய் விளக்கில் அலுவலகத்தில் இருந்ததினை தொலைக் காட்சி படம் பிடித்து காட்டின. பின்பு .நா. சபையின் தலையீட்டால் அது விலக்கப் பாலஸ்தீனத்திற்கு சுயாட்சி உரிமை கொடுக்கப் பட்டு Al-Fatah என்கிற அமைப்பு யாசர் அரபாத் தலைமையில் ஆட்சி 1989ல் அமைக்கப் பட்டது. ஆனால் அதனை எந்த அதிகாரமில்லாமல், தென் ஆப்பிரிக்காவில் கறுப்பர்களை தீண்டாதவர்கள் எப்படி நடத்தப் பட்டனரோ அதேபோலவே பல் பிடுங்கப் பட்ட பாம்பாகவே இஸ்ரயேல் கருதியது. 15.9.2003 அன்று பாலஸ்தீனம் சுற்றி வளைக்கப் பட்டு மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாசப் பொருள்கள் கூடக் கிடைக்காதவாறு செய்தனர். ஜனாதிபதி அரபாத் கூட மண்ணெண்ணெய் விளக்கில் அலுவலகத்தில் இருந்ததினை தொலைக் காட்சி படம் பிடித்து காட்டின. பின்பு .நா. சபையின் தலையீட்டால் அது விளக்கப் பட்டு  யாசர் அரபாத் நோய் வாய்ப்பட்டு பிரான்ஸ் சென்றார் அங்கு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். 29.10.2004 அன்று முஹமூத் அப்பாஸ் பதவியேற்றார்.

          எகிப்தில் 'Muslim brotherhood' இயக்கம் தீவிரமானபோது காசா பகுதி ஓரத்தில் ஹமாஸ் 1987ல் ஆதிக்கம் செலுத்தியது. காரணம் அல்-பத்தா இயக்கம் பாலஸ்தீனத்தில் மிதவாத கொள்கையினை கடைப் பிடிப்பதால் அதனை விரும்பாத பாலஸ்தீனர்கள் ஹமாஸ் என்ற இயக்கத்தினை ஆரம்பித்தனர். அதற்கு லெபனான் நாட்டின் ஹொஸ்புல்லா இயக்கம் ஆதரவு கொடுத்தது.2006ம் ஆண்டு பலஸ்தீன தேசிய அரசு தேர்தலை நடத்தியது, அதில்  ஹமாஸ் இயக்கம் 132 தொகுதிகளில் 72 இடங்களை கைப்பற்றியது. அதிலிருந்து அல்-பத்தா  இயக்கம் இரண்டாக பிரிந்து மேற்கு கடற்கரை பகுதி பத்தா இயக்கமும், காசா பகுதியினை ஹமாஸ் இயக்கமும் பிரித்ததிலிருந்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. 

         

          இஸ்ராயில், பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே முக்கிய தகராறு ஏற்பட காரணம் புனித தளமான அல்-அக்ஸா பள்ளியினை யார் கைப்பற்றுவது என்பது தான். ஒரே பள்ளியின் ஒரு பக்கத்தில் முஸ்லிம்களும், மற்ற பகுதிகளில் யூதர்களும், கிருத்துவர்களும் தொழுகை நடத்துவது தான். எப்போது எல்லாம் அல்-அக்ஸா பள்ளியில் இஸ்ராயில் தலையிடுதோ அப்போதே போராட்டங்கள் ஆரம்பமாகி விடுகின்றன. பாலஸ்தீனத்தின் ஏழை, எளிய மக்கள் இஸ்ராயில் பகுதிக்குச் சென்று தான் தொழில், மற்றும் வேலை செய்ய வேண்டும். பாலஸ்தீனர்கள் போராடினால் உடனே இஸ்ராயில் அவர்கள் வரும் வழியினை அடைத்து விடுவர். இது காலம், காலமாக நடந்து கொண்டுள்ளது. அதேபோன்று தான் 6.10.2023 அன்றும் இஸ்ராயில் ராணுவம் வெள்ளி ஜும்மா நேரத்தில் நுழைந்து தொழுபவர்களை வெளியேற்றியது, ஒரு கொதிகலனாகியது. உடனே எலி புற்றிலிருந்து கிளம்பியது போல 7.10.2023 அதிகாலை ஆரம்பித்த போர் இன்று வரை முடிவிற்கு வரவில்லை.

          இந்த பத்து நாட்கள் யுத்தத்தில் இறந்தோர் 302 இஸ்ராயில் போர் படையினரும், 1200 மக்களும் ஆகும். பாலஸ்தீனர்கள் தரப்பில் 2500 உயிரிழைப்புகள் ஆகும். இதில் பெரும் பாதிப்புகளுக்கு உண்டானோர் பெண்களும், பச்சிளம் பாலகர்களும், வாயதானோர்களும், நோயாளிகளாகும். இஸ்ராயில் பாலஸ்தீன மருத்துவமனையில் 18.10.2023ல் நடந்த குண்டு வெடிப்பில் 500 பேர்கள் கொல்லப் பட்டதாக சொல்லப் படுகிறது. கிட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாகவும்  கூறப் படுகிறது.

          இதற்கு முடிவே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். அமெரிக்க வெளியுறவு மந்திரி இஸ்ராயிலுக்கு 8.10.2023 வந்தவர் அங்கு போரை நிற்பாட்ட முயற்சி செய்வார் என்று உலகமே எண்ணிய நேரத்தில், அவர் இஸ்ராயிலுக்குச் சென்றதும் நான் ஒரு யூதனா வந்துள்ளேன் என்று சொன்னதினை கேட்டு உலகமே அதிர்ச்சியுற்றது. பி 5 என்ற .நா. நிரந்தர உறுப்பினர் ரசியா ஒரு இடைக்கால போர் நிற்பாட்ட தீர்மானத்தினை கொண்டு வந்தார். அதனை அமெரிக்கா இங்கிலாந்து போன்ற உறுப்பினர்கள் அதனை வீடோ என்ற அதிகாரத்தினை வைத்து தோற்கடித்ததிற்கு சொன்ன காரணம் முதலில் ரசியா உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என்பது தான்.

          18.10.2023 அன்று அமெரிக்க அதிபர் இஸ்ராயிலுக்குச் சென்று அங்குள்ள அதிபரை சந்தித்து உங்களுக்கு அமெரிக்காவும், மற்ற கூட்டு நாடுகளும் துணை நிற்கும் என்று தைரியம் கொடுத்துவிட்டு, எகிப்து காசா வழியாக உணவு, மருத்துவ உபகரணங்கள், தண்ணீர் கொண்டு வர ஒப்பந்தம் செய்து விட்டார். அமெரிக்காவில் 2024ல் தேர்தல் வர இருப்பதால் அங்குள்ள யூதர்களின் ஓட்டுக்களை பெற அவருக்குள்ள கட்டாயம்.

          இந்த அமைதியற்ற நிலையினை மத்திய கிழக்குப் பகுதியிலிருந்து நீக்க முடியாதா என்று நீங்கள் கேட்கலாம். ஏன் முடியாது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் .நா சபை நிருவப் பட்டு இதுவரை 120நாடுகளில் அமைதிப் படையினரை அனுப்பியது. அதில் முக்கியமானவை மத்திய கிழக்கு, காஸ்மீர், சைப்ரஸ், காங்கோ, மேற்கு கினியா, அங்கோலா, கம்போடியா, எல்-ஸல் குவடார், நமீபியா, யூகோஸ்லாவியா, ருவாண்டா, சோமாலியா, போஸ்னியா -ஹெர்சகோவினா, குரோஷியா , வட போஸ்னியா, குவாட்டமாலா, ஹைத்தி போன்றவையாகும். இதில் கிட்டத்தட்ட 3000 அமைதிப் படையினர் இறந்திருக்கின்றனர். இன்னும் கூட 14 நாடுகளில் 1,10.000படையினர் பணிபுரிந்து வருகின்றனர். .நா. அமைதிப் படை இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் ஆற்றிய பணிக்காக 1988ம் ஆண்டு நோபல் பரிசும் கொடுக்கப் பட்டது. ஏன் அதுபோல .நா அனுப்பி இஸ்ராயிலுக்கும், பலஸ்தீன அமைப்புக்கும் இடையேயும், லெபனான்-இஸ்ராயிலுக்கு இடையிலும், எகிப்து-காசா எல்லை ஓரத்திலும்  நிற்பாட்டியதோடு, பாலஸ்தீனத்தில் மக்களிடையே பொதுத் தேர்தல் நடத்தி அல் பத்தா அமைப்போ, அல்லது ஹமாசோ அதிக வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைத்து அமைதி ஏற்பட உலக நாடுகள் ஈடுபடக்கூடாது என்பது தான் எந்த நாட்டையும் சேராத நடு நிலையாளர் கேள்வியாகும்.

          இந்தக் கேள்விக்கு தடையாக இருப்பது ரசியா-உக்ரைன் போராகும். அமெரிக்கா-ஐரோப்பிய கூட்டு நாடுகள் உக்ரையினையும், ரசியாவிற்கு சீனா, வட கொரியா ஆதரவு அளிப்பதால் யார் பெரியவர் இந்த உலகத்தில் காட்டுவதிலும், உலகில் எந்த பகுதியில் போர் நடந்தாலும் ஆயுதம் தயாரிக்கும் நாடுகள் தங்களுடைய படை பலன்களை விற்பனை செய்வதிலும், அங்குள்ள இயற்கை வளங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் நோக்கிலேயே இருப்பதினால் அமைதிக்கு யார் முதலில் ஈடுபடுவது, பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்வியிலே காலங்கள் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அதன் விளைவு உலகமே எங்கே அமைதி அங்கே நிம்மதி என்ற பாட்டினை உரக்க பாடிக்கொண்டு உள்ளது வருத்தமாக இல்லையா?