Tuesday 13 December, 2022

கூடா நட்பு சேரா உறவு!

 


ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ)

முத்தமிழ் அறிஞர் கலைஞர் இப்பெண்களின் உறவுகளை அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் உழன்றபோது, 'கூடா நட்பு சேரா உறவு' என்று தனக்கே உரித்தான பழமொழியில் சொன்னார். அதனையே, 'பன்றியோட சேர்ந்தால் 'பசுக் கன்றும் மலம் தின்னுமென்று'.  இந்த பழமொழி எவ்வாறு நவீன 'லவ்' என்ற இரண்டெழுத்து வார்த்தை பொருந்துமென்று விளக்கலாம் என நினைக்கின்றேன்.

உலக அளவில் ஒரு பெண்ணின் திருமண வயது 18 ஆக உள்ளது. சில நாடுகளில் அது 19, 20, 21 ஆகவும் உள்ளது. 18 வயது என்பதினை நமது அரசு 21 வயதிற்கு உயர்த்தலாமா என்று விவாதத்தில் உள்ளது. நமது நாட்டின் சட்டப் படி 18 வயதிற்குட்பட்டவர் சிறார் என்று அழைக்கப் படுவர். ஆனால் சில உயர் நீதிமன்றங்கள்  பெண்கள் பருவமடைந்து விட்டாலே அவள் திருமணத்திற்கு உகந்தவள் என்ற கருத்தினை தெரிவித்துள்ளது. சில ஊர்களில் தங்களுடைய குடும்ப சொத்து யாருக்கும் சென்று விடக்கூடாது என்றும், குடும்ப பாரம்பரியம் விட்டுப் போய் விடக்கூடாது என்றும் சிறுவயதிலேயே 'நிக்கா' என்ற திருமணம் செய்து விடுவது உங்களுக்குத் தெரியும்.

மனோ தத்துவ அறிஞர்கள் காதல் பற்றிய கருத்துக் கூறும்போது, 'அறிந்தோ அறியாமலோ ஏற்படுகின்ற காந்த சக்தியாகும்,. அது ஒருவர்  பார்வையிலோ, இனிமையான பேச்சிலோ, பழகு ம் விதத்திலோ, நளினத்திலோ, அறிவுத் திறனிலோ, செயல் முறையிலோ, விளையாட்டு போட்டிகளிலோ ஏற்படும் பழக்கத்தினை ஏற்படும், தாற்காலியமான மோகம்'  என்று சொல்கிறார்கள். கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு, 'ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்' என்று. ஆகவே அந்த ஈர்ப்பு சக்திக்கு வெகு தூரம் பயணம் செய்ய முடியுமா என்றால் சந்தேகமே! அது ஒரு கானல் நீராகத்தானே அமையும் என்று அன்றாட செய்தித்தாள்களிலோ அல்லது தொலைக் காட்சிகளிலோ வரும் நிகழ்வுகளை எண்ணத் தோன்றுகளில்லவா? சில சம்பவங்களில் சினிமா மோகத்தில், போதை அடிமையில், ஒரு வித வாலிப மயக்கத்தில் சிலர் ஒரு தலையாக காதலிப்பதும், தனது விருப்பத்திற்கு உடன்படாத சிறார்களை வன்முறை மூலம் திருத்தி விடலாம் என்று பயமுறுத்துவதும், அல்லது அன்பை வரவழைக்க உயிரை மாய்த்துவிடுவேன் என்ற பாசாங்கு காட்டுவதும்  போன்ற அன்றாட செய்திகளைக் காணலாம். ஓசையானது இரு கை இணைந்து தட்டினால் தான் வெளிப்படும். மாறாக ஒரு கை பார்த்து விடுவோம் என்பது அறியாமையின் உச்ச வரம்பு தானே!

பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது ஏற்படும் சோதனைகளும், வேதனைகளும் கொஞ்ச நஞ்சமில்ல. ஆனால் சிட்டுக் குருவிகள் சிறகு முளைத்ததும் பெற்றோர் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து தற்காலிக அறிமுகத்தில் பழக்கமான ஜோடிகளுடன் சிட்டாய் சிறகடித்து பறந்து விடுவது உங்களுக்கெல்லாம் வேதனையாக இல்லையா? பெண்கள் பலாப்பழ சுளைகள் போன்றவர்கள். அவைகளை சுற்றி ஈக்கள் மொய்க்கத்தான் செய்யும் என்பதினை அறியாது, பெற்றோர், உடன் பிறந்தோர், சுற்றத்தாரை புறக்கணித்து சாத்தான் வழிகெடுக்களுக்கல்களுக்கு உடன்படுவது  வேதனையிலும் வேதனை தானே!

ஒரு சமூகத்தில் எந்த ஆணும், எந்த பெண்ணும் மேஜர் ஆனால் இணைந்து வாழ சட்டத்தில் வழியுண்டு. அதற்குப்  பதிலாக எந்த ஆணும் மற்றொரு ஆணுடன் சேர்ந்து வாழ குரல் கொடுக்கும்போதோ அல்லது,  இரு பெண்கள் சேர்ந்து வாழலாம் என்று சில நீதி மன்றங்கள் கருத்துச் சொல்லும்போது, சட்டங்கள் கொண்டு வரும்போதோ எவ்வாறு ஒரு சுகாதாரமான,  ஆரோக்கியமான  சமூகத்தினை உருவாக்க முடியும் என்று யோசிக்க கூடாதா?

ஆண்கள், பெண்களை வசீகரிக்க வித விதமான உடைகளையும், முடி திருத்தங்களையும், அதேபோன்று பெண்களும், விலை மாதர்போல ஜன்னல் வைத்த சட்டைகளை, மார்பங்கள் தெரிய உடை அணிந்து ஆண்களை கவருவதும், ‘செல் போன் மிஸ்ட்டு கால்’ என்று முகம் தெரியாத ஆணோ, பெண்ணோ இனிக்க, இனிக்கப் பேசிவிட்டால் உண்மை என்று நம்பி ஏமாந்து உள்ளதும்போய் விட்டதே ‘நொள்ளைக் கண்ணு’ என்ற கிராம பழமொழிக்கிணங்க இருப்பதையும், பொருட்களையும், கட்டிய புருஷனையும், குழந்தைகளையும், அதைவிட கற்பையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதும், அதுபோன்ற நிலை குழைந்து நிற்கும் பெண்களை குறி வைத்து இழுக்கும் வல்லாறுகளாக இருக்கும் பாலியல் ஈடுபடுத்தும் கும்பலிடம் சிக்குவதும் அன்றாட நிகழ்வுகளாக நடந்து நிகழ்வுகளாக இருப்பது  வருத்தமாகத் தானே உள்ளது. திருமண வாழ்வு என்பது ஆண், பெண் இருவருக்கும் ஒருவருக்கொருவர் ஆடையாக பயன்படுத்தும் செயலாகும். அதனை விட்டுவிட்டு காதல் என்ற ஊறுகாய் போன்ற நாக்கிற்கு மட்டும் தொட்டு சுவை தரும் பொருளாக உள்ளது. அது உடலுக்கு சத்து தரும் ஊனாக ஒருபோதும் இருக்க முடியுமா?.

தேசிய குற்றவியல் பதிவேடு (NCRB) புள்ளிவிபரப்படி நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் 95 பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். அதாவது ஒரு மணிக்கு 4 பெண்கள் சீரழிக்கப் படுகிறார்களாம் என்பது வேதனையுள்ள தகவல் தானே! ‘தங்கள் மனம் போன போக்கில் மனதினை அலைய விடலாமா’ என்பது யோசிக்க வேண்டிய காலம் விட்டதல்லவா?

சமூகவியல் படி ஆய்வு நிறுவனமான IPSOS நடத்திய 2013ம் ஆண்டு ஆய்வுப் படி 18-35 வயதிற்குட்பட்டோர் இந்தியாவில் 74 சதவீதம் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து கொள்கின்றனர்.  மும்பை உயர் நீதிமன்ற கருத்துப் படி சமீப காலங்களில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்வதினை விட காதல் திருமணம் செய்து கொள்ளும் திருமணங்கள் முறிவை சந்திக்கின்றன என்று வேதனையுடன் தெரிவித்துக் கொண்டன.  அமெரிக்காவில் அதுபோன்ற காதல் திருமணங்கள் 40-50 சதவீதமாக உள்ளது. ஆனால் நமது நாட்டில் அது குறைவு என்றாலும், சமீப காலங்களில் 2 அல்லது 3 குழந்தைகளை பெற்ற பின்னரும் அறிமுகமே இல்லாதவனின் ஆசைகளை செல் போனில் கேட்டுவிட்டு கால் கிளப்பி போவதும் பின்பு கருத்து வேறுபாடு காரணமாக இன்னுயிரை மாய்த்துக் கொள்வதும் வேதனை அணிக்கத்தானே செய்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் தங்கள் ஆய்வில் அதற்கான பல தகவல்களை தெரிவிக்கின்றனர்:

1) காதல் என்பது ஒரு வசீகர சொல், அது வந்த வேகத்தில் மறைந்து விடுகிறது.

2) உடல் புணர்ச்சியில் ஈடுபட்டவுடனும், உடல் ரீதியாக பல உடல் நலிவு ஏற்பட்டவுடன் ஒரு விதமான சலிப்பு ஏற்படுகிறது.

3) காதலிக்கும்போது வாடா-போடா என்று அழைத்துவிட்டு திருமணத்திற்குப் பின்பு பலருக்காகாக தங்கள் பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டிய சூழ்நிலை.

4) ஒவொருவருக்கொருவர் வீட்டுக் கொடுக்கமுடியா வறட்டு கவுரவம். ஜெர்மன் பல்லாண்டு அதிபராக இருந்த ‘மார்க்கல்’ என்ற பெண் அதிபர் சொல்லும்போது, 'நான் வேலைக்கு வருமுன் துவைக்க வேண்டிய துணிகளை வாஷிங் மெஷினில் போடுவேன், என் கணவர் அதனை எடுத்து மடித்து, பின்பு ஐயன் செய்து வைப்பார் என்றும், நான் வீட்டை துடைப்பத்தால் சுத்தம் செய்வேன், என் கணவர் மாப்பினால் சுத்தம் செய்வார்' என்று ஒரு பேட்டியில் கூறினார். அதுபோன்ற காலங்களில் ஏதாவது குறையிருந்தால் கவுரவம் பார்த்தல் சண்டை, சச்சரவு வரத்தானே செய்யும்!

5) காதல் தம்பதிகள் திருமணத்திற்கு பின்பு தங்கள் வாழ்க்கையினை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று கலந்து ஆலோசிப்பதில்லை. அதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன திருமணத்திற்கு பின்பு.

6) காதல் திருமணம் பெற்றோர்களுக்கு தெரியாமால் செய்வதனால் தம்பதியினர் குடும்பம் நடத்த முடியா பொருளாதார நிலை ஏற்படும்போது பெற்றோரோ அல்லது உறவினரோ உதவி செய்வதில்லை. ஊராரும் ஒதுக்கி தள்கின்றனர்.

7) காதலுக்கு முன்பு தங்கள் தோழியரிடம் அரட்டை அடித்ததுபோல திருமணத்திற்கு பின்பு தொடர்பு ஏற்படுத்த கட்டுப் பாடு ஏற்படுத்தப் படும்.

8) காதல் தம்பதியினர் பல்வேறு சமயங்களில் வார்த்தைப் போர் நடத்திவிட்டு, வன்முறையில் வன்முறையில் இறங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். சில சமயங்களில் திருமணத்திற்கு முன்பு 'Dating' என்ற அசாதாரண சந்திப்பு ஏற்படுத்திக் கொண்டு அந்த சந்திப்பில் திருப்தி இல்லையென்றால் அதனையே காரணமாக வைத்து காதலர்களை ஒதுக்கினால் அவர்கள் வன்முறையில் இறங்குவது அன்றாட செய்திகளாக வந்த வண்ணம் உள்ளதால்லவா? ஒரு தம்பதியர் இருந்தால் அவர்களுக்குள் பல நிறை மற்றும் குறைகள் இருக்கத்தானே செய்யும் அதனை அடுத்த பாலினர்களிடம் பகிர்ந்து கொண்டால், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுபோல நடித்து அபகரித்துக் கொள்வதும் வழக்கமாக உள்ளதல்லவா? ஆகவே கணவன்-மனைவியர் தங்களுக்குள் மனம் விட்டு குறைகளை பகிர்ந்து கொள்ளவேண்டுமல்லவா? 2017ம் ஆண்டு இந்தியாவில் நடத்த சர்வேயில் பெண்களில் 15-24 வயதிற்குட்பட்டோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 33.2 சதவீதம் உடல் ரீதியாகவும், 9.6 சதவீதம் மன ரீதியாகவும்  துன்புறுத்தப் படுகிறார்களாம். ஆனால் பெற்றோர்களால் நிச்சயிக்கப் படுகிற பெண்கள் 24.3 சதவீதம் தான் துன்பத்திற்கு ஆளாகுகிறார்களாம். அதுவும் யாரால் குடும்ப பெண்களாகவே இருக்கின்றதாம் என்பது வேதனைதானே!

'மனம் ஒரு குரங்கு' என்ற அடிக்கடி தாவும் கருத்தினை வைத்து சொல்வார்கள். அதற்கு உதாரணமாக இஸ்ரேயிலர் காலத்தில் நடந்த ஒரு செய்தியினை உங்களுடன் இந்த தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு 'பார்சிச்சா' என்ற துறவி இருந்தார். அவர் எல்லா வேதங்களையும் கரைத்துக் குடித்தவராகவும், முரீது கொடுப்பவராகவும் இருந்தார். அவர் மேல் பலர் அசாத்திய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். அவர் சொல்லுவது வேத வாக்காக கருதினர். அந்த ஊரில் இரு சகோதரர்கள், மற்றும் ஒரு சகோதரி இருந்தார். அவர்கள் மூவருமே திருமணம் செய்யவில்லை. ஒரு முக்கியமான வேலையாக அந்த சகோதர்கள் வெகு தூரம் பயணம் செய்ய வேண்டியதிருந்தது. ஆகவே தனது சகோதரியை யார் பொறுப்பில் விட்டுச் செல்வது என்று ஆலோசித்தனர். ஆனால் அந்த ஊரில் உள்ளவர்கள் யாரும் நம்பிக்கையாளர்களாக தெரியவில்லை. ஆகவே அவர்கள் துறவியினை அணுகி உங்கள் பொறுப்பில் விட்டுப் போகலாமா என்று வினவினர். அதற்கு அவர் ஒப்புதல் கொடுக்க வில்லை. மறுபடியும் பல முறை கேட்டு வற்புறுத்தினர், ஏனென்றால் அவர்கள் பயணம் தடை படுவதாக சொன்னார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு தயங்கி ஒப்புக் கொண்டார். அதன் பின்பு சகோதர்கள்கள் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர். துறவியாரும் தனக்கு தனது சிஷ்யர்கள் கொடுக்கும் உணவில் ஒரு பகுதியினை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வெளியே வைத்து விட்டு வந்து விடுவார்.

ஆனால் ஒரு வார்த்தையும் பேசுவதில்லை. அந்தப் பெண்ணும் அதனை   எடுத்து சாப்பிடுவார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. துறவிக்கு ஒரு  யோசனை வந்தது, நாம் அந்தப் பெண் வீடு வரை சென்று உணவு வெளியே  வைத்து விட்டு வருவது எப்படி சரியாகும். அது ஒரு மிருகத்திற்கு வைக்கப்   படும்   பொருளாகவே கருத வேண்டும். ஆகவே இந்தத் தடவை நாம் வீட்டின்    உள்ளே  சென்று வைத்துவிட்டு வந்து விடுவோம் என்று வீட்டினுள்ளே சென்று    உணவை வைத்துவிட்டு வந்து விட்டார். சில நாட்கள் சென்று நாம் இவ்வளவு  தூரம் சென்று விட்டு அந்தப் பெண்ணுக்கு ஏதேனும் தேவையா என்று நாலு  வார்த்தை கேட்போம் என்று சென்று பேசி விட்டு வந்தார். பின்பு கொஞ்ச நேரம்  துணைக்கு இருந்து விட்டுப் போவோம் என்று எண்ணி இருந்து விட்டார். அதுவே சாத்தானின் ஊடுருளாகி அவர்களுக்குள் பழக்கமாகி உடல் ரீதியாக     தொடர்பும் ஏற்பட்டது. அந்தப் பெண்ணும் கர்ப்பம் அடைந்தாள். இது ஊரில்     உள்ள பலருக்குத் தெரிய ஆரம்பித்தது. அந்த சகோதரர்கள் ஊர் திரும்பும் நாளும்    வந்தது. துறவி பயந்து தன்னுடைய பத்தினி வேடம் களைந்து விடுமே என்று      அந்தப் பெண்ணை கொலை செய்து அந்த வீட்டினுள்ளே புதைக்கவும் செய்து      விட்டார். சகோதரர்கள் வந்தார்கள். சகோதரி காணவில்லை. துறவியாரிடம்      கேட்டார்கள் அவர் தெரியாது என்று பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலை கள்ளத்தனமாக குடிப்பது போல் நடித்தார். ஆனால் ஊரார் பலர் சொல்ல, வீட்டினுள் புது மண்ணும் இருப்பது கண்டு தோண்டிப் பார்த்தபோது துறவியின் கூட்டு வெளியானது. அவரும் கல்லால் அடித்து சாகடிக்கப் பட்டார்.

          அதேபோன்ற அபாயகரமான செயலில் தான் கூடா நட்புடன் பழகும் காதலர்களின்               நிலையும் ஏற்படும். ஆகவே தான் பள்ளிப் பருவத்தில் கூடா நட்புடன் பழகும்                      மாணவர்களைப் பார்த்து ஒருவர் காதை ஒருவர் பிடித்துக் கொண்டு, 'உன்னால்         நான் கேட்டேன், என்னால் நீ கெட்டாய் என்று தோப்புக்கு கர்ணம் போட்டுச்         சொல்வது இன்றைய காலக் கட்டத்தில் காதலர்களுக்கும் பொருந்துமல்லவா?