Tuesday 8 March, 2022

‘யாம் அறிந்ததை நீயும் அறிவாயோ !’

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்ற பழமொழி அனைவருக்கும் தெரியும். 'சீனாவிற்கு அந்தக் காலத்தில் பயணம் கடுமையாக இருந்தாலும் அங்கே சென்றாவது கல்வி கற்றுக் கொள்ளுங்கள்' என்றது இஸ்லாம். அகிலத்தில் எத்தனையோ அறியாத செய்திகள் உள்ளன. எந்த மனிதரும் முழுமையாக கற்றவரில்லை. ஆகவே தான் அறியாத சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த கட்டுரையினை வடியமைத்துள்ளேன்.

ஆங்கிலேய ஆட்சியில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்போது அவர்களின் குழந்தைகள் விளையாடுவதிற்காக அடிமைப்பட்ட நாடுகளின் மக்களைக் கொன்று குவிக்கும்போது அவர்களின் தலைகளை கால் பந்து விளையாடுவதிற்காக கொடுப்பார்கள் என்ற செய்தி மிகைப்படுத்துதலாக இருக்குமோ என்று ஒரு பக்கம் எண்ணத் தோன்றும்போது, ஒரு செய்தியினை கண்டேன். 1932ம் ஆண்டு உலக முதல் கால் பந்தாட்டம் உருகுவேயில் நடந்த  நிகழ்ச்சியின் போது  காற்றடித்த பந்துகளுக்குப் பதிலாக குரங்குகளின் தலைகளைப் பயன் படுத்தினார்களாம். 2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கும் உலக கால்பந்தாட்டத்திற்கு வெள்ளை மற்றும் மஞ்சள் பந்துகளை உயபோகிக்கப் போகின்றார்களாம்.

வானத்தில் தவழும் சந்திரன் மற்றும் பூமிபோன்ற கோளங்கள் சூரியனை சுற்றும் என்று கேள்விப் பட்டுள்ளோம். ஆனால் சந்திரன் கிரகம் வியாழன்(Jupitar) கிரகத்தினை ஏழு மணிக்கு ஒருதடவை ஒரு மணிக்கு 70,400 மணி வேகத்தில் சுற்றுமாம். நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக் கோபுரங்களை 11.9.2001ல் இரு விமானங்கள் மோதி அதனை தகர்த்ததில் விளைவாக 2763 பேர்கள் உயிறிழிந்தனர் என்பதும் அதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டிடங்களை நேரில் பார்ப்போமேயானால் அது ஒரு ‘பான் கேக்’ போன்று அடுக்கடுக்காக இருக்கும். ஒரு அடுக்கு கீழே விழுந்தால் அதற்கு அடுத்தாற்போல உள்ள அடுக்கு விழாதவாறு கட்டிடக் கலைஞர்களால் அமைக்கப் பட்டது. பின்பு எப்படி அந்த இரண்டு கோபுரங்களும் தரைமட்டமானது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை தானே. இரண்டு விமானங்களில் உள்ள ஏரி பொருட்களின் தீப்பிழம்பால் அந்த இரண்டு கட்டிடமும் தரைமட்டமானதாம். பழமொழி, 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' தானே!

இந்தியாவில் எந்தப் பகுதியில் கொலை நடந்தாலும் ஆங்கிலேய அரசால் 1860ல்  ஆண்டு இயற்றப் பட்ட இந்திய தண்டனை சட்டம் 302 படி குற்றமாகும். ஆனால் அந்த கொலைக் குற்றம் அமெரிக்காவில் கூட்டாட்சியின் குற்றமாக (Federal offence)1963ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஜான் எப் கென்னடி கொலைக்குப் பின்புதான் குற்றமாக்கப் பட்டதாம்.

கொரானா நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய காலத்தில் ஏன் அனைவரும் மாஸ்க்(முகத்திரை) அணிய வேண்டும், ஒருவருக்கொருவர் இடைவெளி விட வேண்டும் என்று சொல்லப் பட்டதாம் என்றால், புளு நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும்போது அந்த காற்றில் கிருமிகள் 60 மைல்கள் வேகத்தில் பரவக்கூடியது என்பதால் தான் அவ்வாறு சொல்லப் பட்டதாம்.

பத்தாம் நூற்றாண்டின் பாரசீக நாட்டின் தலைமை மந்திரி அபுல் காசம் இஸ்மாயில் எங்கு சென்றாலும் ஒட்டகங்களில் புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் செல்வாராம், ஆகவே அவர் நடமாடும் பல்கலைக் கழகம் என்று அழைக்கப் பட்டாராம். காரணம் ஒரு அறிவாளியினை சுற்றி மற்றவர்கள் இருந்தால் தான் சபை சிறக்கும் என்று சொல்வார்கள். அபுல் காசத்திற்கு புத்தகமே துணையாம்.

பெரும்பாலான குழந்தைகள் இரவில் தான் பிறக்குமாம்.ஏனென்றால் முன்னோர்கள் பகலில் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டுவிட்டு இரவில் ஓய்வு எடுப்பதால் பிரசவவலி பெரும்பாலும் பகலை விட இரவில் தான் வருமாம். தற்போது சாதகம் பார்த்து குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமென்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

முற்காலத்தில் அமெரிக்க கண்டத்தின் மெக்சிகோ பகுதியின் பழங்குடியினர் சூரியனை வழிப் பட்டு வந்தார்களாம். சூரிய பகவானின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான ஆண்களை பலியிடும் பழக்கம் இருந்ததாம். உங்கள்  பலருக்குத் தெரியும் தொலைபேசியை 1876ம் ஆண்டு ‘அலெக்சாண்டர் கிரஹாம் பெல்’ கண்டு பிடித்தது. அந்த தொலை பேசி சாதனம் மேல்  பலருக்கு சந்தேகம் இருந்ததாம் , ஆகவே அவர் கண்டுபிடித்தபின் ஒரு மாதத்தில் 6 தொலை பேசிகள் தான் விற்கப் பட்டதாம். ஆனால் இன்று தொலைபேசி உபயோகிப்பர் எண்ணிக்கை 531 கோடியாம்.

பர்மா செல்(Burma Shell) என்ற எண்ணைக் கம்பனி உலகம் முழுவதும் இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த கம்பனியை ஏன் அவ்வாறு அழைக்கின்றார்கள் என்றால் அந்தக் கம்பனி முதன் முதலில் இங்கிலாந்தில் கடலுக்கு அடியில் இருக்கும் 'கடல் ஓடுகளை' எடுத்து விற்பனை செய்து வந்ததால் அந்த பெயர் வந்ததாம். அதே போன்று தான் Zony கம்பனி டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்வது உங்களுக்குத் தெரியும். அந்தக் கம்பனி முதன் முதலில் 'Rice Cooker' தான் கண்டுபிடித்ததாம்.

மனிதனின் உடலில் உள்ள தசைகளில் மிகவும் பலமானது எலும்பில்லா நாக்குதானாம். பெரியோர் 'அந்த எலும்பில்லா நாக்கிலிருந்து புறப்படும் சொல் கூர்மையான வாலை விட  என்றும், ஆறாத காயத்தினை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஆகவே பேசும்போது நிதானம் தேவை என்றும் சொல்வர். காஃபி  சுவையானது தான் அதுவும் பில்டர் காஃபி என்றால் நாவில் நீர் சுரக்காதவர் யாருமிலர். உலகிலேயே காஃபி குடிப்பவர்கள் அமெரிக்கர்கள் தானாம். அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி மூட்டை காஃபி தேவைப் படுகிறதாம். ஒரு இடத்தில் நில நடுக்கம் ஏற்படும்போது எத்தனை மைல் வரை அதன் தாக்கம் உணர முடியும் என்று நினைகிண்றீர்கள். 1755ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டின் 'லிசபன்' நகரில் ஏற்பட்ட நில நடுக்கம் தாக்கம் 2771 ஸ்காட்லாண்ட் நாட்டின் 'லாட் நெஸ்' நகரில் உணரப்பட்டதாம்.

பிளாஸ்டிக் பொருட்களை ஏன் உபயோகிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா, அவை சீக்கிரமே மக்கி அழுகிபோகுமாம். ஆனால் கண்ணாடி எத்தனை தடவை மறு சுழற்சி செய்தாலும் கெட்டுப் போகாதாம். ஆகவே தான் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதினை தடை செய்துள்ளார்கள். அந்தக் காலத்தில் முஸ்லிம்கள் திருமண வைபவங்களில் மணமகனுக்கு பெரியோர் உபயோகிக்கும் துருக்கி தொப்பி என்ற சிகப்புக் கலர் கொண்ட நீண்ட குஞ்சம் வைத்ததினை அணிவார்கள். அது ஏன் தெரியுமாம் திருமணம் நடக்கும்போது கூட்ட நெரிசலில் மண மகன் தலையில் வேற்காது, காற்று வருவத்திற்காக அணிவார்களாம். அதேபோன்று தான் பெரிய ஸ்டார் ஹோட்டல் சமையலையில் சமையல்  கலைஞர்கள் நீண்ட வெள்ளை நிற தொப்பியும், வெள்ளை சட்டையும் அணிந்திருப்பதினை கண்டு இருப்பீர்கள். அவை எதற்கென்றால் சமையலறையில் ஏற்படும் வெட்ப தாக்கத்தினை தாங்குவதிற்காக கொடுக்கப் பட்டுள்ளதாம். திருக் குரான் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரசூலாவிற்கு 23 ஆண்டுகள் இடைவெளியில் அருளப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். அதனை மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் காலத்தில் கைகளால் எழுதப் பட்டதாம். ஆனால் கிருத்துவர்களின் வேதமான பைபிள் 40 எழுத்தாளர்களால் 1500 ஆண்டுகளில் எழுதப் பட்டதாம்.

கம்ப்யூட்டர் இயக்குவபர்களோ, அல்லது இசை ரசிப்பவர்களோ இரண்டு காதுகளிலும் ஹெட் போன் மணிக்கணக்கில்மாட்டிக் கொண்டு  இருப்பதனை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு இடைவெளி இல்லாமல் மாட்டிக் கொள்ளும்போது பாக்ட்ரியா (நுண்ணுயிர்கள்) 700 மடங்கு அதிகமாகுமாம். ஆகவே அதனை உபயோகிக்காது நல்லது என்றே சொல்லப் படுகிறது.

ஆலிவ் எண்ணெய் மிகவும் நல்லது மற்றும் மருத்துவ குணம் கொண்டது என்று உங்களுக்குத் தெரியும். சமையல் செய்வதற்கு ஏற்ற எண்ணெய், ஒமேகா சத்து பொருட்கள் அமைந்தது, வைட்டமின் E மற்றும் K ஆன நோய் எதிர்ப்பு சக்தி குணம் கொண்டது, வாத நோய் போக்கக்கூடியது, உடல் பெருமானை கட்டுப்  படுத்தும், ரத்தம் உறையாமல் பார்த்துக் கொண்டும், இதய நோய் வராமலும் தடுக்கும், டைப் 2 சக்கரை குறைபாடுகள் கொண்டவர்களுக்கு நிவாரணியாகும். அந்த ஆலிவ் மரம் 1500 ஆண்டுகள் வரையும் வாழுமாம்.

பெரியவர்கள் சுவையான தகவல்கள் பார்த்தோம். அதே நேரத்தில் சிறுவர்களுக்கான சில தகவல்களை பகிரலாம் என எண்ணி கீழ் கண்ட செய்திகளை தருகின்றேன்:

1)    ஒரே இனத்தில் பிறந்த இரண்டு பாலின மக்கள், மிருகங்கள், பறவைகள் இணைந்து குழந்தைகள், குட்டிகள், குஞ்சுகள் பெற்றுக் கொள்வதினை உங்களுக்குத் தெரியும். ஆனால் காடுகளில் ஒரு ஆண் சிங்கமும், ஒரு பெண் புலியும் இணைந்து பெற்றுக் கொள்ளும் மிருகத்திற்கு என்ன பெயர் தெரியுமா? அதனை ''(Liger) லைகா  என்று அழைக்கப் படுமாம். டால்பின் மீன் கடலுக்கடியில் 50 அடிதூரத்தில் எழுப்பப் படும் ஒலியினை கண்டுபிடித்து விடுமாம். ஆண் சிங்கத்தின் கர்ச்சிப்பின் குரலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கேட்கலாமாம். யானைக் கூட்டம் வனங்களில்  நீரின் ஆதாரத்தை மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்து கண்டு பிடித்துவிடுமாம். கடலில் உள்ள ப்ளூ வேல் என்ற திமிங்கலம் நீருக்கடியிலிருந்து எந்த நீர் விலங்குகளும் எழுப்பாத 188டெசிபெல் ஒரு ராக் இசை எழுப்பும் ஒலியினை ஒத்து இருக்கும்சப்தத்தினை எழுப்புமாம். ஆப்பிரிக்க காடுகளில் வாழும் Cape-water buffalo (நீர் எருமை) மூத்திரத்தினை உபயோகித்து ஆப்பிரிக்க பழங்குடியினர் ‘ஹரிகன்’ விளக்குகளை எரித்தார்களாம்.

2)    நமக்கெல்லாம் இதயம் இடது பக்கம் இருக்கும். ஆனால் இதயம் தலைப் பகுதியில் உள்ள பிராணி எது தெரியுமா? அது சுவையான உணவைத் தரும் இறால்  தானாம். நாம் சில நய வஞ்சகர்களை இதயம் இல்லாதவன் என்றும் கூறுவதுண்டு. முதன் முதலில் மனிதர்களுக்கு இரண்டு இதயம் இருக்கின்றது என்று உலகிற்கு அறிவித்தது இஸ்லாம் தான். பெரும்பாலான படித்த இளைஞர்கள் அது எப்படி சாத்தியம் என்று கூறுவர். மருத்துவ அறிஞர்கள் ஆராய்ந்து பெண்கள் குழந்தையினை வயிற்றில் தாங்கி இருக்கும்போது தாய்க்கும் அதன் சேய்க்கும் இரண்டு இதயம் இருப்பதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.

3)    கஷ்டப் பட்டு உழைத்து பொருள் சேர்த்தவர் சொல்லும்போது, நான் உழைத்து தேனீ போன்று சிறுக சிறுக பணம் சம்பாதித்தேன் என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கின்றார்கள் என்றால் ஒரு தேனீ இரு நூறு மலர்களை தேடி எடுத்தால் ஒரு சொட்டு  தேனும் 10 லட்சம் மலர்களிருந்து சேகரிக்கும் தேன் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா, வெறும் 435 கிராம் தானாம். வாலை மீன் போன்று நீண்டு இருக்கும் ஈல் மீன் தனது இறையினை பிடிக்க அல்லது தன்னை கொல்லவரும் எதிரியினை விரட்டுவதிற்கும் 650 வாட்ஸ் மின்சாரத்தினை வெளிப் படுத்துமாம்.

4)    சிலர் தனது நிலையினை அடிக்கடி மாற்றிக் கொள்வதால் ‘பச்சோந்திப்’ பய என்று சொல்வது வழக்கம். காரணம் ஓனான் தனது நிறத்தினை மாற்றிக் கொள்வதால். அப்படி மாற்றிக் கொள்ளும்போது அது தனது சுற்றுப் புறத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஓனான் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பத்தான் தன்னை மாற்றிக் கொள்ளுமாம். 

5)    அதே போன்று தான் 'flipper fish' என்ற இறகுகள் கொண்ட மீனின் விஷம் ஒரு மனிதனை உயிரிழக்கச் செய்யக் கூடிய சயனைட் விட கொடிய விஷம் கொண்டதாம். அதனை உபயோகித்து தன்னிடம் நெருங்கும் மனிதனை செயலிழக்க செய்து விடுமாம்.

6)    முதன் முதலில் பல் துலக்கும் 'tooth brush' சீனாவில் தான் கண்டு பிடிக்கப் பட்டதாம். பிரஸ்ஸில் உள்ள நார் போன்ற பொருளுக்குப் பதிலாக குதிரை பிடரி மயிரை உபயோகித்தார்களாம்.

நான் மேற்கூறிய தகவல்கள் சில உங்களுக்குத் தெரிந்து இருக்கும் ஆனால் பலருக்கும், சிறார்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கும் நீங்கள் சொல்வது மூலம் பொது அறிவு விரிவடையும் என்பது உறுதிதானே!

 

No comments:

Post a Comment