Friday 22 July, 2022

மக்கள் எழுச்சியில் உருண்டோடிய மகுடங்கள்!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

பக்கத்து தீவு நாடான இலங்கையில் இந்த வருடம்  ஆட்சி பீடத்தினை அலங்கரிப்பவர்களால் நிம்மதி இழந்து  11.7.2022 ஜனாதிபதி நாட்டினை விட்டு ஓடியதும் அதனை தொடர்ந்து அங்கு நடந்த கொந்தளிப்புகளையும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, மற்றும் எலெக்ட்ரானிக் மீடியாவில் பார்த்திருப்பீர்கள். இந்த கொந்தளிப்பு ஏற்பட காரணங்கள் என்ன, இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பு நடக்கவில்லையா என்ற கேள்விகளுக்கு விடை சொல்லி விளக்கலாம் என்று இந்த கட்டுரையினை வடிவமைத்துள்ளேன்.

பிரான்ஸ் நாட்டின் ரொட்டிப் புரட்சி :

ஐரோப்பாவில் முக்கிய நாடான பிரான்சில் 16ம் லூயிஸ் என்ற மன்னர் ஆட்சி செய்தார். அவர் ஆட்சி காலத்தில் உணவு பற்றாக்குறை தலை விரித்தாடியது. மக்கள் அன்றாட காலை உணவிற்கு தேவையான ரொட்டியும் கிடைப்பது அரிதானது. மக்கள் ரோட்டில் இறங்கி மன்னரை எதிர்த்து போராட ஆரம்பித்தனர். 1789ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ந்தேதி போராட்டம் தீவிரமானது. போராடியவர்களை ‘பாசில்’ என்ற சிறையில் அடைத்தனர். அதனை அறிந்த மக்கள் பாசில் சிறையினை தகர்த்து அடைக்கப் பட்டவர்களை வெளிக்கொணர்ந்தனர். இதனை எதிர்பார்க்காத மன்னர் லூயிஸ் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு தப்ப நினைத்த போது சிறைப்பிடிக்கப் பட்டனர். இறுதியாக 1793ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ந்தேதி மக்கள் தூக்குமேடையில் ஏற்றினர்.

ரஸ்யாவின் மகா அக்டோபர் புரட்சி: பிரான்சினைப் போலவே ரஸ்யாவில் Tzarist ஆட்சி நடந்தது. ஆட்சியாளர்களின் தொழிலாளர் அடக்குமுறையினை எதிர்த்து Bolshevik Revolution என்ற தொழிலாளர் புரட்சி அதன் தலைவர் விளாடிமிர் புடின் தலைமையில் 1917லிருந்து 1923 வரை நடந்தது. அதன் விளைவு Tzarist மன்னர் ஆட்சி கவிழ்ந்து Bolzhevik ஆட்சி அரியணையில் ஏறியது. அதிலிருந்து இது வரை ரஸியா வல்லரசு நாடாக திகழ்கிறது.

ஆப்கான் புரட்சி: ஆப்கானில் மன்னராக இருந்த ஷா அவர்கள் ஆட்சிக்காலத்தில் மக்கள் பஞ்சமும் பட்டினியாக இருந்தனர். ஆனால் அவர் மட்டும் ஆடம்பரமாக வாழ்ந்தார். ஆகவே மக்கள் வெகுண்டு எழுந்தனர் மன்னருக்கெதிராக. இறுதியாக 1973ம் ஆண்டு ஜூலை மாதம் 17ந்தேதி மன்னருடைய ஆட்சிக்கு விடை கொடுத்தனர். அதன் பின்பு 1986 முதல் 1992 வரை டாக்டர் நஜிபுல்லா ஜனாதிபதியாக இருந்தார். அவர் ரசியாவின் கைகூலியாகவே இருந்தார். மலைப் பிரதேசமான ஆப்கானில் பல்வேறு .பழங்குடியினரின் போராட்டக் குழுவினர் களத்தில் இறங்கி போராடி ரசியாவின் படையினரை விரட்டியடித்தனர். அதன் பின்னர் அவருடைய கைக்கூலியாக ஜனாதிபதி நஜிபுல்லாவினை ஊர் முச்சந்தியில் நிறுத்தி தூக்கிலிட்டனர் என்பது வரலாறு

எகிப்தின் மக்கள் எழுச்சி: எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சாதத் ராணுவ அணிவகுப்பு மரியாதை மைதானத்தில் சுட்டு வீழ்த்தப் பட்டபின்னர் அரியணையில் 1981ம் ஆண்டு அமர்ந்தவர் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆட்சியினை சுவைத்த பூனைக்கு ஆசை விடுமா. தன்னுடைய இளைய மகனை 2011ம் வாரிசாக அறிவித்தபோது மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்ததும், முபாரக் அதனை ஒடுக்க ராணுவத்தினை அனுப்பினார். அதன் விளைவு ராணுவமும் மக்கள் போராட்டத்தினை ஆதரித்ததால் 2011ம் ஆண்டு முபாரக் முடி துறந்து சிறைக் கைதியானார். அதன் பிறகு மோர்சி என்பவர் பதவியேற்றார். அவர் ஷியா மக்கள் ஆதரவு கொள்கை உள்ளவராகவும், அமெரிக்கா கைக்கூலி என்றும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டார். அதன் பின்பு முன்னாள் ராணுவ தளபதி அடல் பட்ட சிசி என்பவர் 2014லிருந்து ஆட்சி செய்கிறார்.

ஜாஸ்மின் புரட்சி: டூனிசியா நாட்டில் ஜனாதிபதி ஜெயினுலாபுதீனு 2011ம் ஆண்டில் ஆட்சி செய்தார். அவர் ஆட்சியில் வேலையின்மை, உணவு பற்றாக்குறை, விலைவாசி ஏற்றம், ஊழல், அரசின் வெளிப்படைத் தன்மையில்லாமல் எதிர்கட்சினரின் குரல்வளையை நெறிக்கும் போக்கால் ஜனவரி மாதம் போராட்டம் ஆரம்பித்தது. எந்த வேலையும் கிடைக்காததால் ‘பௌசி’ என்ற  இளைஞர் ரோட்டின் ஓரத்தில் பழ வியாபாரம் கடைத் தெருவில் வைத்திருந்தார். அப்போது ரோட்டில் ரோந்து வந்த போலீசார் அவரை அடித்ததோடு மட்டுமல்லாமல், அவர் பழவண்டியினையும் தள்ளிவிட்டனர். அதுபோன்ற செயலை நம்முடைய நகரங்களில் கூட காணலாம். அதனால் அவமானப் பட்ட அவர் தீக்குளித்து உயிரை விட்டார். ஏற்கனவே பல்வேறு காரணங்களால் கொந்தளித்த மக்களின் கோபத்தில் எரிகின்ற நெருப்பில் எண்ணெயினை ஊற்றுவது போல இருந்தது அந்த சம்பவம். ஆகவே ஜனாதிபதி ஜெயினுலாபுதீனுக்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்து அதனை 'Tunisia National Dialogue Quartet' என்ற அமைப்பு ஒருங்கினைத்தது. அதிபர் ஜெயினுலாபுதீன் நாட்டினைவிட்டு ஓடி சௌதி அராபியாவில் அடைக்கலமடைந்தார். TNDQ அமைப்பிற்கு 2015ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. டூனிசியாவின் ஜெஸ்மின் புரட்சி பிற்காலத்தில் அரேபியாவில் வசந்தம் Arab Spring என்றும் அழைக்கப் பட்டது.

இப்படிப்பட்ட மக்கள் போராட்டம் அரசுக்கெதிராக பல இடங்களில் நடந்ததினை அறிந்திருப்பீர்கள். 2019ம் ஆண்டு லெபனான் நாட்டின் மக்கள் போராட்டத்தால் பிரதமர் ‘சாத் ஹரிரி’ பதவி விலகினார். பொலிவியா நாட்டின் ஜனாதிபதி ‘எல்லோ மோரா மால்’ மூன்று முறை ஜனாதிபதியாக இருந்துவிட்டு நான்காவது முறை தேர்தலில் நிற்கும்போது மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தனர். ஆகவே அவர் உயிருக்குப் பயந்து நாட்டினை விட்டு துண்டைக் காணோம், துணியைக்காணோம் என்று ஓடிவிட்டார். சிலி நாட்டில் ‘சப்வே’வினை மக்கள் உபயோகிற்பதிற்கு வெறும் நாலு சென்ட் பணம் என்றதும், தினந்தோரும் அதனை உபயோகிக்கும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது உங்களுக்குத் தெரியும். இப்படிப் பட்ட போராட்டங்கள் மற்ற நாடுகளுக்கு சொல்லும் பாடமாக அமையும்.

நீங்கள் கேட்கலாம் இதுபோன்ற மக்கள் போராட்டம் இந்தியாவில் நடக்கவில்லையா என்று. 1973ம் ஆண்டு குஜராத்தில் ‘ஓஸா’ முதல்வர் ஆட்சி நடை பெற்றது. 1974ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி, விலைவாசி ஏற்றம், மற்றும் நிர்வாக ஊழலில் குஜராத் மூழ்கியதால் முதல்வர் ஓஸாவினை மாற்றி ‘சிமன்பாய் படேல்’ அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால்  நியமிக்கப் பட்டார். 10.1.1974ம் ஆண்டு மாநிலம் முழுவதும் மக்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டு நிர்வாகமே ஸ்தம்பித்தது. போராட்டக்காரர்களுக்கும், போலீசுக்கும் கைகலப்பு ஏற்பட்டு கலவரமாகி, ஊரடங்கு அமல் செய்யப்பட்டு, ராணுவம் வரவழைக்கப் பட்டது. முதல்வர் சிம்மன் பாய் ராஜினாமா செயதார். குஜராத்தில் ஏற்பட்ட போராட்டம், பிஹாருக்கும் பரவி அதனை ‘ஜெயப் பிரகாஷ் நாராயணன்’ தலைமையேற்று நாடெங்கும் நடத்தினார். இந்திரா காந்தி அரசு கவிழ்ந்து ஜனதா கட்சியின் பிரதமராக ‘மெராஜி தேசாய்’ பதவியேற்றார்.

இலங்கையில் இன்றைய போராட்டத்தின் பின்னெனி பார்ப்போமோயானால் இலங்கை வட கிழக்கு யாழ்ப்பாண மாகாணத்தில் விடுதலைப்புலிகள் ஒன்று பட்டு போராடும்போது அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் யார் பெரியவர் என்ற போராட்டத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன்னை ஒரு சர்வாதிகாரராக நினைத்துக் கொண்டு சகோதர இயக்க போராளி தலைவர்களான ஸ்ரீ சபா ரத்தினம், பத்மநாபா, மாத்தையா போன்றவர்களை ஒழித்துக் கட்டியதும், தனக்கு உறுதுணையாக இருந்த கருணாகரனை ஒழிக்க நினைத்த தருணத்தில் அவர் சுதாரித்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் தனி ராஜ்யமே நடத்தினார். அதேபோன்று டக்ளஸ் தேவானந்தா இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்ற தொடங்கினார். தமிழர் தலைவர்களான அமிர்தலிங்கம், கதிர்காமர் போன்றவர்களை கொன்றது மூலம் ஈழ தமிழர் துணையையும் இழந்தார். .இந்தியா இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட 16 பேர்களை ஆள் அனுப்பி 21.5.1991 கொலை செய்தார். ஆகவே தமிழர் மற்றும் இந்தியர் துணையினை இழந்தார். அவர் ‘தேடப்படும் குற்றவாளி’ என்று இந்தியாவும் அறிவித்தது. இலங்கை முஸ்லிம்கள் அதிகாலை ‘காத்தான்குடி’ பள்ளிவாசலில்   பாஜ்ர் தொழுகை நடத்திக் கொண்டபோது குண்டு மாறி பொழிந்து 145 முஸ்லிம் சிறியவர் முதல் பெரியவர் வரை கொன்றதால் இலங்கை முஸ்லிம்கள் உறுதுணையும் இழந்தார். அவர் ஒரு பேட்டியில் நிருபருக்கு பதில் அளிக்கும்போது, 'ஈழ அரசு’ அமைத்தால் எந்தவிதமான ஆட்சியினை தருவீர்கள் என்று கேட்டபோது, தான் சர்வாதிகார ஆட்சி நடத்துவேன்' என்று அப்பட்டமாக கூறினார். இலங்கை பிரதமர் பிரேமதாசாவினையே வெடிகுண்டு வைத்து கொலை செய்தார். ஆகவே இலங்கை மக்கள் மற்றும் புத்தமததினர் ஒரு முடிவினை கொண்டு இருந்தனர்.

 

2009 ம் ஆண்டு விடுதலை புலிகள் ஒழிப்பிற்கு பின்னர் மஹிந்திரா ராஜபக்ஸா கை ஓங்கியது. 2015வரை அவர் ஆட்சி காலத்தில் சர்வாதிகார நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். தமிழ் ஈழ யுத்தத்தின் அத்துமீறலுக்கு எதிரான ஐநா சபையின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்துவிட்டார். அவருடைய ஆட்சியில் இன பாகுபாடு அதிகமானது. ஊழல் தலைவிரித்தாடியது. தவறான பொருளாதார நடவடிக்கைகைகள், சீர் கெட்ட நிர்வாகம் நடத்த ஆரம்பித்தார். ஆகவே 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோக்கடிக்கப் பட்டார். விடுவார்களா மிகவும் பலம் பொருந்திய ராஜபக்ஸா குடும்பம். 2019ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் 2009ல் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும்போது ராணுவ மந்திரியான மஹிந்திராவின் தம்பி கோத்தபாயா ராஜபக்ஸா ஜனாதிபதியாகவும் மஹிந்திரா ராஜபக்ஸா பிரதமராகவும் பதவி ஏற்றனர். அது மட்டுமா மஹிந்திராவின் இன்னொரு தம்பி பாசில் ராஜபக்ஸா பொருளாதார மந்திரி, ராஜபக்ஸா மகன் நமல் ராஜபக்ஸா இளைஞர், விளையாட்டு, நீர்ப்பாசன மந்திரியானார். நமல் ராஜபக்ஸா மகன் சசீந்திரா விவசாயம் மற்றும் உணவுத்துறை மந்திரி. ஆக மொத்த ராஜபக்ஸா குடும்ப ஆட்சியில் இலங்கையின் பொருளாதாரம் தங்களுக்குள்ளது என்று எண்ண ஆரம்பித்தனர்.

தவறான பொருளாதார கொள்கையால் ராஜபக்ஸா குடும்பத்தினrரால் பட்ஜெட் பற்றாக்குறை அதிகமாகி, வெளிநாட்டு கடன் சுமை கழுத்தை நெரித்தது. வெளிநாட்டின் கடன்களுக்குக் கூட வட்டி கட்டமுடியாத நிலை ஏற்பட்டது. ஆகவே எந்த நாடும் இந்தியாவினைத் தவிர கடன் கொடுக்க முன் வரவில்லை. ருசியா-உக்ரைன் போரால் பெட்ரோல், சமையல் ஏரி வாயு, உணவுப் பொருள் வரமுடியா நிலை ஏற்பட்டது. விவசாய உற்பத்தியும் இல்லை. சுற்றுலா சுருங்கி அந்த வருமானமும் இல்லை. விலைவாசி ஏற்றம் மக்கள் உணவுக்கு ஏங்கி தவித்தனர். வேலையில்லா திண்டாட்டமும் கூட வந்தது. ஆகவே மக்கள் குரல் வலையினை நெறிக்கும் சர்வாதிகார குடும்ப ஆட்சிக்கு மக்கள் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்து அதன் பின் அது மஹிந்திரா ராஜ பாக்ஸவிற்கு எதிராக திரும்பியது. அவர் ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து அவரது சகோதரர்கள் மற்றும் மகன்கள் ராஜினாமா செய்தனர். அதுமட்டுமல்லாமல் நாட்டினை விட்டும் ஓட எத்தனித்தும்  முடியவில்லை. அதன் பிறகு மக்கள் கோபம் ஜனாதிபதி கோத்தபய்யாவிற்கு எதிராக திரும்பி அவருடைய மாளிகைக்கு படையெடுத்து ஆக்ரமிப்பு செய்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். மாளிகையிலிருந்து சுரங்கம் வழியாக 11.7.2022 இரவு தப்பித்து மாலத் தீவிற்குப் பறந்து அங்கு அடைக்கலம் அடைய முடியாமல் சிங்கப்பூரில் தாற்காலியமாக உள்ளார். இவையெல்லாம் பார்க்கும்  போது மக்களை வெகுகாலம் ஏமாற்ற முடியாது, அல்லது ஆட்சியாளர் அடக்கி ஆள முடியாது என்பது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்தியாவில் வேலையில்லாதோர் 2014ம் ஆண்டு 5.6 சதவீதமாகும். அது படிப்படியாக உயர்ந்து 8.10 சாதமாக இன்று . ஒவ்வொரு வருடமும் வேலை தேடி அலையும் 35 வயதிற்குட்பட்டோர் 65 சதவீதமாம். அது கிட்டதட்ட ஒரு கோடியே 20 லட்சம் என்று பி.பி.சி. பொருளாதார அறிக்கை சொல்கிறது. 2017ம் ஆண்டு ரூ 1000/, ரூ 500/ செல்லாது என்று அறிவித்தபின்னர் பல தொழிற்சாலைகள் மூடு விழா நடத்திவிட்டன. அதனைத் தொடர்ந்து 2019முதல் கொரானா பாதிப்பால் பலர் பாதிக்கப் பட்டனர். GST (Goods service entry) புதிய திட்டம் அமல் படுத்திய பின்னர் வியாபாரங்கள் பாதிக்கப் பட்டது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமா பாக்கெட்டில் அடைக்கப் பட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத GST என்று அறிவித்ததின் மூலம் ஆவின் பால், தயிர் உள்பட அனைத்து விதமான உணவுப் பொருள்களின் விலை உயர்ந்து மக்கள் அவதிப் படுகின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிலும் அடுப்பு எரிய வேண்மென்றால் கேஸ் இருக்காமல் இல்லை. அந்த எரிவாயுக்கும் ருபாய் 1015லிருந்து ரூ 1065/ அதிகப் படுத்தியது மூலம் ஒவ்வொரு குடும்பத்தலைவிகளுக்கும் பெரிய தலையில் விழுந்த இடியாக கருதுகின்றனர். இலங்கை பரிதாபமான நிலை மற்ற நாடுகளுக்கு விடுக்கப் படும் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொண்டு அரசுகள் நியாயம், நேர்மை, ஊழல் அற்ற ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழித்து ஜனநாயக வழிமுறையில், நீதியான ஆட்சி தந்து மக்களின் பசி, பட்டினி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்குதல், உணவுப் பொருட்கள் உற்பத்தியினை பெருக்குதல், இன, மத,மொழி, பகுதி போன்ற வேற்றுமையினை வேரறுத்து, மக்கள் விரும்பும் , மகாத்மா காந்தி குறிப்பிட்ட  கலீபா உமர்   நல்லாட்சி தருவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே!

 

 

No comments:

Post a Comment