தமிழக மக்களின் தாகம் தீர்க்கவும், தமிழக விவசாயிகள் வாழ்வாதாரத்தின் அடித்தளமாகவும், பறவைகள், விலங்கினங்கள் துள்ளி விளையாடவும் வழி வகை செய்யும் ஆறுகளாக வற்றாத காவேரி, முல்லைபெரியார், பாலாறு, தாமரவரணி உள்ளன. அவை அத்தனையுமே கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநில எல்லையிலுள்ள மலைபகுதியிளிருந்து புறப்படுகின்றன. ஆனால் அவை அத்தனையுமே கடைசியில் சங்கமமாவது பெருங்கடலேயாகும்.
உப்புகரிக்கும் கடலில் மக்களுக்கும், பறவைகளுக்கும், வனவிலங்குகளுக்கும், வனங்களுக்கும், பயிர்களுக்கும், நதி நீர் கலந்து வீணாகக் கூடாது என்று தொலை நோக்குடன் இந்தியாவினை ஆண்ட பென்னி குய்க் போன்ற ஆங்கிலேயர் அரசு பணத்துடன், தங்கள் சொந்த சொத்தினை விற்று பல அணைகள் கட்டி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்த்தனர்.
தொலைநோக்கு பார்வை கொண்ட சோழ மன்னன் கரிகால் வளவன் காவரி நதிநீர் கரைபுரண்டு ஓடுவதினைத் தடுத்து 1900 ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் கல்லனைக் கட்டினான். ஆகவே அவன் புகழ் இன்றும் நிலைத்துள்ளது. அசோக மன்னரை ஆங்கிலத்தில் 'தி கிரேட்' என்பார்கள். காரணம் மக்கள் பயனுக்காக ரோடுகள் அமைத்தும், மரங்கள் நட்டும், குளங்கள் வெட்டியதால் அவரை சிறந்த மன்னராக இன்றும் சரித்திரத்தில் புகழ் வாய்ந்தவராக கருதப் படுகிறார்.
அதுபோன்ற திட்டங்கள் தற்போதைய அரசுகளிடம் இல்லையே அது ஏன்?
ஒரே தெருவில் வாழும் பக்கத்து வீட்டுகாரர்கள் ஆளுக்கு ஒரு குடம் தண்ணீர் தெருக் குழாயில் பிடிப்பதிற்கு குடுமிப் பிடி சண்டை,
பக்கத்தில் இருக்கும் நிலத்தில் வாய்க்காலில் ஓடும் தண்ணீரை வயலுக்கு பாய்ச்சுவதில் சொந்த உடன் பிறப்பிற்குள் தள்ளு, முள்ளு, சம்பந்தம் செய்து கொள்ளும் பக்கத்துக் கிராமவாசிகள் வாய்க்காலில் ஓடும் தண்ணீரை தங்கள் கண்மாயில் நிரப்புவதிற்கு வெட்டுக் குத்து என்று ரத்தம் சிந்தும்போது, பக்கத்து மாநிலங்களான கர்நாடகா , ஆந்திரா மற்றும் கேரளா தமிழகத்துடன் சண்டை போடுவது ஆச்சரியமில்லை தானே!
ஏனென்றால் வல்லமைப் படைட்ட்தவன் போட்டியில் தன் வலிமையினை கடைசி வரை நிலை நிறுத்தப் பார்ப்பான் என்பது பொது நியதி.
அதனையே தான் கர்நாடகமும், ஆந்திராவும், கேரளாவும் தமிழ் நாட்டிடம் பம்மாத்துக் காட்டுகின்றன
.எனினும் அண்டை மாநிலங்களின் நதி நீர்ப் பிரச்சினையில் மத்திய அரசும், உச்ச நீதி மன்றமும் ஒரு உறுதியான முடிவினை எடுக்க முடியவில்லையே என்று பார்க்கும் பொது பரிதாப நிலையாக உங்களுக்குத் தோன்றவில்லையா?
வியாபாரிகளாக வந்த ஆங்கிலேயர்கள் குறு மாநிலங்களாக இருந்த இந்திய தேசத்தினை தன் கட்டுப் பாடுகள் கொண்டு வந்து பிரிட்டிஷ் சாம்ராஜியதினை நிலை நாட்ட தங்களுடைய ராணுவ தளவாடங்களை பல பகுதிகளுக்குக் கொண்டு செல்ல நீண்ட ரயில் பாதைகளை வனப்பகுதிகளிலும், மலையினைக் குடைந்தும் அமைக்கவில்லையா?
அதேபோன்று சுதந்திர இந்தியாவில் வட மாநிலங்களில் ஓடும் வற்றாத கங்கை, பிரமபுத்ர நதிகளை வரண்ட தென் மாநிலங்களுக்கு ஏன் கொண்டு செல்ல முடியவில்லை என்ற கேள்வி உங்களுக்கு எழாமலில்லைதானே? அதற்கு தேசிய அரசியல் வாதிகள் சொல்லும் நொண்டிச் சாக்கு, இயற்கைச் சூழல் கெட்டு விடுமாம். அவ்வாறு ஆங்கிலேயர்கள் நினைத்து இருந்தால் இந்தியாவினை இணைக்கும் தண்டவாளங்களை அமைத்து இருக்க மாட்டார்களே!
ஏன் வாஜ்பாய் பிரதமாராக இருந்த போது உருவாக்கப் பட்ட 'தங்க நாற்காலி' என்ற நான்கு வழி ரோடு அமைக்கும் திட்டம் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஏற்பட்டிருக்காதே!
சென்னை,ஹைதராபாத் இடையே உள்ள தூரம் 664 கிலோ மீட்டர்.
அதனிடையே தனி ரயில் பாதை அமைத்து ஜப்பானில் உள்ளதுபோல் புல்லெட்ரயில் இயக்க திட்டமிட்டு கன்சல்டன்சிக்கு ஷிஹான் என்ற ஜப்பான் கம்பெனிக்கு மூன்றக்கோடி முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அப்படி பாதை அமைக்க ஒரு கிலோ
மீட்டருக்கான செலவு ரூபாய் நூறு கோடியாம். அப்படி என்றால் புல்லெட் ரயில் அமைக்க ரூபாய் 66400 கோடியாகுமாம். அதுபோன்ற திட்டங்கள் செயல் படுத்தும் போது சுற்றுப்புற சூழல் கெடாதா?
மக்கள் வறட்சியால் பட்டினியில் வாடும்போது 'நதிகளை இணைத்தால் இயற்கை சூழல் பாதிக்கும்' என்பது கை எழாதவர் சொல்லும் நொண்டிச் சாக்காக சொல்லுவது போல உங்களுக்குத் தெரிய வில்லையா?
மேலை நாடுகளில் அதுபோன்று நதிகளை இணைத்து மக்களுக்கு பயன் படும் வகையில் செய்துள்ளார்களே! உதாரணத்திற்கு அமெரிக்காவில் ஓடும் கொலோரோடோ நதி அமெரிக்காவின் கலிபோர்னியா, நவேடா மாநிலங்களோடு பக்கத்து நாடான மெக்ஸிகோவிற்கும் செல்கின்றதே,. ஏன் இந்தியாவில் ஓடும் பிரமபுத்ர நதி அண்டை நாடான பங்களாதேசுடன் பகிர்ந்து கொள்ள வில்லையா? பின் ஏன் வட மாநில நதிகளை தென் மாநிலங்களுடன் இணைக்கக் கூடாது? ஏன் வற்றாத நதிகளை தேசிய மயமாக்கக் கூடாது?
கர்நாடகமும், ஆந்திராவும், கேரளாவும் முடிந்த மட்டும் காவேரி, பாலாறு, முல்லைபெரியார் நதிகளை தங்கள் கட்டுப் பாடுகள் வைத்துக் கொள்ளும் முயற்ச்சியில் இறங்கி உள்ளன என்று சமீப கால நடவடிக்கைகள் எடுத்தியம்புகின்றன. அதனை அடுத்து நமது பரபரப்பு அரசியல் வாதிகள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல், வன்முறை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களால் அண்டை மாநில மக்கள் ஒருவருக்கொருவர் மனக் கசப்புடனும், அச்ச உணர்வுடனும் வாழ்கின்றனர். நாட்டினை துண்டு போடத் துடிக்கும் சில பிரிவினை வாத சக்திகள் இதனை ஒரு சக்கரைப் பொங்கலாக எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடு படுகின்றனர். எரியும் நெருப்பில் என்னை ஊற்றுவது போல சில ஊடகங்கள் ஊதி பெரிதாக்குகின்றன
ஆனால் நாம் தண்ணீர் வளத்தினை பெருக்க எடுத்துக் கொண்ட முயற்ச்சிகள் பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா?
சமீப காலமாக வானம் பொத்துக் கொண்டு கொட்டோ கொட்டு என்று மழை பொழிந்து தள்ளியது. அதன் விளைவாக ஆறுகளின் கரையோர கிராமங்கள், நகரங்கள் வெள்ளத்தில் மிதந்தன. கூரைகள் காற்றில் பறந்தது, வீதிகளில் இடுப்பளவு தண்ணீர் நின்றது, போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெள்ளத்தால், அடை மழையால் வீதிகளில் ஓட்டை விழுந்தது, ஆற்றின் கரையோர மக்கள் திருப்பூர் போல பலர் அடித்துச் செல்லப் பட்டனர். ஆனால் மழைக் காலத்திலாவது அனைத்து கிராமங்களிலும் கண்மாய்கள், குளங்கள் நிறைந்ததா என்றால் இல்லையே!
பின் எங்கே சென்றது அத்தனை தண்ணீரும் என்று உங்கள் மனதில் கேள்வி எழுவது இயற்கைதானே!
கடலிலிருந்து மேகமாகி மழையாகி அந்த மழை வெள்ளமாகி கடலில் சங்கமானது தான் மிச்சம்.;
மழைக் காலத்தில் மழை நீரை சேமித்து வைக்காது பல்வேறு அணைகளின் உபரி நீரை திறந்து பல மக்களுக்கு இன்னல் ஏற்பட்டு கடலில் போய் சேர்ந்தது என்றால் வருத்தமாகத்
தெரியவில்லையா?
அதற்கு வழிதான் என்ன என உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.
கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மூலம் மழை காலத்தில் தண்ணீர் வீனாகுவதினைத் தடுக்கலாம்.
1) காவேரி, பாலாறு வைகை, முல்லைப் பெரியார் ஆறுகளின் பாதைகளில் மழை காலத்தில் திறந்து விடப்படும் உபரி நீரை ஏன் 'செக் டாம்ஸ்' கட்டி விவசாயிகளின் பயனுக்காக சேமித்து வைக்கக் கூடாது. அது போன்ற 15 டாம்ஸ் பாலாற்றில் ஆந்திரா மாநிலம் கட்டிவிட்டு மறுபடியும் ஒரு டாம்சை கணேசபுரத்தில் கட்டத்துவங்கி உள்ளதாக கூறப்படுகிறதே!
2) அது போன்ற அணை மதுரை டூ ராமேஸ்வரம் சாலையில் விரகனூரில் கட்டியதால் அதன் சுற்று ஊர்களின் விவசாயிகள் பயன் அடைந்திருக்கிறார்களே!
3) ஆற்றின் கரை ஓரங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் மழை காலத்தில் நிரம்பிவிடும். ஆனால் ஆற்றினை விட்டு பாத்து மைல்களுக்கு மேலுள்ள கண்மாய், குளங்கள் நிறையாது. ஏனென்றால் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வாய்க்கால் மண் மேவியும், காட்டுச் செடிகளினாலும் தூந்து போய் இருக்கும். அப்படிப் பட்ட கால்வாய்களை மழைக்கு முன் தூர் எடுத்தால் தான் ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்ல முடியும். இல்லையென்றால் அடை மழை பெய்தாலும் அப்படிப் பட்ட குளங்களும், கண்மாய்களும் நிறையாது. உதாரணத்திற்கு எங்கள் ஊர் இளையான்குடி கண்மாய்க்கு இந்த மழை சீசனிலும் தண்ணீர் வைகை ஆற்றிலிருந்து வரவில்லை. ஆகவே இளைஞர் பலர் ஒரு வாரம் ராத்திரி பகல் என்று பாராது கால்வாயினை தூரெடுத்து பதிமூன்று தொலைவிலுள்ள பரமக்குடியிலிருந்து எங்களூர் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வந்துள்ளனர். இப்போது ஆர்ப்பாட்டம், நடை பயணம், மறியல் செய்யும் ஆயிரகணக்கான இளைஞர்கள் கரை சேவையின் மூலம் தூந்த வாய்க்கால்களை தூரேடுக்கலாமே!
அல்லது மத்திய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தினை பயன் படுத்தி வேலை இல்ல இளைஞர்கள் கண்மாய், குளங்களை தூரேடுக்கும் பணியில் ஈடு படுத்தலாமே
கண்மாய்களை தூரேடுக்கலாம். மற்றும் கண்மாயில், குளங்களில் கிணறுகள் வெட்டி சிமென்ட் உரைகள் அடுக்கி கொஞ்சம் நஞ்ச நீரையும் வெயில் நேரங்களில் ஆவியாகப் போகாது மக்கள் உபயோகத்திற்காக ஏற்பாடு செய்யலாம்.
4) தமிழலகத்தில் எண்ணற்ற காட்டாறுகள் உள்ளன. ஆனால் மழை காலத்தில் மழை நீர் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டு கடலில் கலந்து விடும். ஆகவே அரசு புறம்போக்கு நிலங்களில் புதிய குளங்கள், கண்மாய் வெட்டி தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது?
5) ஏற்கனவே வீடுகளில் மழை நீர் சேமிப்பு திட்டம் தமிழகத்தில் உள்ளது. அதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்பது தான். ஆனால் வீதி, நகரங்களில் ஓடும் மழை நீரால் ரோடுகள் பள்ளமானதும், இடுப்பளவு தண்ணீரில் மக்கள் கஷ்டப் பட்டதும் தான் மிச்சம். ஆஸ்திரேலிய நாட்டில், வீட்டில் புழங்கும் கழிவு நீரைக்கூட மறுசுழற்சி முறையில் வீடுகளின் பயன்பாடு களுக்கு பைப்புகள் மூலம் வழங்குகிறார்கள். பின் ஏன் நாமும் மழை காலத்தில் நகரங்களில் கரைபுரண்டு ஓடும் தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தப் படுத்தி சேகரித்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கக் கூடாது? கடல் நீரை குடி நீராகப் பயன்படுத்தும் திட்டத்தினை விட மிகவும் செலவு குறைவானதாகுமே!
ஆகவே நதி நீர்களை தேசிய மயமாக்கும் வரை, மாநிலங்களின் நதி நீர் பிரச்சனையில் மத்திய அரசு கண்டிப்பான முடிவு எடுக்காத வரை, நீதி மன்றங்கள் நதி நீர் பங்கீடில் உறுதியான அமல் செய்யக்கூடிய தீர்ப்பு வழங்காத வரை நமது மாநிலத்தில் நதிநீர் பிரச்சனை தீராத பிள்ளையாகவே இருக்கும். ஆகவே நாம் மாற்று திட்டங்கள் மூலம் தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும், பறவை, விலங்கினங்கள் பயன்பாடிக்கும் விரைந்து மாற்று திட்டங்களை உருவாகியே தீர வேண்டும் என்பது சரிதானே சகோதர சகோதரிகளே!
Friday, 9 December 2011
Sunday, 23 October 2011
பணம் பாதாளம் பாய்ந்த பஞ்சாயத் எலெக்சன் ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ
இந்தியா 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததும் மகாத்மா காந்தி, 'அரசியல் சுதந்திரம் அடைந்தால் மட்டும் போதாது, மாறாக பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும்' என்றார். அவர் கனவு கண்டது சிலர் சொல்வதுபோல ராம ராஜ்யமில்லை, மாறாக கிராம ராஜ்யம் பெற வேண்டும் என்றார். அதாவது கிராமம் தன்னிலை அடைய வேண்டும் என்றார். செல்வம் ஒரு சிலரிடமே பிரமீடு போன்று குவியாது, கடல் போன்று பறந்து அனைவரும் பலன் பெற வேண்டும். இஸ்லாத்திலும் வறியவர் மேன்மைப்பட சொத்து வரி என்ற சக்காத், சதகா, பித்ரா போன்ற பொருளாதார உதவிகள் செல்வந்தர் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. மகாத்மா கூட கலிபா ஓமர் போல ஜனநாயக நல்லாட்சி செய்ய வேண்டும் என்று ஆசைப் பட்டார்.
சங்க தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தளிர்த்திருந்தது என்று விரிவாக செல்கிறது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடக்கூலி முறையில் பஞ்சாயத் உறுப்பினர்கள் தேர்தெடுத்து கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்துக் கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஓர் கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.
2006 ஆம் ஆண்டு உள்ளாச்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் வந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தினைக் காட்டுவதிற்கு தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதுரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடந்த தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே திரும்பவும் காவடி தூக்கச் சென்று விட்டன.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிர்க்காக பல லகரம் கொடுத்துத்தான் அரசியல் கட்சிகளிடம் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் போட்டியிட சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டுக் கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டிபோட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லத்தான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதினை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.
பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திளிருந்து, கொத்திப் போட்ட முட்டப் புராட்டா,சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மப்பேற்ற மேன்சன் ஹவுஸ் பிராந்தியினை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு,சுருள் சுருளா புகை விட்ட கோல்ட் பிளாக் சிகரெட்டினை புகைத்துக் கொண்டு, வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் உன்னை ஒழித்துக்கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார் என்று ஒலிப் பெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால் அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். சமுதாயதினவரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?அதன் விளைவினை முஸ்லிம்கள் அதிகமுள்ள மேட்டுப் பாளைய நகராட்சியில் நாம் பி.ஜே.பி. வேட்பாளரிடம் தோற்கடிக்கப் பட்டோம் என்றால் கேவலமாகத் தெரியவில்லையா?
அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெக்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தினை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்க்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? காரணம் அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தினை விட்டு சமுதாய நலன் கருது சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்ப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்துவர்களுக்கு வெண்சாமரம் இனி மேலும் வீசத் தான் வேண்டுமா, கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா, அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே?
சங்க தமிழ் இலக்கியங்களில் கிராமங்களில் எவ்வாறு ஜனநாயகம் தளிர்த்திருந்தது என்று விரிவாக செல்கிறது. சோழ மன்னன் ராஜேந்திரன் காலத்தில் கிராமத்தில் குடக்கூலி முறையில் பஞ்சாயத் உறுப்பினர்கள் தேர்தெடுத்து கிராம நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று அனைத்துக் கிராமங்களும் முன்னேற தங்களால் தேர்ந்தேடுக்கும் பிரதிநிதிகளால் நிர்வாகம் நடத்தும். சுதந்திரத்திற்குப் பின் இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 40 இன் படி மெட்ராஸ் கிராம பஞ்சாயத் சட்டம் 1959 இயற்றப்பட்டது. அதில் 500 பேர் மற்றும் அதற்கு அதிகமாக வாழும் மக்களைக் கொண்டது ஓர் கிராமப் பஞ்சாயத்தாக மற்றும் பஞ்சாயத் யூனியன் ஆக அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் 80 சதவீதம் பேர் கிராமத்தில் வாழ்வதால் அவர்கள் ஜனநாயகத்தின் பயனை உண்மையாக சுவைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆசைப் பட்டார். அதன் விளைவாக அரசியல் சட்டம் 73 மற்றும் 74 திருத்தங்கள் கொண்டு வரப் பட்டது. அந்த திருத்தங்களின் விளைவு கிராமப் பஞ்சாயத், பஞ்சாயத் யூனியன், மாவட்ட பஞ்சாயத் போன்ற மூன்று அடுக்கு பஞ்சாயத்து அலுவலகங்கள் தோன்றின.
2006 ஆம் ஆண்டு உள்ளாச்சித் தேர்தலுக்குப் பின்பு 17, 19.10.2011 ஆகிய நாட்களில் இரண்டு அடுக்கு தேர்தல் வந்தது. பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களுடைய பலத்தினைக் காட்டுவதிற்கு தனித்தனியே போட்டியிட்டன. அதேபோல் சமுதாய அரசியல் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன. சில சமுதாய இயக்கங்களும், உதுரி சமுதாய அரசியல் கட்சிகளும் வலியச்சென்று பிற அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தன. சென்ற 2011 மே மாதம் நடந்த தேர்தலில் சில சமுதாய அரசியல் கட்சிகளுடன் வந்து சேர்ந்தவர்கள் திரும்பவும் தாங்கள் முன்பு ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சிக்கே திரும்பவும் காவடி தூக்கச் சென்று விட்டன.இந்தத் தேர்தலில் போட்டியிடுவதிர்க்காக பல லகரம் கொடுத்துத்தான் அரசியல் கட்சிகளிடம் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் போட்டியிட சீட்டு வாங்கினார்களாம். அப்படி சீட்டுக் கிடைக்காதவர்கள் முறையான அரசியல் கட்சி வேட்ப்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டிபோட்டர்களாம். போட்டிப்போடுவது ஒன்றும் புதிதல்லத்தான். ஆனால் முஸ்லிம்கள் ஊரில் பணம் பாதாளம் வரை பாயும் என்பதினை இந்தத் தேர்தல் காட்டிவிட்டதாம்.
பல இடங்களில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் சுடச்சுட பணியாரத்திளிருந்து, கொத்திப் போட்ட முட்டப் புராட்டா,சுவையான பிரியாணியில் தொடர்ந்து, மப்பேற்ற மேன்சன் ஹவுஸ் பிராந்தியினை வயிறு முட்ட ஏத்திவிட்டு, சுருட்டிய ரூபாய் 500 நோட்டினை காதில் வைத்துக்கொண்டு,சுருள் சுருளா புகை விட்ட கோல்ட் பிளாக் சிகரெட்டினை புகைத்துக் கொண்டு, வீட்டுக்குச் சென்ற காட்சி எல்லாம் ஜெக ஜோதியாக இருந்ததாம். சில ஊர்களில் காலையில் பற்ற வாய்த்த அடுப்பு நடு இரவு வரை பற்றி எரிந்து கொண்டு இருந்ததாம். இவை எல்லாம் சாதாரண வார்டு தேர்தலுக்குக் கூட இருந்ததாம். ஒரு கடல்கரை சமுதாய ஊரில் இரு தரப்பிதனரிடையே சண்டை உச்சக்கட்டத்தில் போய் உன்னை ஒழித்துக்கட்டுகிறேன் பார். உன் வண்டவாளங்களை எல்லாம் காட்டிகொடுக்கிறேன் பார் என்று ஒலிப் பெருக்கி மூலம் சவால் விட்டார்களாம் நமது சமுதாய சகோதரர்கள் என்றால் அந்த ஊரில் வாழும் மற்ற சமுதாயத்தினர் எப்படி எல்லாம் மகிழ்ச்சி அடைந்து இருந்து இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். சமுதாயதினவரை தோற்கடிக்க வேறு வெளி ஆட்களை நாம் தேட வேண்டாம். மாறாக நமக்குள்ளே இருக்கின்றார்கள் என்று அரபு மற்றும் ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகளை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அழிந்த குட்டையில் மீன் பிடிக்கவா தெரியாது அன்னியருக்கு?அதன் விளைவினை முஸ்லிம்கள் அதிகமுள்ள மேட்டுப் பாளைய நகராட்சியில் நாம் பி.ஜே.பி. வேட்பாளரிடம் தோற்கடிக்கப் பட்டோம் என்றால் கேவலமாகத் தெரியவில்லையா?
அப்படி நடந்த தேர்தலில் நாம் சாதித்தது என்ன? ஒரு சில வார்டு தேர்தலிலும், கிராமப் பஞ்சாயத்துகளிலும் தான் வெற்றிப் பெற்றுள்ளோம். ஏன் இந்த வெக்கக் கேடு. ஏழு சதவீதம் உள்ள நாம் இணைந்து ஒரு கூட்டமைப்பு ஏற்ப்படுத்தி தேர்தலில் நமக்கென்ற ஒரு தனி அங்கீகாரம் பெற முடியாதா? இன்று பெரும்பாலான சமுதாய இயக்கங்களில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். அந்த இளைஞர் பட்டாளத்தினை ஒன்று திரட்டி, ஓர் அணியினை உருவாக்கக் கூடாது? பலர் இணைய தளங்களில் அதற்க்கான கட்டுரைகள் எழுதுகிறார்கள். ஆனால் பூனைக்கு மணி கட்ட யாரும் முன் வரவில்லையே ஏன் என்று உங்களுக்கு ஆச்சரியமாகத் தோணவில்லையா? காரணம் அந்த சமுதாய அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற சிலரின் வரட்டுக் கௌரவமே காரணம் என்றால் மிகையாகாது. ஆகவே பொய்யான வரட்டுக் கௌரவத்தினை விட்டு சமுதாய நலன் கருது சமுதாய ஒருங்கிணைப்புக் குழு ஒன்றினை மாநிலத்திலும், மாவட்டத்திலும், நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமத்திலும் ஏற்ப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். நாம் அடுத்துவர்களுக்கு வெண்சாமரம் இனி மேலும் வீசத் தான் வேண்டுமா, கஷ்டப்பட்டு சம்பாதித்த நாலு காசுகளை மார்கத்துக்குப் புறம்பான காரியங்களில் நான் முன்பு குறிப்பிட்டதுபோல வீண் செலவு செயத் தான் வேண்டுமா, அதனை ஏழை எளிய சமுதாய மக்களுக்கு வழங்கினால் என்ன என்று சிந்திக்க வேண்டாமா சொந்தங்களே?
Saturday, 15 October 2011
இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!
நான் 1.10.2010 அன்று இளையங்குடியிக்கு சென்டிருந்தபோது பேஷ் இமாம் அவர்கள், 'சார், நீங்கள் பல கட்டுரைகள் எழுகிறீர்கள், ஆனால் சமீப காலமாக நமது சமுதாயத்தில் இளம் பெண்கள் வழி தவறிப் போகிரதினை தடுக்க கட்டுரைகள் எழுதுங்கள் என்றார்'. அவர் கூறிய சொற்கள் என் காதுகளில் ரீங்காரம் இட்டபோது உண்மையில் நடந்த நிகழ்ச்சியினை உதாரணமாக வைத்து இந்தக் கட்டுரையினை வடித்துள்ளேன்!
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது. ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போனபின்பு தான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன. போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் சென்னை கால் சென்டரில் வேலை பார்த்த ஷமிலா என்றும் அவருடன் தங்கி இருந்தவர் அவருடைய காதல் கணவர் மகேஷ் தலை மறைவாகி விட்டதாகவும் மறு தகவல் வந்தது. சிறிது நாள் கழித்து மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் மணியக்காரன் பட்டியில் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதெல்லாம் செய்திகள். ஆனால் அதில் என்ன சுவாரிஸ்யமான விஷயம் என்ன வென்றால் அவர் தனது காதல் மனைவி பற்றி எழுதி வைத்திருந்த கடிதம் தான்.
தான் கைபிடித்தவளுக்காக தன் பெற்றோர்களை புறக்கணித்தார் அந்த மகேஷ். அப்படிப் பட்டவருக்கு கிடைத்த பரிசு தன் காதல் மனைவி செய்த நம்பிக்கை மோசம். மகேஷ் தான் இறக்குமுன் போலிசுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
படித்த பெண்கள் தங்களை முழுமையாக வெளி நாட்டுக் கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிகொள்கிறார்கள். வாழ்கையே வெறும் இன்பத்திற்காகத் தான் என நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையான, உணர்வுப் பூர்வமான உணர்வு தேவையில்லை. அவர்களுக்கு கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் என்ற கவலையே கிடையாது. படிப்பு, பணம், கொஞ்சம் அழகு இருந்தால் போதும் எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்ல பந்த பாசத்தினையும் மறந்து குறுகிய காலத்தில் தங்கள் வாழ்க்கையினை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அந்த காதல் கணவரை விட்டுவிட்டு பத்துப் பேர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லி அவர்கள் பெயர்களையும் சொல்லி அதற்கு ஆதாரமாக தன் மனைவியின் செல் போனுக்கு வந்த அழைப்புகளையும் பேஸ்புக் இணைய தளத்தில் வந்த தகவல் பரிமாற்றங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். இதனை நான் எதற்கு இங்கே குறுப்பிடுகிறேன் என்றால் பெண்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் உணர்வுகளுக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
அடிப்படை கோளாறு: நான் மேலே குறிப்பிட்ட செய்தி ஒரு சம்பவமாக பார்க்காது இன்றைய வெளிநாட்டு மோகத்தால் ஏற்படும் தப்பு தாளங்கள் என்று எடுத்துக் கொண்டு அதனை களைய அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய தேவைகளை எல்லாம் சுருக்கிக் கொண்டு, சிறு துன்பமும் இல்லாது செல்லமாக வளர்க்கின்றார்கள். அனால் அந்தக் குழந்தைகள் பெரியவ்ரானதுடன் தங்களுடைய பாரம்பரியம் என்னவென்று அறியாமல் வாழ்க்கை முடிவுகளை சுயமாக அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட இளசுகளுக்கு அருகில் உள்ளது கள்ளிச்செடி என்று தெரிவதில்லை. மாறாக அவைகள் தாங்கள் சுற்றிக்கொள்ள விரும்பும் துணையாக எண்ணுகிறார்கள். அனால் அவைகளைத் தெரியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேலை நாட்டு நாகரியத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போடுகிறார்கள்.
ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன். பத்தாவது படிக்கும் ஜரினா என்ற சிறுமி அவள் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளை. அவளுடைய பிறந்த தின விழா முன்னிட்டு தனக்கு தன தோழிகளெல்லாம் வைத்திருப்பது போல ஒரு செல் போன் வேண்டும் என்று தன் பெற்றோரை நச்சரித்திருக்கிறாள். தன் செல்ல மகள் விருப்பப் பட்டுக் கேட்கின்றாலே என்று அந்த அப்பாவி பெற்றோரும் ஒரு செல் போன் வாங்கிக் கொடுகின்றார்கள். அனால் போன் வாங்கியதும் அவளுடைய நடை உடை பாவனை பேச்சு அதனையும் மாறிவிட்டது. அன்பான பெற்றோர்களிடம் கூட பேசுவதினைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டாள். பெரும்பாலான நேரங்களில் அவள் படுக்கை அறையுலும் பாத் ரூமிலுமே அவள் காலத்தினை கழித்தால். அவள் படிப்பின் பிடிப்பும், பாசப் பிடிப்பும் பாழாகி விட்டது. அதற்கான காரணத்தினை அறியும் பொருட்டு அவளை ஒரு மனோதுத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். அந்த டாக்டர் முதலில் செய்த காரியம் அவள் செல் போனை வாங்கி சோதனை செய்தபோது ஜரினா ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு வைத்து பள்ளிக்குச் செல்லாமல் அவனுடன் ஊர் சுற்றியது தெரிந்தது. அதன் பின்பு அந்த டாக்டரும் பெற்றோரும் நல் அறிவுரைகளை எடுத்துச் சொல்லியும் அந்த பையனை கண்டித்து அவனுடன் உள்ள தொடர்பையும் துண்டித்ததால் இன்று அவள் தன் படிப்பினை நல்ல முறையில் பின்பற்றுகிறாள், பெற்றோரிடமும் பாசத்துடன் பழகுகிறாள்.
இதுபோன்ற சம்பவம் தனிப் பட்டதா என்றால் இல்லையே! சென்னையிலுள்ள ஸ்கூல் ஆப் ஒர்க்ஸ் என்ற கல்லூரியில் ஒரு சர்வே சமீபத்தில் நடத்தி அதற்கான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலான செல் போன் அதிக நேரம் உபயோஹிக்கும் பையன்களும் சிறுமிகளும் மனோதுத்துவ பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறார்கள். அதில் 33 விழுக்காடு சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் அதிக நேரத்தினை செலவிடுவதில்லை என்றும், செல் போனிலே காலம் கழிப்பதாக சொல்கிறார்கள். 40 விழுக்காடு குழைந்தைகள் தங்கள் செல் போனை அரைமணிக்கு ஒரு தடவை செக் செய்வதாக சொல்கிறார்கள். ஒரு மனோதத்துவ டாக்டர் நம்பி கூறும்போது பதிமூன்று வயதிற்க்குக் குறைவான சிறுவர் சிறுமியர் கூட செல் போன் தொடர்பால் பாதிக்கப் பட்டவர்கள் வருவதினை பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக சொல்லுகிறார்.
சென்னை மண்ணடியில் வாழும் சிலர் கோட்டை எதிரில் உள்ள பூங்காவிற்கு அதிகாலை நடைப்பயிர்ச்சிக்கு செல்லவது வழக்கம். ஒருநாள் ஒரு புர்கா அணிந்த மாணவி தன் பள்ளி பையுடன் வேற்று மத வாலிபரோடு அந்தப் பார்க்குக்கு வந்து புர்கவை களைந்து வைத்து விட்டு அந்த வாலிபரின் கரங்களில் தஞ்சம் புகுந்து சல்லாபத்தில் திளைத்திருந்தால் . அதனை அறிந்த எங்களின் நண்பர் ஆறுமுகம் அந்த மாணவியிடம் சென்று கடிந்து விரட்டிவிட்டார். இதனை நான் எதற்காக சொல்கிறேனென்றால் பெற்றோர் தன் பிள்ளைகள் மேல் கல்வி படிக்க வேண்டும் என்று வாயை கட்டி வயித்தைக் கட்டி படிக்க வைக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் ஒழுங்காக பள்ளி செல்கின்றார்களா என்று கவனிக்க தவறி விடுகிறார்கள்.
2) பிள்ளைகள் நவீன கல்வி பெற இன்டர்நெட் வசதியுடன் கூடிய அதிக திறன் வாய்ந்த கணினியினை வாங்கிக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளைகள் அந்த கணினிதான் உலகம் என்று முடங்கிக் கிடக்கும்போது கண்டிக்க தவறி விடுகிறார்கள். அந்த கணினியில் தன் செல்லக் குழந்தைகள் என்ன அப்படி செய்கிறார்கள் என்று அறியாமையினால் அந்தக் குழந்தைகள் தடம் மாறும்போது தெரிவதில்லை. பெற்றோர்களும் கணினியின் ஆரம்பக் கல்வி கற்க வேண்டும்.
3) பிள்ளைகள் உலகக் கல்வி பெற்றால் போதும் மர்க்க கல்வி தேவையில்லை என்ற ஒரு தவறான நிலைப்பாடு சில பணக்காரர்களிடம் இருப்பதினால் பல குழந்தைகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் சீரழிந்து விடுகின்றனர். ஆகவே உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும், நல் ஒழுக்க போதனைகளும் வீட்டிலுள்ள பெரியோர் போதிக்க வேண்டும்.
4) பல மத குடும்பங்கள் ஒரு இடத்தில் வாழும் இந்த உலகத்தில் ஆண்களுடன் பெண்கள் சகசமாக குடும்ப நண்பர் என்ற போர்வையில் பழக விடக் கூடாது.
5) பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் வயது வந்த பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது.
6) டிவி மற்றும் கம்ப்யுட்டரினை பிள்ளைகள் படுக்கை அறைகளில் வைக்காது பொது அறையில் வைக்க வேண்டும். கணினியில் ஆடல் பாடல் ஆடம் பாட்டம் கொண்டாட்டம் என்ற போர்வையில் டிவியில் ஒளி பரப்பப் படும் ஆபாச காட்ச்சிகளை கண்டிப்பாக பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்ககூடாது.
7) குழந்தைகள் தங்கம் போன்ற பெற்றோர்களுக்கு பாசமானவர்கள் தான், மறுக்கவில்லை, ஆனால் தங்கக் கம்பியினை நம் கண்ணில் குத்த விடலாமா? ஆகவே பாசம் உள்ள தாய்மார்களும், அரவணைப்புகொண்ட தந்தைமார்களும், அன்புடைய உடன் பிறப்புகளும், கண்ணியம் காக்கும் சமுதாய இயக்கங்களும் ஈமானை இழந்து, பண்பாடுகளுக்கு விடைகொடுத்து காதல் மோகத்தில் அற்ப சுகம் கிடைக்கும் என்று பக்குவமில்லாத பருவத்தில் வாழ்வினைத் துளைக்கும் வருங்கால சிறுவர்கள், சிறுமிகளை மனம் போன போக்கில் சீரழிய விடலாமா?
சமீப கால செய்திகளில் அதிகமாக அடிபடுவது காதல் மற்றும் காமம் பற்றிய செய்திகள் தான். ஆண், பெண் பழகும் இடங்களான கல்வி நிலையங்கள், வேலைபார்க்கும் அலுவலகங்கள், குடும்பத்தினைப் பிரிந்து வாழும் விடுதிகள் இளம் சிட்டுகள், தங்களுக்குக் கிடைக்கும் இனக்கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு, வரட்டுத் துணிச்சலுடன் திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணத்திற்குப் பின்போ கற்பினை இழக்கும் சோகக் கதையினை நாள் தோறும் வந்த வண்ணம் இருகின்றது. ஆரம்பத்தில் காதலில் ஊஞ்சலாடும் உள்ளம் காதல் தடம் புரண்டு மானம் கப்பலேறுவது அவர்களோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. மாறாக அவர்கள் குடும்பத்திற்கும் இழுக்கு ஏற்படுத்துகிறது என்று அவர்கள் ஆரம்பத்தில் உணருவதில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போனபின்பு தான் கண்ணை மறைத்திருந்த காதல் பித்து தெளிவடைகிறது.
2011 செப்டம்பர் கடைசி வாரத்தில் செய்திகளில் பரபரப்பான வந்த தகவல் கேரளா மாநிலம் மூணாறில் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்த இளம் ஜோடிகளில் பெண் கழுத்தினை அறுத்து கொலை செய்யப் பட்டு இறந்தது தெரிய வந்ததும், அந்தப் பெண்ணோடு தங்கி இருந்த ஆண் தலை மறைவான செய்தியும் வந்தன. போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் சென்னை கால் சென்டரில் வேலை பார்த்த ஷமிலா என்றும் அவருடன் தங்கி இருந்தவர் அவருடைய காதல் கணவர் மகேஷ் தலை மறைவாகி விட்டதாகவும் மறு தகவல் வந்தது. சிறிது நாள் கழித்து மகேஷும் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் மணியக்காரன் பட்டியில் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதெல்லாம் செய்திகள். ஆனால் அதில் என்ன சுவாரிஸ்யமான விஷயம் என்ன வென்றால் அவர் தனது காதல் மனைவி பற்றி எழுதி வைத்திருந்த கடிதம் தான்.
தான் கைபிடித்தவளுக்காக தன் பெற்றோர்களை புறக்கணித்தார் அந்த மகேஷ். அப்படிப் பட்டவருக்கு கிடைத்த பரிசு தன் காதல் மனைவி செய்த நம்பிக்கை மோசம். மகேஷ் தான் இறக்குமுன் போலிசுக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்:
படித்த பெண்கள் தங்களை முழுமையாக வெளி நாட்டுக் கலாச்சாரத்திற்கு தங்களை மாற்றிகொள்கிறார்கள். வாழ்கையே வெறும் இன்பத்திற்காகத் தான் என நினைக்கின்றார்கள். அவர்களுக்கு உண்மையான, உணர்வுப் பூர்வமான உணர்வு தேவையில்லை. அவர்களுக்கு கலாச்சாரம், கணவர், சமூகம், குடும்பம் என்ற கவலையே கிடையாது. படிப்பு, பணம், கொஞ்சம் அழகு இருந்தால் போதும் எதுவும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது. எல்ல பந்த பாசத்தினையும் மறந்து குறுகிய காலத்தில் தங்கள் வாழ்க்கையினை அவர்களே தேடிக் கொள்கிறார்கள். அந்த காதல் கணவரை விட்டுவிட்டு பத்துப் பேர்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சொல்லி அவர்கள் பெயர்களையும் சொல்லி அதற்கு ஆதாரமாக தன் மனைவியின் செல் போனுக்கு வந்த அழைப்புகளையும் பேஸ்புக் இணைய தளத்தில் வந்த தகவல் பரிமாற்றங்களையும் ஆதாரமாக காட்டியுள்ளார். இதனை நான் எதற்கு இங்கே குறுப்பிடுகிறேன் என்றால் பெண்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் உணர்வுகளுக்கு அடிமை ஆகி விடுகிறார்கள்.
அடிப்படை கோளாறு: நான் மேலே குறிப்பிட்ட செய்தி ஒரு சம்பவமாக பார்க்காது இன்றைய வெளிநாட்டு மோகத்தால் ஏற்படும் தப்பு தாளங்கள் என்று எடுத்துக் கொண்டு அதனை களைய அனைவரும் முயற்ச்சி செய்ய வேண்டும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தங்களுடைய தேவைகளை எல்லாம் சுருக்கிக் கொண்டு, சிறு துன்பமும் இல்லாது செல்லமாக வளர்க்கின்றார்கள். அனால் அந்தக் குழந்தைகள் பெரியவ்ரானதுடன் தங்களுடைய பாரம்பரியம் என்னவென்று அறியாமல் வாழ்க்கை முடிவுகளை சுயமாக அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிப் பட்ட இளசுகளுக்கு அருகில் உள்ளது கள்ளிச்செடி என்று தெரிவதில்லை. மாறாக அவைகள் தாங்கள் சுற்றிக்கொள்ள விரும்பும் துணையாக எண்ணுகிறார்கள். அனால் அவைகளைத் தெரியாத பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மேலை நாட்டு நாகரியத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ தூபம் போடுகிறார்கள்.
ஒரு உண்மை நிகழ்ச்சியினை சொல்ல ஆசைப்படுகிறேன். பத்தாவது படிக்கும் ஜரினா என்ற சிறுமி அவள் பெற்றோருக்குச் செல்லப்பிள்ளை. அவளுடைய பிறந்த தின விழா முன்னிட்டு தனக்கு தன தோழிகளெல்லாம் வைத்திருப்பது போல ஒரு செல் போன் வேண்டும் என்று தன் பெற்றோரை நச்சரித்திருக்கிறாள். தன் செல்ல மகள் விருப்பப் பட்டுக் கேட்கின்றாலே என்று அந்த அப்பாவி பெற்றோரும் ஒரு செல் போன் வாங்கிக் கொடுகின்றார்கள். அனால் போன் வாங்கியதும் அவளுடைய நடை உடை பாவனை பேச்சு அதனையும் மாறிவிட்டது. அன்பான பெற்றோர்களிடம் கூட பேசுவதினைக் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விட்டாள். பெரும்பாலான நேரங்களில் அவள் படுக்கை அறையுலும் பாத் ரூமிலுமே அவள் காலத்தினை கழித்தால். அவள் படிப்பின் பிடிப்பும், பாசப் பிடிப்பும் பாழாகி விட்டது. அதற்கான காரணத்தினை அறியும் பொருட்டு அவளை ஒரு மனோதுத்துவ டாக்டரிடம் அழைத்துச்சென்றார்கள். அந்த டாக்டர் முதலில் செய்த காரியம் அவள் செல் போனை வாங்கி சோதனை செய்தபோது ஜரினா ஒரு ஆண் நண்பருடன் தொடர்பு வைத்து பள்ளிக்குச் செல்லாமல் அவனுடன் ஊர் சுற்றியது தெரிந்தது. அதன் பின்பு அந்த டாக்டரும் பெற்றோரும் நல் அறிவுரைகளை எடுத்துச் சொல்லியும் அந்த பையனை கண்டித்து அவனுடன் உள்ள தொடர்பையும் துண்டித்ததால் இன்று அவள் தன் படிப்பினை நல்ல முறையில் பின்பற்றுகிறாள், பெற்றோரிடமும் பாசத்துடன் பழகுகிறாள்.
இதுபோன்ற சம்பவம் தனிப் பட்டதா என்றால் இல்லையே! சென்னையிலுள்ள ஸ்கூல் ஆப் ஒர்க்ஸ் என்ற கல்லூரியில் ஒரு சர்வே சமீபத்தில் நடத்தி அதற்கான ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளார்கள். அதில் பெரும்பாலான செல் போன் அதிக நேரம் உபயோஹிக்கும் பையன்களும் சிறுமிகளும் மனோதுத்துவ பிரச்சனைகளுக்கு ஆளாகி விடுவதாக கூறுகிறார்கள். அதில் 33 விழுக்காடு சிறுமிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் அதிக நேரத்தினை செலவிடுவதில்லை என்றும், செல் போனிலே காலம் கழிப்பதாக சொல்கிறார்கள். 40 விழுக்காடு குழைந்தைகள் தங்கள் செல் போனை அரைமணிக்கு ஒரு தடவை செக் செய்வதாக சொல்கிறார்கள். ஒரு மனோதத்துவ டாக்டர் நம்பி கூறும்போது பதிமூன்று வயதிற்க்குக் குறைவான சிறுவர் சிறுமியர் கூட செல் போன் தொடர்பால் பாதிக்கப் பட்டவர்கள் வருவதினை பார்க்க பாவமாகவும், பரிதாபமாகவும் இருப்பதாக சொல்லுகிறார்.
சென்னை மண்ணடியில் வாழும் சிலர் கோட்டை எதிரில் உள்ள பூங்காவிற்கு அதிகாலை நடைப்பயிர்ச்சிக்கு செல்லவது வழக்கம். ஒருநாள் ஒரு புர்கா அணிந்த மாணவி தன் பள்ளி பையுடன் வேற்று மத வாலிபரோடு அந்தப் பார்க்குக்கு வந்து புர்கவை களைந்து வைத்து விட்டு அந்த வாலிபரின் கரங்களில் தஞ்சம் புகுந்து சல்லாபத்தில் திளைத்திருந்தால் . அதனை அறிந்த எங்களின் நண்பர் ஆறுமுகம் அந்த மாணவியிடம் சென்று கடிந்து விரட்டிவிட்டார். இதனை நான் எதற்காக சொல்கிறேனென்றால் பெற்றோர் தன் பிள்ளைகள் மேல் கல்வி படிக்க வேண்டும் என்று வாயை கட்டி வயித்தைக் கட்டி படிக்க வைக்கிறார்கள். ஆனால் அந்த குழந்தைகள் ஒழுங்காக பள்ளி செல்கின்றார்களா என்று கவனிக்க தவறி விடுகிறார்கள்.
2) பிள்ளைகள் நவீன கல்வி பெற இன்டர்நெட் வசதியுடன் கூடிய அதிக திறன் வாய்ந்த கணினியினை வாங்கிக் கொடுக்கிறார்கள் ஆனால் தங்கள் பிள்ளைகள் அந்த கணினிதான் உலகம் என்று முடங்கிக் கிடக்கும்போது கண்டிக்க தவறி விடுகிறார்கள். அந்த கணினியில் தன் செல்லக் குழந்தைகள் என்ன அப்படி செய்கிறார்கள் என்று அறியாமையினால் அந்தக் குழந்தைகள் தடம் மாறும்போது தெரிவதில்லை. பெற்றோர்களும் கணினியின் ஆரம்பக் கல்வி கற்க வேண்டும்.
3) பிள்ளைகள் உலகக் கல்வி பெற்றால் போதும் மர்க்க கல்வி தேவையில்லை என்ற ஒரு தவறான நிலைப்பாடு சில பணக்காரர்களிடம் இருப்பதினால் பல குழந்தைகள் வெளிநாட்டுக் கலாச்சாரத்தில் சீரழிந்து விடுகின்றனர். ஆகவே உலகக் கல்வியோடு மார்க்க கல்வியும், நல் ஒழுக்க போதனைகளும் வீட்டிலுள்ள பெரியோர் போதிக்க வேண்டும்.
4) பல மத குடும்பங்கள் ஒரு இடத்தில் வாழும் இந்த உலகத்தில் ஆண்களுடன் பெண்கள் சகசமாக குடும்ப நண்பர் என்ற போர்வையில் பழக விடக் கூடாது.
5) பிறந்த நாள் விழா மற்றும் குடும்ப விழாக்களில் வயது வந்த பெண்களை அழைத்துச் செல்லக்கூடாது.
6) டிவி மற்றும் கம்ப்யுட்டரினை பிள்ளைகள் படுக்கை அறைகளில் வைக்காது பொது அறையில் வைக்க வேண்டும். கணினியில் ஆடல் பாடல் ஆடம் பாட்டம் கொண்டாட்டம் என்ற போர்வையில் டிவியில் ஒளி பரப்பப் படும் ஆபாச காட்ச்சிகளை கண்டிப்பாக பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்ககூடாது.
7) குழந்தைகள் தங்கம் போன்ற பெற்றோர்களுக்கு பாசமானவர்கள் தான், மறுக்கவில்லை, ஆனால் தங்கக் கம்பியினை நம் கண்ணில் குத்த விடலாமா? ஆகவே பாசம் உள்ள தாய்மார்களும், அரவணைப்புகொண்ட தந்தைமார்களும், அன்புடைய உடன் பிறப்புகளும், கண்ணியம் காக்கும் சமுதாய இயக்கங்களும் ஈமானை இழந்து, பண்பாடுகளுக்கு விடைகொடுத்து காதல் மோகத்தில் அற்ப சுகம் கிடைக்கும் என்று பக்குவமில்லாத பருவத்தில் வாழ்வினைத் துளைக்கும் வருங்கால சிறுவர்கள், சிறுமிகளை மனம் போன போக்கில் சீரழிய விடலாமா?
Sunday, 9 October 2011
வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!
ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000
மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா என்ன?
அதேபோன்று தான் ஒரு மனிதன் தனது குறிக்கோளினை நோக்கி பயணம் செய்யும்போது தடைகள் கண்டு மனம் தளராது வீறு நடை போட வேண்டும்.கிராமத்தில் கண்மாய் கரை ஓரத்தில் இருக்கும் ஆல மரத்தினை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பழத்தில் இருக்கும் சிறு விதை தரையில் விழுந்து பெரிய மரமாகிறது. அதேபோன்று தான் சிறு முயற்சி வெற்றி வாழ்வில் அடித்தளமாக அமையும்.ஒரு மலையின் உச்சியினை அடைய வேண்டுமென்றால் அதனை சுற்றியுள்ள குன்றுகளை பார்த்து பிரமிக்கக் கூடாது. மலை உச்சியினை அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி வேண்டும். ஒரு காது கேட்காத மற்று திறனாளிக்கு அவர் மீது பிறர் அள்ளி வீசுகின்ற வசைபாடுகள் மற்றும் கேளிப்பேச்சுகள் அறியாமல் இருப்பதால் தான் அவர் அன்றாட வேலையினை செய்ய முடிகிறது. அவர் காது கேட்கும் திறனிருந்தால் அவர் மீது வீசப்படுகின்ற வசைபடுகளால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவார்.
வானத்தில் வட்டமிடும் பறைவைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவைகள் தங்களுடைய இறகுகளால் எவ்வளவு தூரம் உயரமாகவும் வேகமாகவும் பறக்க முடியுமோ அதனைப் பொருத்து அது தன் இறைகளை தேடவும் வல்லூருகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.ஆனால் மனிதன் பறப்பதிற்குப் பதிலாக பூமியில் வாழ்கின்றான். அவன் வெற்றிக் கனியினைப் பறிக்க தன் செயல்களில் விரைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை அடைய முடியுமல்லவா?
உங்கள் முயற்சியில் முழுப் பயன் பெற கீழ்க் கண்ட செயல் முறைகள் தேவை:
1) ஒரு கூட்டுக் குடும்பத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை பந்த பாசத்துடன் பழகுவதினை நாம் காணலாம். அதே குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சண்டை வந்து அந்த வீட்டின் நடுவே சுவர் எடுத்தால் அவர்களுக்கிடையேயுள்ள மனக் கசப்பு மேலும் அதிகமாவதுடன், அவர்களுடைய குடும்பதினருக்குள்லேயுள்ள பந்த பந்த பாசமும் அறவே முறிந்து விடும். உதாரணத்திற்கு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெர்லின் சுவரால் ஜெர்மானிய மக்கள் மேற்கு கிழக்கு எனப் பிரிந்து வாழ்ந்தனர். பனிப்போர் முடிவுக்கு வந்ததும் அந்த சுவர் இடிக்கப் பட்டதால் இன்று ஒன்று பட்ட ஜெர்மானிய நாடு உலகில் சக்தி வாய்ந்த பெண் ஜனாதிபதியான மார்களினைகொண்டு விளங்குகின்றது. ஆகவே மனிதனின் பந்த பாசத்திற்கு எந்த தடையும் இருக்ககூடாது.
2) உங்கள் வாழ்வு பழமைவாதம், பிற்போக்கு மற்றும் புறையோடியதாக இருக்ககூடாது. புது அனுபவங்கள் மற்றும் புதுமைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
3) உங்கள் வேலைகளில் அல்லது முயற்சிகளில் உங்கள் குடும்ப உறுப்பினர், சக ஊழியர், வேலையாட்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினை தேடுங்கள்.
திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட உங்களுக்கு முயல்கள் பதுங்கும் குழிகள், பதுங்கும் புலிகள், சீரும் பாம்புகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரிய யானைகளோ அல்லது உயர்ந்த ஒட்டகசிவிங்கிகளோ கண்ணுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. ஆகவே நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை அளந்து வையுங்கள்.உங்களின் அறியாமையிலிருந்து தெளிவு பெற பிறரால் எடுத்துச் சொல்லப்படும் நல்ல அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கையின் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு ஒரு உதாரணமாக 11.9.2011 இல் நீயுயார்க் உலக வர்த்தக மைய விமான தாக்குதல் நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை சொல்லாலம் என நினைக்கின்றேன். 47 வது வட பகுதியின் தளத்தில் உள்ள பர்ஸ்ட் யூனியன் வங்கியில் வேலை பார்த்த நியூ ஜெர்செயினைச் சார்ந்த 49 வயதான ஜோஸ் என்பவர் தான் இருந்த கட்டிடத்தினை விமானம் தாக்கியதும் லிப்ட் வேலை செய்யததால் மாடிப் படி வழியே இறங்க ஆரம்பித்தார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் சில வேலையாட்கள் வர மறுத்து லிப்ட் இயங்கும் என எதிர் பார்த்து நின்றனர். ஜோசுவுடன் வந்தவர்கள் மாடிபடியே இறங்கி கீழே வருவதற்கும் வர்த்தக மையம் முழுமையாக கீழே விழுவதிற்கும் சரியாக இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் நல்ல போதனைகளை நாம் ஒருபோதும் நிரகரிகக்கூடாது என்று இந்த சம்பவம் விளக்குகின்றதல்லவா?மனிதன் முன்னேற மனக்கிளர்ச்சி உந்துதல் வேண்டும். அப்போதுதான் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னாள் ராமேஸ்வரம் தீவாக இருந்தது. அதனை தமிழ்நாட்டுடன் இணைத்து போக்கு வரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்ததால் ஒரு பாம்பன் கடல் பாலம் உருவானது. அதேபோன்று தான் எந்த திட்டமும் செயல் படுத்த மன ஆர்வம் வேண்டும். ஒருவனுடைய வெற்றிபயணம் அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்திப்பதில் அடங்கும். உங்கள் நடை முறைகளை மாற்றினால் உங்கள் எண்ணங்களை மாற்றலாம். எந்த வெற்றியும் ஒருவனுடைய குறிக்கோளின் முடிவாகாது. மாறாக அவனுடைய முயற்சிகளின் அடிகள் தான் முக்கியமாகும். ஜமைகா ஒலிம்பிக் ஓட்ட வீரர் ஹுசைன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விசில் அடிப்பதிற்கு முன்பே ஓட எத்தநித்ததால் அந்த போட்டியில் ஓடும் தகுதியினை இழந்தார். அனால் தான் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்வேன் என்று சபதம் எடுத்து ஓடி வெற்றி பெட்டதோடு மட்டுமல்லாமல் நானூறு மீட்டர் ரிலே ஓட்டபந்தயத்தில் 37.04 வினாடி எடுத்து புதிய சாதனைப் படைத்தார். ஆகவே போல்ட் வெற்றிபெற எடுத்துக் கொண்ட முயற்சியே மேலானது.
உங்களுடைய வெற்றிக்கான முயற்சிகளுக்கு நேரம், காலம் பார்த்து காலவரையின்றி காத்திருக்க வேண்டாம். எண்ணிய உடனே செயலில் இறங்க தயக்கம் காட்டக் கூடாது. உலகில் வெறுப்பு , யுத்தம் , சாவு, நோய், பிணி, தனிமை,இழப்பு இன்னும் பல தடங்கள் நம்மை எதிர் நோக்கும். அவைகளை எதிர் கொள்ளுவதே வெற்றியினைக் கொடுக்கும். ஒரு மல்லிகை செடி வளர்க்க ஆசைப்பட்டு செடி வாங்கி வந்து தொட்டியில் நட்டு தண்ணீர் ஊற்றிய பின்பு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டால் அந்த செடி வாடி விடுமல்லவா? அதேபோன்று தான் முயற்சியில் பல சங்கடம் இருக்கின்றது என எண்ணி செயலில் இறங்காமல் வாழா இருக்கக்கூடாது. உலக மிடில் குத்துச் சண்டை வீரர் ரேயிடம் 2001 ஆம் ஆண்டு ஒரு நிருபர், 'எவ்வாறு எதிரி விட்ட அதனை குத்க்களையும் தாங்கினீர்கள்' என்று கேட்டார். அதற்கு ரே சொன்னார், 'பந்து அடிக்க அடிக்கத்தான் மேலே எழும் அதுபோன்று தான் நானும் அடி வாங்கி அடி வாங்கி ரோசப்பட்டு ஆக்ரோசமாக விட்ட குத்தில் எதிரியினை வீழ்த்தினேன்' என்று. அதேபோன்று தான் முயற்சிகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் தனக்கு ஏற்படும் முடிவு என எண்ணாமல், அந்த இடர்பாடுகள் தனது வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் என்று எண்ணி செயலில் இறங்கினால் வாழ்வின் காலச்சக்கரம் சுழல்வது மிகவும் எளிதாகும் என்றால் மிகையாகாது!
மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன் ஒலிம்பிக்கில் ஓடுவதிற்க்காக எடுத்துக்கொண்ட பயிற்சியும் முயற்சியுமே பிரதானமாகும்.நாம் சிறியவர்களாக இருந்தபோது சைக்கிள் பழகும்போது கீழே விழுந்து கை, கால்களில் அடிபடுகிறது. அதற்காக சைக்கிள் பழகாமல் இருந்து விடுகிறோமா என்ன?
அதேபோன்று தான் ஒரு மனிதன் தனது குறிக்கோளினை நோக்கி பயணம் செய்யும்போது தடைகள் கண்டு மனம் தளராது வீறு நடை போட வேண்டும்.கிராமத்தில் கண்மாய் கரை ஓரத்தில் இருக்கும் ஆல மரத்தினை எடுத்துக் கொள்ளுங்கள், அதன் பழத்தில் இருக்கும் சிறு விதை தரையில் விழுந்து பெரிய மரமாகிறது. அதேபோன்று தான் சிறு முயற்சி வெற்றி வாழ்வில் அடித்தளமாக அமையும்.ஒரு மலையின் உச்சியினை அடைய வேண்டுமென்றால் அதனை சுற்றியுள்ள குன்றுகளை பார்த்து பிரமிக்கக் கூடாது. மலை உச்சியினை அடைந்தே தீருவேன் என்ற மன உறுதி வேண்டும். ஒரு காது கேட்காத மற்று திறனாளிக்கு அவர் மீது பிறர் அள்ளி வீசுகின்ற வசைபாடுகள் மற்றும் கேளிப்பேச்சுகள் அறியாமல் இருப்பதால் தான் அவர் அன்றாட வேலையினை செய்ய முடிகிறது. அவர் காது கேட்கும் திறனிருந்தால் அவர் மீது வீசப்படுகின்ற வசைபடுகளால் ஒடிந்து மூலையில் முடங்கி விடுவார்.
வானத்தில் வட்டமிடும் பறைவைகளை எடுத்துக் கொள்ளுங்கள் அவைகள் தங்களுடைய இறகுகளால் எவ்வளவு தூரம் உயரமாகவும் வேகமாகவும் பறக்க முடியுமோ அதனைப் பொருத்து அது தன் இறைகளை தேடவும் வல்லூருகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவும் முடியும்.ஆனால் மனிதன் பறப்பதிற்குப் பதிலாக பூமியில் வாழ்கின்றான். அவன் வெற்றிக் கனியினைப் பறிக்க தன் செயல்களில் விரைந்து செயல்பட்டால் வெற்றி இலக்கினை அடைய முடியுமல்லவா?
உங்கள் முயற்சியில் முழுப் பயன் பெற கீழ்க் கண்ட செயல் முறைகள் தேவை:
1) ஒரு கூட்டுக் குடும்பத்தில் பெரியவர் முதல் சிறியவர் வரை பந்த பாசத்துடன் பழகுவதினை நாம் காணலாம். அதே குடும்பத்தில் இரு சகோதரர்களுக்கிடையே சண்டை வந்து அந்த வீட்டின் நடுவே சுவர் எடுத்தால் அவர்களுக்கிடையேயுள்ள மனக் கசப்பு மேலும் அதிகமாவதுடன், அவர்களுடைய குடும்பதினருக்குள்லேயுள்ள பந்த பந்த பாசமும் அறவே முறிந்து விடும். உதாரணத்திற்கு 1945 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பெர்லின் சுவரால் ஜெர்மானிய மக்கள் மேற்கு கிழக்கு எனப் பிரிந்து வாழ்ந்தனர். பனிப்போர் முடிவுக்கு வந்ததும் அந்த சுவர் இடிக்கப் பட்டதால் இன்று ஒன்று பட்ட ஜெர்மானிய நாடு உலகில் சக்தி வாய்ந்த பெண் ஜனாதிபதியான மார்களினைகொண்டு விளங்குகின்றது. ஆகவே மனிதனின் பந்த பாசத்திற்கு எந்த தடையும் இருக்ககூடாது.
2) உங்கள் வாழ்வு பழமைவாதம், பிற்போக்கு மற்றும் புறையோடியதாக இருக்ககூடாது. புது அனுபவங்கள் மற்றும் புதுமைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.
3) உங்கள் வேலைகளில் அல்லது முயற்சிகளில் உங்கள் குடும்ப உறுப்பினர், சக ஊழியர், வேலையாட்கள் ஆகியோரின் ஒத்துழைப்பினை தேடுங்கள்.
திக்குதெரியாத காட்டில் விடப்பட்ட உங்களுக்கு முயல்கள் பதுங்கும் குழிகள், பதுங்கும் புலிகள், சீரும் பாம்புகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் பெரிய யானைகளோ அல்லது உயர்ந்த ஒட்டகசிவிங்கிகளோ கண்ணுக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. ஆகவே நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளை அளந்து வையுங்கள்.உங்களின் அறியாமையிலிருந்து தெளிவு பெற பிறரால் எடுத்துச் சொல்லப்படும் நல்ல அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் வாழ்க்கையின் விபத்திலிருந்து தப்பிக்க முடியும். அதற்கு ஒரு உதாரணமாக 11.9.2011 இல் நீயுயார்க் உலக வர்த்தக மைய விமான தாக்குதல் நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை சொல்லாலம் என நினைக்கின்றேன். 47 வது வட பகுதியின் தளத்தில் உள்ள பர்ஸ்ட் யூனியன் வங்கியில் வேலை பார்த்த நியூ ஜெர்செயினைச் சார்ந்த 49 வயதான ஜோஸ் என்பவர் தான் இருந்த கட்டிடத்தினை விமானம் தாக்கியதும் லிப்ட் வேலை செய்யததால் மாடிப் படி வழியே இறங்க ஆரம்பித்தார். தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் சில வேலையாட்கள் வர மறுத்து லிப்ட் இயங்கும் என எதிர் பார்த்து நின்றனர். ஜோசுவுடன் வந்தவர்கள் மாடிபடியே இறங்கி கீழே வருவதற்கும் வர்த்தக மையம் முழுமையாக கீழே விழுவதிற்கும் சரியாக இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் சொல்லியுள்ளார். இது எதனைக் காட்டுகின்றது என்றால் நல்ல போதனைகளை நாம் ஒருபோதும் நிரகரிகக்கூடாது என்று இந்த சம்பவம் விளக்குகின்றதல்லவா?மனிதன் முன்னேற மனக்கிளர்ச்சி உந்துதல் வேண்டும். அப்போதுதான் ஒரு வெற்றிகரமான செயலை செய்ய முடியும். பல ஆண்டுகளுக்கு முன்னாள் ராமேஸ்வரம் தீவாக இருந்தது. அதனை தமிழ்நாட்டுடன் இணைத்து போக்கு வரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைத்ததால் ஒரு பாம்பன் கடல் பாலம் உருவானது. அதேபோன்று தான் எந்த திட்டமும் செயல் படுத்த மன ஆர்வம் வேண்டும். ஒருவனுடைய வெற்றிபயணம் அவனுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை நேருக்கு நேர் சந்திப்பதில் அடங்கும். உங்கள் நடை முறைகளை மாற்றினால் உங்கள் எண்ணங்களை மாற்றலாம். எந்த வெற்றியும் ஒருவனுடைய குறிக்கோளின் முடிவாகாது. மாறாக அவனுடைய முயற்சிகளின் அடிகள் தான் முக்கியமாகும். ஜமைகா ஒலிம்பிக் ஓட்ட வீரர் ஹுசைன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் விசில் அடிப்பதிற்கு முன்பே ஓட எத்தநித்ததால் அந்த போட்டியில் ஓடும் தகுதியினை இழந்தார். அனால் தான் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் வெல்வேன் என்று சபதம் எடுத்து ஓடி வெற்றி பெட்டதோடு மட்டுமல்லாமல் நானூறு மீட்டர் ரிலே ஓட்டபந்தயத்தில் 37.04 வினாடி எடுத்து புதிய சாதனைப் படைத்தார். ஆகவே போல்ட் வெற்றிபெற எடுத்துக் கொண்ட முயற்சியே மேலானது.
உங்களுடைய வெற்றிக்கான முயற்சிகளுக்கு நேரம், காலம் பார்த்து காலவரையின்றி காத்திருக்க வேண்டாம். எண்ணிய உடனே செயலில் இறங்க தயக்கம் காட்டக் கூடாது. உலகில் வெறுப்பு , யுத்தம் , சாவு, நோய், பிணி, தனிமை,இழப்பு இன்னும் பல தடங்கள் நம்மை எதிர் நோக்கும். அவைகளை எதிர் கொள்ளுவதே வெற்றியினைக் கொடுக்கும். ஒரு மல்லிகை செடி வளர்க்க ஆசைப்பட்டு செடி வாங்கி வந்து தொட்டியில் நட்டு தண்ணீர் ஊற்றிய பின்பு அதனை பராமரிக்காமல் விட்டு விட்டால் அந்த செடி வாடி விடுமல்லவா? அதேபோன்று தான் முயற்சியில் பல சங்கடம் இருக்கின்றது என எண்ணி செயலில் இறங்காமல் வாழா இருக்கக்கூடாது. உலக மிடில் குத்துச் சண்டை வீரர் ரேயிடம் 2001 ஆம் ஆண்டு ஒரு நிருபர், 'எவ்வாறு எதிரி விட்ட அதனை குத்க்களையும் தாங்கினீர்கள்' என்று கேட்டார். அதற்கு ரே சொன்னார், 'பந்து அடிக்க அடிக்கத்தான் மேலே எழும் அதுபோன்று தான் நானும் அடி வாங்கி அடி வாங்கி ரோசப்பட்டு ஆக்ரோசமாக விட்ட குத்தில் எதிரியினை வீழ்த்தினேன்' என்று. அதேபோன்று தான் முயற்சிகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் தனக்கு ஏற்படும் முடிவு என எண்ணாமல், அந்த இடர்பாடுகள் தனது வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் என்று எண்ணி செயலில் இறங்கினால் வாழ்வின் காலச்சக்கரம் சுழல்வது மிகவும் எளிதாகும் என்றால் மிகையாகாது!
Tuesday, 20 September 2011
நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ.
வரலாறு மாணவனாக சென்னை புதுக் கல்லூரியிலும், மாநிலக் கல்லூரியிலும் பயிலும் பொது கீழக்கரை சீதக்காதியின் வள்ளல் தன்மையினை படித்திருக்கிறேன், அனால் என் வாழ்க்கையில் கண்ணாரப் பார்த்த வள்ளல் சீதக்காதி ஒருவர் இருகின்றார் என்றால் அவர் தான் பெரியவர் பி.எஸ்.ஏ.
இணைந்த இராமநாதபுரம் மாவட்டம் கடற்க்கரை ஓரம் கீழக்கரையில் பிறந்து திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து எண்ணற்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பினை தந்து அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்துள்ள ஒளிவிளக்கு அவர்.
எங்கள் ஊர் இளையான்குடி மக்கள் பி.எஸ்.ஏ. கம்பெனியால் பயன் பெற்று வசதி வாய்ப்புடன் வாழ்கின்றதினை நான் கண்கூடாக காண்கிறேன்.
பி.எஸ்.ஏ.வினை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1946 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு 1983 இல் கிடைத்தது. அப்போது நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பீ. ஆகா பணியாற்றினேன். திருசெந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சூடு பறக்க ஈடு பட்டிருந்த நேரம். குலசேகரபட்டினம் என்ற ஊரில் ஒரு இரவு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்ததால் நான் நேரடி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்து பேசிகொண்டிருந்தார். அப்போது ஒரு நபர்(பின்பு தெரிந்து கொண்ட உடன்குடி தாஹா) வந்து உங்களுக்குத் தெரிந்த ஒரு பெரியவர் கூப்பிடுகிறார் என்றார். உடனே அவர் யார் என்று பார்ப்பதிற்காக அவரிடம் சென்றேன். கூடத்தின் ஒரு மூலையில் பொன் நிறத்தில் தற்போதைய இஸ்ரேயில் பிரதமர் நத்னாயகு போன்று இருந்த பி.எஸ்.ஏ.வினை முதன் முதலில் பார்த்தேன்.,
என்னை எந்த ஊர் என்றுக் கேட்டார். நான் இளையான்குடி என்றதும் அடே நம்ம மாவட்டம் என்றதோடு மட்டுமல்லாமல் எங்கலூரைச்சர்ந்த அவரிடம் வேலைப் பார்த்த யாசின் அவர் தம்பி தெரியுமா என்று கேட்டார். நான் அவர்கள் என் வீட்டு அருகில் உள்ளவர்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மேடை அருகில் சென்று விட்டேன். கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ஒரு பக்கம் காரில் ஏறினர் மறு பக்கம் பி.எஸ்.ஏ. ஏறியது கண்டு ஆச்சரியப் பட்டேன். அவரை இரண்டாவதாக சந்திக்கும் வாய்ப்பு 1985 ஆம் ஆண்டு கிடைத்தது.
விருந்தோம்பலுக்கு முன்மாதிரி
1985 ஆம் வருடம் நான் ஏ.டி.எஸ்.பி யாக ஊட்டியில் பணியாற்றினேன். எனது அலுவல் காரணமாக சென்னை சென்றேன். வெள்ளி ஜும்மா தொழுவதிற்கு அண்ணா சாலையிலுள்ள மக்கா மஸ்ஜித் சென்றேன். தொழுது முடிந்ததும் வெளியே வரும்போது பி.எஸ்.ஏ. மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியிடம் பள்ளியினை புதுப்பிற்க ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எங்கே வந்தீர்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்த மெஜெஸ்டிக் கரீம் மற்றும் நிர்வாகத்தினரிடம் அறிமுகப் படுத்தி விட்டு காரில் ஏறுங்கள் என்று அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு வந்து சாப்பாடு வைக்கச் சொன்னார். கறி சாப்பாடு பரிமாரிகொண்டிருண்டபோது பிரிட்ஜில் உள்ள நேற்றைய மீன் குழம்பையும் சூடு பண்ணி வைக்கச் சொல்லி தானே எடுத்து வைத்தார்.
1996 ஆம் ஆண்டு நான் குடும்பத்துடன் டெல்லி சென்றபோதும், 1999 ஆம் ஆண்டு அலுவல் காரணமாக மக்கா, மதீனா சென்றபோது பி.எஸ்.ஏ சென்னையில் இல்லை. அவருடைய பி.ஏ. ஹசனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். எங்களுடைய பயணம் ஹசன் மூலம் அறிந்து தேவையான உதவிகளைச் அங்கெல்லாம் செய்தார்.
1999 ஆம் ஆண்டு அவருடைய கூடுவான்சேரியிலுள்ள பண்ணை வீட்டுக்கு அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ், அலாவுதீன் ஐ.ஏ.எஸ் மற்றும் என் குடும்பத்தினரை ஒரு நாள் அழைத்திருந்தார்கள்.நாங்கள் அங்கு சென்றோம். குழந்தைகளை கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மீன் தொட்டிகளை சுற்றிக் காட்டினார்கள். பின்பு எனது மகன்களை குதிரை சவாரி செய்யச் சொன்னார். அங்குள்ள சிறிய நீச்சல் குளத்தில் குளிப்போமா என்று அழைத்துக்கொண்டு சிறு பிள்ளைபோல் நீச்சலடித்தார். மதிய சாப்பாடு ஆண்களும் குழந்தைகளும் ஒரு இடத்திலும் பெண்கள் ஒரு இடத்திலும் சாப்பிடும் போது இடையில் எழுந்து பெண்கள் சாப்பிடும் இடத்திற்குச் சென்று அவர்களிடம் கூச்சல்லாமல் சாப்பிடுங்கள் என்றும் சொல்லி வந்தார். அங்கிருந்து நாங்கள் கிளம்பும் போது எவ்வளவு பெரிய மனிதர் குழந்தைகள் முதல் பெண்கள் வரை மிகவும் எளிமையாக அன்புடன் விருந்தோம்பல் செய்கின்றாரே என்று நாங்கள் வியப்படைந்தோம் . ஆகவே தான் சொன்னேன் அவர் விருந்தோம்பலுக்கும் முன்மாதரி என்று.
பிற்பட்டோர் கல்வித்தந்தை:
ஒருங்கிணைத்த இராமநாதபுர மாவட்டம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பபில் மிகவும் பின் தங்கியது. அதுவும் பெண் கல்வியில் மிக, மிக பின் தங்கியது. ஆகையால் கீழக்கரையில் பெண்களுக்கான கல்லூரியினை நிறுவினார். அது மட்டுமல்லாமல் மதுரை மட்டும் நாகூரில் கல்லூரிகள் வரக் காரண கர்த்தாவாக இருந்தார். அது மட்டுமல்லாமல் அனாதை சிறுவர்களுக்கான இல்லங்களை மதுரை, ஓட்டபிடாரம், சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவினார். என்னிடம் எப்போதும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும் என அடிக்கடி சொல்லுவார். தன்னிடம் கல்விக்காக உதவி கேட்டு வருபவர்களை வெறுங்கையோடு ஒருபோதும் அனுப்பியதில்லை என்று 3 உதாரணத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
1) இளையங்குடியில் கல்லூரி ஆரம்பிக்க காரண கர்த்தாவாக இருந்தவர்களில் நானும் ஒருவனாவேன். எனது உறவினரும் எங்களூர் கல்வித் தந்தையுமான அமீன் நைனார் ஹௌத் அவர்கள் பி.எஸ்.ஏ. அவார்களை 1971 ஆம் ஆண்டு சந்தித்து கல்லூரிக்கு உதவிக் கேட்டுள்ளார். பி.எஸ்.ஏ. எப்போதும் உதவி கேட்டு வரும் நபர்களை எடை போட தயங்க மாட்டார். பி.எஸ்.ஏ. அவர்கள் ஒரு சிறு தொகையினை சொல்லி அதுதான் தர முடியும் எனச் சொல்லி உள்ளார். உடனே நைனார் கோவித்துக்கொண்டு உங்க காசு எங்களுக்கு வேண்டாம் என்று கோபமாக சொல்லி விட்டு வெளியே செல்ல கதவு வரை சென்ற வரைக் கூப்பிட்டு சமாதானமாக என்னிடம் எவ்வளவு எதிர் பார்த்து வந்தீர்கள் என்று கேட்டு விட்டு நைனார் கேட்ட தொகையினை உடனே கொடுத்து அனுப்பியதாக நைனார் மட்டுமல்ல பி.எஸ்.ஏவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
2) 1999 ஆம் ஆண்டு இளையான்குடி கல்லூரிக்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்து அதன் நிர்வாகிகள் கல்லூரியில் ஒரு லேப் கட்ட தீர்மானித்து பி.எஸ்.ஏவினை அணுகலாம் என என்னிடம் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் வந்தார்கள். நான் மதியெம் ஒரு மணிக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களைக் கூட்டி கொண்டு புஹாரியா கட்டிடத்திற்குச் சென்றேன். பி.ஏ. ஹசன் 'சார், இப்போது பெரியார்கள் போர்டு மீடிங்கில் இருக்கிறார்கள், மீட்டிங் முடிந்ததும் அனைவருக்கும் இங்கேயே சாப்பாடு ஏற்ப்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆகவே இன்று சந்திப்பது முடியாது என்று சொல்லி விட்டார். நான் பிடிவாதமாக ஊரிலிருந்து பத்து பேர் வந்துள்ளார்கள் அவர்களை ஏமாற்றத்துடன் அனுப்ப முடியாது மறுத்து நாங்கள் மீட்டிங் முடியும் வரை நிற்கின்றோம், எங்களைப் பார்த்தால் சரி அல்லது போய் விடுகிறோம் என்றேன். மீட்டிங் சரியாக இரண்டரை மணிக்கு முடிந்தது. நான் மீட்டிங் அறைக்கு முன்னே நின்று கொண்டேன். பி.எஸ்.ஏவினைத் தொடர்ந்து அனைவரும் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என்ன போலீஸ் காரர் வந்திருக்கார் கூட்டத்தோட நம்மை கைது செய்ய வந்திருக்கிறார என்று சொல்ல கேலியாக அனைவரும் சிரித்து விட்டார்கள் . பின்பு எ
ன்ன விஷயம், நாங்கள் சாப்பிடப் போறோமே என்றுக் கேட்டார். நான் உங்களை கல்லூரி நிர்வாகிகள் மரியாதை நிமித்தம் பார்க்க வேண்டும் ஒரு நிமிடம் தாங்கள் என்றேன். அவரும் சரியென்று அறைக்குள் அழைத்துச் சென்றார். உடனே இதுதான் சமயம் என்று பி.எஸ்.ஏவிடம் லேப் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றோம். அவரும் விபரம் கேட்டு விட்டு சரி என்று சொன்னதோடு அல்லாமல் கட்டியும் கொடுத்தார்.
3) என் இரண்டு மகன்களான பைசல் மற்றும் சதக்கத்துல்லாஹ்விற்கு பி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கொடுத்ததினால் இன்று அவர்கள் இன்ஜிநீர்களாக அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்கள்.
வண்டலூரில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரி மூலம் பயன் பெற்று நல்ல வேளையில் இருக்கும் பலரை நான் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் சென்றபோது நேரில் கண்டேன். அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய பி.எஸ்.ஏ.வின் முயற்சியினை அவர்கள் வாயார புகழக் கேட்டுள்ளேன். ஆகவேதான் பி.எஸ்.ஏ. பிற்பட்டோர் கல்வித் தந்தை என்றேன்.
சமூக சிந்தனை சிற்பி:
இஸ்லாமிய சமுதாயம் பொருளாதரத்தில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்லிகொண்டிருப்பர்கள். அந்த சிந்தனையில் உதித்தது தான் யுனைட்டடு எகோநோமிக் பாரம். அதில் உறுப்பினர்களாக ஒத்தக் கருத்துடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழலகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து முஸ்லிம் ஊர்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்தார்கள். பி.எஸ்.ஏ. சிந்தனையில் முஸ்லிம்களுக்கென்ற தனி பத்திரிக்கை, தொலைக்காட்சி வேண்டும் என்றார். அவருடைய சிந்தனையில் உதித்தது தான் இன்று காணப்படும் பல பத்திரிக்கைகள் மற்றும் மூன் தொலைக்காட்சி என்றால் மிகையாகாது.
சமுதாயக் காவலர்:
பி.எஸ்.ஏ. எப்படி சமுதாயக் காவலர் என்று ஒரு உண்மை நிகழ்ச்சியினைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன். 1983 திருசெந்தூர் சட்டமன்ற உப தேர்தலில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.ஏ. வந்திருந்தார் என முன்பு சுட்டிக் கட்டினேன். ஒரு இரவு காயல்பட்டினத்தில் எம்.ஜி.ஆர் பேசுவதாக இருந்தது. அங்கே உள்ள சுல்தான் ஹாஜியார் வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு தனது வாகனத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு புறப்படும் முன்பு காயல் மௌலான என்ற கட்சிக் காரர் நீங்கள் தெருக்கள் வழியாக வந்தால் பெண்கள் உங்களைப் பார்க்க ஏதுவாகும் என்றதும் எம்.ஜி.ஆறும் போலிசுக்கு முன் அறிவிப்பின்றி வாகனத்தினை குறுகிய சந்துக்களில் விடச் சொல்லி விட்டார். ஆனால் ஒரு சவுக்கையில் டி.எம்.கே. கூட்டத்தில் அப்துல் சமது, சுப்புலட்சுமி ஆகியோர் அமர்திருன்தனர். எம்.ஜி.ஆர். வாகனம் வருவது அறிந்து டி.எம்.கே. தொண்டர்கள் கல்லெறிய ஆரம்பித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர். வாகனத்தில் கல்லும் விழுந்து விட்டது. உடனே எம்.ஜி.ஆர். தனது வண்டியினை பின் நோக்கி எடுக்கச் சொல்லி பொதுக்கூட்ட மேடைக்கு வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வாகனத்தில் கல் விழுந்ததும் ஏ.டி.எம்.கே. தொண்டர்கள் கொதித்தெழுந்து விட
்டார்கள். நிலைமையினை அறிந்து பி.எஸ். ஏ. மேடையில் ஏறி சிலர் தெரியாமல் கல் வீசியதிர்க்காக எம்.ஜி.ஆரிடம் மன்னிப்புக் கேட்பதாக பகிங்கரமாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆர் மைக்கினைப் பிடித்து முஸ்லிம்களைக் காப்பது நமது அரசாங்கத்தின் கடமை ஆகவே ஒரு சிலர் செய்த தப்பிர்க்காக முஸ்லிம் மக்களுக்கு தொண்டர்களால் எந்த தீங்கும் நான் சென்ற பின்பு ஏற்படாது என்று பி.எஸ்.ஏவிடம் உறுதி கூறுகிறேன் என்று தொண்டர்களை அமைதிப் படுத்தினார். இல்லையென்றால் பெரும்பாலான ஆண்கள் வெளி நாட்டில் இருக்கும் பொது பெண்கள் மட்டும் இருக்கும் காயல்பட்டினத்தில் அன்று கலவரம் எற்பட்டிரும். அதனை என்னுடைய, 'காக்கிச் சட்டைப் பேசுகிறது' என்ற புத்தகத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
இன்னலிலும் இன்முகம் காட்டுபவர்:
பி.எஸ்.ஏவின் வெற்றிக்குப் பின்னணி ஆங்கில எழுத்தாளர் டேல் கார்நேஜ் எழுதிய 'ஹௌ டு வின் பிரெண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுவன்ஸ் தி பியுப்பில்' என்ற புத்தகத்தில் வெற்றிக்குப் பின்நெனி முகத்தில் புன்னகையும் மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இன்றி பழகுவதுதான் என்று சொல்லி உள்ளார். அது பி.எஸ்.ஏக்கு நூறு விதத்தில் பொருந்தும். டிரைவரிலிருந்து பெரிய அதிகாரி வரை அவர் பேச்சில் மயங்கி விடுவார்கள். அதே நேரத்தில் துன்பத்திலும் மனம் தளராதவர் என்பதினை பி.எஸ்.ஏ துணைவியார் இறந்தபோது பார்த்தேன். துக்கம் விசாரிக்க வந்த ஆண் பெண் அத்தனை பேர்களிடமும் சக்கர நார்க்காலியில் உட்கார்ந்து கொண்டு நலம் விசாரித்தார். அது சஞ்சய் காந்தி இறந்ததும் பிரதமர் இந்திரா காந்தி துக்கம் கேட்க வந்த பிரமுகர்களை வரவேற்றது போல இருந்தது.
என் மகன் சதக்கத்துல்லாஹ் திருமண அழைப்பிதழ் 2007 இல் கொடுக்கும்போது படுக்கையில் இருந்தார் பி.எஸ்.ஏ.பத்திரிகையினை வாங்கி படித்துப் பார்த்து விட்டு டி கொடுக்கச்சொல்லி அனுப்பினார். திருமணம் ஹோட்டல் மெரினாவில் இரவில் நடந்தது. நான் நிக்கா மேடையில் இருந்தபோது என் உறவினர் ஓடி வந்து பி.எஸ்.ஏ சக்கர நாற்காலியிலும் அவர் துணைவியாரும் வருகிறார் என்றார். எனக்கு மட்டுமல்லாது அங்கு வந்திருந்த அனைவருக்கும் சந்தோசதினைத் தந்தது. இவ்வளவிற்கும் நான் அப்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதோடு அல்லாமல் விருந்தும் சாப்பிட்டுச் சென்றார்கள். இதனை எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் முடியாத நிலையிலும் தனக்குப் பிடித்தவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்த தெரிந்தவர் அத்தனை பேர்களிடமும் பேசி மகிழ்ந்தார்கள்.
என்னிடம் என் மகன்களில் யார் என்னைப் போல் வருவார்கள் என்று பி.எஸ்.ஏ ஒரு சமயம் கேட்டார்கள். அதற்கு நான் நீங்கள் பெற்றது அனைத்தும் நன் முத்க்கள் அதில் தரம் பிரிக்கும் தகுதி என்னிடம் இல்லையென்றேன். அதுக் கேட்டு வாய் விட்டு சிரித்து விட்டார்கள் பி.எஸ்.ஏ. நான் அவரிடம் நீங்கள் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்றேன். அதற்கு பி.எஸ்.ஏ. அது அல்லா கையிலல்லவா இருக்கிறது என்றார். இந்த தருணத்தில் சமுதாயத்திற்காக உழைத்த பி.எஸ்.ஏ நல்ல உடல் சுகத்துடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வினை வேண்டும் அனைவருடனும் நானும் சேர்ந்து துவாக் கேட்டு விடை பெறுகிறேன்.
இணைந்த இராமநாதபுரம் மாவட்டம் கடற்க்கரை ஓரம் கீழக்கரையில் பிறந்து திரைகடல் ஓடி திரவியம் சேர்த்து எண்ணற்ற முஸ்லிம்கள் மட்டுமல்லாது பிற சமூகத்தினருக்கும் வேலைவாய்ப்பினை தந்து அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்துள்ள ஒளிவிளக்கு அவர்.
எங்கள் ஊர் இளையான்குடி மக்கள் பி.எஸ்.ஏ. கம்பெனியால் பயன் பெற்று வசதி வாய்ப்புடன் வாழ்கின்றதினை நான் கண்கூடாக காண்கிறேன்.
பி.எஸ்.ஏ.வினை நேரில் பார்க்கும் வாய்ப்பு 1946 ஆம் ஆண்டு பிறந்த எனக்கு 1983 இல் கிடைத்தது. அப்போது நான் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பீ. ஆகா பணியாற்றினேன். திருசெந்தூர் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவித்து அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் சூடு பறக்க ஈடு பட்டிருந்த நேரம். குலசேகரபட்டினம் என்ற ஊரில் ஒரு இரவு தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பேசுவதாக இருந்ததால் நான் நேரடி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தேன். எம்.ஜி.ஆர். மேடைக்கு வந்து பேசிகொண்டிருந்தார். அப்போது ஒரு நபர்(பின்பு தெரிந்து கொண்ட உடன்குடி தாஹா) வந்து உங்களுக்குத் தெரிந்த ஒரு பெரியவர் கூப்பிடுகிறார் என்றார். உடனே அவர் யார் என்று பார்ப்பதிற்காக அவரிடம் சென்றேன். கூடத்தின் ஒரு மூலையில் பொன் நிறத்தில் தற்போதைய இஸ்ரேயில் பிரதமர் நத்னாயகு போன்று இருந்த பி.எஸ்.ஏ.வினை முதன் முதலில் பார்த்தேன்.,
என்னை எந்த ஊர் என்றுக் கேட்டார். நான் இளையான்குடி என்றதும் அடே நம்ம மாவட்டம் என்றதோடு மட்டுமல்லாமல் எங்கலூரைச்சர்ந்த அவரிடம் வேலைப் பார்த்த யாசின் அவர் தம்பி தெரியுமா என்று கேட்டார். நான் அவர்கள் என் வீட்டு அருகில் உள்ளவர்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மேடை அருகில் சென்று விட்டேன். கூட்டம் முடிந்ததும் எம்.ஜி.ஆர். ஒரு பக்கம் காரில் ஏறினர் மறு பக்கம் பி.எஸ்.ஏ. ஏறியது கண்டு ஆச்சரியப் பட்டேன். அவரை இரண்டாவதாக சந்திக்கும் வாய்ப்பு 1985 ஆம் ஆண்டு கிடைத்தது.
விருந்தோம்பலுக்கு முன்மாதிரி
1985 ஆம் வருடம் நான் ஏ.டி.எஸ்.பி யாக ஊட்டியில் பணியாற்றினேன். எனது அலுவல் காரணமாக சென்னை சென்றேன். வெள்ளி ஜும்மா தொழுவதிற்கு அண்ணா சாலையிலுள்ள மக்கா மஸ்ஜித் சென்றேன். தொழுது முடிந்ததும் வெளியே வரும்போது பி.எஸ்.ஏ. மஸ்ஜித் நிர்வாகக் கமிட்டியிடம் பள்ளியினை புதுப்பிற்க ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் எங்கே வந்தீர்கள் என்று கேட்டுவிட்டு அங்கிருந்த மெஜெஸ்டிக் கரீம் மற்றும் நிர்வாகத்தினரிடம் அறிமுகப் படுத்தி விட்டு காரில் ஏறுங்கள் என்று அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர் வீட்டுக்கு வந்து சாப்பாடு வைக்கச் சொன்னார். கறி சாப்பாடு பரிமாரிகொண்டிருண்டபோது பிரிட்ஜில் உள்ள நேற்றைய மீன் குழம்பையும் சூடு பண்ணி வைக்கச் சொல்லி தானே எடுத்து வைத்தார்.
1996 ஆம் ஆண்டு நான் குடும்பத்துடன் டெல்லி சென்றபோதும், 1999 ஆம் ஆண்டு அலுவல் காரணமாக மக்கா, மதீனா சென்றபோது பி.எஸ்.ஏ சென்னையில் இல்லை. அவருடைய பி.ஏ. ஹசனிடம் சொல்லி விட்டுச் சென்றேன். எங்களுடைய பயணம் ஹசன் மூலம் அறிந்து தேவையான உதவிகளைச் அங்கெல்லாம் செய்தார்.
1999 ஆம் ஆண்டு அவருடைய கூடுவான்சேரியிலுள்ள பண்ணை வீட்டுக்கு அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ், அலாவுதீன் ஐ.ஏ.எஸ் மற்றும் என் குடும்பத்தினரை ஒரு நாள் அழைத்திருந்தார்கள்.நாங்கள் அங்கு சென்றோம். குழந்தைகளை கோழிப் பண்ணை, ஆட்டுப் பண்ணை, மீன் தொட்டிகளை சுற்றிக் காட்டினார்கள். பின்பு எனது மகன்களை குதிரை சவாரி செய்யச் சொன்னார். அங்குள்ள சிறிய நீச்சல் குளத்தில் குளிப்போமா என்று அழைத்துக்கொண்டு சிறு பிள்ளைபோல் நீச்சலடித்தார். மதிய சாப்பாடு ஆண்களும் குழந்தைகளும் ஒரு இடத்திலும் பெண்கள் ஒரு இடத்திலும் சாப்பிடும் போது இடையில் எழுந்து பெண்கள் சாப்பிடும் இடத்திற்குச் சென்று அவர்களிடம் கூச்சல்லாமல் சாப்பிடுங்கள் என்றும் சொல்லி வந்தார். அங்கிருந்து நாங்கள் கிளம்பும் போது எவ்வளவு பெரிய மனிதர் குழந்தைகள் முதல் பெண்கள் வரை மிகவும் எளிமையாக அன்புடன் விருந்தோம்பல் செய்கின்றாரே என்று நாங்கள் வியப்படைந்தோம் . ஆகவே தான் சொன்னேன் அவர் விருந்தோம்பலுக்கும் முன்மாதரி என்று.
பிற்பட்டோர் கல்வித்தந்தை:
ஒருங்கிணைத்த இராமநாதபுர மாவட்டம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பபில் மிகவும் பின் தங்கியது. அதுவும் பெண் கல்வியில் மிக, மிக பின் தங்கியது. ஆகையால் கீழக்கரையில் பெண்களுக்கான கல்லூரியினை நிறுவினார். அது மட்டுமல்லாமல் மதுரை மட்டும் நாகூரில் கல்லூரிகள் வரக் காரண கர்த்தாவாக இருந்தார். அது மட்டுமல்லாமல் அனாதை சிறுவர்களுக்கான இல்லங்களை மதுரை, ஓட்டபிடாரம், சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் நிறுவினார். என்னிடம் எப்போதும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேற வேண்டும் என அடிக்கடி சொல்லுவார். தன்னிடம் கல்விக்காக உதவி கேட்டு வருபவர்களை வெறுங்கையோடு ஒருபோதும் அனுப்பியதில்லை என்று 3 உதாரணத்தினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
1) இளையங்குடியில் கல்லூரி ஆரம்பிக்க காரண கர்த்தாவாக இருந்தவர்களில் நானும் ஒருவனாவேன். எனது உறவினரும் எங்களூர் கல்வித் தந்தையுமான அமீன் நைனார் ஹௌத் அவர்கள் பி.எஸ்.ஏ. அவார்களை 1971 ஆம் ஆண்டு சந்தித்து கல்லூரிக்கு உதவிக் கேட்டுள்ளார். பி.எஸ்.ஏ. எப்போதும் உதவி கேட்டு வரும் நபர்களை எடை போட தயங்க மாட்டார். பி.எஸ்.ஏ. அவர்கள் ஒரு சிறு தொகையினை சொல்லி அதுதான் தர முடியும் எனச் சொல்லி உள்ளார். உடனே நைனார் கோவித்துக்கொண்டு உங்க காசு எங்களுக்கு வேண்டாம் என்று கோபமாக சொல்லி விட்டு வெளியே செல்ல கதவு வரை சென்ற வரைக் கூப்பிட்டு சமாதானமாக என்னிடம் எவ்வளவு எதிர் பார்த்து வந்தீர்கள் என்று கேட்டு விட்டு நைனார் கேட்ட தொகையினை உடனே கொடுத்து அனுப்பியதாக நைனார் மட்டுமல்ல பி.எஸ்.ஏவும் சொல்லக் கேட்டுள்ளேன்.
2) 1999 ஆம் ஆண்டு இளையான்குடி கல்லூரிக்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுத்து அதன் நிர்வாகிகள் கல்லூரியில் ஒரு லேப் கட்ட தீர்மானித்து பி.எஸ்.ஏவினை அணுகலாம் என என்னிடம் செயலாளர் அப்துல் கரீம் தலைமையில் வந்தார்கள். நான் மதியெம் ஒரு மணிக்கு எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் அவர்களைக் கூட்டி கொண்டு புஹாரியா கட்டிடத்திற்குச் சென்றேன். பி.ஏ. ஹசன் 'சார், இப்போது பெரியார்கள் போர்டு மீடிங்கில் இருக்கிறார்கள், மீட்டிங் முடிந்ததும் அனைவருக்கும் இங்கேயே சாப்பாடு ஏற்ப்பாடு செய்யப் பட்டுள்ளது. ஆகவே இன்று சந்திப்பது முடியாது என்று சொல்லி விட்டார். நான் பிடிவாதமாக ஊரிலிருந்து பத்து பேர் வந்துள்ளார்கள் அவர்களை ஏமாற்றத்துடன் அனுப்ப முடியாது மறுத்து நாங்கள் மீட்டிங் முடியும் வரை நிற்கின்றோம், எங்களைப் பார்த்தால் சரி அல்லது போய் விடுகிறோம் என்றேன். மீட்டிங் சரியாக இரண்டரை மணிக்கு முடிந்தது. நான் மீட்டிங் அறைக்கு முன்னே நின்று கொண்டேன். பி.எஸ்.ஏவினைத் தொடர்ந்து அனைவரும் வந்தார்கள். என்னைப் பார்த்ததும் என்ன போலீஸ் காரர் வந்திருக்கார் கூட்டத்தோட நம்மை கைது செய்ய வந்திருக்கிறார என்று சொல்ல கேலியாக அனைவரும் சிரித்து விட்டார்கள் . பின்பு எ
ன்ன விஷயம், நாங்கள் சாப்பிடப் போறோமே என்றுக் கேட்டார். நான் உங்களை கல்லூரி நிர்வாகிகள் மரியாதை நிமித்தம் பார்க்க வேண்டும் ஒரு நிமிடம் தாங்கள் என்றேன். அவரும் சரியென்று அறைக்குள் அழைத்துச் சென்றார். உடனே இதுதான் சமயம் என்று பி.எஸ்.ஏவிடம் லேப் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றோம். அவரும் விபரம் கேட்டு விட்டு சரி என்று சொன்னதோடு அல்லாமல் கட்டியும் கொடுத்தார்.
3) என் இரண்டு மகன்களான பைசல் மற்றும் சதக்கத்துல்லாஹ்விற்கு பி.எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் இலவசமாக இடம் கொடுத்ததினால் இன்று அவர்கள் இன்ஜிநீர்களாக அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார்கள்.
வண்டலூரில் உள்ள கிரசென்ட் பொறியியல் கல்லூரி மூலம் பயன் பெற்று நல்ல வேளையில் இருக்கும் பலரை நான் அமேரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் சென்றபோது நேரில் கண்டேன். அவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய பி.எஸ்.ஏ.வின் முயற்சியினை அவர்கள் வாயார புகழக் கேட்டுள்ளேன். ஆகவேதான் பி.எஸ்.ஏ. பிற்பட்டோர் கல்வித் தந்தை என்றேன்.
சமூக சிந்தனை சிற்பி:
இஸ்லாமிய சமுதாயம் பொருளாதரத்தில் முன்னேற வேண்டும் என்று அடிக்கடி சொல்லிகொண்டிருப்பர்கள். அந்த சிந்தனையில் உதித்தது தான் யுனைட்டடு எகோநோமிக் பாரம். அதில் உறுப்பினர்களாக ஒத்தக் கருத்துடையவர்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழலகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து முஸ்லிம் ஊர்களுக்கு வேண்டிய பொருளுதவி செய்தார்கள். பி.எஸ்.ஏ. சிந்தனையில் முஸ்லிம்களுக்கென்ற தனி பத்திரிக்கை, தொலைக்காட்சி வேண்டும் என்றார். அவருடைய சிந்தனையில் உதித்தது தான் இன்று காணப்படும் பல பத்திரிக்கைகள் மற்றும் மூன் தொலைக்காட்சி என்றால் மிகையாகாது.
சமுதாயக் காவலர்:
பி.எஸ்.ஏ. எப்படி சமுதாயக் காவலர் என்று ஒரு உண்மை நிகழ்ச்சியினைக் கொண்டு விளக்கலாம் என நினைக்கின்றேன். 1983 திருசெந்தூர் சட்டமன்ற உப தேர்தலில் எம்.ஜி.ஆருடன் பி.எஸ்.ஏ. வந்திருந்தார் என முன்பு சுட்டிக் கட்டினேன். ஒரு இரவு காயல்பட்டினத்தில் எம்.ஜி.ஆர் பேசுவதாக இருந்தது. அங்கே உள்ள சுல்தான் ஹாஜியார் வீட்டில் இரவு விருந்து சாப்பிட்டு விட்டு தனது வாகனத்தில் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு புறப்படும் முன்பு காயல் மௌலான என்ற கட்சிக் காரர் நீங்கள் தெருக்கள் வழியாக வந்தால் பெண்கள் உங்களைப் பார்க்க ஏதுவாகும் என்றதும் எம்.ஜி.ஆறும் போலிசுக்கு முன் அறிவிப்பின்றி வாகனத்தினை குறுகிய சந்துக்களில் விடச் சொல்லி விட்டார். ஆனால் ஒரு சவுக்கையில் டி.எம்.கே. கூட்டத்தில் அப்துல் சமது, சுப்புலட்சுமி ஆகியோர் அமர்திருன்தனர். எம்.ஜி.ஆர். வாகனம் வருவது அறிந்து டி.எம்.கே. தொண்டர்கள் கல்லெறிய ஆரம்பித்து விட்டார்கள். எம்.ஜி.ஆர். வாகனத்தில் கல்லும் விழுந்து விட்டது. உடனே எம்.ஜி.ஆர். தனது வண்டியினை பின் நோக்கி எடுக்கச் சொல்லி பொதுக்கூட்ட மேடைக்கு வந்து விட்டார். எம்.ஜி.ஆர் வாகனத்தில் கல் விழுந்ததும் ஏ.டி.எம்.கே. தொண்டர்கள் கொதித்தெழுந்து விட
்டார்கள். நிலைமையினை அறிந்து பி.எஸ். ஏ. மேடையில் ஏறி சிலர் தெரியாமல் கல் வீசியதிர்க்காக எம்.ஜி.ஆரிடம் மன்னிப்புக் கேட்பதாக பகிங்கரமாக அறிவித்தார். உடனே எம்.ஜி.ஆர் மைக்கினைப் பிடித்து முஸ்லிம்களைக் காப்பது நமது அரசாங்கத்தின் கடமை ஆகவே ஒரு சிலர் செய்த தப்பிர்க்காக முஸ்லிம் மக்களுக்கு தொண்டர்களால் எந்த தீங்கும் நான் சென்ற பின்பு ஏற்படாது என்று பி.எஸ்.ஏவிடம் உறுதி கூறுகிறேன் என்று தொண்டர்களை அமைதிப் படுத்தினார். இல்லையென்றால் பெரும்பாலான ஆண்கள் வெளி நாட்டில் இருக்கும் பொது பெண்கள் மட்டும் இருக்கும் காயல்பட்டினத்தில் அன்று கலவரம் எற்பட்டிரும். அதனை என்னுடைய, 'காக்கிச் சட்டைப் பேசுகிறது' என்ற புத்தகத்தில் சுட்டிக் காட்டியுள்ளேன்.
இன்னலிலும் இன்முகம் காட்டுபவர்:
பி.எஸ்.ஏவின் வெற்றிக்குப் பின்னணி ஆங்கில எழுத்தாளர் டேல் கார்நேஜ் எழுதிய 'ஹௌ டு வின் பிரெண்ட்ஸ் அண்ட் இன்ப்ளுவன்ஸ் தி பியுப்பில்' என்ற புத்தகத்தில் வெற்றிக்குப் பின்நெனி முகத்தில் புன்னகையும் மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இன்றி பழகுவதுதான் என்று சொல்லி உள்ளார். அது பி.எஸ்.ஏக்கு நூறு விதத்தில் பொருந்தும். டிரைவரிலிருந்து பெரிய அதிகாரி வரை அவர் பேச்சில் மயங்கி விடுவார்கள். அதே நேரத்தில் துன்பத்திலும் மனம் தளராதவர் என்பதினை பி.எஸ்.ஏ துணைவியார் இறந்தபோது பார்த்தேன். துக்கம் விசாரிக்க வந்த ஆண் பெண் அத்தனை பேர்களிடமும் சக்கர நார்க்காலியில் உட்கார்ந்து கொண்டு நலம் விசாரித்தார். அது சஞ்சய் காந்தி இறந்ததும் பிரதமர் இந்திரா காந்தி துக்கம் கேட்க வந்த பிரமுகர்களை வரவேற்றது போல இருந்தது.
என் மகன் சதக்கத்துல்லாஹ் திருமண அழைப்பிதழ் 2007 இல் கொடுக்கும்போது படுக்கையில் இருந்தார் பி.எஸ்.ஏ.பத்திரிகையினை வாங்கி படித்துப் பார்த்து விட்டு டி கொடுக்கச்சொல்லி அனுப்பினார். திருமணம் ஹோட்டல் மெரினாவில் இரவில் நடந்தது. நான் நிக்கா மேடையில் இருந்தபோது என் உறவினர் ஓடி வந்து பி.எஸ்.ஏ சக்கர நாற்காலியிலும் அவர் துணைவியாரும் வருகிறார் என்றார். எனக்கு மட்டுமல்லாது அங்கு வந்திருந்த அனைவருக்கும் சந்தோசதினைத் தந்தது. இவ்வளவிற்கும் நான் அப்போது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன். அதோடு அல்லாமல் விருந்தும் சாப்பிட்டுச் சென்றார்கள். இதனை எதற்கு இங்கே குறிப்பிடுகிறேன் என்றால் முடியாத நிலையிலும் தனக்குப் பிடித்தவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்த தெரிந்தவர் அத்தனை பேர்களிடமும் பேசி மகிழ்ந்தார்கள்.
என்னிடம் என் மகன்களில் யார் என்னைப் போல் வருவார்கள் என்று பி.எஸ்.ஏ ஒரு சமயம் கேட்டார்கள். அதற்கு நான் நீங்கள் பெற்றது அனைத்தும் நன் முத்க்கள் அதில் தரம் பிரிக்கும் தகுதி என்னிடம் இல்லையென்றேன். அதுக் கேட்டு வாய் விட்டு சிரித்து விட்டார்கள் பி.எஸ்.ஏ. நான் அவரிடம் நீங்கள் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்து இந்த சமுதாயத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்றேன். அதற்கு பி.எஸ்.ஏ. அது அல்லா கையிலல்லவா இருக்கிறது என்றார். இந்த தருணத்தில் சமுதாயத்திற்காக உழைத்த பி.எஸ்.ஏ நல்ல உடல் சுகத்துடன் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வினை வேண்டும் அனைவருடனும் நானும் சேர்ந்து துவாக் கேட்டு விடை பெறுகிறேன்.
Friday, 16 September 2011
இரு ரத யாத்திரை-ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்? (டாக்டர் ஏ.பீ. முஹம்மத் அலி, ஐ.பீ.ஏஎஸ்(ஓ)
சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும். உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து சில தினங்களாக பரபரப்பாக பேசப்படும் செய்தி ரத யாத்திரை. அது என்ன ரத யாத்திரை என்று உங்களுக்கு கேட்க தோணும். சங்க காலத்தில் மன்னர்கள் தாங்கள் சொகுசாக சுற்றுபயணத்தின் போது மரத்தால் செய்யப்பட அலங்கரிக்கப்பட்ட வண்டியினை குதுரைகள் கொண்டு இழுக்கச் செய்யும் வாகனமே ரத யாத்திரையாகும். உடனே "ஆமாம் இப்போதுதான் சக்கர வண்டிகள் எல்லாம் மறைந்து பெட்ரோலியம் ப்ரோடக்ட்டுகள் உபயோகித்து வேகமாக செல்லும்
மோட்டார் வாகனங்கள் இருக்கும்போது இது என்ன புதுக்கதை" என்று கேட்கத்தோணும். ஆமாம் எதிகை மோனை இல்லாத புதுகவிதைபோல இதுவும் காவிச்சட்டை தலைவர்கள் கண்டுபிடித்த புதுகதைதான்.
1990ஆம் ஆண்டில் காவிச் சட்டை தலைவர்களால் பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட துவங்கப்பட்ட ஏர் கண்டிஷன் பொருத்தப்பட்ட சொஹுசு வாகன யாதிரைதான் ரத யாத்திரையாகும்.அயோத்தியில் பாபரி மஸ்ஜிதும் 1992 இல் இடிதாச்சு, அதன் பின்பு மத்தியில் அரியணையிலும் 1996 ஆம் ஆண்டு ஏறியாச்சு. அதன் பின்பு 2002 இல் கோத்ர ரயிலில் தீ பிடித்ததும் மனித வேட்டையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொன்று குவித்தாச்சு . அப்போதெல்லாம் ரத யாத்திரிகைக்கு வேலையில்லை என நினைத்திப்பிருப்பர்கள் போல இந்த புது காந்தி குள்ள வாதிகள்.குஜராத்தில் போலி என்கவுண்டர் என்ற பெயரில் சொஹ்ரபுட்டின் அவரது மனைவி கவுசர் பீ மற்றும் இஷராத் ஜஹான் போன்ற முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட போது ஹஜாரே என்ன செய்து கொண்டிருந்தார் என்று நாடு நிலையாளர்கள் கேள்வி எழுப்பாமளிலையே!கோத்ரா சம்பவத்திற்கு பின்பு கொல்லப்பட்ட எண்ணற்ற முஸ்லிம்கள் பற்றி விசாரணை நடத்த இப்போது ஹசாரே அணியில் உள்ள பிரபல வக்கீல்கள் சாந்தி பூசனும் அவர் அருமை மகனுமான பிரசாந்த் பூசன் நீதி விசாரணைக் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தொடுக்கவில்லியே அது ஏன்? ஆனால் மனத் துணிச்சல் உள்ள பெண் வழக்கறிஞர் ச்டீல்வாத் மட்டும் வழக்குத் தொடர்ந்தாரே அது எப்படி என்று பலர் கேட்காமளில்லையே!பல தொண்டு நிறுவனங்களின் நிர்வாகியான ஹசாரே அணியின் கேஜ்ராவாளுக்கு வெளிநாட்டிலுருந்து பெறப்பட்ட பணம் எவ்வளவு என்றோ அல்லது கிரேன்பேடி, கேஜ்ராவால் மற்றும் பூசன் குடும்பச் சொத்தை இதுவரை அறிவிக்கவில்லையே அது ஏன்? அது போன்ற கேள்வி எழக்கரணம் சாந்தி பூசன் முன்னாள் ஜன சங் மத்திய அமைச்சராக இருந்தவர். கிரேன் பேடியும் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அதுபோன்று ஹசறேவும் இதுவரை தனது சொத்து பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றே சொள்ளபடுகிறேதே! மத்திய பிரதேச மாநிலத்தில் ப.ஜ.க. தலைவர் ஒருவருக்கு 300 அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வந்ததே ஏன் அங்கே சென்று ஹசாரே அணி ஆர்பாட்டம் செய்யவில்லை? அது மட்டுமா அந்த மாநிலத்தில் உள்ள முதல்வர் பற்றி செய்தி வெளியிட்ட பெண் நிருபர் ஷீலா மசூது என்பவர் சுட்டுக் கொல்லபட்டரே ஏன் அங்கே சென்று ஆர்ப்பாட்டம் ஹசாரே அணி செய்யவில்லை?
சரி பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி மறுபடியும் ஒரு ரத யாத்திரை என்று கூறியிருக்கிறரே அது ஏன் என்று பாமர மக்கள் கேட்காமலில்லையே! அது தான் காவி உடை நாணயத்தின் மறு பக்கம். கர்நாடகாவில் முதலில் எட்டியூரப்பவிற்கு எதிராக அமைச்சர் ஜனார்தன ரெட்டி மற்றும் அவர் சகோதரர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொது எட்டியூரப்பாவினை ஏன் ப.ஜ.க பதவி நீக்கம் செய்யவில்லை? எட்டியூரப்பவினை தொடர்ந்து ஜனார்தன ரெட்டியினை சி.பி.ஐ. கைது செய்த உடன் ஏன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்று பொது மக்கள் கேட்கவில்லையா? பாராளு மன்றத்தில் ஆயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்துக் காட்டிய ப.ஜ.க. முன்னால் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனரே அதற்கு அத்வானியின் பதில் இது வரை சொல்லவில்லையே? அது ஏன் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைதானே!
முன்னால் ப.ஜ.க. தலைவர் பங்காரு லக்ஷ்மணன் கையூட்டுப் பெறும்போது ஒரு டி.வீ. சேனல் படம் போட்டு காட்டியதே அப்போது அவரை கட்சியிலிருந்து ப.ஜ.க. நீக்கியதா இல்லையே? இப்போது கூட டூ ஜி ஊழலில் அருண்குமார் மற்றும் அருண் சோரி பெயர்கள் அடிபடுகிறேதே அவர்களை கட்சி நீக்கியதா, இல்லையே! ஒடிசா மாநிலத்தில் ராஜ்ய சபா தேர்தலில் ஆளும் பி.ஜே.டி கட்சியுடன் சேர்ந்து பணம் கொடுத்து வெற்றி பெட்டதாக கூறப்படுகிறதே அப்படி பணம் வாங்கிய பி.ஜே.பே. எம்.எல்.ஏக்கள் கட்சியினை விட்டு நீகப்பட்டனரா, இல்லையே!மத்திய பிரதேச ப.ஜ.க. அரசு அரசின் 300 ஏக்கர் நிலத்தினை அந்த மாநில ப.ஜ.க தலைவர் நடத்தும் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததாக ஊடகங்கள் சொன்னதே அப்போது ஏன் எந்த யாத்திரையும் நடத்தவில்லை?
ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம் தான் மிக சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநித்துவ சபை. அந்த சபை உறுப்பினர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததால் ஹஜாரேயின் அணியினரான பிரசாந்த் பூசன், கிரேன் பேடி மற்றும் கேஜ்ராவால் போன்றோருக்கு உரிமை மீறல் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அது எப்படி தவறாகும்? ஒரு நாட்டுக்கொடி மேல்நோக்கிதான் பறக்க விட வேண்டும். ஆனால் கிரேன் பேடி முன்னால் காவல் துறை அதிகாரி. அவர் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும்போது தேசியக்கொடியினை பெரிய கம்பில் கட்டி கீழ் நோக்கி வீசுவதினை அனைவரும் தொலைகாட்சியில் பார்த்திருக்கலாம். அதனை எப்படி சரி என்று சொல்லாம்? சில ஆயிரம் பேர்களை கூட்டி அவர்களுக்கு சாதகமான காரியம் சாதிக்க நினைத்தால், 15 சதவீத மக்கள் உள்ள முஸ்லிம்கள் பத்து சதவீத ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதிக்கீடு செய்ய நீதிபதி ரங்கநாத மிஸ்ரா சொல்லியபடி கொடுங்கள் என்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை? காரணம் அந்த தலைவர்களிடையே ஒற்றுமை இல்லையே?
ஹசாரே என்ன நாட்டின் சுதந்தர வீரரா? இல்லையே? ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்று ஊடகங்கள் சொல்கின்றன. அத்வானி நாட்டின் சுதந்திர போராட்ட வீரரா? அவர்களுக்கு ஏன் அந்த முக்கியத்துவம்? 1965 ஆம் ஆண்டு ராணுவத்தில் ஹசாரே போன்று முன்னால் எஸ்.பீ. முஹம்மது இக்பாலும் இருந்து நாட்டுக்காக போராடினார். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் விடுதலை புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்தார். அவரை எந்த அரசும் ஞாபகப் படுத்துகிறதா, இல்லையே! ஏன் இந்த பாரபட்சம்?
ஹசாரே என்ன பேட்டை முதலாளி காயிதே மில்லத் போன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் செல்வதினை தொலைத்தவரா? இல்லையே!
அல்லது1924 இல் பள்ளிப் பருவத்தில் மாணவராக இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதினால் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஜெயிலில் ஓராண்டு வாடிய தியாகி அப்துல் சலாம் போன்று தியாகம் செய்தாரா? இல்லையே!
ஹசாரே அணியில் இருந்த சுவாமி அக்னிவேஷ் மற்றும் நடுநிலை எழுத்தாளரும், உயர்ந்த மேகசய்சே அவார்ட் வாங்கியவருமான அருந்ததி ராய் முதலில் ஹசாரே அணியில் இருந்தனர் பின் அவரை சில சுயநல வாதிகள் தங்கள் ஆளுகையில் வைத்து அதன் படி ஆட்டி வைத்ததால் ஹசாரே அணியிலிருந்து விலகவில்லையா? அது சரி, குஜராத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வர் சுரேஷ் மேஹ்தாவும், சடப்பியாஹ்வும் குற்றம் சாடியுள்ளனரே அதனால் தானே குஜராத்தில் ஊழலை விசாரிக்க லோகயுக்தா கவர்னர் நியமித்ததும் எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளாரே ஏன் அங்கே சென்று அத்வானியும், ஹஜாரேயும் ரத எதிரியோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்லது உண்ணாவிரதமோ செய்யவில்லை? முன்பு அத்வானி ரத யாத்திரையும், கரசேவகையும் தடுத்து நிறுத்த உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்க் போன்ற ஒரு முதல்வரும், லாலுப் பிரசாத் யாதவ் போன்ற பீகார் முதல்வரும் இல்லையே என்ற தைரியத்தில் அத்வானி தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அதுபோல ஹஜாரேயும் தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அவர்களுடைய திட்டத்தின் பின்னணியில் பல கும்பல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக .ஆர்.எஸ். எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் காங்கிரசில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதகவும் ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு முத்தாப்பு வைத்ததுபோல ஆஜ்மீர்,மலேகான்,ஹைதராபாத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்புகளில் சம்பத்தப்பட்ட அபினவ் பாரத் என்ற அமைப்பினரின் ஒன்பது பேர்களுடைய ஜாமீன் மனுவினை போலிசார் எதிர்க்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே ரத யாத்திரை மூலம் அயோத்தியில் நாசவேலையை நடந்தது போல மறுபடியும் ஒரு நாச வேலை நடக்ககூடாது என்றும் பலரும் எதிர்பார்ப்பது இயற்கைதானே! அதற்குத்தானே மத்திய அரசு மத எதிர்ப்பு தடைச் சட்டம் கொண்டு வருகிறது. அதனை ஏன் ப.ஜ.கவும் அதன் கூட்டணிகளும் எதிர்க்கிறார்கள்.
இரு ரத யாத்திரைகளின் பின்னணியில் மூன்று மறைமுக திட்டம் உள்ளதாக நடுநிலையாளர்கள் எண்ணுகிறார்கள்:
1) 2004 ஆம் ஆண்டினுக்குப் பின்பு மத்தியில் ப.ஜ.க ஆட்சியினைப் பிடிக்க முடியவில்லை. வருகின்ற தேர்தலில் மோடியினை முன் நிறுத்தி ஆகவே இதுபோன்ற ரத யாத்திரை நடத்தி சிருபான்மையினரினைடியே பயத்தினை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் ஆட்சியினை பிடிப்பது.
2) அதன் பின்பு மத சார்பற்ற அரசியலமைப்பினை மாற்றி பெரும்பைமையினர் பயன்படும் மத சார்பான சட்டத்தினை கொண்டு வருவது.
3) அப்படியும் முடியவில்லையென்றால் நாடு முழுவதும் ஹசாரே டெல்லியில் நடத்திய தர்பார் போன்று நாடெங்கும் சடத்தி மத்திய அரசினை மாற்றுவது.
இந்த கருத்திற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல அமெரிக்க காங்கிரசின் அறிக்கையில் வலது சாரி ஹிந்து அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு அச்சாரமாக மலேகான், ஆஜ்மீர்,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தொடர்புள்ள அபினவ் பாரத் அமைப்பு தீவிரவாதிகளின் ஜாமீன் மனுவினை காவல் துறையினர் எதிர்க்க மாட்டார்கள் என்றும் ஊடகங்கள் சொல்லுகின்றன.
ஆகவேதான் இந்த தேவை இல்லா இரண்டு ரத யாத்திரையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றேன். அது சரிதானே!
மோட்டார் வாகனங்கள் இருக்கும்போது இது என்ன புதுக்கதை" என்று கேட்கத்தோணும். ஆமாம் எதிகை மோனை இல்லாத புதுகவிதைபோல இதுவும் காவிச்சட்டை தலைவர்கள் கண்டுபிடித்த புதுகதைதான்.
1990ஆம் ஆண்டில் காவிச் சட்டை தலைவர்களால் பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட துவங்கப்பட்ட ஏர் கண்டிஷன் பொருத்தப்பட்ட சொஹுசு வாகன யாதிரைதான் ரத யாத்திரையாகும்.அயோத்தியில் பாபரி மஸ்ஜிதும் 1992 இல் இடிதாச்சு, அதன் பின்பு மத்தியில் அரியணையிலும் 1996 ஆம் ஆண்டு ஏறியாச்சு. அதன் பின்பு 2002 இல் கோத்ர ரயிலில் தீ பிடித்ததும் மனித வேட்டையில் 2000 முஸ்லிம்களுக்கு மேல் கொன்று குவித்தாச்சு . அப்போதெல்லாம் ரத யாத்திரிகைக்கு வேலையில்லை என நினைத்திப்பிருப்பர்கள் போல இந்த புது காந்தி குள்ள வாதிகள்.குஜராத்தில் போலி என்கவுண்டர் என்ற பெயரில் சொஹ்ரபுட்டின் அவரது மனைவி கவுசர் பீ மற்றும் இஷராத் ஜஹான் போன்ற முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்ட போது ஹஜாரே என்ன செய்து கொண்டிருந்தார் என்று நாடு நிலையாளர்கள் கேள்வி எழுப்பாமளிலையே!கோத்ரா சம்பவத்திற்கு பின்பு கொல்லப்பட்ட எண்ணற்ற முஸ்லிம்கள் பற்றி விசாரணை நடத்த இப்போது ஹசாரே அணியில் உள்ள பிரபல வக்கீல்கள் சாந்தி பூசனும் அவர் அருமை மகனுமான பிரசாந்த் பூசன் நீதி விசாரணைக் கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஏதும் தொடுக்கவில்லியே அது ஏன்? ஆனால் மனத் துணிச்சல் உள்ள பெண் வழக்கறிஞர் ச்டீல்வாத் மட்டும் வழக்குத் தொடர்ந்தாரே அது எப்படி என்று பலர் கேட்காமளில்லையே!பல தொண்டு நிறுவனங்களின் நிர்வாகியான ஹசாரே அணியின் கேஜ்ராவாளுக்கு வெளிநாட்டிலுருந்து பெறப்பட்ட பணம் எவ்வளவு என்றோ அல்லது கிரேன்பேடி, கேஜ்ராவால் மற்றும் பூசன் குடும்பச் சொத்தை இதுவரை அறிவிக்கவில்லையே அது ஏன்? அது போன்ற கேள்வி எழக்கரணம் சாந்தி பூசன் முன்னாள் ஜன சங் மத்திய அமைச்சராக இருந்தவர். கிரேன் பேடியும் முன்னாள் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். அதுபோன்று ஹசறேவும் இதுவரை தனது சொத்து பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்றே சொள்ளபடுகிறேதே! மத்திய பிரதேச மாநிலத்தில் ப.ஜ.க. தலைவர் ஒருவருக்கு 300 அரசு நிலம் ஒதுக்கப்பட்டதாக செய்திகள் வந்ததே ஏன் அங்கே சென்று ஹசாரே அணி ஆர்பாட்டம் செய்யவில்லை? அது மட்டுமா அந்த மாநிலத்தில் உள்ள முதல்வர் பற்றி செய்தி வெளியிட்ட பெண் நிருபர் ஷீலா மசூது என்பவர் சுட்டுக் கொல்லபட்டரே ஏன் அங்கே சென்று ஆர்ப்பாட்டம் ஹசாரே அணி செய்யவில்லை?
சரி பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி மறுபடியும் ஒரு ரத யாத்திரை என்று கூறியிருக்கிறரே அது ஏன் என்று பாமர மக்கள் கேட்காமலில்லையே! அது தான் காவி உடை நாணயத்தின் மறு பக்கம். கர்நாடகாவில் முதலில் எட்டியூரப்பவிற்கு எதிராக அமைச்சர் ஜனார்தன ரெட்டி மற்றும் அவர் சகோதரர் எதிர்ப்பு தெரிவிக்கும் பொது எட்டியூரப்பாவினை ஏன் ப.ஜ.க பதவி நீக்கம் செய்யவில்லை? எட்டியூரப்பவினை தொடர்ந்து ஜனார்தன ரெட்டியினை சி.பி.ஐ. கைது செய்த உடன் ஏன் அவர்களை கட்சியிலிருந்து நீக்கவில்லை என்று பொது மக்கள் கேட்கவில்லையா? பாராளு மன்றத்தில் ஆயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்துக் காட்டிய ப.ஜ.க. முன்னால் எம்.பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனரே அதற்கு அத்வானியின் பதில் இது வரை சொல்லவில்லையே? அது ஏன் என்று உங்களுக்கு கேட்கத் தோணுவது இயற்கைதானே!
முன்னால் ப.ஜ.க. தலைவர் பங்காரு லக்ஷ்மணன் கையூட்டுப் பெறும்போது ஒரு டி.வீ. சேனல் படம் போட்டு காட்டியதே அப்போது அவரை கட்சியிலிருந்து ப.ஜ.க. நீக்கியதா இல்லையே? இப்போது கூட டூ ஜி ஊழலில் அருண்குமார் மற்றும் அருண் சோரி பெயர்கள் அடிபடுகிறேதே அவர்களை கட்சி நீக்கியதா, இல்லையே! ஒடிசா மாநிலத்தில் ராஜ்ய சபா தேர்தலில் ஆளும் பி.ஜே.டி கட்சியுடன் சேர்ந்து பணம் கொடுத்து வெற்றி பெட்டதாக கூறப்படுகிறதே அப்படி பணம் வாங்கிய பி.ஜே.பே. எம்.எல்.ஏக்கள் கட்சியினை விட்டு நீகப்பட்டனரா, இல்லையே!மத்திய பிரதேச ப.ஜ.க. அரசு அரசின் 300 ஏக்கர் நிலத்தினை அந்த மாநில ப.ஜ.க தலைவர் நடத்தும் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததாக ஊடகங்கள் சொன்னதே அப்போது ஏன் எந்த யாத்திரையும் நடத்தவில்லை?
ஒரு ஜனநாயக நாட்டில் பாராளுமன்றம் தான் மிக சக்தி வாய்ந்த மக்கள் பிரதிநித்துவ சபை. அந்த சபை உறுப்பினர்களையே மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததால் ஹஜாரேயின் அணியினரான பிரசாந்த் பூசன், கிரேன் பேடி மற்றும் கேஜ்ராவால் போன்றோருக்கு உரிமை மீறல் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அது எப்படி தவறாகும்? ஒரு நாட்டுக்கொடி மேல்நோக்கிதான் பறக்க விட வேண்டும். ஆனால் கிரேன் பேடி முன்னால் காவல் துறை அதிகாரி. அவர் ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும்போது தேசியக்கொடியினை பெரிய கம்பில் கட்டி கீழ் நோக்கி வீசுவதினை அனைவரும் தொலைகாட்சியில் பார்த்திருக்கலாம். அதனை எப்படி சரி என்று சொல்லாம்? சில ஆயிரம் பேர்களை கூட்டி அவர்களுக்கு சாதகமான காரியம் சாதிக்க நினைத்தால், 15 சதவீத மக்கள் உள்ள முஸ்லிம்கள் பத்து சதவீத ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதிக்கீடு செய்ய நீதிபதி ரங்கநாத மிஸ்ரா சொல்லியபடி கொடுங்கள் என்று ஏன் முஸ்லிம் தலைவர்களால் சொல்ல முடியவில்லை? காரணம் அந்த தலைவர்களிடையே ஒற்றுமை இல்லையே?
ஹசாரே என்ன நாட்டின் சுதந்தர வீரரா? இல்லையே? ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்று ஊடகங்கள் சொல்கின்றன. அத்வானி நாட்டின் சுதந்திர போராட்ட வீரரா? அவர்களுக்கு ஏன் அந்த முக்கியத்துவம்? 1965 ஆம் ஆண்டு ராணுவத்தில் ஹசாரே போன்று முன்னால் எஸ்.பீ. முஹம்மது இக்பாலும் இருந்து நாட்டுக்காக போராடினார். 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பதூரில் விடுதலை புலிகள் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மீது நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிர் நீத்தார். அவரை எந்த அரசும் ஞாபகப் படுத்துகிறதா, இல்லையே! ஏன் இந்த பாரபட்சம்?
ஹசாரே என்ன பேட்டை முதலாளி காயிதே மில்லத் போன்று சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தன் செல்வதினை தொலைத்தவரா? இல்லையே!
அல்லது1924 இல் பள்ளிப் பருவத்தில் மாணவராக இருந்தபோது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதினால் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஜெயிலில் ஓராண்டு வாடிய தியாகி அப்துல் சலாம் போன்று தியாகம் செய்தாரா? இல்லையே!
ஹசாரே அணியில் இருந்த சுவாமி அக்னிவேஷ் மற்றும் நடுநிலை எழுத்தாளரும், உயர்ந்த மேகசய்சே அவார்ட் வாங்கியவருமான அருந்ததி ராய் முதலில் ஹசாரே அணியில் இருந்தனர் பின் அவரை சில சுயநல வாதிகள் தங்கள் ஆளுகையில் வைத்து அதன் படி ஆட்டி வைத்ததால் ஹசாரே அணியிலிருந்து விலகவில்லையா? அது சரி, குஜராத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதல்வர் சுரேஷ் மேஹ்தாவும், சடப்பியாஹ்வும் குற்றம் சாடியுள்ளனரே அதனால் தானே குஜராத்தில் ஊழலை விசாரிக்க லோகயுக்தா கவர்னர் நியமித்ததும் எதிர்த்து வழக்கும் தொடர்ந்துள்ளாரே ஏன் அங்கே சென்று அத்வானியும், ஹஜாரேயும் ரத எதிரியோ அல்லது ஆர்ப்பாட்டமோ அல்லது உண்ணாவிரதமோ செய்யவில்லை? முன்பு அத்வானி ரத யாத்திரையும், கரசேவகையும் தடுத்து நிறுத்த உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்க் போன்ற ஒரு முதல்வரும், லாலுப் பிரசாத் யாதவ் போன்ற பீகார் முதல்வரும் இல்லையே என்ற தைரியத்தில் அத்வானி தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அதுபோல ஹஜாரேயும் தனது திட்டத்தினை அறிவித்து விட்டார். அவர்களுடைய திட்டத்தின் பின்னணியில் பல கும்பல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. குறிப்பாக .ஆர்.எஸ். எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் அமெரிக்காவின் காங்கிரசில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதகவும் ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு முத்தாப்பு வைத்ததுபோல ஆஜ்மீர்,மலேகான்,ஹைதராபாத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்புகளில் சம்பத்தப்பட்ட அபினவ் பாரத் என்ற அமைப்பினரின் ஒன்பது பேர்களுடைய ஜாமீன் மனுவினை போலிசார் எதிர்க்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆகவே ரத யாத்திரை மூலம் அயோத்தியில் நாசவேலையை நடந்தது போல மறுபடியும் ஒரு நாச வேலை நடக்ககூடாது என்றும் பலரும் எதிர்பார்ப்பது இயற்கைதானே! அதற்குத்தானே மத்திய அரசு மத எதிர்ப்பு தடைச் சட்டம் கொண்டு வருகிறது. அதனை ஏன் ப.ஜ.கவும் அதன் கூட்டணிகளும் எதிர்க்கிறார்கள்.
இரு ரத யாத்திரைகளின் பின்னணியில் மூன்று மறைமுக திட்டம் உள்ளதாக நடுநிலையாளர்கள் எண்ணுகிறார்கள்:
1) 2004 ஆம் ஆண்டினுக்குப் பின்பு மத்தியில் ப.ஜ.க ஆட்சியினைப் பிடிக்க முடியவில்லை. வருகின்ற தேர்தலில் மோடியினை முன் நிறுத்தி ஆகவே இதுபோன்ற ரத யாத்திரை நடத்தி சிருபான்மையினரினைடியே பயத்தினை ஏற்படுத்தி வருகின்ற தேர்தலில் ஆட்சியினை பிடிப்பது.
2) அதன் பின்பு மத சார்பற்ற அரசியலமைப்பினை மாற்றி பெரும்பைமையினர் பயன்படும் மத சார்பான சட்டத்தினை கொண்டு வருவது.
3) அப்படியும் முடியவில்லையென்றால் நாடு முழுவதும் ஹசாரே டெல்லியில் நடத்திய தர்பார் போன்று நாடெங்கும் சடத்தி மத்திய அரசினை மாற்றுவது.
இந்த கருத்திற்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல அமெரிக்க காங்கிரசின் அறிக்கையில் வலது சாரி ஹிந்து அமைப்புகள் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் சொல்லுகின்றன. அதற்கு அச்சாரமாக மலேகான், ஆஜ்மீர்,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் தொடர்புள்ள அபினவ் பாரத் அமைப்பு தீவிரவாதிகளின் ஜாமீன் மனுவினை காவல் துறையினர் எதிர்க்க மாட்டார்கள் என்றும் ஊடகங்கள் சொல்லுகின்றன.
ஆகவேதான் இந்த தேவை இல்லா இரண்டு ரத யாத்திரையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்றேன். அது சரிதானே!
Monday, 5 September 2011
கை விடப்படும் குழந்தைகள், கவனிக்குமா சமுதாயம்? டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ .பீ .எஸ் .(ஓ)
ஆறறிவுள்ள மனிதனுக்கு ' திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது'. அந்த பாக்கியம் வில்ங்கினங்களுக்கில்லை.ஆணுக்குப் பெண் இளைப்பாறும் விளை நிலமாக அல்லாஹ்வால் பாரினிலே படைக்கபட்டாள். திருமணமான ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் அன்பு மற்றும் பாச பரிமாற்றத்தால் உண்டாகும் நன் முத்துக்கள் தான் குழந்தை பாக்கியம் என்றால் மிகையாகாது.விதைககபடும் எல்லா நிலங்களிலும் பயிர்கள் உண்டாகாது. அதேபோல் உண்டாகிய அணைத்து பயிர்களும் உயிருடன் நிலைத்து நிற்குமா என்றும் சொல்ல முடியாது. அதே போன்றுதான் தம்பதிகளுக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் உயிருடன் வாழ்வார்களா என்றும் அறிதியிட்டு உறுதியாக சொல்ல முடியாது. அடுத்தபடியாக ஓரிரு குழந்தைகள் உள்ளவர்கள் தான் உலகத்தில் வறுமை இல்லாமல் வாழ்வார்கள், அதிக பிள்ளை பெற்றவர்கள் எல்லாம் கஷ்ட கண்ணீர் கடலில் மூழ்குவார்கள் என்றும் சொல்ல முடியாது. ஐந்து அல்லது ஆறு ஆண் மக்களை பெற்ற பெற்றோர்கள் பஞ்சத்தில் துவல்வார்கள் ஆனால் ஏழு எட்டு பெண் மக்களை பெற்றவர்கள் செல்வக்கொளிப்பில் வாழ்வதினை நாம் கண்கூடாக காண்கிறோமல்லவா? அதுபோன்ற பாக்கியம் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருகிருபைதானே?
பெண்ணுக்குத்தான் தெரியும் ஒரு குழந்தையினை பெற்று எடுப்பது எவ்வளவு சிரமமென்று . சில பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போதே இறந்து விடும் பரிதாப நிகழ்வுகளை நாம் அன்றாட வாழ்வில் காணலாம். ஆகவே சாவின் விளிம்பிலிருந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் அந்தக் குழந்தைகளை ஒழுங்காக பராமரிக்காமல் பராரியாக விடப்பட்ட சில சம்பவங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.
1)திருநெல்வேலி மாவட்டத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்த செய்யது யூசுபிற்கு இரண்டு பெண் குழந்தைகள். அவருடைய மனைவி பாத்திமா மூன்றாவது குழந்தைக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது யுசுப் தினமும் குதித்துவிட்டு வேலைக்கு வருவதால் அவர் வேலை போய்விட்டது. பாத்திமாவும் அழகான மூன்றாவது பெண் குழந்தையினை பெற்றெடுத்தாள். வீட்டில் விளையாடிய பஞ்சத்தால் மனதினை கல்லாக்கிக் கொண்டு பிறந்தே ஒருமாத பெண் குழந்தையினை தாய் பாதிமவிற்குத் தெரியாமல் மும்பை வியாபாரிக்கு ரூ 40000/ விளை பேசி விற்றுவிட்டார். பெற்ற மனது பொறுக்குமா? கொதித்தெழுந்தாள் பாத்திமா. விளைவு காவல்துறையினரிடம் புகார் சென்றது. காவல்துறையினர் விரைந்து செயல் பட்டு குழந்தையினை மீட்டு பாத்திமாவிடம் கொடுத்ததோடு நில்லாமல் குடிகார கணவனான யூஸுபையும் கைது செய்ததாக செய்திகள் சொல்லுகின்றன.
2) கேரளா மாநிலம் கொசியினைச் சார்ந்த பேரலூர் என்ற நகரத்தில் பதிமூன்றே வயதான ஒரு சிறுமியை தன் குடும்ப வருமையினைப் போக்க தாய் விபச்சாரத்தில் தள்ளி உள்ளாள். ஒன்றும் அறியாத அந்த சிறுமியினை பால் படுத்தியாக கேரளா காவல் துறையினர் இது வரை எண்பது பேரை கைது செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டினைச் சார்ந்த அதிகாரிகளும் பிரமுகர்களும் அடங்குவார்கள். இதுபோன்ற வெளி வராத செய்திகளும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் மறுக்க முடியாது என்றே சொல்லலாம்.
3) உத்திர பிரதேசம் லக்னோவில் ஒரு பார்க் அருகில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் அக்கு லால். இவர் அனாதையாக இருக்கும்போது ஒரு முஸ்லிம் பிரமுகர் எடுத்து வளர்த்து ஆளாக்கினராம். ஒரு நாள் இரவு தனது டீக்கடையினை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது பார்க் அருகில் ஆறு வயது சிறுவன் முடங்கி படுத்து தூங்கியுள்ளான். அந்த பெரியவர் அவனை எழுப்பி அவனைப்பற்றிய விவரம் கேட்டபோது தனது பெயர் அக்பர் என்றும் தனது பெற்றோர் தன்னை விட்டு விட்டு சென்று விட்டனர் என்றும் சொல்லியுள்ளான். அந்தப் பெரியவர் அவனை தனது வீட்டுக்கு கூட்டிச் சென்று அவனை பராமரித்து வந்தது மட்டுமல்லாமல் அவனை ஏழாவது வரை படிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த சிறுவனை தொழுக வைத்தும், ரமழான் மாதத்தில் நோன்பு வைக்கவும் பழகிக் கொடுத்துள்ளார். அதனைப் பற்றி அந்தப் பெரியவர் சொல்லும்போது தன்னை வளர்த்த முஸ்லிம் பெரியவருக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவதிர்க்காக தானும் அக்பரை முஸ்லிமாக வளர்ப்பதாக பேட்டி கொடுத்துள்ளார்.
நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிருந்து கீழ்கண்டவைகள் தெளிவாக புரிகின்றன:
1)இருண்ட கால அரேபியாவில் பெண் குழைந்தைகளை ஒரு பாரமாக எண்ணி அவைகளை மண்ணில் புதைத்த நிலையிலிருந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ரசூலில்லாவின் போதனைகள் இன்னும் சமுதாய மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லையோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழந்தைகளை பேணிகாக்க சமுதாயத்தில் ஏதும் திட்டம் இல்லையா என்ற கேள்விக்குறி எழாமலில்லையல்லவா?
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழைதைகளுக்காக தனியாக மதர்சாவுடன் கூடிய அனாதை பெண் காப்பகம் நிறுவுவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே?
2) ஆண் குழந்தைகளை பராமரிக்க எத்தனையோ அனாதை ஆசிரமங்களும், மதரசாக்களும், பிற்பட்டோருக்காக அரசு விடுதிகளும் உள்ளன. அவைகளில் மேற்குறிப்பிட்டது போன்ற குழந்தைகளை சேர்க்க உதவலாம்.
3) நோன்பு சகர் நேர பிரசங்கங்களில் ஏழை எளியோருக்கு உதவ பைத்துல் மால் நிதி வழங்குங்கள் என்று பிரச்சாரங்கள் சொல்லப்பட்டன. அனால் அதுபோன்று வசூல் செய்த பணம் ஒவ்வொரு வருடமும் எவ்வளுவு என்ற கணக்கினை இணைய தளத்திலோ அல்லது பொது விளம்பரத்திலோ வெளியிட்டர்களா என்றல் இது வரை இல்லை என்றே சொல்லலாம். அது போன்ற பைத்துல் மால் பணத்தினை சமுதாயத்தில் நலிந்தோர் வியாபாரம் செய்ய உதவலாம்.
குடி குடியினை கெடுக்கும் என்ற வாசகத்திணங்க நான் மேலே குறிப்பிட்ட நெல்லையினைச்ச்சர்ந்த யூசுப் குடித்து கேட்டது போன்று எந்தக் குடும்பத்திலும் நடக்காது பர்த்துகொள்ளுவது ஜமாத்தார்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் கடமைகள் தானே என்றல் சரிதானே சகோதரர்களே?
பெண்ணுக்குத்தான் தெரியும் ஒரு குழந்தையினை பெற்று எடுப்பது எவ்வளவு சிரமமென்று . சில பெண்கள் குழந்தைகளை பெற்றெடுக்கும் போதே இறந்து விடும் பரிதாப நிகழ்வுகளை நாம் அன்றாட வாழ்வில் காணலாம். ஆகவே சாவின் விளிம்பிலிருந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர் அந்தக் குழந்தைகளை ஒழுங்காக பராமரிக்காமல் பராரியாக விடப்பட்ட சில சம்பவங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம் என நினைக்கின்றேன்.
1)திருநெல்வேலி மாவட்டத்தில் டீக்கடையில் வேலை பார்த்து வந்த செய்யது யூசுபிற்கு இரண்டு பெண் குழந்தைகள். அவருடைய மனைவி பாத்திமா மூன்றாவது குழந்தைக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது யுசுப் தினமும் குதித்துவிட்டு வேலைக்கு வருவதால் அவர் வேலை போய்விட்டது. பாத்திமாவும் அழகான மூன்றாவது பெண் குழந்தையினை பெற்றெடுத்தாள். வீட்டில் விளையாடிய பஞ்சத்தால் மனதினை கல்லாக்கிக் கொண்டு பிறந்தே ஒருமாத பெண் குழந்தையினை தாய் பாதிமவிற்குத் தெரியாமல் மும்பை வியாபாரிக்கு ரூ 40000/ விளை பேசி விற்றுவிட்டார். பெற்ற மனது பொறுக்குமா? கொதித்தெழுந்தாள் பாத்திமா. விளைவு காவல்துறையினரிடம் புகார் சென்றது. காவல்துறையினர் விரைந்து செயல் பட்டு குழந்தையினை மீட்டு பாத்திமாவிடம் கொடுத்ததோடு நில்லாமல் குடிகார கணவனான யூஸுபையும் கைது செய்ததாக செய்திகள் சொல்லுகின்றன.
2) கேரளா மாநிலம் கொசியினைச் சார்ந்த பேரலூர் என்ற நகரத்தில் பதிமூன்றே வயதான ஒரு சிறுமியை தன் குடும்ப வருமையினைப் போக்க தாய் விபச்சாரத்தில் தள்ளி உள்ளாள். ஒன்றும் அறியாத அந்த சிறுமியினை பால் படுத்தியாக கேரளா காவல் துறையினர் இது வரை எண்பது பேரை கைது செய்துள்ளனர். அதில் தமிழ்நாட்டினைச் சார்ந்த அதிகாரிகளும் பிரமுகர்களும் அடங்குவார்கள். இதுபோன்ற வெளி வராத செய்திகளும் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் மறுக்க முடியாது என்றே சொல்லலாம்.
3) உத்திர பிரதேசம் லக்னோவில் ஒரு பார்க் அருகில் டீக்கடை வைத்து நடத்தி வருபவர் அக்கு லால். இவர் அனாதையாக இருக்கும்போது ஒரு முஸ்லிம் பிரமுகர் எடுத்து வளர்த்து ஆளாக்கினராம். ஒரு நாள் இரவு தனது டீக்கடையினை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது பார்க் அருகில் ஆறு வயது சிறுவன் முடங்கி படுத்து தூங்கியுள்ளான். அந்த பெரியவர் அவனை எழுப்பி அவனைப்பற்றிய விவரம் கேட்டபோது தனது பெயர் அக்பர் என்றும் தனது பெற்றோர் தன்னை விட்டு விட்டு சென்று விட்டனர் என்றும் சொல்லியுள்ளான். அந்தப் பெரியவர் அவனை தனது வீட்டுக்கு கூட்டிச் சென்று அவனை பராமரித்து வந்தது மட்டுமல்லாமல் அவனை ஏழாவது வரை படிக்க வைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த சிறுவனை தொழுக வைத்தும், ரமழான் மாதத்தில் நோன்பு வைக்கவும் பழகிக் கொடுத்துள்ளார். அதனைப் பற்றி அந்தப் பெரியவர் சொல்லும்போது தன்னை வளர்த்த முஸ்லிம் பெரியவருக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துவதிர்க்காக தானும் அக்பரை முஸ்லிமாக வளர்ப்பதாக பேட்டி கொடுத்துள்ளார்.
நான் மேலே குறிப்பிட்ட சம்பவங்களிருந்து கீழ்கண்டவைகள் தெளிவாக புரிகின்றன:
1)இருண்ட கால அரேபியாவில் பெண் குழைந்தைகளை ஒரு பாரமாக எண்ணி அவைகளை மண்ணில் புதைத்த நிலையிலிருந்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிய ரசூலில்லாவின் போதனைகள் இன்னும் சமுதாய மக்களிடம் முழுமையாக போய் சேரவில்லையோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழந்தைகளை பேணிகாக்க சமுதாயத்தில் ஏதும் திட்டம் இல்லையா என்ற கேள்விக்குறி எழாமலில்லையல்லவா?
அவ்வாறு பாரமாக இருக்கும் பெண் குழைதைகளுக்காக தனியாக மதர்சாவுடன் கூடிய அனாதை பெண் காப்பகம் நிறுவுவது காலத்தின் கட்டாயமல்லவா சகோதர, சகோதரிகளே?
2) ஆண் குழந்தைகளை பராமரிக்க எத்தனையோ அனாதை ஆசிரமங்களும், மதரசாக்களும், பிற்பட்டோருக்காக அரசு விடுதிகளும் உள்ளன. அவைகளில் மேற்குறிப்பிட்டது போன்ற குழந்தைகளை சேர்க்க உதவலாம்.
3) நோன்பு சகர் நேர பிரசங்கங்களில் ஏழை எளியோருக்கு உதவ பைத்துல் மால் நிதி வழங்குங்கள் என்று பிரச்சாரங்கள் சொல்லப்பட்டன. அனால் அதுபோன்று வசூல் செய்த பணம் ஒவ்வொரு வருடமும் எவ்வளுவு என்ற கணக்கினை இணைய தளத்திலோ அல்லது பொது விளம்பரத்திலோ வெளியிட்டர்களா என்றல் இது வரை இல்லை என்றே சொல்லலாம். அது போன்ற பைத்துல் மால் பணத்தினை சமுதாயத்தில் நலிந்தோர் வியாபாரம் செய்ய உதவலாம்.
குடி குடியினை கெடுக்கும் என்ற வாசகத்திணங்க நான் மேலே குறிப்பிட்ட நெல்லையினைச்ச்சர்ந்த யூசுப் குடித்து கேட்டது போன்று எந்தக் குடும்பத்திலும் நடக்காது பர்த்துகொள்ளுவது ஜமாத்தார்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் கடமைகள் தானே என்றல் சரிதானே சகோதரர்களே?
Subscribe to:
Posts (Atom)