Friday 27 September, 2024

கண்ணறியா எதிரி?

 


(டாக்டர் .பீ.முகமது அலி,(.பீ.எஸ்()

திருவள்ளுவர் மறைமுக எதிரியினைப் பற்றி கூறும்போது,'கூப்பிய கையினுள்ளும் கூரிய வேல் இருக்கும்' என்றார். அதற்கு என்ன அர்த்தம் என்றால், சிரித்துப் பேசி குரவளை அறுக்கும் செயலாகும். அதாவது கூடவே இருந்து கொலை செய்வார்கள் என்று கிராமத்தில் கூறுவார்கள். அப்படி பட்ட பாதகமான செயலை செய்பவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்ற எச்சரிக்கையினை பற்றி தான் வள்ளுவர் கூறியுள்ளார் என்பதற்கு உதாரணமாக முகலாய சாம்ராஜ்யத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை உங்கள் கண் முன் நிறுத்தலாம் என எண்ணுகிறேன்.

மராத்தா பகுதியில் குற்ற சம்பவங்களுக்கு அந்த பகுதியினை ஆதிக்கம் செலுத்திய சிவாஜி தான் காரணம்  என்று முகலாய மன்னர் ஒவரங்கசிப் கருதினார். மகாராஷ்டிரா முன்னாள் முதன் மந்திரி நாராயன் ரானே கூட 3.9.2024 அன்று வீர சிவாஜி சூரத்தினை சூறையாடினர் என்று கூறியிருப்பது அதற்கு உதாரணம். தளபதி அப்சல் கான் தலைமையில் ஒரு படையினை முகலாய மன்னர் அனுப்பினார். மகாராஷ்டிரா எல்லையில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து சிவாஜிக்கு தளபதி உடனடியாக சரணடைய தூது அனுப்பினார். அதற்கு ஏற்றுக் கொண்ட தளபதி குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கச் சென்றார். அங்கே வந்த சிவாஜி முகலாய தளபதியினை ஆரத்தழுவினார். அப்போது சிவாஜி கையில் விஷம் கலந்த நகங்கள் அப்சல் கானின் முதுகினை கிழித்ததால் அப்சல் கான் இறந்ததாக ஒரு வரலாறு உள்ளது. அதனைப் போன்ற செயல்களைத் தான் வள்ளுவரும் கூறியிருப்பார் என்றால் சரிதானே!

          உங்களுக்கெல்லாம் தெரியும் லெபனான் நாட்டிலுள்ள ஹிஸ்புல்லா என்ற படையினருக்கும் இஸ்ராயில் நாட்டு .டி.எப்.என்ற ராணுவ அமைப்பினருக்கும் ஏழாம் பொறுத்த பகைமையென்று. ஹிஸ்புல்லா அமைப்பினரை எப்படி கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகிறது என்று புரட்சிக் கவிஞர் பாரதி கூறியதுபோல துப்பாக்கியின்றி, விண்ணில் பாயும் ராக்கெட்டோ, ஏவுகணையோ இல்லாமல் 40 உயிர்களை பலி வாங்கியும், 5000 பேர்களுக்கு காயம் ஏற்படுத்திய பேஜர், வாக்கி டாக்கி மற்றும் மடிக்கனியினை வெடிமருந்துகள் மருந்துகள் மூலம் வெடிக்கச் செய்துள்ளார்கள் .டி.எப் என்ற இஸ்ராயில ராணுவப் படையினர். என்றால் உலகமே ஆச்சரியப் படவில்லையா? அது எப்படி அவர்களால் முடிந்தது என்று எல்லோருமே மூக்கின் மேல் விரலை வைத்து கேட்காமலில்லை! அது தான் வானத்தில் வட்டமிடும் சேட்டலைட் மூலம் இயக்கி வெடிக்கச் செய்துள்ளார்கள். உங்களைப் போன்று தான் நானும் ஆச்சரியப் பட்டேன். அதன் பின்பு வந்த பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி தகவல் மூலம் கிடைத்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

          இந்த வெடி விபத்திற்குப் பின்னால் இருப்பது கேரளா வயநாட்டினைச் சார்ந்த  ரின்சன் ஜோஸ்’  ஆகும் என்றால் ஆச்சரியமில்லையா? இவர் நார்வே நாட்டில் குடியேறி Norta Global Ltd. என்ற கணினி வேலை வாய்ப்பு மற்றும் சர்விஸ் செய்யும் வேலையும், வேலைக்கு ஆட்கள் எடுக்கும் நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருக்கு உதிரிப் பாகங்கள் தைவானிலிருந்து வருகின்றன. ஏற்கனவே ஹஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா அந்த அமைப்பினருக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அது என்னவெனில் உறுப்பினர் யாரும் கைபேசி உபயோகிக்கக் கூடாது என்பதாகும். ஆகவே அந்த அமைப்பினர்ரின்சன் ஜோஸை’ தொடர்பு கொண்டு பேஜர் என்ற ஒலி எழுப்பும் கையடக்க கருவிகளுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்கள். பேஜர் என்பது உள்ளங்கை அடக்க ஒரு பொருளாகும். அதனை வைத்திருப்பவர்கள் தங்களுக்குள் செய்திகள் பரிமாறும் போது ஒலி, ஒளி  எழுப்பும். அதனை வைத்து அவர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வார்கள். அதனை தெரிந்து கொண்ட இஸ்ராயில்மொசாத்’ என்ற உளவுப் படையினர் ரின்சன் ஜோஸை தொடர்பு கொண்டு ஒவ்வொரு பேஜரிலும் 3கிராம் வெடிப் பொருளை நிறப்பச் செய்து ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு வழங்கச் செய்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஒரே சமயத்தில் 17.9.2024ல் வெடிக்கச் செய்து ஹிஸ்புல்லா அமைப்பினரினரை கதி கலங்கச் செய்துள்ளனர். அடுத்த நாளே(18.9.2024) அன்று அந்த நிறுவனம் கொடுத்த கைப்பேசியையும், மடி கணினியையும் வெடிக்கச் செய்துள்ளனர். இந்த சம்பவங்களுக்குப் பின்பு ஜோஸ் குடும்பத்துடன் மறைந்து விட்டார். அவரை சர்வதேச காவல் துறையினர் தேடுவதாகவும் கூறப் படுகிறது. அந்த குண்டு வெடிப்புகள் நடந்ததுமே ஹிஸ்புல்லா அமைப்பினர் இது எதில் போய் முடியும் என்றனர். அதேபோல் 23.9.2024 இஸ்ராயில் படையினர் நடத்திய குண்டு வெடிப்பில் 250 மக்கள் இறந்ததாக சொல்லப் படுகிறது.

          அது சரி இதுபோன்ற கண்டு பிடிக்கமுடியா கோர செயல் வேறு எப்பாவது நடந்திருக்கிறதா என்று நீங்கள் கேட்கலாம். நடந்திருக்கும் சம்பவத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். பாலஸ்தீனத்தில் சிறந்த குண்டு தயாரிக்கும் நிபுணராக திகழ்ந்த யகியா ஆயாஸ் நிகழ்த்திய குண்டு வெடிப்பினால் 1994-95ல்150 இஸ்ராயிலர் இறப்பதிக்கு காரணம் என்று குற்றச்சாட்டு உள்ளது. ஆகவே அவரை 1996ம் ஆண்டு அவர் உபயோகிக்கும் சிறிய கைபேசியினை வெடிக்கச் செய்து மரணம் தழுவ செய்தார்கள் இஸ்ராயிலர். அதனை புரிந்து கொள்ளாத லெபனான் ஹஸ்புல்லா அமைப்பினர் இஸ்ராயில் சதித்திட்டத்திற்கு இறையாகியுள்ளனர் என்றால் மறுக்க முடியாது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் இஸ்ராயிலர் நடத்திய தொலைத் தொடர்பு குண்டு வெடிப்புகள் மனித உரிமைகளை மீறிய செயலாகும் என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

          யுத்தத்தில் இரண்டு வகையாகும். ஒன்று conventional தெரிந்து கொள்ளும் துப்பாக்கி, பீரங்கி, விமான, கப்பல் மூலம் தாக்குதல் ஆகும். பண்டைய காலத்தில் அதுவே கத்தி கொண்டு சண்டையிடுதல் ஆகும். மற்றொன்று unconventional ஆகும். அதாவது வழக்கத்திற்கு மாறான ஆயுதங்கள் கொண்டு போர் புரிதல் ஆகும். அதற்கு உதாரணம் பாலம், அணை, நீர் நிலைகள், அணு உலைகள், மின் நிலையங்கள் வெடி வைத்து தகர்த்தல் போன்ற செயலாகும். அத்தோடு மக்களை பயமுறுத்தும் செயல்கள், கொரில்லா யுத்தங்கள், பொருளாதார தடைகள் போன்றதாகும். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அணுகுண்டு வீசி லட்சக் கணக்கான உயிர்களை பலி வாங்கி புல் பூண்டு கூட முளைக்காத அளவிற்கு அழிவினைச் செய்தது. இப்போது அதை விட சக்தி வாய்ந்த Nuclear குண்டுகளை உபயோகிக்க ஆயத்தமாகும் அமெரிக்க ஆதரவு நாடுகளும், ரஷ்யா,சீன, வட கொரிய நாடுகள் மற்றொரு பக்கமுமாகும். ஆளில்லா விமானங்கள் மூலம் கண் கானா தூரத்திலிருந்து குண்டுகளை வீசி அழிவு  ஏற்படுத்துதல். செயற்கை ஞானம்(Artificial intelligence), தன்னிச்சையாக இயங்கும்  robotic மூலம் இயக்கி நாசம் செய்யும் முறையும் தற்போது வந்து விட்டது.

          Biological ஆயுதம் என்பது உயிர் கொல்லி மருந்துகள் அடங்கிய ஆயுதங்கள் உபயோகிப்பதாகும். அதாவது கிருமிகளை பரவச் செய்து காலரா, அம்மை, பேதி,காய்ச்சல், டிபி.கேன்சர்,பிளேக்,ஆண்ட்ராக்ஸ், நிப்பா   போன்ற நோய்களை பரப்பி மனிதர், விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றை அழிப்பதாகும். நீர் நிலைகளில் விஷத்தினை கலப்பதும், சுவாசிக்கும் காற்றினை மாசுபடுத்தி சுவாசிக்கச் செய்வதாகும். 2019ம் ஆண்டு ஏற்பட்ட கொரானா நோய்கூட அந்த வகையில் சீனாவால் ஏற்படுத்தப் பட்ட யுத்தம் என்று தான் கூறப் பட்டது. ஈரான்-இராக் ஆகிய நாடுகளுக்கு இடையே நடந்த எட்டு வருட சண்டையில் சல்பார், (mustard Gas) கடுகு வாயு உபயோகிக்கப் பட்டதாம். அதேபோன்று booby trap என்ற கண்ணி வெடி உபயோகிப்பதிற்கும், சாதாரண மனிதன் உபயோகிக்கும் தொலை  தொடர்பு பொருள்களிலும், வெடிக்கும் குண்டு நிரப்பி வெடிக்கச் செய்வது சர்வதேச குற்றமாகும். ஆனால் பகையுணர்வு கொண்ட நாடுகள் அந்த ஐ.நா.சபை 1972ல் இயற்றிய உயிர் கொல்லி ஆயுதம்  தயாரிப்பதற்கும், சேகரித்து வைப்பதற்கும், பயன் படுத்துவதற்கும் தடை செய்யப் பட்டாலும்,  சர்வதேச சட்டங்களையெல்லாம் காற்றில் பறக்கச் செய்யும் அன்றாட செயல்களை நாம் பார்த்துக் கொண்டே தானே இருக்கின்றோம்.

          இது போன்ற உயிர் கொல்லி ஆயுதங்கள் பயன்படுத்துவது அமெரிக்கர்களும், ஐரோப்பிய நாட்டினவருக்கும் முன்னாள் நடந்த சிவில் யுத்தத்தில் பயன்படுத்தப் பட்டதாம். மத்திய நூற்றாண்டுகளின் சண்டைகளில் இறந்த வீரர்களின் சடலங்களை அங்கேயே விட்டு விடுவார்களாம், ஏனென்றால் அந்த சடலங்கள் அழுகி எதிரி நாட்டினர் மீது பரவட்டும் என்ற கெட்ட நோக்கம் தானாம். அமெரிக்காவினை பிடிக்க அங்குள்ள சிகப்பு இந்தியர்களை விரட்ட ஆங்கிலேய ஜெனரல் சர் ஜாபிரே அம்ஹர்ட்(Sir Jafray Armherd) அம்மை நோயினை பரவ விட்டாராம். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் உயிர் கொல்லி ஆயுதங்கள் தயாரிக்க மஞ்சுரியில் Unit 731 என்ற ஆராய்ச்சி கூடம் இருந்ததாம். 1950-1953ல் நடந்த கொரியன் யுத்தத்தில் அது போன்ற உயிர்கொல்லி ஆயுதங்களிருந்து பாதுக்காக்க அமெரிக்கா ஆர்கனாஸ் மாநிலத்தில் PinBluff என்ற இடத்தில் ஒரு ஆராய்ச்சி கூடமேஇருந்ததாம்.

          தெற்கு வியட்நாம்-வடக்கு வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே நடந்த 20 வருட போரில்(1955-1975) தெற்கு வியட்நாம் வட வியட்நாம் நாட்டின் மீது பெட்ரோல், மற்றும் காஸ் ஆகியவற்றினை கொண்டு தயாரிக்கப் பட்ட Nepalm குண்டுகளை வீசியதால் மக்கள் மீது தீப்பிடித்து துணிமணிகளை கழட்டி விட்டு ஓடும் Pan Thank Phou சிறுமி குடும்ப போட்டோ Pulitzer என்ற சிறந்த போட்டோவிற்கான பரிசினை பெற்றது உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன்.

          இரண்டாம் உலகப் போருக்கு பின்னால் கீழ்கண்ட நாடுகள் .நா.சபை தடை செய்தாலும் உயிர் கொல்லி ஆயுதங்கள்  பயன் படுத்தின என்பது வரலாறு:

1) 1957ல் ஓமன் நாட்டுடன் நடந்த போரில் இங்கிலாந்து பயன் படுத்தியதாக  கிழக்கு ஐரோப்பிய பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின.

2) 1961ம் ஆண்டில் அமெரிக்கா காலராவினை ஹாங்காங் நகரில் பரவ விட்டடது என்று சீனா குற்றம் சாட்டியது..

3)  1964ம் ஆண்டுகளில் அமெரிக்கா கொலம்பியா, பொலிவியா நாடுகளில் அதுபோன்ற ஆயுதங்களை பயன்படுத்தியதாக சீனா குற்றம் சாட்டியது.

4)1969 மேற்கத்திய நாடுகள் ஈராக்கில் காலரா பரப்பியதாம்.

          நியூக்ளியர் ஆயுதத்தினை வைத்து எந்த இடத்திலும் பூகம்பம் ஏற்படுத்த முடியும்,. கடலுக்குள் நடத்தும் குண்டு வெடிப்பால் 5 மைல் தூரத்தில் சுனாமி பேரலைகள் ஏற்படுத்த முடியும், வானத்தில் மேகங்களை ஒரு சேர வைத்து 'Cloud bursting' என்ற பெரு வெள்ளங்களை உண்டாக்கி பேரழிவுகள் ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சமீப கால பூகம்பமும், பெரு வெள்ளமும் அதற்கு எடுத்துக் காட்டு.

          இஸ்லாம் சொல்கிறது, 'மறைவான இடங்களில் உங்களை காத்துக் கொள்ளுங்கள்' என்று. எனது தயார் நான் கல்லூரி விரிவுரையாளர் பணியாற்றிய பிறகு நேரடி தேர்வில் டி.எஸ்.பி பயிற்சிக்கு செல்லும்போது எனக்கு சொன்ன அறிவுரை  'நீ எப்போது வெளியே சென்றாலும் இடது,வலது,பின் பக்கம் பார்த்து நட என்றார். வயதான காலத்தில் அவர் அப்போது சொன்ன எச்சரிக்கை பல சந்தர்ப்பங்களில் பணியிலிருக்கும் போது ஆபத்தான நேரங்களில் உசாராக இருக்கச் செய்தது. அதேபோன்று நீங்களும் மறைமுக எதிரிகளின் சூழ்ச்சிகளிடமிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.