Sunday 12 May, 2013

எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி 'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா பெண்மணி




எல்லா தீவிரவாதிகளும் முஸ்லிம்களல்ல'-அமெரிக்கப் பெண்மணி  'இறை இல்லத்தில் புகுந்தால் உயிர் வாழலாம்'-டாக்கா  பெண்மணி

'காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் நோய்' மற்றும் 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பார்கள்.
11.9.2001 நியுயார்க் இரட்டைக் கோபுர சம்பவத்திற்குப் பின்பு அமெரிக்கர்கள் உலக முஸ்லிம்களை அக்னிக் கக்கும் கண்ணோட்டத்தில் பார்க்கிறார்கள் என்பதினை இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நடிகர்கள் சாருகான்,அமீர்கான், உ.பி.மாநில அமைச்சர் ஆஜம் கான் போன்றோர் முஸ்லிம் பெயரினைத் தாங்கியதாலேயே அமெரிக்கா செல்லும் பொது அங்குள்ள விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் அவமானப்படுத்த  பட்ட சம்பவங்கள் வேதனையாக இருந்திருக்கும்.
ஆனால் அதே அவமானத்தினை அமெரிக்க ராணுவத்திலேயே பணியாற்றும் ஒரு அமெரிக்கக் கிருத்துவப் பெண்மணி.' நொய்டா ஹோசென்' பெயர் ஒரு முஸ்லிம் பெயர் போன்று இருப்பதாலேயே தன சக ராணுவ வீரர்களால் அவமானப் பட்டுள்ளார்.
40 வயதான விமானப் படையில் முதல் வகுப்பு சார்ஜெண்டாக உள்ள நோய்டா ஹோசென் ஒரு கத்தோலிக்க கிறிஸ்டியன் பெண்மணி. ஆனால் அவர் பெயர் முஸ்லிம் பெயரான ஹுசைன் போன்று இருப்பதால் ஒருக் கேலிப் பொருளாக தன சக ராணுவ வீரர்களிடம் காணப் படுவதாக வேதனையுடன் புலம்பியிருக்கிறார் என்றால் பாருங்களேன். அப்படி என்ன கேலிப் பொருளாக சக ராணுவ வீரர்கள் கூப்பிடுகிறார்கள் என்றால் ,'சார்ஜெண்ட்  ஹுசைன் நீங்கள் எந்தக் கடவுளை வணங்குகிறீர்கள்' என்று கேலி செய்வார்களாம்'.  சார்ஜெண்ட் ஹோசென் கூறும்போது, 'உலகில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல'. அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அத்தனை பேர்களும் முஸ்லிம்கள் அல்ல ' என்றும் கூறியிருக்கிறார். அவர் சாதாரணமாகக் கூறவில்லை. ஆப்கானிஸ்தானில் ராணுவப் பணியாற்றித் திரும்பியிருக்கும் நிலையில் சொல்லியிருக்கிறார் என்றால் எத்தனை உண்மை என்று உலகிற்குப் புரிந்திருக்கும். யார் கண்டது பிற்காலத்தில் சார்ஜெண்ட் நொய்டா ஹோசென் எல்லா வல்ல அல்லாஹ்வால் ஹுசைனாக மாறினாலும் மாறலாம் என்று நம்புவோமாக.
இஸ்லாமிய மார்க்கம் வன்முறைக்கு எதிரானது, பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருந்தால் தான் மட்டும் வயிறு முட்டச் சாப்பிடுவது சரியல்ல, மதத்தால் எந்த மனிதரையும் வெறுக்ககூடாது, பிற மத வழிபாடு தளங்களை சேதப் படுத்துதல் கூடாது, வழிச் சண்டைக்குப் போகக் கூடாது, சாந்தியும், சமாதானமும் மனிதனுக்குக் கேடையங்கள் என்று மனிதனைப் புனிதனாக்கும் ஒரு அற்புத மார்க்கம் தான் இஸ்லாம். .   அதே சமயத்தில் எலித் தொல்லைக்குப் பயந்து அழகான வீட்டினையே கொளுத்தும் செயலாக இஸ்லாமிய நாடுகளையும், அங்குள்ள மக்களையும் அல்லது பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்களையும்  அமெரிக்கா போன்ற மேலை நாடுகள் வஞ்சகக் கண்ணோடு பார்க்குமேயானால் சார்ஜெண்ட் நோய்ட ஹோசென் போன்ற மேலை நாட்டுப் படை வீர்கள் மட்டுமல்ல அங்குள்ள மக்களும் தீவிரமாக பரவி வரும் இஸ்லாமிய மார்கத்திற்கு வருவது காலத்தின் கட்டாயமே என்றால் மிகையாகாது!

பங்களா தேசத்தில் 24.4.2013 அன்று எட்டு மாடிகள் கொண்ட அமெரிக்கர் நடத்தும் ஆயத்த ஆடை நிறுவனக் கட்டிடம் இடிந்தது அதில் 1000 பேர் மாண்டதினையும், நூற்றுக் கணக்கானோர் காயம் பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவதினையும் பத்திரிக்கைகளும், 'எலெக்ட்ரானிக் மீடியாக்களும் வெளிச்சம்  போட்டுக் காட்டின அனைவருக்கும் தெரியும். பங்களா தேஷ் அரசாங்கம் மீட்புப் பணிக்கு எந்த அந்நிய நாட்டு உதவியும் தேவையில்லை என்று தன் ஊழியர்களை வைத்தே மீட்புப் [பணியினை மேற்கொண்டது. அவ்வாறு 10.5.2013 ஈடுபடும்போது என்னே அதிசயம், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு ஊழியருக்கு யாரோ ஒருவர் இடிபாடுகளிடையே தட்டுவது போன்ற ஓசைக் கேட்டு சக ஊழியர்களை அழைத்து அந்த இடத்தில் தோண்டும்போது, சுபானல்லாஹ், ஒரு பெண்மணியின் முகம் தென்பட்டது. உடனே அவசரமாக செயல்பட்டு அவரை உயிருடன் 17 நாட்களுக்குப் பின்பு மீட்டிருக்கிறார்கள் என்றால் அதிசியத்திலும் அதிசயம்.
அந்தப் பெண்மணி 19 வயதான முஸ்லிம் பெண்மணி ரேஷ்மா ஆகும். மருத்துவமனையில் சிகிச்சைப் பெரும் அவர் கூறும்போது,'தான் மாட்டிகொண்ட இடம் தொழும் அறையாகும்.  தன்னோடு வேலைப் பார்த்தவர்கள் சிலர் மாண்டு அருகில் கிடப்பதினை பார்த்திருக்கிறார். அந்த அறையின் மூலையில் சில காய்ந்த பேரித்தம் பழங்களும், ஒரு குடுவையில் தண்ணீரும் இருந்தது. அதனை சிறுக, சிறுக சாப்பிட்டு உயிர் வாழ்ந்தேன் எப்படியும் தன்னை மீட்டு விடுவார்கள் என்று உறுதியுடன் அங்கே கிடந்த ஒரு இரும்புத் துண்டையும், இடிபாடுகள் கிடந்தக் கல்லையும் எடுத்து 17 நாட்களும் வெளியே இருப்பவர்கள் கேட்ப்பார்கள் என்ற எண்ணத்தில் தட்டியுள்ளார். ஆனால் 16 நாட்கள் ஆகியும் பலனில்லை என்று சோர்ந்திருக்கும் போது 17ஆம் நாள் தட்டும்போது சத்தம் கேட்டு மீட்டார்கள்' என்று சொல்லியுள்ளார்.
இதிலிருந்து கீழ்கண்டவை புலனாகிறது:
1) புகலிடம் தேடி இறை இல்லத்தில் புகுந்தவர்களை அல்லாஹ் ஒருபோதும் கை விட்டதில்லை.
2) 'எந்தத் துன்பம் தீர்ப்பதிற்கும் என்னிடம் கையேந்துங்கள்' என்ற கூற்று உண்மையாகி இன்னல் பட்ட ரேஷ்மாவினை ஏக இறைவன் காப்பற்றியதுபோல ஈமான் கொண்ட அனைவரையும் அல்லாஹ் காப்பாற்றுவான்.
3) பெருமானார் ஸல்லலாகு அலைவ ஸல்லம் அவர்களும் அவர்கள் தோழர்களும் பல நாட்கள் பேரித்தம் பழத்தினையும், கொஞ்சம் தண்ணீரையும் வைத்தே பல போர்களை வென்றிருக்கிறார்கள் என்பது வெறும் கதை அல்ல. மாறாக நிஜமான நிகழ்வு என்று உங்களுக்கு தற்போதுத் தெளிவாகுமல்லவா?.
4)பெண்கள் அல்லது குழந்தைகள் தனிமையில் இருந்தால் பேய்,பிசாசு , முனி, பூதம் பிடித்துக் கொள்ளும் என்ற சாத்தான் வேதம் ஓதும் பூச்சாண்டிக் புலம்பல் எல்லாம் இனி எடுபடாது. ஏனென்றால் ஒரு பெண்மணி தனிமையில் 17 நாட்கள் 90 டிகிரி வெப்பத்தில் மனத் தைரியத்துடன் வாழ்ந்து இருக்கிறாள். 
5) பயத்தினாலேயே செத்து மடியும் இந்த நவீன உலகத்தில்  மனதில் 'தில்' இருந்தால் எப்படியும் வாழலாம் என்று உலகிற்கு, குறிப்பாக பெண்களுக்கு எடுத்துக் காட்டகத் திகழ்கிறாள் ரேஷ்மா என்ற முக்காடுப் போட்ட முஸ்லிம் பெண்மணி.

No comments:

Post a Comment