Tuesday 19 October, 2021

வாயால் வடை சுடும் வலைத் தளங்கள்

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

 வலைத்தளங்கள் அறிவை விரிவு செய்யவும், புதிய தொடர்புகளை உருவாக்கி மனித நேசம் வளர்க்கவும், ஆரோக்கியமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதிற்காகவும், சமூக பிரச்சனைகளுக்கு ஆரோக்கியமாக குரல் கொடுக்கவும், சமூக ஒற்றுமை மேன்படுத்தவும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பது  போன்ற பல்வேறு நன்மைக்காக  உருவாக்கப் பட்டதாகும். இந்த வலைத்தளத்தினை வயது வித்தியாசம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர். ஆனால் என்ன நடக்கின்றது என்றால் அதனை கட்டுப் பாடோது பயன்படுத்தாமல், அதிக அளவிற்கு சோறு தண்ணி சாப்பிடாமல், வேலை, குடும்பம், உறவுகள்,போன்றவற்றை தவிர்த்து  அதிலேயே மூழ்கி விடுகின்றனர்.  சிலர் தங்கள் குடும்பப் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும், தங்கள் ஊரில் நடக்கும் விருப்பு, வெறுப்பு செய்திகளை தங்கள் கருத்துடன் பகிர்ந்து கொள்ளவும், அரசியலில் தங்கள் பங்கு போன்றவற்றை வெளிக்காட்டவும், கல்வி நிலையங்களில் உள்ள உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கவும் பயன் படுத்துகின்றனர். பல செய்திகள் வீண் சண்டைகளையும், சங்கடங்களையும் ஏற்படுத்துகின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். சில வியாபார பெருமக்களை தங்கள் சுயதொழில் செய்திகளை பரப்பவும், கொரானா காலங்களில் போலியான மருந்து உபகரணங்களை விளம்பரப் படுத்தி மக்களிடம் காசு பறிக்கும் தொழிலிலும் ஈடுபடுகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும் இருந்தாலும் வலைத்தளங்களிலிருந்து அவர்களுக்கு மீளத் தெரிவதில்லை.

            தற்போதைய இளைஞர்களிடமிருந்து அதனைப் பிரிப்பது மிகவும் சிரமம். ஆகவே உங்கள் பணிகளை விரைந்து முடிக்க ஒரு செயலியினை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயலி நீங்கள் உங்கள் முக்கிய செயல்களை குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிட உங்களுக்கு நினைவூட்டும். இதன் மூலம் நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தினை வீணான காரியங்களில் ஈடுபடுவதினை தவிர்க்கமுடியும். 

            உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை வலைத்தளங்கள் ஆரம்பிக்கும்போது பகிர்ந்து கொண்டீர்களென்றால் அதனை தனி பகுதியில் வைக்க மறந்து விடுவதால் உங்களைப் போல போலியான வலைத்தளங்களில் உறுப்பினர்களாக ஆகி உங்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வார்கள். ஆகவே உங்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். இப்போதெல்லாம் வலைத்தளங்கள் ஒரு பொழுது போக்குத் தளமாக மாறி வருகிறது உங்களுக்குத் தெரியும். சில பெண்கள் வலைத்தளங்களால் அதிகமாக ஈர்க்கப் பட்டு குடும்ப பாரம்பரியம் மறந்து குழந்தை, கணவன் போன்றவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு சீட்டாய்ப் பறந்து, பின்பு சீரழிந்தது செய்திகளில் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற நிலைகள் தேவையா என்று சுயசிந்தனை செய்யவேண்டும்.

ஆகவே வலைத்தளங்களை பயன்படுத்துபவர் அவை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா அல்லது அழிவுப் பாதைக்கும், அடிதடிக்கும் இழுத்துச் செல்கிறதா என்று சிந்தித்து செயலாற்ற வேண்டும். தற்போதெல்லாம் உங்கள் வலைத்தளங்களை அரசு கண்காணிக்கின்றது என்ற உணர்வு வேண்டும். அதனை உணரவில்லையெனில் கேஸு, கோர்ட்டு என்று அல்லல் பட வேண்டும். ஆகவே உங்கள் கவன ஈர்ப்பு ஆக்கப் பூர்வமான செயலைக் கொண்டதாக அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டால் தவறில்லை என நினைக்கின்றேன்!

No comments:

Post a Comment