Monday, 30 May 2022

மத துவேசம் உச்ச கட்டமா வன்முறை ?

 


( டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

 

சமீப காலங்களில் மத துவேசத்தால் வன்முறைகள் ஏற்படுகின்றன. மதம் என்ற வார்த்தைக்கு எந்த ஒரு அறிவுபூர்வமான விளக்கமும் இல்லை. அது மேற்கத்திய கலாசாரத்தை ஒட்டிய வார்த்தையாகும். மதம் ஒரு நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது வேத புத்தகங்களை கொண்டதாகவோ, அல்லது வழிபாட்டு தளங்களைத் உள்ளடக்கியதாகவோ அமைந்துள்ளது. வன்முறை என்பது வேற்று சமூகத்தினர் உடலுக்கும் பொருளுக்கும் உலை வைப்பதாகும். எந்த ஒரு மதமும் வன்முறையினை அடுத்த மதத்தினரிடம் காட்டும்படி சொல்வதில்லை. ஆனால் உலகளவில் மத துவேஷ வன்முறைகள் நடந்து கொண்டு தான் உள்ளது. மத வன்முறை மத கோட்பாடுகளின் படியும்,  மதங்களை பின் பற்றும் அரசியல் கட்சிகளால் நடத்தப்படும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகுமென்றால் மிகையில்லை.

            மதமென்ற சொல் பழைய கிருத்துவ ஏற்பாடுகளிலோ(old testament),திருகுரானிலோ, யூத ஹீப்ரு மொழியிலோ சொல்லப் படவில்லை. எப்போது புதிய ஏற்பாடு(Protestant) என்ற வழிபாடு நடந்ததோ மற்றும் எப்போது பிரிட்டிஷ் கும்பனி ஆட்சியின் காலனி ஆதிக்கம் அமல் ஆக்கப் பட்டதோ அதிலிருந்து மதங்கள் என்ற சொல் வேரூன்ற ஆரம்பித்தது. 19ம் நூற்றாண்டில் தான் புத்த மதம், ஹிந்து மதம், டாவோஸியம், கண்பூனிசம் என்ற சொற்கள் வெளி வந்தன.  மதங்களால் ஏற்படும் வன்முறைகள் உடலுக்கு பங்கமும், பொருளுக்கு சேதமும் மாட்டு விளைவிப்பதில்லை, மாறாக தனிப்பட்ட மனிதரின் உரிமைகளை சொல்லாலும், செயலாலும் தாக்கப் படுவதாக சமூக ஆராய்ச்சியாளர்கள்  ரால்ப் டென்னேர் (Raliph Tanner) மற்றும் டெரன்ஸ் பிரேதேய்ம்( Terence Fretheim ) சொல்கிறார்கள்.

            Religious persecution: மதத்தின் பெயரால் திட்டமிட்டு தனிப்பட்டவரையோ, அல்லது ஒரு பகுதியினரையோ, தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்குவது, அல்லது ஒரு சமூக அமைப்போ அல்லது அரசு தனது சட்டங்கள் மூலம் அல்லது அதிகார மமதைகள் மூலம் கொடுமைப் படுத்துவது மத துன்புறுத்துதல் ஆகும். உண்மையிலே உலகில் பல நாடுகளில் இது போன்ற மதத்தின் பெயரால் வன்முறைகள் நிகழ்த்தப் படுகின்றன என்று அமெரிக்க சமூக கல்வியாளர் ஸ்மித் கூறுகின்றார். அவர் கூற்றினை உண்மைக்குவது போல கருப்பு இன அமெரிக்கர்களை திட்டுவது, அடிப்பது, கொடுமைக்கு ஆளாக்குவது, அல்லது அதிகார போதையில் கொலை பாதக செயல்களில் ஈடுபடுவது  போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் உள்ளது என்பதினை தொலைக்காட்சி மூலம் காணலாம்.

            முந்தைய வரலாற்றில் எகிப்து, கிரேக்கம், ரோம் போன்ற நாடுகள் வன்முறையில் ஈடுபட்ட செய்திகள் உள்ளன. அவையெல்லாம் அப்போதைய சட்டப் படி செல்லும் என்று ஆசிரியர் கிள்ளியன் கிளார்க்( Gillian clark) சொல்கிறார். அதேபோன்றே பாரசீக பேரரசு சைரஸ், டாரிஸ் காலங்களிலும் செயல் படுத்தப் பட்டன. பியூ(PEW) என்ற ஆராய்ச்சி மையம் சார்பாக 2017ல் நடத்தப் பட்ட ஆய்வில் முஸ்லிம்கள் துன்பத்திற்கு ஆளாகுவது உலகில் 125 நாடுகளிலும், 105 உலக அரசுகளாலும், 140 நாடுகளில் அரசு சார்ந்த சமூக அமைப்புகளாலும் உள்ளதாக கூறப் படுகிறது.

            Religious cleaning: ஒரு சமூதாயத்தினவரை அவர்கள் வாழும் பகுதியிலிருந்து வன்முறையால் இடம் பெயரச் செய்வது பொருளாதார மற்றும் அரசியல் காரணதிற்காக இடம் பெயரச்செய்வது ஆகும். உதாரணத்திற்கு கனடா நாட்டில் கமலோப் என்ற பகுதியின்  வாழும் அந்த நாட்டின் பழமைநாட்டு  மக்களையும் அவர்கள் குழந்தைகளையும் மலையடிவாரத்திற்கு கொண்டு சென்று ஆக்கிரமிப்பு பிரிட்டிஷ் படையினர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவமும் 19ம் நூற்றாண்டில் நடந்திருக்கின்றது. அதேபோன்று ருவாண்டா நாட்டில் டுட்சி இனத்தினவரை கொலை செய்து விரட்டி படித்த சம்பவம் 21ம் நூற்றாண்டில் நடந்துள்ளது. அமெரிக்காவின் ராணுவத்தால் 29 டிசம்பர் மாதம் 1890ம் நூற்றாண்டில் டக்கோட்டா பகுதியில் வாழும் மக்களை விரட்டியடித்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திற்கு 'battle of wounded knee' என்று அழைப்பார்கள். ஒட்டோமான் பேரரசு, பழைய யுகோஸ்லோவியா செர்பியா அரசுகளால் அர்மேனிய முஸ்லிம்களை இடம் பெயரச்செய்தது, அமெரிக்க 2001 செப்டம்பர் மாதம் 11ந்தேதி நடந்த இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின்பு Islamophobia என்ற முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடு, அல்லது இஸ்லாத்தினை ஒழித்துக் கட்டுவது என்று கங்கணம் கட்டி ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா கூட்டுப் படை எடுத்த வன்முறை செயல்,  சீன ஜின்ஜியாங் மாநிலத்தில் உஜ்ஜார் இன முஸ்லிம்கள் மேல் காட்டிய அடக்குமுறை, பர்மியா அரசு ரொகிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்திய வன்முறைகள், 2002 ம் ஆண்டு குஜராத்தில் நடத்திய வன்முறை, 2013ல் உத்தர பிரதேசத்தில் முஸாபிர் நகரில் நடத்திய மத சார்ந்த வன்முறைகள், புது டெல்லியில் 2020 ல் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான நடத்தப் பட்ட வன்முறைகள் அந்த religious cleansing மதத்தின் அடிப்படையில் ஒரு சமூகத்தினரை அவர்கள் பகுதியிலிருந்து விரட்டி அடிப்பது ஆகும்.

            வழிபாட்டு தளங்கள் இடிக்கப் படுதல்: ஐ.நா சபை அறிக்கையின் படி ஒரு மதத்தின் வழிபாட்டுத் தளங்களை இடிப்பது ஒரு முறையில் வன்முறையாகவும், மனித உரிமையினை மீறியதாகவும் கூறுகின்றது. உதாரணத்திற்கு லிபியாவில் 2011 அக்டொபர் மாதத்திலிருந்து 2012 ஆகஸ்ட் மாதம் வரை சூபி மத வழிபாடு தளங்கள், சூபிமத இமாம் ‘சிடி அப்துல் ஸலாம் அழ அஸ்னார்’ மற்றும் ‘அஃசாபி’ பள்ளிவாசல்களும் இடிக்கப் பட்டத்தினை கூறுகின்றது.அதற்கான காரணத்தினை நியுஜிலாந்து அக்லாண்ட் சமூகவியலாளர் அட்கின்சன் கூறும்போது, 'கல்வி அறிவு அதிமாகுதல், சமூகத்தில் ஏற்றத் தாழ்வு, சமூதாயத்தில் புறக்கணிக்கப் படுதல்' போன்றவைதான் என்று கூறுகின்றார்.

            அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் 20சதவீத அமெரிக்கர்கள் எந்தவொரு மாதாகோவிலிலும் உறுப்பினர்களாக இல்லையாம். ஆனால் 68 சதவீதம் பேர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், 37 சதவீதம் மத நம்பிக்கை கொண்டவர்களாகவும், மற்றும் உலகினை வழிநடத்தும் ஓர் உந்துப் பொருள் உண்டு என்று நம்புகின்றனர்.

            நமது நாட்டில் 1992 ல் அயோத்யா பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்பு 2020ல் டெல்லியில் நடந்த குடியுரிமை போராட்டத்தின்போது இடிக்கப்பட்ட பள்ளி, தர்காக்கள் 500 என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் மங்களூரில் 27.9.2021 உச்சமன்ற உத்தரவின்படி அரசு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்ட கோவில்கள் 640 என்றும் அது இதுவரை இடிக்கப் படவில்லையாம். 2014ம் ஆண்டுகளுக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸ். விழிப்புப் படை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம் தெளிவாகின்றது. உதாரணத்திற்கு டெல்லி கூர்கோன் வெளி மைதானத்தில் வெள்ளி அன்று ஜும்மா தொழுகையினை அங்குள்ள தொழிலார்கள் தொழுவதிற்கும், கர்நாடகா ஈத்கா மைதானத்தில் வெள்ளி ஜும்மா தொழுகை நடத்துவதற்கும், பள்ளிகளில் தொழுகைக்கான அழைப்பினை அந்தப் பகுதி முஸ்லிம்களை ஒளி பெருக்கியில் மூலம் அழைப்பதிற்கும், பெண்கள் தங்கள் அங்கங்கள் வெளி ஆடவரின் கழுகுப் பார்வையிலிருந்து மறைப்பதிற்காக அணியப் படும்  புர்கா, ஹிஜாப் கூடாது என்றும், ஹஜ் பெருநாள் முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்கும் கூட அந்த வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை அணுகி தடை உத்தரவு வாங்கி விடுகின்றனர். அப்படி தடை உத்தரவுகள் கொடுப்பது மனித உரிமைகளை மீராதா என்று நீதி மன்றங்கள் தான் யோசிக்க வேண்டும். நமது நாட்டில் 1992 ல் அயோத்யா பள்ளிவாசல் இடிப்பிற்குப் பின்பு 2020ல் டெல்லியில் நடந்த குடியுரிமை போராட்டத்தின்போது இடிக்கப்பட்ட பள்ளி, தர்காக்கள் 500 என்று கணக்கிடப் பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா மாநிலம் மங்களூரில் 27.9.2021 உச்சமன்ற உத்தரவின்படி அரசு நிலங்களில் ஆக்கிரமித்துக் கட்டப் பட்ட கோவில்கள் 640 என்றும் அது இதுவரை இடிக்கப் படவில்லையாம். 2014ம் ஆண்டுகளுக்குப் பின்பு ஆர்.எஸ்.எஸ். விழிப்புப் படை நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்வதன் மூலம்  முஸ்லிம்களுக்கு எதிரான வன்மம் தெளிவாகின்றது. உதாரணத்திற்கு டெல்லி கூர்கோன் வெளி மைதானத்தில் வெள்ளி அன்று ஜும்மா தொழுகையினை அங்குள்ள தொழிலார்கள் தொழுவதிற்கும், கர்நாடகா ஈத்கா மைதானத்தில் வெள்ளி ஜும்மா தொழுகை நடத்துவதற்கும், பள்ளிகளில் தொழுகைக்கான அழைப்பினை அந்தப் பகுதி முஸ்லிம்களை ஒளி பெருக்கியில் மூலம் அழைப்பதிற்கும், பெண்கள் தங்கள் அங்கங்கள் வெளி ஆடவரின் கழுகுப் பார்வையிலிருந்து மறைப்பதிற்காக அணியப் படும்  புர்கா, ஹிஜாப் கூடாது என்றும், ஹஜ் பெருநாள் முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்கும் கூட அந்த வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை அணுகி தடை உத்தரவு வாங்கி விடுகின்றனர். அப்படி தடை உத்தரவுகள் கொடுப்பது மனித உரிமைகளை மீராதா என்று நீதி மன்றங்கள் தான் யோசிக்க வேண்டும்.

            அயோத்யா பாபர் மஸ்ஜித் உச்சமன்ற தீர்ப்பினை சாதகமாக பயன்படுத்தி உ.பி. கியான்வாபி, மதுரா பள்ளி, குதுப் மினார் போன்றவற்றை இடிப்பதற்கு முன்னோட்டமாக நீதிமன்றங்களில் வலது சாரி அமைப்புகள் வழக்குகள் தொடங்கியுள்ளன  என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் சொல்லும் கூற்று மிகவும் வேடிக்கையானது. உ.பி. கியான்வாபி மஸ்ஜிதில் லிங்கம் இருக்கின்றதாம். அவர்கள் சொல்லுவது இதனை  தெரியுமா தோழர்களே? பள்ளிவாசல்களில் உள்ள அகல்களின் நடுவே இருக்கும் பவுண்டைன் என்ற நீரூற்று ஆகும். ஒரு பணக்கார வீட்டின் முன்பு அது போன்ற ஒரு நீரூற்று அழகுக்காக இருக்கும். அதுபோன்றதுதான். கியான்வாபி லிங்கம் என்று கூறுவதும்.  காமாலைக் கண்களுக்கு கண்டதெல்லாம் நோய் என்று சொல்லும் பழமொழிபோலதானே இந்த வாதமும் இருக்கின்றது. சில மஸ்ஜிதில் தூண்களில் சிலை வடிவு இருக்கலாம். அதற்குக் காரணம் அப்போதைய மெஜாரிட்டி சிற்பிகள் ஹிந்துக்கள் தான். அவர்கள் வடிவமைத்த கற்தூண்கள் தான் பள்ளிவாசல்களில் இருக்கும் அதற்காக அது கோவிலாகுமா? 800 வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி செய்தாலும், 80 சதவீத இந்துக்கள் உள்ள நாட்டில் அதுபோன்று கோவில்களை இடித்து பள்ளிவாசல்கள் கட்டமுடியுமா என்று அறிவு சான்றோர் கேள்வி எழுப்பாமல் இல்லை. இருந்தாலும் மத துவேசத்தாலும், அரசியல் மற்றும் பொருளாதார பொறாமையாலும் இது போன்ற செயல்களில் வலது சாரி அமைப்பினர் 2014ம் ஆண்டுக்குப் பின்பு ஈடுபட்டுள்ளனர் என்பது தெள்ளத்தெளிவாகின்றது.

            அவர்களின் கூற்றை பொய்யாக்குவதுபோல பத்ம பூஷன் விருது பெற்ற வரலாற்று பேராசிரியர் கூறும்போது, 'அக்காலங்களில் கட்டப் பட்ட கோவில்கள் மற்றும் மசூதிகள் புத்த விக்ரகங்கள் சிற்பங்களும், கற்களும் கிடைக்கின்றன. இதற்காகவா பள்ளிவாசல்கள் இடிக்கப் படவேண்டும். மதுரா கிருஷ்ணன் கோவில் பக்கத்தில் உள்ள ஷாயி ஈத்கா மஸ்ஜித் முகலாயர் காலத்தில் கட்டப் பட்டதுதான். ஆனால் கோவிலை இடித்து முஸ்லிம்கள் கட்டினார்கள் என்றால் எப்படி அந்த கிருஷணன் கோவில் மட்டும் இடிக்கப் படாமல் தப்பியது என்று ஏன் வலது சாரி அமைப்புகள் சிந்திக்கவில்லை என்று கேள்வி கேட்காமல் இருக்க முடியவில்லைதானே. வலது சாரி அமைப்புகளின் வாதகங்களுக்கு வலிமை சேர்ப்பது போல பாபர் மஸ்ஜித் 1992ல் இடிப்பு வழக்கு வாதங்களைப் பற்றி உச்ச நீதி மன்றம் ஆராயாமல் இரவு முழுவதும் சிந்தித்து மத அடிப்படையில் அயோத்தியில் கோயில் கட்டிக்கொள்ள அனுமதி அளித்தது தான் முன்னோடியாகும்.

அப்படியென்றால் ராஜஸ்தானில் மஹாராஜா ராணா பிரதாப் சிங் சித்தேரி கோட்டையில் கட்டிய பழங்கால மினார் உள்ளது. அதன் கீழ் பகுதியில் தேவதைகளும், மேல் பகுதியில் 'அல்லா, அல்லா' என்று அராபிய எழுத்துப் பொறிக்கப் பட்டுள்ளது. அதற்காக அந்த மினாரை முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாடமுடியுமா?

            கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள், 'உண்மையில் தூங்குபவனை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது போல நடிப்பவனை எழுப்ப முடியாது'. வலது சாரி அமைப்பினரின் அறிவு ஜீவிகளுக்கு இவையெல்லாம் தெரியும். இருந்தாலும் நாட்டில் அமைதியின்மையினை வன்முறை மூலம் நிலைநாட்டி, ஹிந்துக்களை ஒன்று திரட்டி மைனாரிட்டிகளை பல வழிகளில் பயமுறுத்தி தங்களுடைய அரசியல் நோக்கங்கள் நிறைவேற்ற வேண்டுமென்பதே அவர்களுடைய தலையாய செயலாகும். ஆகவே மைனாரிட்டி சமூதாயத்தினவரும் தங்கள் உரிமைகளை ஜனநாயக நாட்டில் நிலைநிறுத்திக்கொள்வதே சாலச் சிறந்தது என்றால் மிகையாகுமா? இனி வரும் காலங்களிலாவது பள்ளிகள் கட்டும்போது அதுபோன்ற பிற மத சின்னங்கள் இல்லா கட்டிட பொருட்களை பயன் படுத்த வேண்டும். அது மட்டுமல்லாமல் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் எந்த வில்லங்கம் இல்லாத இடமாக ஆராய்ந்து பள்ளிகளை கட்டுவது சாலச்சிறந்ததாகுமல்லவா? நீதிமன்றங்களில் தொடுக்கப் படும் வழக்குகளுக்கு வல்லமைவாய்ந்த வழக்கறிஞர்களை சமூதாயம் உருவாக்கி அவை ஒரு குழுவாக இயங்க வேண்டுமல்லவா?

           

           

           

Tuesday, 12 April 2022

காற்றில் பறந்த கீதமா அடிப்படை உரிமை!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

இந்திய நாடு சுதந்திரத்தினை சுவைத்த பின்பு 20.08.1947 ஆம் தேதி அரசியலமைப்பு சபையினால் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் தலைமையில் முகமது சாதத்துல்லா உள்பட 6 உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புக்கு வழி வகுத்தது. அந்த அமைப்பு ஜனநாயகத்தில் அடிப்படை உரிமை என்று அத்தியாயம் 12லிருந்தது 35 விரிவாக சொல்லப் பட்டுள்ளது. முக்கியமாக ஆறு அடிப்படை உரிமைகளாக1) சம உரிமை, 2) சுதந்திரம், 3) சுரண்டலுக்கு எதிரான உரிமை, 4) மதம், 5) கல்வி மற்றும் பண்பாடு, 6) அடிப்படை உரிமை கோரல்  போன்றவையாகும்.

            ஆனால் என்ன நடக்கின்றது இந்திய நாட்டில். முஸ்லிம்கள் தொழுகை நடத்த பள்ளிவாசல் தேவையில்லை என்று அயோத்தியில் மஸ்ஜித் இடிப்பை நியாயப் படுத்தியது நீதி மன்றம். ஹரியானா மாநிலம் குர்கோன் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு கூடும் மைதானத்தில் தொழுகை நடத்தக் கூடாது என்ற ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டு நிறுத்தப் பட்டதும் ஒரு செய்தி. புது டெல்லியில் 'லால் கும்பத்' பஞ்சு ஷீல் என்க்ளேவ்' நில்லி மஸ்ஜித்' ஆகியவற்றில் தொழுகைகள் நிறுத்தப் பட்டத்திற்கு யார் காரணம் என்று தெரியவில்லை. மஹாராஷ்டிராவில் அரசியல் ரீதியாக வெல்ல முடியாத ராஜ் தாக்கரே முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைக்கும் ஆசான் ஒலி பெருக்கிகளை நிறுத்த வேண்டும் அல்லது நாங்கள் தெரு தோறும் அனுமான் பஜனை நடத்த ஒலி பெருக்கிக்கு அனுமதிக்க வேண்டும் என்று முண்டாசு கட்டுகிறார். அவரைத் தொடர்ந்து கர்நாடக பஜ்ரங் தால் மற்றும் ஸ்ரீ ராம் சேனா அமைப்பும் குரல் கொடுத்துள்ளது. முஸ்லிம்கள் தொழுகைக்கு அழைக்கும் பங்கு அதிகமாக 2 நிமிடமாகும். மாறாக அவர்கள் சொல்லும் பஜனை மணிக்கணக்கில் காதைப் பிளக்கும். அவைகளெல்லாம் பார்க்கும்போது நாட்டில் மத சுதந்திரம் பறி போகிறதோ என்று எண்ணத் தோன்றவில்லையா?

            முஸ்லிம் பெண்கள் வயதுக்கு வந்து விட்டால் ஹிஜாப் அணிந்து தங்களது அங்கங்கள் வெளி ஆடவர் கண்ணுக்கு இருக்க ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கலாட்சார பண்பாடு அதனை இந்திய அடிப்படை உரிமையும் அனுமதிக்கின்றது. அதுபோன்ற முக்காடுகளை வட மாநிலத்தில் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கிலும் கடைப் பிடிக்கப் படுவதினை நாம் பார்க்கலாம். ஏன் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி கூட முக்காடு அணிந்திருப்பதினை பலர் பார்த்திருப்பீர்கள். இதுகாறும் இதனை யாரும் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் கர்நாடகாவில் பி.ஜெ.பி அரசு பதவி ஏற்ற பின்னர் அங்குள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப் பட்டுள்ளது. அது மட்டுமா? உணவு முறையும் விட்டு வைக்கவில்லை வலது சாரி அமைப்புகள். தெற்கு மற்றும் கிழக்கு டெல்லியில் அமாவாசை முந்திய, பிந்திய அமாவாசை அன்றும் இறைச்சி கடை திறந்திருக்க அனுமதியில்லை என்ற அறிவிப்பு சொல்லப் பட்டது. விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தால், இந்து ஜார்கன் வேதிகா அமைப்புகள் இந்துக்கள் முஸ்லிம் இறைச்சி கடைகளில் வாங்குவதினை தவிர்க்க அறைகூவல் விட்டுள்ளது, அதற்கு காரணமாக அது ஹலால் இறைச்சியாம். அந்த ஹலால் இறைச்சியில் எவ்வாறு விஞ்ஞானப் பூர்வமான செயல் இருக்கின்றது என்று அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் மத துவேசம் அவர்களை அப்படி சொல்ல வைக்கின்றது. ஒருவர் என்ன உணவு உண்ண வேண்டும், எந்தக் கடையில் என்ன வாங்க வேண்டும் என்ற உரிமையை அடுத்தவர் எந்த சட்டத்தில் அனுமதிக்கின்றது என்று தெரியவில்லை. ஏப்ரல் 10ந்தேதி இரவு டெல்லியிலுள்ள ஜவஹர்லால் பல்கலைக் கழக காவேரி விடுதியில் இரவு புலால் உணவு பரிமாறப் போகிறதை அறிந்த ஏ.பி.வி.பி(ஹிந்து மாணவர் அமைப்பினர்) உள்ளே புகுந்து தாக்கியுள்ளனர். அதில் பெண் மாணவர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர். உங்களுக்கு எல்லாம் தெரியும் வண்டியில் வியாபாரத்துக்காக அல்லது வளர்ப்பதிற்காக பசு மாடுகளை ஏற்றிப் போனவர்களை அடிப்பதும், கொலை சமபவத்தில் ஈடுபடுவது. அதுபோன்ற Lynching சம்பவத்தில் ஈடுபட்டவர்களை ஏன் NIA  என்ற தேசிய காவல் படை நடவடிக்கை எடுப்பதில்லை. மாறாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடென் 1.4.2022ல் Lynching போன்ற குற்றங்கள் நடந்தால் அது தேசிய குற்றம் என்ற சட்டத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.  கர்நாடகாவில் உள்ள தார்வாடில் உள்ள கோவிலில் முஸ்லிம்கள் கடை வைக்கக் கூடாது என்று கூக்குரல் எழுப்பப் பட்டதாம். கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டி வீரப்பா கூட வலது சாரி அமைப்பினருக்கு 11.4.2022 அன்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிகள் நமது ஒரு தாய் மக்கள் அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். ஆனால் சில விஷமிகள் மத நல்லிணக்கத்தினை குழைப்பது நல்லதல்ல என்று அறிவுரை வழங்கியுள்ளார். நீங்கள் பழனி கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள கடைகள் பெரும்பாலும் பழனி பெரிய மசூதிக்கு சொந்தமாகும். அப்படியென்றால் அங்கே முஸ்லிம்கள் கடை வைக்கக் கூடாதா? அவ்வாறு செய்தால் அடிப்படை உரிமை மீறுவது ஆகாதா? டெல்லி சென்றவர்கள் குத்புதீன் ஐபக் என்ற முஸ்லிம் மன்னன் கட்டிய குதுப் மினாரை பார்க்காமல் வர மாட்டீர்கள். அந்த கோபுரம் 1993ம் ஆண்டு UNESCO ஐநா கலாச்சார மையத்தினால் பழமை வாய்ந்த கட்டிடக் கலை என்று ஏற்றுக் கொள்ளப் பட்டது. தற்போது VHP விஷ்வா ஹிந்து பாரிசாட் அதனை கடவுள் விஷ்ணு சிலம்பி என்றும் அதனை இடித்து விட்டு விஷ்ணு கோவில் கட்டவேண்டும் என்றும் சொல்வது என்ன நியாயம் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றவில்லையா?

            வட இந்தியாவில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் 2/2022ல் வலது சாரி சுவாமி மஹாசாவானந் இந்துக்கள் ஒவ்வொருவரும் ஆயுதம் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும்  அது தான் ஆர் எஸ் எஸ் அமைப்பு ஜக்கா என்ற பெயரில் கம்பு, கத்தி மற்றும் பெண்களுக்கு துப்பாக்கி பயிற்சியினை நாட்டில் பல இடங்களில் நடத்துகின்றன. உத்திரபிரதேச சுவாமி முனி  கெஜராபாதில் பேசும்போது முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று முண்டாசு தட்டியுள்ளார். அவருக்குத் தெரியாது சீரிப் பாயும் புலியினை அரிசியில் உமியை பிரித்து எடுக்கும் சொளகு கொண்டு விரட்டும் வீரப்பெண்கள் நிறைந்த நாடு இந்திய மண் என்று. இப்படி மத, மற்றும் பண்பாடு, வன்முறை தூண்டுகிற பேச்சினை வலது சாரி அமைப்பு தலைவர்கள் எல்லாம் பேசிவருகிறார்கள், ஆனால் இம் என்றால் என்.ஐ.ஏ. என்று சொல்லும் அரசுகள் ஏன் இந்த செயல்களுக்கு மட்டும் கண்டும் காணாமல் உள்ளது என்று தெரியவில்லையே!

            அதற்கு ஒத்து ஊதுவதுபோல கர்நாடக உயர் நீதிமன்றமும் ஹிஜாப் அணிவது முஸ்லிம்களுக்கு கட்டாயமில்லை என்று கூறியுள்ளது. ஒரு மதத்தினர் பண்பாடு பற்றி கூறுவதற்கு யாருக்கு உரிமை உண்டு. பெண்கள் வன் முறை பற்றி பேசும் சட்டத்தில் மத வழி பாடுகளில் பெண்களை படுக்க வைத்து அவர்கள் முதுகில் ஆண்கள் நடக்க மட்டும் அனுமதியுண்டு. தூக்கு விழா என்று பச்சிளம் குழந்தைகள் கதற கதற உயரத்தில் ஒருவர் முதுகில் அலகு குத்திவிட்டு தூக்கும் அனுமதிக்கு யார் அனுமதி கொடுத்தது, பெண்களுக்கு தோசம் மற்றும் பேய் பிசாசு விரட்டுகிறேன் என்று சாட்டையால் பெண்களை சராமாரியாக அடிக்கும் வன்முறை செயல்  உரிமை எந்த சட்டத்தில் உள்ளது. அவையெல்லாம் அவர்கள் மத பண்பாடு, வழிபாடு தானே! ஏன் அதனையெல்லாம் பேசுவதில்லை, நீதிமன்றங்கள் கண்டும் காணாது உள்ளதே என்ற கேள்வி உங்களுக்கு தோன்றவில்லையா!

            நம் சமுதாயம் இது போன்ற கொடுமைகளை இதுவரை அனுபவிக்கவில்லையா என்று நீங்கள் கேட்கலாம். ஏன் இல்லை ரசூலுல்லாஹ் காலத்திலிருந்து, சிலுவை யுத்தம் வரை எதிர் கொண்டுதான் எழுச்சி கண்டுள்ளது. 13ம் நூற்றாண்டில் மங்கோலிய பேரரசின்  செங்கிஸ்கான் பேரன் மொங்கோகான் பல நாடுகளை கைப்பற்றினான். 500 ஆண்டு பழமையான அப்பாஸிய ஆட்சிமீது மங்கோலியர் கவனம் திரும்பியது. தளபதி ஹுலாகு கான் தலைமையில் பாக்தாத்தை கைப்பற்றி சொல்லவொன்னா துன்பத்தினை முஸ்லிம்களுக்கு தந்தனர். அதன் பின்பு அவனுடைய பார்வை ஜெருசலம் மீது திரும்பியது. அப்போதைய மல்லுக்கு மன்னன் குத்தூஸ் ஜென் ஜலாலுதீன் தலைமையில் மங்கோலிய படையினை எதிர்த்து போரிட்டு வெற்றி கண்டான். அதேபோன்று சிலுவை யுத்தத்தில் முஸ்லிம்கள் ரத்தம் ஜெருசலத்தில் கிரண்டை கால் அளவிற்கு சிந்தினாலும் மன்னன் சாலாவுதின் இறுதியில் வெற்றிகொண்டான். எத்தனை துன்பம் வந்தாலும் முஸ்லிம்களுக்கு வரும் துன்பங்களை கண்டு புறமுதுகிட்டு ஓடாது நேர் கோட்டில் எதிர்த்து நின்று வெற்றி கொள்வதே முஸ்லிம்கள் வரலாறு.

            டெல்லியில் நடந்த ஹிந்து மகாசபா பஞ்சாயத்தில் அர்ச்சகர் பதி நரசிம்மானந்தா பேசும்போது முஸ்லிம் ஒருவர் மட்டும் பிரதமரானால் 50 சதவீத ஹிந்துக்கள் முஸ்லிமாக்கப் படுவர் என்று கூறியுள்ளார். இந்தியாவினை 500 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் இருந்தும் முஸ்லிம்கள் ஜனத்தொகை 15 விழுக்காடு தாண்டாத போது ஒரு முஸ்லிம் பிரதமர் மட்டும் எப்படி அந்த காரியத்தினை செய்யமுடியும் என்று யாரும் கேள்வி கேட்கத்தானே செய்வார்கள். ஏன் முஸ்லிம்கள் எவருக்கும் இந்திய நாட்டின் பிரதமராகும் தகுதி இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். 8.8.2018ந்தேதி திபெத்தின் ஆன்மிக தலைவரும், அமைதிக்கான நோபல் பரிசினை வென்றவருமான  தலாய்லாமா அவர்கள் கோவாவில் உள்ள சாந்திநிகேதன் நகரத்தில் உள்ள கோவா இன்ஸ்டிடூட் ஆப் மானேஜிமென்டில் போசும்போது தேச பிதா மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தால் முகமது அலி ஜின்னா அவர்கள் தான் வரவேண்டும், ஏனென்றால் அவர்தான் தகுதியானவர் என்று சொன்னதாகவும், ஆனால் சில காரணங்களுக்காக அவருடைய ஆசையினை நிறைவேற்றுவதற்கு ஜவர்கர்லால் நேரு தடையாக இருந்து பின்பு அவரே முதல் பிரதமரானதும், நாடு பிரிவினைக்கும் அது தான் காரணம் என்று பேசியிருக்கும் போது முஸ்லிம்களை பிரிவினைக்கு முழுக்காரணம் என்று தற்போது சிலர் சொல்வது வரலாற்றை முழு சோற்றில் பூசணிக்காயை மறைக்கும் செயலாக உங்களுக்குத் தெரியவில்லையா?

            பிரிட்டிஷ் அரசிடம் இந்தியாவிற்காக ஆணித்தரமாக போராடிய தலைவர்களில் 1930ம் ஆண்டு லண்டனில் நடந்த முதல்  வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட அம்பேத்கார், முகமது அலி ஜின்னா, முகமது ஜபாருல்லா ஆகியோரும், 1931 ம் ஆண்டு லண்டனில் நடந்த இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட சுல்த்தான் அஹமத் கான், மிர்ஸா இஸ்மாயில், லியாகத் அலி கான், முகமது இக்பால், முகமது அலி ஜின்னா ஆகியோரும், மூன்றாம் வட்ட மேஜை மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட ஆகாகான், ஹஸ்னவி, ஹாபிஸ் கிகாயத், முகமது இக்பால் ஆகியோரும் முக்கியமானவர்கள். அப்படி இருந்தும் அவர்கள் எல்லோரும் பிரதமராகவில்லையே அதற்குக் காரணம் உள்ளடி வேலையா என்று தெரியவில்லையா உங்களுக்கு?

            இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள 'இந்தியா கேட்டில் உள்ள நினைவு சின்னத்தில்' இந்தியாவின் சுதந்தர போராட்டத்திற்காக உயிர் நீத்த 95300 தியாகிகளின் முஸ்லிம்கள் மட்டும் 61945 என்று குறிக்கப் பட்டிருக்கும் ஏதோ முஸ்லிம்கள் எல்லாம் அந்நியர் என்றும் அவர்களுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்பது போல கூக்குரல் எழுப்புவது ஏன் என்று தெரியவில்லையா உங்களுக்கு!

            இந்தியாவில் இருக்கும் 15 சதவீத முஸ்லிம்களும் மற்றவர்கள் போல திராவிட மக்களை மொஹஞ்ஜோதாரா-ஹரப்பா நாகரீகத்திலிருந்து விரட்டிய நாடோடிகளா? இல்லையே! இந்திய மணணில் மண்ணோடு மண்ணாக உழைத்து முன்னேறிய இந்தியர் தானே! அவர்கள் இஸ்லாம் என்ற அமைதி மார்க்க அகிம்சை கொள்கையில் கவர்ந்து மாக்களை புனிதர் ஆக்கிய மார்க்கத்தினை தழுவிக்கொண்டதால் அவர்கள் எல்லோரும் அந்நியரா? 80 சதவீத கிராமங்களில் சென்று பார்த்தால் முஸ்லிம்களும் அந்நியோந்நியமாக, அண்ணன் தம்பியாக, மாமன் மச்சானாக வாழ்வதினை வலது சாரி கும்பலின் கண்களுக்குத் தெரியவில்லையா? 

            இந்திய சக்ரவர்த்தி அக்பர் அவர்கள் முஸ்லிமாக இருந்தும் அவர் ராஜபுத்ரர்களுடன் பழகியதால் அந்த இனப் பெண் ஜோது பாயினை திருமணம் செய்தார். அந்த இந்தப் பெண் பெற்றெடுத்த மகனே ஜஹாங்கிர் அவருடைய மகன்கள் தான் ஜாஜஹான், அவருடைய மகனார் தான் சக்ரவர்த்தி அவுரங்கசிப். அவர்கள் பெற்றறுத்த பிள்ளைகள் எல்லாம் ஹிந்து கொள்ளு பாட்டி பேரன்கள் தானே! ஏன் அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்றால் இஸ்லாம் திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது, லஞ்சம், ஊழல் கூடாது, பதுக்கல்  கடத்தல் கூடாது, வட்டி கூடாது, கொலை கூடாது, கற்பழிப்பு கூடாது, பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது, மனிதர்களில் வேற்றுமை கூடாது, பிற மதத்தினை நிந்தனை செய்யக் கூடாது, நம்பிக்கை துரோகம், நாட்டினை துரோகம்செய்தல், பிறர் பொருளினை அபகரித்தல், அனாதையாய் விரட்டி அடித்தல், ஈகை குணம் கொள்ளல், தீமையினை சுட்டெரித்தல், மது, மாது, போதைப் பொருளுக்கு அடிமையாகிவிடக்கூடாது போன்ற 700 கட்டளைகளை போதித்ததால் தானே அவர்கள் இஸ்லாத்தினை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எப்படி அன்னியவர் ஆவர். அதனைத் தானே கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டி வீரப்பா கூட சொல்லியுள்ளார். இப்படி சந்ததி சந்ததியாக வாழும் இந்தியாவில் புது புல்லாங்குழல் சில வலது சாரி அமைப்புகள் ஊதுவதினால்  அடிப்படை உரிமைகள் எல்லாம் ஒரு காலத்தில் காற்றில் பறந்து போய் விடுமா என்று காலம் தான் பதில் சொல்லவேண்டுமா?

           

           

Tuesday, 8 March 2022

‘யாம் அறிந்ததை நீயும் அறிவாயோ !’

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

‘கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு’ என்ற பழமொழி அனைவருக்கும் தெரியும். 'சீனாவிற்கு அந்தக் காலத்தில் பயணம் கடுமையாக இருந்தாலும் அங்கே சென்றாவது கல்வி கற்றுக் கொள்ளுங்கள்' என்றது இஸ்லாம். அகிலத்தில் எத்தனையோ அறியாத செய்திகள் உள்ளன. எந்த மனிதரும் முழுமையாக கற்றவரில்லை. ஆகவே தான் அறியாத சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இந்த கட்டுரையினை வடியமைத்துள்ளேன்.

ஆங்கிலேய ஆட்சியில் ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்போது அவர்களின் குழந்தைகள் விளையாடுவதிற்காக அடிமைப்பட்ட நாடுகளின் மக்களைக் கொன்று குவிக்கும்போது அவர்களின் தலைகளை கால் பந்து விளையாடுவதிற்காக கொடுப்பார்கள் என்ற செய்தி மிகைப்படுத்துதலாக இருக்குமோ என்று ஒரு பக்கம் எண்ணத் தோன்றும்போது, ஒரு செய்தியினை கண்டேன். 1932ம் ஆண்டு உலக முதல் கால் பந்தாட்டம் உருகுவேயில் நடந்த  நிகழ்ச்சியின் போது  காற்றடித்த பந்துகளுக்குப் பதிலாக குரங்குகளின் தலைகளைப் பயன் படுத்தினார்களாம். 2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கும் உலக கால்பந்தாட்டத்திற்கு வெள்ளை மற்றும் மஞ்சள் பந்துகளை உயபோகிக்கப் போகின்றார்களாம்.

வானத்தில் தவழும் சந்திரன் மற்றும் பூமிபோன்ற கோளங்கள் சூரியனை சுற்றும் என்று கேள்விப் பட்டுள்ளோம். ஆனால் சந்திரன் கிரகம் வியாழன்(Jupitar) கிரகத்தினை ஏழு மணிக்கு ஒருதடவை ஒரு மணிக்கு 70,400 மணி வேகத்தில் சுற்றுமாம். நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக் கோபுரங்களை 11.9.2001ல் இரு விமானங்கள் மோதி அதனை தகர்த்ததில் விளைவாக 2763 பேர்கள் உயிறிழிந்தனர் என்பதும் அதனைத் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தது உங்களுக்குத் தெரியும். அந்தக் கட்டிடங்களை நேரில் பார்ப்போமேயானால் அது ஒரு ‘பான் கேக்’ போன்று அடுக்கடுக்காக இருக்கும். ஒரு அடுக்கு கீழே விழுந்தால் அதற்கு அடுத்தாற்போல உள்ள அடுக்கு விழாதவாறு கட்டிடக் கலைஞர்களால் அமைக்கப் பட்டது. பின்பு எப்படி அந்த இரண்டு கோபுரங்களும் தரைமட்டமானது என்ற கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை தானே. இரண்டு விமானங்களில் உள்ள ஏரி பொருட்களின் தீப்பிழம்பால் அந்த இரண்டு கட்டிடமும் தரைமட்டமானதாம். பழமொழி, 'வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு' தானே!

இந்தியாவில் எந்தப் பகுதியில் கொலை நடந்தாலும் ஆங்கிலேய அரசால் 1860ல்  ஆண்டு இயற்றப் பட்ட இந்திய தண்டனை சட்டம் 302 படி குற்றமாகும். ஆனால் அந்த கொலைக் குற்றம் அமெரிக்காவில் கூட்டாட்சியின் குற்றமாக (Federal offence)1963ம் ஆண்டு அமெரிக்காவின் அதிபர் ஜான் எப் கென்னடி கொலைக்குப் பின்புதான் குற்றமாக்கப் பட்டதாம்.

கொரானா நோய் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய காலத்தில் ஏன் அனைவரும் மாஸ்க்(முகத்திரை) அணிய வேண்டும், ஒருவருக்கொருவர் இடைவெளி விட வேண்டும் என்று சொல்லப் பட்டதாம் என்றால், புளு நோய் தொற்றுள்ள ஒருவர் இருமும்போது அந்த காற்றில் கிருமிகள் 60 மைல்கள் வேகத்தில் பரவக்கூடியது என்பதால் தான் அவ்வாறு சொல்லப் பட்டதாம்.

பத்தாம் நூற்றாண்டின் பாரசீக நாட்டின் தலைமை மந்திரி அபுல் காசம் இஸ்மாயில் எங்கு சென்றாலும் ஒட்டகங்களில் புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் செல்வாராம், ஆகவே அவர் நடமாடும் பல்கலைக் கழகம் என்று அழைக்கப் பட்டாராம். காரணம் ஒரு அறிவாளியினை சுற்றி மற்றவர்கள் இருந்தால் தான் சபை சிறக்கும் என்று சொல்வார்கள். அபுல் காசத்திற்கு புத்தகமே துணையாம்.

பெரும்பாலான குழந்தைகள் இரவில் தான் பிறக்குமாம்.ஏனென்றால் முன்னோர்கள் பகலில் தங்கள் வேலைகளை முடித்துக் கொண்டுவிட்டு இரவில் ஓய்வு எடுப்பதால் பிரசவவலி பெரும்பாலும் பகலை விட இரவில் தான் வருமாம். தற்போது சாதகம் பார்த்து குறிப்பிட்ட நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டுமென்று அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.

முற்காலத்தில் அமெரிக்க கண்டத்தின் மெக்சிகோ பகுதியின் பழங்குடியினர் சூரியனை வழிப் பட்டு வந்தார்களாம். சூரிய பகவானின் கோபத்திலிருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான ஆண்களை பலியிடும் பழக்கம் இருந்ததாம். உங்கள்  பலருக்குத் தெரியும் தொலைபேசியை 1876ம் ஆண்டு ‘அலெக்சாண்டர் கிரஹாம் பெல்’ கண்டு பிடித்தது. அந்த தொலை பேசி சாதனம் மேல்  பலருக்கு சந்தேகம் இருந்ததாம் , ஆகவே அவர் கண்டுபிடித்தபின் ஒரு மாதத்தில் 6 தொலை பேசிகள் தான் விற்கப் பட்டதாம். ஆனால் இன்று தொலைபேசி உபயோகிப்பர் எண்ணிக்கை 531 கோடியாம்.

பர்மா செல்(Burma Shell) என்ற எண்ணைக் கம்பனி உலகம் முழுவதும் இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த கம்பனியை ஏன் அவ்வாறு அழைக்கின்றார்கள் என்றால் அந்தக் கம்பனி முதன் முதலில் இங்கிலாந்தில் கடலுக்கு அடியில் இருக்கும் 'கடல் ஓடுகளை' எடுத்து விற்பனை செய்து வந்ததால் அந்த பெயர் வந்ததாம். அதே போன்று தான் Zony கம்பனி டிவி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்வது உங்களுக்குத் தெரியும். அந்தக் கம்பனி முதன் முதலில் 'Rice Cooker' தான் கண்டுபிடித்ததாம்.

மனிதனின் உடலில் உள்ள தசைகளில் மிகவும் பலமானது எலும்பில்லா நாக்குதானாம். பெரியோர் 'அந்த எலும்பில்லா நாக்கிலிருந்து புறப்படும் சொல் கூர்மையான வாலை விட  என்றும், ஆறாத காயத்தினை ஏற்படுத்தக் கூடியது என்றும் ஆகவே பேசும்போது நிதானம் தேவை என்றும் சொல்வர். காஃபி  சுவையானது தான் அதுவும் பில்டர் காஃபி என்றால் நாவில் நீர் சுரக்காதவர் யாருமிலர். உலகிலேயே காஃபி குடிப்பவர்கள் அமெரிக்கர்கள் தானாம். அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு ஒரு கோடி மூட்டை காஃபி தேவைப் படுகிறதாம். ஒரு இடத்தில் நில நடுக்கம் ஏற்படும்போது எத்தனை மைல் வரை அதன் தாக்கம் உணர முடியும் என்று நினைகிண்றீர்கள். 1755ம் ஆண்டு போர்ச்சுகல் நாட்டின் 'லிசபன்' நகரில் ஏற்பட்ட நில நடுக்கம் தாக்கம் 2771 ஸ்காட்லாண்ட் நாட்டின் 'லாட் நெஸ்' நகரில் உணரப்பட்டதாம்.

பிளாஸ்டிக் பொருட்களை ஏன் உபயோகிக்கக் கூடாது என்று சொல்கிறார்கள் தெரியுமா, அவை சீக்கிரமே மக்கி அழுகிபோகுமாம். ஆனால் கண்ணாடி எத்தனை தடவை மறு சுழற்சி செய்தாலும் கெட்டுப் போகாதாம். ஆகவே தான் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதினை தடை செய்துள்ளார்கள். அந்தக் காலத்தில் முஸ்லிம்கள் திருமண வைபவங்களில் மணமகனுக்கு பெரியோர் உபயோகிக்கும் துருக்கி தொப்பி என்ற சிகப்புக் கலர் கொண்ட நீண்ட குஞ்சம் வைத்ததினை அணிவார்கள். அது ஏன் தெரியுமாம் திருமணம் நடக்கும்போது கூட்ட நெரிசலில் மண மகன் தலையில் வேற்காது, காற்று வருவத்திற்காக அணிவார்களாம். அதேபோன்று தான் பெரிய ஸ்டார் ஹோட்டல் சமையலையில் சமையல்  கலைஞர்கள் நீண்ட வெள்ளை நிற தொப்பியும், வெள்ளை சட்டையும் அணிந்திருப்பதினை கண்டு இருப்பீர்கள். அவை எதற்கென்றால் சமையலறையில் ஏற்படும் வெட்ப தாக்கத்தினை தாங்குவதிற்காக கொடுக்கப் பட்டுள்ளதாம். திருக் குரான் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரசூலாவிற்கு 23 ஆண்டுகள் இடைவெளியில் அருளப்பட்டது என்று உங்களுக்குத் தெரியும். அதனை மூன்றாம் கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் காலத்தில் கைகளால் எழுதப் பட்டதாம். ஆனால் கிருத்துவர்களின் வேதமான பைபிள் 40 எழுத்தாளர்களால் 1500 ஆண்டுகளில் எழுதப் பட்டதாம்.

கம்ப்யூட்டர் இயக்குவபர்களோ, அல்லது இசை ரசிப்பவர்களோ இரண்டு காதுகளிலும் ஹெட் போன் மணிக்கணக்கில்மாட்டிக் கொண்டு  இருப்பதனை பார்த்திருப்பீர்கள். அவ்வாறு இடைவெளி இல்லாமல் மாட்டிக் கொள்ளும்போது பாக்ட்ரியா (நுண்ணுயிர்கள்) 700 மடங்கு அதிகமாகுமாம். ஆகவே அதனை உபயோகிக்காது நல்லது என்றே சொல்லப் படுகிறது.

ஆலிவ் எண்ணெய் மிகவும் நல்லது மற்றும் மருத்துவ குணம் கொண்டது என்று உங்களுக்குத் தெரியும். சமையல் செய்வதற்கு ஏற்ற எண்ணெய், ஒமேகா சத்து பொருட்கள் அமைந்தது, வைட்டமின் E மற்றும் K ஆன நோய் எதிர்ப்பு சக்தி குணம் கொண்டது, வாத நோய் போக்கக்கூடியது, உடல் பெருமானை கட்டுப்  படுத்தும், ரத்தம் உறையாமல் பார்த்துக் கொண்டும், இதய நோய் வராமலும் தடுக்கும், டைப் 2 சக்கரை குறைபாடுகள் கொண்டவர்களுக்கு நிவாரணியாகும். அந்த ஆலிவ் மரம் 1500 ஆண்டுகள் வரையும் வாழுமாம்.

பெரியவர்கள் சுவையான தகவல்கள் பார்த்தோம். அதே நேரத்தில் சிறுவர்களுக்கான சில தகவல்களை பகிரலாம் என எண்ணி கீழ் கண்ட செய்திகளை தருகின்றேன்:

1)    ஒரே இனத்தில் பிறந்த இரண்டு பாலின மக்கள், மிருகங்கள், பறவைகள் இணைந்து குழந்தைகள், குட்டிகள், குஞ்சுகள் பெற்றுக் கொள்வதினை உங்களுக்குத் தெரியும். ஆனால் காடுகளில் ஒரு ஆண் சிங்கமும், ஒரு பெண் புலியும் இணைந்து பெற்றுக் கொள்ளும் மிருகத்திற்கு என்ன பெயர் தெரியுமா? அதனை ''(Liger) லைகா  என்று அழைக்கப் படுமாம். டால்பின் மீன் கடலுக்கடியில் 50 அடிதூரத்தில் எழுப்பப் படும் ஒலியினை கண்டுபிடித்து விடுமாம். ஆண் சிங்கத்தின் கர்ச்சிப்பின் குரலை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கேட்கலாமாம். யானைக் கூட்டம் வனங்களில்  நீரின் ஆதாரத்தை மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்து கண்டு பிடித்துவிடுமாம். கடலில் உள்ள ப்ளூ வேல் என்ற திமிங்கலம் நீருக்கடியிலிருந்து எந்த நீர் விலங்குகளும் எழுப்பாத 188டெசிபெல் ஒரு ராக் இசை எழுப்பும் ஒலியினை ஒத்து இருக்கும்சப்தத்தினை எழுப்புமாம். ஆப்பிரிக்க காடுகளில் வாழும் Cape-water buffalo (நீர் எருமை) மூத்திரத்தினை உபயோகித்து ஆப்பிரிக்க பழங்குடியினர் ‘ஹரிகன்’ விளக்குகளை எரித்தார்களாம்.

2)    நமக்கெல்லாம் இதயம் இடது பக்கம் இருக்கும். ஆனால் இதயம் தலைப் பகுதியில் உள்ள பிராணி எது தெரியுமா? அது சுவையான உணவைத் தரும் இறால்  தானாம். நாம் சில நய வஞ்சகர்களை இதயம் இல்லாதவன் என்றும் கூறுவதுண்டு. முதன் முதலில் மனிதர்களுக்கு இரண்டு இதயம் இருக்கின்றது என்று உலகிற்கு அறிவித்தது இஸ்லாம் தான். பெரும்பாலான படித்த இளைஞர்கள் அது எப்படி சாத்தியம் என்று கூறுவர். மருத்துவ அறிஞர்கள் ஆராய்ந்து பெண்கள் குழந்தையினை வயிற்றில் தாங்கி இருக்கும்போது தாய்க்கும் அதன் சேய்க்கும் இரண்டு இதயம் இருப்பதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.

3)    கஷ்டப் பட்டு உழைத்து பொருள் சேர்த்தவர் சொல்லும்போது, நான் உழைத்து தேனீ போன்று சிறுக சிறுக பணம் சம்பாதித்தேன் என்று சொல்வார்கள். ஏன் அப்படி சொல்கின்றார்கள் என்றால் ஒரு தேனீ இரு நூறு மலர்களை தேடி எடுத்தால் ஒரு சொட்டு  தேனும் 10 லட்சம் மலர்களிருந்து சேகரிக்கும் தேன் எவ்வளவு இருக்கும் என்று தெரியுமா, வெறும் 435 கிராம் தானாம். வாலை மீன் போன்று நீண்டு இருக்கும் ஈல் மீன் தனது இறையினை பிடிக்க அல்லது தன்னை கொல்லவரும் எதிரியினை விரட்டுவதிற்கும் 650 வாட்ஸ் மின்சாரத்தினை வெளிப் படுத்துமாம்.

4)    சிலர் தனது நிலையினை அடிக்கடி மாற்றிக் கொள்வதால் ‘பச்சோந்திப்’ பய என்று சொல்வது வழக்கம். காரணம் ஓனான் தனது நிறத்தினை மாற்றிக் கொள்வதால். அப்படி மாற்றிக் கொள்ளும்போது அது தனது சுற்றுப் புறத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஓனான் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பத்தான் தன்னை மாற்றிக் கொள்ளுமாம். 

5)    அதே போன்று தான் 'flipper fish' என்ற இறகுகள் கொண்ட மீனின் விஷம் ஒரு மனிதனை உயிரிழக்கச் செய்யக் கூடிய சயனைட் விட கொடிய விஷம் கொண்டதாம். அதனை உபயோகித்து தன்னிடம் நெருங்கும் மனிதனை செயலிழக்க செய்து விடுமாம்.

6)    முதன் முதலில் பல் துலக்கும் 'tooth brush' சீனாவில் தான் கண்டு பிடிக்கப் பட்டதாம். பிரஸ்ஸில் உள்ள நார் போன்ற பொருளுக்குப் பதிலாக குதிரை பிடரி மயிரை உபயோகித்தார்களாம்.

நான் மேற்கூறிய தகவல்கள் சில உங்களுக்குத் தெரிந்து இருக்கும் ஆனால் பலருக்கும், சிறார்களுக்கும் தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்கும் நீங்கள் சொல்வது மூலம் பொது அறிவு விரிவடையும் என்பது உறுதிதானே!

 

Sunday, 20 February 2022

கொரானா மனித குலத்தினை தனிமைப் படுத்தியதா?

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

2019ல் ஆரம்பித்த கொரானா என்ற கொடிய நோய் உலகில் இதுவரை 4கோடி 24 ஆயிரம் மக்களை பாதித்து 50 லட்சத்து ஐயாயிரம் பேர்களின் இன்னுயிரை பதம் பார்த்துவிட்டது. 'மனிதனை மனிதன் சாப்பிடுறானே தம்பிப் பயலே' என்ற பாட்டு வரும், ஆனால் இந்த நோய் மனிதனை மனிதன் தனிமைப் படுத்தும் கொடிய பழக்கத்தினை வலுக்கட்டாயமாக புகுத்திவிட்டது. கொரானா வந்தவர் இறந்து விட்டால் அவருடைய துணைவர், பிள்ளைகள், உற்றார் கூட முகத்தினை காண முடியாது அடக்கமோ அல்லது ஈமக்கிரியை செய்யவது போன்ற நடைமுறைகள் மக்களை வெகுவாக உலுக்கி விட்டது. மருத்துவ மனைகளில் சிகிச்சை பெறும்போது கூட நோயாளிகளை காண முடியாத இரும்புத்திரை மறைத்துவிட்டது.

மனிதனை 'social animal' (சமூக மிருகம்) என்று அழைப்பார்கள். இறைவன் படைக்கும்போது மனிதர்களை ஜோடி, ஜோடியாக மட்டும் படைக்கவில்லை, மிருகங்கள், பறவை இனங்களையும் ஜோடியாக படைத்துள்ளான். கணவன், மனைவியாக உள்ளவர்கள் குழந்தைகள் உற்றார், உறவினர் என்று குடும்பமாக வாழ்வதால் ‘சோசியல் அனிமல்’ என்று அழைக்கின்றார்கள். கிராமங்களில் உள்ள கூட்டுக் குடும்பம், நகர வாழ்க்கைக்கு வரும்போது கூட்டுவாழ்க்கை தனி அமைப்பினை ஏற்படுத்திக் கொண்டு பந்தம், பாசம் அற்றவர்களாக இருக்கும் நிலையினை பார்த்திருக்கின்றோம். இந்தியாவில் கொரானா நோயினால் 5கோடியே 30லட்சம் பேர்கள் வேலையில்லாமல் இருப்பதும், பட்டினிச்சாவால் 2851 பேர்கள் 2021ல் இறந்திருப்பதும், பல தொழில் முனைவோர் வாங்கிய கடன்களை திருப்பி செலுத்தமுடியாமல் தொழில்களை மூடிவிட்டதும் சோகத்தினை ஏற்படுத்தி விட்டது என்றால் அது கொடிய நோய் தானே! அதற்கு உதாரணமாக கேரள மாநிலம் கொச்சியில் 'ராய் டூரிசம்' என்ற சொகுசு பேருந்து நிறுவனம் 20 பஸ்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார் ராய்சன் ஜோசப். லாக் டவுண் பிரச்சனையால் தனது 10 பஸ்களை விற்றுவிட்டார். மீதமுள்ள 10 பஸ்களை விற்க விலை பேசினார் முடிய வில்லை. ஆகவே தனது 10 பஸ்களையும் காயிலாங்கடைக்கு போடலாம் என்று பத்திரிக்கைகளுக்கு விளம்பரம் கொடுத்துள்ளார். எப்படி என்று நினைக்கிண்றீர்கள். ஒரு கிலோ பழைய இரும்பு ரூபாய் 45/ தானாம். இப்படி பரிதாப நிலையில் நமது பொருளாதாரத்தினை கொரானா கொண்டு போய் படு பாதாளத்தில் தள்ளிவிட்டது. ஆனால் கொள்ளை அடித்த கம்பனிகள் பேங்க் கடன் வாங்கி தப்பித்த செய்தியினையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். குஜராத்தினைச்சார்ந்த ‘ரிஷி அகர்வால்’ நடத்தும் கப்பல் கட்டும் கம்பனி பல பேங்குகளில்  ரூபாய் 22, 852 கோடிகள் வாங்கி ஏப்பம் இட்ட கதையும் கந்தலாக உள்ளது.

கொரானா நோய் எங்கள் குடும்பத்தில் எப்படி தனிமை கொடுமையினை ஏற்படுத்தியது என்று உங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை என நினைக்கின்றேன். எங்களுடைய 50 வருட மண நாள் 14.12.2021 என்றது எங்களுக்கே மறந்து விட்டது. அதனை என் அமெரிக்கா வாழ் மகள் எப்படியோ தெரிந்து வைத்துள்ளது. அது மற்ற இரு வெளிநாட்டில் வசிக்கும் சகோதரர்களுடன் கலந்துரையாடல் செய்துள்ளது. அவர்கள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த 15.12.2021 அதிகாலை திடீரென்று வீட்டினுள் நுழைந்து எங்களது கண்களில் நீரினை வரவழைத்தார்கள் . அந்த ஆனந்த கண்ணீர் காயும் முன்பு எங்களுக்குள்   இனந்தெரியாத கவலை கவ்விக்கொண்டது. அது என்ன தெரியுமா அவர்களை இங்குள்ள கொரானா பாதிப்பு தொற்றி விடக்கூடாதே என்று. அவர்கள் மூவரையும் அனாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தோம். அவர்கள் திரும்பும் நாட்கள் வந்தன. இங்குள்ள கட்டுப்பாட்டின் படி விமானத்தில் வெளிநாடு செல்ல 48 மணி நேரத்திற்குள் கொரானா தொற்று இல்லை என்ற RT-PCR டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும் என்ற விதிமுறை. அப்படி எடுத்ததில் அமெரிக்கா வாழ் மகளுக்கும், சிட்னி வாழ் மகனுக்கும் பாசிட்டிவ் டெஸ்ட். வந்தது அதிர்ச்சியினை தந்தது. மற்றொரு அமெரிக்காவில் வசிக்கும் மகனுக்கு நெகட்டிவ் டெஸ்ட் வந்ததால் அவன் பயணம் தொடர்ந்தான். கொரானா பாதித்த மகனும், மகளும் கலகலப்பான வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டனர். அவர்கள் அறிவுரைப் படி நானும், என் மனைவியும் டெஸ்ட் எடுத்த்தோம். எங்களுக்கு பாசிட்டிவ் அறிகுறி இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. நாங்கள் சீனியர் சிட்டிசன் ஆனதினால் கீழ்பாக்கில் உள்ள ஆயிசா மருத்துவ மனையில் சேர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை மேற்கொண்டு திரும்பினோம். மகனும், மகளும் தனிமை 10 நாட்கள் முடிந்து மருந்துகள் எடுத்துக் கொண்டு கொரானா நோய் இல்லை என்ற உறுதியான பின்பு அவர்கள் பயணம் மேற்கொண்டார்கள். அவர்களை கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தோம். இவற்றை எல்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பேயே அராபிய நாட்டில் ரசூலுல்லாஹ் அறிந்துள்ளார்கள் என்பதினை ஒரு ஹதீஸ் மூலம் உங்களுக்கு தெரியப் படுத்தலாம் என எண்ணுகின்றேன்.  ஒரு தடவை வியாபாரியான சஹாபி ஒருவர் ரஸூலல்லாஹ்விடம் வந்து 'பக்கத்தில் ஊரில் தொற்று நோய் இருப்பதாக சொல்கிறார்கள், அந்த வழியாக வியாபாரத்திற்கு செல்லலாமா' என வினவினார். அதற்கு ரசூலுல்லாஹ் எங்கு அவ்வாறான நோய் இருக்கின்றதோ அங்கு நீங்களும் போக வேண்டாம், அவர்களும் நமது ஊருக்குள் நுழைய வேண்டாம்' என்று அறிவுரை வழங்கியது  எப்படி இக்காலத்தில் வேத வாக்கானது என்பது ஆச்சரியமில்லையா?

உடன் பிறப்பு, உற்றார், உறவினர் ஆகியோர்களிடம் வாட்ஸப், பேஸ்புக், கைபேசி, இன்டர்நெட், போன்ற தொழிற்நுட்ப வசதிகளுடன் பேசி நலம் விசாரித்தாலும்  அவர்களுடன் உணர்வுப் பூர்வமாக இணைய முடியவில்லை. அண்டை வீட்டாரிடம் கூட நலம் விசாரிக்க முடியவில்லை. நாட்ச்சக்கரங்கள் சுழன்றாலும் 'ஆன் லைன்' வேளையில் மூழ்கி விடுவதால் அடுத்தவர் பற்றி கவலைப் படுவதில்லை. வீட்டில் உள்ளவர்களுடன் கூட பேச நேரமிருக்காது.

சமூக கட்டுக் கோப்பினை உடைக்கும் மூல காரணமே நவீன மின் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் போன்றவையாகும். அதுவும் கொரானா நோய் அதனை அதிகப் படுத்திவிட்டது. சில சாதனங்கள் தொடர்புக்கு எதுவும் காசு கொடுக்க வேண்டியதில்லையால் பேசுவதற்கு நேரமே தெரிவதில்லை. டிக், டாக் போன்ற தொடர்புகள் சமூக சீரழிவிற்கு, யூடூப் பல உண்மைக்குப் புறம்பான செய்திகளை வேகமாக பரப்புவதற்கும் நேரம் பொன்னான நேரம் தெரிவதில்லை. ஆன் லைன் சூதாட்டத்திற்கு சிறுவர் முதல் பெரியவர் வரை ஈடுபட்டு செல்வத்தினை இழப்பதினையும், சிறுவர்கள் கூட திருட்டுக் குற்றம், போதைப் பொருள் உபயோகிப்பது, விற்பது என்ற செயல்களில் ஈடுபதினையும், குடும்ப சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு, கொலைகள், தற்கொலைகள் போன்றவை நடப்பதினையும் அன்றாட செய்திகளில் பார்த்திருக்கின்றோம்.

கொரானா நோய் குடும்பத்தில் எப்படி பாதிப்பினை ஏற்படுத்தி விட்டது என்பதினை ஆராய Estonia எஸ்டோனியா நாட்டில் உள்ள 'Institute of social studies' ஒரு ஆய்வினை நடத்தி அறிக்கை சமர்பித்தார்கள். அதில் கொரானா நோயால் முதலில் பாதித்தவர்கள் குழந்தைகள் தானாம். காரணம் வெளியில் விளையாட வழியில்லை, பள்ளிக்கூடம் இல்லை, பூங்காக்கள், கேளிக்கை நிலையங்கள் மூடப் பட்டுவிட்டன, பீச் செல்ல கட்டுப் பாடு, சுற்றுலா ஸ்தலங்கள் மூடப் பட்டன. 2) லாக் டவுண் கட்டுப் பாடுகளால் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடந்தது சலித்து விட்டதாம், 3) பொருளாதார வளர்ச்சி குன்றி விட்டது, 4) வியாபாரிகள், தொழில் அதிபர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாது தற்கொலைக்கு தூண்டி விட்டது தான் கொரானா கொடுமைகள் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆகவே கொரானா நோயின் தாக்கத்திலிருந்த மனித சமுதாயத்தினை மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்புவது எப்படி என்று சற்று யோசிக்க வேண்டுமல்லவா?

!) நமக்கு நாமே சுய கட்டுப்பாடு வைத்துக் கொண்டு தொலை தொடர்பு சாதனங்களை  தூங்கும்போதும், சாப்பிடும்போதும், குடும்பத்தினருடன் கலந்துரையாடல் செய்யும்போதும், நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போதும், பூங்காக்களில் நண்பர்களுடன் இருக்கும்போதும்,  இறை வணக்கம் செலுத்தும்போதும் சற்று நேரம் ஒதுக்கித் தள்ளவேண்டும்.

2) மறந்துபோன விளையாட்டுகளை புதுப்பிக்க வேண்டும்.

3) விடுபட்ட நண்பர்கள், உறவினர் வீடுகளுக்கு சென்று நட்பிற்கு உயிர் கொடுக்க வேண்டும்.

4) நல்ல புத்தகங்கள் படிப்பதினை வழக்கமாக கொள்ளவேண்டும்.

5) குழந்தைகளுக்கு அறிவினை அதிகப் படுத்த புத்தகங்கள், சாதனங்கள் ஆன் லைனிலே கிடைக்கின்றது, அவைகளை தருவித்து படிக்கச் சொல்லவேண்டும். கிட்ஸ் ஏஜ்(kids age) போன்ற பத்திரிக்கைகள் கூட தரமான செய்திகளைத் தரும் பத்திரிக்கைகளை குழந்தைகள் படிக்க வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

6) வீட்டில் உள்ள பெரியவர்களும் காலம், நேரம் தெரியாது டிவி முன்பு உட்கார்ந்து கொண்டு சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கும் நாடகங்கள், பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கக் கூடாது.

7) வீட்டிற்கு விருந்தினர் வரும்போது டிவி, செல்போன் போன்றவற்றை இயக்குவதினை நிறுத்த வேண்டும்.

8) கொரானா தாக்கம் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க ஆரம்பித்து விட்டது. இது காரும் வீட்டிலேயே அடைந்திருந்த மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி கட்க ஆரம்பிக்குமுன் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும், ஓவியம், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களின் இறுக்க மனதினை கல்வி கட்க சூழ்நிலைக்கேட்ப முதலில் மாற்றுவது நல்லது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொல்வதினை தவிர்க்க வேண்டும்.

9) கொரானா தாக்கம் குறைந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க ஆரம்பித்து விட்டது. இது காரும் வீட்டிலேயே அடைந்திருந்த மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்று கல்வி கட்க ஆரம்பிக்குமுன் அவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தியும், ஓவியம், கலை நிகழ்ச்சிகள் நடத்தியும் மாணவர்களின் இறுக்க மனதினை கல்வி கட்க சூழ்நிலைக்கேட்ப முதலில் மாற்றுவது நல்லது. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொல்வதினை தவிர்க்க வேண்டும்.

கொரானா காலத்தில் கிராமங்களில் சொந்தங்களை மறந்த நகர வாசிகள் கிராமங்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் அங்கே கொரானா தொற்று குறைவாக இருந்ததே காரணம். பெரும்பாலான கிராமங்களில் கொரானா நோயே இல்லை எனலாம். மாசு இல்லாத காற்று, சுத்தமான தண்ணீர், கள்ளங்கபடமில்லா சொந்த, பந்தங்கள், விலைவாசி குறைவான காய், கறிகள் போன்றவகைகளால் மனிதன் மறுபடியும் கூட்டு வாழ்க்கைக்கு திரும்பியது கொரானா செய்த மிக பெரும் நன்மை என்றால் மறுக்க முடியாது. அதற்காக நகர வாழ்க்கையே வேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக நகரத்தில் சொகுசாக வாழும்போது, கிராமத்தினையும் மறந்து விடாதீர்கள் என்பதினை உணர்த்துகிறேன்!

 

Friday, 28 January 2022

நவன நாகரீகத்தின் அடித்தளம் இஸ்லாம்!

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ)

நான் 2001ல் அமெரிக்கா சென்றபோதும், 2011ல் ஆஸ்திரேலியா சென்றபோதும்  அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள், வாகன வசதிகள், மற்றும் நாகரீக அமைப்பினைப் பார்த்து பிரமித்துப் போனேன். ஆனால் அராபிய நாடுகள் செல்வத்தில் மிகைத்திருந்தாலும் ஏன் நவீன முன்னேற்றங்கள் அடைய முடியவில்லை என்று என் எண்ண அலைகளை ஓட விட்டேன். நான் 1971ம் ஆண்டு மாநில கல்லூரி மாணவனாக இருந்தபோது நடந்த சட்டசபை தேர்தலில் அன்றைய மந்திரி நாவலருக்காக தேர்தல் வேலை செய்தேன். ஆனால் அதே நாவலர் ஒரு தடவை தமிழக சட்டசபையில் ஒரு முஸ்லிம் லீகு தலைவரைப் பார்த்து 'நீங்களெல்லாம் கருவாடு விற்கும் பாய்கள் தானே' என்று சொல்லியது கேட்டு எனது மனம்  கருவாடு விற்றகாசு வீசாது என்றாலும் ஏன் நமது சமுதாயம் இன்னும் பின்தங்கியுள்ளது, நமது முஸ்லிம் அறிஞர்கள் அதற்கான வழிகாட்ட வில்லையா என்று  எண்ண ஓட்டங்களை செலுத்தி பல்வேறு நூல்களை எடுத்துப் பார்க்கும்போது தான் தெரிந்தது, நமது சமுதாய அறிஞர்கள் தான் இன்றைய உலகின் நவீன வாழ்க்கைக்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர், அவர்கள் கை வைக்காத துறையே இல்லை என்ற அளவிற்கு வழி காட்டியுள்ளார்கள்  என்பதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இஸ்லாம் அராபியாவின் இருண்ட உலகில் அருளப்பட்ட படிப்பறிவில்லாத முகமது என்ற நம்பிக்கைக்கு பாத்திரமான ரஸூலல்லாஹ்விற்கு  அல்லாஹ் தனது வானவரை அனுப்பி, 'இக்ரா' ஓதுவீராக என்ற வசனத்தினை இறக்கி வைத்ததின் பயனாக பல்வேறு திசைகளிலும் முஸ்லிம்களின் அறிவுச் சுடர் ஒளி வீசத்தொடங்கியதே முஸ்லிம் நாகரீக கண்டுபிடிப்புகளின் அடிகோலாக ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய அறிவுப் புரட்சி 1000ஆண்டுகளாக எகிப்து, சீனா, கிரேக்கம், ரோமன் மற்றும் இந்திய அறிஞர்களால் விரிவு படுத்தப் பட்டுள்ளன என்றால் மிகையாகாது. இஸ்லாமிய அறிவுப் புரட்சியின் பொற்காலம் என்று அதனை கூறுகிறார்கள்.

            அராபிய புத்தகங்கள் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்டு ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. உலகிலேயே முதன் முதலில் ‘கிராவின்’ என்ற  பல்கலைக் கழகம் மொரோக்கோ நாட்டின் ‘பெஸ்’ என்ற நகரத்தில் ஆரம்பித்தது ‘பாத்திமா அல் பஹாரி’ என்ற துனீசியா நாட்டு பெண் அறிஞர் ஆவர். அதனை கின்னஸ் புத்தகமும் அங்கீகரிக்கின்றது. அந்த பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் விஞ்ஞானம், அறிவியல், கணித கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்தினர்.

            ‘பறவைகள் கண்டான் விமானம் படைத்தான்’ என்ற பாடல் நமக்குப் பழக்கப் பட்டது. அதற்கு உதாரணமாக 1903 ம் ஆண்டின் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தினைச் சார்ந்த ரைட்ஸ் சகோதரர்கள் சொல்வார்கள். ஆனால் கி.பி 852ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு அறிஞர் ‘அபபாஸ் இபின் பிர்னாஸ்’ இறகுகளை கட்டிக் கொண்டு ஸ்பெயின் நாட்டின் க்ராண்ட் பள்ளிவாசல் பகுதியில் குதித்ததாக வரலாறு கூறுகிறது. அதனைத் தொடர்ந்து 17ம் நூற்றாண்டில் துருக்கிய நாட்டினைச் சார்ந்த அறிஞர் ‘அசார் பெண் அகமத் செலிபி’ கழுகுகளின் சிறகுகளை கட்டிக் கொண்டு 2300 அடி அகலமான துருக்கியின் பாஸ்போரஸ் நதியினை கடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

            ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராக் தலைநகர் பாக்தாதில் 'House of Wisdom' என்று அழைக்கப் பட்ட 'Bayi-Al-Hikma' என்ற தலை சிறந்த அறிஞர்கள் கொண்ட கூட்டமைப்பு இருந்தது. அபபாஸ் கலீபா வம்சத்தினைச் சார்ந்த Al-Mamun என்பவர் கி.பி 813-833 ஆண்டுகளில் ஆட்சி செய்த கலீபா முஸ்லிம்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைக் களைந்து சிந்திக்கத் தூண்டும் வகையில் ஆட்சி செய்து ஒட்டகங்கள் மூலம் பல்வேறு புத்தகங்களை 'அறிவு களஞ்சியத்திற்கு' கொண்டு வந்து சேர்த்தார் என்று சொல்லப் படுகிறது. அவரை கவுரவப் படுத்த சந்திரனில் உள்ள பெரிய பள்ளத்திற்கு அவர் பெயரினை சூட்டியுள்ளது பெருமையல்லவா? பக்தாதினைத் தொடர்ந்து மற்ற முஸ்லிம் நகரங்களிலும் 'House of Wisdom' அமைக்கப் பட்டது. கணிதத்தில் 'Algebra' என்று சொல்லும் சொல் பாக்தாதின் அறிவு களஞ்சியத்தில் பணியாற்றிய 'Al Khwarizmi' எழுதிய Al Jabr Wa-L Muqabalah' புத்தகத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. துனிசியா நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க நூலகமான 'Zayatuna Mosque' ல் லட்ச புத்தகங்கள் இருந்ததாக கூறப் படுகிறது.

            ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் விஞ்ஞான கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருக்கும்போது முஸ்லிம்கள் கணிதத்தில் பல்வேறு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தனர்.  பாரசீக நாட்டின் அறிஞர் al-Khwarizmi லத்தீன் மொழியில் 'Algoritmi' என்று அழைக்கப் பட்டார். அவர் எழுதிய புத்தகம் 'Al -Jabr wa-I-Muqabala' கி.பி. 830ல் கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புகள் கண்டதாகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல் அவர் கண்டுபிடித்ததாகும். Al-Piruni என்ற ஈரான் நாட்டு அறிஞர் பூமியின் அகலம், கடலிருந்து பூமியின் தூரம் போன்ற அளவுகளை துல்லிதமாக கண்டுபிடித்து மாலுமிகளுக்கு உதவியாக இருந்த 'Trigonometry' கண்டுபிடித்தார். அராபிய எண்ணிக்கைகள் ‘Ghubari’ என்று அழைக்கப் பட்டது ரோமன் எழுத்துக்களான X, V, I, C மற்றும் M என்பதினை விட எளிதானதாக கூறப் படுகிறது. பதினொன்றாம் நூற்றாண்டில் வட ஆப்ரிக்கா, தெற்கு ஐரோப்பா நாடுகளில்  முஸ்லிம் மையங்களில் பயின்ற மாணவர்கள் எண்களை ஐரோப்பாவிற்கு அறிமுகப் படுத்தினர். அன்று கண்டுபிடித்த Trigonometry தான் இன்று பூமிக்கும்-நட்சத்திரங்களுக்கும் உள்ள தூரம், கட்டிடங்கள் நீளம், அகலம், உயரம் போன்றவற்றினை கணிக்க பயன்படுகிறது.

            கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு தத்துவ மேதையும், விஞ்ஞானியுமான 'Al-Hindi' நவீன கண் சிகிச்சைக்கு வழிகோலியவர் என்று கூறப் படுகிறது. Al-HIndi யினை தொடர்ந்து Ibn Al Haythan கண்ணுக்கு ஒளி வெளியிலிருந்து  ஊடுருவதால் ஏற்படுவதாகும் மாறாக கண்ணிலிருந்து ஒளி வருவதில்லை என்பதினை கண்டுபிடித்தார். Ibn Al Haytham தான் காமிராவினில் உள்ள துளைமூலம் பார்க்கும் 'camera obscura' என்பதினை கண்டுபிடித்து 1827ல் பிரான்ஸ் நாட்டில் 1827ல் முதல் படம் எடுக்கப் பட்டதாம். Camera Obscura என்பது 'dark room' சொல்லக் குறிக்கும்.

            700 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் தண்ணீர் சுழற்சியில் ஓடும் கடிகாரத்தினை கண்டுபிடித்தார்கள். மணித்துளிகளை அளவிடுவது முஸ்லிம்களுக்கு முக்கியமானது. ஏனென்றால் இறை வணக்கத்திற்கு  மற்றும் முஸ்லிம் நோன்பினை எப்போது ஆரம்பிப்பது மற்றும் முடிவிற்கு கொண்டு வருவது என்பதற்கு கால அளவு முக்கியமானதாகும். கால அளவினை கணக்கிடுவதினை 'horology' என்கிறார்கள். துருக்கியில் பிறந்த இயந்திரவியல்  என்ஜினீயர் Ismail Al-Jazari 13ம் நூற்றாண்டில் தண்ணீரால் இயங்கக்கூடிய 'Elephant Clock' கண்டுபிடித்தார். அது ஒவ்வொரு அரை மணி துளிகளையும் துல்லிதமாக கணித்து ஒலியையும் எழுப்பக்  கூடிய சிறிய robot ஆக இருந்தது ஆச்சரியம் தானே! அது கி.பி. 1656ம் ஆண்டு டச் தேச விஞ்ஞானி Christian Huygens கண்டுபிடித்த 'Tell Time' என்ற 'pendulam clock' வரை இருந்தது.

            நமது குழந்தைகள் பலரும் கையில் வைத்து விளையாடுவது ரூபிக் என்ற கன சதுர கட்டையினைக் காணலாம். உலக கின்னஸ் ரெகார்ட் ஆக ரூபிக் என்ற கன சதுரம் மிக வேகமாக ‘பெபிள்ஸ்’ என்பவர்  4.22 வினாடியில் சாதனை படைத்துள்ளார் என்ற வரலாறு. ஆனால் அந்த ரூபிக்கினை முதன் முதலில் ஒன்பதாம் நூற்றாண்டில் கணிதத்தில் கைதேர்ந்த மூன்று ஈராக்கிய சகோதரர்கள் ஆன 'பனு மூஸா' ஆவார்கள். அவர்கள் கி.பி 850ல் புதிர்கள் எழுதிய புத்தகத்தில் 100 ட்ரிக் காட்ஜெட்ஸ் மற்றும் எந்திரங்கள் ஆகியவற்றை அடங்கும். Al Biruni என்ற முஸ்லிம் அறிஞர் Number Puzzles  என்ற கணித  புதிர்களில் சம்பந்தமாக புத்தகமே எழுதியுள்ளார்.

            முஸ்லிம் மன்னர்கள் மக்களுக்கு உதவக் கூடிய மருத்துவ மனைகளை உருவாக்குவதில் போட்டி போட்டுகொண்டு முன்னேற்றம் செய்தனர். முதன் முதலில் 872-874ல் எகிப்து தலைநகர் கெய்ரோவில் 'Ahamed ibn Tulun' என்ற மன்னர் மிகப் பெரிய மருத்துவ மனை காட்டினார். நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ வசதிகள் செய்யப் பட்டது. துனிசியா நாட்டில் தொழு நோயாளிகளுக்கென்று தனி மருத்துவமனை இருந்தது. இன்றுள்ள நடமாடும் மருத்துவமனைகளுக்கு முன்னோடியாக முஸ்லிம் பாக்தாதினைச் சார்ந்த விஞ்ஞானி 'Sinan Ibn Thabit' நடமாடும் மருத்துவமனையினை ஆரம்பித்தார்.  13ம் நூற்றாண்டு சிரியா நாட்டு விஞ்ஞானி Ibn al Nafis எப்படி இதயத்திலிருந்து ரத்தம் நுரையீரலுக்கு வந்து காற்றுடன் கலக்கின்றது என்பதினை கண்டுபிடித்தார்..இதனையே தான் 17ம் நூற்றாண்டில் ஆங்கிலேய மருத்துவர் வில்லியம் ஹார்வி ரத்த ஓட்டத்தின் முழு விபரங்களையும் கண்டுபிடித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் மருத்துவ அறிஞர் ibn Sina மருத்துவ அகராதியினை எழுதியுள்ளார். அந்த மருத்துவ அகராதியினை ரோம நாட்டில் 1593ல் புத்தகமாக வடிவமைத்து ஐரோப்பா முழுவதும் பரப்பப் பட்டது. ஸ்பெயின் நாட்டு டாக்டர் Al-Zahrawi மருத்துவம், அறுவை சிகிச்சை சம்பந்தமாக ஒரு புத்தகமே எழுதியுள்ளார். எகிப்தில் இருந்த 'Ahamad ibn Tulun' என்ற மருத்துவ மனை உலகிலேயே முதலாவதாக மன நோய்க்கான சிகிச்சை அளிக்கப் பட்டது. ஆனால் நாம் இன்று ஆண்களையும், பெண்களையும் மன நோய்களுக்கு முறையான சிகிச்சையளிக்காமல் வீட்டிலேயே சங்கிலியால் கட்டி வைப்பதும், அல்லது தர்காக்களில் அனாதையாக விட்டு விடுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளோம் என்பது வருத்தமாக இல்லையா?

            நீங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்னாள் ஸ்பெயின் நாட்டில் பிறந்திருப்பீர்கள் என்றால் அங்கே பொது மற்றும் எலும்பு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களை காண முடிந்திருக்கும். ஸ்பைனியில் அறுவை சிகிச்சையின் தந்தை என்று Al-Zahrawi அழைக்கப் பட்டார். அவர்தான் அறுவை சிகிச்சைக்குத் தேவையான Scalpel என்ற கத்திகளை கண்டுபிடித்தார். சிறுநீரக பையில் உண்டாகும் கற்களை உடைக்கும் Lithotripter என்ற உபகரனத்தினை கண்டுபிடித்தார். அவர் எழுதிய 30 அத்தியாயம் கொண்ட புத்தகங்கள்  லத்தீன் மொழியில் மொழி பெயர்க்கப் பட்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப் பட்டது. 10ம் நூற்றாண்டு ஈராக்கிய கண் சிகிச்சை நிபுணர் Al-Mawasill கண் புரை நோயினை ஊசி கொண்டு உறிஞ்சி எடுத்து கண் தெரிய வைத்தார். முஸ்லிம் கண் நிபுணர்கள் தான் retina, uvea மற்றும் cornea போன்ற குறைபாடுகளை அராபிய மொழியில் குறிப்பிட்டுள்ளார்கள். பிராணிகளுக்கும் சிகிச்சையளித்த செவிலி நாட்டினைச் சார்ந்த Ibn Zuhr மற்றும் பாரசீகத்தினைச் சார்ந்த Al-Razi போன்றவர்கள் இருந்துள்ளனர். 

            பூலோக மண் ஆராச்சியினை முஸ்லிகள் மேற்கொண்டு விலங்கியல், தாவரவியல் போன்றவற்றில் மிகைத்திருந்தது மட்டுமில்லாமல் பூமிக்குள் கிடைக்கும் வைரம், வைடூரியம், பவளம், போன்றவற்றினை ஆராய்ச்சிமூலம் கண்டுபிடித்தனர். Al-Hamdani என்ற அறிஞர் பத்தாம் நூற்றாண்டில் அராபிய மொழியில் தங்கம், சில்வர் மற்றும் விலையுயர்ந்த மண் வளங்களை பற்றி புத்தகமாக எழுதியுள்ளார். Al-Biruni என்ற 11ம் நூற்றாண்டின் ஈரானிய அறிஞர் மண் ஆராய்ச்சி பற்றிய புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் கங்கை நதியின் அமைப்பு மற்றும் பால்டிக் கடலிருந்து ஆப்பிரிக்காவில் உள்ள மொசாம்பிகு வரை பூகோள அமைப்பினை விரிவாக எழுதியுள்ளார். பஸ்ராவில் பிறந்த Ibn Al Haythem ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு நடத்தி கட்டுக்கடங்காத நைல் நதி நீரோட்டத்தினை எப்படி கட்டுப் படுத்துவது என்று ஆராய்ததின் பயனாக Aswan அணைக்கட்டு கட்டப் பட்டது எகிப்திய நாட்டில். பாரசீக நாட்டு பத்தாம் நூற்றாண்டு சூரியனை ஆராய பெரிய observatory கண்டுபிடித்தார். 9ம் நூற்றாண்டின் ஸ்பெயின் Cordoba நாட்டு அறிஞர் Abbas ibn Firnas வானிலை அமைப்பினை கண்டுபிடிக்க ஒரு அமைப்பினை ஏற்படுத்தினார். துனிசியா நாட்டின் அறிஞர் இயற்கை மருத்துவ செடிகள் 3000பற்றியும் அதன் பயனைப் பற்றியும் விரிவாக புத்தகமாக எழுதியுள்ளார்.

            இஸ்லாமிய கட்டிடக் கலைகளுக்கு அலங்காரமாக துருக்கிய ஏழு மலைகளை இணைக்கும் சினான் நகர ‘சுலைமானிய’ பள்ளிவாசலை உதாரணமாகிச் சொல்லலாம். ஒவ்வொரு பள்ளிவாசலில் உள்ள மினாராவை கலங்கரை விளக்கமாக கூறலாம். இந்தியாவின் தாஜ் மஹால், ஒவ்வொரு வருடமும் குடியரசினை கொடியேற்றி பறைசாற்றும் Redfort அங்கே பூங்காவில் ஓடும் நீரோட்டம் ஆகிவை முஸ்லிம் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகும். நாகரீகத்திற்கு எடுத்துக் காட்டு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு ஆகியவையாகும். விதவிதமான பல்வேறு வர்ணங்களைக் கொண்ட உடைகள் ‘ஆளி’ எண்ணெயிலிருந்து, ‘தங்க’ இழைகளால் இஸ்லாமிய நாடுகளில் தயாரிக்கப் பட்டது. முஸ்லிம்களால் தயாரிக்கப் பட்ட 400 தரை விரிப்புகள் ஆங்கிலேய மன்னர் ஹென்றி VIII அரண்மனையினை அலங்கரித்ததாம்.

                        முஸ்லிம்கள் சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவினை என்பதால் சீனா வரை பயணம் செய்து பல நாடுகளை வென்றனர். பாலஸ்தீனிய பூகோள ஆராய்ச்சியாளர் Al-Muqaddasi 10ம் நூற்றாண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 14ம் நூற்றாண்டு மொரோக்கா நாட்டின் ஆராய்ச்சியாளர் Ibn Battuta உலகில் ஆப்பிரிக்கா, ஆசிய, ஐரோப்பா கண்டங்களில் 75000 மைல்கள் பயணம் செய்து பல அறிய செய்திகளை கொண்டு வந்ததினால் அவரை முஸ்லிம்களின் Marco Polo என்று அழைக்கப் படுவார். அவருடன் சீன தேசத்தினைச் சார்ந்த Zheng He என்ற முஸ்லிம் 15ம் நூற்றாண்டின் தலை சிறந்த கடல் பயண கண்டுபிடிப்பாளர் என்று சொல்லப் படுகிறது.

            முதலாம் நூற்றாண்டில் சீனர்கள் Saltpeter என்ற potassium nitrate பயன்படுத்தி வெடிப் பொருள் கண்டுபிடிக்கப் பட்டது. அதனையே முஸ்லிம் தளபதிகள் நவீனப் படுத்தி ஆயுதங்களை தயாரித்தனர். அதன் பயனாக சிலுவை யுத்தத்தினை வெடிபொருள் கையாண்டு வெற்றிகொண்டனர். முஸ்லிம்கள் முதன் முதலில் பீரங்கிகளை கையாண்டனர். அவர்கள் தயாரித்த பீரங்கிகளால் ஒரு மைல் தூரம் வரை வெடிப் பொருட்களை உபயோகிக்க முடியும். மைசூரை 1750-1799 வரை ஆட்சி செய்த திப்பு சுல்த்தான் ஆங்கிலேயர்களை எதிர்க்க ராக்கெட் பயன் படுத்தியதாகவும் ஆகவே அதன் பிரதிபலிப்பாக அமெரிக்கா நாசாவில் அவர் படத்தினை பார்த்ததாக தனது பயணக் குறிப்பில் முன்னாள் குடியரசு தலைவர் அபுல் கலாம் குறிப்பிட்டுள்ளது எவ்வளவு பெருமையாக உள்ளது. 1867ம் ஆண்டு சுல்தான் மெஹ்மத் இங்கிலாந்து அரசி விட்ட்டோரியாவிற்கு அன்பளிப்பாக கொடுத்த பீரங்கி இன்றும் இங்கிலாந்து போர்ட்மவுத் அருங்காட்சியகத்தினை அலங்கரிக்கின்றது. சிரியா நாட்டு அறிஞர் Hasan Al Rammah பல்வேறு ஆயுத யுக்திகளை புத்தகங்களாக எழுதியுள்ளார். அதனில் நீரை கிழித்துக் கொண்டு சீறிப் பாயும் torpedo முக்கியமானதாகும்.

            ஐரோப்பாவில் காற்றாலை கண்டுபிடிப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம்கள் காற்றாலைகளை 7ம் நூற்றாண்டில் கலீபா உமர் காலத்தில் கண்டுபிடித்து மாவை அரைப்பதிற்கும், செடிகளுக்கு நீர் பாச்சுவதிற்கும் தெரிந்திருந்தனர்.

            முற்காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் முன்னேற முயன்றாலு, தற்போதய முஸ்லிம் மன்னர்கள் ஆராய்ச்சிகளுக்கு முக்கியம் கொடுக்காது, தங்களது நாடுகளின் பாதுகாப்பிற்கு உட்பட மேலை நாடுகளை நம்பி இருப்பது மன வருத்தமாக இருக்கின்றது தானே! உலகிலேயே சீனா, பிரான்ஸ், ஹார்வார்ட் பல்கலைக் கழகங்கள் ஆராய்ச்சியில் முன்னெனியில் உள்ளன. இந்தியாவில் கூட ‘டாடா, பிர்லா, CSIR’ ஆராய்ச்சி மையங்கள் முன்னேறியுள்ளன. ஆனால் இந்திய முஸ்லிம் ஸ்தாபனங்கள் வெறும் கல்லூரிகளை ஆரம்பிக்க போட்டிப் போடுகின்றன,  ஆராய்ச்சிக்காக எந்த முயற்சியிலும் எடுக்காததால் நம்மைப் பற்றி ஏளனமாக ஏச்சுக்கும், பேச்சுக்கும் இடம் கொடுத்துள்ளோம். ஆகவே நமது முன்னோதையர் எவ்வாறெல்லாம் ‘மெடீவல்’, வரலாற்றின் இடைக்  காலங்களில் பல்வேறு கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு பெருமையினை சேர்த்தார்கள் என்று எண்ணி நாமும் முயற்சி செய்யலாமே!

           

           

           

           

           

           

           

           

           

Wednesday, 29 December 2021

அறிவோம் அகிலத்தின் அரிதான அதிசயங்கள்!

 


(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ )

நம்மை சுற்றி பவனி வரும் பல்வேறு உயிரினங்கள், பறவைகள் மற்றும் உலகின் அதிசயங்களை பற்றிய குழப்பமான செய்திகளை பற்றிய உண்மை நிலை குறித்து இந்த கட்டுரை எழுதுவதுமூலம் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பயன்படும் என்ற நோக்கத்துடன் முயன்றுள்ளேன். 1) அகிலத்தில் இன்றைய 775 கோடி மக்கள் தான் அதிகமானோர் என்று எண்ணலாம். உலகில் 50,000 ஆண்டுகளாக மக்கள் பல்வேறு நாகரீகங்களில் வாழ்ந்ததாக கூறப் படுகிறது. காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் கொலம்பியா, மெக்சிகோ, பொலிவியா மற்றும் குவாட்ரமாலா நாடுகளில் வாழ்ந்த மாயா நாகரிகமும், கம்போடியா ஆங்கர் அடங்கிய கெமர்நாகரிகமும், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளடக்கிய இண்டஸ் நதியோரம் அமைந்திருந்த ஹரப்பான் நாகரிகமும், ஈஸ்டர் தீவினை ஒட்டியுள்ள பாலினீசியன் நாகரீகம், துருக்கியினை மையமாக வைத்த கடால்ஹோயுக் நாகரீகம், அமெரிக்கா இலினோஸ் சுற்றியிருந்த மிஸிஸிப்பி நாகரீகம், லெமுரியா இந்திய பெருங்கடலினை மையமாக கொண்ட நாகரீகம் காலப்போக்கில் அழிந்து விட்டன. அவைகளில் எவ்வளவு மக்கள் வாழ்ந்தார்கள் என்று இன்னமும் கணக்கிடப் படவில்லை. சென்சஸ் என்ற மக்களின் கணக்கெடுப்பு பழமையான எகிப்து, ரோமன் காலங்களில் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தான் செயல்பட்டது. அமெரிக்க வாஷிங்டன் நகரில் உள்ள மக்கள் கணக்கெடுப்பு குறிப்பின்படி மக்கள் தொகை கடந்த 10000 ஆண்டுகளில் உள்ளதுதான் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பு உள்ள மக்கள் தொகைப்பற்றிய குறிப்பேடு எதுவுமில்லை ஆகவே தற்போதைய 770 கோடி மக்கள் தொகைதான் பெரியது என்று ஆணித்தரமாக சொல்லமுடியாது.

            2) உலகிலேயே அதிக உயரம் கொண்ட மலை எது என்று பாடப்புத்தகத்தில், மற்றும் பூலோக வரை படத்தில் இமயமலை என்று கூறுவர். ஆனால் அது உண்மையில்லை என்றால் நீங்கள் நம்புவீர்களா?

சாதாரணமாக மலையின் உயரத்தினை அடிபாகத்திலிருந்துதான் கணக்கிடுவர். அல்லது கிரகங்களிலிருந்து கணக்கிடுவர். ஆனால் இரண்டிலும் அது தவறானது. ஆனால் நிச்சயமாக தரையிலிருந்து இமயமலை 8850 மீட்டர் கொண்டதாகவும் உயரமாகவும் உள்ளது. உண்மையில் அமெரிக்காவின் ஹவாயிலுள்ள ‘மவுண்ட் கியா’ தான் மிகவும் உயரமாக 10203 மீட்டர் கொண்டதாகும். அதில் 4205 மீட்டர் மலை மட்டும் தான் கடலுக்கு மேலே இருக்கின்றது. மீதமுள்ள உயரம் கடலுக்கு அடியிலே இருக்கின்றது. அதேபோலவே  நாமெல்லாம் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சஹாரா பாலைவனம் தான் உலகிலேயே பெரியது அது 8.6 மில்லியன் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது என்று சொல்வோம். அது அமெரிக்காவின் நிலப் பரப்பிற்கு சமமானது என்றும் சொல்வோம். ஆனால்  ஆர்க்டிக் என்ற உலகின் வட பாகமும் பனிப்பாறை சூழ்ந்ததுமானதும் கிட்டத்தட்ட 1.40 கோடி சுற்றளவு கொண்டதும், பூமியின் தெற்குப் பாகத்தில் உள்ள அண்டார்டிகா 1.42 கோடி நிலப் பரப்பு  கொண்டதும், ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையாக இருப்பதுமே பெரிய பாலை வனமாகவும், மிகக் குறைந்த மழை பெய்யும் இடமாக கருதப் படுகிறது.

            3) 1800 ஆண்டிலிருந்து நமது மூளையினை 10 சதவீத பயனுள்ளதாகத்தான் நினைத்துள்ளோம். ஆனால் அது உண்மையில்லை. அந்த 10 சதவீத பகுதியும் நியூரான் என்ற அமைப்பினை கொண்டதாகும். அது மின்சார உற்பத்தி கொண்டதாகும். அதன் மூலம் மூளையின் எந்த பகுதி பயன் பாட்டிற்கு உள்ளது என்பதினை கண்டறிவதிக்காகும். உதாரணத்திற்கு கை தட்டுதல், கனவு காணுதல், விடைகள் கண்டு பிடித்தல் போன்றவையாகும். உண்மையில் கிளையில் செல்ஸ்(glial cells) நரம்புகளை இயக்கும் தகுதிகளை கொண்டதாகும். இன்று விஞ்ஞானிகள் மூளையின் பல்வேறு செயல்பாடுகளான சுவாசிக்கின்றது, உடலை சரியான தட்ப வெப்ப நிலைக்கு வைப்பது, நடப்பது, பல்வேறு விஷயங்களை ஞாபகத்தில் வைப்பது, படங்களை நினைவில் வைப்பது போன்றவற்றை செய்கின்றது என்றும் அறிகின்றனர். ஆனால் மனிதன் மூளையின் எல்லா பகுதியினையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதில்லை. அவ்வாறு செய்தால் மனிதன் ஞாபக சக்தியினை இழந்து வலிப்பு தாக்கங்கள் ஏற்படும். ஆகவே தான் அறிவாளிகள் மூளையின் அனைத்து பகுதியினையும் பயன்படுத்துவதில்லை. நியூரான் என்ற சாம்பல் நிற பகுதி உண்மையில் சாம்பல் நிறத்திலில்லை, மாறாக சிகப்பு நிறத்திலும், மூளையின் மற்ற பகுதி சாம்பல் நிறத்திலும் தான் உள்ளது.

            4) நாம் பனி மழை கட்டிகளை பார்த்திருக்கிறோம். அவைகள் பார்க்கும் போதும், தரையில் விழும்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று தான் நினைக்கின்றோம். அதனை ஆராய அமரிக்காவினைச் சார்ந்த போட்டோ கிராபர் வில்சன் பென்டலே 1885ம் ஆண்டு  டெலஸ்க்கோப் பொருத்தி உயரமான இடத்தில் இருந்து சுமார் 5000 பனி மழைக் கட்டிகளை  ஆராய்ந்துள்ளார். அப்போது தான் வானத்தில் இருந்து விழும் பனிக் கட்டிகள் பல உருவத்துடன் இருப்பது. அதனைத் தொடர்ந்து தலை முடி, இரட்டையர் ஆகியோரை ஆராய்ந்தபோது ஒருவருடைய தலையில் உள்ள முடிகள் ஒவ்வொன்றும் பல்வேறு விதமானதும், இரட்டையர் என்று சொல்லும் இருவரிடையே பல்வேறு வேற்றுமை இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

            5) உருளைக் கிழங்கு தோலை சீவி சமைப்பதினை பார்த்திருக்கின்றோம். ஆனால் அப்படி சமைத்த உருளைக்கிழங்கின் சத்து குழம்பில் கரைந்து விடுகின்றதாம். தோலில் விட்டமின் என்ற புரத சத்து உள்ளதாம். அந்த உருளைக்கிழங்கு தோல் தான் உருளைக் கிழங்கின் சத்து வெளியேறாமல் பார்த்துக் கொள்ளுதாம். வெளிநாட்டவர் அதனை நீராவியில் அவித்து தோலுடன் சாப்பிடுவதினை பார்த்து நமக்கு எல்லாம் சிரிப்பு வரும். அதேபோன்று தான் ஆப்பிளை தோல் சீவி சாப்பிடுவோம். ஆனால் அதனில் சத்தில்லை. சென்னையில் விற்கும் ஆப்பிளில் மெழுகு தடவி இருப்பதால் அவ்வாறு சில சமயங்களில் செய்கிறோம். அப்படி இருந்தால் கத்தியினால் தோலின் மேலே இருக்கும் மெழுகினை சுரண்டி விட்டு தோலுடன் சாப்பிடலாம். எனது தந்தை மலேசியா பெட்டாலிங் ஜெயாவின் மொத்த மளிகைக்கடை வைத்திருந்தார்கள். நான் அங்கு 1979ம் ஆண்டு சென்றபோது எனக்கு ஒரு வாழைப் பழத்தினை கொடுத்துவிட்டு அவர்கள் ஒரு பழம் சாப்பிட்டார்கள். நான் பழத்தோலை எடுத்துவிட்டு சாப்பிட்டேன். ஆனால் என் தந்தை தோலுடன் சாப்பிட்டால் செரிமானமாகும் என்று தோலுடன் சாப்பிட்டார்கள்..  அதனால் நம் உணவு செரிமானமாகும், உடல் கொழுப்பு சத்து குறையும், சில விஞ்ஞானிகள் சில சமயத்தில் இதய நோய் வராமலும் காப்பற்றும் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

            6) நாமெல்லாம் நினைத்துள்ளோம் வெளியில் செல்லும்போது உடலை பாதுகாக்க கம்பளி துணிகளை அணிந்து சென்றால் சளி பிடிக்காது என்று. உண்மையில் சளியானது குளிரால் வருவதல்ல மாறாக கிருமிகளால் வருவது என்பது தான் உண்மை. வைரஸ் கிருமிகள் கூட்டு வாழ்க்கை வாழக் கூடியது. உடலில் உள்ள செல்களுடன் கலந்து விரிவடைகிறது. ஆனால் குளிர் காலங்களில் ஏன் கிருமிகள் பரவுகிறது என்று நீங்கள் கேட்கலாம். ஏனென்றால் நீங்கள் குளிர் காலங்களில் வீட்டுக்குள்ளேதான் இருக்கின்ரீர்கள். அதனால் அடுத்தவர்களுடைய கிருமிகள் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புண்டு. குளிர் காலங்களில் வெளிப்புற பழக்க வழக்கங்களை மற்றும் உடற்பயிற்சிகளை செய்யாது இருப்பதினால் கிருமிகள் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதினால் உங்களுக்கு சளி பிடிக்கின்றது.

            7) நமக்கெல்லாம் தெரியும் காய் கறிகள் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும், அதுவும் காரட் சாப்பிட்டால் அது வைட்டமின் ஏ சத்துள்ளது, நோய்களை எதிர்க்கும் சக்தியும், பார்வை சக்தியும் கூடுதலாக இருக்கும் என்றும். ஆனால் காரட் சாப்பிட்டால் இரவில் நன்றாக தெரியும் என்ற ஒரு நம்பிக்கை ஆங்கிலேயரிடம் இருந்தது. இது உண்மையா என்று ஆஸ்திரேலியா நிபுணர் டாக்டர் அன்றோ ரோச்போர்ட ஒரு தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக  பத்து நாட்களுக்கு 15 கிலோ காரட் சாப்பிட்டார். பின்பு லைட் வெளிச்சத்தினை மங்கலாக்கி பார்த்தார். ஆனால் ஒளி மங்கியதாகவே இருந்ததாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இங்கிலாந்து ராயல் விமானப் படையின் விமானங்கள் அதிக அளவில் ஜெர்மன் விமானப் படையால் தாக்குதல் உண்டானது. அதனை கண்டு அதிர்ந்த இங்கிலாந்து விமானப் படையினரிடையே ஒரு வதந்தி பரப்பினர். காரட் அதிக அளவில் சாப்பிட்டால் கண் பார்வை இரவில் பளிச்சென்று இருக்கும் அதன் மூலம் எதிரி விமானங்களை கண்டு வீழ்த்தலாம் என்று. ஆகவே  வீரர்களுக்கு உணவுடன் காரட் அதிக அளவில் கொடுக்கப் பட்டது. என்ன ஆச்சரியம் இங்கிலாந்து வீரர்கள் ஜெர்மன் விமானங்களை இரவில் கண்டறிந்து சுட்டு வீழ்த்தினர். ஆகவே சிறியளவு காரட் எவ்வாறெல்லாம் இங்கிலாந்து வீரர்களுக்கு பெரும் உதவி செய்தது ஆனால் அது வதந்தியே என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது டாக்டர் அன்றோ ரோச்போர்ட் மூலம் வெளியானது.       

            8) நீங்கள் கார்ட்டூன் படம் பார்க்கும் போது அவ்வளவு பெரிய யானை அருகில் எலி வந்தால் துள்ளி குதித்து ஓடுவதினை. சிலர் சொல்வார்கள் எலியானது யானையின் தும்பிக்கையில் ஏறி அதற்கு தொந்தரவு செய்யும் என்று. அப்படி என்றால் யானை மற்ற சிறிய மிருகங்களை எல்லாம் பார்த்து மிரளும். ஆனால் யானை அதுபோன்ற சிறிய மிருகங்களை தனது தும்பிக்கையின் பிளிறும் சத்தத்தின் மூலமே விரட்டிவிடும். யானை சிங்கங்கள் போன்ற  பெரிய மிருகங்கள் வரும்போது அதனை தும்பிக்கையால் மற்றும் தந்தத்தால் குத்தி விரட்டும் திறன் கொண்டதாம். உண்மையில் யானைக்கு குறைந்த தூரத்தில் உள்ள பொருட்களை மட்டுமே பார்க்க முடியுமாம்.

யானையின் காலடியில் எலி படும்போது அதனை பார்க்கும் வரை பயப்படாதாம். பார்த்து விட்டால் ஓய்வு கொண்டு விடுமாம். அதற்காக ஒரு சோதனை அமெரிக்க தொலைக் காட்சியில் நடத்தப் பட்டதாம். யானையின் காய்ந்த சாணத்தில் ஒரு எலியினை மறைத்து வைத்தார்களாம். யானையினை அதன் அருகில் வரும்போது எலியினை ஓடவிட்டார்களாம். யானை எலியைத்தாண்டி அமைதியாக சென்றதாம். உண்மையில் யானை பயப்படும் சிறிய சந்து தேனீ தானாம். ஏனென்றால் யானையின் கண் சுற்றி கனமான தோல் இருந்தாலும் தேனீ கடிக்கும் போது வலி தாங்க முடியாதாம். ஆகவே கென்யா நாட்டில் வயல் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க ஒலி பெருக்கியில் தேனீ இசையினை ஒலி எழுப்புவார்களாம். அதற்கு பெயர் 'apiphobia' என்று அழைக்கப் படும். பல விவசாயிகள் யானைக் கூட்டத்தினை விரட்ட தேன் கூடுகளை வளர்ப்பாகலாம்.

            9) அதேபோன்று தான் வவ்வாலுக்கு கண் தெரியாது என்று சொல்வார்கள். உண்மையில் வவ்வால் கண் பார்வை அதிக சக்தியினை கொண்டது. தனது இரையினை இரவில் தான் தேடும். ஆகவே அதற்கு நாமாக வைத்த பெயர் கண் தெரியாது என்பது. வவ்வாலுக்கு கடலுக்கு அடியில் உள்ள ஒலியினை 'echolocation' என்று அழைக்கப் படும் மூலம் எவ்வாறு ஆராய்ச்சி செய்பவர்கள் கண்டு பிடிக்கின்றார்களோ அதேபோன்று இரவில் தன் அருகில் வரும் பூச்சிகளை எளிதாக கண்டு பிடித்து இரவில் வேட்டையாடுமாம். தனது வேட்டையினை முடித்துவிட்டு தனது புகலிடம் எது என்று துல்லிதமாக அறிந்து திரும்பி வருமாம்.

            நமக்கெல்லாம் பிரான்ஸ் நாட்டின் 18ம் நூற்றாண்டின் பேரரசர் நெப்போலியன் மிகவும் குட்டையானவர் என்று அறிமுகப் படுத்தி உள்ளனர். ஆனால் அது உண்மையில்லை. பிரான்ஸ் அளவுகோல் பிரிட்டிஷ் அளவுகோலை விட பெரியது. நெப்போலியன் உயரம் 5 பீட் 2 இஞ்சஸ் ஆகும் அது பிரிட்டிஷ் அளவு 168 செ.மீ க்கு (5பீட் 6 இஞ்சஸ்) சமமாகுமாம். அது சாதாரண குடிமகன் உயரம் தானாம். பின் ஏன் நெப்போலியனை அவ்வாறு அழைத்தார்கள் என்றால், அவர் பிரான்ஸ் தேச மன்னர் மிகவும் வேகமற்றவர் ஆதனால் மற்ற நாடுகள் படையெடுப்பிற்கு ஆளாக நேரிட்டது மட்டுமல்லாமல், அங்கே பஞ்சமும், வறுமையும் ஏற்பட்டதாம். அப்போது நெப்போலியன் ஒரு சாதாரண 'Petit Corporal' படை வீரராகத் தான் இருந்தாராம். மக்கள் புரட்சியினை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பிரான்ஸ் தேச அரியணையில் ஏறி பக்கத்து நாடுகளை வெல்லக் கூடிய சக்ரவர்த்தியாக உயர்ந்தாராம். பிரான்ஸ் மொழியில் Petit என்றால் அன்பானவர் என்று அழைப்பார்களாம். அவர் அனைத்து படை வீரர்களிடமும் அன்பாகவும், சகோதரர் போல நடந்து கொண்டாராம். ஆகவே அவரை அந்த புனைப் பெயரில் அழைத்தார்களாம். இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது. அவர் 5 அடி 6 அங்குலம் இருந்தாலும் அவரை பாதுகாக்கும் குறிப்பிட்ட வீரர்கள் 6 அடி உயரம் கொண்டவர்களாம். ஆகவே நெப்போலியனை எப்போதும் குதிரையில் அமர்ந்திருப்பது போலவும், அவரது பாதுகாப்பு படையினர் தரையில் வருவதுபோன்ற படங்கள் இடம் பெற்றதாம்.

            ஆகவே காலங்காலமாக வந்த தவறான தகவல்களை நாம்  புரிந்து கொள்வதுடன் நமது வருங்கால சந்ததியினரும் தெரிந்து கொள்வது நல்லதல்லவா?

           

Friday, 26 November 2021

மீலாதுநபி முக்கியத்துவ உறுதிமொழி

 


(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ் (ஓ )

உங்களுக்கெல்லாம் தெரியும் வருகிற அக்டோபர் 19ந்தேதி நானிலம் போற்றும் பெருமானார் ரசூலுல்லாஹ் பிறந்தநாளை மீலாது நபி என்று அழைத்து, அதற்கு தமிழக அரசும் விடுமுறை விட்டுள்ளது. ஆங்கில எழுத்தாளர் மைக்கேல் ஹார்ட்ஸ் உலகில் முக்கியமான 100 நபர்களை தேர்ந்தெடுத்து  அதில் மிக சிறந்த நபர் யார் என்று ஆராயும்போது முகமது  ரசூலுல்லாஹ் பெயரினை சொல்லியுள்ளார். பாலைவனம், வறண்ட பூமி, பசுமையில்லா மலை குன்றுகள் கொண்ட அராபியா நாட்டில் எழுத்தறிவில்லா ஒரு மனிதர் எல்லாம் வல்ல இறைவனால் புனிதராக்கப் பட்டு அங்குள்ள காட்டரபிகளை நல்வழிப் படுத்த ஏக இறைவனால் அல் குரானை 1400 ஆண்டுகளுக்கு முன்பு ரஸூலல்லாவிற்கு  அருளி இன்று கிட்டத்தட்ட 170 கோடி முஸ்லிம்களை கொண்ட மார்க்கமாக இருப்பதிற்கான பெருமை ரஸூலல்லாவினைப் பொருந்தும். ஆகவே தான் ரஸூலல்லா பிறந்த நாள் சிறந்த நாளாக கருதப் படுகிறது. அவ்வாறு கருதுவதினால்  ரஸூலல்லாவினை, அல்லாஹ்விற்கு இணையாக யாரும் நினைப்பதில்லை. ஏனென்றால் ரஸூலல்லாவே தனக்கு முதலிடம் கொடுக்கக் கூடாது என்றும், தன்னுடைய ஒரு சிறு வரைபடம் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். ஆகிய உலகில் சிறந்த மனோதத்துவ நிபுணரும், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவரும், பத்ம விருது பெற்றவருமான மதிப்புமிகு பேராசிரியர் பி.ராமகிருஷ்ண ராவ் அவர்கள் கூறியிருப்பதாவது: ரசூலுல்லாஹ் முகமது அவர்கள் பற்றிய முழு உண்மையும் மக்களுக்கு இன்னமும் அறிவதில்லை. அவர் சிறந்த போர் வீரர், நாணயமான வியாபாரி, சிறந்த நாட்டின் நலம் பேனிக் காத்தவர், மக்களைக் கவரும் பேச்சாளர், சீர்திருத்தவாதி, அனாதைகளுக்கு அடைக்கலம், அடிமைகளை காத்தவர், உலகிலேயே முதல் பெண் விடுதலைக்குக் குரல் எழுப்பியவர், நெறி தவறா நீதிமான், உண்மையிலே போற்றத்தக்க இறை தூதர் என்று வானளாவிய புகழ் சூடியுள்ளதினை பார்க்கும் போது ஒரு ஹிந்து மதத்தினை தழுவியவர், கல்விமான், உலக மாணவர்களுக்கு பாடம் எடுத்தவர் பல்வேறு தூதர்களை ஆராய்ந்து அதில் முகமது ரசூலுல்லாஹ் தான் சிறந்தவர் என்று கூறியிருப்பது சால சிறந்தது என்று நீங்கள் கருதவில்லையா?

            நம்மிடையே சிலரும், மாற்று மதத்தினவரும், சில தர்க்க வாதிகளும் ஏன் ரஸூலல்லாவே திருகுரானை எழுதி இருக்கக் கூடாது என்றும்  விவாதம் செய்யவதினை பார்க்கின்றோம். அவர்களுக்கெல்லாம் நெத்தியடி பதில் சொல்லும் விதமாக திருகுரான் அல்லாஹ்வினாலேயே ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது என்று இரத்தின சுருக்கமாக கீழ்கண்ட உதாரணத்துடன் விளக்க ஆசைப் படுகிறேன்:

1)    திருகுரான் 600 பக்கங்கள் கொண்டது. அது ஒரே மூச்சிலேயோ, ஒரே நாளிலேயோ, ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கிடையிலேயோ இறக்கி அருளப்படவில்லை மாறாக 23 நீண்ட வருடங்களில் ரஸூலல்லாவிற்கு அருளப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட செய்தியினை மட்டும் சொல்லவில்லை மாறாக மக்களை நல்வழிப் படுத்த பல செய்திகளைக் கொண்டதாக உள்ளது.

2)    நீங்கள் சாதாரணமாக ஒரு புத்தகம் எழுத வேண்டுமென்றால் ஒரு தவறில்லாமல் எழுதமுடியாது. ஆனால் திருக்குரானில் இலக்கணப் பிழையில்லாமல், ஒன்னொன்றுக்கு முரண்படாமல் அறிவுபூர்வமான பல்வேறு உண்மையான தகவல்கள் உள்ளன.

3)    பாலைவனத்தில் ஒரு பாடசாலையோ, அல்லது அறிவினுக்கு உணவாக கூறப் படும்  லைப்ரரியோ அங்கு இருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால் அங்கே கற்று குரானை எழுதியிருக்கலாம் என்று சொல்வார்கள்.

4)    குர்ஆனில் மார்க்க சம்பந்தமாக மட்டும் சொல்லப் படவில்லை. மாறாக சிவில் சட்டம், கிரிமினல் சட்டம், குடும்பவியல் சட்டம், வேலை சம்பந்தமான சட்டம், ராணுவ சட்டம், தனிப் பட்டவர் காயம் ஏற்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் சட்டம், வரி விதிப்பு சட்டம் போன்ற பல்வேறு விதமான சட்ட நுணுக்கங்களை கொண்ட பொக்கிஷமாக உள்ளது. நீங்கள் அறிந்திருப்பீர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்ற அம்பேத்கார் தலைமையில் ஒரு கமிட்டி 1950ல் அமைக்கப் பட்டதும் அதில் பல்வேறு சட்ட ஓட்டைகள் உள்ளது என்றும் பல்வேறு தரப்பு மக்களால் சொல்லப் படுகிறது நமது நாட்டில். ஆனால் குர்ஆனில் சொல்லப் பட்ட சட்டங்கள் பல்வேறு நாடுகளில் நிறைவேற்றியும், இஸ்லாம் இல்லாத நாடுகளில் உள்ள மக்கள் கூட குர்ஆனில் கூறிய சட்டம் போன்று தங்கள் நாட்டில் அமைய வேண்டும் என்று சொல்லுவதினை காணலாம்.

5)    மக்காவில் வாழ்ந்த ரஸூலல்லாவிற்கு கிறித்துவ சமுதாயத்தினைப் பற்றிய தகவல் தெரிந்திருக்க நியாயமில்லை காரணம் அங்கே கிருத்துவர் வாழவில்லை. ஆனால் கிருத்துவர்கள் நமது மூதாதையர் என்றும், ஈஷா நபி என்ற ஜீசஸ் பற்றி விலாவாரியாக விவரித்துள்ளது. எந்த இடத்திலும் ரஸூலல்லா தான் மரித்த பின்பு மீண்டெழுப்பப் படுவேன் என்று சொல்லவில்லை. மாறாக ஈஸா நபி அவர்கள் மீண்டெழுவார் என்றும் கூறுகின்றது. ஈஸா நபி சரித்திரத்தினை எழுதிய சீடர் பர்னபாஸ் எழுதிய தோலிலான நூல் ஒன்று துருக்கி நூலகத்தில் உள்ளத்தினை கிருத்துவர்களின் தலைவர் போப் பெனெடிக் சென்று பார்த்து ஆச்சரியப் பட்டாராம். காரணம் தனக்குப் பின்பு முகமது ரசூலுல்லாஹ் என்பவர் வந்து மக்களை நல்வழிப் படுத்தியும், ஓரிறை கொள்கையினை எடுத்தியம்பியும் மக்கள் சேவை செய்வார் என்றும் உள்ளதாம். அது பாட்டுமல்ல ஈஸா நபி சிலுவையில் அறையப்படவில்லை மாறாக வேறொருவர் அறையப் பட்டார் என்றும், திருகுரானில் சொல்லப் பட்டதுபோல அவர்களை அல்லாஹ் தன்னிடம் அழைத்துக் கொண்டான் என்றும் கூறியதைக் கண்டு ஆச்சரியப் பட்டு பின்னாளில் இஸ்லாம் மார்க்க நெறியினை தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப் படுகிறது.

6)    ரஸூலல்லாவிற்கு வகி வருவதற்கு முன்பு ஒரு அரசு எப்படி இருக்கவேண்டும் அல்லது எப்படி அமைக்க வேண்டும் என்றும், அல்லாஹ்வினை வணங்குவதிக்கு முன்பு எப்படி தன்னை தூய்மை படுத்திக்  கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

7)    மனோதத்துவ மந்திரங்கள் ரஸூலல்லாவிற்கு தெரிந்திருக்கின்றது நியாயமில்லை. குழந்தைச் செல்வங்களை எப்படி வளர்ப்பது, எவ்வாறு சமரச நடவடிக்கைகள் மேற்கொள்வது என்றும் தெரியாது. சொத்துக்களை பிரித்துக் கொள்ளும் முறைகள் மற்றும்  நிதித்துறை கையாள்வதும் தெரியாது.

8)    ஒரு தாய்க்கு எப்படி கருத்தரிக்கும் முறை, கடலின் அமைப்பு, பூகம்ப ரேகை அமைப்பு, மேகமூட்டம் சொல்லும் ஒன்று கூடுதல், அதன் விளக்கம், கதிரியக்கம், பறவை, செடி கொடி, விலங்கினங்கள் உயிர் வாழ்வது மற்றும் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்வது, மலை அமைப்பு, தேனை எடுக்கும் தேனீ எவ்வாறு வெளிப்படுத்துகிறது, ‘பிக் பங்’ என்ற உலக பெரு வெடிப்பு ஏற்பட்டதும், கோளரங்கம் அமைக்கப் பட்டது போன்ற எண்ணற்ற  செய்திகளை துல்லிதமாக ரஸூலல்லாவிற்கு வகி இறங்குவதற்கு முன்பு தெரியாது.

9)    வருங்காலத்தில் எழுத வேண்டுமென்றால் தனி மனிதரான ரஸூலல்லாஹ்வினால் எழுதமுடியாது. உலகத்தினைப் பற்றிய செய்திகளை பற்றி எழுத வேண்டுமென்றால் அந்தந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யவுமில்லை.

10)  பைபிளுக்கு வேறுபட்டு குரான் இருக்க முடியாது. வகியால் இறக்கியருளப்பட்டதால் தான் பைபிளை சார்ந்தே குரானும் உள்ளது.

11)  எழுத்தாளர்களுக்குத் தெரியும் ஒரு புத்தகத்தினை எழுதும் போது எழுத்தாளருடைய தனிப் பட்ட வாழ்க்கையினை எழுதாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு மனைவி இறந்த சோகம், எப்போது குழந்தை பிறந்தது, எப்போது மணமுடிக்க செய்தது, பேரக் குழந்தைகள் பிறந்த செய்தி, போரில் எப்போது வெற்றி மற்றும் தோல்விகளை கூறாமல் இருக்கமுடியாது.

12)  குரானை அர்த்தம் தெரிந்து படித்தவர்களுக்கு எப்படி ஒரு தனி மனிதரால் 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் எழுதமுடியும் என்ற கேள்விக்கணை எழுப்பாமல் இருக்க முடியாது. குரானை எந்தவித முரண்பாடுமில்லாமல் அறிவு சால் அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து காலத்திற்கு ஏற்ற மாறுபட்ட விஞ்ஞானம், வாழ்க்கை தத்துவம், போன்றவற்றை அனுசரித்து எழுத வேண்டும்.

13)  சரி, அப்படியென்றால் ஏன் சாத்தான் ஓதும் வேதமாக இருக்கக் கூடாது என்றும் சிலர் கேட்கலாம், அதற்கும் பதிலுண்டு. சாத்தான் ஈஷா நபி அவர்களை புகழுமா, ஏழைகளுக்கு உதவுங்கள் என்று சொல்லுமா, சாத்தானுக்கு பயந்து சொல்லுங்கள் என்று சாத்தானே சொல்வானா? என்றும் சிந்தித்துப் பாருங்கள்.

14)   ரசூலுல்லாஹ் தனிமனிதராக இருந்து பின்பு தனது கடைசி அரபா உரையினை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் அளவிற்கு மார்க்க, அரசியல் தலைவராக இருந்தார் அராபிய துணைக் கண்டத்தில். அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் மக்கள் தன்னை வணங்குவதிற்கோ, காலில் விழுவத்திற்கோ, தான் வரும்போது எழுந்து நிற்பதிற்கோ, தன்னை யாரும் புகழ்வதிற்கோ, தான் இறந்த பின்பு தன்னை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடக் கூடாது என்று கவனமாக இருந்த காரணத்தால் இன்று உலகில் அவருடைய சிறு கீரல் படம் கூட வெளிவந்தாலும் முஸ்லிம் மக்கள் வெகுண்டெழுகின்றனர். அவர்களுடைய மதினா அடக்கத் தலத்திற்கு செல்லும் முஸ்லிம்களை அங்கே இருக்கும் அதிகாரிகள் எங்கே கையேந்தி ரஸூலல்லாவினை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிடுவார்களோ என்று அடித்து விரட்டுகிறார்கள் என்றால் ரசூலுல்லாஹ் எவ்வளவு கவனமாக இருந்தார்கள் தான் வெறும் தூதர்தான் தான் மற்ற மதத்தலைவர்களை அவர்கள் மரித்த பின்பு அவர்களுக்கு  சிலைகள்  வைத்து வழிபடுவது போல தனக்கும் வைத்து விடுவார்கள் என்பதினுக்கு மிகவும் கவனமாக இருந்த மாமனிதர் ரசூலுல்லாஹ் ஆகும்.

ஆகவே அல் குரான் சைத்தானாலும் எழுதப் படவில்லை, அறிவு சால் அறிஞர்களாலும் எழுதப் படவில்லை, முகமது என்ற தனி நபராலும் எழுதப் படவில்லை, அது எல்லாம் வல்ல அல்லாஹ்வால் ரஸூலல்லாஹ்விற்கு அருளப் பட்ட ஒன்றே என்று பல மதத் தலைவர்கள், அறிஞர்கள் ஒப்புக் கொள்ளப் பட்ட ஒன்றாகும். ஆகவே அதில் தர்க்கம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. அதன் படி நடப்பதே நாம் ரஸூலல்லாஹ்விற்கும், வகியை இறக்கி அருளிய அல்லாஹ்விற்கும் செய்யும் நன்றிக் கடன் என்று மீலாது நபி நாளில் உறுதி கொள்ளலாமா?