Tuesday 20 November, 2018

தேனிலும் மகத்துவம், தேனீயிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!



(டாக்டர் ஏ.பீ. முகமது அலி,பிஎச், டி.ஐ.பீ.எஸ்(ஓ )

அல் குரான் அத்தியாயம் 16 அந் நஹ்லில் அல்லாஹ் மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்ததினையும், அவனை படைத்து அனாதையாக விடாது அவனுக்கு உணவு, உடையினை அவனே படைத்ததினையும், அவனுக்கு வாகன வசதிக்கு உபயோகப் படும் படி, குதிரை, கோவேறு கழுதைகளையும் படைத்தது பற்றியும்,  மனிதன் இறை தேடுவதற்கு சூரிய பகலையும், ஓய்வெடுப்பதிற்கு  இரவான சந்திரனையும் படைத்து, அதனை தன் கட்டுப் பாட்டுக்குள் வைத்து , கடலிலிருந்து உணவுப் பொருட்களையும், வித, விதமான முத்துப் போன்ற ஆபரணங்களையும் படைத்து, மலைகளை பூமி சமநிலையில் இருக்கும்படி ஊண்டியுள்ளதினையும் தெள்ளத் தெளிவாக கூறுகிறது என்பதினை சான்றோர் அறிவர். அத்துடன் தேனின் மகிமையையும் எடுத்தும் சொல்லியுள்ளது.
ஆனால் தேனீயின் மருத்துவக் குணத்தினை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள். நாம் சென்னை அபிராமி மால் போன்ற மால்களுக்கு செல்லும் போது  சிலர் தண்ணீர் தொட்டியில் மீன்கள் விளையாட காலை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருப்பதினை காணலாம். கிராமங்களில் குளங்களில் குளிக்கும்போது மீன்கள் நமது கால்களை வருண்டும். அப்போது நாம் காலை எடுத்து விடுவோம். ஆனால் அதே மீன் தொட்டிகளில் மணிக்கணக்கில் காலை வைத்துக் கொண்டு மாலில் உட்கார்ந்து இருப்பார்கள். அதற்கு 'பிஷ்' தெராபி என்பார்கள். அந்த மீன்கள் தாய்லாந்திலிருந்து தருவிக்கப் பட்ட மீன்களாகும்.  அவ்வாறு செய்வது மூலம் கால்களில் சுரணை வருவதிற்கு  என்று சொல்வார்கள், 
வயதாகிவிட்டால் மூட்டு வலிகள், கால், கைகளில் சுரணை என்ற உணர்ச்சி மங்கி விடும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், அல்லது அமர்ந்திருப்பவர்களுக்கும் கால் மரத்துப் போகும். அதனை 'ருமாட்டிசம்' என்று அழைப்பார்கள். அது போன்ற ருமாட்டிசத்தினை குணமாக்க டாக்டர்களை அணுக வேண்டியிருக்கும். ஆனால் அதனையே ஒரு எகிப்திய நாட்டு சாதாரண மனிதர் தேனீ மூலம் குணமாக்கியுள்ளார் என்று அறியும்  போது ஆச்சரியமாக இல்லையா. விஷ பாம்புகளின் விஷம் உயிர் கொல்லி நோய்களை குணமாக்கும் என்று விஞ்ஞானப் பூர்வமாக சுத்திகரிக்கப் பட்டு பயன் பாட்டிற்கு கொண்டு வர பட்டுள்ளது. ஆனால் தேனீயை மனித உடலில் கடிக்க விடப் பட்டு வாத நோயினை அந்த மனிதர் குணமாக்கியது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் தானே!
வசனம் 68 -69 ல்,  அல்லாஹ், தேனீக்கு வஹி மூலம், 'மலைகளிலும், மரங்களிலும் நீ கூடு கட்டிக்கொள், பல தரப்பட்ட பழங்களிலிருந்து சாற்றை உறிஞ்சிக் கொள், சீரான வழியில் சென்று கொண்டிரு' என்று கூறியும், மக்களுக்கு அறிவுறுத்தும்படி தேனின் வயிற்றிலிருந்து ஒரு வித திரவம்  வெளிப் படுகிறது(தேன்) தேனீ மூலம் மக்களுக்கு நிவாரணம் உண்டு என்று கூறுகின்றான்.
அந்த இறை வசனத்தினை எகிப்தில் வாழும் உமர் அப்துல் ஹாசன் என்பவர் தன்னுடைய ஆராய்ச்சியில்  அப்படி என்ன மருத்துவ குணம் தேனீயால் உள்ளது என்று செயலில்  இறங்கினார். அதன் பயனாக ஒரு தேனீ வளர்க்கும் பண்ணையினை ஆரம்பித்தார். தேனீக்களினை தினசரி பராமரித்தார். அப்படி பராமரிக்கும் அவர் கையில் தேனீ கடிப்பதினையும் அதனால் அவர் கையில் உள்ள இயற்கை வலி நீங்குவதையும் கண்டார். உடனே அவருடைய ஆராய்ச்சியினை கை, கால் மரமரத்துப் போனவர்களுக்கு தேனீக்களை கடிக்கவிட்டுப் பார்த்தார். என்னே ஆச்சரியம் கை, கால்களில் உணர்வு வந்தது. அதன் பின்னர் அவரை நோக்கி ருமாட்டிசம் நோயாளிகள் தேனீக்கள் போன்று அவரிடம் குவிய ஆரம்பித்து விட்டனர். அவர் இலவசமாகவும் சிகிச்சை அளிக்கின்றாராம். அந்த படம் இணைத்துள்ளேன்.
இதிலிருந்து என்ன தெரிகின்றது என்றால் அகிலத்தினை படைத்து, ஆறறிவு கொண்ட மனிதனையும் படைத்து அவன் ஆராய்ச்சி செய்வதற்காக அல் குரானையும் படைத்திருப்பதால் குரானை அர்த்தம் தெறிந்து ஓதினால் அகிலமும் வெல்லலாமல்லவா?


No comments:

Post a Comment